Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை ; இலங்கை இணங்கவில்லை என்கிறது அரசாங்கம் Published By: T. SARANYA 28 FEB, 2023 | 04:49 PM (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்துடனான அண்மைய பேச்சுவார்த்தைகளின் போது மீண்டும் 2.5 சதவீதத்தால் வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இலங்கை அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தினால் வட்டி வீதங்களைக் குறைக்க முடியாது எனத் தெரிவித்த அவர் , வங்கி வட்டி வீதங்களின் அடிப்படையிலேயே பண வீக்க வீதமும் உள்ளடங்கியுள்ளதால் அது நிதி ஸ்திரத்தன்மையை ஏற்பட…

  2. இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரத்திற்கு இராஜதந்திரரீதியில் தீர்வுகளை காணவேண்டும் என இலங்கை;கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதுஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது மீனவர்கள் விவகாரம் அவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையதும் மனிதாபிமான அடிப்படையிலானதுமாகும் என்ற உள்ளுணர்வுடன் இருதரப்பு பொறிமுறைகள் மற்றும் இராஜதந்திர மார்க்கங்கள் ஊடாக தீர்க்கப்படவேண்டியதாகும் இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும், மீனவர்களுக்கு எதிராக எந்த வடிவங்களிலும் பலத்தையோ அல்லது வன்முறைகளையோ பிரயோகிக்காமல் இருப்பதனை உறுதிசெய்யுமாறும் உயர் ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது. இந்திய மீனவர்கள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட …

  3. கிளிநொச்சி மாவட்டத்தில் 2022/2023 இம்முறை மேற்கொள்ளப்பட்ட பெரும்போகச் செய்கையில் வரட்சி, வெள்ளம், நோய் தாக்கம் காரணமாக 2725.74 ஏக்கர் நெற்செய்கை அழிந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ப.தேவரதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும் போக செய்கையில் வெள்ளம் வரட்சி நோய்த்தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கேட்ட போதே 2725 .74 ஏக்கர் நெற்செய்கை அழிந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ப.தேவரதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் இரணை மடுக்குளம் உள்ளிட்ட பாரிய நீர்ப்பாசன குளங்கள் மற்றும் சிறிய நடுத்தர குளங்கள் மானாவாரி செய்கை நிலங்கள் …

  4. (நா.தனுஜா) பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு உதவும் நோக்கில் சர்வதேச நிதியியல் ஒத்துழைப்பானது நாட்டின் 3 முன்னணி வங்கிகளுக்கு மாற்று நாணய வசதியின் கீழ் 400 மில்லியன் டொலர்களைக் கடனாக வழங்கியுள்ளது. நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், இலங்கையில் 30 சதவீதத்துக்கும் அதிகமான வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளைக் கையாளும் கொமர்ஷல் வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகிய 3 முன்னணி வங்கிகளுக்கு இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வுதவியானது தனியார் துறையினருக்கான அவசர நிதியுதவிகளுக்கும், நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்…

  5. ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் – விசாரணையினை ஆரம்பித்தது சி.ஐ.டி! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய குழுவொன்று, சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடொன்றில் இந்த கொலைச் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்கள்…

  6. பிரான்ஸில் கொலையுண்ட யாழ். மல்லாகத்தைச் சேர்ந்தவரின் சடலம் குப்பை மேட்டில் கண்டுபிடிப்பு : வீட்டின் உரிமையாளர் கைது! 28 FEB, 2023 | 01:41 PM யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் சபேசன் என்ற நபர் பிரான்ஸ் நாட்டிலுள்ள வீடொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் வசிக்கும் அவரது மனைவிக்கு அவர் பணிபுரியும் வீட்டின் தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரி வழங்கியுள்ளார். இந்நிலையில், இவரது மனைவி கடந்த வாரம் தனது கணவரை தொலைபேசியில் அழைத்தபோது, சில நாட்களாக அவரைக் காணவில்லை என குறித்த வீட்டினர் அவரது மனைவிக்கு தெரிவ…

  7. 23 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு யுவதி கைது! Published By: T. SARANYA 28 FEB, 2023 | 03:12 PM 23 கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இலங்கை வந்த வெளிநாட்டு யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்த யுவதி கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் (சட்ட விவகாரங்கள்) சுதத்த சில்வா தெரிவித்தார். துபாயிலிருந்து எமிரேட்…

  8. மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம்- கால்நடைகளை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த சிங்கள மக்கள் February 28, 2023 மட்டக்களப்பில் கால்நடைகள் சேனைப் பயிர்ச்செய்கைக்குள் உட்புகுந்ததாகத் தெரிவித்து சிங்கள இனத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் கால்நடைகளை துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன், கூரிய ஆயுதங்களாலும் தாக்கியும் உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதியில் உள்ள மேய்ச்சல் தரைப் பகுதியில் தமிழ் மக்கள் பரப்பரையாக கால்நடைகளை வளர்த்து வரும் நிலையில் இந்த மேய்ச்சல் தரைப் பகுதியை பகுதி பகுதியாகப் பிரித்து மகாவலி அபிவிருத்தி எனக்கூறி பெரும்பான்மை சிங்கள மக்களைக் குடியேற்றி அப்பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கையி…

