Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருமலையில் வர்த்தக வலயம் - பொதுமக்களின் காணிகள் அபகரிக்கும் திட்டம் திருகோணமலையில் வர்த்தக வலயம் அமைத்து, வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக்கூறி, பொதுமக்களின் காணிகளை அபகரிக்க சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. திருகோணமலை துறைமுகப் பகுதியில் 1600 ஏக்கர் நிலப்பரப்பில் வர்த்தக வலயம் அமைக்கப்பட இருப்பதாகவும், அதில் வெளிநாடுகள் பல மில்லியன் ரூபாய்களை முதலிட இருப்பதாகவும், சிறீலங்கா முதலீட்டு சபை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிழக்கில் 10 முதல் 30 மில்லியன் ரூபா வரையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 10 வருடங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் சிறீலங்கா முதலீட்டு சபை கவர்ச்சிகரமான விளம்பரம் வெளியிட்டுள்ளது. அமெரிக்…

  2. அரசியல் திருவிழாவாகும் குடும்பிமலை படை நடவடிக்கை -அருஸ் (வேல்ஸ்) இன்றைய காலகட்டத்தில் தென்னிலங்கையின் பெரும்பாலான தினசரிகளில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மேற்குப் பகுதியான குடும்பிமலை (தொப்பிக்கல) வெற்றிவிழா தொடர்பான செய்திகளே அதிகம் காணப்படுகின்றன. எப்போதும் தென்னிலங்கையின் அரசியல் அடித்தளம் ஆட்டம் காணத் தொடங்கும் போது படைநடவடிக்கைகள் முதன்மைப் படுத்தப்படுவதுண்டு. அதன் வெற்றி விழாக்களும் பெரும் எடுப்பில் நடத்தப்படுவதுண்டு. தற்போது சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவு என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் ஏனைய கட்சிகளுடன் மேற்கொள்ளும் சூறாவளி சந்திப்புக்கள், வெளிநாட்டு பயணங்கள்,…

  3. குடும்பிமலையை சில மணித்தியாலங்களிற்கு முன்னர் சிறிலங்கா படைகள் கைப்பற்றி விட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி போடப்பட்டுள்ளது. நகரக்க முல்லை, தரவைக்குளம் குடும்பிமலைப் பகுதியையும் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்செய்தி உண்மையோ பொய்யோ இது குறித்து எம்மவர்கள் வருத்தப்பட எதுவுமில்லை. ஏற்கனவே திட்டமிட்ட படி குடும்பிமலையில் இருந்த கணிசமான புலிச்சேனைகள் வெளியேறிவிட்டன. எதிரிக்குத் தலையிடி கொடுக்கக் கூடிய தாக்குதல்கள் இனி மட்டக்களப்பில் தொடரும்

    • 39 replies
    • 7k views
  4. பாலமோட்டையில் சிறப்பு இராணுவப் படையினர் விரட்டியடிப்பு: 4 இராணுவத்தினர் பலி- 6 பேர் காயம் [திங்கட்கிழமை, 16 யூலை 2007, 19:19 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா பாலமோட்டையில் இன்றும் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு இராணுவப் படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கி விரட்டியடித்துள்ளனர். இதில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். வவுனியா பாலமோட்டைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புத் தாக்குதல் படையினர் விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது விடுதலைப் புலிகள் அவர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் அவர்களுக்கு இழப்புக…

  5. திங்கள் 16-07-2007 18:53 மணி தமிழீழம் [மயூரன்] இந்திய கடற்படை ஆலோசகர் கப்டன் பிரசாத் சிங் யாழ் விஜயம் யாழ் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய கடற்படை ஆலோசகர் கப்படன் பிரசாத் சிங் யாழ் குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வானூர்த்தி மூலம் பலாலி கூட்டுப்படைத் தளம் சென்றடைந்த இவர் காங்கேசன்துறை கடற்படைத் தளம் மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீயுடன் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக தெரியவருகிறது. pathivu

