ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143315 topics in this forum
-
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி மரணம்.. வீரகேசரி இணையத்தளம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இளைஞ்சரொருவர் மின்சாரம் தாக்கி இறந்துளார் .நேற்று இரவு 7.30 மணியளவில் மின்சாரம் தாக்கியதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பாட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.முறையற்ற விதத்தில் தயாரிக்கப்பட்ட மின்சார உபகரணத்தை பயன்படுத்திய வேளை உயிரிழந்த இளைஞர் குடிவரவு குடியகழ்வு சட்டத்தைனை மீறியமைக்காக நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார பிரேத பரிசோதனைகள் இன்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளன...
-
- 0 replies
- 850 views
-
-
புலிகளின் தாக்குதல் திட்டத்தை குழப்ப முனையும் படையினர் -விதுரன்- வன்னியில் கடந்த இரு வாரங்களாக கடும் சமர் நடைபெற்று வருகிறது. வவுனியா - மன்னார் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளுக்கப்பால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைய படையினர் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் கடுமையான பதில் தாக்குதல் அந்த முயற்சிகளை முறியடித்து வருகின்றது. வடக்கில் பருவமழை பொழியத் தொடங்கிவிட்டது. மழை வீழ்ச்சி கடுமையாக இல்லாத போதும் ஆங்காங்கே பரவலாக ஓரளவு மழை பெய்து வருகிறது. கடும் மழை பொழிய முன்னர் வவுனியா மற்றும் மன்னாரில் விடுதலைப் புலிகளின் பகுதிகளினுள் முடிந்தவரை நுழைந்துவிட படைத்தரப்பு முயலுகின்றது. எனினும் அது சாத்தியப்படுவதாகத் தெரியவ…
-
- 2 replies
- 2.4k views
-
-
கண்காணிப்புக் குழு நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் - தேசிய பிக்குகள் முன்னணி போர் நிறுத்த உடன்படிக்கையை கிழித்து எறிந்துவிட்டு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு தேசிய பிக்குகள் முன்னணி கோத்தபாய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். விபரங்களுக்கு
-
- 2 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி அன்புச்சோலை மூதாளர் பேணலகத்தில் மூதாளர் மதிப்பளிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....6358eb576b8912c
-
- 0 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு ஆலங்குளத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகளைக் கட்ட சிறிலங்கா இராணுவம் தடை விதித்துள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 798 views
-
-
செய்தியாளர்கள் வலுக்கட்டாயமாக சிறிலங்கா இராணுவத்தால் கூட்டிச் செல்லப்பட்டனர் Written by Seran - Oct 05, 2007 at 03:08 PM செய்தி சேகரிப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு நேற்று வியாழக்கிழமை சென்ற பி.பி.சி. செய்தியாளர்கள் மூவர் படையினரால் வலுக்கட்டாயமாக இராணுவ முகாமுக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் தற்போதைய கள நிலைமைகள் தொடர்பாக செய்திசேகரிக்கச் சென்ற பி.பி.சி.யின் மூன்று பெண் செய்தியாளர்களே நேற்று மாலை யாழ் நகரில் அவர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து படையினரால் கூட்டிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குடாநாட்டு நிலைமைகளை சுதந்திரமாக நேரில் அறிந்து கொள்ளவே தாங்கள் அங்கு வந்ததாகவும் தங்களை அந்த விடுதியிலேயே தங்க அனுமதிக்குமாறு …
-
- 3 replies
- 1.8k views
-
-
திங்கள் 08-10-2007 17:11 மணி தமிழீழம் [சிறீதரன்] மிருசுவில் காவலரண் மீது தாக்குதல்: படைச் சிப்பாய் பலி! தென்மராட்சி மிருசுவில் பகுதியில் உள்ள சிறீலங்கா படையினரின் காவலரண் ஒன்று இனம் தெரியாத ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் சிறீலங்கா படைச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இவர் படுகாயமடைந்த நிலையில் பலாலி இராணுவ மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட நேரம் இவர் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 997 views
-
-
மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை தப்பிக் கொண்டது எப்படி? [07 - October - 2007] -டிட்டோ குகன்- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் (யூ.என்.எச்.ஆர்.சி.) ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவிருந்த மனித உரிமைகள் நிலைவரங்கள் தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பிக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல என்பதை அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளது. இந்தத் தீர்மானமானது சமர்ப்பிக்கப்படாமல் கைவிடப்பட்டதானது தங்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றியெனவும் அரசாங்கம் இப்போது மார்தட்டிக் கொள்கிறது. எனினும் இதன் மறுபக்கத்தைப் பார்த்தால் அரசுக்கு எதிரான தரப்பு தீர்மானத்தைப் பேரவையில் கொண்டு வரும் விடயத்தில் துளியளவும் முயற்சிகளை எடுக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
