ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
பிரித்தானியாவின் திட்டத்தை சிறிலங்கா வரவேற்குமா?-செய்திஆய்வு- இலங்கைப்பிரச்சனைக்குத் தீர்வுகான உதவக்கூடிய வழிமுறைகளை பிரித்தானியா வெளியிட்டுள்ளதன் மூலம் அது இலங்கை விவகாரங்களில் தலையிட விருப்பம் கொண்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 150ஆண்டுகள் பிரித்தானியாவின் காலணித்துவப் பிடிக்குள் இங்கை அகப்பட்டுக்கொண்டது. ஐரோப்பிய வருகைக்குமுன் தமிழ் சிங்கள இனங்களுக்குத் தனியரசு தனித்தனியாக இருந்து வந்துள்ளது.ஆயினும் பிரிட்டனே பல்வேறு சிற்றசுகளை வெற்றிகொண்டு இலங்கையை ஒரே நிர்வாக அலகாக்கியது. இன்று இலங்கையி;ல் நிலவும் இன முறன்பாட்டிற்கு பிரித்தானியாவும் ஒருகாரணமாகும். காலணித்துவத்தைக் கைவிட்டுச் சென்றபோது இருதேசிய இனங்களும் சுய உரிமையோடு வாழ ஏற்பாடு செய்திரு…
-
- 2 replies
- 1.4k views
-
-
சமாதானக் குழுவினரால் தமிழ்மொழி புறக்கணிப்பு [28 - August - 2007] நாவலப்பிட்டி நகரில் இயங்கும் சமாதானக் குழுவினரிடம் பல தரப்பட்டவர்கள் சென்று தங்களது பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வரும் வேளை அங்கு வழங்கப்படுகின்ற விண்ணப்பங்கள், - ஆவணங்கள் தனிச் சிங்கள மொழியிலுள்ளதால் மொழி புரியாத மலையக தோட்ட மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். இது சம்பந்தமாக நீதி மறுசீரமைப்பு அமைச்சு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கம்பளை கல்விக் காரியாலயத்தில் மலையக தமிழ் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் "சுற்று நிருபங்கள்" தனிச் சிங்கள மொழியில் அனுப்பப்படுவதாகவும் அதிபர், ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். தினக்குர…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிய பேரினவாதக் கட்சிகளினால் ஆட்டிப்படைக்கப்படும் அரசாங்கம் [28 - August - 2007] வ. திருநாவுக்கரசு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவைச் சேர்ந்த சமஷ்டி ஆட்சி முறைமை நிபுணர் கலாநிதி ஜோன் கின்செட் என்பவருடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுத் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவைச் சந்தித்து கருத்து பரிமாறியதாக கின்செட் தெரிவித்ததையடுத்து, அக்குழுவினால் வெளிக்கொணரக்கூடிய இறுதிப் பெறுபேறு தொடர்பாக நாம் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கவில்லையென நான் எடுத்துக் கூறியதாக முன்னைய வாராந்தக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தேன். அக்குழுவின் இறுதி அறிக்கை வெளிவரப்போவதாக சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. …
-
- 0 replies
- 705 views
-
-
மென்மேலும் உறுதியாகிறது யுத்த தீவிர எண்ணப் போக்கு யுத்தநிறுத்தம் செயன்முறையில் உள்ளது என்று கூறப்பட்டாலும், அது செத்துச் செயலிழந்து நாளாகி விட்டது. உக்கிப்போன காகிதத்தில், உருக்குலைந்த எழுத்துக்களில் அது பதிவு செய்யப்பட்டிருப்பதோடு சரி. உண்மையில் நடைமுறையில் அது இல்லை. யுத்த நிறுத்தம் இருப்பதாக ஒரு புறம் கூறிக்கொண்டே மறுபுறம் பெரும் யுத்தச் செயற்பாடுகளும், இராணுவ நட வடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் அதிசயப் பூமி இது. பொதுவாக யுத்த நிறுத்த விடயத்தில் என்றில்லை, தேசிய இனப்பிரச்சினை தொடர்பான சகல அம்சங்களி லுமே இவ்வாறு இரட்டைவேட நிலைப்பாடே தரப்புகளி னால் இங்கு வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் கண்கூடு. புதிதாக ஆட்சிப்பீடம் ஏறிய ஜனாதிபதி மஹிந்தரின் அரசு யு…
