ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
சிறிலங்காவின் பாதுகாப்புக்காக கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களில் 102 பேரை சிறையில் அடைத்துள்ளதாகவும் 100 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.9k views
-
-
யாழ். ஜிம் பிறவுண் அடிகளார் காணாமல் போனது தொடர்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நேர்மையாகச் செயற்படவில்லை என்று யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 834 views
-
-
கேரள கடற் பகுதிக்கு இடம் பெயரும் விடுதலைப் புலிகள் செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 4, 2007 ராமேஸ்வரம்: தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு தீவிரமாக உள்ளதால், கேரள கடலோரப் பகுதிகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக கேரள உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு ராமேஸ்வரம், கோடியக்கரை, வேதாரண்யம், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட தமிழக கடற்கரைப் பகுதிகளிலிருந்து பெட்ரோல், டீசல், மருந்து பொருட்கள், வெடிமருந்துகள் உட்பட ஏராளமான பொருட்கள் கடத்தப்பட்டு வந்தன. ஆனால் விடுதலைப் புலிகள் விமான பலம் பெற்றவுடன், தமிழக கடலோரப் பகுதிகளை கடலோரக் காவல் படையினரும், கடற்படையினரும் தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்த…
-
- 0 replies
- 2.2k views
-
-
கொடிகாமம் பொலீஸாரால் கடந்த 17ஆம் திகதி ஒப்படைக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் இதுவரை எவ ராலும் உரிமை கோரப்படாத நிலை யில் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ளது. உரித்துடையோரை ஐந்து நாள்களுக்குள் சடலத்தை பொறுப் பேற்குமாறு யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் கேட்டுள்ளார்
-
- 0 replies
- 1.4k views
-
-
மன்னார், வவுனியா மற்றும் முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் படையினருக் கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினமும் நேற்றும் இடம்பெற்ற மோதல்களில் 42 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இதன்போது தமது தரப்பில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஊடக மத் திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது
-
- 0 replies
- 1.6k views
-
-
வவுனியா மற்றும் முகமாலைப் பகுதி யில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளுக்கும், படையினருக்கும் இடையில் இடையிடையே மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன என்று படைத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. வவுனியா அலகெலுபொட்டுக்குளப்பகுதியி
-
- 0 replies
- 940 views
-
-
கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தலைநகர் கொழும்பிலும், சுற்றுப்புறங்களிலும் வகைதொகையின்றி ஆயிரக்கணக் கான தமிழர்களைக் கைதுசெய்து, பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய கொடுமைக்கு எதிராக நேற்று நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் பிரதான எதிர்க்கட்சி களான ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. ஆகியனவும் சேர்ந்து இந்த இனவெறிக் கைது நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்தன. ஆனால், இ.தொ.காங்கிரஸ் எம்.பிக்களும், முஸ்லிம் எம்.பிக்களும் நேற்றுக்காலை இவ்விவகாரம் நாடாளுமன்றில் எழுப்பப்பட்டபோது சபையில் பிரசன்னமாகாமல் இருந்ததன் மூலம் இவ்விடயத்தில் தங்கள் நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்தும் இக…
-
- 4 replies
- 1.9k views
-
-
வவுனியா அரச சார்பற்ற நிறுவனங்கள், தங்களது பாதுகாப்பை வலியுறுத்தி நாளை புதன்கிழமை (05.12.07) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த உள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 604 views
