ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
பருத்தித்துறை தும்பளையில் கிளைமோர் தாக்குதல்: ஆசிரியர் பலி, இராணுவ உத்தியோகஸ்தர் படுகாயம். வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தும்பளையில் 52ம் படைப்பிரிவின் உயரதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவரை பலாலி இராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை ஆசிரியர் ஒருவர் கோவிலுக்கு சென்றுவிட்டு அவ்வழியால் திரும்பும் போது அதிர்ச்சியில் இறந்துள்ளதாகவும் இறந்தவர் 51 அகவையுடைய மணியம் கணவதிப்பிள்ளை எனவும் சைவப்பிரகாச மகா வித்தியாலய ஆசிரியர் எனவும் தெரியவருகிறது. -Pathivu-
-
- 9 replies
- 2k views
-
-
புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது சிறிலங்காவின் கிபீர் வானூர்தி [வியாழக்கிழமை, 12 யூலை 2007, 19:32 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவின் கிபீர் வானூர்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று சுட்டுவீழ்த்தினர். வவுனியா முன்னரங்க நிலைகளுக்கு மேலாக இன்று வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் பறந்து கொண்டிருந்த சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்தியை வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியால் இன்று சுட்டு வீழ்த்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான கிபீர் வானூர்தியின் பாகங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விழுந்தது. நொறுங்கிய நிலையில் வானூர்தி, சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் …
-
- 39 replies
- 9.3k views
-
-
திருகோணமலையில் புலிகளின் வான் தாக்குதல் நடைபெறக் கூடும்: கொழும்பு ஆங்கில ஊடகங்கள் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 13:34 ஈழம்] [சி.கனகரத்தினம்] திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழான த நேசனில் வெளியாகியுள்ள செய்தி: சிறிலங்காவின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளைத் தாக்கப் போவதாக விடுதலைப் புலிகள் கடந்த வியாழக்கிழமையன்று பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் பாதுகாப்பு சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடும்பிமலையில் புதன்கிழமையன்று விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருக…
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்காவுக்கு மேலதிக "அதிர்ச்சிகள்" காத்திருக்கின்றன: புலிகளின் இராணுவப் பேச்சாளர். சிறிலங்காவுக்கு மேலதிக அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமான த நேசனுக்கு இராசையா இளந்திரையன் அளித்துள்ள நேர்காணல்: சிறிலங்கா அரசாங்கமானது இரண்டு தடங்களில் பயணிக்கிறது. போர் ஒருபுறம் என்றும் மறுபுறம் அமைதி என்றும் கூறிவருகிறது. இரண்டையும் அடையக்கூடிய சாத்தியம் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கில் இல்லை என்கின்றனர். புலிகள் எங்கும் இருப்பார்கள். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலையில் நாம் நிலைகொண்டுள்ளோம். ஆனால் உங்களுக்குத் தெரியாது. சிறிலங்கா அரசாங்கமானது …
-
- 2 replies
- 2.3k views
-
-
விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான விமானம் திருகோணமலை கடற்பிரதேச பகுதியில் பறந்ததாக ராடார் உறுதிப்படுத்தியதோடு இலங்கை கடற்படையினரும் உறுதி செய்துள்ளனர். பல பொதுமக்களும் இதனை கண்டுள்ளனர். Tiger aircraft flies over Trincomalee! http://www.lankatruth.com/full_story/2007/...20070714_01.htm
-
- 3 replies
- 1.9k views
-
-
