ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதத்திற்கு எதிராக இராணுவத்தினருடன் இணைந்து பிள்iளாயன் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதனால் அவர்களின் ஆயுதங்கள் களையப்படுவது நியாயமற்ற செயல் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதங்களை களைவது அவர்களை புலிகளுக்கு பலிகொடுக்கும் செயல் எனவும், இது மிகவும் அநீதியான செயல் எனவும் தேசப்பற்றுடைய அமைப்பின் பொதுச் செயலாளர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பு நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (மார்ச் 26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். பிள்ளையான் குழுவினருக்கு தமிழீழ விடுதலைப் புலிக…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் சிங்கள மொழித் திரைப்படமான "பிரபாகரன்" திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட சிறிலங்கா துணைத் தூதரகம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக தெரிகிறது. "பிரபாகரன்" என்ற பெயரில் சிறிலங்காவில் சிங்கள மொழியில் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அப்படத்தை தமிழ்நாட்டில் தமிழில் வெளியிடும் முயற்சிகளை சிங்கள இயக்குநர் மேற்கொண்டிருந்தார். இதற்கு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இயக்குநர் சீமான்இ திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வன்னியரசுஇ ஆர்வலன் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். சிங்கள இயக்குநர் கடும் காயங்களு…
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்னொரு பேச்சை தீர்மானிக்கப் போவது வடபோர் முனையா? வீரகேசரி இணையம் 3/27/2008 3:19:27 PM - இலங்கையின் வட பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினரிற்கும் இடையில் இப்போது கடும் சண்டை இடம்பெற்று வருகிறது. இரு தசாப்தகால யுத்தம் இப்போது வடபோர் முனையில் மையம் கொண்டுள்ளது.இது மீண்டும் கிழக்குக்கு நகருமா? வட போர்முனை இரு தரப்புக்கும் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. கடந்த 2007 ஆரம்பத்தில் வடப்பகுதியில் வன்னியை மீட்கும் நோக்கோடு அரசப்படைகளால் ஆரம்பிக்கப்பட்ட படைநடவடிக்கைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறன. வன்னியை மீட்கும் குறிக்கொளோடு மேற்கொள்ளப்பட்டு வரும் படை மேற்கொள்ளல்கள் , வட பகுதியின் பல முனைகள் ஊடாக இடம்பெற்றுவருகின்றன. யாழ்பாணத்தில் கிளாலி,முகம…
-
- 2 replies
- 1.9k views
-
-
ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் சிங்களத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 829 views
-
-
தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆயுத உதவி வழங்குவதனை இந்தியா உடனே நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 769 views
-
-
பிரேமதாச அரசு காலத்தில் முதற் தடவையாக சிறீலங்கா விமானப்படை சுப்பர் சொனிக் விமானங்களை தமிழர் தாயகம் மீது குண்டு வீச பாவிக்க ஆரம்பித்தது. அப்போது அவர்கள் சீனத் தயாரிப்பு F-7 விமானங்களைப் பாவித்தனர். அதன் பின்னர் சந்திரிக்கா அம்மையார் இஸ்ரேலிய தயாரிப்பு கிபீர் விமானங்களைப் பாவித்தார். அதன் பின்னர் ரணில் மகிந்த கம்பனி மிக் 21 மற்றும் மிக் 27, 29 விமானங்களைப் பாவிக்க ஆரம்பித்தன. தற்போது தரை இலக்குகளை தாக்க மீண்டும் சீனத் தயாரிப்பு F-7 களமிறக்கபட்டு வன்னியில் இன்று அதன் மூலம் தாக்குதலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சீன F-7 தரைத் தாக்குதல் விமானம். வன்னி சர்வதேச நாடுகளின் பேரழிவு ஆயுதங்களின் பரீட்சைக் களமாக மாறி வருவது வருத்தமளிக்கின்ற விடயமாக உள்ளது..! அண்மையில் …
-
- 24 replies
- 4.3k views
-
-
கனடா செல்லும் அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 915 views
-
-
