Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிக்கியுள்ள தம்மை மீட்குமாறு, யாழ் உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர் அமையம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 12 வருடங்களுக்கு மேலாக சிங்கள பௌத்த பேரனிவாதப் படைகளின் பிடியில் தாம் சிக்கியிருப்பதாகவும், இந்த அமையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாடசாலை மாணவிகள் சீரூடையுடன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதுடன், பல மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உயிருடன் வீடு திரும்ப முடியுமா? என்ற அச்சத்துடனேயே பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலையில் தாம் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 949 views
  2. இன்று காலை 10 மணி முதல் வழமை போல் மதவாச்சி வீதிச் சோதனைச் சாவடி திறக்கப்பட்டுள்ளது Monday, 07 April 2008 10.00am நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்டதை அடுத்து மதவாச்சி ஊடான வடபகுதிக்கான அனைத்துப் போக்குவரத்துக்களும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு இருந்தது. இன்று காலை 10 மணி முதல் வழமை போல் மதவாச்சி வீதிச் சோதனைச் சாவடி திறக்கப்பட்டுள்ளது. http://www.ajeevan.ch/

    • 0 replies
    • 887 views
  3. கிழக்கில் இயங்கும் துணைப் படைக்குழுவான பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்ற ஜே.வி.பி. கட்சியின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை. பிள்ளையானின் ஆயுதங்களைக் களைந்தால்தான் அங்கு மாகாண சபைத் தேர்தல் நியாயமாக நடக்கும் என்று ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 915 views
  4. மன்னாரில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு வீரகேசரி இணையம் 4/7/2008 10:38:45 AM - மன்னார் நளவன்வாடி வீதியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.நேற்று இரவு இத் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.இதனையடுத்து சடலத்தை பார்வையிட்ட பிரதேசவாசிகள் இன்று காலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். இன்று காலை 10.10 மணியளவில் மன்னார் மாவட்ட நீதிவான் ரி.ஜே பிரபாகரன் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகளிற்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.சடலத்தின் தலை மற்றும் கழுத்து…

  5. மாங்குளத்திலும் முகமாலையிலும் வான் தாக்குதல் [ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 07, 2008 - 05:20 AM - GMT ] சிறிலங்கா வான்படையின் தாக்குதல் வானூர்திகள் இன்று காலை மாங்குளம் பகுதியில் குண்டு வீச்சை நடத்தியுள்ள அதேவேளை முகமாலைப் பகுதியில் வான்படையின் உலங்குவானூர்திகளும் தாக்குதலை நடத்தியதாக சிறிலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. மாங்குளத்தில் இன்று காலை 6.15 மணியளவில் வான்படையின் அதிவேக தாக்குதல் வானூர்திகளும் முகமாலைக்குத் தெற்காக உள்ள பகுதியில் இன்று காலை 6.30 மணியளவில் உலங்குவானூர்திகளும் தாக்குதலை நடத்தியதாக சிறிலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் நிலைகளே தாக்கப்பட்டதாக படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த உண்மைநிலை அறி…

  6. காண்டம் பார்த்து பரிகாரம் செய்த அமைச்சர் ஜெயராஜ் அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே சில தினங்களுக்கு முன்னர் காண்டம் பார்த்துள்ளதுடன் அதற்கான பரிகாரங்களையும் மேற்கொண்டிருந்ததாக நம்பகரமாக தெரியவருகின்றது.காண்டம் பார்த்த அமைச்சர் அதற்கான பரிகாரங்களை வீட்டில் வைத்து மேற்கொண்டுள்ளார் என்று அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன ஆதாரம் வீரகேசரி

  7. 'கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மோசடியாக இடம் பெறப்போகின்றது என்பதை, விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சியின் பெயரில் போலி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே அறிந்து கொள்ள முடிகிறது'. மட்டு மாவட்ட த.தே.கூட்மைப்பின் எம்.பியான பாக்கிய செல்வம் அரியநேத்திரன் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளர்ர். மேலும்: 1989ம் ஆண்டு ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் காலப்பகுதியில் ஏற்பட்ட போர் நிறுத்தம் மற்றும் பேச்சுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற பெயருடைய கட்சி தேர்தல் திணைக்களத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யபட்டது. இக்கட்சியின் செயலாளர் நாயகமாக, இக்காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த யோகரெட்ணம் …

