ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
பிள்ளையான் குழுவிடம் ஆயுதங்களா? தமக்குத் தெரியாது என்கின்றார் கரு! தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் பிள்ளையான் எனும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆயுதங்களைக் கையாளுகின்றார் எனத் தமக்கு இதுவரை எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லையெனப் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரிய சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது அரசுடன் இணைந்து போட்டியிடும் பிள்ளையான் குழுவினர் ஆயுதங்கள் சகிதம் தேர்தலில் குதித்துள்ளனர் என ஐக்கிய தேசியக்கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றன. ஆ…
-
- 6 replies
- 2k views
-
-
ஜே.வி.பி. அதிருப்திக்குழுவின் வாகனங்களைத் திருடிய முக்கிய சூத்திரதாரியான ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகரவை எதிர்வரும் திங்கட்கிழமை (21.04.08) வரை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 552 views
-
-
கண்டியில் இரு மின்மாற்றிகள் தகர்ப்பு [ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 17, 2008 - 07:47 AM - GMT ] சிறிலங்காவின் கண்டி மாவட்டத்தில் நேற்றிரவு மின்மாற்றிகள் இரண்டு அடையாளம் தெரியாதோரினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளன. யக்ககவேவா மற்றும் பன்வில பகுதிகளிற்கு மின்வழங்கலை மேற்கொண்டு வந்த இரு மின் மாற்றிகளே தகர்க்கப்பட்டுள்ளன. இதனால் 25 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளிற்கான மின்வழங்கல் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.eelatamil.net/index.php?option=...6&Itemid=67
-
- 0 replies
- 854 views
-
-
ஜே.வி.பி.க்குள் உட்கட்சி மோதல் மேலும் தீவிரம் [17 - April - 2008] * சுனில் ஹந்துநெத்தி அரசு பக்கம் தாவுகிறார்? எம்.ஏ.எம். நிலாம் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் உட்கட்சிப்பூசல் மேலும் உக்கிரமடையும் நிலை உருவாகியுள்ளது. கட்சி மூன்றாகப் பிளவுபடுமளவுக்கு பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட்டமைக்காக ஜே.வி.பி. யின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்சவை கட்சியின் உறுப்புரிமை உட்பட சகல பதவி நிலைகளிலுமிருந்து இடைநிறுத்திய ஜே.வி.பி. மத்திய குழு அவருக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி மத்திய குழுவுக்கு பதிலளிக்குமாறு கேட்டிருந்தது. விமல் வீரவன்ச கட்…
-
- 0 replies
- 732 views
-
-
ராஜித சேனாரத்ன தலைமையிலான குழு நோர்வேயில் சொல்ஹெய்முடன் பேச்சு நிர்மாண மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு ஒன்று நோர்வே சென்று அந்நாட்டு சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை சந்தித்துப் பேச்சுகளை நடத்தியுள்ளதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பேச்சுகள் நேற்று முன்தினம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும் மற்றும் மன்னாரிலும் இடம்பெற்றுவரும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் மேலும் அந்தப் பகுதிகளில் இனந்தெரியாத ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடையோர் மேற்கொள்ளும் சட்டத்துக்கு முரணான கொலைகள் உட்படப் பல விடயங்கள் தொடர்பாகவும் இந்தப் பேச்சுகளின் போது கலந்துரையா…
-
- 0 replies
- 787 views
-
-
எமது விடுதலைப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் திரைப்படங்களை சிங்கள அரசு பயன்படுத்த முயற்சிக்கின்றது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 603 views
-
-
மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 படையினர் காயமடைந்துள்ளனர். ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 708 views
-
-
இலங்கைக்கான பொருளாதார உதவியை கணிசமான அளவு குறைத்தது அமெரிக்கா இலங்கையின் கிழக்குப் பகுதியில் முன்னெடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகளில் அமெரிக்கா பங்கெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள அந்த நாட்டின் 2009ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு செயற்பாட்டு நிதித்திட்ட அறிக்கை, அதேவேளை வாஷிங்டன் இலங்கைக்கான ஒட்டுமொத்த பொருளாதார உதவியை பெருமளவுக்கு குறைத்துள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அறிக்கை கடந்த வாரம் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீஸா ரைஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை மற்றும் பாதுகாப்பு நிலைவரங்களில் முன்னேற்றம் ஏற்படும் வரை அமெரிக்காவில் மிலேனியம் உதவித் திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டதை இந்த நிதியறிக்கை உறுதி செய்துள்ளது. …
