ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143313 topics in this forum
-
பசில் ராஜபக்ச நாளை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுகிறார் சிறீலங்கா அரச அதிபரின் ஆலோசரும் சகோதரருமான பசில் ராஜபக்ச நாளை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார். நாளை புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இவர் அரச அதிபர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவுள்ளார். இதற்கான அறிவித்தல் அரச வர்த்தமானி மூலம் வெளியிடப்படவுள்ளது. இவர் சாவடைந்த பிரதி நீர்ப்பாசன அமைச்சர் அன்வர் இஸ்மாயிலின் வெற்றிடத்திற்கு தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர ஜக்கிய முன்னியின் செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார். இதனை தேர்தல் ஆணையாளரும் பசில் ராஜபக்சவின் பெயரை ஏற்றுக்க…
-
- 6 replies
- 1.4k views
-
-
செவ்வாய் 25-09-2007 01:43 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் சட்டவாளர்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டவாளர்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. இன்று முதல் சட்டவாளர்கள் தமது பணிகளுக்குச் செல்லவுள்ளனர். நேற்று திங்கட்கிழமை யாழ் நீதியாளர் விக்கினராஜா, பருத்தித்துறை நீதியாளர் அரியநாயகம், மல்லாக நீதீயாளர் சரோஜினி இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்ட ஒன்றுகூடலில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீயை சந்தித்த போது இவர்களுக்கு வழங்கி உறுதி மொழியைத் தொடர்ந்து இப்பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது எனத் தெரிவிக…
-
- 1 reply
- 895 views
-
-
தேசியப் பிரச்சினைக்கு சமஷ்டி மூலமாகத் தீர்வு காணவேண்டும் என்று ஐ.தே.க ஒருபோதும் கூறவில்லை. மூவின மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வு மூலமே தீவுர் அமைய வேண்டும் என்பது தான் ஐ.தே.கட்சியின் நிலைப்பாடு. சமஷ்டி தான் ஐ.தே.க நிலைப்பாடு என்று ஊடகங்கள் தான் கூறிவருகின்றன. நாம் ஒரு போதும் அப்படிக் கூறவில்லை.இவ்வாறு ஐ.தே.கவின் நா.உறுப்பினர் ரவி கருணாநாயக்க நேற்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றறுகையில் கூறினார். அவர் தொடர்ந்தும் கூறியவை :- 'தேசிய பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வொன்றை முன்வைக்க இந்த அரசு தயாரில்லல. யுத்தத்தையே அது நம்பியுள்ளது.'யுத்தம் மூலம் ஒரு போதும் தீர்வு காணமுடியாது என்பது இந்த…
-
- 1 reply
- 1k views
-
-
ஐந்தாம்தர புலமைப் பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகள் பெற்று புதிய சாதனை 190 புள்ளிகளைப் பெற்ற கிளிநொச்சி மாணவன் [23 - September - 2007] [Font Size - A - A - A] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகள் பெறப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறை- ஹொரண தக்சிலா கல்லூரி மாணவன் சாகி பசுரு வீரக்கோன் என்ற மாணவனே 200 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதேநேரம் கிளிநொச்சி திரேசா கல்லூரி மாணவன் திருமாறன் ஈழவரன் தமிழ் மொழி மூலத்தில் பரீட்சைக்குத் தோற்றி அகில இலங்கை ரீதியாக 190 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். சிங்கள மொழி மூலத்தில் பரீட்சை…
-
- 8 replies
- 3.9k views
-
-
1987ஆம்ஆண்டு ஈகைக்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்கள் வீரச்சாவைத் தழுவியபின்னர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய உரை http://astra.lunarpages.com/~tamiln2/VOTRA...dar%20urai.smil நன்றி: புலிகளின்குரல்
-
- 0 replies
- 1.2k views
-
-
23.09.2007 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் பதிவு
-
- 0 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிலங்கா வான்படை கிபீர் வானூர்திகள் இன்று குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
கிளிநொச்சிப் பகுதியில் சிற்றூர்தி ஒன்று தடம்புரண்டதில் 27 பேர் பேர் காயமடைந்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
செவ்வாய் 25-09-2007 01:36 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் 7 பேர் சரண் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று திங்கட்கிழமை ஏழு பேர் சரணடைந்துள்ளனர். சரணடைந்தவர்களில் ஆறு பேர் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப் படுகின்றது. சரணடைந்தோர் 24 அகவை தொடக்கம் 56 அகவையுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நன்றி பதிவு.
