ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
வீரகேசரி இணையம் நோர்வே நாட்டின் அமைச்சரும், முன்னாள் அமைதித் தூதருமான எரீக் சோல்ஹீமை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது ஈழப் பிரச்சினை குறித்து சோல்ஹீமுடன் வைகோ கலந்துரையாடலில் ஈடுபட்ட போது, தமிழர்களாகிய நாங்கள், உங்கள் நாட்டின் மீதும், குறிப்பாக உங்கள் மீதும் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டு உள்ளோம். இதேவேளை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதனையும் நாங்கள் மறக்க மாட்டோம். எங்கள் மனம் எல்லாம் நிறைந்து உள்ள நன்றி உணர்ச்சியை நேரில் சொல்ல எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்த வைகோ. பின்னர் இலங்கை நிலவரம் குறித்து அரை மணி நேரம் அவருடன் விவாதித்தார். இந்த சந்திப்பின்போது, சமாதான பேச…
-
- 0 replies
- 684 views
-
-
தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலை நடவடிக்கைகளுக்காகச் சிங்கள அரசு மீது "கண்டனம் செய்தல்" மற்றும் "எச்சரிக்கைகளை விடுத்தல்" என்ற நிலையிலிருந்து அதன் மீது "தண்டனைகள் வழங்கல்" என்ற ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் உலக நாடுகள் படிப்படியாக இறங்க முற்படுகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 683 views
-
-
சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாத கொள்கைகளைக் கொண்டதுதான் தற்போதைய ஜே.வி.பி என்று அக்கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான லயனல் போபகெ சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 572 views
-
-
"இலங்கை தமிழரின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்" என்று இந்திய அரசு கூறுவது வெறும் சொற்கள்தான் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏடு சாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 800 views
-
-
நூற்றுக்கணக்கான அகதிகளை மரணத்திலிருந்து காப்பாற்றியுள்ள ஒரு கத்தோலிக்க திருத்தலத்தைத் தாக்குவது எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதது என அனைத்திந்திய கத்தோலிக்க அவை தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இலங்கையில் இனப்படுகொலைகளின்............. தொடர்ந்து வாசிக்க.............................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7568.html
-
- 0 replies
- 681 views
-
-
சிறிலங்கா அரசாங்கத் தரப்புத் தகவல்களின்படி வடபோர் அரங்கில் நாளொன்றுக்கு 3 சிறிலங்காப் படையினர் கொல்லப்படுவதாகவும் 25 பேர் படுகாயமடைவதாகவும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 648 views
-
-
ஸ்ரீலங்கா ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையில் அங்கம் வகிக்கும் ஒருவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தையும் அரச படைகளின் செயல்பாடுகளயைம் கடுமையாக சாடியுள்ளார்............................................ தொடர்ந்து வாசிக்க................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_898.html
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதற்கு நோர்வே ஒருபோதும் ஆதரவளிக்காது என விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர் தெரிவித்துள்ளார். நோர்வேக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவாத்தனவிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதை நோர்வே ஒருபோதும் ஆதரிக்காது என்று ஜோன் ஹன்சன் பௌவர் தன்னிடம் கூறியதாக ஜயலத் ஜெயவர்தன கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நோர்வே இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நெருக்கடி நிலையில் அனுசரணையாளர்களாக செயல்பட முடியாது என்று ஹன்சன் பௌவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மோதல்கள் இடம்பெற்று வர…
-
- 8 replies
- 2.2k views
-
-
அமைச்சர்களையும் எம்.பி.க்களையும் பாதுகாக்க முடியாத அரசு மக்களை எவ்வாறு பாதுகாக்கும்? ஐ.தே.க. பொதுச்செயலாளர் அத்தநாயக்க கேள்வி........................... தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9860.html
-
- 0 replies
- 855 views
-
-
ஜே.வி.பி. கட்சியின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்சவின் கட்சி விரோத நடவடிக்கைகள் என்ன? என்று அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க விளக்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 958 views
-
-
