ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
மட்டு. தாண்டியடிப்பகுதியி விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலுமில்லலம் முற்றாக அழிக்கபட்டு அங்கு பொலிஸ் நிலையத்திற்கான கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது மட்டு. படுவான்கரைப் பகுதியில் படையினர் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையில் அப்பிரதேசம் படையினரால் கைப்பற்றபட்டடன.இதையடுத்து வாகரை மற்றும் தாண்டியடி பகுதிகளிலிருந்த மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இடம் தெரியாது படையனரால் முற்றாக அழிக்கபட்டது. தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்தை விடுதலைப் புலிகள் மிகச் சிறப்பாக அமைத்து அதன் சுற்றுப்புறங்களில் நினைவுத் தூபிகளும் எழுப்பப்பட்டிருந்தன.இந்தப் பகுதியைக் கைப்பற்றிய படையினர் நினைவுத் தூபிகளை இடித்துத் தரைமட்டமாக்கியதுடன் மாவீரர் சமாதிகள் அனைத்தும் புல்டோசர்களால் கிளறியெறியப்பட்டு …
-
- 2 replies
- 1.6k views
-
-
இராணுவத்தளபதியை எங்கும் குறிவைத்து தாக்க முடியும் என்பதனை நிரூபித்துக்காட்டிய புலிகள்: "டெய்லி மிரர்" [வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2007, 05:42 ஈழம்] [கொழும்பு நிருபர்] கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தளபதியே குறிவைக்கப்பட்டிருந்தார் என்பது தெளிவானது. இராணுவத் தளபதிக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன் இராணுவத் தளபதியின் ஒவ்வொரு அசைவையும் தாம் உன்னிப்பாக அவதானிப்பதாகவும், அவரை எங்கும் தம்மால் குறிவைக்க முடியும் என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இதன் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர் என்று "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது. சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு இன்று வெள்ளிக்கிழமை எழுதிய தனது பாதுகாப்பு ஆ…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஓக. 25 இல் பனங்காமம்பற்றில் பண்டாரவன்னியனின் 204 ஆம் ஆண்டு நினைவு நாள் [வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007, 18:07 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மாவீரன் பண்டாரவன்னியனின் 204 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் 25 ஆம் நாள் பனங்காமம்பற்றில் நடைபெறவுள்ளது. போர்த்துகேயர் மற்றும் ஒல்லாந்தர் ஆகிய ஐரோப்பாவின் இரண்டு அந்நிய சக்திகளுக்கு அடிபணியாது அவர்களின் ஆனையிறவு மற்றும் பூநகரிக்கோட்டைகளை தாக்கியழித்து தாய் மண்ணின் வீரத்தை அன்றே நிலைநாட்டிய கைலை வன்னியனின் ஆட்சிமையம் இருந்த மண் பனங்காமம்பற்று. அந்த மண்ணில் எதிர்வரும் சனிக்கிழமை (25.08.07) பண்டாரவன்னியனின் நினைவு நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. பனங்காமம்பற்றின் பாலிநகர் பொது விளையாட்டு மைதானத்தில்…
-
- 2 replies
- 1.4k views
-
-
வடக்கு கிழக்குக் கொலைகளுக்காக ஒருவரையாவது கைது செய்தீர்களா? நேற்று நாடாளுமன்றத்தில் சிறிகாந்தா நா.உ. சீற்றம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து அன்றாடம் மோசமாக இடம்பெற்றுவரும் கொலைகள் தொடர்பாக இதுவரை எவராவது ஒருவரைப் பொலிஸார் கைது செய் துள்ளனரா? அங்கே துணைப்படை என்ற பெயரில் ஆயுதங்களுடன் நடமாடும் அரச கைக்கூலிகளுக்கு கொலை செய்வதற்கான "லைசென்ஸ்' வழங்கப்பட்டிருக்கின்றது . இப்படி நேற்று நாடாளுமன்றில் சீற்றத்துடன் கூறினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா. குற்றவியல் சட்டக் கோவைகள் திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இப்படிக் கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: இன்று நா…
-
- 0 replies
- 899 views
-
-
