ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் தாக்கல் செய்யப்படவுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 713 views
-
-
முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் பெற்றுத்தருமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்று வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 598 views
-
-
இலங்கை இராணுவத்துக்கு இந்தியா நேரடியாக உதவி அளிக்கவில்லை - இந்திய கடற்படைத் தளபதி மேத்தா 1/17/2008 10:24:40 PM வீரகேசரி இணையம் - இலங்கை இராணுவத்துக்கு இந்தியா நேரடியாக உதவி அளிக்கவில்லை. கடலில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போது இரு நாட்டு கடற்படையினரும் பரஸ்பரம் தகவல்களை பரிமாறிக் கொள்வது வழமை என்று இந்திய கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவி அளித்து வருகின்றது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்துக்கு இந்தியா நேரடியாக உதவி அளிக்கவில்லை. கடலில் ரோந்து பணியில் ஈடுபடு…
-
- 6 replies
- 1.3k views
-
-
வெள்ளி 18-01-2008 01:59 மணி தமிழீழம் [மயூரன்] தனமாவில பின்தங்கிய கிராமத்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி : 3 வர் காயம் தனமாவில கலவாகல பின்தங்கிய கிராமத்தில் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் (17 ஜனவரி) துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது நால்வர் காயமடைந்து தனமாவெல வைத்தியசாலையில்அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. வைத்தியசாலை வட்டார தகவலின்படி காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நால்வரில் ஒருவர் காயம் காரணமாக இறந்துள்ளதாகவும் மற்றும் மூவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : 2008-01-18 சுயாதீனக் கண்காணிப்பை வலியுறுத்தும் சம்பவங்கள் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோக பூர்வமாக செயலிழந்துபோகும் தறுவாயில் தென்னிலங்கையில், மொனறாகலை மாவட்டத்தில், புத்தளப் பகுதியில் இடம்பெற்ற மிகவும் மோசமான தாக்குதல் சம்பவங்கள் நெஞ்சை அதிரவைப்பன. இருவேறு தாக்குதல்களில் முப்பதுக்கும் அதிகமான அப்பாவிகளின் உயிர்கள் குரூரமாகக் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. அறுபத்தியைந்துக்கும் அதிகமானோர் படுகாயமுற்று அந்தரிக்கின்றனர். என்ன நோக்கத்துக்காக, யார் செய்திருந்தாலும் அப்பாவிப் பொதுமக்கள் மீதான இத்தகைய கோரத் தாக்குதல்களும், குரூர நடவடிக்கைகளும் நியாயப்படுத்த முடியாதவை. வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. ச…
-
- 0 replies
- 729 views
-
-
அமெரிக்கக் கடற்படை உயரதிகாரி இங்கு கடற்படைத் தளபதியுடன் பேச்சு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் பகுதிக்கான தளபதி அட்மிரல் றொபேர்ட் எவ். வில்லார்ட் இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரனாகொடவை நேற்று வியாழக்கிழமை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் கடல் பாதுகாப்பு ஆகியன குறித்து ஆராயப்பட்டது எனக் கூறப்பட்டது. இலங்கைக் கடற்படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கத் தளபதி இச்சந்திப்பின்போது பாராட்டினார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இலங்கை விஜயத்தின்போது அட்மிரல் வில்லார்ட் அமெரிக்காவினால் சமீபத்தில் …
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 16.01.08 அன்று ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....eea208541a643e7
-
- 0 replies
- 1.3k views
-
-
யூரோ நாணயத் தாள்களுடன் கட்டுநாயக்காவில் ஒருவர் கைது வெளிநாட்டிலிருந்து பெருந்தொகையான யூரோ நாணயத்தாள்களை இலங்கைக்குக் கொண்டுவந்த ஒருவர் நேற்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பிரான்ஸ் நாட்டிலிருந்து விமானம் மூலம் வந்த விமான சேவை நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரே கட்டுநாயக்கா சுங்கத்திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நபரில் சந்தேகம் கொண்ட சுங்கத்திணைக்கள அதிகாரிகள் அவரின் உடைமைகளைச் சோதனையிட்டபோது பெருந்தொகையான யூரோ நாணயத்தாள்களை கைப்பற்றினர். இதன் இலங்கைப் பெறுமதி 66 லட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது என சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தி வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
