ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
Published By: DIGITAL DESK 5 21 APR, 2023 | 11:59 AM வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1500 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்களும், பயன்தரு ஏனைய மரங்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடும் வெப்பத்திற்கு மத்தியில் வவுனியா வடக்கில் நேற்று (20) மாலை திடீரென கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது. இதன்போது, வவுனியா வடக்கு ஓடைவெளி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் காய்த்து அறுவடைக்கு சில வாரங்களே இருந்த 1500 பப்பாசி மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து அழிவடைந்துள்ளன. அத்துடன், ஒலுமடு கிராம அலுவலர் பிரிவில் உள்ள விவசாயிகள் பலரின் வாழ்வாதாரமாக இருந்த பப்பாசி, வாழை, புகையி…
-
- 0 replies
- 579 views
- 1 follower
-
-
ஏப்ரல் 25 கடையடைப்பு போராட்டத்துக்கு யாழ். வணிகர் கழகமும் ஆதரவு Published By: Nanthini 20 Apr, 2023 | 09:56 AM தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பில் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்துக்கு யாழ்ப்பாண வணிகர் கழகமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. யாழ். வணிகர் கழகத்துக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (19) வணிக கழகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது யாழ்ப்பாண வணிகர் கழகம் அனைத்து கடைகளையும் பூட்டி, போராட்டத்துக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த சந…
-
- 2 replies
- 742 views
-
-
மட்டக்களப்பில் அன்னை பூபதி நிகழ்வில் ஏற்பட்ட கருத்து மோதல்! Vhg ஏப்ரல் 20, 2023 தமிழர்களுக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் நினைவு தினம் மட்டக்களப்பில் ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றுவரும் நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கும் தியாகதீபம் அன்னை பூபதி நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. மட்டக்களப்பு நாவலடியில் உள்ள தியாகதீபம் அன்னை பூபதியின் கல்லறையில் நேற்று(19.04.2023) கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தியாகதீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரால் இம்முறை மட்டக்களப்பில் ஏற்பாடு …
-
- 1 reply
- 684 views
-
-
எதிர்காலத்தில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் சேவையை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தனியார் பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளையும் ஒழுங்குபடுத்தும் புதிய டிஜிட்டல் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அனைத்து பேருந்துகளையும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் வசதி, வீதி அனுமதி வழங்கும் போது முன்பு வழங்கப்பட்ட புத்தகத்திற்கு பதிலாக QR குறியீடு கொண்ட டிஜிட்டல் அட்டை என்பன அறிமுகப்படுத்தப்பட்டது. https://thinakkural.lk/article…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 18 APR, 2023 | 11:26 AM மத்திய வங்கியில் 50 இலட்சம் ரூபா திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுணாவெல கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், நீதிமன்றத்துக்கு இந்த விவகாரம் தொடர்பில் கோட்டை பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மத்திய வங்கியின் உயர்பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே திணைக்களத்தின் பல அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து வருவதாகவும் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk…
-
- 1 reply
- 674 views
- 1 follower
-
-
“Onmax DT” என்ற நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டுள்ள அமெரிக்காவில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் 8 கணக்குகளை 6 மாதங்களுக்கு உடனடியாக இடைநிறுத்துமாறு கொழும்பு நீதிவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்காவின் “Binance.com” என்ற நிதி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை நீதிமன்றத்தினால் அமெரிக்க நிதி நிறுவனமொன்றுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இடைநிறுத்த உத்தரவிடப்பட்ட கணக்குகளில் இலங்கை “Onmax DT” தனியார் நிறுவனத்தின் நான்கு பணிப்பாளர்களின் கணக்குகளும் அடங்குகின்றன. மேலும் அந்த நான்…
-
- 0 replies
- 607 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 20 APR, 2023 | 04:59 PM இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இன்று (20) காலை இடம் பெற்ற இச்சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது, இலங்கையுடனான கடனை மறுசீரமைப்பதில் இந்தியாவின் ஆதரவு உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் குறித்தும் கலந்துரையாடினர். சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியாவின் உறுதிமொழியை உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார். ம…
-
- 1 reply
- 597 views
- 1 follower
-
-
அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று! Published By: NANTHINI 19 MAR, 2023 | 02:10 PM அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (19) அனுஷ்டிக்கப்படுகிறது. இவர் மட்டக்களப்பில், இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக நீரை மட்டுமே அருந்தி, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பெண்மணி ஆவார். இவரது உண்ணாவிரத போராட்டம் 1988 மார்ச் 19ஆம் திகதி தொடங்கி சரியாக ஒரு மாதத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவாறே ஏப்ரல் 19ஆம் திகதி உயிர் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/150895
