ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
கடந்த ஒக்டோபர் 9ம் திகதி இலங்கைக்கு உத்தியோகப+ர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் லுயிஸ் ஆபரின் அறிக்கை வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக தெரியவருகின்றது. இதற்கமைய, இந்த அறிக்கையின் ஊடாக இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பதற்காக அலுவலகம் ஒன்றை அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இதில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஐ.நா. மனித உரிமைகளின் ஆணையாளர் ஐந்த நாள் விஜயமொன்iறை மேற்கொண்டு கடந்த ஒக்டோபர் மாதம் 9ம் திகதி இலங்கைக்கு வந்தார். இதன்போது அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். எனினும், அவருக்கு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன், கிளிநொச்சிக்கு செ…
-
- 4 replies
- 1.5k views
-
-
கல்லா வெட்டுக்களாகும் கல்வெட்டுக்கள்-சு.சா.- 'கல்வெட்டுக்கள்" எனும் போது ஆதிகாலத்தில் தகவல்களை எதிர்காலச் சந்ததியினர் அறியும் பொருட்டு கற்களில் பொழிந்து வைத்தனர். அது தனிநபர் வரலாறுகளோ நாட்டின் வரலாறுகளாகவோ அமையும். 'இன்று கல்வெட்டு" எனும் பெயரில் நீத்தார் நினைவுகளை நினைவில் நிறுத்துவதற்கு புத்தக வடிவில் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. இவை சிறிய புத்தகங்களில் தொடங்கி ஐந்நூறு பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகங்கள் வரை அமைகின்றன. இவை நீத்தாரின் குடும்பத்தவர்களாலோ நண்பர்களாலோ வெளியிடப்படுகின்றன. இதற்காகப் பெரும் நிதிச் செலவு செய்யப்படுகின்றது. பல புத்தகங்கள் சில பக்கங்களில் இறந்தவரின் வரலாற்றைக் கூறி ஏனைய பக்கங்களில் பயனுள்ள பல தகவல்கள் வெளியிடப் படுகின்றன. ஆனால் அப்புத…
-
- 0 replies
- 836 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் செம்மலைப்பகுதி மீது சிறிலங்கா வான் படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுவீச்சில் "அப்பாவி பொதுமக்கள்" இருவர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 587 views
-
-
குறைவான சுமை ஊர்திகளுக்கே இராணுவம் அனுமதி [புதன்கிழமை, 12 டிசெம்பர் 2007, 06:44 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] கிளிநொச்சி வந்து சேரவேண்டிய 755 சுமை ஊர்திகளில் 612 சுமை ஊர்திகளுக்கு மட்டும் சிறிலங்காப் படை ஓமந்தை சோதனை நிலையத்தில் அனுமதி வழங்கியதாக கிளிநொச்சி சுமை ஊர்தி சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உணவு மற்றும் எரிபொருள் வழங்கல் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அரச செயலகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தில் முல்லைத்தீவுக்கு வந்து சேரவேண்டிய 330 சுமை ஊர்திகளில் 253 சுமை ஊர்திகளே உணவுப் பொருட்களுடன் வந்து சேர்ந்துள்ளன. 77 சுமை ஊர்திகளுக்கு சிறிலங்காப் படையினர் அனுமதி வழங்கவில்லை. புதினம்
-
- 0 replies
- 692 views
-
-
நாளை மறுதினம் வெள்ளிக் கிழமை வரவு செலவுத் ததிட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இடம் பெறும் போது அரசுத் தலைமைக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருக்கிசின்றது. எதிர்பாராத திருப்பங்கள் இடம் பெறும். காத்திரமான எண்ணிக்கை வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்றில் இந்த வரவு செலவுத் திட்டம் தோற்க்கப்படும். இவ்வாறு எதிர்க்கட்சிகள் தரப்பின் அதன் தலைவர்கள சிலர் உறுதியாகவும், திடமாகவும் நேற்றுத் தகவல் வெளியிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் வெளியில் பரபரப்பை ஏற்படுத்தாமல், பல தரப்பினருடனும் கலந்து பேசி வெள்ளிக் கிழமை நாடாளுமன்ற வாக்கெடுப்புத் தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் வியூகங்கள் வகுத்துள்ளார் என்றும், வெள்ளியன்று அது நாடாளுமன்றில க…
-
- 1 reply
- 1.8k views
-
-
தற்போது கிடைத் செய்தியின் படி இ.மு.கா கட்சியின் தலைவர் ரவூப் ஹாக்கிம் பஜட்டிற்கு எதிராக வாக்களிக்க தமது கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றது ஜானா.