முழுமையான யுத்தம் என்பது புலிகளின் ஏமாற்று வித்தை [17 - January - 2008] [Font Size - A - A - A] விடுதலைப் புலிகள் அமைப்பு கிழக்கிலும் மன்னாரிலும் தமது கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பகுதி பிரதேசங்களை மட்டுமல்ல, அவர்களின் முன்னணித் தலைவர்களாகிய அரசியற்பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் , புலனாய்வுப் பிரிவின் இரண்டாவது தலைவர் சாள்ஸ் போன்ற முக்கிய தலைவர்களைக் கூட இழந்துவிட்டது. இவ்வாறு பெரும் பிரதேசப் பரப்பையும் முன்னணித் தலைவர்களையும் பாதுகாக்க முடியாத புலிகள் இயக்கத் தலைமைத்துவம் அரச படையினருடனான ஒரு முழுமையான யுத்தத்துக்குச் செல்ல முடியாத அளவுக்கு பலமற்ற நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில் அரச படையினருக்கு எதிராக புலிகள் ஒரு யுத்தத்தை ஆரம்பிக்க முடியாது எனவும் அதற்கான ஆட்…
-
- 7 replies
- 3.5k views
-
-
வெள்ளி 18-01-2008 01:18 மணி தமிழீழம் [மதுசன்] யாழ்.இருபாலையில் படையினர் சுற்றிவளைப்புத் தேடுதல். யாழ்.இருபாலைப் பகுதி நேற்று சிறீலங்காப்படையிரால் சுற்றி வளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தேடுதல் வேட்டையின் போது வீடு வீடாகச்சென்று படையினர் சோதனை நடத்தியதாகவும் . இந் நடவடிக்கையின் போது வீடொன்றை படையினர் சோதனையிட முற்பட்ட போது அவ்வீட்டில் உள்இருந்த இளைஞர் ஒருவர் படையினரை நோக்கி துப்பாக்கியால் தாக்குதல் நடத்தி விட்டு சயனைட் அருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிறீலங்காப் பாதுகாப்புத் துறை செய்தி வெளியிட்டுள்ளது. http://www.pathivu.com
-
- 0 replies
- 680 views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து, 4ம் கட்ட ஈழ யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளது சிறிலங்கா அரசு. “சமாதானம்” என்று, வார்த்தை அளவில்தானும் எஞ்சியிருந்த விடயமும் ஒருவாறு முடிவுக்கு வந்து, யுத்தம் என்பது மட்டுமே உறுதியாகிவிட்டுள்ளது. அதாவது, எதிர்வரும் 16ம் திகதி முதல் பிரகடனப்படுத்தப்பட்ட 4வது ஈழ யுத்தம் ஆரம்பமாக உள்ளது. 4ம் கட்ட ஈழ யுத்தம் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் உண்மையிலேயே மிகச் சிறந்த திட்டம்தான். கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தொழித்துவிட்டு, யாழ்பாணத்தை தனது கைகளில் வைத்துக்கொண்டு, வன்னி மீது படையெடுப்பது என்பதுதான் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம். விபரம் அறிய.... http://murasam.ch/content/view/3778/232/
-
- 37 replies
- 7.2k views
-
-
மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து சிறீலங்காப் படையினர் பின்வாங்கல் மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து சிறீலங்காப் படையினர் பின்வாங்கியுள்ளது. (மேலதிக விபரம் விரைவில்) நன்றி : பதிவு.
-
- 9 replies
- 2.4k views
-
-
இந்து ஆலயத்துக்குள் புகுந்து அடாவடித்தனம் கண்டித்து மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் இயல்பு நிலை முற்றாக பாதிப்பு 1/17/2008 9:47:12 PM வீரகேசரி இணையம் - ஆரையம்பதி கடற்கரை வீதியிலுள்ள பழம் பெருமை வாய்ந்த ஸ்ரீ நரசிம்மர் ஆலயத்துக்குள் புகுந்த குழுவினர் மேற்கொண்ட அடாவடித்தனத்தை கண்டித்தும், ஆரையம்பதி திருநீற்றுக் கேணியில் தமிழர் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மட்டக்களப்பில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் மக்கள் ஒன்றினைந்து விடுத்த அழைப்பினை ஏற்று நடைபெற்ற ஹர்த்தாலினால் மட்டக்களப்பு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்திருந்தது. ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு நகரில் சுற்றுப்புறங்களிலும் கடைகள் அடைத்த…
-
- 0 replies
- 900 views
-
-
உயர் தொழில்நுட்பத்தையுடைய தொலைத் தொடர்பு கருவிகளை கொண்டுசென்ற சந்தேகநபர் கொம்பனி வீதியில் கைது 1/17/2008 10:29:25 PM வீரகேசரி இணையம் - அதி உயர் தொழில்நுட்பத்தையுடை தொலைத் தொடர்பு கருவிகளை வானொன்றில் கொண்டுச் சென்றுக்கொண்டிருந்த நபரை கொம்பனி வீதி பொலிஸார் நேற்று கைது செய்தனர். கொம்பனி வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான வான் ஒன்றை சோதனைக்குட்படுத்திய பொலிஸார் வானிலிருந்த தொலைத் தொடர்பு சாதனங்களை கைப்பற்றியதோடு, சாரதியையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்தனர்.