மன்னார் முன்னரங்கில் மோதல் வீரகேசரி இணையம் மன்னார் உயிலங்குளம் வடக்கு பாதுகாப்பு முன்னரங்கில் இன்று காலை விடுதலைப் புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது . உயிலன் குளம் முன்னரங்கு நோக்கி முன்னேற முயன்ற விடுதலைப் புலிகள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி முறியடித்துள்ளதாகவும் இதில் இரு விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாக இராணுவத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது இத் தாக்குதலில் இராணுவத்தினரிற்கு எதுவித சேதமும் ஏற்படவில்லையென பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது
-
- 0 replies
- 1.4k views
-
-
வடக்கில் மேற்கொள்ளப்படும் சிறிலங்காவின் படை நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், இந்த வேகத்தில் போனால் படையினர் வெற்றிபெற 3-4 வருடங்களாகும் என்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 990 views
-
-
அம்பாறையில் கிளேமோர் தாக்குதல் இருவர் பலி வீரகேசரி இணையம் அம்பாறை பக்கிமிட்டியாவை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இதில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் ஊர்காவர்படை வீரர் ஒருவரும் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒரு அதிரடிப்படை வீரர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை வீரர்களை இலக்கு வைத்து இக் கிளேமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அம்பாறை பக்கிமிட்டியாவ மற்றும் கொடுறுஹெலவிற்கும் இடையில் இக் கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
-
- 0 replies
- 1.2k views
-
-
அனுராதபுரம் அருகே தந்திரிமலை மலைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வானில் பறப்பில் ஈடுபட்டனவா என்பது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 2.4k views
-
-
திங்கள் 08-10-2007 05:10 மணி தமிழீழம் [மயூரன்] ஒரு வருடம் ஒத்துழைப்பை வழங்குமாறு ஜேவிபிக்கு மகிந்த அழைப்பு ஒரு வருடம் காலம் தமக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச ஜேவிபியிடம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்புக்கு ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கடித மூலம் பதிலை வழங்கியுள்ளார். அக்கடித்தில்... இந்த அழைப்பை விடுப்பதற்கு முன்னர் தேர்தலின் போது வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படும் அரசியல் நபர்களுக்கு எதிராக நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் அரசியல் தவறுகளை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்த ஜேவிபி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்க…
-
- 0 replies
- 813 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரை விமர்சித்தால் அவர்கள் துரோகிகளாக கருதப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
Posted on : 2007-10-08 மனித உரிமை மீறல் விவகாரம்: அம்பலமாகும் உண்மைகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைத் தீவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் சம் பந்தமாக அமெரிக்கத் தரப்பில் இருந்து தகுந்த பதிலடி வந்திருக் கின்றது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக அதிகரித்திருக்கின்றன. ஆள்கடத்தல்கள், காணாமற் போகச் செய்தல், படுகொலைகள், கப்பம் அறவிடல் எனத் திட்டமிடப்பட்ட வன் முறைகள் தமிழினத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக் கின்றன. இத்தகைய மோசமான மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசுத் தலைமை காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளது என்பதையும் தாண்டி இத்தகைய மீறல்களின் பின்னணிச் செயற்பாடுகளுக்கும் அரசுத் தலைமைக்…
-
- 0 replies
- 730 views
-
-
சுடர் ஒளிக்கு விசேட செவ்வி இனப்பிரச்சனைக்கு சமஷ்டி அடிப்படையில தீர்வு காண்பதற்கு ஐ.தே.கட்சி ஒரு போதுமே இணங்கியதில்லை. விடுதலைப் புலிகள் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு, இறங்கி வந்ததால் அவர்களைத் தொடர்ந்தும் பேச்சு மேசையில் வைத்திருப்பதற்காக சமஷ்டி பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்கு இணங்கினோமே தவிர அதனை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. 'எமது கட்சி சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணச் சம்மதித்து என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அது திரிக்கப்பட்ட பொய்.' இப்படி விளக்கம் அளித்திருக்கின்றார் ஐ.தே.க. நா.உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல. இது தொடர்பாக சுடர் ஒளிக்கு அளித்த விசேட செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு :- …
-
- 0 replies
- 949 views
-
-
வவுனியாவில் புளொட் இயக்க உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 865 views
-
-
