Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சனி 14-07-2007 23:37 மணி தமிழீழம் [மயூரன்] புலிகளின் அறிவித்தலை அடுத்து சிறீலங்கா பொருளாதராத்தில் பாரிய தாக்கம் ஸ்ரீலங்காவின் பொருளாதார நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என விடுதலைப்புலிகள் அறிவித்துற்றமை ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று தீடிரென வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் பெறுமதி 111 ரூபா 80 சதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்னும் சில தினங்களில் டொலரின் பெறுமதி 120 ரூபாவரை உயர்வடையும் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை பங்கு பரிவர்தனையும் நேற்றைய தினம் மிகவும் மந்தமடைந்துள்ளதாக பங்கு சந்தை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. …

  2. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்துமா கடற்பிராந்தியத்திற்கான ஆதிக்கப் போட்டியில் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை-புரட்சி (தாயகம்)- 'யார் இந்து சமுத்திரத்தினைக் கட்டுப்படுத்துவார்களோ அவர்களே ஆசியாவைக் கட்டுப்படுத்துவார்கள். இருபத்தோராம் நூற்றாண்டிலே இந்து மாகடலே ஏழு கடல்களின் திறவுகோலாக விளங்கும். அதுவே உலகின் தலைவிதியையும் தீர்மானிக்கும் மாகடலாகவும் விளங்கும்."- அல்பிரட் மகான் (அமெரிக்க கடற்படை அட்மிரல் 1840-1914) இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையானது தற்போது சர்வதேச மயப்பட்ட பிரச்சினையாக கணிக்கப்படுவதற்கும் பன்னாட்டு சமூகங்களின் தலையீடுகள் பல்வேறு வடிவங்களில் காணப்படுவதற்கும் மிகவும் வலுவான பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவற்றிலே இந்து சமுத்திரப் பிராந்தியத்திலே கேந…

  3. விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான விமானம் திருகோணமலை கடற்பிரதேச பகுதியில் பறந்ததாக ராடார் உறுதிப்படுத்தியதோடு இலங்கை கடற்படையினரும் உறுதி செய்துள்ளனர். பல பொதுமக்களும் இதனை கண்டுள்ளனர். Tiger aircraft flies over Trincomalee! http://www.lankatruth.com/full_story/2007/...20070714_01.htm

  4. லண்டனில் மாபெரும் கண்டனப் பேரணி தொடங்கியது. லண்டனில் ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி இன்று சனிக்கிழமை முற்பகல் தொடங்கியுள்ளது. பிரித்தானியாவின் ரவல்கர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் திரண்டுள்ளனர். தமிழர் வாழ்வில் ஜூலை மாதத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள அவலங்களை நினைவு கூரும் வகையில் பேரணியில் பங்கேற்றோர் கறுப்பு உடை தரித்து பங்கேற்றுள்ளனர். நிகழ்வின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பிரித்தானியாவில் நகராட்சி மன்ற உறுப்பினர்களாக உள்ள தயா இடைக்காடர், திருமதி சசிகலா சுரேஸ் கிருஸ்ணா உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர…

  5. வங்கக் கடலில் இந்தியா-அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டுப் பயிற்சி- எம்.கே. நாராயணன் அமெரிக்கா பயணம் [சனிக்கிழமை, 14 யூலை 2007, 11:28 ஈழம்] [புதினம் நிருபர்] வங்கக் கடலில் இந்தியா,அமெரிக்கா,ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கப்பற்படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்கு குறித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக் கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கப்பற்படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப் போவதாக வந்துள்ள செய்தி குறித்து எமது அரசியல் தலைமைக் குழு தனது கவலையைத் த…