கடந்த இருதினங்களில் மணலாறில் 15 படையினர் பலி – விடுதலைப்புலிகள் வியாழக்கிழமை விடுதலைப்புலிகளின் கட்டளை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி மணலாற்றுப்பகுதியில் கடந்த இருநாட்களில் இருஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை மதியம் 1.15 மணியளவில் சிலோன் தியேட்டர் பகுதியில் இருமணிநேரம் முறியடிப்பு தாக்குதல் நிகழ்ந்ததாகவும் இதில் 5 படையினர் கொல்லப்பட்டதாகவும் ஒருபடையினரது உடலம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது. இதேபோன்று கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும தெரியவருகிறது. இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் ஒரு ரி-56 ரக துப்பாக்கி, 18 மகசீன், 4000 ரவைகள், ந…
-
- 3 replies
- 1.5k views
-
-
மன்னாரில் விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி நான்கு படையினர் பலி எண்மர் படுகாயம் [ த.இன்பன் ] - [ மார்ச் 27, 2008 - 08:07 AM - GMT ] மன்னார் களமுனையில் நேற்று புதன்கிழமை விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி நான்கு படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் எண்மர் படுகாயமடைந்துள்ளனர். சுலனமருதமடு அடம்பன் மற்றும் கோயில்மோட்டை ஆகிய பகுதிகளில் விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட மிதிவெடிகள் மற்றும் பொறிவெடிகளை அகற்றிக் கொண்டிருந்த வேளை ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு படையினர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் எண்மர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் அனுராதபுர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பினால் மேலும் தெரிவிக்கப்பட்ட…
-
- 1 reply
- 952 views
-
-
தமிழ்ப் பெண்ணை மணம் முடித்த முஸ்லிம் வாலிபர் கொழும்பில் கைது கொழும்பு குணசிங்கபுரத்தைச் சேர்ந்தவரும் தமிழ்ப் பெண்ணை திருமணம் முடித்தவருமான முஸ்லிம் வாலிபர் ஒருவரை வெள்ளை வானில் வந்த சிவில் உடைக்காரர்களும் அதிரடிப்படை உடை அணிந்த ஒருவரும் கைவிலங்கிட்டு அழைத்துச்சென்றனர் எனவும் அவரைப்பற்றி தகவல் அறியமுடியாமல் இருக்கிறது எனவும், அவரது மனைவி வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்பப் பயிற்சி பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனிடமும், மனித உரிமைகள் ஆணைக்குழு, கெசல்வத்தை பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடுகள் செய்துள்ளார். இவ்வாறு பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: கொழும்பு குணச…
-
- 2 replies
- 1.6k views
-
-
உள்நாட்டு விடயங்களில் தலையிடப் போவதில்லை- ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி தெரிவிப்பு27.03.2008 / நிருபர் வானதி "இலங்கையில் தற்போது பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகள் எழுந்துள்ளன இருப்பினும் அத்தகைய எந்தப் பிரச்சினைகளும் இல்லை என இலங்கை அரசு கூறுகின்றது. உள்நாட்டு விடயங்களில் நாம் தலையிட விரும்பவில்லை.'' இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஜே. வில்சன் தெரிவித்திருக்கிறார். ""இலங்கைக்கு நாம் உதவி வழங்குவதில் நாம் நண்பராகச் செயற்பட்டுவருகின்றோம்.ஆனால் இலங்கையின் உள்ளார்ந்த பிரச்சினைகளில் நாம் தலையிட விரும்பவில்லை'' என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை சமாதானப் பேரவையின் தேசிய பிரச்சினை மற்றும் 13ஆவது திருத்தம் தொடர்பிலான கருத்தரங்கு, "இருதச…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையில் மனித உரிமை நிலைவரம் மிகமோசம் -பிரிட்டன் 27.03.2008 / நிருபர் வானதி உலக நாடுகளில் 2007ஆம் ஆண்டில் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது வருடாந்த அறிக்கையை நேற்றுமுன்தினம் வெளியிட்டிருக்கும் பிரிட்டன், அதில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்ந்தும் மிக மோசமாக உள்ளதாகத் தெரிவித்திருக்கின்றது. எனினும், உலகில் மனித உரிமைகள் நிலைவரம் கவலைக்குரிய கட்டத்தை அடைந்திருப்பதாகத் தெரிவித்து பிரிட்டன் பட்டியலிட்ட இருபத்தியொரு நாடுகளில் இலங்கையின் பெயர் இல்லை. பிரிட்டிஷ் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சு விடுத்துள்ள மிக நீண்ட அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பாகக் கூறப்பட்டுள்ள சில அம்சங்கள் வருமாறு: இலங்கையின் மனித உரிமை நிலைவரம் மிக மோசமாகவுள்ளது. …
