ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143595 topics in this forum
-
உலகில் ஏற்பட்டு வரும் மோசமான உணவு நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றும் முன்னேற்பாட்டுத் திட்டமோ, செயற்பாடோ அரசாங்கத்திடம் இல்லையென கடுமையாக சாடியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), அரசாங்கத்தை பதவி நீக்குவதற்கான வேலைத்திட்டத்தை மே முதல் (இன்று) முன்னெடுக்கப் போவதாக தெரிவித்திருக்கிறது. உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படப் போகின்ற நிலையில், நாட்டு மக்களை இதிலிருந்து பாதுகாப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கவில்லையென குற்றம் சாட்டியிருக்கும் ஜே.வி.பி., அரசைக் கலைப்பதற்கான வேலைத்திட்டத்தை மே மாதம் முதல் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை இலங்கை மன்ற கல்லூரியில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் ஜே.வி.பி.யின் செயலாளர்…
-
- 2 replies
- 852 views
-
-
தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றினை உலக சமூகம் அங்கீகரிக்கும் வரை உறுதியோடு எமது தமிழீழத் தேசியத் தலைவருடன் இணைந்து போராடுவோம் என்று கிளிநொச்சி மே நாள் ஏற்பாட்டுக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 672 views
-
-
மணலாறுப் பிரதேசத்தில் இன்று காலை நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 2 சிறிலங்கா அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்காப் படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 918 views
-
-
முகமாலைச் சமரில் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளின் அர்ப்பணிப்பும், தியாக சிந்தனையும் போற்றத்தக்கது என்று இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான "றோ"வின் முன்னாள் அதிகாரி பி.இராமன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.5k views
-
-
பூவரசம்குளம் முன்னரங்குகளில் கடும் மோதல் Thursday, 01 May 2008 வவுனியா பூவரசம்குளம் முன்னரங்கு பகுதியில் நேற்று இரவு முதல் கடும் மோதல்களில் விடுதலைப் புலிகளும் படையினரும் ஈடுபட்டுள்ளனர். நேற்று பகல் படைத் தரப்பு பூவரசம்குளம் மற்றும் கள்ளிக்குளம் பகுதியில் அமைந்த விடுதலைப் புலிகளின் 18 என அழைக்கப்படும் முகாமை கைப்பறியததை அடுத்தே முகாமை சுற்றியுள்ள விடுதலைப் புலிகள், படையினருக்கு எதிராக கடும் தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தனர். படையினரும் கனரக ஆயுதங்கள், மல்ட்டி பெரல் மற்றும் ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முழுவதும் இம் மோதல் சத்தங்கள் வவுனியாவுக்கு கேட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இன்றும் மோதல்கள் தொடர்வதாக பாதுகாப்பு தரப்…
-
- 4 replies
- 2.2k views
-
-
பிலியந்தல குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிங்கள நபரிடமிருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இரகசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தெற்கில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சம்பளம் பெற்றுக் கொள்ளும் மேலும் 13 சிங்கள புலி உறுப்பினர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவருக்கு தலா............. தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/13.html
-
- 0 replies
- 1.6k views
-
-
நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த தெழிலாளர் வார்க்கத்தின் ஒத்துழைப்பு அவசியம்-மே தினச் செய்தியில் பிரதமர் ரட்ணசிறி விக்கரமநாயக வீரகேசரி இணையம் 5/1/2008 10:39:43 AM - நாட்டின் இறைமைக்கும் சமாதானத்துக்கும் சவாலாக எழுந்துள்ள பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக தொழிலாளர் வர்க்கத்தினரின் ஒத்துழைப்பு அவசியாமாகும் என பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க விடுத்துள்ள மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, உயிர்த் தியாகத்தின் மூலம் பல உரிமைகளைப் பெற்றுக்கொண்ட வீரமிக்க தொழிலாளர் வர்க்கத்தினரின் வெற்றியினை நினைவுகூரும் இந்த மே தினத்தில் முதலில் அவர்களுக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். தொழிலாளர் வர்க்…
-
- 2 replies
- 1.1k views
-
-
மணலாறில் தாக்குதல் நடத்திய புலிகளின் விமானங்கள் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தப்பட்டன வீரகேசரி இணையம் 5/1/2008 11:09:55 AM - மணலாறில் தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப் புலிகளின் புதிய விமானத்தளத்துக்கு விமானங்கள் திரும்பிய பின்னர் அவை மேலும் சிறிய அளவாக்கப்பட்டு உழவூர்திகளில் ஏற்றிச் செல்லப்பட்டதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது.இதுவரை இலங்கை இராணுவத்தின் நிலைகள் மீது விடுதலைப் புலிகள் 5 ஆவது தடவையாகவும் விமானத்தாக்குதலை நடத்தி உள்ளனர். புலிகளின் விமானங்களை இலங்கை விமானப்படையினரால் இதுவரை இடைமறிக்க முடியவில்லை.கடந்த ஏப்ரல் 25 ஆம் நாள் விடுதலைப் புலிகளின் Zlin Z-143L ரக இரண்டு இலகு ரக விமானங்கள் முல்லைத்தீவிலிருந்து அதிகாலை 1:25 ம…
-
- 2 replies
- 1.5k views
-
-
மத்திய உளவுப்பிரிவு போலீசார் ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை தகவலை தமிழக போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த தகவலில், இலங்கையிலிருந்து விடுதலைப்புலிகளின் கருணா பிரிவினர், தமிழகத்துக்குள்.................... தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_481.html
-
- 6 replies
- 2.1k views
-
-
இவர்களை என்ன செய்யலாம்???? இந்தியாவில் வெளியாகும் தினமலர் பத்திரிகையின் இணையப்பதிப்பில் டவுட் தனபால் என்னும் பகுதியில் இப்படியொரு கருத்து.
