ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
வவுனியாவில் தாக்குதல் - நான்கு படையினர் பலி வவுனியாவில் உள்ள திருவேகம என்ற சிங்களக் கிராமத்தில் சிறிலங்கா ஊர்காவல்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் நான்கு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழீழத் தொலைக்காட்சியில் இவ்வார ஆய்வாக நடைபெற்ற "சிறீலங்காவும், நிதி நிலமையும்" - கலந்து கொண்டவர்கள் திரு.வீராவுடன் தமிழீழ பொரூளதார ஆய்வாளர் திரு.பாலகிருஸ்ணன் மற்றும் தமிழீழ வைப்பகத்தின் நடுவப் பணி மேலாளர் திரு.இந்திரமோகன்
-
- 0 replies
- 1.5k views
-
-
தற்போதைய யுத்தம் எவராலும் வெற்றிகொள்ளப்பட முடியாது: அங்கிலிக்கன் திருச்சபை. யுத்ததிற்கான முதலீடுகள் இலங்கையில் வாழும் சிறுவர்களின் வாழ்வை பாதிக்கும் என அங்கிலிக்கன் திருச்சபையின் ஆயர் வணக்கத்திற்குரிய டுலிப் டீ சிக்கெர தெரிவித்துள்ளார். நடைமுறையில் உள்ள யுத்த நகர்வுகள் குறித்து ஆயர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்.... தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைகள் சரியானதல்ல என்றும் ஜனநாயக நாட்டின் தலைமைத்துவம் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வன்முறைகள் அற்ற சமரச தீர்வினை அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்…
-
- 0 replies
- 1.3k views
-
-
40 இலட்சம் இளம்பராயத்தவரின் கல்விக்கு வேட்டு வைத்திருக்கும் வறுமை, கோர யுத்தம் * லலித் கொத்தலாவல கவலை [24 - July - 2007] -எம்.ஏ.எம்.நிலாம்- வறுமையும் கோர யுத்தமும் இந்த நாட்டில் சுமார் 40 இலட்சம் இளம்பராயத்தவரின் கல்வியை மிக மோசமாக பாதிப்படையச் செய்துள்ளதாக தெரிவித்த செலிங்கோ நிறுவனங்களின் தலைவர் கலாநிதி லலித் கொத்தலாவல இந்தப் பிள்ளைச் செல்வங்களின் எதிர்காலத்தை இருளடையச் செய்யாமல் பாதுகாப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். செலிங்கோ சசெக்ஸ் கல்லூரியினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பிறப்பிலேயே மனநிலையை பாதிக்கும் நரம்பியல் நோயான ஓரிசம் (Autism)தினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான கல்விக் கூடத்தை நுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
சந்தர்ப்பவாத தலைமைத்துவங்கள் அரங்கேற்றிவரும் அழிவுகள் [24 - July - 2007] -வ. திருநாவுக்கரசு- தொப்பிகல (குடும்பிமலை) வெற்றிவிழா கொண்டாடப்பட்டதாகிய "கிழக்கு உதயம்" நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையில், பெரும்பான்மை இனம், சிறுபான்மை இனம் (சிங்கள மொழியில் "மஹ ஜாதிய", "சுலு ஜாதிய") எனும் சொற் பிரயோகங்களை தான் விரும்பவில்லை எனவும், நாம் எல்லோரும் இலங்கையர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழர் தாம் சிறுபான்மை இனம் என்பதை நிராகரித்து, பல ஆண்டுகள் கழிந்துவிட்டன என்பதை சென்றவார கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதாவது, தமிழர் இந்த நாட்டில் ஒரு தேசிய இனமே ஒழிய, சிறுபான்மை இனம் எனும் வரைவிலக்கணம் ஏற்கனவே காலாவதியாகிவிட்டது என்பதாகும். ஒருவேளை, ஜனாதிபதி ரா…
-
- 0 replies
- 985 views
-
-