-
-
[Tuesday December 04 2007 06:17:21 AM GMT] [யாழினி] வீதிச் சோதனைச் சாவடிகள் சட்டத்திற்கு புறம்பானது என சிறீலங்கா உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொழும்பு கிருலப்பனைச் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்ட சிங்களவரான பி.எஸ்.றொற்றிகோவினால் தாக்கல் செய்ப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்திய உச்ச நீதிமன்ற பிரதம நீதியாளர் சரத் என் சில்வா இதனைத் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதியாளர்களான பிரதம நீதியாளர் சரத் என் சில்வா, நீதியாளர் ஸ்ரீராணி திலகவர்தன, நீதியாளர் ஜகத் பாலபட்டபெந்தி ஆகியோரால் இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கிருலப்பனையில் கடமையில் ஈடுபட்ட நான்கு சிறீலங்கா காவல்துறை அதிகாரிகள் தலா 75,000 ரூபாக்கள…
-
- 1 reply
- 923 views
-
-
சிங்களத்தின் கோழைத்தனமான வான்குண்டுத் தாக்குதலில் தாக்கியழிக்கப்பட்ட 'புலிகளின் குரல்" வானொலி நிலையத்தின் அழிவுகளின் படத்தொகுப்பு மேலதிகப் படங்கள்
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted on : 2007-12-04 தடுத்து நிறுத்த முடியாத நிலையில் தறிகெட்டு ஓடும் யுத்தத் தீவிரம் இன ஒடுக்கல் தீவிரத்திலும் யுத்த வெறி முனைப்பிலும் தாண்டவமாடும் "மஹிந்த சிந்தனை' அரசு நாட்டின் பொரு ளாதாரத்தைப் போருக்காகக் கொட்டியழிக்கின்ற கைங்கரி யத்தைக் கனகச்சிதமாக நிறைவுசெய்து வருகின்றது. 2006 இல் "மஹிந்த சிந்தனை' அரசின் முதலாவது வரவு, செலவுத்திட்டத்தின் கீழ் பாதுகாப்புச் செலவினத் துக்கு 9 ஆயிரத்து 600 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட் டது. ஆனால் வருட முடிவில் பாதுகாப்புச் செலவினம் 11 ஆயிரத்து நூறு கோடி ரூபாவைத் தாண்டியது. அதேபோல இந்த ஆண்டிற்கு எனக் கடந்த வருட இறுதியில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புச் செலவுக்காக 13 ஆயிரத்து 900 கோடி ரூபா ஒதுக்கீடு…
-
- 0 replies
- 874 views
-
-
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு,ப.தமிழ்ச்செல்வனின் படுகொலையால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை வழமைக்கு வந்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே புலிகளின் தலைவர் பிரபாகரன் பேசிய பேச்சால் காங்கிரஸ் தலைவர்களும் மத்திய அரசின் உளவுப் பிரிவும் கொதித்துப் போயுள்ளது. காங்கிரஸ் தலைவர்களையும் மத்திய அரசின் உளவுப் பிரிவையும் ஒரே நேரத்தில் உ~;ணமாக்கும் விதத்தில் பிரபாகரன் பேசியதுதான் என்ன? மத்திய அரசின் உளவுப் பிரிவான 'ரோ' அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசினார் அவர். 'தமிழ்ச்செல்வனின் படுகொலையைக் கண்டித்து முதல்வர் வெளியிட்ட இரங்கற் பா, அரசியல் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றால…
-
- 4 replies
- 2.4k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு, அனைத்துலக சமூகம், குறிப்பாக இந்தியா போன்றவை இலங்கையில் தோன்றியுள்ள மிகவும் மோசமான, தற்போதைய நிலமைக்கு தீர்வு காண்பதற்கு முன்வரவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 657 views
-
-
தமிழ் பேசும் எம்.பிக்களே! உங்களின் பிரதிபலிப்பு என்ன? [ உதயன் ] - [ Dec 03, 2007 05:00 GMT ] கண்ணில்படும் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் எல்லோரையும் விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேகநபர்களாக நோக்கும் தென்னிலங்கைப் பாதுகாப்புத்துறை உயர்மட்டத்தின் "அதிமேதாவித்தனத்தினால்' தெற்கில் குறிப்பாக மேற்கு மாகாணத்தில் தமிழர்களின் வாழ்வு பெரும் அச்சத்துக்குள்ளும் அவலத்துக்குள்ளும் மூழ்கிக் கிடக்கின்றது. ஹிட்லர் யூதர்களை நாசிவதை முகாம்களுக்கு அள்ளிச் சென்ற மாதிரி தென்னிலங்கையில் தமிழருக்கு குறிப்பாகத் தமிழ் இளம் சமுதாயத்துக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு மேலிடத்து ஆசியோடும், வழிகாட்டலோடும் முழு மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றது. தலைநகர் கொழும்பிலும் அதை அண்டிய பிரதேசங…