சிறீலங்கா கடற்படை விடுதலைப் புலிகளின் இறுதிக் கப்பலையும் இன்று தகர்த்து அழித்து விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோகத்தை பெரும்பாலும் முடக்கி விட்டுள்ளதாக செய்தி சொல்லி இருக்கிறது. 3000 தொன் எடையுள்ள புலிகளின் பாரிய கப்பலை சிறீலங்காவின் தெற்குக் கரையில் இருந்து சுமார் 978 கடல் மைல்களுக்கு அப்பால் வைத்து தாங்கள் தாக்கி அழித்திருப்பதாகவும்.. இதுவே விடுதலைப்புலிகள் இறுதி ஆயுத விநியோகக் கப்பல் என்று சிறீலங்கா கடற்படை கூறியுள்ளது. இதன் போது 12 போராளிகளை தாங்கள் கொன்று விட்டார்களாம். ஏலவே கடந்த 13 மாதங்களில் புலிகளின் இதர 8 கப்பல்களும் தாக்கி அழிக்கப்பட்டுள்ளனவாம். இருந்தாலும் புலிகள் வெளிநாடுகளில் சேகரிக்கும் நிதியைக் கொண்டு வேறு புதிய கலங்களை வாங்கவும் கூடுமாம். htt…
-
- 4 replies
- 4.7k views
-
-
ஞாயிறு 07-10-2007 22:43 மணி தமிழீழம் [மயூரன்] தென்னிலங்கையிலிருந்து யாழ் குடாநாடு நோக்கி சிறீலங்காப் படையினர் நகர்வு தென்னிலங்கையிலிருந்து யாழ்குடாநாட்டை நோக்கி சிறீலங்காப் படையினர் பெருமளவில் குவிக்கப்படுகி்ன்றனர். நேற்றிரவு பருத்தித்துறை துறைமுகத்தில் துருப்புக்காவி கப்பல் மூலம் ஒரு பற்றாலியன் படையினர் தரையிறக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று இன்று காலை காங்கேசன்துறை மற்றும் காரைநகர் கடற்படைத் தளங்களிலும் பெருமெடுப்பில் படையினர் துருப்புக்காவி கப்பல் மூலம் தரையிறக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளிள் வலிந்த தாக்குதல்களை முறியடிப்பதற்காகவும் வன்னிப் பெரு நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்கோடும் யாழ் குடாநாட்டில் சிறீலங்காப் படையினர் குவிக்கப்படுவதாக இராணுவ …
-
- 2 replies
- 2.2k views
-
-
இனப்பிரச்சினையில் மேற்குலகின் இரட்டை வேடம் -அருஸ் (வேல்ஸ்)- சர்வதேச சமூகத்தில் விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக காண்பிக்க நீண்டகாலமாக இலங்கை அரசும் தென்னிலங்கை பேரினவாதிகளும் முயன்று வருகின்றனர். தென்னிலங்கை பேரினவாதிகளும் இலங்கை அரசும் தங்களுடைய நடவடிக்கைகளை நியாயப்படுத்தவென சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கும் விளக்கமும் பயங்கரவாதத்தை மையப்படுத்தியதே. அண்மையில் நடந்து முடிந்த ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்தவும் இதனையே முன்னிறுத்தியிருந்தார். இனப்பிரச்சினை தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை இருட்டடிப்புச் செய்வதற்கும் விடுதலைப் போராட்டத்தை முழுமையான இராணுவக் கண்ணோட்டம் கொண்ட பயங்கரவாதமாகக் காட…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஞாயிறு 07-10-2007 23:07 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்காவுக்கு இராணுவ தளபாடங்களை செக் குடியரவு வழங்கும் - செக்குடியரசின் தூதுவர் சிறீலங்காவுக்கான படைத்துறைத் தளபாடங்களை வழங்க செக்குடியரவு முன்வந்துள்ளதாக சிறீலங்காவுக்கான செக்குடியரசின் தூதுவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிறீலங்காவுக்கான செக்குடியரசின் தூதுவர் புதுடெல்லியில் வைத்து கருத்துரைக்கும் போதே அவர் இக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். தமது சொந்த தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட அதி நவீன ராடார்கள் மற்றும் படைத்துறை தளபாடங்களை வழங்க தமது அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்த ராடார்கள் மிகையொலி விமானங்களை மிகவும் தெளிவாக இனங்காட்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்விடயம் குறித்து கடந்த வெள்ளிக்கி…
-
- 0 replies
- 907 views
-
-
ஜே.வி.பி.யின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச மீதான பாலியல் சித்திரவதை தொடர்பான விவகாரத்தின் முழு விபரங்களை சிரச தொலைக்காட்சி விரைவில் ஒளிபரப்பு செய்ய உள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய உளவு அமைப்பான றோவின் பிரதிநிதிக்கு பெண் மூலமாக சீனாவுக்கு தகவல்களை பரிமாறியது கண்டுபிடிக்கப்பட்டமையால் அந்நபரை இந்தியா திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்காக நிலவன் ஊடகங்களில் வெளியாகி வருகின்ற செய்திகளைப் பார்க்கின்ற போது, சிறிலங்கா இராணுவம் வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தத்தை ஆரம்பித்துவிட்டது என்கின்ற எண்ணத்தை தோற்றுவிப்பதாகவே இருக்கின்றது.நாளாந்தம் வெளிவருகின்ற யுத்தச் செய்திகள், யுத்த அறைகூவல்கள், இழப்புச் செய்திகள், விடுதலைப் புலிகள் வெளியிடும் மாவீரர் பெயர் விபர அறிவித்தல்கள்…. - இவை எல்லாமே வடக்கில் ஒரு பாரிய யுத்தம் நடைபெற்று வருகின்றது என்பதை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றன. வெளிவரும் செய்திகளை அடிப்படையாகக ;கொண்டு நோக்கும போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது, சிறிலங்கா இராணுவமே வடக்கில் வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது என்கின்ற உண்மை தெளிவாகப் பு…
-
- 0 replies
- 2.3k views
-