ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது: இந்தியா கருத்து [Friday January 04 2008 07:48:26 PM GMT] [யாழ் வாணன்] இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்று உறுதியாக நம்புவதாக இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியா முதல் முறையாக வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்திருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இலங்கையில் நடைபெறும் வன்முறைகளையும், மனித சமுதாயம் படும் வேதனைகளையும் குறைப்பதற்கு எ…
-
- 6 replies
- 1.5k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா ஏன் முறிக்கிறது? -எரிமலை- சிறிலங்கா அமைச்சரவையில் ஏகமனதாக எடுக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவது என்ற தீர்மானமானது சிறிலங்காவிற்கான நோர்வேத் தூதுவர் தூர காற்றமிற்கு இரவு 8.30 மணியளவில் அமைச்சரவையில் பங்குபற்றிய ஒருவரால் அறிவிக்கப்பட்டது. இச்செய்தியானது நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் பேச்சுவார்த்தைக்கான நோர்வே அனுசரணையாளர் குழுத்தலைவருமான எரிக் சொல்கெய்மிற்கு உடனடியாகவே அறிவிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்கள்; இந்த விடயத்தினை தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன. சிறிலங்கா அமைச்சரவை இன்று மாலை நடாத்திய கூட்டத்தில் போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகிக்கொள்ள முடிவ…
-
- 5 replies
- 2.5k views
-
-
இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் ரத்து? சிறிலங்க அமைச்சர் சூசகம்! வெள்ளி, 4 ஜனவரி 2008( 18:57 IST ) பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கையின் 80வது ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தெரியவந்துள்ளது! கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ரோஹித போகல்லகாமா, "பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறும் இலங்கையின் சுதந்திர தின பொன்விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வார் என்று சிறிலங்க அரசு ஒருபோதும் கூறவில்லை" என்று கூறியுள்ளார். இந்தியப் பிரதமர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளில் இலங்கைக்கு வரவில்லை என்றும், இந்த ஆண்டில் அவர் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறிய போகல்லகாமா, இ…
-
- 8 replies
- 3.1k views
-
-
ஒப்பந்தம் முடிவுற்றாலும் ஓமந்தை பாதை ஊடான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவிப்பு 1/4/2008 9:10:50 PM வீரகேசரி இணையம் - போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதும் ஓமந்தையூடான வன்னிக்கான போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படமாட்டாது என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பதில் பேச்சாளர் தெரிவித்தார். இது தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த பதில் பேச்சாளர், ஓமந்தையூடாக வன்னிக்கான போக்குவரத்து வழமைபோல இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக, இரு தரப்பும் எமது பணிப்பாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளனர். பணியாளர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகும் போது மாத்திரமே ஐ…
-
- 1 reply
- 982 views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை குண்டுவீச்சு: 7 சிறார்கள் உள்ளிட்ட 13 பொதுமக்கள் காயம்- 2 பேரின் நிலை கவலைக்கிடம் [Friday January 04 2008 03:46:17 PM GMT] [யாழினி] முல்லைத்தீவு அளம்பில் உடுப்புக்குளம் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் மிக்-27 மற்றும் கிபீர் ரக வானூர்திகள் செறிவாக நடத்திய குண்டுவீச்சில் 7 சிறார்கள் உள்ளிட்ட 13 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அளம்பில் பகுதி உடுப்புக்குளம் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 மற்றும் கிபீர் ரக வானூர்திகள் 4 குண்டுகளை வீசின. சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த …
-
- 4 replies
- 1.3k views
-
-