தமிழர்கள் உட்பட 113 பேர் தாய்லாந்தில் தடுத்துவைப்பு சட்டவிரோதமான முறையில் குடியேறி னார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தாய் லாந்தில் 113 இலங்கையர்கள் தடுத்து வைக் கப்பட்டிருக்கின்றனர் என ராஜதந்திர வட் டாரங்களை மேற்கோள்காட்டிச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் ஈழத் தமி ழர்கள் என்றும், அனைவரும் தாய்லாந்திலி ருக்கும் மூன்று தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் அந் தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிப்பதற்கான முயற்சி களை தாய்லாந்திலிருக்கும் இலங்கைத் தூதரகம் முடுக்கிவிட்டிருப்பதாக அறிய வரும் அதேவேளை இந்த முயற்சிக்கு உதவுவோம் என அகதி களுக்கான ஐ.நா.வின் உயர்ஸ்தானிகரா லயமும் உ…
-
- 1 reply
- 1.4k views
-
-
பயங்கரவாதிகளை தோற்கடித்த நாட்டின் தலைவருக்கு கௌரவம் அளித்தமை சரியானது வீரகேசரி நாளேடு ஹக்கீமின் விமர்சனத்துக்கு அதாவுல்லா பதில்(பாலமுனை மேலதிக நிருபர்) கிழக்கின் உதயம் விழா நிகழ்வின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் வாழ்த்து தெரிவித்து, பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசில் வழங்கியதால் முஸ்லிம் சமூகத்துக்கு அவப்பெயர் எதுவும் ஏற்படவில்லை. பயங்கரவாதிகளை தோற்கடித்த நாட்டின் தலைவருக்கு இவ்வாறான கௌரவத்தை வழங்கியமையானது சந்தோசத்துக்குரிய ஒரு விடயமாகும் என்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தை விடுதலைப்புலிகளிடமிருந்து விடுவித்ததைக் கொண்டாடும் முகமாக கடந்த வியாழக்கிழமை 19ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்…
-
- 0 replies
- 1.4k views
-
-
தவிர்க்கவே முடியாத யுத்தம் போராட்டம் நிறைந்ததாக மாறியிருக்கின்றது இந்தப் பூமிப் பந்து. எங்கும் போர், யுத்தம், புரட்சி. விடுதலையின் பெயரால் சுதந்திரம், சமத்துவம், நீதி, நியாயம் வேண்டி மக்கள் புரட்சிகளை நடத்துகின்றார்கள். போர்களை முன் னெடுக்கின்றார்கள். அழிவுகள் அரங்கேறுகின்றன; அவலங்கள் பீடிக்கின்றன; அனர்த்தங்கள் நீடிக்கின்றன. போரியலின் கொடூரத்தில் சிக்கி நிற்கும் இலங்கை மக்களும் இது தேவைதானா அவசியம்தானா தவிர்க்கமுடியாத தளையா என்று எக்கணமும் சிந்தித்துக் கலங்கும் அளவுக்குக் கோர யுத்தக் கொடுமைகள் அவர்களை வாட்டி வதைத்து வறுத்தெடுத்து நிற்கின்றன. வெந்தணலாகத் தவிக்கும் யுத்தத்தின் குரூரப் பிடிக்குள் அல்லலுறும் அந்த மக்களின் நினைவெல்லாம் இந்த அகோர யுத்தம் அவசியமா என்பத…
-
- 0 replies
- 1.6k views
-
-
அமெரிக்கா - சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றினால் நிராகரிப்பு. அமெரிக்காவிற்கும், சிறீலங்காவிற்கும் இடையில் இரகசிய இராணுவ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கினை, சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும், சிறீலங்கா அதிபரின் ஆலோசகர்களில் ஒருவருமான வாசுதேவ நாணயக்காரவினால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கினை நேற்று விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதியாளர்களான பிரதம நிதியரசர் சரத் என். சில்வா, சிறானி திலகவர்த்தன, என். ஜி. அமரதுங்க அடங்கிய குழுவினரே வழக்கை நிராகரித்தனர். சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கும், சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் …
-
- 0 replies
- 826 views
-
-