-
- 3 replies
- 1.9k views
-
-
இது தொடர்பாகத் தகவல் தெரிவித்த காவல்துறைப் பேச்சாளர், என்.கே.இலங்கக்கோன், மரணமடைந்த ராணியின் இரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது .................... தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4973.html
-
- 1 reply
- 1.5k views
-
-
வவுணியா துட்டுவேவா பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரண்டு அதிரடிப்படை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை வழமையான வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை நடத்தப்பட்ட தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக வவுணியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1k views
-
-
மன்னார், மனிப்புள்ளிக் குளம பகுதியின் மீது படையினரால் நேற்று முன்தினம் காலை 'ஆர்.சி.எல்' தாக்குதலோன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை 10:40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலானது விடுதலைப் புலிகளின் பிரதேச தலைவர்கள் மறைந்திருந்த முகாம்கள் இரண்டை இலக்கு வைத்தே மேற்கோள்ளப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது மேலும் : குறித்த தாக்குதல்களின் போது படையினரால் இலக்கு வைக்கபட்ட இரு முகாம்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் மறைந்திருந்த விடுதலைப் புலிகளின் ஆறு பிரதேச தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் முன்னரங்க பகுதிகளை நோக்கி முன்னேற முயற்சிக்கும் படையினருக்கு குறித்த இரு முகாம்களும் பாரிய தடையாக விளங்கி வ…
-
- 10 replies
- 2.8k views
-
-
மணலாறில் தாக்குதலை நடத்திவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய வான்தளத்துக்கு வானூர்திகள் திரும்பிய பின்னர் அவை மேலும் சிறிய அளவாக்கப்பட்டு உழவூர்திகளில் ஏற்றிச் செல்லப்பட்டதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
மே தினம் அதாவது தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகின்றது. உழைக்கும் மக்களது உரிமைகளை நிலை நாட்டுவதற்காக இன, மத, மொழி, நாடு போன்ற சகல வேறுபாடுகளையும் கடந்ததாக, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை ஓங்கிப் பறைசாற்றும் எழுச்சி தினமாக இந்நாள் கருதப்படுகின்றது. இவ்வளவு சிறப்பு மிக்க இந்நாள் நமது நாட்டிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவரத்தான் செய்கின்றது. .......... தொடர்ந்து வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9176.html
-
- 0 replies
- 808 views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 16 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருக்கும் என்னை விடுதலை செய்யவேண்டும் என்று ஆயுள் தண்டனை கைதி நளினி, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். பிரியங்கா சந்திப்பு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நளினி (வயது 37) வேலூர் பெண்கள் ஜெயிலில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வேலூர் ஜெயிலில் நளினியை ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா சந்தித்து பேசினார். மிக, மிக ரகசியமாக நடந்து முடிந்த இந்த சந்திப்பு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐகோர்ட்டில் மனு இந்தநிலையில் நளினி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- ராஜீவ்காந்தி கொ…
-
- 0 replies
- 741 views
-
-
பிலியன்தலை குண்டு வெடிப்புக்கு காரணமான மூவர் கைது Wednesday, 30 April 2008 அமைச்சர் ஒருவரை கொலை செய்ய முடியாமையால் பஸ்ஸுக்கு குண்டு வைக்க நேர்ந்தது என கைதானவர் போலீஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். பிலியன்தலை பஸ்ஸை ரிமோட் கொண்ரோல் வழி வெடிக்க வைத்தவருடன் மற்றும் இருவர் கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்ட ஒருவர் இரத்தினபுரியில் வசித்து வந்தவர் என்றும் பிலியன்தலையில் வேலை செய்தார் என்றும் விடுதலைப் புலிகளிடமிருந்து மாதாந்த வருமானமாக 50 ஆயிரம் ரூபாய் பெற்று வந்ததார் என்றும் போலீஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. கைதானவர்களிமிருந்து பெற்ற தகவல்கள் மூலம் இன்னும் 13 பேரைத் போலீஸார் தேடி வருகின்றனர். http://www.ajeevan.ch/content/view/232…