ஓமந்தைச் சோதனை நிலையத்தை ஏழு நாள்களும் போக்குவரத்துக்குத் திறக்குக செஞ்சிலுவையிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை வன்னிக்கான போக்குவரத்தைச் சீராக மேற்கொள்ள வசதியாக ஓமந்தைச் சோதனை நிலையத்தை வாரத்தில் ஏழு நாள்களும் திறக்க வேண்டும் என்று விடுதலைப் புலி கள் கோரியுள்ளனர். நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற் கொண்ட செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரூன் வன்டைன்ஹோவிடம் எழுத்துமூல மாக இக்கோரிக்கையை விடுதலைப் புலி கள் சமர்ப்பித்தனர். கிளிநொச்சியில் நேற்று நடந்த சந்திப் பில் துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் சோ. தங்கன், பன்னாட்டு அரச சார்ப்பற்ற அமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்பாளர் பாவரசன் ஆகியோர் அவருடன் பேச்சு நடத் தினர். ஓமந்தைச் சோதனை நிலையம் ஊடான…
-
- 0 replies
- 1.5k views
-
-
கருணா குழுவினர் பொலிஸ் சேவையில் இணைய முடியாதென்று கூற முடியாது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகிறார் கருணா குழுவினர் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்ள முடியாது எனக் கூறமுடியாது. தரப்புக்களை கோடிட்டுக் காட்டி ஆட்சேர்ப்பு செய்வது நடைமுறையில் இல்லாததொன்றாகும். ஏனெனில், இலங்கையில் பிறந்த எவரும் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்வதற்காக விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிப்பவர்களில் பொலிஸ் திணைக்களத்தால் கோரப்படும் அடிப்படைத் தகைமைகளைக் கொண்டுள்ளவர்கள் மட்டுமே பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர் என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஊக்குவிப்பு நலன்புரி அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பிலுள்ள தேசிய…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு நிலைமை இலங்கையின் சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் தமக்குள் முறுகலை விடுத்து, உரிமையைப் பெறுவதற்கான எழுச்சியில் ஒன்றுபட்டு நின்றாலேயே இரு தரப்புகளினதும் நியாயமான அபிலாஷைகளும், வேணவாவும், எதிர்பார்ப்பும் நிறைவேறும் என்பது திண்ணம். சிறுபான்மை இனங்கள் தமக்குள் முரண்டுபட்டு, மோதிக்கொண்டிருந்தால் அது அவர்களையே அதிகம் பாதிக்கும். சிறுபான்மையினரை அடக்கி, ஒடுக்கி அவர்களின் உரிமைகளை மறுத்து ஆளும் பேரினவாதத்துக்கு அது வாய்ப்பாகியும் விடும். இதன் காரணமாகவே சிறுபான்மை இனங்களிடையே மோதலை ஏற்படுத்துவதைத் தனது ஆட்சித் தந்திரமாகப் பேரினவாதம் பயன்படுத்தி வருகின்றது என்பதும் கண்கூடு. தமிழர் முஸ்லிம் உறவு கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சமஷ்டி தீர்வை எட்டமுனைந்தால் பாராளுமன்றில் எமக்குள்ள பலத்தினை பயன்படுத்துவோம் அரசுக்கு விமல் வீரவன்ச எச்சரிக்கை வீரகேசரி நாளேடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மக்கள் ஆணையை உதாசீனம் செய்துவிட்டு சமஷ்டி முறைமையிலான தீர்வை சர்வகட்சி மாநாடு மூலம் எட்டமுனைகிறது. அந்நிலையேற்பட்டால் பாராளுமன்றத்திற்குள் எமக்குள்ள பலத்தை நாட்டின் நன்மைக்காக பிரயோகிப்போம் என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்தார். கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: அரசாங்கத்தின் பிரதான கட்சி…
-
- 1 reply
- 1.1k views
-
-
நா.உ. ஜெயானந்தமூர்த்தியின் சகோதரர் சுட்டுப் படுகொலை ஜதிங்கட்கிழமைஇ 20 ஓகஸ்ட் 2007இ 22:26 ஈழம்ஸ ஜந.ரகுராம்ஸ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தியின் மூத்த சகோதரர் சேனாதிராஜா தியாகச்சந்திரன் (வயது 55) இன்று இரவு மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் விபத்தினால் கொல்லப்பட்டுள்ளதாக முதலில் வெளியான செய்திகள் தெரிவித்த போதிலும்இ வாழைச்சேனை மருத்துவமனை வட்டாரங்கள் அவரது உடலில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் இருப்பதனை உறுதிப்படுத்தியுள்ளன. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர்இ இன்று திங்கட்கிழமை மாலை வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போ…
-
- 8 replies
- 2k views
-
-
