ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143549 topics in this forum
-
கனடா அரசாங்கம் இலங்கைப்பிரச்சனையில் முக்கிய பங்கினை வகித்து பிரச்சனையினைத் தீர்க்க வேண்டும் என கனடாவின் எதிர்க்கட்சியான லிபரல் கட்சி கேட்டுள்ளது. For Immediate Release November 21, 2007 Canada Needs To Take Active Role in Sri Lanka OTTAWA - The Harper government needs to express a stronger position on the need for a peaceful solution to the humanitarian crisis in Sri Lanka, Liberal Foreign Affairs Critic Bob Rae said today. "It is clear that the ceasefire has fallen apart. It is equally clear that there is no military solution to the underlying causes of the conflict," said Mr. Rae. United Nations Human Rights Commissioner Louise Arbour has …
-
- 3 replies
- 1.9k views
-
-
'வடக்கு கிழக்கில் தமிழ்மக்களை கொன்று குவித்த பெருமைக்கான விருதை வாங்கவதற்காகவா ஜனாதிபதி உகண்டா செல்கின்றார்?' த.தே.கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு சபையில் கேள்வி எழுப்பினார். வரவு செவவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிவாஜிலிங்கம் இப்படிக் கேட்டடார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :- கந்த 18 மாதங்களாக ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் யானை விலை, குதிரை விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் எமது மக்கள் பசி, பட்டினியால் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் அசர படைகள் கிபீர் விமானங்கள் மூலம் நேரகாலம் இன்றி இரவு பகலாக தமி…
-
- 3 replies
- 2k views
-
-
'இதுவோர் இனவாதப் பாரளுமன்றம், பிரதி சபாநாயகரும் ஒரு இனவாதி' எனவே அவர் உடனடியாக இச் சபையை விட்டு வெளியெற வேண்டும் என கூறியவாறு த.தே.கூட்டமைப்பு எம்.பி. சிவாஜிலிங்கம் பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்தனவை நோக்கி ஓடியதால் சபா மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்றில் நேற்று புதன் கிழமை வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூல குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு சிவாஜிலிங்கம் ஆக்ரோஷமாய் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் உரையாற்றிய போது அமைச்சர்கள் டக்ளஸ், ஜெயராஜ் பெர்ணன்டோபுள்ளே ஆகியோர் குறுக்கீடு செய்தனர். அச்சமயம் மத்தும பண்டார எம்.பி சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். இந்நிலலையில் சபைக்கு தலைமை தாங்க பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்த்தனா வந்தார். …
-
- 1 reply
- 2.5k views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை தடை செய்வதற்கு அமைச்சரைவை நேற்று முடிவு செய்திருக்கிறது. நேற்று இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக நம்பகரமாக அறிய வந்துள்ளது. இதில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை இலங்கையிலும் தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் ரோஹித பிரேரித்த யோசனையை ஏற்றுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டதாக நம்பகரமாக அறிய வந்தது. இலங்கை அரசு தன்னோடு தொடர்புடைய ஏனைய நாடுகளையும் அந்தந்த நாடுகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இலங்கையில் இயங்கும் ஏனைய அரச சார்பற்ற அமைப்புகளையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் தொடர்புகளை வைத்திருக்க வேண்டாம் என்று க…
-
- 10 replies
- 2.9k views
-
-
சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் அவசியம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்படும் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொள்ளும் சித்திரவதைக் கொடூரங்கள் குறித்து மட்டக்களப்பு தமிழ் அரசியல் கைதி ஜெயக்குமார் அம்பலப்படுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.8k views
-
-
கடந்த ஓராண்டுக் காலத்தில்......! -சபேசன் (அவுஸ்திரேலியா) தமிழீழத்தின் தேசியத் திருநாளான மாவீரர் தினம் நெருங்கி வருகி;ன்ற இவ்வேளையில், அத்தினத்தை உணர்வுபூர்வமாகக் கொண்டாடி, வணங்கி மாவீரர்களைப் போற்றுகின்ற செயற்பாடுகளைத் தமிழீழ மக்களும், புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களும் மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழீழத் தேசியத் தலைவர், கடந்த ஆண்டு தன்னுடைய மாவீரர் நாள் பேருரையின்போது, 'சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்து வைத்திருக்க்pன்றது. எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென்று, இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கின்றோம்" என்று தெரிவித்திருந்தார். தமிழீழத…
-