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியா மன்னார் எல்லைப் புறத்தில் இரு தரப்புகளும் படைகளைக் குவிக்கின்றன வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் இடையிலான எல்லை நெடுக, இரு புறங்களிலும், இரு தரப்பினரும் பெரும் யுத்த ஆயத்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு புறங்களிலும் படை மற்றும் ஆயு தத் தளபாடக் குவிப்பில் இரண்டு பக்கத்தினரும் ஈடுபட்டிருக்கும் அதேசமயம், அந்த எல்லை நெடுகிலும் அவ்வப்போது மோதல்களும் தொடர்ந்து வெடித்து வரு கின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஓமந்தை மேற்கில் கள்ளிக்குளம் மற் றும் தம்பனைப் பகுதிகளில் ஞாயிறு இர வும் நேற்று அதிகாலையும் மோதல்கள் இடம்பெற்றன…
-
- 0 replies
- 1.4k views
-
-
செவ்வாய் 28-08-2007 03:47 மணி தமிழீழம் [செந்தமிழ்] அத்தாசின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீளவும் பழையநிலைக்கு கொண்டுவரகோரிக்கை சிறீலங்காவில் பத்திரிகையாளர்களாக தொழில்புரியும் ஊழியர்கள் சங்கம் நேற்று சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலருக்கு சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் ஆலோசகராகவும் பாதுகாப்பு பத்தி எழுத்தாளருமான இத்பால் அத்தாசிற்கு மறுபடியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. அவரது பாதுகாப்பு எதுவித முன்அறிவிப்பு ஏதுமின்றி தீடீரென குறைக்கப்பட்டுள்ளதாகவம் இனம்தெரியாத நபர்கள் உந்துருளியில் அவரை தொடர்பதாகவும் இதனால் அவரது பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுவதாகவும் சிறீலங்காவின் பாதுகாப்பு செயலருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாக …
-
- 2 replies
- 978 views
-
-
போராட்டத்தில் உயிரிழந்த தமிழீழ விடுலைப் புலிகளின் உறுப்பினாகள் புதைக்பட்டிருக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களளை இலங்கை அரசு படைகள் தொடர்ந்து புல்டோசர்கள் கொண்டு அழித்து வருகின்றன என்று கூறப்படுகின்றது.நாகரிக உலகம் அருவருக்கத்தக்க வகையில் இந்தக் கொடூர மிலேச்சத்தனத்தை இலங்கை அரசுப்படைகள் புரிந்து வருகினறன என த.தே.கூட்டமைப்பின் நாடாளுமனற் உறுப்பினர் ப. அரியநேந்திரன் விசனம் தெரிவித்திருக்கிறார். 'யுத்த கைதிகளும், யுத்ததில் காயமுற்றோரும், யுத்த நினைவுச் சின்னங்களும் அவை அல்லது அவர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்திருப்பினும் மதிக்கப்ட வேண்டும் என்பதே சர்வதேச நாகரிக மரபாகும். அதை மீறி, அநாகரிகமாகவும் கொடூரமாகவும் நடந்து வருகிறது இலங்கை அரசு. இறந்த பின்னரும் புலிகளின் போராளிக…
-
- 0 replies
- 940 views
-
-
வவுனியா, மன்னார் எல்லையில் மோதல் 3 இராணுவம் பலி, 5 பேர் காயம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வவுனியா, மன்னார் எல்லையில் இருக்கும் பாலமோட்டைப்பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு முன்னகர்ந்த சிறிலாங்கா இராணுவத்தை நிறுத்த விடுதலைபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 3 இராணுத்தினர் பலியாகி உள்ளார்கள். மேலும் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். மாலை 4 மணியிலிருந்து 6.30 வரை நடைபெற்ற இம்மோதலில் விடுதலைப்புலிகளுக்கு எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளார் இளந்திரயன் தெரிவித்துள்ளார். SLA, Tigers clash in Vavuniyaa-Mannaar border At least 3 Sri Lanka Army (SLA) soldiers were killed and five wounded in …