வன்னிக் களமுனை மாறுமா? இறுகிப் போயுள்ள வன்னிக் களமுனையில் சடுதியான மாற்றங்கள் ஏற்படப் போவதான அறிகுறிகள் தென்படுகின்றன. அண்மைக் காலமாக விடுதலைப் புலிகளின் தளபதிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் ஆற்றிவரும் உரைகள் அதனைக் கோடி காட்டுகின்றன. தாங்கள் களமுனையில் என்ன செய்யப் போகின்றோம் என்பது பற்றி பொதுவாக விடுதலைப் புலிகள் கதைப்பது குறைவு. ஆனால், அண்மைக் காலங்களாக பொறி பறக்கும் மேடைப் பேச்சுக்கள், செவ்விகள் என அடிக்கடி வெளிவரத் தொடங்கியுள்ளன. அதில் போர் தொடர்பான, அடுத்த கட்ட நகர்வு தொடர்பான பல விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. யுத்தத்தில் சோர்வடைந்துள்ள சிங்களப் படையினரின் உளவுரணை மேலும் குலைத்து விடவோ அன்றி தமிழ் மக்களின் மனங்களில் தோன்றியுள்ள சலிப்பு நிலையைப் போக்கடி…
-
- 5 replies
- 2.3k views
-
-
இலங்கையில் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உயர்கிறது வீரகேசரி இணையம் 4/14/2008 11:45:13 AM இலங்கையில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து செல்கிறது. சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் வரை அத்தியாவசிய பொருட்களுக்கான விலை 23.8 வீதத்தால் உயர்ந்துள்ளது. இத் தகவல்களை அண்மையில் ஊர்ஜீதம் செய்துள்ள இலங்கை மத்திய வங்கி ஆளுனர் நிவார்ட் கப்ரால், எண்ணெய் விலையேற்றத்தால் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் தாம் வட்டி வீதத்தை தொடர்ச்சியாக 13வது தடைவையும் 10.5 விழுக்காடடில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதே வேளை GDP எனப்படும் மொத்த தேசிய உற்பத்தி குறைந்த பட்சம் 7.5 விழுக்காடு பாதீட்டு திட்டத்தை செயல் படுத்த முடியும் எனவும் இவர் தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 979 views
-
-
ஸ்ரீலங்கா விமானப்படை விமானங்கள் வன்னியில் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்கள் எவையும் வெற்றியளிக்கவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் மீதான விமானத் தாக்குதலுக்கு ....................................... தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2465.html
-
- 0 replies
- 1.3k views
-
-
நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு வார காலம் நீடிக்கும் பிரேரனை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் கிழக்கு மாகாணம் எவ்வாறு திட்டமிடப்பட்ட முறையில் சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் புள்ளி விவரங்களுடன் விலாவாரியாக......................................... தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7939.html
-
- 0 replies
- 741 views
-
-
தமிழர் பிரச்சினையை தீர்க்க கருணாநிதி முன்வர வேண்டும் - சத்தியராஜு வீரகேசரி இணையம் 4/14/2008 11:16:22 AM - "பச்சைத் தமிழன்' எனும் பட்டத்தைப் பெறுவதற்காகப் பலரும் முயற்சி செய்கிறார் கள். ஆனால் நடிகர் சத்தியராஜுக்கு உள்ள தமிழ்ப்பற்று, தமிழினத்தின் மீது அவர் கொண் டுள்ள அக்கறை காரணமாக தமிழகப் பத்திரி கைகளில் அவர் வலியுறுத்தாமலேயே அவ ரைப் "பச்சைத் தமிழன்' என்றுதான் குறிப்பிடுகி றார்கள். எந்தக் கருத்தையும் துணிவாகவும் தயக்கமில்லாமலும் சொல்லக்கூடியவர்களில் சத்தியரா ஜும் முதன்மையானவர். அண்மையில் ஒகே னக்கல் நீர்ப்பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட சர்ச் சையில் தமிழக அரசை ஆதரித்து தமிழ்த்திரை யுலகத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்ட போதும் பரபரப்பாக சில கருத்துக்களை வெளியிட்டார் சத்யரா…
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted on : Mon Apr 14 10:00:00 2008 புத்தாண்டு காலை யாழ். நகரில் பரிதாபம் மினிபஸ் சில்லுக்குள் அகப்பட்டு 9 வயதுச் சிறுவன் உடன் பலி! புத்தாண்டுப் பூசைக்காக ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருந்த சிறுவன் பஸ் மோதியதில் மரணமானார். இச்சம்பவம் நேற்று முற்பகல் 9 மணியளவில் யாழ். கஸ்தூரியார் வீதி ஸ்ரான்லி வீதிச் சந்தியில் (வின்ஸர் சந்தி) இடம்பெற்றது. யாழ். சோனகர் தெரு, காமல் வீதியில் வசிக்கும் ஆனைப்பந்தி மெதடிஸ்த மிஷன் பாடசாலை மாணவனான பேரின்பநாதன் அல்பிரட் (வயது09) என்ற சிறுவனே விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார். மினிபஸ்ஸின் சில்லு,சிறுவனின் தலையில் ஏறியதனாலேயே சிறுவன் மரணமானதாகக் கூறப்பட்டது. அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து மினிபஸ்ஸை அடித்து நொ…
-
- 1 reply
- 920 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சதி அரசியல் அரங்கேற்றம் வீரகேசரி இணையம் 4/14/2008 10:10:38 AM - கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற பெய ரில் ஒரு சதி அரசியலை அரங்கேற்ற அரசாங் கம் முற்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடே சன் தெரிவித்தார். வீரகேசரி வாரவெளியீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் சமகால நிலைவரம் குறித்து பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்தச்செவ்வியின் முழுமையான விபரம் வருமாறு: கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடை பெறவுள்ளது. இந்தத் தேர்தலை நீங்கள் எவ் வாறு பார்க்கிறீர்கள்? தேர்தல் என்ற சனநாயக வடிவத்தைத் தமி ழர் நிலத்தில் அதன் உண்மையான வடிவத்தில் சிறிலங்கா அரசு நடத்துவதில்லை. ஆக்கிரமிக் கப்…