வெள்ளி 04-01-2008 18:58 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவரீதியிலான தீர்வா? இந்தியா சிறீலங்கா அரசு ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதையடுத்து, சிறீலங்காவின் தேசிய பிரச்னைக்கு இராணுவரீதியில் தீர்வைக் காண முடியாது என இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணவ் முகர்ஜி தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு அதிகாரத்தை பராதீனப்படுத்துவதற்கும், பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கும் இந்தியா தனது ஒத்துழைப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதிபர் மகிந்த ராஜபக்சவால் அமைக்கப்பட்ட சர்வகட்சிக் குழு அதிகாரப்பகிர்வை உள்ளடக்கிய தீர்வுத்திட்டத்தை மிக விரைவில் முன் வைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பிரணவ் …
-
- 4 replies
- 1.9k views
-
-
புலிகளுக்கு தாலாட்டு பாடும் கருணாநிதி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெயலலிதா கண்டனம் 1/4/2008 7:22:45 PM வீரகேசரி இணையம் - தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு தாலாட்டுப் பாடும் முதல்வர் கருணாநிதி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது என அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இன்று முன்தினம் நடைபெற்ற அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த உரையின்போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நக்சலைட் தீவிரவாதிகள் , தேனி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் புகுந்து வருகிறார்கள். தீவிரவாதிகளும் தமிழகத்தை தான் தலைமையிடமாக மாற்ற முயற்சிக்கிறார்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் தமிழ் அரசியல் வாதிகளின் குரல்கள் நிறுத்தப்படுகின்றன - புலித்தேவன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் அரசியல்வாதிகளின் குரல்களை சிறீலங்கா அரசாங்கம் நிறுத்தி வருகின்றது என விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் படுகொலையை அடுத்தே இவர் இக்கருத்தினை நேற்று தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினையைத் தீர்பதற்கான அனைத்து வழிகளையும் மூடி கொலைக்கலாச்சாரத்தையும் முன்னேடுத்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார். சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கையானது ஒரு பயங்ககரவாத நடவடிக்கையாக அமைந்துள்ளது என புலித்தேவன் மேலும் தெரிவித்துள்ளார். h…
-
- 0 replies
- 885 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் விளக்கத்திற்குப் பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா விலகியமை குறித்த எரிக் சொல்ஹெய்மின் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்று அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
Tiger ambush kills STF officer, 2 bodyguards in Ampaa'rai [TamilNet, Friday, 04 January 2008, 12:41 GMT] Liberation Tigers of Tamileelam officials in Ampaa'rai said a Sri Lankan Special Task Force officer and his two bodyguards were killed in an ambush on their vehicle 15 km west of Poththuvil in Ampaa'rai Friday around 3:00 p.m. Two STF personnel were also wounded in the ambush, according to P. Kaviyarasan, LTTE's political head in Ampaa'rai district. அம்பாறை மாவட்டத்தில் 15 கி.மீ மேற்காக உள்ள பொத்துவில் என்ற இடத்தில் கண்னிவெடி தாக்குதலில் எஸ்.ரி.எவ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது இரு மெய்பாதுகாலாளிகள் கொல்லப்பட இரு எஸ்.ரி.எவ் காயமும் அடைத்துள்ளார்கள். இச்ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
உடனடியாக புலிகளை தடைசெய்யும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை [04 - January - 2008] [Font Size - A - A - A] * திட்டமிட்டபடி தீர்வு முயற்சி முன்னெடுப்பு; அமைச்சர் யாப்பா -எம்.ஏ.எம்.நிலாம்- போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசு விலகிக்கொள்வதால் இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு எந்தவிதமான தடையும் ஏற்படப் போவதில்லையெனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்யும் முடிவேதுவும் உடனடியாக மேற்கொள்ளும் எண்ணம் அரசுக்குக் கிடையாதெனவும் சுட்டிக்காட்டியது. சர்வகட்சி மாநாடு தெரிவிக்கும் சிபாரிசுகளின் அடிப்படையில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் அரசு அறிவித்தது. அமைச்சரைவைத் தீர்மானங்களை அறிவிக்கும் …
-
- 1 reply
- 985 views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தம் -- கேலிச்சித்திரம்
-
- 0 replies
- 1.2k views
-
-
மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியா வேண்டுமா? அல்லது ஆட்சி அதிகாரம் வேண்டுமா? என்பதை அவரே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று மகிந்த அரசாங்கத்தை ஜே.வி.பி. கட்சி மிரட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 988 views