  6. இராணுவத்தினர் நடத்திய தொடர் எறிகணைத் தாக்குதலில் புளியங்குளம் மருத்துவமனை முற்றிலும் அழிந்தது. வவுனியாவிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய தொடர் எறிகணைத்தாக்குதலில் புளியங்குளம் மருத்துவமனை முற்றாக அழிந்துபோயுள்ளது. புளியங்குளம் பகுதியை இலக்கு வைத்து நேற்று சனிக்கிழமை இரவு 9 மணிமுதல் வவுனியா யொசப் முகாமிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைவீச்சை செறிவாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடத்தியுள்ளனர். புளியங்குளம் அரசினர் மருத்துவமனை மீதும் அதன் சூழலிலும் எறிகணைகள் செறிவாக வீழ்ந்து வெடித்தன. இத்தாக்குதலில் மருத்துவமனையின் மகப்பேற்று விடுதி மற்றும் வெளிநோயாளர் பிரிவு ஆகியன முற்றாக அழிவுக்கும் சேதங்களுக்கும் உள்ளாகின. மருத்துமவமனை அருகில்…

  7. யாழ் முன்னரங்க நிலைப் பகுதியில் யுத்தம் ஒன்று ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் யாழ் குடாநட்டின் முன்னரங்க நிலைப் பகுதியில் யுத்தம் ஒன்று ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளும் படையினரும் பரஸ்பரம் எறிகணை தாக்குதல்களை கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மேற்கொள்ளப்படும் எறிகணைகள் பளை எசன் எழுதுமட்டுவாள் மற்றும் மிருசுவில் போன்ற பகுதிகளில் வீழ்ந்து வெடிப்பதாகவும் இந்த பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் செறிவாக குவிக்கப்பட்டுள்ளதால் படையினருக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா இரா…

    • 1 reply
    • 2.2k views
  8. தமிழக முதல்வர் கருணாநிதியுடன் ரணில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் முக்கிய சந்திப்பு வீரகேசரி நாளேடு மங்கள சமரவீர 20 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இவ்விருவருக்கும் இடையிலான இந்த முக்கிய சந்திப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் அதற்கான ஆரம்பகட்ட வேலைகளை தமிழக அரசாங்க முக்கியஸ்தர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விருவருக்கும் இடையில் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் மு…

  9. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடை ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை ஏற்படுத்த முயல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வவுனியாவின் ஓமந்தை சோதனை சாவடி ஊடாக வன்னிக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மது ஸ்ரீலங்கா இராணுவம் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வன்னி பெருநிலப் பரப்பிற்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை இரண்டு வாரங்களுக்கு போதுமான அத்தியாவசியப் பொருட்களே கையிருப்பில் இருப்பதாகவும் இராணுவ கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொருட்கள் தடையின்றி எடுத்துவ…

    • 1 reply
    • 1.1k views
  10. இந்து கலாசார அமைச்சு பணிப்பாளரின் வாகனம் இனந் தெரியாத ஆயுதபாணிகளினால் கடத்தல்; சாரதி சுட்டுக் கொலை நமது நிருபர் வடமாகாண சபையின் பிரதம செயலாளரும், முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளருமாகிய எஸ்.ரங்கராஜனின் தாயாரது மரணவீட்டிற்குச் சென்ற இந்து கலாசார அமைச்சு பணிப்பாளரின் வாகனம் இனந் தெரியாத ஆயுதபாணிகளினால் ஞாயிறன்று கடத்தப்பட்டு, சாரதி அன்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா பண்டாரிகுளத்தில் வசித்து வந்த வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளரின் தாயார் மரணமடைந்ததையடுத்து, அவரது இறுதிக்கிரியைகள் ஞாயிறன்று பண்டாரிகுளத்தில் நடைபெற்றன. இறந்தவரின் உறவினராகிய இந்து கலாசார அமைச்சின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன…

  11. புலிகள் பதிலடிகொடுக்க முனைந்தால் அதனை எதிர்கொள்ள படைத்தரப்புத் தாயார் எனச்சவால் விடுத்துள்ளமை ரம்புக்கலவின் அறியாமையைக் காட்டுகிறது. புலிகள் பதிலடி கொடுக்க முனைந்தால் அதனைச்சந்திக்க படையனர் தயாரென பாதுகாப்பு விவகாரங்களுக்காகப் பேசவல்லவரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருப்பது புலிகளின் போரியல் வரலாற்றை அறிநிதிருக்கவில்லை அல்லது மறந்துவிட்டுப்பேசுகிறார் என எண்ணவேண்டியுள்ளது. குடும்பிமலையைக் கைப்பற்றியவுடன் கிழக்கு மாகானத்தை முழமையாக படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அங்கிருந்து புலிகள் விரட்டியடிக்கப்பட்டுவிட்டன