வியாழன் 23-08-2007 18:02 மணி தமிழீழம் [சிறீதரன்] டக்ளசின் வருகையால் நல்லூர் ஆலய சுற்றாடலில் பதற்றம் ஈபிடிபி ஆயுததாரியும் அமைச்சரும் டக்ளஸ் தேவானந்தா நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு மேற் கொண்ட விஜயம் காரணமாக அப் பகுதியில் பெரும் பதட்டமான நிலமை காணப்ப்டது. கடந்த திங்கட்கிழமை பகல் டக்ளஸ் தேவானந்த நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்தமையால் அவரின் பாதுகாப்பக் காரணங்கள் என்ற போர்வையில் ஆலயத்திற்கு வருதை தந்திருந்த அடியவர்கள் படைத்தரப்பினராலும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களினாலும் பலத்த துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். ஆலய சுற்றாடலில் உந்துருளிகளில் வந்தவர்கள் சோதனை என்ற பெயரில் அடியார்களை பலத்த கேள்விகளுக்கு உள்ளாக்கியதுடன் குறிப்பிட்ட இடங்களில் நின…
-
- 5 replies
- 1.8k views
-
-
கருணா குழு மீது திடீர் தாக்குதல்: ஒருவர் பலி திருகோணமலை சாம்பல்தீவில் கப்பம் அறவிடச் சென்ற சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரை இலக்கு வைத்து இன்று நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே அக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார். திருகோணமலையில் முகாம் அமைத்துள்ள கருணா குழுவினர் சாம்பல்தீவுப் பகுதிக்கு இந்த வார தொடக்கத்தில் சென்று அங்குள்ள வாகன உரிமையாளர்களிடம் கப்பம் தரவேண்டும் என்று எச்சரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வாகனம் ஒன்றிலும் உந்துருளி ஒன்றிலும் கருணா குழுவைச் சேர்ந்த சிலர் சாம்பல்தீவுப் பகுதிக்கு இன்று வியாழக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது இத்தாக்குதல…
-
- 1 reply
- 1.5k views
-
-
கோட்டபாய ராஜபக்ஸவின் பயணத்தால் கடைகளினுள் வைத்து பூட்டப்பட்ட பொதுமக்கள். கொழும்பு ஆமர்வீதியில் இன்று காலை 10.00 மணிக்கு பயணித்தவர்கள், கடைகளில் பொருட்கள் வாங்க சென்றவர்கள் கடைக்காரர்கள், பல்வேறு வேலைகளுக்காக அப்பகுதியால் சென்றவர்கள் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் எனப்பலருக்கும் வித்தியாசமான அனுபவம் ஒன்று காத்திருந்தது. ஆமர்வீதியில் திரும்பும் இடத்தில் இருந்து அந்த வீதியின் இரு மருங்கிலும் குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினரால் அவசர அவசரமாக வீதிகளில் நின்றவர்கள், சென்றவர்கள், என அனைவரும் மறிக்கப்பட்டனர், வாகங்களின் போக்குவரத்து ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்தது. மறிக்கப்பட்டவர்கள் அவசரமாக கடைகளுக்குள்ளும், கட்டடங்களுக்குள்ளும் கட்டாயப்படுத்தி கொண்டு செல்லப்பட்டு ந…
-
- 6 replies
- 1.9k views
-
-
ஜாதிக ஹெல உறுமயவுக்கு எதிராக "உண்மையான ஹெல உறுமய" உருவானது [வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007, 15:49 ஈழம்] [ப.தயாளினி] பௌத்த பிக்குகளைக் கொண்ட ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கு எதிராக சபா (உண்மையான) ஹெல உறுமய என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய சங்க ஒருங்கிணைப்பின் முன்னாள் செயலாளர் கலகொடதே ஞானசார மற்றும் விதரந்தெனிய மேதானந்த தேரர் ஆகியோர் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர். நாட்டினது ஊழல் அரசியலை முடிவுக்குக் கொண்டு வரும் என்ற மக்களின் நம்பிக்கை நிறைவேற்ற ஹெல உறுமய தவறிவிட்டது என்று விதரந்தெனிய மேதானந்த தேரர் குற்றம்சாட்டியுள்ளார். புதினம்
-
- 3 replies
- 1.2k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....4c4cf38708677c4
-
- 0 replies
- 1.3k views
-
-
500 மில்லியன் டொலரை கடனாகப் பெற முடிவு: சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி [வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007, 18:20 ஈழம்] [கொழும்பு நிருபர்] 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை 13 வெளிநாட்டு வங்கிகளிடமிருந்தும், இரண்டு உள்நாட்டு வங்கிகளிடமிருந்தும் கடனாகப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை கூடியபோது வாழ்க்கைச் செலவு குறித்து எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு உரை நிகழ்த்தினார். அந்த உரையில், மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களையும், சலுகைகளையும் நிறுத்தியுள்ள மகிந்த அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து 500 மில்லியன் டொலர் அமெரிக்க டொலர…
-
- 1 reply
- 834 views
-
-