    • 0 replies
    • 813 views
  8. இலங்கையின் பல பகுதிகளில் பணத்திற்காக ஆட்களைக்கடத்தி வந்த அரச ஆதரவுடன் இயங்கும் பிள்ளையான் குழு தற்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் தனது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துள்ளதாக பிரிட்டனிலிருந்து வெளியாகும் "த இன்டி பென்டன்ட் ஒவ் சண்டே' செய்தித்தாள் தனது புலனாய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த அகதிகள் சிலருக்கு பிரிட்டனில் தஞ்சம் பெறுவதுடன் அவர்கள் அனுபவித்த பயங்கரங்கள் முடிவதில்லை. மாறாக அவை அங்குதான் ஆரம்பமாகின்றன என்று அந்தக்கட்டுரை தெரிவிக்கின்றது. விமானத் தாக்குதலில் தனது சகோதரியை இழந்த பின்னர் 10 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டனுக்கு வந்த 27 வயது தமிழர் ஒருவர் தனது சகோதரருக்கும் மற்றுமொரு உறவினருக்கும் நேர்ந்த கதியைக் கூறுகிறார். இலங்கையின் பு…

  9. பசில் ராஜபக்ஸவின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் பசில; ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பு வழங்கியபோது பார ஊர்தி ஒன்றடன் மோதி விபத்துக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார். இன்று மிரிஸ்வத்தை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மற்றொருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. நன்றி : பதிவு

    • 1 reply
    • 1.6k views
  10. குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் வியாழக்கிழமை (10.04.08) அரசாங்கத்தின் பூரண மரியாதையுடன் நடத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 589 views
  11. [06 - April - 2008] விதுரன் * மடுவிலிருந்து திருச்சொரூபத்தைக் கொண்டு சென்றமை அரசுக்கு கொடுத்துள்ள பெரும் ஏமாற்றம் வடக்கே அடைமழை நின்று விட்டதால் மீண்டும் கடும் சமர் ஆரம்பமாகியுள்ளது. மடுவைக் கைப்பற்றி விடும் முயற்சியில் அரசும் படையினரும் தீவிரம் காட்டினர். ஆனால் மடுதேவாலயத்திலிருந்து திருச்சொரூபம் வேறிடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதால் அரசு மடுவைக் கைப்பற்றும் முயற்சியைத் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மடுவைக் கைப்பற்றுவதென்பது இராணுவ இலக்காக இருக்கவில்லை. ஆனால் அரசியல் நோக்கங்களுக்காகவே மடுதேவாலயத்தை கைப்பற்றிவிட வேண்டுமென அரசு தீவிர அக்கறை காட்டியது. இராணுவ ரீதியில் மடுவோ அல்லது தேவாலயப் பகுதியோ கேந்திர முக்கிய பகுதிகளல்ல. ஆனால் மடுத் தேவாலயத்த…

  12. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து எமக்கு எந்த அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. எமது முடிவின் படியே மடு மாதா சிலையை நாம் அகற்றியிருந்தோம் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  13. 2008 இன் முதல் 100 நாட்களில் ஆறு எம்.பிக்கள் உயிரிழந்தனர் புது வருடம் பிறந்து நூறு நாட்களுக்குள் ஆறாவது நாடாளுமன்ற உறுப்பினரை தற்போதைய நாடாளுமன்றம் இழந்திருக்கின்றது. ஜனவரி முதலாம் திகதி மகேஸ்வரன் எம்.பி. சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த வாரத்தில் அமைச்சர் டி.எம்.திஸாநாயக்கா கிளைமோர்க் குண்டில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிவநேசன் எம்.பி. கிளைமோர்க் குண்டிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் அணியின் சிறிபதி சூரியாராய்ச்சி கார் விபத்திலும், அனுரா பண்டாரநாயக்கா சுகயீனம் காரணமாகவும் மரணமாகினர். தற்போது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே குண்டு வெடிப்பில் பலியாகியிருக்கின்றார். http://www.sudaroli.com/pages/news/today/04.htm