-
- 0 replies
- 876 views
-
-
13 பொது மக்கள் படுகொலை; சாட்சிக்கு நீதிமன்றம் உத்தரவாதம் கிளிநொச்சியில் இருந்து வந்து இங்கு சாட்சியம் அளிப்பதற்கு அல்லைப்பிட்டி, வேலணை, புளியங்கூடல் ஆகிய பகுதிகளில் கடந்த வருடம் மே மாதம் 13ஆம் திகதி பதின்மூன்று பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சிக்கு யாழ். நீதிமன்றம் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கி உள்ளது. கடந்த வருடம் மே 13ஆம் திகதியன்று அல்லைப்பிட்டி, வேலணை, புளியங்கூடல் ஆகிய இடங்களைச் சேர்ந்த பதின் மூன்று பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கின் முக்கிய சாட்சியான பெண்மணி ஒருவர் உயிர் அச்சத்தின் பேரில் கிளிநொச்சி சென்று வசித்து வருகிறார். இந்த வழக்கு விசாரணைகளை ஊர்காவற்றுறை மேலதிக நீதிவான் இ.த.விக்னராஜா முன்னிலையில் நேற்று எடுக்கப்பட்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
கானல் நீராக மாறிவரும் தீர்வுக்கான யோசனைத் திட்டம் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கான யோசனைத் திட்டத்தைத் தயாரித்து சிபார்சு செய்யவெனத் தம்மால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு விடயத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில் நிற்கிறார் என்பதைக் கடந்தவாரம் இப்பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம். "ஒரு புறம் வேடன்; மறுபுறம் நாகம்' என்ற நிலைமை. சர்வதேச சமுதாயத்தைத் திருப்திப்படுத்துவதற்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்காகத் தென்னிலங்கையின் இணக்கப்பாட்டை உருவாக்கும் ஆக்கபூர்வமான எத்தனத்தில் தாம் ஈடுபட்டிருக்கிறார் எனக் காட்டுவதன் மூலம் உலக சமூகத்தை சமாளிப்பதற்கு இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற தந்…
-
- 0 replies
- 654 views
-
-
கருணா குழுவை ஓரங்கட்டி கிழக்கில் புதிய கூட்டணிக்கு அரசு ஆதரவு? ஜ திங்கட்கிழமைஇ 27 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ கிழக்கில் இவ்வருட இறுதியில் நடத்த உத்தேசித்துள்ள உள்ளூராட்சி தேர்தலில் கருணா குழுவினரை ஓரங்கட்டி புதிய தமிழ் அமைப்பை நிலைநிறுத்துவதன் மூலம் அரசாங்கம் தனது தந்திரோபாயத்தைக் கையாள இருப்பதாக ஆங்கில வார இதழொன்று அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. புதிய முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அடுத்த சில வாரங்களில் இவை தமது அரசியல் நடவடிக்கைகளை கிழக்கில் ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இணைந்து தமிழ் ஜனநாயக முன்னணி என்ற ஒரு குடையின் கீழ் இயங…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈழத் தமிழர்களை பாதுகாக்க வேண்டுமென்ற உள்ளார்ந்த உணர்வு கருணாநிதிக்கு இல்லை * பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு தமிழகத்திலுள்ள இரு பிரதான கட்சிகளும், உணவுக்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வதைப் போலவே ஈழத் தமிழர் பிரச்சினையைக் கையாளுவதாக குற்றம் சாட்டியுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஈழத் தமிழர்களை பாதுகாக்க வேண்டுமென்ற உள்ளார்ந்த உணர்வு முதலமைச்சர் கருணாநிதிக்கு இல்லையெனவும் தெரிவித்துள்ளார். ஏழாயிரம் ஈழத் தமிழர்களை இந்திய இராணுவம் படுகொலை செய்துவிட்டதாக விடுதலைப் புலிகளும், எமது பிரதமரை புலிகள் கொன்றுவிட்டதாக நாமும் கூறிக் கொண்டிருப்பதில் என்ன இலாபம்? இது புலிகளின் பிரச்சினையோ ஈழத்தமிழர்களின் பிரச்சினையோ அல்ல. இலங்கை இனப்பிரச்சினை இந்தியாவுக்கே ஆபத்தை வ…