- 0 replies
- 939 views
-
-
இதுதான் ராஜீவ் விருப்பம்! - உருகும் வீரமணி ‘விடுதலைப்புலி இயக்கத்தால் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். தடை செய்யப்பட்டுள்ள அந்த இயக்கத்தை எந்தவகையில் புகழ்ந்து பேசினாலும் அது காங்கிரஸாரின் உணர்வுகளை புண்படுத்துவதாகவே அமையும். அந்த இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்...’ காங்கிரஸ் தலைவி சோனியா தலைமையில், கடந்த 17&ம் தேதி டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இப்படி ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இது, தி.மு.க. தலைமைக்கு மறை முகமாக சோனியா விடுத் திருக்கும் எச்சரிக்கை என்றுஅரசியல் நோக்கர்கள் அர்த்தம் சொல்கிறார்கள். இவ்விவகாரத்தில் தி.மு.க. மௌ…
-
- 0 replies
- 1.4k views
-
-
மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ளது. மாவீரர் வாரத்தினையொட்டி வன்னியில் விஷேட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வீதிகளில் அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளன. வீதிகள் எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாவீரர் வாரத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலும் சில இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மாவீரர் வார இறுதி நாளான 27 ஆம் திகதி மாலை விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் தின உரையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.net/
-
- 2 replies
- 1.8k views
-
-
பட்ஜெட்டை தோற்கடிக்கும் பிரபா - ரணில் உடன்படிக்கையை பகிரங்கப்படுத்துவோம் - அரசாங்கம் அறிவிப்பு வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனை நாளைய தினம் நாட்டுக்கு நாம் பகிரங்கப்படுத்துவோம் என்று மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அரசு தரப்பிலுள்ளவர்களை பேரம் பேசலின் மூலம் எதிர்த்தரப்பில் அமரச்செய்வதற்கு கனடாவிலிருந்து தமிழர் ஒருவர் கொழும்புக்கு வந்திருந்தார். ஹில்டன் ஹோட்டலில் பல அறைகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்ட அந்நபர், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
பொதுமக்கள் சிறீலங்காவில் இலக்கு வைக்கப்படுகிறார்கள் - ஐக்கிய நாடுகள் சபை சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் இன முரண்பாடுகளின் விளைவாக பொதுமக்களே இலக்கு வைக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் ஜோன் ஹோம்ஸ் அவர்கள் பொதுமக்கள் சிறீலங்காவில் ஆபத்தை எதிர்கொள்வதாகவும் கடத்தல்கள், வன்முறைகள், பணத்துக்காக கொலைகள். எழுந்தமானமாக ஆட்களை தெரிவுசெய்து கொல்லுதல் போன்றன இடம் பெறுவதாகவும் கூறியுள்ளார் http://www.tamilwin.net/
-
- 0 replies
- 708 views
-
-
ஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள். அண்மையில் தமது பகுதிகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே தாம் இவ்வாறு மீண்டும் இடம்பெயர நேர்ந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர். ஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்களை மீண்டும் முகாம்களில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவை குறித்து இடம்பெயர்ந்த சிலரது கருத்துக்கள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதிய…
-
- 0 replies
- 792 views
-
-
சிறிலங்காவின் சுற்றுலாத்துறை வருவாயானது 20 விழுக்காடு இந்த ஆண்டு வீழ்ச்சியடைந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1k views
-
-
">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 3k views
-
-
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அன்னை, திலீபன் அண்ணா உள்ளிட்ட பல மாவீரர்களை தமிழீழத் தாயக விடுதலைக்காக பெற்றெடுத்தவள். இன்று அன்னையின் மடியினில் அவளின் புதல்வர்களுக்குக்கும் ஏனைய மாவீரச் செல்வங்களுக்கும் வீர அஞ்சலி செய்யும் வகையில் மாவீரர் வார நிகழ்வுகள் 1000 க்கும் மேற்பட்ட சிங்களப் படையினர் கல்லூரி வளாகத்தை சுற்றிவளைத்து நிற்க ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ் இந்து அன்னையின் புதல்வன் திலீபன் அண்ணாவின் நினைவு ஸ்தூபி சிங்கள இராணுவ எடுபிடிகளால் உடைத்து நாசம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மாவீரர் நினைவு ஸ்தூபி..! http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2& படம் தொடர்பான …
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்காவில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட மகிந்த ரட்ணதிலக்கவுக்கு அமைச்சரவை அந்தஸ்தில்லாத புடவைக் ககைத்தொழில் அபிவிருத்தி அமைச்சுப் பதவி இன்று வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 977 views
-
-