  12. விகாரையை புனரமைக்க பணம் கொடுக்கததால் எல்லாவல மேதானந்த தேரருக்கு கொலை அச்சுறுத்தல் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி புதன்கிழமை இரவு 9.30 மணியளவின் தொலைப்பேசிஊடாகவே இந்த மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பௌத்த விஹாரையிலுள்ள விகாராதிபதி ஒருவர் பௌத்த விஹாரையை புனரமைப்பதற்கு 15 இலட்சம் ரூபாவை கோரியதாகவும் பல விஹாரைகளை புனரமைக்கவிருப்பதனால் அவ்வளவு பெரிய தொகையை தன்னால் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதணையடுத்தே தன்னை கொலைச்செய்ய…

  13. வடக்கு - கிழக்கு பிரச்சினை? [16 - July - 2007] தென்னிலங்கை அரசியலை இப்போது தொப்பிகல பிரதேசமே ஆக்கிரமித்து நிற்கிறது. இப்பிரதேசத்தை கடந்த வாரம் இராணுவத்தினர் கைப்பற்றியதை அடுத்து கிழக்கு மாகாணம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதாக பிரகடனம் செய்திருக்கும் அரசாங்கம், சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு நிகரான வகையில் தேசிய அளவிலான வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. பிரதான வைபவம் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவிருக்கிறது. சுமார் கால் நூற்றாண்டு கால உள்நாட்டுப் போரில் தொப்பிகலவில் சாதித்ததைப் போன்ற மகத்தான வெற்றியை அரசாங்கப் படைகள் இதுவரை கண்டதில்லை…

  14. புலனாய்வு பிரிவின் விசேட செயல் திட்டங்களை குழப்பி வருவதாக புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது மிலேனியம் சிற்றியில் செயல்பட்டு வந்த ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவின் ஆழ ஊடுருவி தாக்கும் பிரிவினை ஐக்கிய தேசிய கட்சி அம்பலப்படுத்தியமை போன்று தற்போதைய அரசும் படைத்துறை புலனாய்வு பிரிவின் விசேட செயல் திட்டங்களை குழப்பி வருவதாக ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பிலும் அதன் புற நகர் பகுதிகளிலும் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து குற்றப் தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் ஸ்ரீலங்கா புலனாய்வு துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை செய்யது வருவது தமது செயல்பாடுகளை பாதிக்கும் என புலனாய்வு துறையினர் எச்சரித்துள்ளனர். கொழும்பின் பாதுகாப்பை …

  15. வடக்கே வெடிக்கப் போகும் யுத்தம்! -விதுரன் - விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கு அரசு அவசரப்படவில்லை. அவர்களைத் தோற்கடித்த பின்பே பேச்சுகள் சாத்தியமென அரசு கூறுவதன் மூலம் வடக்கே பாரிய படை நடவடிக்கை மூலம் பலமானதொரு நிலையிலேயே பேச்சுக்குச் செல்ல அரசு முனைகிறது. இதேநேரம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சமாதானமென்பது சாத்தியப்படாததொன்றென்பதால் இலங்கையின் பொருளாதார நிலைகள் மீதும் இராணுவ நிலைகள் மீதும் பாரிய தாக்குதல்களைத் தொடுக்கப்போவதாக புலிகள் எச்சரித்திருப்பதன் மூலம் இனியெப்போதும் பலவீனமானதொரு நிலையில் பேச்சுகளுக்குச் செல்லப் போவதில்லையென்பதை புலிகளும் உணர்த்தியுள்ளனர். வடக்கில் நடைபெறப்போவதாக எதிர்பார்க்கப்படும் போர் இனிமேல் வடக்குடன் மட்டும் நின்றுவிடமாட்டாது…