தொப்பிக்கல நடவடிக்கையும் தொடரப்போகும் தாக்குதல்களும்! [15 - July - 2007] *குடும்பிமலை (தொப்பிகல) அரச படைகளால் கைப்பற்றப்பட்டமை குறித்தும் அதன் பின்னர் தொடரக்கூடிய இராணுவ முன்னெடுப்புகள் குறித்தும் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி கேணல் ஆர்.ஹரிகரன் எழுதியுள்ள கட்டுரையின் சாராம்சத்தை இங்கே தருகின்றோம். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த பொழுது, ஹரிகரன் அதன் புலனாய்வுத்துறைத் தலைவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில்: சோ.ஜெயமுரளி கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வசமிருந்த தொப்பிகல (Baron's Cap) எனும் கடைசி பலம்மிக்க தளத்தையும் தமது பாதுகாப்புப் படைகள் கைப்பற்றிவிட்டதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அலட்டிக்கொள்ளாத அறிவிப்…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஞாயிறு 15-07-2007 12:21 மணி தமிழீழம் [சிறீதரன்] முன்னாள் விமானப்படை அதிகாரி கஜநாயக்கா உயிருக்கு அச்சுறுத்தல் ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் விமானப்படை அதிகாரியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. தற்போது குற்றப்புலனாய்வு துறையின் விசாரணையில் உள்ள முன்னாள் விமானப்படை அதிகாரியான கஜநாயக்கா விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் அவர் விடுதலை செய்யப்பட்டால் அவரை படுகொலை செய்யவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணையின் போது ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்படைய அரசாங்க தரப்பு முக்கியஸ்தர…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஞாயிறு 15-07-2007 12:19 மணி தமிழீழம் [சிறீதரன்] ஏ.எச்.எம் பௌசியும் அவருடைய மகனான நவ்சாட் பௌசியும் ஐக்கிய தேசிய கட்சியில்? ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தரும் எரிபொருள் துறை அமைச்ருமான ஏ.எச்.எம் பௌசியும் அவருடைய மகனான நவ்சாட் பௌசியும் ஐக்கிய தேசிய கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் பொரல பிரதேச அமைப்பாளர் பதவியை ஏ.எச்.எம் பௌசிக்கு வழங்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை மிது பௌசி கடுமையான அதிருப்தி அடைந்துள்ளதாகவும் விரைவில் அவர் கட்சி மாறுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கில் தேர்தல் நடத்த சாத்தியமே இல்லை: பவ்ரெல் சாடல் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 10:43 ஈழம்] [சி.கனகரத்தினம்] கிழக்குப் பிரதேசத்தின் தற்போதைய நிலைமையில் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியமே இல்லை என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரெல் மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. பவ்ரெல் அமைப்பின் தலைவர் கிங்க்ஸ்லி ரொட்றிக்கோ கூறியுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கமோ அல்லது தேர்தல் ஆணையமோ தேர்தல் நடத்துவது குறித்து தனித்து முடிவெடுத்துவிட முடியாது. உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். கிழக்கில் 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும். இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பான ப…
-
- 0 replies
- 909 views
-
-
Posted on : Sun Jul 15 8:12:50 EEST 2007 சமஷ்டி முறையிலான தீர்வைக் கொண்டு வந்தாலேயே தமிழர்களும் தொப்பிகல வெற்றியை அனுபவிக்கலாம் நீதி அமைச்சர் டிலான் பெரேரா தொப்பிலக வெற்றி தமிழ் மக்களுக்கும் வெற்றியாக அமைய வேண்டுமானால் இந்திய மாதிரியை ஒத்த சமஷ்டி முறையை கொண்டுவர நடவடிக்கை முயற்சி எடுக்கப்படவேண்டும். நீதி அமைச்சர் டிலான் பெரேரா மேற் கண்டவாறு கருத்து வெளி யிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தொப்பிகல முகாமை மீட்டமைக்கான வெற்றியை சிங்கள மக் கள் கொண்டாடலாம். மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். ஆனால் அதனால் பயன் எது வும் ஏற்படமாட்டாது. தொப்பிகல வெற்றி யதார்த்தமாக வேண் டுமானால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். தமிழ் மக்களுக்கா…
-
- 0 replies
- 1.1k views
-
-
மகிந்தவின் ஐ.நா. பயணத்தின் போது மனித உரிமை அவலங்களை அம்பலப்படுத்த அனைத்துலக அமைப்புக்கள் முடிவு. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க மகிந்த ராஜபக்ச செல்லும்போது சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் அவலங்களை அம்பலப்படுத்த பல்வேறு அனைத்துலக அமைப்புக்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுக்கூட்டத்துக்கு பங்கேற்க செப்ரெம்பர் மாதத்தில் மகிந்த ராஜபக்ச வாசிங்ரன் செல்லும்போது சிறிலங்கா தொடர்பிலான விமர்சன அறிக்கை ஒன்றை வெளியிட மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு தீர்மானித்துள்ளது. செப்ரெம்பர் 25 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் தொடங்குகிறது. பாரிய அளவிலான அரசியல் மற்றும் ஊடக முக்கியத்துவம் வா…