யுத்தச் செலவினத்தால் வீணாக அழிகின்றது நாட்டின் பெருவளம் நாட்டில் தொடரும் யுத்தம் காரணமாகவும் யுத்தத்துக்காக அரசினால் செலவிடப்படும் பெருந்தொகை நிதி காரணமாக வாழ்க்கைச் செலவும் அதிகரிக்க நேர்வதாலும் இந்நாட்டின் பொதுமக்கள் இன்று வாழ்க்கையுடன் போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்ல முயலும் அரசின் போக்குக்கு ஆதரவளிக்காது, யுத்தத்தை நிறுத்தி சமாதான வழியில் பிரச்சினைக்குத் தீர்வுகாண நாட்டின் பொதுமக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கூற விழையும் வகையிலான இக்கட்டுரை கலாநிதி குமார் ரூபசிங்க வினால் எழுதப்பட்டதாகும். கடந்த 8ஆம் திகதி வெளியான "ராவய' பத்திரிகையில் பிரசுரமாகியுள்ள அக்கட்டுரையின் தமிழ் வடிவம் இங்கு…
-
- 0 replies
- 898 views
-
-
செவ்வாய் 24-07-2007 03:36 மணி தமிழீழம் ஜமயூரன்ஸ சிறீலங்கா அரச படைகள் வடக்கில் களமுனை ஒன்றைத் திறப்பதற்கு அஞ்சுவதாகத் தெரியவந்துள்ளது. விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை வடக்கில் மேற்கொள்ளக் கூடும் என்பதால் சிறீலங்கா படைகள் கடும் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக முகமாலை முன்னரங்க நிலைகளில் இருந்து விடுதலைப் புலிகள் முன்னனேற்ற நடவடிக்கையினை ஆரம்பிக்கக் கூடும் என்று சிறீலங்கா படைத்தரப்பு கருதுவதால் முன்னரங்க நிலையில் தொடர்ந்தும் சிறு சிறு தாக்குதல்களை சிறீலங்காப் படைத்தரப்பு நடத்தி வருகின்றது. இதன் மூலம் அரச படைகள் தாயார் நிலையில் இருப்பதாக அவர்கள் தெரியப்படுத்தி வருகின்றனர். பாரிய முன்னேற்ற நடவடிக்கை ஒன்றை தடுப்பதற்கான எதிர் மு…
-
- 0 replies
- 895 views
-
-
குடும்பிமலை இராணுவ நடவடிக்கை மகிந்தவைப் பாதுகாக்காது. குடும்பிமலை இராணுவ வெற்றியை பெரிதாக்கி தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளையும்,மக்கள் பிரச்சனைகளையும் மறைக்க மகிந்த அரசாங்கம் முயல்கிறது அவ்வாறு செய்ய மகிந்தவால் முடியுமா? மகிந்த அரசுக்கு ஏற்பட்டுள்ள உள்நாட்டு வெளிநாட்டு நெருக்கடிகளுக்கு பதிலளிப்பது புலிகளுக்கெதிரான போரை தீவிரப்படுத்துவது. அதுவும் இலகுவில் தங்களுக்கு வாய்ப்பானதாக இருக்கும் குடும்பிலையைத் தெரிவு செய்து அதனைத் தாக்குவது நல்லது என மகிந்த சகோதரர்கள் எண்ணினர். ஆந்த வகையில் குடும்பிமலை வெற்றிக்களிப்பில் ஈடுபட்ட மகிந்தவிற்கு அது தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்கள் அந்த வெற்றி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை ஒரு…
-
- 0 replies
- 816 views
-
-
நோர்வே பேச்சாளரை திரும்பப் பெற சிறிலங்கா வலியுறுத்தல் சிறிலங்காவுக்கான நோர்வே தூதரகப் பேச்சாளர் தொர்பின்னூர் ஓமர்சனை திரும்பப் பெற வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான நோர்வேயின் சிறப்புத் தூதர் ஜோன் ஹன்சன் பௌயருக்கு சிறிலங்கா சமாதான செயலகப் பணியாளர் ரஜிவ விஜேசிங்க எழுதியுள்ள கடிதத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மற்றும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் நிலைப்பாடுகள் குறித்து தவறான புரிதல்களை தொர்பின்னூர் ஓமர்சன் உருவாக்கி வருவதாக அக்கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் வன்னி பிரதேசத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நபரை விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்த்து வர…
-
- 1 reply