  6. கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர் கடத்தல் [சனிக்கிழமை, 14 யூலை 2007, 09:32 ஈழம்] [கொழும்பு நிருபர்] கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் கடந்த புதன்கிழமை அதிகாலை கடத்தப்பட்டுள்ளார். சுயாதீன ஊடகவியலாளரான சக்கிவேல்பிள்ளை பிரகாஸ் (வயது 29) எனபவர் கடத்தப்பட்டிருப்பதாக சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் சிங்கப்பூரை தளமாகக் கொண்டுள்ள ஊடக அமைப்பின் செய்தி முகவர் நிலையத்தின் இலங்கைக்கான ஊடகவியலாளராகவும் படப்பிடிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். புறக்கோட்டை சிறிலங்கா அதிகாரிகள் தாம் சக்கிவேல்பிள்ளை பிரகாஸை கைதுசெய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர். சக்கிவேல் பிரகாஸ் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவராகவும் தொழிற்பட்டு வந்திருக…

  7. "சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் 22,000 படையினர் அங்கவீனர்கள்" [சனிக்கிழமை, 14 யூலை 2007, 06:14 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் 1983 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை 22,000 படையினர் அங்கவீனராகியுள்ளனர் என்றும், அவர்களை பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது என்றும் IRIN என்ற செய்தி நிறுவனம் தனது ஆய்வுச்செய்தியில் தெரிவித்துள்ளது. அச்செய்தி விபரம்: சட்டையின் ஒரு கை தொங்கிய வண்ணம் இருக்க முன்னாள் படைச்சிப்பாயும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அசோக தயாரட்ன தனது இடது கையினால் ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டுக் கொண்டிருந்தார். அதனை முடித்த பின்னர் "முக்கியமான தேவைகளை விட நான் வழமையன தேவைகளுக்கு செயற்கை கையைப் பயன்படுத்துவதில்லை" என அவர் தெரி…

  8. Posted on : 2007-07-14 சமரசத்தைக் கைவிட்டு சம்ஹாரத்தை நாடுவோர் "பேச்சென்ற பேச்சு, பேச்சோடு போச்சு' என்றாகிவிட்டது. தொப்பிகலவைக் கைப்பற்றி, முழுக் கிழக்கு மாகா ணத்தையும் மீட்டு, வெற்றியின் உச்சிக்கட்டத்தில் நிற் கும் அரசுக்கு தற்போது புலிகளுடன் அமைதிப் பேச்சில் ஈடுபடுவதற்கு ஆர்வம் இல்லை என்பதை வீறாப்பாகக் கோடி காட்டியிருக்கின்றார் அரசுப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா. மறுபுறத்தில் போர்த் தீவிரத்தில் வெறிகொண்டு, யுத்த முனைப் புடன் செயற்படும் மஹிந்த ராஜபக்ஷவின் இந்த அரசு டன் அமைதிப் பேச்சு சாத்தியப்படாது, சமாதான முயற்சி களுக்கும் வாய்ப்பு இல்லை என்று விசனம் தெரிவித்திருக் கின்றார் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன். வெ…

  9. தம்பன்னையில் மோதல் நிஷாந்தி வவுனியா தம்பன்னையில் இன்று அதிகாலை விடுதலை புலிகளிற்கும் இராணுவத்தினரிற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது இதில் பல விடுதலைப்புலி போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் இராணுவ தரப்பில் ஒரு படைவீரர் பலியானதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வீரகேசரி

  10. பெரும் தாக்குதலுக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்: ரொய்ட்டர்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களில் கடுமையான பயிற்சிகள் நடந்து வருவதாகவும், இத்தாக்குதல் உத்திகள் விரைவில் சிறிலங்காப் படையினருக்கு எதிரான உண்மையான தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படும் என்று அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் போராளி தெரிவித்ததாக அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு சைமன் ஹார்ட்னர் எழுதிய ஆய்வுப்பத்தியின் விபரம்: முதலில் பெரும் வெளிச்சம் தோன்றியது அதன் பின்னர் இடிமுழக்கம் போன்ற ஒசை எழுந்தது. விடுதலைப் புலிகளின் போராளியான எஸ்.கடலரசன் தனது எறிகணை- உந்துகணை செலுத்தியை இறுகப் பற்றியிருந்தார் விடுதலைப் புலி போராளி கடலரச…

