ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
யாழில் மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் சுட்டுப் படுகொலை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் சகாதேவன் நிலக்சன் (வயது 24) இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் தொடரூந்து வீதியில் உள்ள சகாதேவன் நிலக்சனின் வீட்டுக்குச் சென்ற துணை இராணுவக்குழுவினர் இன்று புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் அவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடக வள நிலையத்தின் மாணவரான சகாதேவன் நிலக்சன், யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும் ஆவார். யாழில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்பட்டிருந்த நேரத்தில் இப்படுகொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. -புதினம்
-
- 20 replies
- 4.8k views
-
-
குடாநாட்டில் காணாமற்போனோர் குறித்து ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு குடாநாட்டில் காணாமற்போனோர் தொடர்பாக சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா நேற்று ஜனாதிபதியுடன் தொலை பேசியில் உரையாடி எடுத்துரைத்தார். அமைச்சு நேற்று விடுத்த செய்திக் குறிப் பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடாநாட்டில் காணாமற்போனவர் களது உறவினர்கள் பலர் கடந்த இரு தினங் களாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ். அமைச்சு அலுவலகத்தில் வைத்துச் சந்தித்தனர். குடாநாட்டில் பல்வேறு இடங்களில் பல் வேறு சந்தர்ப்பங்களில் இனந்தெரியாத வகையில் காணாமற்போயுள்ள தங்களது உறவினர்கள் பற்றிய விவரங்களை முன் வைத்த இம்மக்கள் அடக்க இயலாத துய ரங்க…
-
- 0 replies
- 978 views
-
-
கருணா குழுவினரால் முஸ்லிம் விவசாயிகள் எச்சரித்து வெளியேற்றம் கிழக்கு மாகாணத்தில் செயல்படும் துணை ஆயுதக் குழுவான கருணா குழு முஸ்லீம் விவசாயிகளை எச்சரித்து வருவதாக முறையிடப்பட்டுள்ளது. அண்மையில் புல்மோட்டை பகுதியில் தமது விவசாய அறுவடைகளை மேற்கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருந்த முஸ்லீம் விவசாயிகளை கருணா குழுவினர் ஆயுத முனையில் அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அந்த பிரதேச முஸ்லீம்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதேவேளை புல்மோட்டை கடற் கரையோரங்களில் சிங்கள மீனவர்களை குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கிழக்கில் நிலை…
-
- 4 replies
- 1.5k views
-
-
யாழ்.தீவகப் பகுதியில் டாக்டர்களுக்கு பற்றாக்குறை தீவக பகுதியில் உள்ள அரசினர் வைத்தியசாலைகளில் நீண்டநாட்களாக டாக்டர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தீவக பகுதிக்கு குறைந்த பட்சம் 37 டாக்டர்கள் பணியாற்ற வேண்டிய தேவை உள்ளதாகவும் ஆனால், தற்போது 7 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக கடமையாற்றும் டாக்டர்கள் அவ்வைத்தியசாலையில் சுழற்சி முறையில் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் காரைநகர் வேலணை ஊர்காவற்றுறை போன்ற பகுதிகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள் ஓய்வு பெற்ற பின் மீள் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. புதிதாக டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டமை மற்றும் தீவகப்பகுதி…
-
- 0 replies
- 791 views
-
-
புதன் 01-08-2007 00:25 மணி தமிழீழம் [சிறீதரன்] பெளத்த பேரினவாதம் அகற்றப்படும்வரை அனைத்து இன மக்களும் அமைதியுடன் வாழும் நிலை தோன்றாது - தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் இல்லாதொழிக்கப்படும் வரை அனைத்து இன மக்களும் அமைதியுடன் வாழும் நிலை தோன்றாது என யாழ் மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இக் கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் வாழும் அனைத்து இன மக்கள் தமது உரிமைகளை அனுபவிப்பதற்கும் தாங்கள் இந்த நாட்டு மக்கள் என்று சொல்வதற்கும் சிங்கள பௌத்த பேரினவாதம் இடையூறாக இருப்பதாகவும் இலங்கையி…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதன் 01-08-2007 00:50 மணி தமிழீழம் [கோபி] அனைத்துலக கரிசனையை ஏற்படுத்த வவுனியாவில் சிங்கள மக்கள் இடப்பெயர்வு வவுனியாவின் எல்லைப்புற கிராமங்களை சேர்ந்த சிங்கள மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியாவின் எல்லைப் புறகிராமங்களை சேர்ந்த சுமார் 350 பேர் வரையில் இடம்பெயர்ந்து பாடசாலை ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மட்டுமே இடம்பெயர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகின்றமை தமிழ் மக்கள் தொடர்பில் அனைத்துலக கரிசனையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்டே வவுனியாவின் எல்லைப்புற கிராமங்களை சேர்ந்த சிங்…
-
- 2 replies
- 1.4k views
-
-
