ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
ஜனாதிபதியின் ஆலோசகர் ரிரோன் பெர்னாண்டோ சற்று நேரத்திற்கு முன் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்த ஜனாதிபத்யின் ஆலோசகர் ரிரோன் பெர்னாண்டோ 12.20 மணியளவில் வைத்தியசாலையில் வட்டாரங்கள் தெரிவித்தன
-
- 2 replies
- 1.6k views
-
-
ஆயுதங்களை பரிசோதிப்பதற்கு - அமெரிக்க நிபுணர்கள் வருகை 2/25/2008 6:34:47 PM வீரகேசரி இணையம் - அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பரிசோதிப்பதற்காக அமெரிக்க நிபுணர்கள் ஏழுபேர் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு புலிகள் இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்படாத அதிநவீன ரக ஆயுதங்களை பயன்படுத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவந்துள்ளதையடுத்தே அந்த ஆயுதங்களை பரிசோதிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து விசேட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க அரசாங்கத்தின் விசேட விசாரணை பணியகத்தை சேர்ந்த…
-
- 8 replies
- 3.2k views
-
-
யாலகாட்டில் விஷேட பயிற்சிபெற்ற 40 பேரைக்கொண்ட புலிகளின் அணி [25 - February - 2008] யாலகாட்டுப்பகுதியில் விஷேட பயிற்சிபெற்ற 40 பேரைக் கொண்ட விடுதலைப்புலிகளின் அணியொன்று சுற்றித்திரிவதாக இராணுவ புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த 40 பேரைக்கொண்ட விஷேட படையணியில் நன்கு பயிற்சி பெற்ற 4 பெண்புலிகளும் உள்ளடங்குவதாகவும் புலனாய்வுத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இராணுவ புலனாய்வுத் தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; `யால, புத்தல காட்டுப் பகுதிகளில் விஷேட பயிற்சி பெற்ற 40 பேரைக் கொண்ட அணியொன்று செயற்பட்டுவருகின்றது. இந்த அணி ராம் மற்றும் ராகுலன் ஆகியோரின் தலைமையின் கீழ் வழிநடத்தப்பட்டு வருகின்றது. இந்த 40 பேரைக் கொண்ட குழ…
-
- 6 replies
- 3.1k views
-
-
இலங்கை பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது-இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் 2/26/2008 11:18:22 AM வீரகேசரி இணையம் - இலங்கையில் வன்முறை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது. இராணுவ ரீதியிலான நடவடிக்கை இதற்கு தீர்வாகாது; பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும் என்று, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார்.மத்திய அரசின் கொள்கை முடிவுகளை விளக்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாகவே நாட்டின் வளர்ச்சி வீதம் என்பது தொடர்ச்சியாக 9 சதவீதமாக இருந்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலராக இருந்த போதிலும்கூட நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள்ளேயே இருக்கிறது. …
-
- 6 replies
- 1.5k views
-
-
எண்ணெய் கசிவால் தீப்பற்றி எரிந்த ரோலர் படகு கொழும்பு துறைமுகப் பகுதியில் சம்பவம் 2/26/2008 9:10:59 AM வீரகேசரி நாளேடு - கொழும்பு துறைமுகத்திலுள்ள டோலர் ரக படகொன்றில் ஏற்பட்ட எண்ணெய் கசிவின் காரணமாக அப்படகின் ஒரு பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. இதனால் கொழும்பு துறைமுகத்தை அண்டிய பிரதேசம் முழுவதும் கரும் புகையினால் சூழ்ந்திருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது. நேற்று முன்தினம் இப்படகில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எண்ணெய் கசிவடையத் தொடங்கியது. இதனால், அது எரியத் தொடங்கியது. எனினும், அது துறைமுக அதிகாரிகளால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்றும் இப்படகில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதுடன் பகல் 12 மணியளவில் அவ்வெண்ணெய் கசிவு அதிகரித்து ப…
-
- 2 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா வான்படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்ட தூரப் பீரங்கிகளை அழிக்க முடியவில்லை என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
செவ்வாய் 26-02-2008 00:05 மணி தமிழீழம் [தாயகன்] அம்பாறை கஞ்சிகுடிச்சாறில் மோதல் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. அம்பாறையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கஞ்சிகுடிச்சாறு வனப் பிரதேசம் நோக்கி ஆயிரக்கணக்கான படையினர் நேற்று முன்தினம் காலை முதல் முன்னகர்வு முயற்சி ஒன்றை மேற்கொண்டிருந்தனர். படையினரின் தாக்கியழிப்பு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நேற்று மாலை கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இதில் சிறீலங்காப் படைகளுக்கு பாரிய ஆளணி, ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ள போதிலும், அது தொடர்பான விபரங்களை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிடவில்லை. கஞ்சிகுடிச்ச…