-
- 2 replies
- 1.2k views
-
-
நாட்டு நடப்பு March 27th 2008 நாட்டு நடப்பு March 27th 2008 தரவிறக்கம்
-
- 0 replies
- 1.3k views
-
-
பிள்ளையான்குழுவினரின் ஆயுதங்களை களையப்படுவதை தாம் எதிர்ப்பதாக இலங்கை அரசாங்க அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இந்த கருத்தினை அமைச்சர் தெரிவித்துள்ளார். கருணாகுழுவினரிடம் இருந்தோ பிள்ளையான்குழுவினருடன் இருந்தோ ஆயுதங்கள் களையப்பட முன்னர் பிரபாகரனிடம் உள்ள ஆயுதங்கள் களையப்படவேண்டும் எனவும் பெர்னாண்டோபிள்ளை தெரிவித்துள்ளார். பிள்ளையான் குழுவினரை தேர்தலுக்கு அழைத்து அதில் வெற்றி பெற செய்து அவர்கள் ஜனநாயகத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கும் போது அவர்களது ஆயுதங்கள் களையப்படுமானால் பிரபாகரனால் அவர்கள் கொல்லப்படலாம். இதனைத்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்பார்த்துக்கொண…
-
- 0 replies
- 952 views
-
-
13வது அரசிலமைப்புத் திருத்தத்தை இரத்து செய்ய வேண்டுமென ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத்தலைவனும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளருமான விம்ல் வீரவன்சா தெரிவித்தார். அத்துடன், சேர்பியாவிலிருந்து கொசோவோ பிரிந்து செல்வததற்கு முன்னர் அதை அண்மித்த காலங்களில் கொசோவோவில் இருந்த நிலைமையே இன்று இலங்கையிலும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் : 13வது அரசியலமைப்பு திருத்தம் என்பது இந்தியாவினால் அன்றைய ஜே.ஆர். அரசின் மீது பலவந்தமாக திணிக்கபட்டதொன்றாகும். அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், அதையே இன்று முற்று முழுதாக அமுல்படுத்தப் போவதாக அரசாங்கம் கூறுகிறது. எனவே, 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல…
-
- 2 replies
- 1.2k views
-
-
கிழக்கைப் போன்று வடக்கிலும் செய்வோம் என்ற தவறான நினைப்புததான் அரசுக்குப் பாரிய அரசியல் இராஜதந்திர, பொருளாதார, படைத் துறை அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன், படையினர் நாளை மடுவைப் பிடித்தால் மறுநாள் நாம் மதவாச்சில் நிற்போம் இது ஒரு சுழற்சியாக நடைபெறும் விடயமெனவும் கூறியுள்ளார். வன்னிப் போர் அரங்கின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் இளந்திரையன் மேலும் கூறியதாவது : '15.03.2007 வடபகுதியை நோக்கி வன்னிப் பெருநிலப்பரப்பிலே இராணுவத்தினர் ஆரம்பித்த படை நடவடிக்கை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மன்னாரின் பல பகுதிக…
-
- 12 replies
- 2.1k views
-
-
திபெத் பிரச்சினைக்கு தீர்வு காண தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா மறுத்தால், சீனாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளாமல்.................. தொடர்ந்து வாசிக்க......... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_4744.html வீடியோவை பார்க்க......... http://isooryavidz.blogspot.com/2008/03/ch...over-tibet.html
-
- 0 replies
- 966 views
-
-
ஜெருசலேம்:அல்ஹைதா , பி.கே.கே போன்ற சர்வதேச பயங்கரவாதக் குழுக்களுடன் விடுதலைப் புலிகள் தொடர்புகளைக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா இந்தியாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கி தமிழ் இராச்சியத்தை உருவாக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியதாகவும் தமிழர்களுக்கு தனிநாடு உருவாவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கு நான்குநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா ஜெருசலேமில் இலங்கை நிலைவரம் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்தது. பயங்கரவாதம் தொடர்பான சில நிபுணர்கள் பி.கே.கே, தலிபான், பிலிப்பைன்ஸிலுள்ள இஸ்லா…
-
- 0 replies