நவ.7 இல் மகிந்தவின் வரவு - செலவுத் திட்டம் தாக்கல் [செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 20:45 ஈழம்] [கொழும்பு நிருபர்] மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மூன்றாவது வரவு - செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சிறிலங்கா நிதி அமைச்சு அறிவித்துள்ளது. நிதி அமைச்சுப் பொறுப்பு வகிக்கும் மகிந்த ராஜபக்ச இம்முறையும் வரவு - செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கான இந்த வரவு - செலவுத்திட்டத்தில் இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் பல மடங்கு அதிகரிக்க மகிந்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக கடந்த கால செலவீனங்கள் மற்றும் எதிர்வரும் ஆண்டுக்கான த…
-
- 0 replies
- 818 views
-
-
செவ்வாய் 31-07-2007 20:10 மணி தமிழீழம் [மகான்] மட்டக்களப்பில் சீருடை தரித்த ஆயுததாரிகளால் இரு சிறுவர்கள் கடத்தல் மட்டக்களப்பில் இரு சிறுவர்கள் சீருடை தரித்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் 1 மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இடைத்தங்கல் அகதி முகாமிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள வைரவர் கோவிலடியில் வைத்துக் இவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். யுத்த முன்னெடுப்புகளால் திருகோணமலை மாவட்டம் சம்பூர் மற்றும் பள்ளிக்குடியிருப்பு போன்ற இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு கள்ளியங்காடு இடைத்தங்கல் அகதிமுகாமில் வசித்து வரும் இவ்விருவருமே இன்று கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்கள் 16 அகவையுடைய பாக்கிராஜா ஜெகதீஸ்வரன், 16 அகவையுடைய வரதன் ராம…
-
- 1 reply
- 886 views
-
-
லண்டனில் நாடுகடத்தும் திட்டத்துடன் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எம் உறவுகளுக்கு இந்த மனுவில் கையெழுத்து இட்டு எம்மால் முடிந்த அதி குறைந்த பங்களிப்பையாவது செய்வோம்.163 கையெழுத்துகளே இவ்வளவு நேரமும் கிடைத்துள்ளது ஆயிரக்கணக்கில் பதிவோம் இதை வாசிப்பவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் இதனை தெரியப்படுத்துங்கள் Solidarity with hunger strike of Tamil nationals Created by John Smith on Jul 26, 2007 Category: Human Rights Region: United Kingdom Target: Home Office Web site: http://www.indymedia.org.uk/ Description/History: The Sri-Lankan government is notorious in its treatment of the struggling Tamils. There is a long chain of human right abuses and murde…
-
- 15 replies
- 3k views
-
-
1987 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம்;, நான்காம் திகதியன்று, அதாவது, இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற ஊரில், முதன் முறையாகப் பகிரங்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். தமிழீழத் தேசியத் தலைவரை நேரில் காணவேண்டும் என்றும், அவரது உரையைக் கேட்க வேண்டும் என்றும், மிகக்குறுகிய கால அவகாசத்திற்குள், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், ஆர்வத்துடன் சுதுமலையில் கூடி நின்றார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய தினம் தமிழீழத் தேசியத் தலைவர் ஆற்;றிய உரை, 'சுதுமலைப் பிரகடனம்" என்று பின்னர் பெயர் பெற்றது. தேசியத் தலைவரின் சுதுமலைப் பிரகடனம் நடைபெற்று, இன்று இருபது ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற வேளையில், அன்…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழர்கள் வாக்களித்திருந்தால் ஈழக் கனவை ரணில் தகர்த்திருப்பார்: ஐ.தே.க. [செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 19:06 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் அனைத்துலகத்தில் முன்னிலையிலேயே ஈழக் கனவை ரணில் விக்கிரமசிங்க தகர்த்திருப்பார் என்று ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் ஐ.தே.க. தலைமை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: வவுனியாவில் உள்ள நிறுவனம் ஒன்றின் ஊடாக விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கப்பட்டதாக நாம் அடிக்கடி கூறி வருகின்றோம். ஆனால் மகிந்த அரசு இதனை விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கா…
-
- 5 replies
- 1.2k views
-
-
யாழில் கிளைமோர் தாக்குதல் - மூன்று படையினர் பலி [ த.இன்பன் ] - [ யூலை 31, 2007 - 02:33 PM - GMT ] யாழ். வரணிப் பகுதியில் இன்று பிற்பகல் சிறிலங்கா படையினரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மூன்று படையினர் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் 4.35 மணிக்கு நடைபெற்றுள்ளது. படையினரால் தண்ணீர் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கிணறு ஒன்றிற்கு அருகிலேயே பொருத்தப்பட்டு படையினர் தண்ணீர் எடுக்க வந்தவேளை வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் http://www.eelatamil.net/index.php?option=...0&Itemid=67 இதைத்தான் சொல்லுறது தண்ணியிலை கண்டம் எண்டு..