    • 1 reply
    • 2k views
  11. ஒப்பந்தத்திலிருந்து ஒரு தரப்பு விலகும் வரை வெளியேறமாட்டோம்: கண்காணிப்பு குழுவின் பேச்சாளர். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இரு தரப்பில் ஒரு தரப்பு அவ்வொப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்கும்வரை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழு தனது பணிகளை கைவிடவோ, அல்லது நாட்டிலிருந்து வெளியேறவோ மாட்டாது என கண்காணிப்பு குழுவின் பேச்சாளர் தொபினூர் ஒமர்சன் தெரிவித்தார். பிராந்திய அலுவலகங்களில் கடமையாற்றும் கண்காணிப்பாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அவர்கள் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு மீள அழைக்கப்படுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். கண்காணிப்பு குழு தலைவர் சோல்வ் பேர்க் உடனான அண்மைய சந்திப்பின்போது அரசாங்க மற்றும் விடுதலைப் புலி…

  12. வெள்ளி 13-07-2007 22:52 மணி தமிழீழம் [தாயகன்] அமெரிக்க அரசை, இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடுமாறு "வொசிங்ரன் டைம்ஸ்" அழைப்பு இலங்கை இனப்பிரச்சினையில் அமெரிக்க அரசு தலையிட வேண்டும் என, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான "வொசிங்ரன் டைம்ஸ்" அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை இனப்பிரச்சினை பற்றி நேற்றைய தனது பதிப்பில் ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ள "வொசிங்ரன் டைம்ஸ்", சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து செல்வதாக கவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், கனடா, ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பிற்கு அமெரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் "வொசிங்ரன் டைம்ஸ்" கோரிக்கை விடுத்திருக்கின்றது. pathivu

  13. தொப்பிகலையை தக்கவைப்பதற்கு அரசாங்கத்திடமுள்ள திட்டம் என்ன?< வீரகேசரி நாளேடு கேள்வி எழுப்புகிறார் மங்கள சமரவீர பாதுகாப்பு படைகள் மீட்டெடுத்துள்ள தொப்பிகலை பகுதியை தக்கவைப்பதற்கு அரசாங்கத்திடம் என்ன திட்டம் உள்ளது ? இந்த கேள்வியை பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரிடம் கேட்கின்றோம். அரசாங்கம் திட்டமிடலற்ற முறையில் யுத்தத்தை மேற்கொண்டு வருவதால் தற்போது பெறப்பட்டுவருகின்ற தற்காலிக இராணுவ வெற்றிகள் தோல்விகளாக மாறிவிடும் அபாயமுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்தார். யுத்தத்தை மேற்கொண்டுவரும் அரசாங்கத்திடம் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அரசியல…

    • 7 replies
    • 2.7k views
  14. ஜெயம், ரமேஷ் உட்பட 800 விடுதலைப்புலிகள் எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர் வீரகேசரி நாளேடு தொப்பிகலையில் பாதுகாப்புப் படைகள் பெறவிருந்த பாரிய இராணுவ வெற்றி அரசியல் உயர்மட்ட உத்தரவினால் தடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தொப்பிகலையை சுற்றிவளைத்திருந்த போது அங்கு சிக்கியிருந்த புலிகளின் தளபதிகளான ஜெயம் மற்றும் ரமேஷ் உட்பட 800 புலி உறுப்பினர்கள் அதி சக்திவாய்ந்த ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர். இதற்கு இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் பன்னிப்பிட்டிய ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். தொப்பிகலையில் சிக்கியிருந…

