ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
83 இனப் படுகொலைக்கே மன்னிப்பு கேட்காத போது சிலரை வெளியேற்றியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமா?: பெர்னாண்டோபுள்ளே. 1983 ஆம் ஆண்டு தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்காக அரசாங்கமோ அல்லது சிங்களவரோ மன்னிப்புக் கேட்கவில்லை. அப்படியான நிலையில் தற்போது சில தமிழர்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்காக ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகிந்தவின் அமைச்சரான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் முஸ்லிம் ஊடக மையத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை நான் ஆதரிக்கவில்லை. ஒரு தனியரச…
-
- 5 replies
- 1.6k views
-
-
மூதூர் படுகொலையில் மறைக்கப்பட்ட மிக முக்கிய "சாட்சி ஆவணம்": அம்பலப்படுத்தியுள்ளது அனைத்துலக சட்ட வல்லுநர்கள் ஆணையம். மூதூர் படுகொலையில் முக்கியமான "சாட்சி ஆவணம்" ஒன்றை நீதிமன்றில் சிறிலங்க அரசாங்கம் மறைத்ததனை அனைத்துலக சட்ட வல்லுநர்கள் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது. பிரித்தானிய சட்ட வல்லுநர் மைக்கேல் பிரின்பௌம் அந்த ஆணையத்திடம் மூதூர் படுகொலை தொடர்பாக அறிக்கை ஒன்றை கையளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் உடல்களை பரிசோதனை செய்த அவுஸ்திரேலியாவின் மல்கொல்ம் டொட் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. கடந்த ஒக்ரோபர் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டோரின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனை …
-
- 0 replies
- 1.5k views
-
-
இணைத் தலைமை நாடுகளின் மென்போக்குக்கு எதிராக நோர்வே தமிழர்கள் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒஸ்லோவில் நடைபெறுகின்ற இணைத்தலைமை நாடுகளின் மாநாட்டினையொட்டி நோர்வே தமிழ் மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது. நோர்வே வெளிவிவகார அமைச்சகத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை இக்கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வே ஆகிய சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் இருநாள் மாநாடு இன்றும் நாளையும் நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தலைமையில் ஒஸ்லோவில் நடைபெறுகின்றது. தமிழ் மக்கள் மீது வன்போர் நடவடிக்கைகளையும் கொடும் பயங்கரவாதத்தையும் கட்…
-
- 0 replies
- 995 views
-
-
பாரிய கட்டுமான தொழில்துறை கண்காட்சி: முதல் முறையாக சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் அழைப்பு [திங்கட்கிழமை, 25 யூன் 2007, 16:31 ஈழம்] [சி.கனகரத்தினம்] பாகிஸ்தானில் ஆசிய நாடுகள் அளவிலான பாரிய கட்டுமான தொழில்துறை கண்காட்சியில் பங்கேற்குமாறு சிறிலங்காவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் எதிர்வரும் ஓகஸ்ட் 28 முதல் 30ஆம் நாள் வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது. 9 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் அளவில் 1 லட்சம் பார்வையாளர்களை இலக்கு வைத்து இக்கண்காட்சி நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் சந்தைகளில் இறங்குவதற்கான ஒரு வாய்ப்பாக இக்கண்காட்சி அமையும் என்று கூறப்படுகிறது. "பில்ட் ஏசியா" என்று அழைக்கப…
-
- 1 reply
- 933 views
-
-