-
- 0 replies
- 566 views
-
-
'ஒரு புள்ளியில் சந்திக்கும் இந்திய - சிறிலங்கா நலன்கள்" -தாரகா- கோயபல்ஸ் வாதம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஒரு பொய்யை ஒன்பது தடவை சொன்னால் பத்தாவது தரம் அது உண்மையாகி விடும். மேலாதிக்க அரசியல் செயற்பாடுகளின் போதெல்லாம் கோயபல்ஸ்; வாதத்திற்கு முக்கிய இடமுண்டு. இலங்கை அரசியல் மீதான இந்திய தலையீட்டிற்காக சொல்லப்பட்டு வரும் வாதங்களும் அத்தகைய ஒன்றுதான். இலங்கை அரசியல் மீதான இந்தியத் தலையீடு என்பது எப்போதுமே இலங்கையில் தனது பிராந்திய நலன்களுக்கு எதிரான சக்திகள் அதிகளவில் தலையீடு செய்து வருகின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில்தான் நிகழ்ந்து வருகிறது. இப்படியொரு குற்றச்சாட்டுத்தான் இந்திய -சிறிலங்கா ஒப்பந்தத்திற்கும் பின்னணியாக…
-
- 1 reply
- 747 views
-
-
தமிழீழத் தனியரசின் வெற்றிக்கு வலுச் சேர்க்கும் வகையில் உலகளாவிய ரீதியில் கருத்துருவாக்க பயணத்திற்கு வலுச்சேர்க்கும் நிகழ்ச்சியாக தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிலவரம் நிகழ்ச்சியின் 150வது நிகழ்ச்சி இது. ஆராயப்படும் கருப்பொருள்: இனத்துவ அடிப்படையில் எதிர்வரும் உலகம் http://www.yarl.com/videoclips/view_video....9b44e954ec0b9bc
-
- 0 replies
- 747 views
-
-
சொகுசு வாழ்க்கை வாழ வேண்டுமாயின் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களது மனைவிமாருக்கு..................... தொடர்ந்து வாசிக்க....................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7246.html
-
- 0 replies
- 1.1k views
-
-
13. ஏப்ரல் 2008 22:19 கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இதன்போது படையினன் ஒருவனின் சடலம் மீட்க்கப்பட்டதுடன் ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரி562வகை துப்பாக்கி-02,குண்டுகள் -02,பி.கே.ரவைகள் லிங்குடன்-200,ஜக்கேற் ஒன்று ஆகியன தமிழீழ விடுதலைப்புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் பல படையினர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருக்கலாம் என களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி : முரசம்
-
- 0 replies
- 952 views
-
-
சுற்றாடல் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு இலங்கை மதிப்பில் நூற்றி என்பத்து ஒன்பது இலட்சம் ரூபாவில் அதி ஆடம்பர 'லான் ரோவர் டிஸ்கவரி' வாகனம் ஒன்ரை லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. வாகனம் கொண்டுவர சம்பத் வங்கியின் கொழும்புக் கிளையூடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாகனம் கடந்த பெப்ரவரி 2008 19ம் திகதி ராகமையிலுள்ள ' Sann Freighters' நிறுவனத்தினரிடம் இலங்கை சுங்கப்பிரிவினர் கையளித்துள்ளனர். இதற்கு முன்னா ஹெல உறுமைய தலைவனான எல்லாவல மேத்தனாந்த தேரோவுக்கு அமைச்சர்களுக்கு அளிக்கப்படும் சுங்கத்தீர்வையற்ற வாகனக் கொள்வனவின் கீழ் அதி உயர் சொகுசு பென்ஸ் மோட்டார் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து அதை வேரோருவருக்கு விற்றதாக குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருந்ததும…
-
- 4 replies
- 979 views
-
-
அதி உயர் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள அரசியல்வாதிளுக்கு இந்தியாவின் கூர்க்கா படையினரை பாதுகாப்பிற்காக அமர்த்தும் யோசனை பற்றி அரசு தனது கவனத்தை செலுத்தியுள்ளது. இது சம்பந்தமாக யோசனையை பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதுடன் வரும் காலங்களில் இத்திட்டத்தைப் பற்றி அரச மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளது. ஆசியாவின் சில நாடுகளில் கூர்க்காப் படையினர் உயர்மட்ட அரசியல்வாதிகளுக்கும் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு அமர்த்தப்பட்டள்ளனர். கூர்க்கா படையினர் பாதுகாப்ப வழங்குவதில் அதி சிறந்தவர்கள் என்பது பலரது கருத்து. இலங்கை அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயர் உயிர் அச்சுறுத்தல்களைக் கருத்திற் கொண்டு இத்திட்டத்தை பரிசீலனை செய்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
18 ஆம் ஆண்டில் காலடி வைக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கடந்த காலச் சாதனைகளை அப்படையணியின் துணைத் தளபதி அமுதாப் விபரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 654 views
-
-
பிரேமதாசா அரசாங்கம் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேச்சுவார்த்தை எனும் போர்வையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை இலக்கு வைத்து, வாய்ப்புப் பார்த்துக்கொண்டு காலத்தை நகர்த்தியது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 693 views
-