Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சரியான அரசியல் தீர்வு கிட்டாதவரைக்கும் பல பிரபாகரன்கள் உருவாகுவார்கள் - மங்கள சமரவீர வீதிக்குச் சென்று பிச்சை எடுத்தாலும் மகிந்த அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளமாட்டேன் என சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் அணியின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் ''லக்பிம'' எனும் சிங்கள நாளேட்டுக்கு கருத்துரைத்திருக்கும் போதே மக்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது இந்த அரசாங்கம் நாட்டை அதாள பாதாளத்திற்கு இட்டுச் செல்கின்றது. இந்த அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளமாட்டேன். அரசாங்கத்துடன் கொள்கை அளவில் இணங்கினால் மட்டுமே இணைந்து கொள்வேன். அரசாங்கம் கொள்கை அளவில் மாறினால், உண்மையாக மாற நினைத்தால், மாத்திரமே நான் அரசாங்கத்துடன்…

    • 0 replies
    • 1.4k views
  2. சிறிலங்கா இராணுவத் தளபதி மீதான கொலை முயற்சிக்குப் பின்னர்தான் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாக மகிந்த அரசாங்கம் கூறுவது பொய் என்றும் அமைதிப் பேச்சுக்கள் காலத்திலும்கூட புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.8k views
  3. கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தைத் தொடர்ந்து மேலும் பல நாடுகள் சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்ள முனைந்து வருவதாக ரஷ்யாவின் இன்ரபக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 2.4k views
  4. மட்டக்களப்பில் பொலிசார் மீது துப்பாக்கிச்சூடு. 19.02.2008 / நிருபர் எல்லாளன் மட்டக்களப்பு பகுதியில் சிறிலங்காப் பொலிசார் மீது இன்று ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத் தாக்குதலில் பொலிசார் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலின் பின்னர் அவ்விடத்தில் சிறிலங்காப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  5. மன்னார் ஆண்டான்குளத்தை நேற்று படையினர் கைப்பற்றினர் என அறிவிப்பு மன்னாரின் கிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆண்டான்குளம் பகுதியை நீண்ட பல வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் நேற்றுக் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் எனப் படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டது. நேற்றுக்காலை 5.30 மணியளவில் படையினர் தாம் திடீரென நடத்திய தாக்குதல் நடவடிக்கைமூலம் புலிகளின் பலமான பாதுகாப்பு அரணுடன் கூடிய சுமார் அறுநூறு சதுர கிலோமீற்றர் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர் என்று அறிவிக்கப்பட்டது. படை நகர்வை எதிர்த்த பத்துப் புலிகள் உயிரிழந்தனர். மேலும் ஆகக் குறைந்தது பத்துப் படையினர் படுகாயமடைந்தனர் என்றும் புலிகளின் இரு சடலங்களையும் ரி 5…

  6. முகத்துவாரத்தில் நேற்றிரவு இளைஞர் சுட்டுக்கொலை 2/19/2008 8:43:43 AM வீரகேசரி நாளேடு - முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். முகத்துவாரம் காளி கோவில் வீதிக்கு திரும்பும் சந்தியில் வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு 8.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலையை முடித்துக்கொண்டு தனது கடையிலிருந்து வீட்டிற்கு செல்லும் போதே இனந்தெரியாதோர் சிலர் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிசென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆடை தைக்கும் கடையொன்றை வைத்திருக்கின்ற ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளõர் என்று முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்க…

  7. புத்தளத்தில் மின்மாற்றி வெடித்து சேதம் 2/19/2008 9:18:46 AM வீரகேசரி இணையம் - புத்தளத்தில் இன்று காலை மின்மாற்றியொன்று வெடித்துள்ளது.புத்தளம் மங்கலேலிய பகுதியிலுள்ள மின்மாற்றியொன்ரே வெடித்து சேதமாகியுள்ளது. இவ் வெடிப்பு சம்பவத்திற்க்கான காரணம் இது வரை கண்டறியப்படவிலை. பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  8. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தமது நாட்டுக்கு நாடு கடத்துமாறு இந்தியா தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றது. இருந்த போதிலும் அவரைக் கைது செய்வது கடினமாகவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித் கோஹண தெரிவிததுள்ளார். இணையதளமொன்றிற்கான பேட்டியில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியவின் விஷெட படையணியின் உதவியுடனும் பிரபாகரனைக் கைது செய்வது சாத்தியமில்லையெனத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு புதிய அதிகாரிகளை நியமிப்பது வெளிவிவகார அமைச்சினாலேயே தமாதமாவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் அப்பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு.- கேள்வி : விடுதலைப் புலிகளை ஆஸ்திரேலிய அரசு தடை செய்ய வேண்டுமென இலங்கை அரசு வற்புறுத்தியுள்…