-
- 4 replies
- 1.7k views
-
-
ஜ.நா தூதுவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார் 2/25/2008 3:04:53 PM வீரகேசரி இணையம் - இலங்கை வந்துள்ள ஜக்கிய நாடுகள் சபையில் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் அன்ஜெலா இன்று காலை இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த ஜக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களிற்கான பிரதி செயலாளர் அன்றைய தினம் மட்டக்களப்பில் இருந்து விட்டு மறுநாட்காலை கொழும்பு திரும்பினார். கிழக்கே அரசாங்கம் முன்னெடுக்கும் பாரிய வேலைத் திட்டங்களை அவர் பாராட்டினார் . அதே வேளை இன்னும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டார். என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தா…
-
- 3 replies
- 1k views
-
-
திங்கள் 25-02-2008 17:39 மணி தமிழீழம் [தாயகன்] வன்னியில் இறக்கும் படையினரைப் புதைக்க புதிய அணி வன்னி களமுனைகளில் கொல்லப்படும் சிறீலங்காப் படையினரின் இழப்பை தென்னிலங்கை மக்களிற்கும், ஊடகங்களிற்கும் தெரியாது மூடி மறைப்பதற்கு புதிய உத்தியொன்றை அரசு மேற்கொண்டு வருகின்றது. மன்னார், மணலாறு களமுனைகளில் தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், நாளாந்தம் சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை ஊடகங்களிற்கும், கொல்லப்படும் படையினரின் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தாது விடுவதற்காக, கொல்லப்படும் படையினரின் உடலங்களைப் புதைப்பதற்கென புதிய அணிகள் களமிறக்கப்பட்டுள்ளன. மருத்துவ உதவி என்ற பெயரில் களமிறக்கப்பட்டுள்ள இந்த அணியினர், ஏனைய படையினருக்கு உ…
-
- 7 replies
- 3.2k views
-
-
தமிழர் புனர்வாழ்வு கழகம் டென்மார்க்கின் நிலவர அறிக்கை! நிலவர அறிக்கை 23.02.2008 http://tamilvoice.dk/images//trodk_press_release_230208.pdf சிறிலங்கா அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினுடைய வங்கிக் கணக்குகளை 2006 செப்டம்பர் மாதத்துடன் முடக்கி கொண்டதோடு அதன் தொடர்ச்சியாக 2007 நவம்பர் மாதத்தில் தடையும் செய்து கொண்டது அதேகாலப் பகுதியில் அமெரிக்காவும் தனது நாட்டிலுள்;ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினுடைய வங்கி கணக்குகளை முடக்கி கொண்டதுவும் நாம் அவைரும் அறிந்ததே. இதன் பின்ணணியில் எமக்கெதிரான வலுவான குற்றச்சாட்டுக்கள் ஏதும் அற்ற நிலையிலும் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்தை முன்வைத்து கொண்டும் டென்மார்க் காவல்துறையினர் 2007 நவம்பர் மாத நடுப்பகு…
-
- 1 reply
- 1.2k views
-
-
கிளிநொச்சி, பூநகரியில் இடம் பெற்ற விமானக் குண்டு வீச்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டும் சர்வதேச நாடுகள் இன்னமும் கண்டனம் தெரிவிக்காமை குறித்து த.தே.கூட்டமைப்பு யாழ். மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் கவலை தெரிவித்துள்ளர். தென்பகுதியில் குண்டு வெடித்தால் மாத்திரமே சர்வதேச சமூகம் கண்டனமும் கவலையும் தெரிவிக்கின்றது என்று கூறிய சிவநேசன், அவ்வாறு தெரிவிக்கும் கண்டனத்தில் கிளிநொச்சியில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கும் சேர்த்து கண்டனம் தெரிவிக்கப்படுகின்றது எனவும் சுட்டிக் காட்டினார். அப்படியானால் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்காக கண்டனம் தெரிவிப்பதற்…
-
- 0 replies
- 977 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு கச்சதீவு அந்தோனியார் கோவில் திருவிழா நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து 18 கடல்மைல் தொலைவில் கச்சதீவு அமைந்துள்ளது. இங்குள்ள புனித அந்தோனியார் கோவிலை மீனவர்கள் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். இப்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் இத்தீவு அமைந்துள்ளது. கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் பெப்ரவரி கடைசி வாரத்திலிருந்து மார்ச் 15 ஆம் திகதி 3 நாட்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தோனியார் கோவில் திருவிழா நடைபெறும். இதில் முதல் நாள் கொடியேற்றம், 2 ஆம் நாள் சிறப்பு பிரார்த்தனை, 3 ஆம் நாள் தேர்பவனி நடைபெறும். இக்கோவில் திருவிழாவில் இரு நாடுகளையும் சேர்ந்தவர்கள் எந்தவித ஆவணங்களும் இன்ற…
