Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொது மக்கள் மீதான கிளைமோர் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் : செ.கஜேந்திரன் Written by Ravanan - Sep 04, 2007 at 07:37 PM தமிழ் மக்களின் பாராம்பரிய வாழ்விடமான முசலிப் பிரதேசத்தினை ஆக்கிரமித்து அக்கிருந்து தமிழ் மக்களை விரட்டியடித்து இனச் சுத்திகரிப்பு செய்து அப்பிரதேசத்தினை சிங்கள தேசமாக மாற்றும் திட்டத்துடன் முசலிப் பிரதேசத்தினை கைப்பற்றும் திட்டமாகும். கடந்த சனிக்கிழமை 01-09-2007 அன்று காலை சிலாவத்துறை முள்ளிக்குளம் வீதியில் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த பொது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 12 பேர் பலியாகியுள்ளனர். இதில் 5 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதுடன் ஒரு குழந்தை அடையாளம் காணப்படவில்லை. இத்தாக்குதல் ஸ்ரீலங்கா …

  2. செவ்வாய் 04-09-2007 21:27 மணி தமிழீழம் [தாயகன்] கிழக்கில் மட்டும் முதலீடு செய்ய சவுதி முன்வந்ததேன்? - ஆய்வாளர்கள் சந்தேகம் மட்டக்களப்பு குடும்பிமலைப் பிரதேசத்திலுள்ள எட்டாயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் 100 ஏக்கர்களில் விவசாய முதலீடு செய்வதற்கு சவுதி அரேபியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இணங்கியுள்ளார். சரத் டி சில்வா தலைமையில் இரண்டு நாட்கள் பயணமாக சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ள 7 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட முயற்சியின் பின்னர் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தரவைக்குளம், வடமுனை, வாகனேரி போன்ற இடங்களில் இருந்து கிடைக்கும் நீரின் மூலம் இங்கு வழமையான இரு போகத்தைவிட, மூன்று போகப் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ள முடியுமென, ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையை …

  3. செவ்வாய் 04-09-2007 16:01 மணி தமிழீழம் [தாயகன்] கிழக்கில் சிங்களக் குடியேற்றம் பற்றிய விவாதம் நாளை நாடாளுமன்றில் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல், கிழக்கில் சிங்களக் குடியேற்றம் என்பன தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு நேரம் ஒதுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பிற்கு இணங்க நாளை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. படுகொலைகள், காணாமல்ப் போகச் செய்தல், ஆட் கடத்தல் போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்களில் சிறீலங்கா அரசு ஈடுபட்டு வருவதாகவும், கிழக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு சிங்களக் குடியேற்றங்களை அரசு மேற்கொண்டு வருவதாகவும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் தாயக பூமியான வடக்கு - கிழக்கைப்…

  4. புலிகள் இராசாயன ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்-பிரதமர் வீரகேசரி இணையம் சர்வதேச நாடுகளின் சட்டத்திட்டங்களை மீறி புலிகள் இராசாயன ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் விஷேட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். படையினரால் கிழக்கு மீட்கப்பட்டதன் பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது கண்டெடுக்கப்பட்ட இராசாயான பொருட்கள், புலிகள் இராசாயன ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

  5. மசகு எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் திட்டம் அடுத்த ஆண்டு மன்னாரில் ஆரம்பம் வீரகேசரி நாளேடு மன்னாரில் மசகு எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் செயற்றிட்டம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும். 2010ஆம் ஆண்டளவில் நமது நாட்டிலேயே மசகு எண்ணெயை பெற்றுக்கொள்ளமுடியும் என்று பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: மன்னார் கடற்பரப்பில் மசகு எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் செயற்றிட்டம் அடுத்த ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேள்விப்பத்திரங்கள் கோருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • 2 replies
    • 1.2k views
  6. மனிதாபிமானத்தின் பேரில் வன்னி மீதும் படையெடுப்போம்: கேகலிய ரம்புக்வெல [திங்கட்கிழமை, 3 செப்ரெம்பர் 2007, 20:00 ஈழம்] [கொழும்பு நிருபர்] மனிதாபிமான நடவடிக்கை என்ற பேரில் வன்னி மீதும் படையெடுத்து நாட்டின் அனைத்து இடங்களையும் இராணுவத்தினர் படையெடுப்பர் என்று சிறிலங்காவின் அமைச்சரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான கேகலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் அவர் கூறியதாவது: மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் பொறுப்பு முப்படைத்தளபதி என்ற வகையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு உள்ளது. மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்றவகையில் வன்னிப்பகுதி இல்லை என்றால் அங்க…