  9. உண்மைக்குப் புறம்பாகப் பேசலாமா? -ஜெயராஜ்- * வன்னியை ஐந்து டிவிசன் படையணிகள் சுற்றிவளைத்து விட்டன. * இந்தியா ஒரு தடவை தலையிட்டு எமது முயற்சியைத் தடுத்தது. * தலைவர்களான ரணசிங்க பிரேமதாசவும், சந்திரிகா குமாரதுங்கவும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் அரசியல் அழுத்தங்களால் இம்முயற்சிகளைக் கைவிட்டுவிட்டனர். * கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம். * கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட்டு கடந்த காலத்தைப் போல் விட்டு விலகமாட்டோம். இவை யாவும் சிறிலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா சிங்கள நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ள சில விடயங்களாகும். இதன் அடிப்படையில் பார்க்கையில், சிங்களவர்கள் அனைவரும், இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவைத் தம…

  10. செவ்வாய் 19-02-2008 01:07 மணி தமிழீழம் [தாயகன்] மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் அவலம் சிறீலங்காப் படையினரின் படை நடவடிக்கை காரணமாக மன்னாரிலிருந்து கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். மடு, மாந்தை மேற்குப் பிரதேசங்களிலிருந்து 918ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், இவர்களுக்கான உலர் உணவுப் பொருள்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிக்கு உலர் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு புதிய நடைமுறைகளை அமுல்படுத்தியுள்ள சிறீலங்காப் படையினர், கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியில் இடம்பெயர்ந்துள்ள மக்களிற்கு இரண்டு மா…

  11. செவ்வாய் 19-02-2008 01:06 மணி தமிழீழம் [தாயகன்] கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மீது கெடுபிடி யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் சிறீலங்காப் படையினரின் கெடுபிடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை வன்னியிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை மதவாச்சியில் வழிமறித்த படையினர், ஒரு மணி நேரம் தடுத்து வைத்து மோப்ப நாய்கள் சகிதம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். படையினரின் இந்த நடவடிக்கை மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தனக்கான சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் குற்றம் சாட்டியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&am…

    • 2 replies
    • 1.2k views
  12. ------------------------------------------------------------------------------------------------------------------------------------

    • 1 reply
    • 1.2k views
  13. கொழும்பில் வங்கிக் கணக்கொன்றை திறப்பதாயின் பொலிஸ் பதிவு அவசியம். 18.02.2008 / நிருபர் எல்லாளன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் கொழும்பிலுள்ள வங்கிகளில் கணக்கொன்றை திறப்பதாயின் அதற்கு வங்கிகளில் பொலிஸ் பதிவு கோரப்படுகின்றது. இதனால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் கொழும்பிலுள்ள தனியார் வங்கிகளில் புதிய வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கு சில தனியார் வங்கிகள் பொலிஸ் பதிவுக்கான அத்தாட்சிகளைக் கோருவதாகத் தெரியவருகிறது. கொழும்பிலுள்ள சில தனியார் வங்கிகளின் முகாமைத்துவம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களிடம் மாத்திரம் பொலிஸ் பதிவுப் பிரதிகளைக் கோருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதாரணமாக வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்குக் கோரும் ஆவணங்களுடன், யாழ்ப்பாணத்தைச் …