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ் இறைமை அடிப்படையில் சமாதான பேச்சு இடம்பெறவேண்டும் விடுதலைப்புலிகளின் அரசியல் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையில் 62 ம் கூட்டத்தொடரில் தமிழ் மக்களின் இறைமை அடிப்படையில் தமிழ் மக்களின் சமாதான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. விடுதலைப்புலிகள் அவ் அறிக்கையில் தமிழ் மக்களது அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் கிழக்கு தீமோர் மற்றும் கொசோவோ ஆகிய பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்பங்கள் போன்று தமிழ் மக்களுக்கும் வழங்கப்படவேண்டும் என கேட்க்கப்பட்டிருந்தது. சர்வதேச சமூகம் சிறீலங்கா அரசாங்கத்தின் இராணுவ அடக்குமுறை, இனச்சுத்திகரிப்பு, கடுமையான மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை தடுத…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஊடகங்களுக்கு எதிராக அவரசரகாலச் சட்ட விதிகள்? அரசு ஆயுதங்களைச் சுவீகரிப்பது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அவசரகாலச்சட்ட விதிகள் வரையப்பட்டிருக்கின்றன என்றும், அவை விரைவில் வர்த்தாமானி அறிவித்தல் மூலம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன என்றும் கூறப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கைகு கருத்து வெளியிடும் சுதந்திம் , ஊடக சுதந்திரம் போன்ற அரசமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதுடன், ஆயுத சுவீகரிப்புத் தொடர்பான நிதிக் கையாள்கை விடயங்கள் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்பு கூறும் நிலைமையையும் மோசமாகப் பாதிக்கச் செய்கின்றது என்று சுயாதீன ஊடக இயக்கம் கண்டனம் வெளியிட்டிருக்கின்றது. இராணுவ விமானங்களைக் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 749 views
-
-
பாராளுமன்றச் சாப்பாடு [24 - September - 2007] [Font Size - A - A - A] வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. தங்களது வருமானத்திற்குள் வாழமுடியாத சாதாரண மக்கள் அன்றாடம் பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியிருக்கிறது. நாட்டின் நன்மைக்காக வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்ளுமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் நாட்டு மக்களில் அரைவாசிப்பேர் வறுமையிலேயே வாழ்கிறார்கள். 25 சதவீதத்துக்கும் அதிகமான பாடசாலைச் சிறார்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அண்மைய ஆய்வொன்றில் தெரிய வந்திருக்கிறது. பட்டினியுடன் படுக்கைக்குச் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால், மக்களின் இந்தத் துன்பங்களில் எதுவுமே அவர்களின் ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிங்களப் படைகள் ஆரம்பித்துள்ள வன்னி மீதான பெரும் போர் வன்னி நிலப்பரப்பு மீது பெருமெடுப்பில் சமரொன்றைத் தொடுத்து அதை ஆக்கிரமிக்கவேண்டும் என்பது மகிந்த அரசின் கனவாக உள்ளது. இந்தச் சமருக்கு ஜே.வி.பி மற்றும் கெலஉறுமய போன்ற அதிதீவிர இனவாதக் கட்சிகள் மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவளிப்பதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இப்போது வன்னி ஆக்கிரமிப்பு சிங்களக் கட்சிகளின் பொதுக்கனவாகிவிட்டது. சிங்கள மக்களும் அத்தகையதொரு ஆக்கிரமிப்புப் போருக்கு ஆதரவளித்துள்ளனர். சமாதான விரும்பிகளாகக் காட்டிக்கொண்ட சிங்களப் புத்திஜீவிகளும் வன்னி மீதான படையெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள ஊடகங்களில் கருத்துரைகள் எழுதி வருகின்றனர். வன்னி மீதான படையெடுப்பு முயற்சிகளுக்கு சர்வதேச மன…
-
- 0 replies
- 1.8k views
-
-
மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மேற்கு மாந்தை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் இன்று காலையும் பாரிய எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் முழு நிலாக் கருத்தரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 768 views
-
-
சிறிலங்காவிற்கான அமெரிக்காவின் இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "த சென்ரினெல்" ஏடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாண மாவட்ட செய்திகளின் தொகுப்பு: மேலும் வாசிக்க
-
- 9 replies
- 2.1k views
-
-