  7. கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஈழவேந்தன் எம்.பி. சுவிற்ஸர்லாந்து தூதுவரிடம் நேற்று மன்னார் சம்பவம் குறித்து விளக்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தனுக்கும், இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து நாட்டின் தூதுவர் ருத் பிளின்ட்டுக்கும் இடையிலான திடீர்ச் சந்திப்பு ஒன்று நேற்று மாலை 6 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஈழவேந்தன் சர்வதேச நாடு ஒன்றுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்தார். இவ்வேளையில், விமான நிலையத்தில் தூதுவர் ருத் பிளின்ட் வந்திறங்கினார். அப்போது இருவரும் சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் வரை கலந்துரையாடினர் எனத் தெரிவிக்கப்பட…

  8. Posted on : Tue Sep 4 12:55:00 2007 வியட்நாம் இலங்கை உறவை யாராலும் பிரித்துவிட முடியாது சுதந்திர தின விழாவில் அமைச்சர் டியூ குணசேகர கருத்து ""பல தசாப்த காலமாக வியட்நாமுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இதனை யாராலும் பிரித்துவிட முடியாது'' இவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டியூ குணசேகர கூறினார். வியட்நாமின் சுதந்திரதினம் நேற்று (2ஆம் திகதி) அனுஷ்டிக்கப்பட்டது. இது குறித்து விசேட நிகழ்வொன்று இரத்தினபுரி மாநகரசபை மண்டபத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை வியட்நாம் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அந்நிகழ்வில் அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியவை வருமாறு: …

  9. Posted on : 2007-09-04 இனப்பிரச்சினையை வைத்து நடத்தப்படும் அதிகாரப் போர் ""தமிழரின் இனப்பிரச்சினையை மையமாக வைத்தே சிங்கள ஆளும் வர்க்கங்கள் காலம் காலமாகத் தமக்கிடையே அதிகாரப் போர்களை நடத்தி வந்திருக்கின்றார்கள். இப் போர்கள் மூலமே தமது அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைப்படுத்தி, பலப்படுத்த முனைந்துள்ளார்கள். இந்த அதிகாரப் போர்களும், அதன் விளைவாகத் தமிழரின் இனப்பிரச்சினையும் தீர்க்கப்படாது மேலும் மேலும் சிக்கலடைந்த காரணத்தாலேயே சமாதான முயற்சிகள் காலங்காலமாகத் தோல்வியில் முடிவடைந்தன.'' இவை புலிகளின் மதியுரைஞர், "தேசத்தின் குரல்'அமரர் அன்டன் பாலசிங்கம் தமது கடைசி நூலான "போரும் சமாதானமும்' என்ற புத்தகத்தின் இறுதி அத்தியாயத்தில் குறிப்பிட்ட வாசகங்களாகும். …

  10. செவ்வாய் 04-09-2007 03:24 மணி தமிழீழம் [செந்தமிழ்] தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து எறிகணைத்தாக்குதல்: ஒரு பொதுமகன் பலி, மற்றொருவர் காயம் சிறீலங்கா படையினர் 3ம் திகதி மதியம் 1 மணியளவில் தள்ளாடி இராணுவமுகாமில் இருந்து வண்ணாங்குகுளம் பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டும் மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர் இருபிள்ளைகளின் தந்தையான 32 அகவையுடைய நேசன் எனவும் காயமடைந்தவர் 38 அகவையுடைய யோகநாதன் தீபன் எனவும் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.