  15. படுவான்கரையை சேர்ந்த பாலசுந்தரம் தவமணியை குத்தி கொடூரமாக கொலை செய்தமைக்காக ஆசிய மனித உரிமைகள் அமைப்பினர் எடுக்கும் Urgent appeal இல் நீங்களும் பங்கு பற்றுங்கள். ஆசிய மனித உரிமை அமைப்பினரால் தயாரிக்கப்பட்ட நீங்கள் அனுப்ப வேண்டிய மாதிரிக்கடிதம் SRI LANKA: Young woman brutally stabbed to death by members of Armed Forces Sample letter: Dear _________, SRI LANKA: Young woman brutally stabbed to death by members of Armed Forces Name of victim/deceased: Balasuntharam Thavamani (27) of Paduwankarai in the Batticaloa District, Eastern province, Sri Lanka Alleged perpetrators: Members of the Sri Lanka Army or Special Task Force (STF-Police) D…

  16. யேர்மன் தூதுவரை வெளியேற்ற நடவடிக்கை: அமைச்சர் ஜெயராஜ் தகவல். சிறிலங்காவுக்கான யேர்மன் தூதுவர் ஜூர்ஜென் வீர்த்தை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடும் என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியதாவது: கொழும்பு ஹில்டன் நட்சத்திர விடுதியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை யேர்மன் தூதுவர் அண்மையில் இரவு நேரத்தில் சந்தித்துள்ளார். அச்சந்திப்பின் போது சிறிலங்கா அரசாங்கத்துக்கான நிதி உதவியை யேர்மன் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டதாக தெரியவந்துள்ளது. அதேபோல் சிறிலங்காவின் உள்விவகாரங்க…

  17. அனுரத்த ரத்வத்தைக்கு முக்கியப் பொறுப்பு அளிக்க மகிந்த முடிவு [வெள்ளிக்கிழமை, 13 யூலை 2007, 18:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தைக்கு சிறிலங்கா அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்பளிக்க அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ரத்வத்தையின் 74 ஆவது பிறந்த நாளையொட்டி கண்டியில் உள்ள தனது இல்லத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை அவரை மகிந்த ராஐபக்ச அழைத்திருந்தார். அங்கு ரத்வத்தையின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்வில் அனுருத்த கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளைப் பாராட்டிய மகிந்த, பிறந்த நாள் பரிசாக அவருக்கு அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புக்களை கொடுப்பதற்கு விருப்பம் கொண்டுள…

  18. யாழில் சிறிலங்கா இராணுவத்தால் இளைஞர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 13 யூலை 2007, 17:37 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். திருக்குடும்பம் கன்னியர் மடத்திற்கு அருகில் சிறிலங்கா இராணுவத்தினரால் இன்று வெள்ளிக்கிழமை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்டவர் விஜேந்திரன் வரதராசா என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் யாழ். தென்மராட்சி கைதடிப்பகுதியில் இன்று காலை 6.00 மணி முதல் முற்பகல் 11.00 மணிவரை இராணுவத்தினர் பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். மக்களின் அடையாள அட்டையை இராணுவத்தினர் பறித்துவிட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதினம்

  19. தாக்குதல்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது: புலிகளுக்கு சிறிலங்கா பதில். கொழும்பு உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறியதாவது: கிழக்கில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சிறிலங்கா உச்ச நீதிமன்றத்துக்கு மகிந்த ராஜபக்ச தெரியப்படுத்தி அதன் கருத்தை கேட்டறிய உள்ளார். எதிர்வரும் வாரம் சிறிலங்கா நாடாளுமன்றில் கிழக்குத் தேர்தல்கள் தொடர்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும். புதிய வேட்புமனுக்கள் விரைவில் கோரப்படும். தேர்தலை நடத்துவது தேர்தல…

  20. பருத்தித்துறை தும்பளையில் கிளைமோர் தாக்குதல்: ஆசிரியர் பலி, இராணுவ உத்தியோகஸ்தர் படுகாயம். வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தும்பளையில் 52ம் படைப்பிரிவின் உயரதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவரை பலாலி இராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை ஆசிரியர் ஒருவர் கோவிலுக்கு சென்றுவிட்டு அவ்வழியால் திரும்பும் போது அதிர்ச்சியில் இறந்துள்ளதாகவும் இறந்தவர் 51 அகவையுடைய மணியம் கணவதிப்பிள்ளை எனவும் சைவப்பிரகாச மகா வித்தியாலய ஆசிரியர் எனவும் தெரியவருகிறது. -Pathivu-