-
- 15 replies
- 939 views
- 2 followers
-
-
Published By: DIGITAL DESK 5 20 APR, 2023 | 02:32 PM அண்மைக் காலத்தில் அதிகளவான எரிசக்தி தேவை நேற்று (19) பதிவானதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது ட்விட்டரில் இட்டுள்ள பதிவில் , எரிசக்தி உற்பத்திக்கு 49.53 ஜிகாவோட்ஸ் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். இன்று (20) 50 ஜிகாவோட்டை தாண்டும் மின்சாரத் தேவை ஏற்படக்கூடும் என தாம் கணிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டை டீசல் நிலையத்தின் ஜெனரேட்டர்கள் உட்பட அனைத்து அனல் மின் நிலையங்களும் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/a…
-
- 0 replies
- 580 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 20 APR, 2023 | 02:45 PM (எம்.மனோசித்ரா) தேசிய கண் வைத்தியசாலையில் சகல சத்திர சிகிச்சைகளும் உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட சிலருக்கு ஒரு வகை தொற்று இனங்காணப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் பிரசாத் கொலம்பகே வீரகேசரிக்கு தெரிவித்தார். கண் சத்திர சிகிச்சைகள் திடீரென இடை நிறுத்தப்பட்டுள்ளமைக்கான காரணம் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய கண் வைத்தியசாலையில் சத்திர சிகிச…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 19 APR, 2023 | 04:45 PM இந்திய அரசின் உதவியோடு பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்கான பெருந்தொகையான காகிதாதிகள் கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளன. இதனை கல்வி அமைச்சின் மஹரகம களஞ்சியசாலையில் கையளிக்கும் மற்றும் கையேற்பு வைபவம் அண்மையில் இடம்பெற்றது. இதில் இந்திய அரசின் சார்பில் கலந்துகொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/153237
-
- 1 reply
- 366 views
- 1 follower
-
-
கீரிமலை கடற்கரையில் நாவலரின் உருவச்சிலை திறந்து வைப்பு! நேற்று மாலை 5மணிக்கு கீரிமலை கடற்கரையில் நாவலர் பெருமான் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் முயற்சியால், கீரிமலை கடற்கரையில் நாவலர் பெருமான் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. நாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார். அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். …
-
- 12 replies
- 1.5k views
-
-
மிகநீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட வடக்குகிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிற்கு சர்வதேசஉதவிகள் தேவை- வெளிவிவகார அமைச்சர் Published By: Rajeeban 19 Apr, 2023 | 09:42 AM நான் ஆரம்பித்து வைத்ததை ஜனாதிபதி தொடர்கின்றார் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக சர்வதேச நாணயநிதியத்துடனான ஈடுபாடுகள் ஒரு சிறப்பான வெற்றிகரமான முயற்சியாக காணப்படும் எனவும் அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார். நாடு மிகமோசமான நெருக்கடியை எதிர்கொண்டகாலத்தில் நான் நிதியமைச்சராக பணியாற்றினேன் என தெரிவித்துள்ள அலிசப்ரி நானே …
-
- 8 replies
- 490 views
-
-
Published By: VISHNU 19 APR, 2023 | 06:14 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் இவ்வார இறுதிக்குள் தீர்க்கமான பதிலை உரிய அதிகாரிகள் வழங்க வேண்டும். அவ்வாறில்லை எனில் அடுத்த வாரம் கல்வித்துறையை அவசர நிலைமையின் கீழ் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று (19) புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : பரீட்சை விடைத்தா…
-
- 0 replies
- 515 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடைபெற்றபோது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெற போவதாக வந்த புலனாய்வு தகவலின் காரணமாக அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மேலும் இந்த தகவலின் உறுதித்தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நடந்தது என்ன? கண்டி மாவட்டத்தின் அக்குரணை பகுதியிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகத்துடன், போலீஸ் உயர் அதிகாரிகள் நேற்று மாலை விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர். இந்த கலந்துரையாடலின் போதே, போலீஸ் குண்டுத…
-
- 0 replies
- 568 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 19 APR, 2023 | 05:04 PM சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும்வகையில் இலங்கையின் அதிகாரத்துவ அமைப்பு எளிமையானதாகவும் எளிதானதாகவும் இருக்கவேண்டும் என சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் துரிதமாக முதலீட்டாளர்களை கவரவிரும்பினால் அதிகாரத்துவம் என்பது எளிமையானதாகவும் இலகுவானதாகவும் காணப்படவேண்டும் என தெரிவித்துள்ள அவர் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளிநாட்டு நாணயங்களிலேயே மேற்கொள்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை இலங்கை நோக்கி திருப்புவது என்றால் இரண்டு விடயங்கள் குறித்து கவனம் செலுத்…
-
- 0 replies
- 506 views
- 1 follower
-
-
Published By: VISHNU 16 APR, 2023 | 10:51 AM “தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் “ என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய மாபெரும் கையெழுத்துப்போரும் இன்று (16.04.2023) ஞாயிற்றுக்கிழமை நல்லூர் நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறுகின்றது. 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சமயத்தலைவர்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என பலருடைய பாரிய ஒத்துழைப்புடன் இந்த அடையாள உண்ணாநோன்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழர் மரபுரிமைகளை அழியவிடாது பாதுக்காக குறித்த எழுச்சிப்போராட்டத்தில் பேதங்களை கடந்து தமிழராக அனைவரும் ஒன்றுபட்டு த…