-
- 0 replies
- 866 views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரன் உரை அடங்கிய இறுவெட்டு வைத்திருந்தவர் கைது 2/25/2008 7:39:14 PM வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரர் தின உரை அடங்கிய இரண்டு இறுவட்டுக்களை வைத்திருந்த மஸ்கெலியா பிரவுன்ஸ் விக்தோட்டத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு செட்டியார் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட இளைஞர் ஒருவர் தெமட்டகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளõர். ராமஜெயம் ரவிச்சந்திரன் (வயது 34) என்ற வாலிபரே ஜாஎலயிலுள்ள தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டவர். கடந்த 19ஆம் திகதி இவரது வீட்டுக்கு சென்ற இரகசிய பொலிஸார் சுமார் 105 சினிமா பாடல் திரைப்பட இறுவட்டுக்களை தகவல் ஒன்றை அடுத்து எடுத்துச் சென்றதாகவும், அதில் இரண்டு இறுவட்டுக்கள் பிரபாகரனின் மாவீரர் …
-
- 1 reply
- 2.3k views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் நேற்று திங்கட்கிழமை அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 848 views
-
-
மேலும் 3 லட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயரும் ஆபத்து நேரலாம்! இப்படி ஐ.நா. மதிப்பீடு இலங்கையின் தற்போதைய மோதல் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளும்போது இவ்வருடம் மேலும் மூன்று லட்சம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயரக்கூடிய அபாயகரமான சூழ்நிலை காணப்படுவதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு அத்தகைய நெருக்கடி ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காகத் தனது கட்டமைப்புகளைத் தயார்ப் படுத்தியும் வருகின்றது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள இலங்கைக்கான பொதுவான மனிதாபிமான செயற்பாட்டுத் திட்டம் குறித்த அறிக்கையிலேயே இது பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008இல் இலங்கையில் பாதுகாப்பு சூழ்நிலை மேலும் மோசமடையலாம் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட யார் காரணம்? : இந்தியா தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம் புதுடில்லி: விடுதலைப்புலிகளுடன் அமைதி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு, கடும் சண்டையில் இலங்கை ராணுவம் இப்போது இறங்கி விட்டது; ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீடித்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் பின்னணியில் இந்தியா இருந்தது பலருக்கும் தெரியாத ரகசியம். இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டையை இந்தியா, "அமைதி பார்வையாளராக' பார்த்து வருகிறது என்று தான் பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால், இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும்; சண்டையால் பலனில்லை என்று முடிவுக்கு வந்து, அந்த நாட்டுக்கு உதவ முன்வந்தது இந்தியா தான். தொடர்ந்து போர் நீடிக்கும்: அதிபராக ரணசிங்கே …
-
- 15 replies
- 4k views
-
-
திங்கள் 25-02-2008 17:46 மணி தமிழீழம் [தாயகன்] பேராதெனிய பல்கலைக்கழகத்தில் மோதல் - 11 மாணவர்கள் காயம் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவ அணிகளுக்கு இடையில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கலை, மற்றும் விஞ்ஞானபீட மாணவர்களுக்கு இடையில் நேற்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து இந்த மோதல் ஆரம்பமாகி இன்று காலை கைகலப்பில் முடிவடைந்தது. காயமடைந்த 11 மாணவர்களில் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருந்த 9 மாணவர்கள் சிகிச்சையின் பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 4 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மாளிகைப் பகுதிக்குள் காவல்துறை அதிகாரி ஒருவரின் உதவியுடன் நுழைவதற்கு முயற்சித்த தமிழ் இளைஞர் ஒருவரை அரச தலைவர் மாளிகைக்குரிய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.7k views
-
-
இரவு பகலாக மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டாலும் பௌத்த துறவிகள் சிலர் எதிர்மாறான செயற்பாடு [25 - February - 2008] * இன்றைய அவலத்திற்கு இதுவே காரணம்; கலாநிதி விக்கிரமபாகு கௌதம புத்தர், விடயங்களை ஆராய்ந்து உண்மையின் பிரகாரம் செயற்படுமாறே தமது சீடர்களுக்கு போதித்தார். ஆனால், எமது நாட்டிலுள்ள சில பௌத்த துறவிகள் இரவு பகலாக மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டாலும் மாறாக செயற்படுவதே இன்றைய நிலைமைகளுக்கு காரணம் என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை திராவிட இயக்கத்தின் தலைவர் ஈ.மா. அருமைதாசனின் நினைவஞ்சலிக் கூட்டம் கடந்த புதன்கிழமை கொழும்பு புறக்கோட்டை பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட கலாநிதி விக்ரமபாகு …