- 929 views
-
-
தமிழக அகதி முகாங்களில் தங்கியுள்ள தமிழ் மக்களின் தொலைபேசி இலக்கங்கள் காவல்துறையால் சேகரிப்பு இந்தியாவிற்கு அகதிகளாக சென்றுள்ள இலங்கை தமிழ் மக்களின் கைத்தொலைபேசி இலக்கங்களை தமிழக காவல்துறையின் புலனாய்வு பிரிவினர் சேகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அகதி முகாம்களில் தங்கியுள்ள அகதிகளின் தொடர்பாடல்களை புலனாய்வு செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. -பதிவு
-
- 0 replies
- 745 views
-
-
நிதானம் இழந்துவிட்ட சனாதிபதியும் விதானம் இழந்துவிட்ட அரசாங்கமும் - முரளிமாறன்- இப்போது குடும்பிமலையைப் பிடித்துவிட்டதாக கூறி, 19ம் திகதி அதனைக்கொண்டாடும் நிகழ்வுகளும் முடுக்கிவிடப்பட்டது. இந்தியப்படையால் முடியாத ஒன்றை சிறீலங்கா இராணுவம் செய்துவிட்டதாகக் அவர்கள் கூறுகிறார்கள். இலங்கையில் இந்தியப் படைகள் தங்கியிருந்த காலகட்டத்தில் இந்தியப் படைகளுக்கு கிழக்கில் தலைமை தாங்கிய இந்திய இராணுவ அதிகாரி அசோக் மேத்தா “கிழக்கு மாகாணத்தில் தொப்பிகல காட்டுப்பகுதி எந்தவிதமான கேந்திர முக்கியத்துவமும் அற்றது” எனக்கூறிய பின்னரும் தொப்பிகல என்ற மாய மானை பிடித்துவிட முப்படைகளின் பிரதம தளபதியான சனாதிபதி உத்தரவுகளை படைகளுக்குப் பிறப்பித்தார். மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள், …
-
- 0 replies
- 1.2k views
-
-
வெலிக்கடையில் பெண் அறிவிப்பாளர் உட்பட 9 பேர் கைது [திங்கட்கிழமை, 23 யூலை 2007, 18:28 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகர் கொழும்பு வெலிக்கடை காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் "தாளம்" வானொலியின் அறிவிப்பாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். கரவெட்டியைச் சேர்ந்த மணிவண்ணன் லோகநகயகி (வயது 28 ) என்ற அறிவிப்பாளரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று "தாளம்" வானொலி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மேற்படி அறிவிப்பாளருக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தவர் இராஐகிரியவில் தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற வைபவமொன்றுக்காக சென்றிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர்களும், சிங்கள…
-
- 1 reply
- 941 views
-
-
கிழக்கு உதயம் கொண்டாட்டத்திற்காக யாழில் மக்களின் கால்நடைகளை களவாடிய படையினர் யாழ்ப்பாணம் கிழக்கு உதயம் சம்பந்தமான கொண்டாட்டம் கொழும்பில் கோலகலமாக கொண்டாடிக் கொண்டிருக்க சங்கானை பண்டத்தரிப்பு இளவாலைப் சண்டிலிப்பாய் பகுதி மக்கள் தலையில் கைவைத்து ஓப்புச் சொல்லி அழுது புலம்பியுள்ளார்கள் கடந்த வியாழக்கிழமை கிழக்கின் உதயம் நிகழ்வு கொண்டாட்டத்திற்கென மேற் கூறப்பட்ட பகுதிகளில் உள்ள பல வீடுகளிலும் வளர்த்து வரப்பட்ட சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கடாக்கள் திருடப்பட்டுள்ளன. முதல் நாள் புதன் கிழமை சங்கானை பண்டத்தரிப்புப் பகுதிகளில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற் கொண்டதாகவும் அதனைத் தொடர்ந்து இந்தப் பகுதிகளில் உள்ள கடாக்கள் இரவு திருடப்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதி…
-
- 0 replies
- 789 views
-
-