சிறிலங்கா காவல்துறையினருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் சட்டம் நிறைவேற்றம் [வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007, 18:35 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் காவல்துறையினருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் குற்றவியல் சட்டமூலத்தை சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றியுள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் காவல்துறையினர் ஒருவரை கைது செய்து 48 மணி நேரம் வரை தமது கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இந்த சட்டத்தையே மாற்றி 48 மணிநேரம் வரை ஒருவரை காவல்துறையினரின் காவலில் வைக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும்…
-
- 1 reply
- 719 views
-
-
புதன் 22-08-2007 16:53 மணி தமிழீழம் [செந்தமிழ்] முல்லைத்தீவில் வான்வெளித் தாக்குதல்கள் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கில் சிறீலங்கா வான்படையினரால் வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்று காலை முள்ளிவாய்கால் கிழக்கில் மக்கள் குடியிருப்பை இலக்கு வைத்தும் பேரூந்தை இலக்கு வைத்தும் இரு தடவைகள் மிக் 27 யுத்த வானூர்த்திகள் தாக்குதலை நடத்தியுள்ளன. முதலாவது தாக்குதல் 7.30 மணிக்கும் 7.50 மணிக்கும் இத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் வான்வெளித் தாக்குதலில் வீசப்பட்ட குண்டுகள் குறித்த இலக்குகள் மீது விழாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. மக்கள் குடியிருப்புகள் மீது விமாக் குண்டின் சிதறு துண்டுகள் வீழ்ந்துள்ளதாகத் தெரியவருகிறது. …
-
- 1 reply
- 1.2k views
-
-
எவராலும் தடுத்து நிறுத்த முடியாது சபையில் ஈழவேந்தன் எம்.பி. சூளுரை சிங்களவர்களை இனிமேலும் நம்புவதற்கு தயாரில்லை. தமிழன் தன்னைத்தானே ஆளுவதை எவராலும் தடுக்கமுடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான ஈழவேந்தன் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சூளுரைத்தார். பாராளுமன்றத்தில் தற்போதைய கல்வி நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அவர்; `தமிழன் தன்னைத்தானே ஆளவேண்டுமென்ற தீர்மானத்திற்கு வந்துள்ளான். தமிழன் தன்னைத் தானே ஆளுவான். இதை யாராலும் தடுக்க முடியாது. தமிழையும், தமிழ்க் கல்வியாளர்களையும் அரசாங்கம் திட்டமிட்டு சாகடித்து வருகிறது. போதாக்குறைக்கு மாணவிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழக அகதிமுகாம்களில் தங்கியுள்ள இலங்கையருக்கு பிரஜாவுரிமை வழங்க பாராளுமன்ற தெரிவுக்குழு *சபையில் யோசனை சமர்ப்பிப்பு இலங்கை பிரஜா உரிமைக்கு உரித்துடையவர்களாக இருந்தும் இன்னும் பிரஜா உரிமை கிடைக்காமல் இந்தியாவின் தமிழ் நாட்டு அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமையை வழங்கும் பொருட்டு 2003 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கச் சட்டத்தை திருத்துவதற்கும் ஏனைய வசதிகளை ஏற்பாடு செய்வதற்குமான பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை செவ்வாய்க்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் செவ்வாய் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடிய போது, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் ஆளுந்தரப்பின் பிரதம க…
-
- 1 reply
- 1.3k views
-
-
தொடரும் போராட்டம்: கொழும்பில் மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று தடைகளை மீறி அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தை நோக்கிச் சென்ற சிறிலங்காவின் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். கொழும்பு "லிப்டன்" சுற்றுவட்டத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில் கூடிய 2,000-க்கும் அதிகமான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து "லிப்டன்" சுற்று வட்டத்தின் ஊடாக மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகை நோக்கி பேரணியாக நகர்ந்தனர். பேரணியில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் மகிந்த அரசாங்கத்தின் புதிய கல்வி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்ததுடன் பல்கலைக்…
-
- 3 replies