-
- 0 replies
- 850 views
-
-
லண்டனில் மாபெரும் கண்டனப் பேரணி தொடங்கியது. லண்டனில் ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி இன்று சனிக்கிழமை முற்பகல் தொடங்கியுள்ளது. பிரித்தானியாவின் ரவல்கர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் திரண்டுள்ளனர். தமிழர் வாழ்வில் ஜூலை மாதத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள அவலங்களை நினைவு கூரும் வகையில் பேரணியில் பங்கேற்றோர் கறுப்பு உடை தரித்து பங்கேற்றுள்ளனர். நிகழ்வின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பிரித்தானியாவில் நகராட்சி மன்ற உறுப்பினர்களாக உள்ள தயா இடைக்காடர், திருமதி சசிகலா சுரேஸ் கிருஸ்ணா உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர…
-
- 10 replies
- 2.2k views
-
-
ஞாயிறு 15-07-2007 00:37 மணி தமிழீழம் [மயூரன்] வான்புலிகள் அச்சத்தால் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவிருந்த கருத்தரங்கு ஒத்திவைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் வான் படையின் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி தலைமையில் நடைபெறவிருந்த கருத்தரங்கு ஒன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் மத்திய மலைநாட்டின் கண்டி நகரில் மகிந்த ராஜபக்ச தலைமையில் அரசாங்க அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்படடிருந்தது. கடந்த 12ம் திகதியும் நேற்றும் விடுதலைப்புலிகளின் வான் படைக்கு சொந்தமான விமானங்கள் வான்பறப்பில் ஈடுபட்டமை அவதானிக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு தரப்பினரால் கண்டியில் நடைபெற ஏற்பாடாகியிருந்த கருத்தரங்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஞாயிறு 15-07-2007 05:05 மணி தமிழீழம் [சிறீதரன்] தென்மராட்சியில் எறிகணைப்பரிமாற்றத்தில் சிறீலங்காபடையினர் பலர் பலி? வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் எறிகணை வீச்சுப்பரிமாற்றத்தில் அநேக சிறீலங்கா படையினர் தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்துள்ளதாகவும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா இராணுவத்தினர் இதுதொடர்பில் எதுவித அறிவித்தல்களையும் வெளியிடவில்லை என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது. விடுதலைப்புலிகளின் எறிகணைகள் சிறீலங்கா இராணுவத்தின் எழுதுமட்டுவாள்இ உசன், மிருசுவில் பகுதிகளில் விழுந்து வெடித்திலேயே பலத்த சேதங்கள் ஏற்பட்டதாக தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 0 replies
- 586 views
-
-
ஞாயிறு 15-07-2007 03:45 மணி தமிழீழம் [மயூரன்] இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் விரைவில் - சிறீலங்கா சமாதானச் செயலகம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் விரைவில் முன்வைக்கப்படும் என சிறீலங்கா சமாதான செயலகம் அறிவித்துள்ளது. அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையில் இலங்கையில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள தீர்வு யோசனைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள தீர்வுதிட்டம் விரைவில் வெளியிடப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் நீண்ட அறிக்கை ஒன்றை சிறீலங்கா அரசாங்கத்தின் சமாதான செயலகம் வெளியிட்டுள்ளது. …
-
- 0 replies
- 773 views
-
-
சனி 14-07-2007 23:37 மணி தமிழீழம் [மயூரன்] புலிகளின் அறிவித்தலை அடுத்து சிறீலங்கா பொருளாதராத்தில் பாரிய தாக்கம் ஸ்ரீலங்காவின் பொருளாதார நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என விடுதலைப்புலிகள் அறிவித்துற்றமை ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று தீடிரென வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் பெறுமதி 111 ரூபா 80 சதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்னும் சில தினங்களில் டொலரின் பெறுமதி 120 ரூபாவரை உயர்வடையும் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை பங்கு பரிவர்தனையும் நேற்றைய தினம் மிகவும் மந்தமடைந்துள்ளதாக பங்கு சந்தை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. …