  11. ஏற்கனவே மன்னாரில் சில இடங்களில் இராணுவம் போரைத் தொடங்கி விட்டாலும், நேற்றைய தினக்குரல் இதழில் விதுரன் எழுதிய ஆக்கத்தை இங்கே இணைக்கிறேன் எங்கே போரைத் தொடங்குவது? -விதுரன் - தெற்கில் அரசுக்கெதிராக தோன்றிவரும் புதிய அரசியல் நிலைமைகளை சமாளிக்க வடக்கில் பாரிய படை நடவடிக்கையை ஆரம்பிக்க அரசு முயல்கிறது. கிழக்கை கைப்பற்றியது போல், வடக்கையும் மிக விரைவில் கைப்பற்றுவோமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சூளுரைத்ததன் மூலம் அவசர இராணுவ வெற்றிக்காக அரசு காத்திருப்பது தெளிவாகிறது. கிழக்கைப் போன்று, வடக்கின் கள நிலையில்லையென்பது நன்கு தெரிந்தும் கிழக்கைப் போன்று வடக்கையும் கைப்பற்றுவோமென அரசு கூறிவருவதன் மூலம் இராணுவ வெற்றியின் மூலம் அரசியல் வெற்றியைப…

  12. http://www.yarl.com/videoclips/view_video....8042477183b7ac3

  13. 02.09.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....df8527599fa6264

  14. வடக்கில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள இயலாத அளவுக்கு சிறிலங்காவில் நிதிப் பற்றாக்குறை: தி.இறைவன் [திங்கட்கிழமை, 3 செப்ரெம்பர் 2007, 14:57 ஈழம்] [தாயக செய்தியாளர்] வடக்கில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள இயலாத அளவுக்கு சிறிலங்காவில் நிதிப் பற்றாக்குறை உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் செய்தி ஆசிரியர் தி.இறைவன் தெரிவித்துள்ளார். பூநகரி முழங்காவிலில் கடந்த வெள்ளிக்கிழமை (24.08.07) நடைபெற்ற புலிகளின் குரல் வானொலியின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் அவர் பேசியதாவது: நம்மை சிங்கள அரசாங்கம் இராணுவ ரீதியாக ஒடுக்கிக்கொண்டிருந்த அதே காலத்தில் கருத்துக்கள் ரீதியாகவும் நம்மை ஒடுக்கிக்கொண்டிருந்தது. அவர்களுடைய வானொலிகள், த…

  15. பிரான்ஸ்சில் உள்ள இலங்கை தூதரகத்தில் பறக்கவிடப்பட்டிருந்த இலங்கையின் தேசியக்கொடியை அங்குள்ள விடுதலைப் புலிகள் இயக்கம்தைச் சேர்ந்த சிலர் கழற்றிச் சென்று விட்டனர், என்று தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டமைச்சர் ரோஹித விசேட விஜயமொன்றை மேற் கொண்டு நேற்று முன்தினம் காலை பிரான்ஸ் சென்றடைந்தார். அமைச்சரின் இந்த விஜயத்த்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே விடுதலைப்புலிகள் இவ்வாறு செயற்பட்டிருக்கன்றனர் என்று வெளிநாட்டமைச்சின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு பிரான்ஸில் தடைசெய்யபட்டுள்ளது என்று பிரன்ஸ் அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. என்றாலும் விடுதலைப்புலிகள் இன்னமும் அங்கு செயற்படுகின்றனர் என்பதை இந்தச் சம்பவம் உறுதி செய்துள்ளது. இதனைப் பிரான்ஸ்…

  16. உட்பூசல் காரணமாக முன்னாள் கருணா குழு உறுப்பினர் சுட்டுக்கொலை கடந்த ஞாயிறு மாலை 7.30 மணியளவில் முன்னாள் கருணா குழு உறுப்பினர் கொத்தியாப்புலவு வவுணதீவு காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதியில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதன்போது ஆயுததாரிகள் அவரது வீட்டுக்கு சென்று அவரை கூப்பிட்டு விசாரணைக்கு கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர். இதனையடுத்து குறிப்பிட்ட நபர் வீட்டிலிருந்து தப்பித்து ஓட முயற்சித்தபோது கருணாகுழுவினர் அவரைச் சுட்டுக்கொன்றுள்னர். இவர் அண்மையில் திருமணம் செய்திருந்தார். முன்பு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்து பின்னர் கருணா குழுவில் இணைந்து செயற்பட்டவர். கருணா குழுவில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக கருணா குழுவிலிருந்து …