-
- 4 replies
- 614 views
- 1 follower
-
-
Published By: VISHNU 19 APR, 2023 | 06:08 PM (நா.தனுஜா) இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்களுக்கு அவசியமான மின்னேற்றப்பட்ட பற்றரி நிலையங்கள் இரண்டை ஸ்தாபித்து, நடாத்திச்செல்வதற்கு அவசியமான நிதியுதவியை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் இலங்கைக்கு வழங்கவுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் கீழான இலங்கை சக்திவலு செயற்திட்டம் மற்றும் ஸ்லிங் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கிடையில் மேற்குறிப்பிட்ட நிதியுதவிக்கான இருதரப்பு ஒப்பந்தம் 18 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்நிதியுதவின் ஊடாகக் கொழும்பில் இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்களுக்கு அவசியமான மினனேற்றப்பட்ட பற்றரி…
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
யாழில் மீண்டும் கொரோனா யாழ்.குடாநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் தனிமைப்படுத்தல் விடுதியில் தங்கவைக்கப்பட்டு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெறச் சென்ற ஒருவருக்கு கொரோனாத் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொரோனாப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. …
-
- 1 reply
- 261 views
- 1 follower
-
-
காலி முகத்திடலில் இனிமேல் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை – அரசாங்கம் கொழும்பு – காலி முகத்திடலை பொது மக்கள் இடையூறு இன்றி நேரத்தை செலவிடும் இடமாக மாத்திரம் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில், காலி முகத்திடலில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த எந்தவொரு இசை நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள் அல்லது பிற ஒன்றுகூடலுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை 220 மில்லியன் செலவில் காலி முகத்திடலை அபிவிருத்தி செய்யும் பணியை இலங்கை துறைமுக அதிகாரசபை முன்னெடுத்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் க…
-
- 4 replies
- 843 views
-
-
கப்பலில் நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் விடுதலை ! கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள பனாமா நாட்டு கப்பலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ஒவ்வொருவரையும் தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். கடந்த மார்ச் 24ஆம் திகதி பனாமா மாநிலத்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பலுக்குள் சட்டவிரோதமாக வெளிநாடு செல்லும் நோக்கில் நான்கு யாழ் இளைஞர்கள் இரகசியமாக பிரவேசித்துள்ளனர். கப்ப…
-
- 0 replies
- 285 views
-
-
25 தேர்தல் நடத்தப்படாது – வர்த்தமானி அறிவிப்பு 25ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளனர். திறைசேரி நிதி ஒதுக்கீடு செய்த பின்னரோ அல்லது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்புக்குப் பின்னரோ தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சித் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைத்த நிலையில் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1330422
-
- 0 replies
- 406 views
-
-
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இந்த சட்டமூலத்தை தோற்கடிக்க மக்கள் ஐக்கியப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாங்கள் எங்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்துவிட்டு இந்த இடத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் என எங்களை கருதுவோம் இந்த புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிப்பதற்கு நாங்கள் ஒன்றிணையவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தவேகத்தில் நிலைமை சென்றால் நாங்கள் இன்று சுதந்திரமாக கருத்துதெரிவிப்பது பேசுவது போன்…
-
- 12 replies
- 1k views
- 1 follower
-
-
இலங்கை வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்கிறது பங்களாதேஷ்!! இலங்கை பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை பங்களாதேஷ் அரசாங்கம் மேலும் நீடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 06 மாதங்களுக்கு நீடிக்க பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கடனுக்கான முதல் தவணையை ஓகஸ்ட் மாதத்திலும் மற்றொரு தவணையை செப்டம்பர் மாதத்திலும் செலுத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, இந்த ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி, பங்களாதேஷ் மத்த…
-
- 4 replies
- 394 views
-
-
Published By: DIGITAL DESK 5 17 APR, 2023 | 12:44 PM முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்துக்கு உட்பட்ட கிழவன்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு அடித்து குற்றுயிராய் கிடந்த பாம்பினை கையினால் தூக்கியதில் பாம்பு கடிக்கு இலக்காகிய நபர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (16) இரவு உயிரிழந்துள்ளார். மாங்குளம் கிழவன் குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் (வயது-47) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/153001
-
- 4 replies
- 776 views
- 1 follower
-