Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்களை அணி திரட்டப் போவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர் - பா.நடேசன் Saturday, 12 April 2008 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற பெயரில் ஒரு சதி அரசியலை அரங்கேற்ற அரசாங்கம் முற்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். நாளை வெளிவரவுள்ள வீரகேசரி வாரவெளியீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் சமகால நிலைவரம் குறித்து பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலதிக விபரங்கள் http://www.ajeevan.ch/content/view/1817/1/

  2. மன்னார் பாலைக்குழி இத்திக்கண்டல் பகுதி ஊடாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  3. மொழிச் சட்டம் மற்றும் மாகாண சட்டங்களை தூசி தட்டி எடுக்கவே 20 ஆண்டு காலம் கடத்தும் சிங்களவர்களின் அரசியல் வரலாற்றின் இலட்சணத்தைப் பார்த்தால் தமிழர்கள் எப்படி நம்புவார்கள் என்று சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  4. அம்பாறை மாவட்டத்தில் உள்ள புளுகுநாவைக்கும் தாந்தாமலைக்கும் இடையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை மற்றும் காவல்துறை பயணித்த முச்சக்கர ஊர்தி மீது நடத்தபட்ட கிளைமோர்த் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 654 views
  5. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் படையினரின் தெடரணி மீது குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டு மற்றும் ஒருவர் காயம் அடைந்துள்ளார். பிற்பகல் 1.30 அளவில் மாலிச் சந்திக்கும் நெல்லியடிக்கும்; இடைப்பட்ட பகுதியில் இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது ஒரு கைக் குண்டுத் தாக்குதல் என ஒரு தகவலும் கிளைமோர் தாக்குதல் என மற்றொரு தகவலும் தெரிவிக்கின்றன. குhயம் அடைந்த சிப்பாய் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அங்கிருந்து பலாலி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://isoorya.blogspot.com/

    • 2 replies
    • 1.5k views
  6. வடபோர்முனையான முகமாலை களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்கிச் சூட்டுத்தாக்குதலில் கடந்த செவ்வாய்க்கிழமை படுகாயமடைந்த சிறிலங்காப் படை அதிகாரி கேணல் ஜகத் ரத்நாயக்க என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 888 views
  7. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சதி அரசியல் அரங்கேற்றம்’ கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற பெயரில் ஒரு சதி அரசியலை அரங்கேற்ற அரசாங்கம் முற்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்தார். வீரகேசரி வாரவெளியீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் சமகால நிலைவரம் குறித்து பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்தச்செவ்வியின் முழுமையான விபரம் வருமாறு: கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடை பெறவுள்ளது. இந்தத் தேர்தலை நீங்கள் எவ் வாறு பார்க்கிறீர்கள்? தேர்தல் என்ற சனநாயக வடிவத்தைத் தமிழர் நிலத்தில் அதன் உண்மையான வடிவத்தில் சிறிலங்கா அரசு நடத்துவதில்லை. ஆக்கிரமிக் கப்பட்ட தமிழர் நிலத்தில் இயல்புநிலை …

  8. ஸ்ரீலங்காவில் விசேட பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களை பாதுகாப்பதற்கான அமைச்சரவை பாதுகாப்பு பிரிவிற்கு மேலதிக பயிற்ச்சிகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் விசேட பிரமுகர்களிள் உள் வளைய பாதுகாப்பு பணிகளில் ..................... தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2789.html

    • 0 replies
    • 727 views
  9. ஜே.வீ.பீயின் உடைவுக்கு ராஜபக்ஸ சகோதரர்களே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜே.வீ.பீயின இரும்பு மனிதர்களில் ஒருவர் என வர்ணிக்கப்படுபவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், ஜே.வீ.பீ தொழிற்சங்கங்களின் கூட்டிணைப்பாளருமான ....................... தொடர்ந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1905.html

    • 0 replies
    • 547 views
  10. தெற்காசிய மோதல்கள் குறித்த கருத்தரங்கம்: வைகோ நார்வே பயணம் சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்றுள்ளார். அங்கு நடைபெறும் சர்வதேச கருத்தரங்கில் அவர் கலந்து கொள்கிறார். தனது நார்வே பயணத்தின்போது இலங்கை விவகாரம் தொடர்பாக அமைதித் தூதரை அவர் சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில், நார்வே அமைதிக் குழு, ஐரோப்பிய யூனியன், வாழும் கலை அமைப்பு ஆகியவற்றின் சார்பில், தெற்காசியாவில் மோதல்களும், அமைதியும் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவிலிருந்து வைகோவும், சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். இதை ஏற்று வைகோ நேற்று நார்வே புறப்பட்டு…