-
-
யாழ்பாணத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபராக பூஜித ஜெயசுந்தர பதவியேற்பு வீரகேசரி இணையம் யாழ் பிராந்தியத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக பூஜித ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். குருநாகல் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய இவர் இன்று முதல் யாழ்ப்பாணத்திற்கான பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவியேற்றுள்ளார். பூஜித ஜெயசுந்தர ஏற்கனவே கொழும்பின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 886 views
-
-
மணலாற்றில் கிளைமோர் தாக்குதல் நடத்த வந்த படையினர் விரட்டியடிப்பு [Friday January 04 2008 10:19:16 AM GMT] [யாழினி] மணலாற்றுப்பகுதியில் கிளைமோர் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். மணலாறு, மண்கிண்டிமலை வெடிவைத்தகல் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7:45 மணியளவில் கிளைமோர் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படையினர் இழப்புக்களுடன் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கிளைமோர் - 10, வெடிப்பி - 10, தொடுகம்பிச் சுருள் - 02 என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. http://www.tamilwin.net/article.php?artiId...;…
-
- 0 replies
- 2.2k views
-
-
வெள்ளி 04-01-2008 05:17 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் மருத்துவமனையில் புற்றுநோயாளர்கள் பாகுபாடு யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளர்களின் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக நோயாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது யாழ் போதனா மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக செல்லும் புற்று நோயாளர்களில் ஒரு பகுதியினருக்கு உரிய மருந்து வகைகளை வெளியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்த பெறும்படி அறிவுறுத்தப்பட்டு, வைத்தியர்களினால் துண்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புற்று நோய் மருத்துவர்களினால் வசதியானவர்கள் வசதியற்றவர்கள் என முகமன் பார்த்து மருந்துத் துண்டுகளை வழங்குகின்றனர் என நோயாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதனால் தாம் உரிய மருந்து வகைகளை உரிய …
-
- 0 replies
- 858 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தியாகராஜா மகேஸ்வரனின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று வியாழக்கிழமை காலை வெளிநாட்டிலிருந்து கொழும்பு திரும்பிய மேலக மக்கள் முன்னணியின், தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்றிரவே மீண்டும் வெளிநாடு பயணமானார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.5k views
-
-
ஜ.நாவின் மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையில் நியமிக்க வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம் 1/4/2008 1:51:47 PM வீரகேசரி இணையம் - இலங்கையில் ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமை கண்காணிப்பு குழுவினை நிறுவ வேண்டுமென நியுயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் 2002ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது எனவே நோர்வே போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் இலங்கையிலிருந்து வெளியேறுவர் அவ்வாறு வெளியேறும் பட்சத்தில் மனித உரிமை மீறல்கள் , துஷ்பிரயோகங்களை கண்காணிப்பு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என அவ் நியூ யோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது . …
-
- 3 replies
- 1.1k views
-
-
இராணுவசீருடை வகையை சேர்ந்த துணிகள் அடங்கிய பொதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் மீட்பு 1/4/2008 1:16:02 PM வீரகேசரி இணையம் - இராணுவ சீருடை சமமான நிறத்தைக் கொண்ட துணிகள் சில கட்டுநாயக்க விமான நிலைய பொதிகள் அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. லண்டனிலிருந்து அனுப்பப்பட்ட இந்த துணிகளை எடுத்துச் செல்ல எவரும் வராமையினால், அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளிற்கு தகவல் வழக்கினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரு சிங்களவர்கள் கைது 1/4/2008 1:10:28 PM வீரகேசரி இணையம் - புலிகளுக்கு உளவு தகவல்களை வழங்கி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிங்களவர் இருவரை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் விமானப் படைத் தளம் மீதான தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, இவர்கள் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிளிநொச்சியில் புலிகளிடம் பயிற்சி பெற்றுள்ளனர் எனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 1.2k views