-
- 0 replies
- 1.1k views
-
-
கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 17 ஜனவரி 2008 (15:09) கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 250 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருப்பது குறித்து விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் தலைவர் என்.நடேசன் கூறிய கருத்துக்கு பதிலளித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்குறிப்பிட்ட தகவலைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அண்மைக்காலமாக அப்பாவி மக்கள் மீது விடுதலைப்புலிகள் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி வருவதாகவும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக, போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருப்பது தனக்க…
-
- 4 replies
- 2.5k views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள பகுதி மக்களுக்கு உடனடியாக 500 துப்பாக்கிகளை வழங்குமாறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று புதன்கிழமை இரவு உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் சிறிலங்கா விமானம் குண்டு தாக்குதல். 7 பேர் காயம் SLAF bombs Ki'linochchi suburb, 7 wounded [TamilNet, Thursday, 17 January 2008, 04:09 GMT] Liberation Tigers anti-aircraft guns fired at Sri Lanka Air Force (SLAF) warplanes that bombed a civilian area with a mechanic workshop near Kanakapuram Maha Viththiyaalayam school at Kanakapuram, a suburb of Ki'linochchi town, Wednesday at 9:30 a.m. Seven civilians were wounded in the SLAF attack. Nine houses were damaged in the bombardment that was launched at 9:30 a.m. and carried out four times. Six wounded civilians, rushed to Ki'linochchi hospital were identified as Sivarasa Suren, 19, from Kanakapu…
-
- 4 replies
- 1.5k views
-
-
வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் இரும்புக் பிடியில் சிக்கித் துயருறும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுத்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க மஹிந்த உறுதி பூண்டுள்ளார். இவ்வாறு தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கேஹெலிய தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் சந்திப்பு நேற்று பிற்பகல் தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதெ அதைத் தெரிவித்தார். மேலும் போர்நிறுத்த உடன்படிக்ககையைத் தொடர்ந்து அமுல்படுத்த புலிகள் விரும்பம் தெரிவித்துள்ள போதிலும் அதிலிருந்து விலகுவதென்று அரசு எடுத்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த 25 வருட கால அனுபத்தைக் கருத்திற் கொண்டே …
-
- 6 replies
- 1.8k views
-
-
மனித உரிமைகளைப் பேண வேண்டும் - லூயிஸ் ஆர்பர் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து ஒருதலைப்பட்சமாக சிறீலங்கா அரசு விலகியுள்ள நிலையில், மனித உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டுமென, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்துலக சட்டத்தை சிறீலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் மதித்து நடக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் வலியுறுத்தியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 3 replies
- 1.1k views
-
-
வியாழன் 17-01-2008 16:10 மணி தமிழீழம் [தாயகன்] பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பியுங்கள் - ஐ.நா, ஐ.ஒ சிறீலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் சமாதானப் பேச்சை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென, ஐக்கிய நாடுகள் சபையும், ஐரோப்பிய ஒன்றியமும் அழைப்பு விடுத்திருக்கின்றன. நேற்றுடன் (புதன்கிழமை) போர் நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்துள்ள நிலையில், மோதல்களும், தாக்குதல்களும் அதிகிரித்துள்ளன. மொனராகலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இந்த இரண்டு அமைப்புகளும் பேச்சுக்கான அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. http://www.pathivu.com
-
- 0 replies
- 1.4k views
-
-
சுவிற்சர்லாந்தில் உள்ள இந்து ஆலயங்கள் ஒன்றிணைந்து தமிழீழ வெள்ள நிவாரணத்துக்கு விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோளுக்கு செவிசாய்த்து உதவியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 817 views
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்ததிதில் இருந்து வில்கவுள்ளதாக அரசாங்கம் எடுத்த தீர்மானத்தில் எதுவித மாற்றம் இல்லை- கெஹெலிய 1/17/2008 10:14:00 AM வீரகேசரி இணையம் - யுத்த நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து அமுல்படுத்த விடுதலை புலிகள் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அதிலிருந்து விலகுவதென்று அரசாங்கம் எடுத்த முடிவில் எவ்வித மாற்றமுமில்லை என தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை பிற்பகல் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது: கடந்த 25 …
-
- 0 replies
- 930 views
-
-
வியாழன் 17-01-2008 06:32 மணி தமிழீழம் [சிறீதரன்] பேராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் தாய் மண்ணின் விடிவிற்காய் இன்னுயிர்களை ஈகம் செய்த போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மணலாறு மண்கிண்டிமலை களமுனையில், நேற்றுமுன்தினம் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் பொழுது, லெப்ரினன்ட் முரளி என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த ரமேஸ் ரகுவரன் என்ற போராளி களப்பலியாகியுள்ளார். மன்னார் பறப்பான்கண்டல் களமுனையில், கடந்த 14ஆம் நாளன்று நிகழ்ந்த மோதல்களில், 2ஆம் லெப்ரினன்ட் கயல்மதி என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த இன்னாசிமுத்து டயானி என்ற போராளி களப்பலியாகியுள்ளார். கடந்த 12ஆம் நாளன்று, பாலக்குழி களமுனையில் இடம…
-
- 1 reply
- 930 views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள காட்டுப்பகுதியில் இன்று காலை சிறிலங்காப் படையினரின் கொமாண்டோ அணிக்கும் ஆயுதம் தாங்கிய சிறிய குழுவிற்கும் இடையில் நடைபெற்ற மோதலில் கொமாண்டோப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-