    • 2 replies
    • 1.4k views
  14. ஏகப்பட்ட எதிரிகளைச் சம்பாதித்த பெர்னாண்டோபிள்ளை ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை தான் ஒரு சிங்களவன் அல்லது சிங்கள் விசுவாசி என்று காட்டுவதற்காக மிகவும் தீவிரமாக அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் ஆதரவாக பேசி வந்ததால் முழுத் தமிழினத்தினதும் கோபத்துக்கு ஆளாகியவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதை விட அண்மைக் காலத்தில் இவர் புதிய பல எதிரிகளையும் சம்பாதித்திருந்தார். வெளிநாட்டமைச்சர் றோஹித்த போகல்லாகம வெளிநாடு சென்றிருந்த போது பதில் வெளிநாட்டமைச்சராக நியமிக்கப்பட்ட போது திடீர் திடீர் என தனது ஆதரவாளர்களை பல முக்கிய பதவிகளுக்கு நியமித்ததும் அதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய றோஹித்த அந்த நியமனங்களை எல்லாம் ரத்துச் செய்ததும் பலருக்கும் ஞாபகமிருக…

  15. தென்னிலங்கையில் அவியும் பருப்பு! 07.04.2008 இலங்கையின் இனப்பிரச்சினையை ஒட்டிய கோர யுத்தம் தொடர்பாக செய்தி நிறுவனங்கள் குறிப்பாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வரும் புதினங்களில் ஒரு முக்கிய விடயம் விசேடமாக அமைந்திருப்பதைக் காணலாம். ஒவ்வொரு நாளும் யுத்தத்தில் உயிரிழக்கும் புலிகளின் எண்ணிக்கை என்று தெரிவித்து இலங்கை அரசுத்தரப்பு வெளியிடும் புள்ளி விவரங்கள் வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களால் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கப்படுகின்றன. இந்த விடயத்தை ஒட்டி இலங்கையின் மூத்த படை அதிகாரி ஒருவர் அவ்வப்போது பகிரங்கமாக வெளியிட்டு வந்த தகவல்களை வரிசைப்படுத்தி, ஆங்கில வார இதழ் ஒன்று நேற்று நியாயமான சில கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. அந்த வினாக்களை ஒரு தடவை இங்கு நோக்கு…

  16. Started by nunavilan,

    நாட்டு நடப்பு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 957 views
  17. இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பேரணிகளை நியூயோர்க்கில் உள்ள சிறிலங்காவின் அலுவலகங்களுக்கு முன்பாக நடத்துவதற்கு அனைத்துலக மன்னிப்புச் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அனைத்துலக மன்னிப்புச் சபையைச் சேர்ந்த 1,000 தொண்டர்கள் இலங்கை, மியான்மார், டார்பர் (சூடான்), போபால் (இந்தியா), லிபியா ஆகிய நாடுகளில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவின் 10 மாகாணங்களைச் சோந்த தொண்டர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். எதிர்வரும் 11 ஆம் நாள் நடைபெறும் இந்த எதிர்ப்புப் பேரணி நியூயோர்க்கில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், ஐ.நா. அலுவலகங்களின் …

  18. பாலமோட்டையில் 9 இராணுவத்தினர் பலி, 13 பேர் காயம் இன்று ஞாயிற்று கிழமை மன்னார் பாலமோட்டையில் நடந்த சண்டையில் குறைந்தது 9 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 12 பேர்வரையில் காயமடைந்தும் உள்ளனர். பாலமோட்டையில் இரு முனைகளில் முன்னேறிய படையினரை விடுதைலைப்புலிகள் வழிமறித்து தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் குறைந்தது 9 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 12 பேர்வரையில் காயமடைந்தும் உள்ளளதாக விமடுதலைப்புலிகளின் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். காலை 8:30 மணியில் இருந்து மாலை 5:40 மணிவரை இராணுவத்தினர் பின்வாங்கும்வரை கடுமையான சண்டை நடைபெற்றுள்ளது. இதேவேளை, அகோர எறிகணை வீச்சினால் கோயில்குஞ்சுக்குளத்தைச் சேர்ந்த இறுதியாக எஞ்சிய 32 குடும்பங்களும் வெளியிறியுள்ள நிலையில் ம…