-
- 1 reply
- 1.3k views
-
-
கொழும்பு: கொழும்பு நகரில் விடுதலைப புலிகள் ரசாயன குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தப் போவதாக இலங்கையில் பீதி கிளம்பியுள்ளது. இலங்கையில் பாதுகாப்புப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சண்டை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு புலிகள் விமானப்படை மூலம் நடத்திய தாக்குதல் இலங்கை அரசை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், விடுதலைப் புலிகள் ரசாயன குண்டு வீசித் தாக்க திட்டமிட்டிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் கொழும்பு மற்றும் முக்கிய இடங்களில் ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். போர் ந…
-
- 3 replies
- 1.7k views
-
-
பல்கலைக்கழக மாணவர்களைச் சீண்டும் மகிந்தவின் அடுத்த தாக்குதல் யார் மீது?-செய்திஆய்வு- Written by Seran - Aug 27, 2007 at 03:46 PM சிறிலங்காவின் அணைத்துப்பல்கலைக்கழக மாணவர்களின் ஊர்வலம் பொலிஸாரின் தாக்குதலையடுத்து அலரிமாளிகை செல்ல முடியாது இடைநடுவில் குழம்பியது. புதிய கல்வித்திட்டம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்காமை போன்ற பிரச்சனைகளை முன்வைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்து எடுத்துச்சொல்வதற்காக அணைத்;துப்பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 2000பேர் ஆர்ப்பாட்டப்பேரணியாக ஜனாதிபதியின் உத்தியோக ப+ர்;வமான வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு செல்ல முற்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டப்பேரணியை கொள்ளுப்பிட்டிச்சந்தியில் வைத்து பொலிஸார் இடைமறித்த …
-
- 0 replies
- 1k views
-
-
அடுத்த மாதம் 5ம் திகதியன்று வடக்குகிழக்கு வாழ் தமிழர்கள் படும் அவலங்கள், எதிர்நோக்கும அடக்குமுறைகள், ஆபத்துக்கள் குறித்து நடாடாளுமன்றததில் முழுநாள் விவாதம் நடத்தவதற்கு ஏற்பாடகியுள்ளது. இந்த விவாதத்தை எதிர்வரும 5ம் திகதி புதன்கிழமை நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவித்தள்ளன.. யாழ் குடாநாட்டில் கட்டுப்பாடின்றி, தங்குதடையின்றி,கங்குகணக்கின
-
- 2 replies
- 1.1k views
-
-
திங்கள் 27-08-2007 13:21 மணி தமிழீழம் [கோபி] வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளில் மோதல்:5 படையினர் படுகாயம் வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள இடம்பெற்றுள்ளன. ஓமந்தைக்கு மேற்கே கடந்த 48 மணி நேரத்தில் கள்ளி்க்குளம் மற்றும் தம்பனைப் பகுதியில் நடைபெற்ற மோதல்களின் போது சிறீலங்காப் படையினரர் தரப்பில் 5 பேர் படுகாமயடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடாக மையம் தெரிவித்துள்ளது. pathivu
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்போம்: கோத்தபாய [ஞாயிற்றுக்கிழமை, 26 ஓகஸ்ட் 2007, 21:20 ஈழம்] [சி.கனகரத்தினம்] வன்னிப் பெருநிலப்பரப்பை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்போம் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் குடிமக்கள் சிறப்புப் படையணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை கல்கிரியகம பயிற்சிப் பள்ளியில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கோத்தபாய ராஜபக்ச பேசியதாவது: கிழக்கின் வெற்றியைத் தொடர்ந்து வன்னியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்போம். சிறிலங்கா இராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்பி நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்…
