ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
தடுமாறும் தமிழக அரசியல் தலைமை -எம்.காசிநாதன்- விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு கவிதை வடிவில் `இரங்கல் பா' வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி. இதனால் தமிழக அரசியலில் மீண்டும் ராஜீவ் கொலை விவகாரம் சூடுபிடித்துள்ளது. ஒரு முதல்வர், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவருக்கு இரங்கல் கவிதை இயற்றுவது அரசியல் சட்ட விரோதம் என்று பரபரப்பு அறிக்கையைக் கொடுத்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் முதல்வர் கருணா நிதியோ, `என் உடம்பில் தமிழ் இரத்தம் ஓடுகிறது. அதனால் இரங்கல் கவிதை கொடுத்தேன்' என்று பதிலடி கொடுத்தார். மீண்டும் அதையும் காட்டமாக விமர்சித்துள்ள ஜெயலலிதா, `என் உடம்பில் ஓடுவதும் தமிழ் இரத்தமே' என்ற ரீதியில் அறிக்கை கொடுத்து, `…
-
- 1 reply
- 1.7k views
-
-
பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான இரு வீரவணக்கக் கூட்டங்கள் தமிழகத்தின் மதுரையில் நாளை நடைபெற உள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 912 views
-
-
அம்பாந்தோட்டை யால காட்டுப்பகுதியில் நேற்று இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.8k views
-
-
முகமாலையில் வைக்கப்பட்ட பொறி -அருஸ் (வேல்ஸ்)- விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவு உலகத் தமிழினத்தை ஓர் அணியில் கொண்டு வந்து விட்டிருக்கிறது. தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலை அமைதி வழிக்கும், அரசியல் தீர்வுக்கும் வீழ்ந்த அடியாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர். அதனை மறுக்கவும் முடியாது. ஏனெனில் தாக்குதலுக்கு உள்ளாகிய இடம் அரசியல் போராளிகளின் செயற்பாடுகள் நடைபெறும் பகுதி. முழுக்க முழுக்க அரசியல் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயமே மிக்-27 ரக விமானத்தின் குண்டுவீச்சுக்கு அவர் இலக்காகி உள்ளார். போரின் உக்கிரம் உணர்ந்து பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் பூநகரி பகுதிக்கான கட்டளைத்தளபதி பொறுப்பை ஏற்றுக்கொண்ட போதும், தனது அரச…
-
- 0 replies
- 2.4k views
-
-
தமிழகத்தில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் வீரவணக்கக்கூடடங்களின் காணொளிகள் http://www.nakkheeeran.com/Othervideos.aspx
-
- 7 replies
- 3.9k views
-
-
"இந்திய அரசே! இனப்படுகொலை செய்கிற சிங்கள அரசுக்கு ஆயுதங்களைக் கொடுக்காதே" என்ற குரலை தமிழகம் எங்கும் ஒலிக்கச் செய்ய முனைப்போடு பணியாற்றுவோம் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 749 views
-
-
தமிழர்களின் இதயங்களை வென்றவர் தமிழ்ச்செல்வன்: கருணாநிதி சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன், இலங்கை விமானப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் காணப்படுபவர் தமிழ்ச்செல்வன். சவால்களை உறுதியான உள்ளத்தோடு சந்திப்பவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தமிழர்களின் உரிமைக்காகப் போராடியவர். தமிழர்களின் இதயங்களை வென்றவர் தமிழ்ச்செல்வன் என்று கூறியுள்ளார். thatstamil.com
-
- 18 replies
- 8.2k views
-
-
சிலருடைய புன்னகை மறக்க முடியாதது. மறைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் பிரிகேடியர் எஸ்.பி.தமிழ்ச்செல்வனின் புன்னகையும் அப்படிப்பட்டதுதான். வெளிப்பூச்சுக்காக சிரிக்கும் செயற்கைச் சிரிப்புக்கும் மனதிலிருந்து வெளிப்படும் வெண்மையான புன்னகைக்கும் வித்தியாசம் உண்டு. விடுதலைப் புலிகள் இயக்கம் ரத்தத்திலும் சாவிலும் சாம்பலிலும் அன்றாடம் இயங்கிக் கொண்டிருக்கும் அமைப்பு. ஏதேனும் ஒரு கட்டத்தில் சமாதானத்தையும் அமைதியையும் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால் அதன் கடுமையான மிலிட்டரி யூனிஃபார்மை மீறிய ஒரு அன்றலர்ந்த முகம் வேண்டும். அந்த முகம் எதிரே பேசுபவருக்கு நம்பிக்கையையும் தோழமையையும் கொடுக்க வேண்டும். உலகத்தின் பார்வைக்கு அந்த முகம் அவர்களின் பக்க நியாயங்களை சாமர்த்தியமாக எடுத்…
-
- 1 reply
- 2.3k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழகத்தின் வேலூரில் நடத்தப்பட இருந்த வீரவணக்க கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் கொடும்பாவியை விடுதலைச் சிறுத்தைகள் கொளுத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