  19. சிறிலங்காவின் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கெப்பிற்றிக்கொல்லாவவில் இன்று ஊர்காவல் படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 2 ஊர்காவல் படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 694 views
  20. வாரியபொல சிறையுடைப்பு: கைதிகள் எழுவர் தப்பியோட்டம் வாரியபொல சிறையிலிருந்து கைதிகள் எழுவர் சிறையுடைத்துத் தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Jailbreak at Wariyapola Seven prisoners have reportedly escaped from the Wariyapola Prison a short while ago, the Police said. ஆதாரம்:Dailymirror

  21. கிழக்கு மாகாண தேர்தலும் அரசாங்கத்தின் உபாயங்களும் -தாரகா- இப்படி ஒரு கதை நம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். அதிலும் புராண இதிகாசங்களில் ஈடுபாடுள்ளவர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. குருஷேத்திரப் போரில் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தி இனி ஒன்றுமில்லை என்னும் தறுவாயில் பயன்படுத்தப்பட்டதுதான் வஜ்ராயுதம். உண்மையைச் சொல்வதானால் எனக்கு புராண இதிகாசங்களில் பெரிதாக ஈடுபாடில்லை. எனவே ஏதும் நான் பிழையாக சொல்லி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். ஆளும் மகிந்த அரசு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை அவசர, அவசரமாக நடத்தி முடிப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பதை பார்த்த போது எனக்கு வஜ்ராயுதத்தின் ஞாபகம்தான் வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழர் தேசத்தின் விடுதலை…

  22. பயங்கரவாத்தை தோற்கடிக்கும் வரை மக்கள் பட்டினியை தாங்கிக் கொண்டிருப்பார்கள் என பெருந் தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டேபுள்ளே தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது பொருட்களின் விலைகள் வான் உயரத்திற்கு உயர்ந்துள்ளன. 76ஆம் 77ஆம் ஆண்டுகளில் பொருட்களில் விலை அதிகரிப்பால் மக்கள் அரசாங்கத்தை கவிழ்த்தனர். தற்போது அரிசி, மா சீனி போன்றவற்றின் விலைகள் எவ்வளவு அதிகரித்தாலும் பயங்........................... தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1849.html

  23. கடந்த மூன்று மாதங்களில் 400 இராணுவத்தினர் உயிரிழந்தும் 800 போர் அங்கவீனர்களாகியும், படுகாயமடைந்துமுள்ளதுடன் 2,500க்கும் மேற்பட்ட இராணுவத்தினா காணாமல் போயுள்ளதாக தெரிவித்த ஐ.தே.க.வின் பொதுச் செயலா திஸ்ஸ அத்தநாயக்க, யுத்தம் குறித்த உண்மைச் செய்திகளை அரசால் மூடிமறைப்பதாகவும் குற்றம் சாட்டினார். கிழக்கை மீட்டு விட்டோம், வடக்கை கைப்பற்றுகிறோமென அரசு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது. ஆனால் தென்பகுதியிலுள்ள கதிர்காமம், புத்தல மற்றும் யால பகுதிகளுக்கு மக்கள் யாருமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார். 'நாடு அதாளபாதாளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. அனைத்து துறையிலும் ஊழல்களும மோசடிகளும் இடம் பெறுவதுடன் கொழும்பு மற்றும் தென்பக…

  24. உக்கிரமடைந்துள்ளன. இலங்கை விமானபடைக்கு சொந்தமான பீச் கிராப்ட் என்ற உளவு விமானம் கடந்த மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவு வன்பரப்பில் பறந்துகொண்டிருந்தது. இந்த விமானத்தின் பணியானது எதிரியின் நிலப்பரப்பை தேடுவதாகும். இதற்கான தொழிநுட்ப கருவிகள் இந்த உளவு விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இந்த விமானம் பறந்துகொண்டிருந்த போது விமானத்தின் விமானி, இரனைமடு குளதத்திற்கு மேலாக பயணித்து கொண்டிருந்த போது முல்லைத்தீவு காட்டு பகுதியில் பாரிய வெளிச்சம் ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார். விமானி கண்டது கெரில்லாக்களின் விமான ஓடுதளமாகும............................. தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/04…

    • 0 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.