-
- 5 replies
- 1.7k views
-
-
த.வி.கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரியும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் ஈ.பி.ஆர்.எல்.எவ். பதமநாபா பிரிவின் இணைப்பாளர் ஸ்ரீதரனும் நேற்று முன்தினமிரவு சிரிலங்ககா ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். அலரிமாளிகையில் இரவு எட்டு மணிக்கு ஆரம்பமான அந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணிநேரம் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவும் அங்கு இருந்துள்ளார். மட்டக்களப்பிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மேற் கொண்ட விஜயத்தின் போது அங்குள்ள மக்கள் தெரிவித்த பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு இடம் பெற்றதாக கூறப்படுகின்றது. இந்தச் சந்திப்பில் த.வி.கூட்ட…
-
- 5 replies
- 1.7k views
-
-
வெளிநாட்டு பயணங்களுக்காக மகிந்த ஜனாதிபதி நிதியிலிருந்தே பணம் பெற்றார் * மங்கள குற்றச்சாட்டு -எம்.ஏ.எம்.நிலாம்- ஜனாதிபதி நிதியிலிருந்து மகிந்த ராஜபக்ஷ வெளிநாட்டுப் பயணங்களுக்கு பணத்தைப் பெற்றிருப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டைக் கொள்ளையடித்த ஒரே அரசாங்கம் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமே எனவும் சாடியுள்ளார். நாட்டின் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட மங்கள சமரவீர மோசமான ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக்கியமைக்கான பாவத்தை நாமும் சுமக்க வேண்டியிருப்பதாகச் சுட்டிக் காட்டினார். ஜனாதிபதி சமீபத்தில் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது சுமார் நூறு பேரளவில் அழைத்துச் சென்றார். இந்…
-
- 0 replies
- 980 views
-
-
புலிகளின் பீரங்கி வலுவால் வடக்கில் படைக்கு நெருக்கடி! வெகுதூர வீச்செல்லை ஆட்லறிகளும் இருக்கலாம் என அச்சம் கொழும்பு,ஓகஸ்ட்27 சுமார் ஒரு வருட கால அமைதிக்குப் பின்னர் வடக்கில் படையி னரின் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து, குடாநாட்டின் தென் முனைக்கு அப்பால் பூநகரி கல்முனை முனைப் பகுதி போன்றவற்றிலிருந்து கடந்த வாரம் விடுதலைப் புலிகள் நடத்திய பீரங்கித் தாக்குதல்கள் படைத் தரப்பை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பயன்படுத்தியவற்றை விடவும் தூர வீச்சு எல்லை விரிவுபடுத்தப்பட்ட பிற பீரங்கி ஷெல்களையும் விடுதலைப் புலிகள் சுவீகரித்திருப்பார்களாயின் அது வடமுனையில் படைத்தரப்புக்கு பெருஞ் சவாலாக அமையும் என்று இராணுவ ஆய்வா ளர்கள் கொழும்பில் …
-
- 0 replies
- 1.6k views
-
-
இலக்கு வைக்கப்படும் தளபதிகள்! -விதுரன்- யாழ்.குடாநாட்டில் இராணுவ உயரதிகாரிகளின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலேற்பட்டுள்ளது. வடக்கில் ஏனைய களமுனைகளை விட குடாநாட்டில் படைத் தளபதிகளின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலானது, குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அண்மைக்காலங்களில் குடாநாட்டில் படைத்தளபதிகள் பலர் விடுதலைப் புலிகளின் ஷெல் தாக்குதல்கள் மற்றும் மோட்டார் தாக்குதல்களிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியமையானது, அடுத்த தடவைகள் நடைபெறும் தாக்குதல்களிலிருந்து அவர்கள் தப்புவார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது. யாழ்.குடாவின் பெரும் பகுதி படையினரின் பூரண கட்டுப்பாட்டிலுள்ளது. வடமராட்சி கிழக்கு மற்றும் முகமாலைக்கு…