-
- 2 replies
- 1.4k views
-
-
தேர்தலை தடுக்க புலிகள் முயற்சிப்பதாக நோர்வேக்கு சிறிலங்கா கடிதம் [செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 17:30 ஈழம்] [செ.விசுவநாதன்] கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் நடத்த உள்ள தேர்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று சிறிலங்காவுக்கான நோர்வேத் தூதுவருக்கு சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் றஜீவ விஜயசிங்க கடிதம் அனுப்பியுள்ளார். நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கருக்கு றஜீவ விஜயசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கிழக்கில் தேர்தலை நடத்தினால் அங்கு இரத்த ஆறு ஓடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாளிதழ்களில் வெளியாகியிருப்பதை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறோம். தமிழ் மக்களைப் பா…
-
- 4 replies
- 1.4k views
-
-
காணாமல்போய்விட்ட எமது உறவுகளுக்காக குரல் கொடுக்க நாளை நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள் [31 - July - 2007] *மனோ கணேசன் அழைப்பு கடத்தப்பட்டு காணாமல்போனோர் தொடர்பாக நாளை புதன்கிழமை காலை கொழும்பு பிறைற்றன் ஹோட்டலில் நடைபெறும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் 2 ஆவது மாநாட்டில் பங்கேற்குமாறு மேலக மக்கள் முன்னணி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஆமர் வீதிச் சந்திக்கு அருகிலுள்ள இந்த ஹோட்டலில் நடைபெறும் மேற்படி மாநாடு தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் கடத்தல், காணாமல் போதல் தொடர்பில் பெருந்தொகையானோர் புகார் செய்துள்ள நிலையில் இன்னும் கணிசமாகப் பாதிக்கப்பட்டோர் நடை…
-
- 4 replies
- 1.2k views
-
-
அனல்மின் நிலையம் தொடர்பில் ஆராய சம்பூர் வருகிறார் இந்திய மின்சாரத்துறை அமைச்சர்: அமைச்சர் செனிவிரட்ன [செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 15:29 ஈழம்] [ப.தயாளினி] திருகோணமலை சம்பூரில் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட தமிழர் பிரதேசத்தில் இந்தியா உதவியுடன் அனல்மின் நிலையத்தை அமைப்பது குறித்து ஆராய இந்திய மின்சாரத்துறை அமைச்சர் தலைமையிலான உயர்நிலைக் குழு சிறிலங்காவுக்கு வருகை தர உள்ளதாக சிறிலங்காவின் மின்சாரத்துறை அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனிவிரட்ன தெரிவித்துள்ளார். ககவத்த, கொடகவெலவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இத்தகவலைத் தெரிவித்தார். சம்பூரில் அனல்மின் நிலையம் அமைய உள்ள இடத்தை எதிர்வரும் வாரம் இந்தியக் குழு பார்வையிடும் என்றும் ப…
-
- 7 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்தில் இளைஞர் சுட்டுக் கொலை Written by Pandaravanniyan - Jul 31, 2007 at 02:07 PM யாழ்ப்பாணத்தில் இன்ற பகல் 11.15 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆட்டோச் சாரதி ஒருவர் பலியாகியுள்ளார். நாவலர் வீதியில் உள்ள அன்னசத்திர ஒழுங்கையில் வைத்து இவர் மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்ற வேளையில் நாவலர் வீதி உதயன் பணிமனை சந்தியிலும் மற்றும் இலுப்பையடிச் சந்தியிலும் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகளும் இடம் பெற்றுக் கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்தாகும். மரணம் அடைந்தவர் அன்னசத்திர ஒழுங்கை கந்தர்மடம் என்னும் முகவாரியைச் சேர்ந்த வடிவேலு சந்திரப் பிரபு வயது 32 என்பவராகும்…
-
- 8 replies
- 1.6k views
-
-