புதன் 21-11-2007 17:26 மணி தமிழீழம் [தாயகன்] தம்பனையில் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு மன்னார் - வவுனியா எல்லையிலுள்ள தம்பனையில் இன்று காலை 8.00 மணியவில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத படையினர் பின்வாங்கிச் சென்றதாக தமிழீழ படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார். இன்றைய மோதலில் சிறீலங்காப் படையினருக்கு ஏற்பட்ட இழப்பு இதுவரை தெரிய வரவில்லை. http://www.pathivu.com/
-
- 2 replies
- 1.9k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரின் தொடர்ச்சியான எறிகணை வீச்சுத் தாக்குதல்களால் மன்னாரில் 22,332 பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 729 views
-
-
புதன் 21-11-2007 15:55 மணி தமிழீழம் [தாயகன்] பிரித்தானியாவில் தஞ்சம்கோருவோர் வரிசையில் முதல் 10 நாடுகளுக்குள் சிறீலங்கா பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோருவோர் வரிசையிலுள்ள முதல் பத்து நாடுகளுக்குள் சிறீலங்காவும் உள்ளடங்குவதாக உள்துறை அலுவலகம் (UK Home Office) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள மூன்றாம் காலாண்டிற்குரிய அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் காலாண்டுடன் ஒப்பிடும்போது மூன்றாம் காலாண்டில் சிறீலங்காவிருந்து அகதி அந்தஸ்து கோருவோர் எண்ணிக்கை ஒரு வீத்தத்தால் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 245 இலங்கையர்கள் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ளமை குறிப்பி…
-
- 0 replies
- 893 views
-
-
இலங்கையின் கிழக்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளியேற வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுக்களின் ஒன்றான பிள்ளையான் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 928 views
-
-
முறையிட இடமில்லை. 20.11.2007 / நிருபர் எல்லாளன் .தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு - குறிப்பாக மட்டு - அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கு மகிந்த ராஜபக்சவின் வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும் அன்றேல் நீங்கள் அல்லது உங்கள் உறவினர்கள் படுகொலை செய்யப்படுவீர்கள் என ஒட்டுக்குழுவினரால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிழக்கில் வழங்கப்பட்டிருந்த காவல்துறைப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டமையும் அவர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலும் அதற்கான காரணம் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தலும் இதன் பின்னணியில் மகிந்த ராஜபக்சதரப்பு இருப்பதை உறுதிசெய்யப்போதுமானதாகும். …
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வெற்றியைப் பெற்ற போதும் அந்நாட்டின் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை ஆட்சியாளரின் நீண்ட கால சுலோகத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருக்கும் அமெரிக்கா [21 - November - 2007] * பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும்ஆட்டிவிடும் கைங்கரியத்தை வாஷிங்டனும் டில்லியும் தொடரக் கூடாதென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு வ.திருநாவுக்கரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) நிதி முடக்கி வைக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது விடுதலைப்புலிகளுக்கு எதிரானதே ஒழிய தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என அமெரிக்க அரசாங்கம் 16.11.2007 ஆம் திகதி தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டுவதற்கும் ஆயுதக் கொள்வனவு செய்வதற்கும் TRO முகவர் நிலையமாகச் செயற்பட்டு வருகிறதென்பதே நிதி முடக்கத்திற்கான காரணமெனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்க நிர்வாகத்தின் 13224…
-
- 0 replies
- 1.6k views
-
-
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார் வீரகேசரி இணையம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உகண்டாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் பங்குபற்றுவதற்க்காக நேற்று செவ்வாய்க்கிழமை பயணமாகியுள்ளார். உகண்டாவில் கம்பனா நகரில் நவம்பர் 23ம் திகதி முதல் 25ம் திகதி வரை இம்மாநாடு இடம் பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளிக்கிழமை அம்பனா செரினா மாநாட்டு நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
-
- 0 replies
- 900 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் தென்பகுதியில் உள்ள இரத்மலானையில் அமைந்துள்ள "சண்டே லீடர்" மற்றும் "மோர்ணிங் லீடர்" ஆகிய வார ஏடுகளின் அச்சகம் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் எரித்துச் சாம்பராக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 2.4k views
-