உன் கனவு நனவாகும்... அதுவரை தூங்காமல் இரு!" "உங்களால் இப்போது ஆயுதம் ஏந்திப் போராட முடியுமா?" "போராடாமல் புலியாக இருக்க முடியாது. மரணம் வராது என்கிற உத்திரவாதத்தோடு எந்த ஈழத் தமிழனும் போராட வருவதில்லை; வரவும் மாட்டார்கள்!" இதயத்துக்கு நெருக்கமான தனது இரண்டு கரங்களையும் அடுத்தடுத்து இழந்த துயரத்தில் தவிக்கிறது இயக்கம். அண்ணன் ஆன்டனும் இல்லை; தம்பி தமிழும் இப்போது இல்லை! இருபது ஆண்டுகளாக ஈழத் தமிழ் விடுதலைப் போராட்டத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட, 'டி.எஸ்.அண்ணா' என ஈழ மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட தமிழ்ச்செல்வன், இலங்கை ராணுவத்-தின் குண்டுவீச்சில் மரணமடைந்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவரான சுப.தமிழ…
-
- 1 reply
- 1.8k views
-
-
தமிழ்ச்செல்வனின் படுகொலையும் தமிழகத்தின் உணர்வலையும் [11 - November - 2007] -தாயகன்- விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சினால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் எழுந்துள்ள உணர்வலைகள் ஈழத்தமிழர் ஆதரவின் கனப்பரிமாணத்தையும் அவர்கள் விடுதலை பெறவேண்டியதன் அவசியத்தையும் நன்கு வெளிப்படுத்தியுள்ளன. கடந்த 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்திற்கு மிக அருகாக இலங்கை விமானப்படை குண்டு வீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரும் இலங்கை அரசுடனான சமாதான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான தமிழ்…
-
- 1 reply
- 1.1k views
-
-
படையினரின் இலக்கு பளையா? பூநகரியா? [11 - November - 2007] -விதுரன்- வடக்கில் பாரிய வெற்றியொன்றைப் பெற்றுவிட அரசு துடிக்கிறது. வன்னியில் இது உடனடியாகச் சாத்தியப்படாதென்றநிலையில் யாழ். குடாநாட்டிலாவது இந்த வெற்றியை பெற்றுவிட முடியுமா என அரசு முனைந்து பார்க்கிறது. ஆனாலும், கள நிலை இதற்கு சாதகமற்றிருப்பதை ஒவ்வொரு தாக்குதலிலும் அரசும் படைத்தரப்பும் உணர்கின்றன. வடக்கில் புலிகளின் பலமறியாது அரசு, அவசர வெற்றிகளுக்காக படைகளை நகர்த்துகிறது. வன்னியில் முன்னரங்க காவல் நிலைகளிலும் சரி யாழ். குடாநாட்டில் கிளாலி - முகமாலை - நாகர்கோவிலிலும் சரி ஒவ்வொரு பாரிய படைநகர்வும் படையினருக்கு பெருந்தோல்வியாகவே முடிவடைகிறது. வன்னியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, வவுனிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
விமானத்தில் வந்த இலங்கை பெண் மரணம் [11 - November - 2007] லெபனானிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை லெபனான் நாட்டிலிருந்து விமானத்தில் வந்த இலங்கை பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக விமானி இதுபற்றி விமானநிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பெண்ணின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. http://www.thinakkural.com/news/2007/11/11...s_page40034.htm
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் ஊர்வலத்திற்குச் சென்னை மாநகர ஆணையாளர் தடைவிதித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தமிழக அரசின் மனித நேயமற்றப் போக்கினையும் தமிழர் விரோதப் போக்கினையும் எடுத்துக்காட்டுகிறது. என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். நன்றி : sankathi.com
-
- 2 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பில் ஆயுதக் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகலைத் தொடர்ந்து அங்குள்ள தமது பணியாளர்களின் நடமாட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 905 views
-
-
ஞாயிறு 11-11-2007 02:26 மணி தமிழீழம் [செந்தமிழ்] இந்திய நிதியமைச்சர் சிறீலங்கா விஜயம் இந்திய நிதிஅமைச்சர் பி.சிதம்பரம் அவர்கள் நாளை சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரியவருகிறது. இவர் சிறீலங்கா ஐனாதிபதி மகிந்தராஜபக்ஸ அவர்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது. பதிவு
-
- 4 replies
- 1.3k views
-
-