தமிழ், முஸ்லிம் தலைமைத்துவங்கள் ஒன்றுபடுவதே அவசரத் தேவை [31 - July - 2007] வ.திருநாவுக்கரசு * மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்றால் வாழ்க்கைச் செலவு உயர்வானது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகமாக கூடுதலான `செல்போன்' பாவனை மற்றும் மோட்டார் வாகன இறக்குமதி போன்ற வளர்ச்சி நிலைமைகளை எடுத்துக் காட்டுகிறார். ஆளுநர் கப்றால் அரசாங்க கட்சியின் பேச்சாளர் போல் பிரசார வேட்கையுடன் கூடிய அறிக்கைகளை விடுத்து வருவது மிகுந்த கேலிக்கூத்தானதாகும். ஐ.தே.க. மற்றும் ஷ்ரீ.ல.சு.க. (மக்கள் பிரிவு) இணைந்து அமைத்த தேசிய காங்கிரஸ் தனது முதலாவது ஆர்ப்பாட்ட பேரணியையும் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தையும் சென்றவாரம் நடத்தியுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள நாட்டைக் காப்பாற்ற மக்க…
-
- 0 replies
- 998 views
-
-
தேசியத்தலைவர் வழங்கிய நிதியைக் கொண்டு கல்வி கற்று முன்னுதாரணமாக வருவேன். சிறிலங்கா அரசினால் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டு தமிழீழ தேசியத்தலைவர் ஒருதொகைப்பணத்தை வழங்கியிருக்கிறார். தேசியத்தலைவரால் எனது எதிர்கால வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட நிதியைப் பயன்படுத்திக் கல்விகற்று தேசத்தில் முன்னுதாரணமானவனாக வரவேண்டும் இதுவே மருத்துவமனையால் வெளியேறியவுடன் நான் செய்யப்போகும் முதல் வேலை. இவ்வாறு கடந்த 11.07.2007 அன்று அளம்பில் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கிபிர் விமானத்தாக்குதலில் தனது இரண்டு கால்களையும் இழந்து வைத்திய சிகிச்சைபெற்று வரும் பிறேம்குமார் தெரிவித்துள்ளார். தனது இரண்டு கால்களையும் இழந்து 14 வயது நிரம்பிய அந்தச் சிறுவன் தனக்கு சிறிலங்…
-
- 11 replies
- 2.8k views
-
-
கிழக்கில் இராணுவ ஆட்சிக்கு வித்து தமிழ் மக்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் கிடுக்கிப் பிடியை இறுக்கி, அவர்களை நசுக்கிவிடுவதற்கான எல்லா வழிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அது பல்வேறு வடிவங்களில், கோணங்களில், துறைகளில் வெகு லாவகமாக - கச்சிதமாக - நடைமுறைப்படுத்தப்படுகிறது. மிகக் குறிப்பாக, கிழக்கு, தமிழர்களின் பூர்வீக வாழ்விடம் இல்லை என்று ஆக்குவதற்கான சூழ்ச்சிகள் இன்று நேற்றுத் தொடங்கப்பட்டவை அல்ல. இலங்கை சுதந்திரம் அடைந்த ஒரு சில வருடங்களிலேயே அபிவிருத்தி என்ற போர்வையில், அரசுகளால் - சிங்களப் பேரினவாதத்தால் - நடத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்ச்சி நிரலில் முதலாவது இடத்தைப் பிடித்துக்கொண்டன. அதன் பின்னர், அபிவிருத்தியில் அங்குள்ள தமிழர்களின் பி…
-
- 0 replies
- 1.5k views
-
-
கிழக்கிலங்கையிலிருந்து ஓடிய புலிகள் இனி அங்கு திரும்பிவர முடியாதாம்! பாதுகாப்புச் செயலர் கூறுகிறார் "கிழக்கிலிருந்து பாய்ந்தோடிய புலிகள் இனி அங்கு திரும்பி வர முடியாது. படையி னர் இதற்கான சகல ஏற் பாடுகளையும் மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்'' இவ்வாறு பாதுகாப்புச்செயலர் கோத்த பாய ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள் ளார். அண்மையில் தொப்பிகலப் பகுதிக்கு இராணுவத் தளபதி, அதிகாரிகள் சகிதம் விஜயம்செய்த அவர் கொழும்பு திரும்பிய பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்ட வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: தொப்பிகல விஜயத்தின்போது அங்கு தற் போதைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாது காப்பு நடவடிக்கை அனைத்தையும் நேரில் பார்வையிட்டேன். அவை திருப்தி தருவ தாக அமை…
-
- 2 replies
- 2k views
-
-