-
- 1 reply
- 1.4k views
-
-
http://www.dinakaran.com/dncgibin/kungumam...=2007/nov/29/97
-
- 2 replies
- 2.5k views
-
-
ராமேஸ்வரம் மீனவர்களை அடித்து இழுத்து சென்றது இலங்கை கடற்படை ராமேஸ்வரம் : இலங்கை கடற்பகுதிக்குள் தவறுதலாக மீன்பிடித்துக்கொண்டிருந்த 5 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர். பாம்பன் அருகேயுள்ள தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் அளித்த தகவலின் படி, ராமேஸ்வரம் தலைமன்னாருக்கிடையே 15 வது மணற்திட்டை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 5 மீனவர்களை, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வானத்தில் துப்பாக்கியால் சுட்டும், பின்னர் அவர்களை அடித்து இழுத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர். http://www.dinamalar.com/
-
- 2 replies
- 1.9k views
-
-
திங்கள் 03-12-2007 19:48 மணி தமிழீழம் [தாயகன்] புலிகளின் குரல் தாக்கப்பட்டதற்கு யுனெஸ்கோ கண்டனம் புலிகளின்குரல் வானொலி சிறீலங்கா வான் படையினரால் குண்டுவீசி தாக்கப்பட்டதற்கு யுனெஸ்கோ அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகக் கரைத்துரைத்த யுனெஸ்கோ அமைப்பின் இயக்குனர் கொயிச்சீரோ மட்சூறா, பொதுமக்கள் மீதான சிறீலங்காப் படையினரின் தாக்குதலை மன்னிக்க முடியாது எனவும், புலிகளின்குரல் வானொலி மீதான தாக்குதலையும், அதன் பணியாளர்கள் கொல்லப்பட்டதையும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 8 replies
- 2.7k views
-
-
வெளிநாடு செல்வதற்கு முன் கோர்ட்டில் முன் அனுமதி பெற வேண்டும் என ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோவுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. அண்மையில், போலீசார் தடையையும் மீறி சுப.தமிழ்செல்வன் இரங்கல் பேரணியில் வைகோ கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். இந்நிலையில், பூந்தமல்லி கோர்ட், அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க கூறியது. இது தொடர்பான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் முருகேசன் மற்றும் கருப்பையா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், வைகோ கோர்ட்டில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தேவையில்லை என்றும், ஆனால், வெளிநாடு செல்வதற்கு முன் பூந்தமல்லி கோர்ட்டில் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நிபந்தனை …
-
- 1 reply
- 2.7k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் 20 உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளனர் என்று சிறிலங்காவின் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
மட்டு., அம்பாறையில் விரைவில் சிங்களப் பிரதேச செயலகங்கள் [03 - December - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- கிழக்கு மாகாணத்தில் புதிதாக சிங்கள பிரதேச செயலகங்களை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க சிங்கள பிரதேச செயலகங்களை புதிதாக உருவாக்குவதில் தீவிரமாகச் செயற்படுவதாக கிழக்கு மாகாணத்தின் சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலை (தொப்பிகல) மங்களகம மற்றும் சில பகுதிகளை அம்பாறை மாவட்டத்துடன் இணைத்து புதிய சிங்களப் பிரதேச செயலகத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்திலும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சில பகுதிகளை தீகவாவியில் இணைத்து மற்று…
-
- 2 replies
- 1.6k views
-
-