  11. அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே படுகொலை செய்யபட மாட்டார் என, தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதிமொழி வழங்கியிருந்தாக சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்,....................... தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6194.html

    • 5 replies
    • 1.8k views
  12. தமிழீழ விடுதலைப் புலிகள் போர்முனையில் படை நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையிலேயே முதற்கட்டமாக ஈடுபட்டு வருகின்றனர். என்று தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், அடுத்த கட்டமாக தாயகப் பிரதேசங்கள் மீட்கப்படும் என்று 'கேசரி" வார இதழுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்குப் பேச்சு வார்த்தை குறித்த எண்ணம் இருக்குமானால் அதனை நேர்வே ஊடாக தெரிவிக்கலாம். நோர்வேயின் மத்தியஸ்தத்தின் கீழ் அமைதிப் பேச்சு வார்ததைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்றும் தாயார் என்றும் கூறியுள்ளார் பா. நடேசன். சர்வதேச ஆவணமாக கருதப்படும் போர் நிறுத்த உடன்பாட்டை விடுதலைப் புலிகள் கிழித்தெறிய விரும்பவில்லை. ஒ…

    • 0 replies
    • 1.3k views
  13. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தடை விதிப்பது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  14. மே நாள் பேரணியை இந்த ஆண்டு அம்பாறையில் நடத்த சிறிலங்காவின் ஆளும் சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 546 views
  15. -----------------------------------------------------------------------------------------------------------

  16. இப்படிக் கூறுகிறார் எல்லாவல மேத்தானந்த தேரர் ஆதாரம் வீரகேசரி

    • 17 replies
    • 2.3k views
  17. வியாழன் 10-04-2008 11:04 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்காப் பாராளுமன்ற வாகனத் தரிப்பிடத்தில் வைத்து வாகனங்கள் கடத்தல் சிறீலங்காப் பாராளுமன்றில் வைத்து ஜேவிபி உறுப்பினர்களின் வாகனங்கள் காணமால் போயுள்ளன. நேற்று பாராளுமன்ற நடவடிக்கைகளுக்குச் சென்ற மூவரின் வாகனங்களும் மற்றொன்று ஜேவிபியின் உறுப்பினரின் வீட்டில் வைத்தும் காணாமல் போயுள்ளன. ஜேவிபியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியிசிறீ விஜேநாயக்கவின் ரொயோட்டா கப் வாகனம், இரத்தினபுரி மாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசல ஜாகொடவின் ரொயாட்டா கயஸ், மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜாதா அலகக்கோனின் வாகனமும் அவரது வாகனச் சாரதியும் பாராளுமன்ற வளாக வாகனத் தரிப்பிடத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளன. இத…

    • 7 replies
    • 1.9k views
  18. சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்டது ஏன் என்று கொழும்பு ஆங்கில ஊடகமான "த மோர்னிங் லீடர்" ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.7k views
  19. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்@ராட்சித் தேர்தலின் போது இந்தளவு தீவிரம் எந்த தரப்பிலும் காணப்படவில்லை. அந்தத் தேர்தலின் போது முடிவுகள் முன்கூட்டியே தெளிவாக இருந்தமை அதற்கு காரணமாகும். இந்த தேர்தலின்போது நிலைமை அவ்வாறு இல்லை. குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.க.வுடன் கூட்டு சேர்ந்ததை அடுத்து வெற்றியை பற்றிய ஆளும் கட்சியின் நம்பிக்கைக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது. எனவேதான் அவர்கள் தீவிரம்.............. தொடர்ந்து வாசிக்க............................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6129.html

    • 0 replies
    • 541 views
  20. இலங்கைக்கான ஏவுகணை விற்பனை: ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்கு முரணானதல்ல ஸ்லோவாக்கியா தெரிவிப்பு - ஏவுகணையொன்றுக்கு 180 அமெரிக்க டொலர் செலவிட்டுள்ளது. பல்குழல் பீரங்கிகளுக்கு பயன்படுத்தும் 122 மில்லி மீற்றர் ரகத்திலான 10 ஆயிரம் ஏவுகணைகளை இலங்கைக்கு விற்பனை செய்துள்ளதாக ஸ்லோவாக்கிய பொருளாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆயுத விற்பனையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத ஏற்றுமதி தொடர்பான விதி முறைகளுக்கு முரணானதல்ல என ஸ்லோவாக்கிய வெளிவிவகார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. எனினும் உள்நாட்டு மோதல்கள் இடம்பெறும் நாடுகள், பொது மக்கள் பாதிக்கப்படும் நிலைமை காணப்படும் நாடுகள் போன்றவற்றிற்கு ஆயுத ஏற்றுமதி செய்யக் கூடாது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின…