-
- 4 replies
- 1.5k views
-
-
மஹிந்த ராஜபக்ஷ 'குடியரசுத்' தலைவரில்லை 'கொடிய அரசு" தலைவர் என்று த.தே.கூட்டமைப்பின் பா.உ எம்.கே. ஈழவேந்தன் தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்று பேசும் போதே இதனை அவர் தெரிவித்தார். மேலும் அண்மையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக பிரதேசத்தைச் சொந்தவர்கள் சுமார் 3,500 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் எண்ணிக்கயைல்ல முக்கியம். அரசின் செயற்பாடுகள்தான் முக்கியம். மஹிந்த குடியரசுத் தலைவர் அல்ல. அவர் ஒரு கொடிய அரசுத் தலைவர். இவ்வாறான நிலையில் 14ம் திகதி வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடக்கவிருக்கின்றது. இதில் அரசை ஆதரித்து வாக்களித்தால் வரலாறு வசைபாடும். எதிராக வாக்களித்தால் வரலாறு புகழ்பாடும். தமிழாகளுக்கு அநீதி இழைக்கப்படும் போது, அரசிலிர…
-
- 5 replies
- 2.1k views
-
-
ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் வழங்கிவரும் கடன் தொகை 31 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 746 views
-
-
அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்வதற்கு மன்னிப்புக் கிடையாது என்று அரச பயங்கரவாதத்தினால் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களை படுகொலை செய்துள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
மதவாச்சிய கெபித்திகொல்லேவைக்கிடையிலா
-
- 9 replies
- 1.7k views
-
-
பிள்ளையான் குழு மகிந்தவின் ஏவலாளிகயாவும் கைக்கூலியாகவும் செயற்படுகின்றது - ரணில். மகிந்த அரசாங்கத்தின் கைக்கூலியாக பிள்ளையான் குழு இயங்குவதாக ஜக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இன்று ஜக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறீகோத்தாவில் வைத்து உரையாற்றிய ரணில் விக்கிரசிங்க, பிள்ளையான் குழு தன்னிச்சையாக இயங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். மாறாக பிள்ளயைான் குழு மகிந்த அரசாங்கத்தின் ஏவலாளியாகவும் கைக்கூலியாகவும் செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார் Pathivu
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்காவில் தேசிய நாடாளுமன்றத்தை அமைக்க தயார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 825 views
-
-
தற்போது கிடைத்த செய்தியின் படி அமைச்சர் ரவூப் ஹகிம் தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு நாடாளுமன்ற எதிர்த் தரப்புக்கு வரிசையில் அமர்ந்தள்ளார். இவருடன் பசீர் சேகுதாவுத்,ஹஸன் அலி,பய்சால் காசிம் ஆகியோரும் அரசை விட்டு விலகி எதிர்த்தரப்பு ஆசனங்களில் அமர்ந்துள்ளதாக அறியவருகின்றது. ஜானா
-
- 0 replies
- 950 views
-
-
உலகு எங்கும் மிகவும் பிரபல்யம் பெற்ற "தி எக்கொனமிஸ்ற்" என்ற சஞ்சிகை முதற்தடவையாக தமிழீழத்தின் வரைபடத்தை உலக வரைபடத்தில் குறிப்பிட்டு வரைந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.4k views
-
-
புதன் 12-12-2007 01:55 மணி தமிழீழம் [சிறீதரன்] ததேகூ ஐ பாதீட்டைக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என துணை இராணுவக்குழு எச்சரிக்கை மட்டக்களப்பில் இயங்கும் துணை இராணுவக்குழுவினர் செவ்வாய்கிழமை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உறவினர்களை கடத்தி எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறும் பாதீட்டின் மூன்றாம் வாசிப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்கவேண்டாமென எச்சரித்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை இத்துணைப்படையினர் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் அவர்களது சகோதரர் பி.சிறிகந்தசியா நாடாளுமன்ற உறுப்பிர் கே.தங்கேஸ்வரியின் செயலர் இரா நாகலிங்கம், தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் சகோதரியின் மருமகன் அருணாசலம் சிவபாலன் ஆகி…
-
- 6 replies
- 1.8k views
-
-
பிரதம நீதியரசர் உரைத்த நீதி தலைவர்களின் காதுகளில் விழுமா? 12.12.2007 யுத்த முனைப்பிலும் போர்த் தீவிரத்திலும் அவா கொண்டு அலையும் இலங்கை அரசுக்கு நல்ல சூடு கொடுக்கும் விதத்தில் முக்கிய கருத்து ஒன்றை முன்வைத்திருக்கின்றார் இலங்கையின் பிரதம நீதியரசர் சரத் நந்தன சில்வா. அதுவும் ஐ.நா. அமைப்புகளின் பிரதிநிதிகள், இராஜ தந்திரிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என உயர்மட்டத்தினர் பிரசன்னமாகியிருந்த சபையில் சர்வதேச மனித உரிமைகள் தினம் தொடர்பான நிகழ்வில், இலங்கையின் மனித உரிமைகள், இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்கவையும்வைத்துக்கொண்
-
- 1 reply
- 959 views
-
-