  21. விடுதலைப்புலிகள் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் பேச்சுவார்தைக்கு தயாரில்லை: நோர்வே. தமிழீழ விடுதலைப்புலிகள் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்தை நடத்துவதற்கு தயாரில்லை என்று நோர்வே தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தலைமையிலான விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்தையின் போது இந்த தகவல் நோர்வே தரப்பினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸகள் குறிப்பிட்டுள்ளார். தனது கிளிநொச்சி விஜயம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சுவார்தைக் குழு தலைவரான அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வாவிற்று நோர்வே தூதுவர் நேற்று விளக்கமள…

  22. தொப்பிகல அரசியல் [13 - July - 2007] தொப்பிகல பிராந்தியம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதையடுத்து கிழக்கு மாகாணம் முழுவதும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டதாக பிரகடனம் செய்திருக்கும் அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பெரும் கொண்டாட்டங்களுக்கு தயாராகிக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. 1995 இல் யாழ்ப்பாணக் குடாநாட்டை இராணுவம் கைப்பற்றியதை அன்றைய ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் அரசாங்கம் பெருவெற்றியாகக் கொண்டாடியதைப் போன்று இன்று கிழக்கில் தொப்பிகல வெற்றியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் கொண்டாடத் தலைப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் உத்தேச வெற்றிக் கொண்டாட்டங்களின் தகுதி பற்றி விமர்சனங்கள் ஏற்கனவே கிளப்பியிருக்கின்ற போதிலும், கிழக்கி…

  23. ஒமந்தை சோதனைச் சாவடியில் இராணுவக் கெடுபிடியால் வன்னி வரும் பாரஊர்தி எண்ணிக்கை குறைகிறது. ஒமந்தை இராணுவச் சோதனைச் சாவடி ஊடாக கிழமையில் அறு நாட்கள் பார ஊர்திகளில் உணவு மற்றும் நுகர்ச்சிப் பொருட்கள் எடுத்து வரப்பட்டன. ஆனால் சிறிலங்காப் படைகளின் தாக்குதல் காரணமாக அவையாவும் அடிக்கடி தடைப்பட்டன. ஒமந்தை இராணுவச் சாவடிஊடான போக்கு வரத்திற்காக ஒவ்வொரு நாளும் திறந்திருக்க வேண்டுமெனவும் திறந்திருந்தால்தான் அத்தியவசியப் பணிகள் சீராக நடைபெறும் எனவும் மருத்துவ வசதிகளுக்கு செல்லும் நோயாளிகளிற்கு அது நன்மை பயக்கும் என்றும் கோரிக்கைகள் பல பொது அமைப்க்களால் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் ஒமந்தை இராணுவ முகாமில் இருந்து அடிக்கடி தாக்குதல் புலிகள் நிலைகள் மீது நட…

  24. மிலிந்த மொரகொடவின் அமெரிக்கப் பயனத்தில் வாய்ப்புகள் வந்து சேரப்போவதில்லை. போரைத் தீவிரப்படுத்தியதன் விளைவை மகிந்த இப்போது அறுவடை செய்துகொண்டிருக்கிறார்.பொரு

  25. யாழில் சரத் பொன்சேகா சிறிலங்கா இராணுவத்தளபதி சரத்பொன்சேகா யாழ்ப்பாணத்திற்கு அவசரப்பயணம் மேற்கொண்டார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று வியாழக்கிழமை சென்ற சரத்பொன்சேகா அங்கு இராணுவ உயர் தளபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலில் சரத் பொன்சேகா ஆலோசனைகளை வழங்கியதாக இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. -புதினம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.