திங்கள் 23-07-2007 13:19 மணி தமிழீழம் [மயூரன்] மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க இலங்கை பிரதிநிதி தலைமையிலான குழு இஸ்ரேல் செல்கிறது இஸ்ரேலிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய உலகின் மிக் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வரும் இலங்கை பிரதிநிதி தலைமையில் குழு ஒன்றை அனுப்ப ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி பிரசாத் காரியவாசம் தலைமையில் மூவர் அடங்கிய குழு இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக அங்கு விஜயம் செய்யவுள்ளது. இந்த குழுவினர் எகிப்து,சிரியா மற்றும் ஜோர்டான் ஆகிய நா…
-
- 3 replies
- 1.1k views
-
-
திங்கள் 23-07-2007 13:15 மணி தமிழீழம் [மயூரன்] ரணிலின் தீர்கதரிசனமே கிழக்கை படைகள் கைப்பற்ற முடிந்தது - லஸ்மன் செனிவிரட்ன தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதை விடவும் அவர்களை பலமிழக்கச் செய்வதே தூரநோக்குடைய அரசியல் தலைமையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அதனையே ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவை வெளியேற்றி அந்த அமைப்பை பிளவு படுத்தியதன் மூலம் விடுதலைப் புலிகளை ரணில் விக்கிரமசிங்க பலவீனப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை நிரந்தரமாக மு…
-
- 1 reply
- 1.2k views
-
-
கொழும்பை நோக்கி வெடிகுண்டுகளுடன் மூன்று வாகனங்கள்: காவல்துறையினர் தகவல் [திங்கட்கிழமை, 23 யூலை 2007, 18:58 ஈழம்] [கொழும்பு நிருபர்] அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை ஏற்றிய மூன்று வாகனங்கள் கொழும்புக்கு வந்து கொண்டிருப்பதாக தமக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இத்தகவலை காவல்துறை தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் வெளியிட்ட காவல்துறை உயரதிகாரிகள் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: இரண்டு வாகனங்களில் கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப் புலிகள் அதிசக்தி வாய்ந்த குண்டுகளை அனுப்பியுள்ளனர். ஓவ்வொன்றும் ஆயிரம் கிலோ எடையுடைய இக்குண்டுகள் சி-4 ரகத்தைச் சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது. …
-
- 1 reply
- 1.6k views
-
-
திருமதி குமாரதுங்கவின் கடிதம் [23 - July - 2007] ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவும் சேர்ந்து அமைத்திருக்கும் புதிய கூட்டணியான தேசிய காங்கிரஸை முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க உடனடியாகவே வரவேற்றிருக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் அமைப்பாளர் மங்கள சமரவீரவும் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் தேசிய காங்கிரஸ் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். மறுநாளே லண்டனிலிருந்து சமரவீரவிற்கு கடிதமொன்றை எழுதியிருக்கும் திருமதி குமாரதுங்க, புதிய கூட்டணியின் நோக்கங்களுக்கு தனது ஆசீர்வாதம் மாத்திரமல்ல தனது பெற்றோர்களான காலஞ்சென்ற பிரதமர்கள் எஸ்.டபிள்யூ.ஆர்.ட…
-
- 1 reply
- 1.5k views
-
-