  9. யாழ்.மாநகர சபை பாதீடு தோல்வி; சபை கலைந்தது? எம்.றொசாந்த், வி.நிதர்ஷன் யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்ககான வரவு - செலவுத்திட்டம், இன்றைய தினம் (28) சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து, 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் வரவு - செலவு திட்டம், மேயர் ஆர்னோல்ட் தலைமையில் இன்று முன்மொழியப்பட்டது. சபையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது , வரவு - செலவு திட்டத்துக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன், ஒருவர் நடுநிலைமை வகித்திருந்தார். அதனால் மாநகர சபையின் செயற்பாடுகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்தது. மேயர் ஆர்னோல்டினால், 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் கடந்த 13ஆம் தி…

  10. விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புதொடர்ந்தும் இயங்குகின்றது - அமெரிக்கா Published By: RAJEEBAN 28 FEB, 2023 | 10:21 AM விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தமிழீழவிடுதலைப்புலிகள்தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி நிதிதிரட்டி தமது செயற்பாடுகளிற்கு பயன்படுத்துகின்றனர் எனவும் அமெரிக்காதெரிவித்துள்ளது. அமெரிக்கா நேற்று வெளியிட்ட பயங்கரவாதம்குறித்த 2021ம் ஆண்டிற்கான அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 இல்இலங்கை அரசாங்கத்தால்இராணுவரீதியில் தோல்வியடைந்த போதிலும் விடுதலைப்புலிகளின்சர்வதேச ஆதரவாளர்கள் வலையமைப்பும் நிதி ஆதரவும…

  11. புற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழில் விசேட வைத்தியசாலை! புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம், பதுளை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளையும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மருத்துவ ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வுகூடம் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு சுகா…

  12. பிரதமரிடம் கையளிக்கப்படுகின்றது முக்கிய அறிக்கை! தேசிய எல்லை நிர்ணய குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை இன்று (செவ்வாய்கிழமை) பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கான தேசிய எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்திலும் பல்வேறு தரப்பினராலும் ஆணைக்குழுவினால் பெறப்பட்ட முன்மொழிவுகள் மதிப்பீடு செய்யப்பட்டு மாவட்ட மட்டத்தில் எல்லை நிர்ணயம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை மார்ச் 31ஆம் திகதிக்குள் கையளிப்பதற்க…

  13. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் சிலர், மஹிந்த ராஜபக்ஷவை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு காரணம் அந்த எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர். மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தபோது, பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் அவருடன் சாப்பிடுவதற்கு எம்.பி.க்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர், ஆனால் தற்போது அவர் பெரும்பாலும் தனியாகவே சாப்பிடுகிறார். அவர் பிரதமராக இருந்த காலத்தில், பாராளுமன்றத்துக்கு வந்தபோது, அவரை வரவேற்க ஏராளமான எம்.பி.க்கள் கூட்டம் நுழைவு வாசல் அருகே திரண்டிருந்த நிலையில், இன்று அவர் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரியுடன்தான் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைகிறார். அவருக்கு மிக நெருக…

  14. யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கனேடியப் பிரஜைகளைத் தாக்கிப் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலாளிகள் கொள்ளையிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஓர் ஆவணத்தைத் தருமாறு கோரியே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. கனடாவிலிருந்து 75 வயதுடைய ஒருவரும் அவரது மனைவியும் அனலைதீவிலுள்ள வீட்டுக்கு வந்து நின்றுள்ளனர். அவர்களது வீட்டில் ஏற்கனவே ஆசிரியர் ஒருவர் தங்கியுள்ளார். வாள்களுடன் வந்தவர்கள் அத்துடன் வீட்டு மின் இணைப்பு திருத்தத்துக்காக ஒருவரும் கடந்த 21ஆம் திகதி இரவு அங்குத் தங்கியிருந்துள்ளார். அன்றைய தினம் இரவு வீட்டுக்க…

    • 24 replies
    • 1.8k views
  15. மன்னார் மாவட்டத்தில் கடந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்பட்ட காலபோக செய்கையின் அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் ஏக்கருக்கு 30 மூடை விளைச்சல் கிடைத்த வயல்களில் இம்முறை 8-15 மூடை விளைச்சலே கிடைத்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மாந்தை மேற்கு பகுதியில் உள்ள இலுப்பை கடவை, விடத்தல் தீவு, ஆட்காட்டிவெளி, கமநல சேவைகள் நிலைய எல்லைக்குள் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விளைச்சல் இன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்முறை மாந்தை பகுதியை சேர்ந்த 3900 விவசாயிகள் 15,213 ஏக்கர் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் மஞ்சள் நோய் தாக்கம், போதியளவு நீர் உரிய நேரத்தில் கிடைக்காமை, கிருமிநாசினி, களைநாசினிகளின் விலை அதிகரிப்…

