Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்காக இராணுவ ஆய்வாளர் செல்வி அ.மகிழினி வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகள் வலிந்த பெரும்தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் புலிகளின் படையணிகள் இரவு பகல் பாராது தாக்குதல் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அங்குள்ள சர்வதேச ஊடகங்களின் நிருபர்கள் தெரிவித்து வருகின்றனர். இராணுவத்தின் புலனாய்வுத்தகவல்களும் இதனையே கூறுவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. புலிகள் நடத்தப்போகும் தாக்குதல் குறித்து இராணுவத்தரப்பு அடிக்கடி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை வெளியிடுவதைப் பார்த்தால் இந்த வலிந்த தாக்குதல் எங்கு ஆரம்பமாகப்போகின்றது என்று தெரியாமல் இராணுவத்தினர் குழப்பமடைந்துள்ளதைக் காணலாம். கடந்த மாத நடுப்பகுதியில் வவுனியா - மன்…

  2. தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை சிறிலங்காவிற்கு கொண்டுவரப் போவதாகவும் கூறிக்கொண்டு தாய்லாந்து சென்ற சிறிலங்காவின் அதிகாரிகள் குழு வெறும் கையுடன் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வாசிக்க

  3. அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டு படைத்துறை நிதி உதவி திட்டத்தின் கீழ் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளை மேலும் நீடிக்கப்போவதில்லை என அமெரிக்கா தீர்மானித்துள்ளது. மேலும் வாசிக்க

    • 3 replies
    • 1.3k views
  4. கொலன்னாவை அதிஉயர் பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் நேற்று முன்நாள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டோரில் 43 பேர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று வெல்லம்பிட்டிய சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க

  5. மகிந்த அரசுக்கு எதிராகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றங்களுக்கு எதிராகவும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வரும் போராட்டங்களில் மேலும் ஒரு புதிய வடிவிலான 400 போராட்டங்களை நாளை நடத்த தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  6. முஸ்லிம் இளைஞர் படுகொலை வழக்கில் வவுனியா புளொட் இயக்க அலுவலகத்தின் பொறுப்பாளரை கைது செய்வதற்கு வவுனியா நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் வாசிக்க

  7. வெலிக்கடை சிறிலங்கா காவல்துறையின் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பெண்கள் இருவர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க

  8. பன்னல, அனுராதபுரம் சிறிலங்கா காவல்துறை பிரதேசங்களில் மிக மோசமான வகையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இரு ஆண் சடலங்களை சிறிலங்கா காவல்துறையினர் இன்று சனிக்கிழமை காலை கண்டுபிடித்துள்ளனர். மேலும் வாசிக்க

  9. இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றுமொரு பாரிய பூமியதிர்வு விரைவில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக புவியியல் ஆய்வக அலுவலக பணிப்பாளர் கலாநிதி ஓ.கே. திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  10. இந்திய அரசிடம் நீதி கேட்டு ஒரு துளி நீரும் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வீரச்சாவைத் தழுவிய ஈகச்சுடர் லெப். கேணல் திலீபனின் 20 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை தொடங்கியுள்ளன. மேலும் வாசிக்க

    • 9 replies
    • 2.1k views
  11. யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வாகன ஓட்டுநர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க

  12. யாழ். மாவட்டம் கிளாலிப் பகுதியில் இருந்து சிறிலங்காப் படையினர் இன்று பாரிய அளவில் பலமுனைத் தாக்குதல்களை நடத்தியவாறு மேற்கொண்ட பாரிய முன்நகர்வு முயற்சியினை தமிழீழ விடுதலைப் புலிகள் முடியடித்துள்ளனர். மேலும் வாசிக்க

  13. சனி 15-09-2007 04:01 மணி தமிழீழம் [செந்தமிழ்] பருத்தித்துறையில் கிளைமோர் தாக்குதல் பருத்தித்துறை மந்திகை ஆதாரவைத்தியசாலை அமைந்துள்ள பகுதிக்கு சற்று தொலைவில் இரவு 9.10 மணியளவில் கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இதன்போது ஏற்பட்ட சேதவிபரம் இன்னமும் தெரியவில்லை நன்றி பதிவு.