  14. மணலாறு மண்கிண்டிமலை மற்றும் ஜெனகபுர பகுதிகளிலில் சிறிலங்காப்படையினரின் இருமுனைகளிலான முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. [Monday February 18 2008 08:31:23 PM GMT] [யாழ் வாணன்] இன்று காலை 9மணிதொடக்கம் செறிவான ஏறிகணைச்சூட்டாதரவுடன் முன்னகர்ந்து வந்த சிறிலங்காப்படையினருக்கு எதிராக விடுதலைப்புலிகள் கடும் எதிர்தாக்குதல் நடத்தியுள்ளனர் இதன் போது படையினர் பலத்த இழப்புக்களுடன் கொல்லப்பட்டவர்களையும் காயவடைந்நவர்களையும் இழுத்துக்கொண்டு தமது நிலைகளுக்கு பின்வாங்கி ஓடிவிட்டனர். மேலதிக செய்திகள் பின்னர் தரப்படும் tamilwin.com

  15. குற்ற உணர்வு ஏதுமற்ற ராஜபக்ச சகோதரர்கள் -வேலவன்- முன்னாள் சனாதிபதி பிரேமதாசா ஒருமுறை 'மகாத்மா காந்தி எனது ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்டிருந்தால் அதற்கான பழியையும் என்மீதே சுமத்தியிருப்பர்" என்று கூறினார். உண்மையில் அவர் இதனை மனப்பூர்வமாகக் கவலையுடன் தெரிவித்தாரா? அல்லது அவ்வாறு கவலைப்படுவதாக நடித்தாரா? என்பது தெரியவில்லை. ஆனால் அவ்வாறு வெளிப்படையாக தெரிவித்திருந்தார். மகிந்த ஆட்சியும் இன்று அவ்வாறுதான் இருக்கின்றது. அதாவது பிரேமதாச காலத்து மனித உரிமை மீறல்களை அன்று உலகிற்கு வெளிப்படுத்திய மகிந்தவின் ஆட்சியும் அந்த நிலையை அடைந்துள்ள போதும் இது குறித்த உணர்வுகள் எதுவும் மகிந்த ஆட்சியிடம் இருப்பதாகத் தெரியவில்லை. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பி…

  16. ஆயுதங்களுடன் சிங்களவர் மூவர் கைது வெலிகந்தையில் சம்பவம் 2/18/2008 6:23:20 PM வீரகேசரி இணையம் - பொலன்னறுவை வெலிகந்தை பொலிஸ் பிரிவுகுட்பட்ட பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை வைத்திருந்த மூன்று சிங்களவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள் ளனர். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இவர்கள் வெலிகந்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளதுடன் கூலித்தொழில் செய்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான என்.கே.இலங்ககோன் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது : கொலகனவாடிய செவனபிட்டியவைச் சேர்ந்த முதுகமகேலாகே தர்மசேன எனும் தர்மே (27வயது), மஹாவௌ செவனபிட்டியவைச் சேர்ந்த முதுகமலாகே ரஞ்சித் (31 வயது)…

  17. மன்னாரில் மும்முனைகளில் படையினர் முன்நகர்வுத் தாக்குதல்கள் [திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2008, 06:24 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னாரில் மும்முனைகளில் இன்று அதிகாலை முதல் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுக்கரை, பாலைக்குழி, உயிலங்குளம் ஆகிய பகுதிகள் ஊடாக இன்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணிமுதல் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுகளுடனும், டாங்கி மற்றும் வான் தாக்குதல்கள் சகிதம் படையினர் பாரிய முன்நகர்வுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இம் மும்முனை நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். புதினம்

  18. வவுனியா தோணிக்கல் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் துப்பாக்கி முனையில் குடும்பம் ஒன்றை மிரட்டி கப்பம் கேட்டபோது அவர்களிடம் இருந்த துப்பாக்கியைக் குடும்ப அங்கத்தவர்கள் பறித்தெடுத்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  19. ஊடகப் பணியும் ஊடகப் பயங்கரவாதமும்? -சண். தவராஜா- ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரி ஒருவரைச் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு ஒன்று அண்மையில் கிட்டியது. கதைக்கும் போது கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யா பற்றியும் அங்கு தற்போது இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பிலான சர்வதேச சமூகத்தின் அக்கறை பற்றியும் விவாதித்தோம். 'மூன்று தசாப்த காலமாக தமிழர் தாயகத்தில் நடக்கும் யுத்தம், அதில் சுமார் ஒரு இலட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்டமை, தமிழ் இனத்தின் மொத்தச் சனத்தொகையில் மூன்றிலொரு வீதத்தினர் அகதிகளாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருப்பது, இந்நிலையில், ஈழத்தமிழர் விவகாரத்தில் காட்டாத கரிசனையை சர்வதேச சமூகம் கென்யா விவகாரத்தில் காட்டுகின்றது. அங்கு இதுவரை சுமார் 700 வரையான பொதுமக்கள…