-
- 2 replies
- 1.4k views
-
-
வவுனியா, மன்னார் மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து கெடுபிடிகளை நீக்க வேண்டும் - ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை வீரகேசரி இணையம் 4/16/2008 10:27:57 PM - மன்னாருக்குள் நுழைவதற்கு ஏனைய பகுதி மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. வவுனியா, மன்னார் பகுதிகளிலிருந்து மதவாச்சியூடாக தென்பகுதி செல்லும் தமிழர்கள் ரயில்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இத்தகைய போக்குவரத்துக் கெடுபிடிகளை உடனடியாக நிறுத்தி தமிழ் மக்களின் பாதுகாப்பான பயணத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜனாதிபதிக்கு அவர…
-
- 1 reply
- 574 views
-
-
பிரபாகரன் திரைப்படத்தை அதன் தயாரிப்பாளரிடம் ஒப்படைத்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். பிரபாகரன் திரைப்பட இயக்குனர் மீதான தாக்குதலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பான அமைப்புக்களின் செயற்பாடுகளினால் தமிழ் மக்களுக்கு அவமானம் ஏற்பட இடமளிக்க முடியாது என தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுப்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் பிரபாகரன் திரைப்படத்தை மீள ஒப்படைக்காததன் மூலம் தூரதிஸ்டவசமான சம்பவங்கள் நிகழக்கூடிய அபாயம் இருப்பதாக சங்கரி தமிழ…
-
- 3 replies
- 1.4k views
-
-
வெள்ளை புலி'யுடன் வைகோ! ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நார்வே நாட்டில் சூறாவளியாய் சுழன்றடித்திருக்கிறார் வைகோ. 'ஆர்ட் ஆஃப் லிவிங்' இயக்கத்தின் தலைவரும் ஆன்மிகவாதியுமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோ நகரில் 'தெற்காசிய நாடுகளில் அமைதியும் ஆக்கமும்' என்ற சர்வதேச மாநாட்டை நடத்தினார். இதில் கலந்துகொண்ட வைகோ, இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடத்திய நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹைமைச் சந்தித்து, 'இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்படும் படுகொலைத் தாக்குதலை ஐரோப்பிய யூனியன் நாடுகள் தடுக்கவேண்டும்' என்று வலியுறுத்தி இருக்கிறார். ''தமிழினத்தை மொத்தமாக அழித்துவிட இலங்கை அரசு முனைகிறது. இந்தியாவும்மௌனம் சாதிக்கிறது. தமிழர்கள் இல்லாத நாடே…
-
- 5 replies
- 2.7k views
-
-
சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியான மதவாச்சி ஊடான பாதுகாப்பான பயணங்களுக்கு வழி சமைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 523 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த வெள்ளிக்கிழமை (11.04.08) தமிழ்க் குடும்பஸ்தர்கள் இருவர் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 777 views
-
-
ஜே.வீ.பீ பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதியுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்பொன்றை ஏற்றுக்கொள்வார் என லால்காந்த தெரிவித்துள்ளார். விமல் வீரவன்சவுடன் சென்ற ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்ப........................................................... .......... தொடர்ந்து வாசிக்க.................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_16.html
-
- 1 reply
- 1k views
-
-
வடபோர்முனையில் தாம் எதிர் பார்த்ததை விட படையினர் அதிகள வில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் களை எதிர் கொள்கின்றனர் என்று ராஜதந்திரிகளும், அவதானிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர். போர் நிலைவரம் தொடர்பாக ஏ.பி. செய்தி நிறுவனம் வெளியிட் டுள்ள செய்தி மடலில்........ தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6566.html
-
- 0 replies
- 2k views
-
-
இலங்கை இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா அனுசரணையாளராக செயற்பட வேண்டும் என்று நோர்வே அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 2k views
-
-
வன்னிக்களமுனையில் இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில் 2 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 701 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் இந்தியா தலையிடக் கூடாது. இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று ஜே.வி.பி.யின் சர்வதேச தொடர்பு செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார். நோர்வேயில் கடந்த 10, 11 ஆம் திகதிகளில் நடைபெற்ற சமாதானத்துக்கான கருத்தரங்கில் உரையாற்றிய முக்கியஸ்தர்கள் மற்றும் நோர்வேத் தரப்பினர், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவின் தலையீட்டினைக் கோரியிருந்தனர். இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது விடயம் தொடர்பாக ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது, இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தும் நோர்வே…