  14. சனி 15-09-2007 03:36 மணி தமிழீழம் [செந்தமிழ்] பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை புனரமைப்புக்கு சுவிஸ் அரசு உதவி யாழ்பாணத்தில் அமைந்துள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை புனரமைப்பு செய்வதற்கு அண்மையில் சுவிஸ் அரசாங்கம் சிறீலங்கா அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் உடன்பட்டிருப்பதாக தெரியவருகிறது. சுவிஸ்லாந்து அபிவிருத்தி கூட்டுத்தாபனம் ரூபா 12 மில்லியன் பணம் இதற்காக வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி நீர்வழங்கல், கழிவுநீர் அகற்றுதல், மலசலகூடங்கள் போன்றவை இத்திட்டத்தினகீழ் புனரமைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இவ்வைத்தியசாலை யாழில் அமைந்துள்ள 2வது பெரிய வைத்தியசாலை எனவும் மூன்று பிரேதேச செயலகத்தை சேர்ந்த சுமார் 150 000 …

  15. EPDP member shot dead in Ea'raavoor இதை வன்முறையாக கண்டிக்கிறேன் [TamilNet, Friday, 14 September 2007, 17:39 GMT] Unidentified armed men shot dead a member of Eelam Peoples Democratic Party (EPDP) near the public market building located within Ea'raavoor police division Friday afternoon around 6:00 p.m., the Officer in Charge (OIC) of Ea'raavoor police station said. The gunmen who followed the victim into the market building fled the scene after shooting. The victim is identified as Thampipillai Kumaran, 26. The body has been transferred to the Ea'raavoor district hospital for postmortem examinations. தமிழ்நெற்.கொம்

  16. முல்லைத்தீவில் பௌத்த சின்னங்களை தரிசிக்கும் நிலையை உருவாக்குவது கடமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகேசரி நாளேடு வரலாற்று ரீதியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பௌத்த புராதனச் சின்னங்களை எமது மக்கள் தரிசிக்கும் நிலைமை உருவாக்க வேண்டியது எமது கடப்பாடாகும். எந்த நிலையிலிருந்து முட்டுக்கட்டைகள் வந்தாலும் நாட்டையும் மதத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அலரிமாளிகையில் இடம் பெற்ற பல்லன் தரசுமன தேரருக்கு தென்பகுதிக்கான சங்க நாயகர் பதவியை கையளிக்கும் நிகழ்ச்சியின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி கூறியதாவது: அண்மையில் வீடியோ ஒளிப்…

  17. அரசியல் தீர்வுக்கான நகல் யோசனை இந்தியத் தரப்புக்கு கையளிக்கப்படும் மன்மோகன்சிங்கிடம் மஹிந்தரே நேரில் வழங்குவார் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தமது அரசு வைத்திருக்கும் யோசனைத் திட்டத்தின் நகல் பிரதி ஒன்றை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நேரடியாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நியூயோர்க்கில் வைத்துக் கையளிப்பார் என விடயமறிந்த வட்டாரங்களில் பேச்சடிபடுகின்றது. இம்மாதம் கடைசி வாரத்தில் நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கு பற்றுவதற்காக இலங்கை,இந்திய நாடுகள் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் நியூயோர்க் செல்லுகின்றனர். எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகின்றார். பொதுச் சபைக் கூட…

  18. புதுக்குடியிருப்பில் நேற்றுக் காலையிலும் மாலையிலும் பல தடவைகள் விமானக் குண்டுவீச்சு! பாடசாலை மாணவர்கள் அல்லோல கல்லோலம்!! முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் நேற்றுக் காலை யிலும் மாலையிலுமாக மிக் விமானங்கள் 15 இற்கு மேற்பட்ட குண்டு களை வீசித் தாக்கின. "மிக் 27' ரக விமானங்கள் நான்கு, புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்பை அண்டிய பிரசேத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட குண்டுகளை வீசின. இதனால் பொது மக்கள் அவலங்களுக்கு ஆளா கினர். முதலில் காலை 8.25 மணியளவில் விமானத் தாக்குதல் ஆரம் பிக்கப்பட்டது தாக்குதல் நடத்தப்பட்ட வேளையில் பாடசாலைகளில் காலை ஒன்று கூடல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதனால் மாணவர்கள் பதற்றத்துடன் அங்கும் இங்கும் சிதறி பாதுகாப்புத் தேடி ஓடினர்…