கோட்டை ரயில்வே நிலையத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் ஆயுதத்துடன் நடமாடிய சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.நேற்
-
- 1 reply
- 1.5k views
-
-
தீர்க்கமான காலக்கட்டத்தில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு உள்ளேயே பலர் இருக்கின்றனர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சகோதர நிறுவனத்துடனான அரசாங்கம் இன்றும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாரிய பொருளாதார நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள அரசாங்கம் அதனை மூடி மறைப்பதற்காக பொருட்களின் விலைகளை அதிகரித்து பொருளாதார சுமையை மக்கள் மீது திணிப்பதற்கு முயற்சி செய்கின்றது. நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள அரசாங்கம் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள் ளப் படுகின்ற போது ஆட்சியை கவிழ்ப்பதற்கு அரசாங்கத்திற்குள்ளேயே பலர் இருக்கின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐ.தே.க.வின் செயற்பாடுகளுக்கு அஞ்…
-
- 0 replies
- 1.1k views
-
-
விலை அதிகரிக்கின்ற போது சிவப்பு சகோதரர்கள் மௌனம் காப்பது ஏன்? ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தில் பொருட்களின் விலைகள் குறைந்திருந்த போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சிவப்பு சகோதரர்கள் இன்று நிமிடத்திற்கு நிமிடம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்ற போது மௌனம் காப்பது ஏன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள அரசாங்கம் பொருளாதாரத்துடன் விளையாடிக்கொண்டிக்கின்றது. பொருளாதார யுத்தத்தில் தோல்வியடைந்தால் சகல யுத்தத்திலும் தோல்வியடைந்து விடுவோம் என்றும் அவர் சொன்னார். எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண…
-
- 0 replies
- 998 views
-
-
நீதியரசர் பகவதியை அவமதித்த சிங்களர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர். இலங்கை அரசு ஒரே நேரத்தில் பலமுனைகளில் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது மட்டுமன்றி மனித உரிமை அமைப்புகளின் மீதும் அது தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது சிங்கள அரசின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது "சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு" என்ற அமைப்பாகும். இந்தக் குழு இலங்கை அரசால் அமைக்கப்பட்டதுதான். இதன் தலைவராக இருப்பவர் இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என். பகவதி ஆவார். ஆள் கடத்தல், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இலங்கை இராணுவத்தின் மீதும், போலீஸ் மீதும் கூறப்பட்டு வருகின்றன. அப்படி கூறப்பட்டவற்றில் நவம்பர் 2005க…
-
- 2 replies
- 1.2k views
-
-
கிழக்கில் ஆயுதக் குழுக்களால் ஆபத்து - மனித நேய அமைப்புகள் அச்சம் தென் தமிழீழத்தில் ஒட்டுக் குழுக்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவி செய்ய முடியாத நிலை தோன்றியிருப்பதாக, பல உள்ளுர், மற்றும் அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள பல பகுதிகளுக்கு செல்வதற்கு சிறீலங்காப் படையினர் விதித்துவரும் தடைகளும், தமது பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக இந்த அமைப்புகள் கூறியுள்ளன. சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சுடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் தமது நிலை பற்றி எடுத்துக்கூறிய போதிலும், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் அரசினால் ஆரம்பிக்கப்படவில்லை என தொண்டர் அமைப்புகள் கூறுகின்றன. “வோல்ட் விஸன்” எனப்படும் “உலக…
-
- 0 replies
- 1.1k views
-