    • 0 replies
    • 627 views
  21. 10ஏ பெற்று சாதனை படைத்துள்ள ரேகா ரேணுகா இரட்டைச்சகோதரிகள். [ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2008, 07:11.14 PM GMT +05:30 ] அண்மையில் வெளியாகிய 2007ம் ஆண்டு க. பொ. த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகளின்படி கொ/வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவியான செல்வி ரேகா பாலசுப்பிரமணியம் 10 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றதோடு தமிழ் மொழி மூலப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் சிறந்த புள்ளிகளைப் பெற்றதில் எட்டாவது மாணவியாகவும் மேல் மாகாணப் பாடசாலைகளுள் முதலாவது மாணவியாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பௌதிக வளங்கள் குறைந்த ஒரு சிறிய பாடசாலையில் கிடைத்த ஆசிரிய வளத்தையும் தனது விடாமுயற்சியையும் பயன்படுத்தி இத்தகைய பெறுபேற்றைப் பெற்றுக்கொண்டமை ஒரு சாதனை என்றே கூறவேண்டும். இ…

    • 0 replies
    • 1.2k views
  22. ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகச் சலுகையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் ஜி.எல்.பீரிஸ், அண்மையில் பிரசல்சில் பறிகொடுத்து விட்டு திரும்பிய பின்னர் தனது தோல்வியை மறைப்பதற்கு அவர் நடத்திய கோமாளித்தனங்களை கொழும்பு ஆங்கில ஊடகமான "த மோர்ணிங் லீடர்" அம்பலப்படுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 783 views
  23. கிழக்குத் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள் என புள்ளிவிபரத் திணைக்கள தகவல்களின் மூலம் தெரியவருகிறது. திருகோணமலை மாவட்டத்தின் மொத்த சனத்தை தொகை 340,158 ஆகும். இதில் 2,42,463 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 48 வீதம் தமிழ் வாக்காளர்களும், 28.2 வீதம் முஸ்லிம் வாக்காளர்களும், 23.4 சிங்கள வாக்காளர்களும் அடங்குகின்றனர். மட்டக்களப்பு மாவட்ட மொத்த சனத்தொகையில் 74 வீதமானோர் தமிழ் மக்கள் எனவும், 23.5 வீதமானோர் முஸ்லிம் மக்கள் எனவும், 1.3 வீதமானோர் சிங்கள மக்கள் எனவும் தெரியவருகிறது. அம்பாறை மாவட்டத்தில் 41.3 வீதமான முஸ்லிம் மக்களும், 39.9 வீதமான தமிழர்களும், 18.4 வீதமான சிங்களவர்களும் வசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. …

  24. கிழக்கு மக்களின் கவனத்திற்கு” என்ற தலைப்பில் சீறும் படை என்ற பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டள்ளது. அதன் முழுவிபரமும் இங்கே தரப்படுகின்றது. கிழக்கு மக்களின் கவனத்திற்கு அன்பார்ந்த மானத்தமிழ் மக்களே! விழித்திருக்க வேண்டிய காலமிது, சிங்கள பேரினவாத அரசினதும், இந்திய அரசினதும், கபடநோக்கத்தின் ஊடாக தமிழர் தாயகத்தை வடக்கு என்றும் கிழக்கு என்றும் பிரித்து அந்த நிலப் பிரிப்பை நியாயப்படுத்தி உலகளாவிய அரசியல் அங்கீகாரத்தை பெற்று அந்த அங்கீகாரத்தின் ஊடாக கிழக்கில் சிங்களவர்களை பெரும்பான்மை ஆக்குவதற்காகவும், தமிழர்களுடைய தொன்மை வரலாற்றுத் தடங்களை அழித்து அதில் பௌத்தமத சின்னங்களை நிறுவி கிழக்கு சிங்களவர்களினுடைய தா…

  25. மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் ஒருநாள் குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக, குழந்கையின் தாயார் புதன்கிழமை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, தயாரான செல்லத்தம்பி ராணி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பாழ் கிணறு ஒன்றினுள் போட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதியாளர் கே.தட்சணாமூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவரை எதிர்வரும் 23 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். sankathi.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.