-
- 2 replies
- 1.1k views
-
-
முகமாலை மற்றும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதிகளில் விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் 4/16/2008 11:26:27 AM - வன்னியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்குகள் மீதும் அவர்களது முகாம்கள் மீது நேற்றும் இன்றும் இலங்கை விமானபடையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் படி விமானப்படையின் எம்.ஐ 24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் முகமாலையில் புலிகளின் முன்னரங்கபகுதிகளில் காணப்படும் பதுங்குகுழிகள் மீதும், அப்பகுதியில் இனம் காணப்பட்ட பீரங்கி நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாவும், இதேவேளை நேற்றிரவு 11.50 மணி அளவில் விமானப்படை போர் விமானங்கள் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இனங்காணப்பட்ட புலிகளின் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக…
-
- 0 replies
- 1k views
-
-
சொன்னால் முடியாத சரித்திரமாக... "என்னால் முடியும்" கேணல் சார்ள்ஸ் -ச.பொட்டு- 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு. தலைவரின் புருவம் உயர்கின்றது. 'இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்?'நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?' தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார். 'மன்னார் களமுனையின் பின்னணியில் எதிரியின் சிறப்பு அணிகள் ந…
-
- 3 replies
- 2k views
-
-
மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் அதிக அக்கறை காட்டவில்லை என்று அனைத்துலக சுயாதீன கண்காணிப்பாளர் குழு (IIGEP) இறுதி மக்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 892 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 'மை டோட்டர் த டெரரிஸ்ட்' அமெரிக்க திரைப்பட விழாவில் 'மை டோட்டர் த டெரரிஸ்ட்' (My daughter the Terrorist) திரைப்படத்தை அமெரிக்காவில் திரைப்பட விழவில் இடம் பெறச் செய்தமையிட்டு வாஷிங்கனிடம் இலங்கை கடும் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதுவர் பேர்னாட் குணதிலக, அமெரிக்க இராஜாங்த் திணைக்களதிற்கும் சமஷ்டி விசாரணைப் பிரிவுக்கும் கடிதம் அனுப்பி வைத்திருக்கின்றார் நோர்வே படத்தயாரிப்பாளரான பியத்தி ஆர்னஸ்டால் தயாரிக்கபட்ட இத்திரைப்படமானது விடுதலைப் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத் திரைப்படம் ஏப்ரல் 4 ல் வட கரோலினாவின் டர்காமில் காண்பிக்கப…
-
- 1 reply
- 1.8k views
-
-
யாழ் முன்னரங்கில் விரைவில் சடுதியான பிரமாண்டமான களமுனை திறக்கப்படும்- இராணுவத் தளபதி பொன்சேகா சூளுரை வீரகேசரி இணையம் 4/15/2008 1:13:16 PM - விடுதலைப்புலிகள் இதுவரை எதிர் கொண்டிராத யுத்த முனை ஒன்றை தாங்கள் விரைவில் வன்னியில் திறக்க உள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா சூளுரைத்துள்ளார்.அவரது பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது செவ்வியின் மேலதிக விபரங்கள் வருமாறு,அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை தாக்குதலுக்கு பின்னர் சர்வதேச சமூகம் இலங்கை அரசை பேச்சு மூலமான தீர்வுக்கு வலியுறுத்தி இருந்தது.ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் முன்னரை விட உறுதியாக போரை முன்னெடுப…
-
- 5 replies
- 1.4k views
-
-
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) சோமவன்ச அமரசிங்கவின் தலைமையிலான அணியுடன் ரணில்- மங்கள சமரவீர ஆகியோரின் புதிய அமைப்பான தேசிய சபை இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக..... ..................... தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2401.html
-
- 0 replies
- 1.1k views
-
-
உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் மற்றும் உணவுத் தட்டுப்பாடு என்பவற்றினால் பாதிக்கப்பட்ட மிக மோசமான நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணை நிறுவனமான உணவு விவசாய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ........................................................... தொடர்ந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/04/14.html
-
- 0 replies
- 878 views
-