சேரன் - ஜுலைட 23, 2007 . 05:02 அமெரிக்காவில் ஈழத்தமிழர் பேரணிக்கு விரிவான ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு வந்த அமெரிக்கா இப்போது புலிகள் தொடர்பாக தீவிரப்போக்கை சற்று அடக்கி வாசிப்பது போலத் தெரிகிறது. சிறிலங்காவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடரிபாக ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. இனப்பிரச்சனை தொடர்பாக அமைதிவழித்தீர்வு காணப்பட வேண்டுமென்பதிலும்இ குறிப்பாக ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை தீர்த்து வைக்கக் கூடிய விதத்தில் சிறிலங்கா அரசாகங்கம் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்கா அக்கறை காட்டிவருகிறது. இவையாவும் அமெரிக்காவின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றத்தைச் சுட்டி நிற…
-
- 0 replies
- 1.4k views
-
-
திங்கள் 23-07-2007 12:57 மணி தமிழீழம் [மயூரன்] இனப் பிரச்சினையில் தலையிடுவதில்லை இணைத் தலைமை நாடுகள் தீர்மானம் இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் முனைப்புடன் செயல்படுவதில்லை என இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன சிறீலங்கா அரசாங்கம் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை முன்வைக்கும் வரை இணைத் தலைமை நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையிடாப் போக்கை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. அண்மையில் சிறீலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாண அபிவிருத்திக்னெ அனைத்துலக உதவிகளை பெறுவதற்கு சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டு…
-
- 3 replies
- 2k views
-
-
நுகேகொட-தெல்கந்த சந்தியில் சக்தி வாய்ந்த கிளைமோர் மீட்பு! ஜனாதிபதிக்கு இலக்கு வைக்கப்பட்டதா? கொழும்பின் புறநகர்ப்பகுதியான நுகே கொட தெல்கந்த சந்தியில் சந்தை ஒன்றி லிருந்து 8 கிலோகிராம் நிறைகொண்ட கிளைமோர் குண்டொன்றை நேற்று பொலி ஸார் மீட்டிருக்கின்றனர். வாழைப்பழ சீப்புகள் அடங்கிய பை ஒன் றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் கிளைமோர்க் குண்டு பற்றிய தகவலை சந் தைப்பகுதியில் நின்றிருந்த சிவிலியன் கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து நேற்று பிற்பகலில் குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் பேச வல்ல அதிகாரியொருவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 17ஆவது வருடாந்த சம்மேளன மாநாடு நேற்று இடம் பெற்ற மஹரகம தேசிய இளைஞர் சேவை கள் மன்றத்திற்கு நான்கு க…
-
- 1 reply
- 1.7k views
-
-
கிழக்கு உதயம் அரசு எதிர்பார்த்தது போன்று மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் இருக்கவில்லை! கொழும்பில் படையினர் முற்றுகையே தொனித்தது கிழக்கு மாகாணத்தை முழுமையா கக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்து பெரும் எடுப்பில் பிரசாரங்கள் செய்து, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரசாங் கம் விழாவெடுத்துக் கொண்டாடிய போதிலும் எதிர்பார்த்தது போன்று நாட ளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் உற் சாகம் கரைபுரண்டு ஓடவில்லை. அரசு ஏற்பாடு செய்திருந்த விழாக்களில் எதிர் பார்க்கப்பட்ட அளவு உற்சாகத்தைக் காணமுடியவில்லை. தொப்பிகலவில் இராணுவம் பெற்ற வெற்றியைக் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் அரசாங்கம் கொண்டாடி யது தொடர்பாக எழுதியுள்ள கட்டுரை யில் பிரபல அரசியல் மற்றும் பாது காப்பு நிலைவரங்கள் தொடர்பான விமர் சகர்…
-
- 0 replies
- 1.6k views
-