- 722 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் வேறு தரப்பிடமிருந்து ஆயுதத் தளபாடங்கள் பெறுவது தெற்காசியாவில் எமது பலத்திற்கு அச்சுறுத்தலாகலாம் என்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.2k views
-
-
அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் நேற்று முன்நாள் மாலை கண்ணிவெடித் தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று அதிடிப்படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 666 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பான யுஎன்எச்சிஆரில் இருந்து வெளியேற்றப்படுவதனை தடுப்பதற்கு அனைத்துலகத்தின் ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் தேடிவருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 565 views
-
-
பேச்சுக்கு ஆக்கபூர்வமான யோசனைகளை அரசாங்கம் உடன் முன்வைக்க வேண்டும் அரசின் நடவடிக்கைகளில் சந்தேகம் - சம்பந்தன் வீரகேசரி இணையம்3/27/2008 12:06:06 AM - இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையான ஆக்கபூர்வமானதும் முன்னோக்கிச்செல்லக் கூடியதுமான தீர்வு யோசனைகளை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13ஆவது அரசியல்யாப்பு திருத்தச்சட்டத்தை ஒருபோதுமே ஏற்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய சமாதானப்பேரவையினால் கொழும்பு ஜயவர்த்தன கேந்திர நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளிய…
-
- 0 replies
- 601 views
-
-
இந்தியாவின் இரட்டைவேடத்துக்குள் மறைந்திருக்கும் மர்மம் என்ன? அரசாங்கம் ஆராயவேண்டும் - என்கிறார் விமல் வீரகேசரி இணையம்3/27/2008 12:02:17 AM - புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிப்பதற்கு உதவி புரியும் இந்தியா; மறுபுறம் அரசியல் தீர்வை காணுமாறு வலியுறுத்துகிறது. இந்தியாவின் இத்தகைய இரட்டை வேடத்துக்குள் மறைந்திருக்கும் மர்மம் என்ன என்பதை அரசாங்கம் அராய வேண்டும். பிரபாகரனை அழிக்க ஒத்துழைப்பு வழங்கும் இந்தியா அதற்கு கப்பமாக இலங்கையை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வரும் சதித்திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகிறது என்று ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். இந்தியாவினால் இலங்கை மீது திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தத்…
-
- 0 replies
- 664 views
-
-
இன்று மட்டக்களப்பில் வெடித்த கிளைமோர், பிள்ளையான் குழுவினுடையதா? Wednesday, 26 March 2008 இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற கிளைமோர் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக அரசு கூறுவது உண்மையானால், அரசு மீட்டதாக கூறும் பகுதிகள் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டனவா என்ற கேள்வி எழுகிறது. கிளைமோர் தாக்குதல் இடம் பெற்ற பகுதி கடந்த உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்ற கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலேயாகும்? கிளைமோர் தாக்குதலுக்கு ஆளானோர் கிழக்கு பகுதியிலிருந்து வெளியேற்றுமாறு பிள்ளையான் அணியினர் அரசிடம் கோரிய எஸ்டீஎப் விசேட அதிரடிப் படையினர்? மேலதிக விபரங்களுக்கு http://www.ajeevan.ch/content/view/1365/1/
-
- 15 replies
- 5.4k views
-
-
தமிழ் சிவிலியன்கள் 26 பேர் நேற்று படையினரிடம் தஞ்சம் வீரகேசரி இணையம்3ஃ26ஃ2008 1:50:17 Pஆ - கிளிநொச்சி மற்றும் விடத்தல்தீவு பிரதேசங்களில் இருந்து தப்பி வந்த 26 தமிழ் சிவிலியன்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று தஞ்சமடைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து இரு பெண்கள் உட்பட 11 பேர் படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த வேளை கடற்படையினர் அவர்களைக் காப்பாற்றி புங்குடுதீவு பிரதேசத்துக்கு நேற்று அழைத்து வந்துள்ளனர். புலிகளுக்காக பதுங்கு குழிகள் அமைக்கும் நடவடிக்கைகளில் துப்பாக்கி முனையில் தாம் இரவு பகலாக ஈடுபடுத்தப்படுவதாகவும் இக்கொடுமைகளை சகிக்க முடியாமலேயே இராணுவத்தினரிடம் தஞ்சமடையும் நோக்கில் தாம் அங்கிருந்து தப்பி வந்ததாகவ…
-
- 30 replies
- 4.9k views
-