  17. விடுதலைப் புலிகளுக்கு எரித்தேரியா உதவி - அமெரிக்க செனற் சபை குற்றச்சாட்டு தமிழீழ விடுலைப் புலிகளுக்கு எத்திரியா அரசாங்கம் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க செனற் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கம் ஆயுதக்குழுக்கு உதவிகளை வழங்குவது ஜனநாயக விரோத செயற்பாடுகள் என்றும் இவ்வாறான செயற்திட்டங்களை எத்திரியா அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அமெரிக்க செனற் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளில் உறுப்பினராகவுள்ள ஒரு நாட்டிற்கு எதிராக செயற்படும் ஆயுதக்குழு ஒன்றிற்கு, ஐக்கிய நாடுகளில் உறுப்பினராகவுள்ள நாடொன்று ஆயுதங்களை வழங்குவதாகவும் அமெரிக்க செனற் வெளியுறவுக்குழு குறிப்பிட்டுள்ளது. எத்திரியா இத்தாலி…

  18. கிளிநொச்சி வாகன விபத்து: கணவனும் மனைவி உயிரிழப்பு [திங்கட்கிழமை, 3 செப்ரெம்பர் 2007, 15:26 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி இரத்தினபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.10 மணியளவில் இடம்பெற்றது. டிப்போச் சந்தியில் இருந்து இரத்தினபுரம் நோக்கிச் சென்ற உந்துருளியும், இரத்தினபுரத்திலிருந்து டிப்போச் சந்தி நோக்கி வந்த கன்ரர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வாகனத்தின் முன்பகுதிக்குள் உந்துருளி சிக்குண்டு சிறிது தூரம் இழுபட்டுச் சென்றது. உந்துருளியில் பயணித்த புலோப்பளையைச் சொந்த இடமாகவும் கனகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட யாக்கோப்பு…

    • 1 reply
    • 1.6k views
  19. திங்கள் 03-09-2007 15:22 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்காவின் படைத்துறைப் பேச்சாளராக பிரிகேடியர் உதய நாணயக்கார நியமனம் சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய படைத்துறைப் பேச்சாளராக பிரிகேடியர் உதய நாணயக்கார நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் படைத்துறைப் பேச்சாளர் பிகேடியர் பிரசாத் சமரசிங்க பிரித்தாரியாவில் உள்ள சிறீலங்காத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நன்றி - பதிவு

  20. திங்கள் 03-09-2007 18:44 மணி தமிழீழம் [மயூரன்] புலிகளின் கடல்வழி விநியோகங்களை முடக்க இந்திய உதவ வேண்டும் - மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்வழி விநியோகங்களை முடக்க இந்திய உதவி புரிய வேண்டும் என மகிந்த ராஜபக்ச இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளார். இந்திய ஜ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திற்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் கடல்வழி விநோயகங்களை முற்றுகையிட இந்திய மத்திய அரசாங்கம் உதவியளிக்க வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள உறவு மிகவும் வலுமானது. எனது நாட்டில் உள்ள ஏனைய அரசியல் தலைவர்களை விட நான் இந்தியாவை நன்கு புரிந்துள்ளேன். எமது நாட்டில் இயல்பு நிலையை உருவாக்கமும் அபிவிருத்தியை முன்னெட…

  21. பிரமுகர்களின் விஜயங்கள் அவல வாழ்வை மாற்றுமா? -சி.இதயச்சந்திரன்- மொஹமட் யூனூஸ் என்பவர் பங்களாதேஷைப் பிறப் பிடமாகக் கொண்ட சமூக மேம்பாட்டுவாதியாவார். 'நோபல்" என்ற உலகப் பரிசினை பெற்ற சாதனையாளர். நோபல் பரிசென்பது சினிமாவிற்கு வழங்கப்படும் ஆஸ்கார் விருது போன்று உலக அங்கீகாரம் பெற்றது. சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் அடிப்படைப் பொருளாதார சீரழிவுகளை அடியோடு பெயர்த்தெடுத்து, புதிய சமுதாயம் காணப்போராடியவரல்ல இந்த மொஹமட் யூனூஸ். அவர் ஒரு சீர்திருத்தவாதி. மனித அவலங்களை கண்ணுற்று, தற்காலிகத் தீர்வினை தமது ஆளுமைக்கு உட்பட்டு முன்வைக்கக் கூடிய ஒரு மனிதாபிமானி. அவர் புரட்சிக்காரனாக மாறியிருந்தால் நோபல் பரிசு வழங்கும் கொம்பனிகளின் கண்ணில் தென்படும் சாத்தியப் ப…