யாழ். முன்னரங்கப் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் சிறிலங்கா படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐந்து படையினர் காயமடைந்துள்ளனர். தமது முன்னரங்க நிலைகள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தாம் நடத்திய பதில்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் இரு பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டதாகவும் 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் அரச தரப்புத் தெரிவித்துள்ளது. ஆனால் படையினர் விடுதலைப் புலிகளின் நிலைகளைக் கைப்பற்ற முயன்றதைத் தொடர்ந்தே இரு தரப்பினருக்கு இடையேயும் மோதல் மூண்டதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், படையினரின் முயற்சிகள் அனைத்து…
-
- 2 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு "ஒரு அரசியல் கட்சியாக" "மாற்றம்" செய்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 929 views
-
-
வவுனியா மன்னாருக்கு இடையில் தம்பனையில் படையினரின் முன்னரங்க நிலைகளை ஒட்டி நேற்று முன்தினம் இரவு விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் இடம் பெற்றது. இந்த மோதலில் படைச்சிப்பாய் ஒருவன் உயிரிழந்துள்ளார். மேலும் எட்டு படையினர் காயமடைந்திருக்கின்றனர் எனப் படைத்தரப்பில் கூறப்பட்டது.ஆனால், நேற்று முன்தினம் இப்பிரதேசத்தில் முன்னேற முயன்ற படையினர் மீது சுமார் ஒரு மணி நேரம் புலிகள் பொழிந்து தள்ளிய பீரங்கிகளில் 32 சிப்பாய்கள் காயமடைந்தனர் என்றும,் சுமார் ஒரு மணி நேரம் நடந்த சமரின் பின்னர் படையினர் தமது பழைய நிலைகளுக்குப் பின்வாங்க நேர்ந்தது என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தனது பாதுகாப்பு நிலைவரம் பற்றிய செய்தியில் வெளியிட்டிருந்தது. 10 ஸி.எல். ஐ. மற்றும் 7 …
-
- 1 reply
- 2.1k views
-
-
கிழக்கில் கொலையுண்ட தமிழரின் விவரம் ஐ.நா. கூட்டத் தொடருக்கு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பியது கிழக்கில் அரசால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது கொல்லப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய பட்டியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது நியூயோர்க்கில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா.பொதுச் சபையின் 62 ஆவது கூட்டத்தொடருக்கு அனுப்பி வைத்துள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்பெயர்ப் பட்டிலை கடந்த 19ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து மறுநாள் 20ஆம் திகதி இப்பட்டியலின் பிரதிகளை மேற்படி ஐ.நா.கூட்டத் தொடரில் பங்குபற்றும் பிரதிநிதிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்தது எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கையில…
-
- 0 replies
- 1k views
-
-
சிறீலங்காவின் வருமானத்தைவிட கடன் தொகை அதிகரிப்பு - சர்வதேச நாணய நிதியம் சிறீலங்காவின் கடன் தொகை வருமானத்தை விட அதிகரித்துச் செல்வதாகவும் சிறீலங்கா அரசாங்கத்தால் நாளாந்த செலவீனங்களை பூர்த்திசெய்ய கூடியளவுக்கு வருமானத்தை ஈட்டமுடியாதுள்ளதாகவும் சர்வதேச நாணயநிதியம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. சிறீலங்காவின் முதலீட்டு உருவாக்கம் இப்பிராந்தியத்திலேயே மிகக்குறைவாக உள்ளதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவின் மொத்த உள்ளுர் உற்பத்தியின் 101 வீதம் கடன் உள்ளதாகவும் கடந்த ஜந்து வருடத்தில் இப்பிரதேசத்தின் கடன்தொகை வீதத்தினை மிஞ்சியுள்ளதாகவும் நேபாளத்தில் இது 63 வீதமும், பங்களதேசில் 49 வீதமும் இந்தியாவில் 85 வீத…
-
- 0 replies
- 797 views
-
-
அமைதி முயற்சிகளுக்கு இணங்கினாலே இராணுவம் அடங்கியிருக்கும் என்கின்றார். மேலும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதற்குத் தோதுவான சூழ்நிலை தற்போது தொடர்கின்றது. ஆனால், வி.புலிகைள் உடனடியாக அமைதிப் பேச்சு மேசைக்குத் திரும்புவார்களாயின், அத்தகைய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை அரசு சீர்குலைக்காது" இப்படி கூறியிருக்கன்றார் வி.புலிகளுக்க எதிரான அரசுப்படைகளின் நடவடிக்கைகளை அரசுத் தரப்பில் வழி நடத்துபவரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதியின் சகோதரருமான கோட்டபயா. இப்போதாவது அமைதிப் பேச்சுக்கு வருகிறீர்களா? .இல்லையா? இல்லையேல் இராணுவம் உங்கள் மீது பாயும்!" என்ற தொணியில் புலிகளுக்கு இறுதிச் சவாலும் எச்சரிக்கையும் விடும் தொனியில கருத்துக் க…
-
- 1 reply
- 1.5k views
-