-
- 0 replies
- 2k views
-
-
திங்கள் 27-08-2007 05:31 மணி தமிழீழம் [செந்தமிழ்] தொடரூந்துடன் மோதி இருபடையினர் பலி நேற்று உந்துருளியில் சென்ற இருசிறீலங்கா படையினர் கொழும்பு வவுனியா தொடரூந்துடன் நாவற்குளம் மதவாச்சிப்பகுதியில் மதியம் 12.30 மணியளவில் மோதியதில் அவ்இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவ்விபத்தையடுத்து வுவுனியாநோக்கி பயணித்த தொடரூந்து 45 நிமிட நேரம் தாமதமாக வவுனியா சென்றடைந்துள்ளதாக தெரியவருகிறது நன்றி .பதிவு
-
- 0 replies
- 703 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள பெரும் போருக்கு பின்னர் தமிழ் ஈழம் உருவாகும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் வைகோ தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம் புதுவயலில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:வீரமுள்ள இளைஞர்கள் கொண்ட ம.தி.மு.க. வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. தமிழக ஆட்சியில் விரைவில் மாற்றம் ஏற்படும். அப்போது ஊரும், உற்றமும் எங்களை தேடி வந்து ஆதரவு கேட்கும். ஈழத் தமிழர்கள் துயரில் இரு ந்து மீள வேண்டும். அங்கு பெரும் போர் விரைவில் உருவாக போகிறது. அதற்கு ஈழ தமிழர்கள் தயாராகி விட்டனர்.போருக்கு பிறகு விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் உருவாகும்.அண்ணாத்துரை தமிழர்களை பாதுகாக்க தி.மு.க. வை உருவாக்கினார். அது குடும்ப …
-
- 7 replies
- 2.3k views
-
-
யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதே புலிகளின் திட்டம்: "த நேசன்" ஜஞாயிற்றுக்கிழமைஇ 26 ஓகஸ்ட் 2007இ 07:38 ஈழம்ஸ ஜபி.கெளரிஸ யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கு என்றும் அதற்கான சிறந்த வழியாக அங்குள்ள இராணுவத் தலைமைப்பீடத்தை அகற்ற முற்பட்டுள்ளனர் என்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. த நேசனின் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதலில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறீ கடந்த வாரம் தப்பியிருந்தார். இந்த சம்பவம் பாதுகாப்புத் தரப்பினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்த…
-
- 6 replies
- 1.8k views
-
-
வடபோர்முனை தாக்குதல் குழப்பத்தில் படைத்தரப்பு -அருஸ் (வேல்ஸ்)- அரசுக்கு எதிரான போராட்டங்கள் தென்னிலங்கையில் வலுவடைந்து வருகையில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகளும் தரவுகளும் நம்பிக்கை தருவனவாக இல்லை. அனைத்துலகத்தில் உள்ள முன்னணி நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் இலங்கையின் மொத்த கடன் தொகை 3 றில்லியன் ரூபாக்களாக அல்லது 3,000 பில்லியன் ரூபாக்களாக உயர்ந்துள்ள அதேசமயம், ஆசியாவிலேயே அதிகரித்த வட்டிவீதமுள்ள நாடும் இலங்கைதான் என வெளிவரும் தகவல்கள் ஆட்சியாளர்களுக்கு அனுகூலமாக இல்லை. நாட்டின் இந்த நிலைக்கான பிரதான காரணம் போரே என்பது பொருளியல், அரசியல், படைத்துறை ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. போர் என்பது இன்றோ அ…
-
- 1 reply
- 1.7k views
-