-
- 0 replies
- 923 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல் விசாரணைகளை கண்காணித்த சர்வதேச முக்கியஸ்தர்கள் குழுவில் பிளவு Wednesday, 30 April 2008 இலங்கையில் இடம்பெற்ற கடும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜனாதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக் குழுவின் விசாரணையை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சர்வதேச முக்கியஸ்தர்கள் குழுவுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கிய இந்தியாவின் முன்னாள் நீதியரசர் என் கே பகவதி, இலங்கை ஜனாதிபதிக்கு அண்மையில் அனுப்பிய கடிதமே இந்த முரண்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த குழு முழுமையாக முறிந்துள்ளதையும் அது காட்டுவதாக ஐ ஏ என் எஸ் செய்திசேவை தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 31 ஆம் திகதி இலங்கையில் இருந்து வெளியேறிய சர…
-
- 2 replies
- 1.3k views
-
-
மைக்ரோ துப்பாக்கி வைத்திருந்த யு.என்.டி.பி. பணியாளர் கைது Wednesday, 30 April 2008 உலக உணவுத் திட்டத்தின் கீழான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட பணியாளர் ஒருவர் இன்று புதன்கிழமை மாலை வவுனியாவில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வவுனியா ஈரற்பெரிய குளம் சோதனைச் சாவடியில் வைத்து படையினரால் சோதனையிடப்பட்ட போது கைது செய்யப்பட்ட இவரிடம் 'மைக்ரோ பிஸ்டல்' ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பைச் சேர்ந்த தியாகராஜா பிரபாகரன் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கிளிநொச்சியிலுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டப் பணிமனையில் பணிபுரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணம் செய்து க…
-
- 0 replies
- 1k views
-
-
கப்டன் சிலம்பரசன் என்று அழைக்கப்படும் பாடகர் குட்டிக்கண்ணனின் வித்துடல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் இன்று புதன்கிழமை விதைக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல விஞ்ஞானிகளை தமிழீழத் தேசியத் தலைவர் உருவாக்கியுள்ளார் என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 858 views
-
-
அமைதி நடவடிக்கைக்கு சிங்களவர்களில் 16.6 விழுக்காட்டினர் மட்டும் ஆதரவளிப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 997 views
-
-
மன்னார் மோதல் ஒன்றில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 5 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 993 views
-
-
ஜேவீபியிலிருந்து மூன்றாவது குழுவொன்றும் வெளியேற்றம்? ஜேவீபீ விமல் வீரவங்ச 10 பேரோடு வெளியேறியதைத் தொடர்ந்து நடுநிலையானவர்கள் என அழைக்கப்படும் மற்றொரு குழுவும் வெளியேற இருக்கிறது. தவிரவும் முன்னர் பிரிந்த இரு குழுவினரதும் தவறுகளையும் சுட்டிக் காட்டும் இக் குழு ஏனையோருக்கு சார்பாக இருக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. ஜேவீபியின் ஒரு குழுவினர் ஜனநாயக வழியிலும் மற்றொரு குழுவினர் ஆயுத புரட்சியொன்றிலும் நம்பிக்கை கொண்ட இரு வெவ்வேறு துருவங்களாக நிழல் யுத்தமொன்றில் ஈடுபட்டு நிற்கின்றனர். ஆயுத பயிற்சிகளை கூட ஒரு குழுவினர் வெவ்வேறு இடங்களில் நடத்தியுள்ளனர். அதில் ஒன்று சிலாபம் பகுதியில் நிமல் எனும் ஒருவரது இறால் பதனிடும் மையத்தில் கருணாவிடமிருந்து பிர…
-
- 3 replies
- 1.3k views
-
-
யுத்த இழப்புகள் குறித்த விபரங்கள் உண்மைக்கு புறம்பானவை இராணுவ மோதல்களில் இராணுவத்தினருக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து, இராணுவத் தரப்பு அல்லது அரசு வெளியிடும் தகவல்கள் சர்வதேச கண் காணிப்பாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக இந்தியாவின் எழுத்தாளர் பீ.ராம் டெய்லி மிரர் பத்திரிகையில் எழுதியுள்ளார். கடந்த ஏப்ரல் 23ம் திகதி முகமாலையில் இடம் பெற்ற மோதல்கள் காரணமாக இராணுவ தரப்பில் 43 படையினர் கொல்லப்பட்டு 33 படையினர் காயமடைந்ததாக சீஎன்என் தொலைக் காட்சிக்கு இராணு தரப்பில் தெரிவித்தனர். பிரான்ஸ் ஊடகங்கள் படை இழப்புகள் 100க்கும் அதிகம் என குறிப்பிட்டது. இலங்கை போலீஸ் கணக்கெடுப்பின் பிரகாரம் 150 என தெரிய வந்திருந்தது. மோதல்களில் கொல்லப்படுவோர் தொடர்பா…
-
- 0 replies
- 1.2k views
-