  20. வீரகேசரி நாளேடு - எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எம்முடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த் தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என நம்புகின்றேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் புறந்தள்ளி ஒதுக்கி சிங்கள மேலாதிக்கத்தை திணிக்க முற்படுகின்ற மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் எப்படி இணைந்திருக்க முடியும் அதனாலேயே நாம் அரசிலிருந்து விலகினோம் என்றும் அவர் கூறினார். அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் கட்டப்படவுள்ள பொதுச் சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும்போதே முஸ்லி…

    • 8 replies
    • 1.6k views
  21. எஸ்.ஆர். லெம்பேட் - மன்னார் தள்ளாடி படை முகாம் மீது இன்று திங்கட்கிழமை விடுதலைப் புலிகள் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர் . இச்சம்பவம் காலை 9.30 மணியளவில் இடம் பெற்றது . விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் இரண்டிற்கு மேற்பட்ட குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளது . இதன் போது 02 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் . இவர்கள் உலங்கு வானுர்த்தி மூலம் அனுராத புரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் . இதனைத் தொடர்ந்து மன்னார் மதவாச்சி பிரதான பாதையுடனான போக்குவரத்து 1 மணி நேரம் தடை செய்யப்பட்டு பின் போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டது நன்றி : வீரகேசரி இணையம்

  22. விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்யும் சிங்களவர்கள் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற வேண்டும் [18 - February - 2008] * அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து செயற்படும் பொலிஸாரும், படை அதிகாரிகளும் அவ்வாறான செயற்பாடுகளை கைவிட வேண்டும் என மின்சக்தி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். புத்தளம் கச்சேரியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சிவில் பாதுகாப்புக்குழுக்களை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர்; `இரத்தினபுரிப்பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு சிங்கள மக்களே உதவியிருப்பது தெரியவந்துள்ளது. இதனைப் பார்க்கும்போது விடுதலைப…

  23. அம்பாறையில் அங்கிலிக்கன் மதகுரு சுட்டுக்கொலை: மனைவியும் மகனும் காயம் அம்பாறையில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் அங்கிலிக்கன் மதகுரு ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

    • 2 replies
    • 1.7k views
  24. இலங்கை வடக்குகிழக்கு பிரச்சினை காரணமாக மனித உரிமைகள் சம்பமந்தபட்ட பாரதூரமான மீறல்களும் மனித அவலங்களும் ஏற்பட்டிருப்பதாக சர்வதேச சமூகம் மூலமாக இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச நிலைப்பாடு கட்டியெழுப்பப்பட்டிருப்பதா

  25. தள்ளாடி புனித அந்தோனயார் ஆலயம் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் அதுபற்றி கத்தோலிக்ககுருமார் கண்டன அறிக்கை வெசளியிடவில்லையென ஆளும் கட்சியின் பிரதான கொரடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த காலங்களில் கத்தோலிக்க ஆலயங்களுக்கருகில் எத்தகைய சிறு சம்பவங்கள் நடந்தாலும் அதுபற்றி ஆயர்க்ள அறிக்கi வெளியிடுவார்கள். ரோமன் கத்தோலக்க திருச்சபைக்கும் இது பற்றி அறிவிப்பார்க்ள. கத்தோலிக்க திருவச்சபையின் சார்பினல் அல்லது பாப்பரசா சார்பில் இச்சம்பவங்கள் குறித்து வருத்தம் தெரிவிததோ, கண்டனம் தெரிவித்தோ எத்தகைய அறிக்கையும் வெளியிடப்படவில்லை. தள்ளாடி புனித அந்தோனியார் ஆலயத்தை புலிகள் தாகக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.