-
-
அர்த்தமற்ற உடன்படிக்கை குறித்து ஏன் இந்த ஆரவாரம்? [04 - January - 2008] 2002 பெப்ரவரியில் நோர்வேயின் அனுசரணையுடன் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. நேற்று முன்தினம் புதன்கிழமை இதுதொடர்பாக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம கொழும்பில் உள்ளவெளிநாட்டு தூதுவர்களுக்கு நேற்று விளக்கமளித்திருக்கிறார். போர் நிறுத்த உடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அதிலிருந்து விலகுவதாக இருந்தால் நோர்வே அரசாங்கத்துக்கு 14 நாட்கள் முன்னறிவித்தல் கொடுக்க வேண்டு…
-
- 0 replies
- 1.3k views
-
-
மகேஸ்வரன் படுகொலை சந்தேக நபர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர் * சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அநுர சேனாநாயக்க 04 - January - 2008 -எம்.ஏ.எம்.நிலாம்- பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரெனவும் இவரது பெற்றோர் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நீண்டகாலமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் பூர்வாங்க விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தலைமையக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அநுர சேனாநாயக்க நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். 1995 ஆம் ஆண்டில் தனது 14 ஆவது வயதில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி கொழும்பிலும், சுற்றுப்புறங்களிலும் வாழ்ந்து வந்துள்ளத…
-
- 4 replies
- 2.3k views
-
-
தென் பிராந்தியத்தில் கவனத்தை திருப்பும் இந்தியா [04 - January - 2008] விடுதலைப் புலிகளின் தரைவழி, வான்மார்க்க தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய ஆயுதப் படைகள் தென்பிராந்தியக் குடாவில் கூட்டு யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. இந்த வருட முற்பகுதியில் இந்தப் பயிற்சிகள் இடம்பெறவுள்ளதாக யூ.பி.ஐ. செய்தி சேவை நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருக்கிறது. `இலங்கைப் படையினர் மீது விடுதலைப் புலிகள் தரைவழியிலும் வான்மார்க்கமாகவும் தாக்குதல்களை முன்னெடுத்ததால் அச்சுறுத்தல் உணர்வு இந்தியாவுக்கு அதிகரித்துள்ளது. அதனால் அடுத்தவருட முற்பகுதியில் தெற்குக் குடாவில் தொடர்ச்சியாக கூட்டுப்பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்தியா…
-
- 8 replies
- 2.1k views
-
-
Posted on : 2008-01-04 இனப் பாகுபாட்டுக் கொடூரம் இன்னும் தீவிரமாகும் சூழல் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி கைச்சாத்தான யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு சட்ட ரீதியான சாவு உறுதியாகிவிட்டது. இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது பற்றிய இலங்கை அரசின் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு அறிவிக்கப்பட்டதும், பதினான்கு நாட்களில் நடைமுறைக்கு வரக்கூடியதாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கான மரணச்சான்றிதழ் எழுதப்பட்டுவிடும். இலங்கை அரசின் இந்த முடிவின் காரணமாக, இதுவரை செத்துச் செயலிழந்து, சேடம் இழுத்துக்கொண்டிருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிராணன் நிரந்தரமாக வெளியேறப் போகிறது. அதுமட்டுமல்ல. யுத்த நிறுத்தக் க…
-
- 0 replies
- 683 views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்த்த்தில் இருந்து இலங்கை அரசு விலகுவது தொடர்பில் கனடா வருத்தம் 1/4/2008 12:45:29 PM வீரகேசரி இணையம் - யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதாக அறிவித்தது தொடர்பில் தாம் வருத்தமடைவதாக கனடா வெளிவிவகார அமைச்சர் மக்ஸிமி பேர்னியர் தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் 2002ம் ஆண்டு விடுதலைப்புலிகலுடன் செய்து கொண்ட யுத்த் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்லமை தொடட்ர்பில் கனடா வருத்தமடைவதாகவும் இவ்வாறு விலகும் பட்சத்தில் வன்முறைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 1k views
-