-
- 3 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 944 views
-
-
மஹிந்த ஜனாதிபதியான பின்னர் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன- ஜெனீவா ஆய்வாளர் 25.02.2008 / நிருபர் எல்லாளன் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து பொதுமக்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்திருப்பதாக ஜெனீவாவின் சிறிய ஆயுதங்கள் தொடர்பான ஆய்வுநிலையத்தின் பணிப்பாளர் ரொபேர்ட் முஹா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்ஜெயவர்த்தன, பிரேமதாச, சந்திரிகாகுமாரதுங்க ஆகியோர் போல விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க முடியுமென்ற பிடியைத் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வைத்துக்கொண்டுள்ளார். எனினும், கடந்த கால அரசாங்கங்களைவிட வித்தியாசம் என்னவெனில் சமாதானப் பேச்சு மூலமான அரசியல் தீர்வுக்கான அனைத்து …
-
- 0 replies
- 833 views
-
-
ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ரம்பொடை சுரங்க பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது 2/25/2008 3:17:35 PM வீரகேசரி இணையம் - மத்திய மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான சுரங்கப் பாதையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாககத் திறந்துவைத்தார்.225 மீற்றர் நீளமான ரம்பொட சுரங்கப் பாதை ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ரூபா 2 பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் 54 கிலோ மீற்றர் நீளமான கம்பளை – நுவரேலியா வீதியையும் 17 கிலோ மீற்றர் தூரமான கம்பளை – நாவலப்பிட்டிய வீதியையும் இணைக்கும் வகையில் இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் இலகுவாக்கப்பட…
-
- 0 replies
- 812 views
-
-
திங்கள் 25-02-2008 16:47 மணி தமிழீழம் [தாயகன்] மட்டக்களப்பு பெண் அமெரிக்காவில் கைது போலியான கடவுச்சீட்டு மூலம் அமெரிக்காவிற்கு நுழைய முற்பட்ட குற்றச்சாட்டில் மட்டக்களப்பு பெண்ணொருவர் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 26 அகவையுடை சாமினி குமார் என்ற இந்தப் பெண் கனடியப் பிரசையான அஸ்வேவி ஜெகதீஸ்வரன் என்பவரது கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் நுழைய முற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் நாளன்று கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட பெண் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.1k views
-
-
கொழும்பில் இதுவரை 214 பேர் கடத்தப்பட்டுள்ளனர் - மக்கள் கண்காணிப்புக் குழு கொழும்பிலும், கொழும்பின் புறநகரிலும் இதுவரை 214 பேர் கடத்தப்பட்டுள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இன்றுவரை 214 பேர் கொழும்பிலும் அதன் புறநகரங்களிலும் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட 214 பேர் தொடர்பில் சிறீலங்கா காவல்துறையினர் ஏதுவித தகவல்களையும் வெளியிடவில்லை என மக்கள் கண்காணிப்புக் குழு குற்றம் சுமத்தியுள்ளது. கடத்தப்பட்டவர்களில் 99 விழுக்காட்டினர் தமிழர்கள் எனவும் இவர்களின் சுயவிபரங்களை திரட்டி வைத்துள்ளதாகவும் மக்கள் கண்காணிப்புக் குழு சுட்டிக்காட்டுகின்றது. இவ்வாறு காணாமல் போனோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக சிறீலங்கா…
-
- 0 replies
- 580 views
-
-
தமிழ் பேசும் புத்திஜீவிகள் குழு லண்டனிலிருந்து இங்கு வருகை "வெளிநாட்டில் வதியும் இலங்கைப் புத்திஜீவிகளின் குழு பிரிட்டன்' என்ற பெயரில் தமிழ், முஸ்லிம் பிரமுகர்களைக் கொண்ட குழு ஒன்று கடந்த ஒரு வாரகாலமாக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசி வருகின்றனர் என்று தெரியவருகின்றது. தமிழ் ஜனநாயகக் காங்கிரஸின் தலைவர் ஆர்.ஜெயதேவன், பிரிட்டன் இந்து ஆலயங்களின் சம்மேளனத் தலைவர் என்.சச்சிதானந்தன், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திருமதி ஆர்.பாலசுப்பிரமணியம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரிட்டன் பிரிவுத் தலைவர் கே.சுப்பையா, லண்டன் ஈழப்பசுபதீஸ்வரர் ஆலய அறங்காவலர் கே.விவேகானந்தன், டென்மார்க் தமிழ்ச் சமூக அமைப்பைச் சேர்ந்த அரு…
-
- 11 replies
- 3.7k views
-