குடாநாட்டு கடற்பரப்பில் இராணுவமும் கடற்படையும் தீவிர போர்ப் பயிற்சி [03 - December - 2007] யாழ். குடா நாட்டு கடற்பரப்பில் கடற்படையினரும் இராணுவத்தினரும் இணைந்து யுத்தப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் பண்ணை, அராலி மற்றும் காரைநகர் கடற்பகுதியிலேயே நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வரை இப்பயிற்சி இடம்பெற்றது. இதனால், இப்பகுதியில் பெரும் குண்டு சத்தங்கள் கேட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, வல்வெட்டித்துறை, தொண்டமானாறு மற்றும் காங்கேசன்துறை கடற் பிரதேசத்திலும் கடற்படையினர் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். விடுதலைப் புலிகள் இப்பிரதேசத்திற்குள் ஊடுருவுவதைத் தடுக்கும் முயற்சியாகவே இப்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டினருகே வெடிகுண்டு மீட்பு வீரகேசரி இணையம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் அவர்களின் கெப்பிட்டிபொல பகுதியிலுள்ள வீட்டு வளாகத்திலிருந்து வெடிகுண்டொன்றை படையினர் இன்று காலை மீட்டனர். இந்த வெடிகுண்டு தொடர்பில் இராணுவ தலைமையகததிற்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து கெப்பிட்டிபொலயிலுள்ள 44ஆம் இலக்க வீட்டை சோதனைக்குட்படுத்தியபோது, இந்த கண்டு மீட்கப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு சுமார் ஒன்றைரை கிலோ கிராம் எடையுடையது எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயககார மேலும்…
-
- 13 replies
- 2.8k views
-
-
யாழ். நகரப் பகுதியில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த கடைத் தொகுதியில் அமைந்திருந்த நகைக்கடை ஒன்றும், மின்சார உபகரணங்கள் விற்பனை நிலையம் ஒன்றுமாக இரண்டு வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. நிசானந்தா நகைக்கடை மணியம் இன்பெக்ஸ் ஆகிய கடைகளே தீயி னால் முற்றாக எரிந்து சாம்பராகின. இதனால் இரு வர்த்தக நிலையங்களிலும் சுமார் ஒன்றரைக் கோடி ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 2 மணியள வில் தீ விபத்து ஏற்பட்டதெனவும் தீயை அணைக்க யாழ். மாநகர சபையின் தீய ணைப்புப் பிரிவு வாகனங்கள் வராத நிலையில் மாநகர சபையின் தண்ணீர் பவுசர் ஒன்றின் உதவியுடன் அயலில் உள்ள வர்த்தக நிலையங் களைச் சேர்ந்தவர்களும் படையின ரும் தீயை அணைத்தனர் என்று அறிய வந்தது. க…
-
- 0 replies
- 1.7k views
-
-
தீவிரவாதத் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அரசு மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அனைவரும் அனைத்துத் தியாகங்களையும் செய்யவேண்டும்.'' இவ்வாறு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான ெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் படையினர் மேற்கொண்டு வரும் சோதனை நடவடிக்கைகள் குறித்து அவர் பி.பி.ஸியின் சிங்கள சேவைக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு: இப்போது நாட்டிலுள்ள நிலைமை வழமையான ஒரு நிலைமை அல்ல. அரச படைகள் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும் தனிநபருக்கோ அல்லது ஒரு ுழுவினருக்கோ எதிரான நடவடிக்கை அல்ல. ஆனால், மறுபுறத்தில் இது…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையில் குறிப்பாகக் கொழும்பில் தமிழ் பேசும் மக்கள் சட்டரீதியான காரணம் ஏதுமின்றி, வகை தொகையில்லாமல் கைதுசெய்யப்படுவதால் எழுந்துள்ள பதற்ற நிலைமை குறித்து கொழும்பில் உள்ள இந்தியத்தூதரகம் புதுடில்லியின் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றது. இந்த நெருக்கடி மற்றும் மோசமான நிலைமை குறித்து மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்று வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ஐ.நா. போன்ற அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். கொழும்புக்கான இந்தியத் தூதுவர் அலோக பிரசாத் இந்தியா சென்றிருப்பதால் மனோ கணேசன் எம்.பி. கொழும்புக்கான பிரதி இந்தியத் தூதுவர் மாணிக்கத்துடன் இவ்விடயம் குறித்து உரையாடினார் எனத் தெரிகின்றது.…
-
- 4 replies
- 2.2k views
-