  22. புலிகளின் முற்றுகையில் சிக்கியிருக்கும் யாழ். சிறிலங்கா இராணுவம்: "லக்பிம" [திங்கட்கிழமை, 3 செப்ரெம்பர் 2007, 14:58 ஈழம்] [பி.கெளரி] பீரங்கித் தாக்குதல்கள் மூலம் பலாலி சிறிலங்கா வான்படை தளத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் செயலிழக்கச் செய்தால் யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் ஒரு முற்றுகைக்குள் சிக்க நேரிடும் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் தெரிவித்துள்ளது. அந்த இதழின் பாதுகாப்பு ஆய்வாளர் ரங்கா ஜெயசூர்ய எழுதிய பத்தியின் தமிழ் வடிவம்: யாழ்குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத் மீது கடந்த 21 ஆம் நாள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 130 மி.மீ நீண்டதூர பீரங்க…

  23. விசித்திரமான அரசியல் சூழ்நிலை [03 - September - 2007] இலங்கையில் இன்று விசித்திரமானதொரு அரசியல் சூழ்நிலை காணப்படுகிறது. அரசாங்கமும் பலம் வாய்ந்ததாக இல்லை. எதிரணியும் பலம் வாய்ந்ததாக இல்லை. இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதில் அரசாங்கம் கண்மூடித்தனமான அக்கறை காட்டுவதன் விளைவாக வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கிற அவலத்துக்கு மத்தியில், முழுநாட்டிலுமே மனித உரிமை மீறல்கள் படுமோசமாக அதிகரித்திருக்கின்றன. மறுபுறத்தில் வாழ்க்கைச் செலவு கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ உயர்ந்திருப்பதால் மக்கள் முன்னென்றுமில்லாத பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாளை எந்தப் பொருளின் விலை அதிகரிக்கப் போகின்றதோ என்ற ஏக்கத்துடன் தான் மக்கள் ஒவ்…

  24. புதிய பாதைக்கு தேவை புதிய பார்வை [03 - September - 2007] தெற்காசிய நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மூன்று முக்கிய பிரச்சினைகள் - வறுமை, தீவிரவாதம், ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய சுதந்திர பத்திரிகையாளர்கள் சங்கம் நடத்திய ஆறாவது மண்டல மாநாடு இப் பிரச்சினைகள் குறித்து விவாதித்து, சில வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது. `ஊடகங்கள், அமைதி, வறுமை ஒழிப்பு' என்ற தலைப்பில் கொழும்பில் இரு தினங்கள் நடைபெற்ற சாஃப்மா (SAFMA) மாநாட்டில் தெற்காசிய நாடுகளின் பத்திரிகையாளர்கள், பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றனர். "தீவிரவாதம் இருக்கும் வரை - ஊடகங்களின் சுதந்திரத்துக்குப் பாதிப்பு நீடிக்கும் வரை - வறுமை ஒழிப்பு சாத்தியமில்லை". அந்த மா…

  25. ஐவர் கொண்ட முழுக் குடும்பமுமே உயிர் அச்சுறுத்தலுக்குப் பயந்து சரண்! யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மட்டுவில் வடக்கைச் சேர்ந்த குடும் பம் ஒன்று உயிர் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் நேற்று முன்தினம் சரண் அடைந்துள்ளது. உயிர் அச்சுறுத்தல் காரணமாக அறுப துக்கு மேற்பட்டவர்கள் ஆணைக்குழுவில் யாழ். அலுவலகத்தில் இதுவரை சரண் அடைந்துள்ளனர். தனிநபர்களாகவே அவர் கள் சரண் அடைந்து வந்தனர். எனினும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் ஒரேயடியாக சரண் அடைந்தமை இதுவே முதல் தடவையாகும். மட்டுவில் வடக்கைச் சேர்ந்த கதிரவேல் குமாரசாமி (வயது 36), அவரது மனைவி சிறிலதா (வயது 30), அவரது பிள்ளைக ளான துளசிகா (வயது 13), குணசீலன் (வயது 10), திலக்சனா (வயது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.