-
- 1 reply
- 1.7k views
-
-
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்துமா கடற்பிராந்தியத்திற்கான ஆதிக்கப் போட்டியில் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை-புரட்சி (தாயகம்)- 'யார் இந்து சமுத்திரத்தினைக் கட்டுப்படுத்துவார்களோ அவர்களே ஆசியாவைக் கட்டுப்படுத்துவார்கள். இருபத்தோராம் நூற்றாண்டிலே இந்து மாகடலே ஏழு கடல்களின் திறவுகோலாக விளங்கும். அதுவே உலகின் தலைவிதியையும் தீர்மானிக்கும் மாகடலாகவும் விளங்கும்."- அல்பிரட் மகான் (அமெரிக்க கடற்படை அட்மிரல் 1840-1914) இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையானது தற்போது சர்வதேச மயப்பட்ட பிரச்சினையாக கணிக்கப்படுவதற்கும் பன்னாட்டு சமூகங்களின் தலையீடுகள் பல்வேறு வடிவங்களில் காணப்படுவதற்கும் மிகவும் வலுவான பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவற்றிலே இந்து சமுத்திரப் பிராந்தியத்திலே கேந…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெள்ளி 13-07-2007 22:52 மணி தமிழீழம் [தாயகன்] அமெரிக்க அரசை, இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடுமாறு "வொசிங்ரன் டைம்ஸ்" அழைப்பு இலங்கை இனப்பிரச்சினையில் அமெரிக்க அரசு தலையிட வேண்டும் என, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான "வொசிங்ரன் டைம்ஸ்" அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை இனப்பிரச்சினை பற்றி நேற்றைய தனது பதிப்பில் ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ள "வொசிங்ரன் டைம்ஸ்", சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து செல்வதாக கவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், கனடா, ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பிற்கு அமெரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் "வொசிங்ரன் டைம்ஸ்" கோரிக்கை விடுத்திருக்கின்றது. pathivu
-
- 2 replies
- 1.5k views
-
-
ஒப்பந்தத்திலிருந்து ஒரு தரப்பு விலகும் வரை வெளியேறமாட்டோம்: கண்காணிப்பு குழுவின் பேச்சாளர். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இரு தரப்பில் ஒரு தரப்பு அவ்வொப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்கும்வரை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழு தனது பணிகளை கைவிடவோ, அல்லது நாட்டிலிருந்து வெளியேறவோ மாட்டாது என கண்காணிப்பு குழுவின் பேச்சாளர் தொபினூர் ஒமர்சன் தெரிவித்தார். பிராந்திய அலுவலகங்களில் கடமையாற்றும் கண்காணிப்பாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அவர்கள் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு மீள அழைக்கப்படுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். கண்காணிப்பு குழு தலைவர் சோல்வ் பேர்க் உடனான அண்மைய சந்திப்பின்போது அரசாங்க மற்றும் விடுதலைப் புலி…
-
- 4 replies
- 1.3k views
-
-
வங்கக் கடலில் இந்தியா-அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டுப் பயிற்சி- எம்.கே. நாராயணன் அமெரிக்கா பயணம் [சனிக்கிழமை, 14 யூலை 2007, 11:28 ஈழம்] [புதினம் நிருபர்] வங்கக் கடலில் இந்தியா,அமெரிக்கா,ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கப்பற்படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்கு குறித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக் கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கப்பற்படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப் போவதாக வந்துள்ள செய்தி குறித்து எமது அரசியல் தலைமைக் குழு தனது கவலையைத் த…
-
- 1 reply
- 1.2k views
-
-