ஜே.வி.பி.யை உடைத்து அதில் ஒரு பிரிவினரின் வாக்குகளின் மூலம் தமது வரவு-செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்காவிற்கான அபிவிருத்தி உதவிகளை உறைநிலையில் வைப்பதற்கு கனடா, நெதர்லாந்து, ஜேர்மனி போன்ற நாடுகள் முடிவு செய்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
சனி 10-11-2007 20:58 மணி தமிழீழம் [மயூரன்] மண்டேலாவின் பண்புகள் போல் சு.ப.தமிழ்ச்செல்வன் செயற்பட்டார் - அவுஸ்ரேலிய மருத்துவர் நெல்சன் மண்டேலாவின் பண்புகளை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொண்டிருந்ததாக அவுஸ்திரேலிய மருத்துவர் புகழாரம் சூட்டியுள்ளார். பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டிருக்கும் அவுஸ்திரேலிய மருத்துவர் (John Whitehall) ஜோன் வைற்ஹோல் காழ்ப்புணர்வும், வெறுப்புணர்வும், இன்றி அனைத்து மக்களின் நலன்களிலும் விருப்பத்துடனும், பற்றுறுதியுடனும், நெல்சன் மண்டேலாவைப் போன்ற பண்புகளுடன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் செயறப்பட்டதாக கூறியுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு வன்னிக்கு பயணம் செய்த மருத்துவர்…
-
- 2 replies
- 1.2k views
-
-
அமைதிப் பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்து நோர்வேக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடிதம் அனுப்பியுள்ளதாக சிங்கள வார ஏடான "லங்காதீப" செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதாகக் கருதப்படும் தென்னிலங்கை சிங்கள கிராம மக்களுக்கு ஆயுதங்களை வழங்க சிறிலங்கா காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.7k views
-
-
பிரித்தானிய சிறையில் அடைக்கப்பட்ட கருணா: ஈழத் தமிழர் ஒருவரால் தாக்கப்பட்டான் சிறீலங்கா துணை இராணுவக் குழு ஒன்றுக்குத் தலைமைதாக்கும் ஆயுததாரி கருணா ஈழத் தமிழர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று இலண்டனில் கைது பிரித்தானியக் குடிவரவுத் தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள ஆயுததாரி கருணா அங்கு தடுத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கேம்பிறிச் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட கருணா தற்போது வேறு தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது http://www.pathivu.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பு (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 நவம்பர் 2007 ( 11:23 ) இலங்கை அரசு அளித்த தகவலின்படி, தமிழக கடலோரப் பகுதிகளில் விடுதலைப்புலிகளுக்கு உதவும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இந்தியா உறுதியளித்துள்ளது. இலங்கை பிரதமர் விகரமனாயகே கடந்த வாரத்தில்இ விடுதலைப்புலிகளுக்கு உதவும் வகையிலான நடவடிக்கைகளில் தென் இந்திய கடலோரப்பகுதியில் சில ஈடுபட்டு வருவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில்இ இலங்கை பிரதமரின் குற்றச்சாட்டு குறித்து இந்திய தூதர் தினகர் அஸ்தானா பேட்டியளித்துள்ளார். அதில், இதுபோன்ற தகவல்கள் தங்களுக்கு வரவில்லை என்றும், எனினும் இலங்கை அரசு அளித்துள்ள தகவலின்படி, இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் …
-
- 1 reply
- 2.2k views
-
-
முகமாலையில் புதனன்று படையினருக்கு பேரிழப்பு முகமாலையில் கடந்த புதனன்று அரசுப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் படைகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்ட தாகவும், விடயம் மறைக்கப்பட்டு விட்டதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு உறுப்பினரும் எம்.பியுமான சிறிபதி சூரியாராய்ச்சி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் சமரில் 68 படையினர் உயிரிழந்தனர்; 60 படையினர் காணாமற் போயினர்; இருநூறு படையினர் வரை காயமடைந்தனர். இரண்டு கவச வாகனங்களைப் புலிகள் கைப்பற்றித் தம்முடன் கொண்டு சென்றனர். இப்படி சிறிபதி சூரியாராய்ச்சி நாடாளுமன்றில் நேற்றுத் தெரிவித்தார். (சி) உதயன்.கொம் ----- நெருப்பில்லாமல் புகையாது...??! …
-
- 21 replies
- 5.9k views
-
-
[சனிக்கிழமை, 10 நவம்பர் 2007, 06:40 PM ஈழம்] [புதினம் நிருபர்] பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு ஆனந்த விகடன் வார இதழ் (14.11.07) வெளியிட்டுள்ள கார்ட்டூன்: http://www.puthinam.com/full.php?22YUmb200...d44UXC2b02COA3e
-
- 4 replies
- 3.1k views
-