  16. இந்தியக் கடற்றொழிலாளர்கள் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதிகளை வழங்குவது தொடர்பாக தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களை பாதிக்கும் வகையிலான எவ்வாறான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், குறுகிய சுயலாப நலன்களுக்காக சில தரப்புக்கள் தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர், கடந்த காலங்களில் சீனாவினால் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படுவதாக கிளப்பிவிடப்பட்ட புரளிகள் தோற்றுப் போன நிலையில், இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி அளிக்கப் போகின்றது என்ற கதைகளை கூற ஆரம்ப…

  17. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேசசபை வேட்பாளர் நிமல் அமரசிறி என்பவரே உயிரிழந்துள்ளார் ஜேவிபியின் தலைமை செயலாளர் டில்வின் சில்வா இதனை உறுதி செய்துள்ளதுடன் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பெரும் இழப்பை ஒருவர் செலுத்தவேண்டி நேர்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக அளவுக்கதிகமான பலத்தை பயன்படுத்திய அரசாங்கம் இந்த மரணத்திற்கு பொறுப்பேற்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளா ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் மரணம் | V…

  18. யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் ; காவலாளி மீது வாள் வெட்டு முயற்சி! Published By: DIGITAL DESK 5 27 FEB, 2023 | 12:31 PM யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, பட்டா ரக வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயில் கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முயற்…

  19. யானைக்கால் நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு நாட்டின் எட்டு மாவட்டங்களில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. கடந்த வருடத்தில் மாத்திரம் 400 புதிய நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் என்று யானைக்கால் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. நோயைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு வரும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று யானைக் கால் நோயைக் கட்டுப்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் மருத்துவர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து சுகாதார அதிகாரிகளும் உத்தியோகபூர்வ சீருடை மற்றும் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளுடன் வீடுகளுக்கு வருகை தருவார்கள் என்றும் பணிப் பாளர் குறிப்பிட்டார். கொ…

  20. ”மக்களின் உரிமைகளை தடுத்து வருவது மிக மோசமானது”; சிறீதரன் ரணில் விக்ரமசிங்க தன்னுடைய அடி மனதில் இருக்கின்ற அந்த பயங்கரவாத தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளை தடுத்து வருவது மிக மோசமானது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் இன்று இடம்பெறுகின்ற நிழ்வுகளிற்கு இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் முதன்மை காரணராக இருக்கின்றார். குறிப்பாக 94 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை யாழ். மாவட்டத்திற்கானதை தீவகத்திற்குள் முடக்கி, அத்தேர்தலில் மற்றவர்களை வாக்களிக்…

  21. இராணுவ பிரசன்னம் ; இரவு வேளைகளில் இடம்பெறும் கட்டுமான பணிகள் ; குருந்தூர் மலைக்கு இரவு வேளையில் திடீர் விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் Published By: DIGITAL DESK 5 27 FEB, 2023 | 09:48 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும் 12/06 /2022 அன்றைய ந…

  22. சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை அரசாங்கத்திடம் கொடுக்கத் தயார் – நாமல் தானும் தனது குடும்பத்தாரும் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் பல சொத்துக்கள் மற்றும் பல சர்வதேச வங்கி கணக்குகள் இருப்பதாகவும், உகாண்டாவுக்கு பணம் அனுப்பியதாகவும் தம்மீது முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும்…

  23. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 52வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52வது கூட்டத்தொடர் இன்று(திங்கட்கிழமை) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது. இதற்கமைய, மார்ச் மாதம் 8ஆம் 9ஆம் திகதிகளில் இலங்கை தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இம்முறை ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ளவில்லை எனவும் இலங்கை சார்பில் அதிகாரிகள் குழுவொன்று ஜெனிவா செல்லவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சட்ட மா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் ம…

  24. நீதிமன்ற உத்தரவினையும் மீறி மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய காணி அபகரிப்பு! நீதிமன்ற உத்தரவினையும் மீறிய வகையில் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேய்ச்சல் தரை பகுதியாக காணப்படும் மயிலத்தமடு,மாதவனை ஆகிய பகுதிகளில் நிலைமைகளை கண்டறிவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அப்பகுதிக்கு கள விஜயத்தினை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளா…

  25. இலங்கை உட்பட 6 நாடுகள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத் தொடர் நாளை ஆரம்பம் Published By: VISHNU 26 FEB, 2023 | 10:41 AM (எம்.மனோசித்ரா) இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகி, மார்ச் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இலங்கை, எகிப்து, துர்க்மெனிஸ்தான், ஜாம்பியா, பேரு மற்றும் பனாமா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தொடரே நாளை ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய இலங்கை குறித்த மீளாய்வு கூட்டத் தொடர் மார்ச் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் 3 கட்டங்களாக இடம்பெறவுள்ளது. மார்ச் 8ஆம் தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.