தொப்பிகலையை தக்கவைப்பதற்கு அரசாங்கத்திடமுள்ள திட்டம் என்ன?< வீரகேசரி நாளேடு கேள்வி எழுப்புகிறார் மங்கள சமரவீர பாதுகாப்பு படைகள் மீட்டெடுத்துள்ள தொப்பிகலை பகுதியை தக்கவைப்பதற்கு அரசாங்கத்திடம் என்ன திட்டம் உள்ளது ? இந்த கேள்வியை பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரிடம் கேட்கின்றோம். அரசாங்கம் திட்டமிடலற்ற முறையில் யுத்தத்தை மேற்கொண்டு வருவதால் தற்போது பெறப்பட்டுவருகின்ற தற்காலிக இராணுவ வெற்றிகள் தோல்விகளாக மாறிவிடும் அபாயமுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்தார். யுத்தத்தை மேற்கொண்டுவரும் அரசாங்கத்திடம் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அரசியல…
-
- 7 replies
- 2.7k views
-
-
ஜெயம், ரமேஷ் உட்பட 800 விடுதலைப்புலிகள் எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர் வீரகேசரி நாளேடு தொப்பிகலையில் பாதுகாப்புப் படைகள் பெறவிருந்த பாரிய இராணுவ வெற்றி அரசியல் உயர்மட்ட உத்தரவினால் தடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தொப்பிகலையை சுற்றிவளைத்திருந்த போது அங்கு சிக்கியிருந்த புலிகளின் தளபதிகளான ஜெயம் மற்றும் ரமேஷ் உட்பட 800 புலி உறுப்பினர்கள் அதி சக்திவாய்ந்த ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர். இதற்கு இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் பன்னிப்பிட்டிய ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். தொப்பிகலையில் சிக்கியிருந…
-
- 7 replies
- 4k views
-
-
கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர் கடத்தல் [சனிக்கிழமை, 14 யூலை 2007, 09:32 ஈழம்] [கொழும்பு நிருபர்] கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் கடந்த புதன்கிழமை அதிகாலை கடத்தப்பட்டுள்ளார். சுயாதீன ஊடகவியலாளரான சக்கிவேல்பிள்ளை பிரகாஸ் (வயது 29) எனபவர் கடத்தப்பட்டிருப்பதாக சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் சிங்கப்பூரை தளமாகக் கொண்டுள்ள ஊடக அமைப்பின் செய்தி முகவர் நிலையத்தின் இலங்கைக்கான ஊடகவியலாளராகவும் படப்பிடிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். புறக்கோட்டை சிறிலங்கா அதிகாரிகள் தாம் சக்கிவேல்பிள்ளை பிரகாஸை கைதுசெய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர். சக்கிவேல் பிரகாஸ் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவராகவும் தொழிற்பட்டு வந்திருக…
-
- 1 reply
- 1.4k views
-
-
"சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் 22,000 படையினர் அங்கவீனர்கள்" [சனிக்கிழமை, 14 யூலை 2007, 06:14 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் 1983 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை 22,000 படையினர் அங்கவீனராகியுள்ளனர் என்றும், அவர்களை பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது என்றும் IRIN என்ற செய்தி நிறுவனம் தனது ஆய்வுச்செய்தியில் தெரிவித்துள்ளது. அச்செய்தி விபரம்: சட்டையின் ஒரு கை தொங்கிய வண்ணம் இருக்க முன்னாள் படைச்சிப்பாயும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அசோக தயாரட்ன தனது இடது கையினால் ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டுக் கொண்டிருந்தார். அதனை முடித்த பின்னர் "முக்கியமான தேவைகளை விட நான் வழமையன தேவைகளுக்கு செயற்கை கையைப் பயன்படுத்துவதில்லை" என அவர் தெரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
பெரும் தாக்குதலுக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்: ரொய்ட்டர்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களில் கடுமையான பயிற்சிகள் நடந்து வருவதாகவும், இத்தாக்குதல் உத்திகள் விரைவில் சிறிலங்காப் படையினருக்கு எதிரான உண்மையான தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படும் என்று அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் போராளி தெரிவித்ததாக அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு சைமன் ஹார்ட்னர் எழுதிய ஆய்வுப்பத்தியின் விபரம்: முதலில் பெரும் வெளிச்சம் தோன்றியது அதன் பின்னர் இடிமுழக்கம் போன்ற ஒசை எழுந்தது. விடுதலைப் புலிகளின் போராளியான எஸ்.கடலரசன் தனது எறிகணை- உந்துகணை செலுத்தியை இறுகப் பற்றியிருந்தார் விடுதலைப் புலி போராளி கடலரச…
-
- 1 reply
- 2k views
-