  16. அம்பலாந்துவையில் நடந்தது என்ன? என்.ஜீவேந்திரன் பாணந்துறை அம்பலாந்துவை பிரதேசத்தில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைகளின் விளைவாக முஸ்லிம், சிங்கள மக்களிடையே பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டார். உண்மையில் இப்பிரச்சினைக்கான காரணமும் அதற்கான பின்னணியும் என்ன? இப்பிரதேசவாசிகளின் கருத்துப்படி கிராமத்தில் மதுபானம் விற்கின்ற தனிநபர் ஒருவரினால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பிரச்சினை இனக்கலவரமாக மாறியதாக கூறப்படுகின்றது. இதுபற்றி அம்மக்கள் கூறும்போது.... ??z-v?? ?? & A?-?-??-x?? Q??-?-??]: "பிரச்சினை நடக்குது என்று எல்லோரும் அந்த வீட்டுல நின்றோம். அவ்வாறு நிற்கும்போது எமக்கு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. யாராவது வந்தால்தான்…

    • 1 reply
    • 1.5k views
  17. வற்றாப்பளையில் லெப்.கேணல் இமையவனின் வீரவணக்கக் கூட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 19:16 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத்தழுவிய லெப்டினன்ட் கேணல் இமையவனின் வீரவணக்கக்கூட்டம் இன்று வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. வற்றாப்பளை பிரதேசப்பொறுப்பாளர் போசன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரை மணலாறு கட்டளையக தளபதிகளில் ஒருவரான ரம்போ ஏற்றினார். ஈகச்சுடரை மாவீரரின் தாயார் ஏற்றினார். வித்துடலுக்கு மாவீரரின் சகோதரியான போராளி மாலைசூட்டினார். பிரதேச உள்ளகப் பாதுகாப்புப் பணிப்பொறுப்பாளர் காளித், மங்களேஸ்வர விளையாட்டுக்கழக தலைவர் அரசரட்ணம் ஆகியோர் வீர வணக்க உரைகளை நிகழ்த்தினர். அதன…

  18. "குடும்பிமலை"யை மகிந்த குடும்பம் கையிலெடுத்த அரசியல் பின்னணி என்ன?: அம்பலப்படுத்துகிறது சண்டே லீடர் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 19:27 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவும் அவரது சகோதரர்களும் சேர்ந்து எவ்வாறு தமது அரசியல் பலவீனங்களை மறைப்பதற்கு குடும்பிமலை மீதான இராணுவ நடைவடிக்கையை முதன்மைப்படுத்தியிருந்தனர் என்பதை கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. அச்செய்தி விவரம்: தற்போதைய நாட்களில் குடும்பிமலை தான் ஊடகங்களின் தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்துள்ளது. இரண்டரை மாதங்களுக்கு முன்னர் குடும்பிமலையின் மீது தனது அரசாங்கம் கவனத்தை குவித்திருந்தது. அரச தலைவருக்கும், அரசுக்கும் எதிர…

  19. Posted on : Mon Jul 16 5:50:57 EEST 2007 அ'புரம் சிறைச்சாலையில் 28 தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 28 தமிழ் அகதிகள் நேற்றுமுன்தினம் தொடக்கம் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள னர். தமிழ்க்கைதிகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் சிங்களக் கைதிகளையும் தடுத்து வைத்துள்ளதால் தாம் அச்சம் அடைந் துள்ளதாகத் தெரிவித்து சிறைச்சாலை அதிகாரிகளின் ஏற்பாட்டை ஆட்சேபித்து தாம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம் பித்ததாக தமிழ்க்கைதிகள் தெரிவித்துள்ள னர். சிறைக்கைதிகளை வேறு இடத்துக்கு மாற்றுமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உதயன்

  20. தடுமாறும் பொருளாதாரத்தை புலிகள் மேலும் தள்ளாட வைக்கலாம் மிகமோசமான பொருளாதார நெருக்கடிகளில் இலங் கைத்தீவு மூழ்கும் பேராபத்து சூழ்ந்து வருகின்றது. ஆனால் அந்தப் பேரிடர் பற்றிய விடயங்களை மூடி மறைத்து, தென்னிலங்கை மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, இராணுவ வெற்றிகள் பற்றிய முழங்கல்களையும், பிரகடனங்களையும் முன்வைக்கின்றது கொழும்பு அரசு. இராணுவ வெற்றிகள் பற்றிய மாயைகள் கலைந்து, ஆரவாரங்கள் அடங்க, வயிற்றை வாழ்வை பிடுங்கும் அன்றாடப் பிரச்சினைகள் தம்மை பிணியாகப் பீடித்து உறுத்துவதை மக்கள் உணர்ந்தேயாக வேண்டியிருக் கும். அப்போதும் அவர்கள் கவனத்தைத் திசை திருப்பி, வேறுபுறம் சிரத்தையை வழி நடத்துவதற்காகப் புதிய ஆரவாரங்களை அரசு தேடும். தென்னிலங்கை மக்கள் ஏமாளிகளாக இருக்க…