  19. ஈழத்தமிழருக்கு உணவு மற்றும மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக அனுப்ப அனுமதி மறுப்பதன் மூலம் இந்திய மத்திய அரசு மன்னிக்க முடியாத துரோகமிழைத்து வருகின்றன".இவ்வாறு மறுமலர்ச்சி தி.மு.க பொதுச் செயளாலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நடைபெறும் உண்ணாநிலைப் போராட்டட இடத்திலிருந்து ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று வழங்கி நேர் காணலிலேயே இதனைத் தெரிவித்தார். இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர் சொல்லொணாத் துயரங்களுக்குள்ளகியுள்ளனர். உணவின்றி - நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளின்றி வாடி வதங்கி மடியும் துயரம் மிகுந்திருக்கின்ற வேளையில், அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்…

  20. ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க, இலங்கை அரசு மீது போர் தொடுக்க வேண்டும் எனக் கருத்துக் கூறியிருக்கிறார், விடுதலைச் சிறுத்ததைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன். இராமேஸ்வரத்தில் இடம் பெற்ற ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு திரட்டும் கூட்டமொன்றில் கலந்து கொண்டபோதே திருமாவளவன் மேற்கடண்ட கருத்தை வெளியிட்டார். அவர் அங்கு உரையாற்றுகையில்:- தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் தாக்குதலைத் தடுக்க இந்திய அரசு, இலங்கை அரசின்மீது போர் தொடக்க வேண்டும. அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை சென்ற போது சிங்கள இராணுவ வீரர் அவரைக் கொல்ல முயற்சித்த போதே சிங்களவர்கள் மீது இந்தியா படையெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். யாழில் திட்டமிட்டு ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரச…

    • 4 replies
    • 1.8k views
  21. ஈழத்தமிழர் படும் அவலங்களை கடந்த சில தினங்களுக் முன்னா ஆதாரபூர்வமாக வெளியிட்ட தமிழகத்தின் பிரபல 'தினமணி" நாளேடு, மீண்டும் ஒரு ஆசிரியர் தலையங்கத்தை அதே ஈழத்தமிழர் பற்றித் தீட்டியுள்ளது.ஈழத்தமிழருக்க

    • 3 replies
    • 2.3k views
  22. வெள்ளி 14-09-2007 00:59 மணி தமிழீழம் [செந்தமிழ்] பூசா தடுப்பு முகாமில் இருந்து 12 தமிழர் விடுதலை புதன்கிழமை பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருந்த 12 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 6பேர் மன்னாரை சேர்ந்தவர்கள் எனவும் 6 பேர் வத்தளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது. இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. வடக்கு கிழக்கை சேர்ந்த பெரும்பாண்மையான தமிழர்கள் உட்பட 200 ற்கு மேற்பட்ட தமிழர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே. நன்றி பதிவு..

  23. வத்திக்கான் திருவழிபாட்டுப் பேராயத்தின் செயலாளராகிய அதிமேற்றிராணியார் மல்கம் ரஞ்சித் இலங்கை அரசாங்கத்தின் விசேட அனுமதியோடு நேற்று வியாழக்கிழமை வன்னிப்பகுதிக்குச் சென்று திரும்பியிருக்கின்றார். இவருடன் கரிட்டாஸ் சிறிலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் டேமியன் பெர்னாண்டோ மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோரும் வன்னிப்பகுதிக்குச் சென்றதாக மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன. இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அண்மையில் மன்னார் மாவட்டத்தின் வடபகுதியில் இடம்பெற்ற எறிகணை வீச்சு மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகளை பார்வையிடுவதற்கும், அவர்களுக்குத் தேவையான அவசர நிவாரண உதவிகள் மற்றும் தேவைகள் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கிலும் கத…

  24. http://www.yarl.com/videoclips/view_video....ff70779273e95aa

  25. வவுணதீவு புளொட் அலுவலகத்தில் தேடுதல் நடவடிக்கை [வியாழக்கிழமை, 13 செப்ரெம்பர் 2007, 19:37 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு வவுணதீவில் அமைந்துள்ள புளொட் அலுவலகத்திற்குள் இன்று காலை புகுந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் கடும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். புளொட் அலுவலகத்துக்குள் இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு உள்நுழைந்த சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர். அங்கு கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும் சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். அதிரடிப்பைடயினருடன் சிறிலங்கா காவல்துறையினரும் இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். http://www.eelampage.com/?cn=33384

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.