சீன நாட்டு அமைச்சர் இன்று இலங்கை வருகை சீனக் கட்டுமானத்துறை அமைச்சர் வான்ங் கு அன்ங்ரா ஓ இன்று இலங்கைக்கு வரவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நகர அபிவிருத்தி மற்றும் புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில் வருகைதரவுள்ள சீன அமைச்சர் 15 ஆம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார். இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதம மந்திரி ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோரையும் இவர் சந்திப்பார். மேலும், சீனா உதவியளித்துள்ள தனியார் மற்றும் அரசதுறை சார்ந்த அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு விஜயம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். அதேவேளை, இலங்கையிலுள்ள சீன வர்த்தக மற்றும் கட்மானக் கம்பனிகளின் பிரதிநிதிகளையும் இவர் சந்திக்க…
-
- 0 replies
- 735 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 998 views
-
-
வியாழன் 06-12-2007 23:35 மணி தமிழீழம் [மயூரன்] தமிழ் மக்கள் விரைவில் ஆயுதம் ஏந்துவார்கள் - தி.மகேஸ்வரன் தமிழ் மக்கள் விரைவில் ஆயுதம் ஏந்துவார்கள் என ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கில் காணமல் போதல்கள், ஆட்கடத்தல்கள், கப்பம் அறிவிடுதல்கள் போன்றவற்றுக்கு சிறீலங்காப் படைகளே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இச் செயல்களைக் கட்டுப்படுத்தாது போனால் தமிழ் மக்கள் வெகுவிரைவில் ஆயுதம் ஏந்திப் போராடுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா அரசாங்கம் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்துவிட்டது எனத் தெரிவித்தபோதும் பலர் வெலிக்கடை, பூசா மற்றும் காவ…
-
- 20 replies
- 3.3k views
-
-
எப்போது சாத்தியமாகும்? ஒருபுறத்தில் கொழும்பு போன்ற இடங்களில் உள்ள தமிழர்களைச் சிறை வைப்பதன் மூலமும்- இன்னொரு புறத்தில் கெப்பிற்றிக்கொலாவ போன்ற இடங்களில் பேரூந்துகளுக்குக் கவசத்தகடுகள் பொருத்துவதன் மூலமும் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வையும், மேற்கூறப்பட்ட இடங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியுமா? கொழும்பில் வகை-தொகையின்றிக் கைது செய்வதினாலோ, சிறையில் அடைப்;பதினாலோ கொழும்பின் பாதுகாப்பு என்பது உறுதிப்பட்டதாகி விடுமா? அதாவது கொழும்பிலுள்ள அனைத்துத் தமிழர்களையும் சிறிலங்கா அரசாங்கத்தால் சிறைவைக்க முடியுமா? அன்றிக் கொழும்பிலிருந்து அனைத்துத் தமிழரையும் வெளியேற்றி விடத்தான் முடியுமா? தமிழர்களை வெளியேற்றுதல் அன்றிச் சிறையில் அடைத்தல் சாத்தியமில்லை எனக்கூ…
-
- 0 replies
- 1.3k views
-
-
மன்னாரில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு- 20 படையினர் பலி- 75-க்கும் மேற்பட்டோர் காயம் மன்னார் பாலைக்குழி, அடம்பன் ஆகிய இருமுனைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று மேற்கொண்ட பாரிய முன்நகர்வு நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மன்னார் பாலைக்குழி, அடம்பன் பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00மணிக்கு இரு முனைகளில் பாரிய அளவில் ஆட்டிலெறி- பல்குழல் மோட்டார் சூட்டாதரவுடனும் டாங்கிகளின் சூட்டாதரவுடனும் பெருமெடுப்பில் சிறிலங்காப் படையினர் தமது முன்னெடுப்பை மேற்கொண்டனர். இதற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இம் முறியடிப்புத் தாக்குதலில…
-
- 5 replies
- 2.4k views
-
-
சடலங்கள், மரண ஓலங்களின் மத்தியில் மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிப்பது எப்படி? - கியூடெக் நிறுவன இயக்குறர் கி.யோ.ஜெயக்குமார் [Tuesday December 11 2007 02:49:23 PM GMT] [pathma] பிரேதங்களுக்கு மத்தியிலும் மரண ஓலங்களுக்கு மத்தியிலும் இருந்து கொண்டு மனித உரிமைகள் தினத்தை எப்படிக் கொண்டாட முடியுமென, கரிற்றாஸ் - கியூடெக் நிறுவன இயக்குறர் கி.யோ.ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தின நிகழ்வு பாதுகாவலன் மண்டபத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றது. இணைப்பதிகாரி எஸ். சிவராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஜெயக்…
-
- 0 replies
- 839 views
-
-
மன்மோகன் சிங்கின் விஜயம் குறித்து கொழும்பு அவசரப்பட்டு அறிவிப்பு? - புதுடில்லி வட்டாரங்களில் ஆச்சரியம் [Tuesday December 11 2007 02:45:54 PM GMT] [pathma] இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக கொழும்பு அறிவித்திருப்பது குறித்து இந்தியா ஆச்சரியமடைந்துள்ளது. இலங்கைத் தீவின் சமாதான நடவடிக்கைகளில் கணிசமான முன்னேற்றத்தை மன்மோகன் சிங்கின் பயணத்துடன் தொடர்புபடுத்த இந்தியா விரும்புகின்றது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வாரென வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்திருந்தார். ஆனால், அவர் இவ்வாறு தெரிவித்தமை அவச…
-
- 0 replies
- 1.5k views
-
-
மகிந்த ராஜபக்சவினது அரசாங்கத்தைத் தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும் என்று ஜே.வி.பி. அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
மன்னார் மாந்தையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 769 views
-