- 1.2k views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விகிரமசிங்கவை இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதியாக்குமாறு த.தே.கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் லண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு புலிகளிடம் வேண்டு கோள் விடுத்தார் என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அப்போது குறுக்கிட்ட ரணில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டாம என்று வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தவரே இந்த சிவாஜிலிங்கம் தான் எனத் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று காலை சபாநாயக்கர் தலைமையில கூடிய வேளை சபாநாயகர் அறிவித்தல்கள் சிலவற்றை விடுத்தார். அப்போது ஏற்கனவே சிவாஜிலிங்கத்தால் நடாடாளுமன்றில் எழுப்பப்பட்ட…
-
- 3 replies
- 1.2k views
-
-
தினமும் தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி [23 - August - 2007] நாட்டின் பொருளாதாரம் நாளாந்தம் அதலபாதாளத்தை நோக்கியே வீழ்ந்துகொண்டிருக்கின்றது. அரசாங்கத்துக்கு இந்தப் பொருளாதார நெருக்கடி ஒரு பொருட்டாகவே தென்பட்டதாக தெரியவில்லை. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் அரசுக்கு எந்தவிதமானதொரு நிகழ்ச்சி நிரலும் கிடையாது. மொத்தத்தில் சொல்லப்போனால் அரசிடம் உருப்படியான பொருளாதாரக் கொள்கை என்று எதுவுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. ஸ்திரமானதொரு பொருளாதாரக் கொள்கையை வகுத்துக் கொள்ளாத நிலையில் எந்த அரசும் ஆட்சியைக் கொண்டு நடத்துவதென்பது மிகக்கடினமானதும் நெருக்கடியானதுமாகும். ஒரு நாட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் அந்த நாட்டின் பொருளாதாரக் கொள்கையிலேயே தங்கியிருக்கின்ற…
-
- 0 replies
- 894 views
-
-
வெள்ளவத்தையில் இரு கிளேமோர் குண்டுகள் மீட்பு வீரகேசரி இணையத்தளம் வெள்ளவத்தை சவோய் தியட்டரிற்கு அமைந்த பகுதியில் விடிதியயான ஜடில் இன் பொலிஸார் தீடீர் தேடுதல் இரு கிளேமோர்கள் 3 குண்டுகள் மற்றும் ஒரு டெட்டனேட்டன மீட்டுள்ளதாக வெள்ள்வதை பொலிஸார் தெரிவித்தனர் சந்தேகத்திடமான நபரொருவர் நடமாடுவதாக கிடைத்த தகவல்லையடுத்து இன்று முற்பகல் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலேயே இவ் வெடிபொருட்கள் கண்டுபீடிகக்பட்டுள்ளதாக மீட்கப்பட்ட கிளேமோர் குண்டு முறையே 9 கிலோ கிராம் 5 கிலோகிராம் நிறையுடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர் இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு
-
- 11 replies
- 1.8k views
-
-
திங்கள் 20-08-2007 16:23 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ்ப்பாணத்தில் இன்று காலை இராணுவப் புலனாய்வாளர்கள் மேற் கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் டெனிஸ் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றும் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். இதில் கொல்லப்பட்டவர் புளியங்கூடல் தெற்க்கைச் சேர்ந்த சிவசாமி சிறிதரன் (வயது 31) மற்றும் படுகாயம் அடைந்தவர். அதே இடத்தைச் சேர்ந்த அ.யூகிட்டன் (வயது 21) என்பவாராவார். காலை 7.00 மணியளவில் இவர்கள் உந்துறுளியில் யாழ்ப்பாணம் பண்னைப் பாலம் ஊடாக கடமைக்கு வந்த வேளையில் இவர்களை இரண்டு இலக்கமற்ற உந்துறுளிகளில் இராணுவப் புலனாய்வாளர்களுடன் ஈ.பி.டி.பி ஒட்…
-
- 4 replies
- 1.1k views
-
-
நாட்டின் பிரதமராக இருக்கத் தகுதியற்ற ரத்தினசிறிவிக்கிரம நாயக்க-செய்திஆய்வு- ஒரு நாட்டை ஆளும் பிரதமருக்கு சில தகுதியகள் இருக்க வேண்டும்.ஒரு விடையத்தைக் கையாளும் போது அது தொடர்பான கருத்துகளை வெளியிடும் கண்ணியம் இருக்க வேண்டும். ஒரு நாட்டின் தலைவர் மனம் போன போக்கில் ஒரு மனநோயாளி போன்று பேசமுடியாது.அவ்வாறு பேசினால் அது அவரது தகைமையைக் கேள்விக்குறியாக்கும்.அந்த நிலைமை சிறிலங்காப் பிரதமருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பரதமர் தான் என்பதை மறந்து அநாகரிகமாக பேசியுள்ளது நாட்டுக்குமேலும் களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் ஜோன்ஹோல்ம்ஸ் குறித்து பிரமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க வெளியி…
-
- 0 replies
- 1k views
-