  21. புலிகளுக்கு எதுவித ஆயுத, ஆளணி இழப்பு ஏற்படுத்தாத குடும்பிமலை நடவடிக்கை வெற்றியானது அல்ல: இக்பால் அத்தாஸ். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதுவித ஆயுத மற்றும் ஆளணி இழப்புக்கள் ஏற்படுத்தப்படாத குடும்பிமலை நடவடிக்கை ஒரு வெற்றியான நடவடிக்கை இல்லை என்று கொழும்பு படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கருத்து தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டில் அவர் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: குடும்பிமலையை கைப்பற்றியதை பெருமெடுப்பில் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை (19.07.07) பலத்த பாதுகாப்புடன் சுதந்திர சதுக்கத்திற்கு வரும் அரச தவைர் மகிந்த நல்ல நேரமான காலை 8.30 மணிக்கு 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட சிறிலங்க…

  22. மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களை பகிர்வது: இணைத் தலைமைகள் அதிருப்தி மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்வைத்துள்ள தீர்வு யோசனைகள் குறித்து இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையிடம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சமர்பித்துள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை என்றும் அதனை விட கூடுதல் அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கும் வகையிலான திட்டம் ஒன்றை முன்வைக்குமாறும் இணைத்தலைமைகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகளின் மகாநாடு அண்மையில் நோர்வே தலைநகரில் நடைபெற்றது. …

  23. தொப்பிக்கல அரசியல் வியூகங்களுக்கான ஒரு புதிய களமுனை -டிட்டோ குகன்- இலங்கையின் தற்போதைய அரசியல் மேடையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெவ்வேறான நிலைப்பாடுகளில் இருந்தாலும், அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் எதிர்க்க வேண்டுமென்ற விடயத்தில் மட்டும் ஒன்றுபட்டு நிற்பதாக தெரிகிறது. எதிர்க்கட்சிகள் தமக்கிடையே பல முரண்பாடான கருத்துகளை கொண்டிருந்தாலும் அரசாங்கத்தை எதிர்ப்பதில் மட்டும் தெரிந்தோ, தெரியாமலோ ஒன்றுபட்டு விடுகின்றன. உதாரணமாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் தங்களுக்கிடையே அன்று தொடக்கம் இன்று வரை எப்போதுமே ஒத்துவராத கருத்துகளையும், நிலைப்பாடுகளையும் கொண்டிருக்கும் போதும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான தற்…

  24. புலிகளுக்கு உதவுவதாக தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையிடம் சிறிலங்கா முறைப்பாடு தமிழக மீனவர்களின் படகுகளின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்துகின்றனர் என்று இந்திய கடற்படையிடம் சிறிலங்கா கடற்படை முறையீடு செய்துள்ளது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி விவரம்: தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதைத் தடுப்பது குறித்து இருதரப்பினரும் ஆராய்ந்தனர். இந்தியாவிடமிருந்து சிறிலங்காவினால் கொள்வனவு செய்யப்பட்ட சுற்றுக் காவல் கலமான சயூராவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சிறிலங்காவின் வடபகுதி கடற்படை கட்டளை தளபதி எஸ்.ஆர். சமரதுங்க, கொமாடோர் வான் ஹொல்டென், தமிழக கட…

  25. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ஐ.தே.க. அமைக்கும் பொதுக்கூட்டணிக்கு இ.தொ.கா., மு.கா. ஆதரவு வீரகேசரி நாளேடு பதவியில் உள்ள அரசாங்கத்தை கவிழ்த்து புதிய ஆட்சியை மலரச் செய்யும்வகையில் பொதுக்கூட்டணி அமைக்கும் ஐ.தே.க.வின் முயற்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முழுமையான ஆதரவினை வழங்கும் என்று நம்புகின்றோம். அதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் பலர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அரசாங்கத்தில் நம்பிக்கையிழந்து விரக்தியில் இருக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.