இலங்கையில் நடந்து வரும் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நூற்றுக்கணக்கான தமிழர்களும், பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடந்தது. தென் ஆப்பிரிக்க தமிழர் ஒத்துழைப்புக் குழு இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பெரும் திரளான தமிழர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்ட இந்தப் பேரணி, இந்தியர்கள் அதிகம் வாழும் சாட்ஸ்வொர்த் நகரியத்தில் உள்ள மகாத்மா காந்தி பூங்காவில் முடிவடைந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உருவப் படம் ஏந்திய பதாகைகள், பேனர்கள் உள்ளிட்டவற்றுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சென்றனர். தமிழர்களை அழிக்கும் இனப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு உலக சமுதாயத்தைக் கோரி க…
-
- 1 reply
- 1.2k views
-
-
"மகிந்த ராஜபக்ச எனும் ஒரு இனவாத யுத்த விரும்பியை அம்பலப்படுத்திய அல்ஜசீரா" [திங்கட்கிழமை, 25 யூன் 2007, 16:49 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா அரச தலைவராக உள்ள மகிந்த ராஜபக்சவை நேர்காணல் செய்ததன் மூலம் ஒரு இனவாத யுத்த விரும்பியை அல்ஜசீரா தொலைக்காட்சி அம்லப்படுத்தியுள்ளதாக "நான்காம் உலகத்தின் அனைத்துலகக் குழு" இணையத்தளத்தின் செய்தி ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்தவின் அல்ஜசீரா தொலைக்காட்சி நேர்காணல் குறித்து எழுதப்பட்ட அந்த ஆய்வு: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கடந்த மாதம் மத்திய கிழக்கிற்கு சென்றிருந்த போது, அல்ஜசீராவிற்கு வழங்கிய ஒரு பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தனது அரசாங்கம் முன்னெடுக்கும் யுத்தத்தை பாதுகாத…
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்பிலிருந்து தமிழரை வெளியேற்றும் முடிவு உயர் மட்ட பாதுகாப்பு மாநாட்டிலேயே எடுக்கப்பட்டது [25 - June - 2007] கொழும்பிலிருந்து தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றியதற்கு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ விடுத்த உத்தரவுதான் காரணமெனத் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஊடகமொன்று தகவல்கள் வெளியிட்டுள்ளது. அத்தகவலில்; பாதுகாப்பு அமைச்சில் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற பாதுகாப்பு இணைப்பு மாநாட்டில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையையும் அதில் பங்கேற்ற இராணுவத் தளபதிகள், பொலிஸ் அதிகாரிகள் பெயர்ப் பட்டியலையும் பகிரங்கப்படுத்தியுள்ளதோடு அந்தக் கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும் வெளியிட்டு, தமிழ் மக்களை கொழும்பிலிருந்து வெ…
-
- 0 replies
- 1k views
-
-
உடுவில், இணுவில் உள்ளிட்ட பல பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் பாரிய தேடுதல் நடவடிக்கை. யாழ்ப்பாணத்தில் உடுவில், இணுவில் உள்ளிட்ட பல பகுதிகள் இன்று திங்கட்கிழமை சிறிலங்கா இராணுவத்தினரின் பாரிய தேடுதல் நடவடிக்கைக்குள்ளானது. உடுவில் கற்பகப் பிள்ளையார் கோவிலடி உள்ளிட்ட பகுதிகள், இணுவில் மேற்குப் பகுதிகளில் ஊரடங்கு நேரத்தில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினர் இரக்கப்பட்டனர். இன்று காலையில் அப்பகுதியைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்படைந்தது. பணிக்குச் செல்வோரும் மாணவர்களும் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. குருநகர், சென்பற்றிக்ஸ் கல்லூரி ஆகிய பகுதிகளி…
-
- 0 replies
- 765 views
-
-
சு.க வை ஜனநாயகப்படுத்தவும் அதிகாரத்தைக் கைப்பற்றவுமே தனிக் குழு: மங்கள சமரவீர. சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஜனநாயகப்படுத்தவும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவுமே தனிக் குழு உருவாக்கியுள்ளோம் என்றும் இது அரசியல் கட்சி அல்ல- சுதந்திரக் கட்சியில் உள்ள "அழுத்த" குழு என்றும் மங்கள சமரவீர கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: எமது புதிய பிரிவானது ஒரு அரசியல் கட்சி அல்ல. அரசாங்கத்தை சரியான பாதையில் அழைத்துச் செல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உருவாக்கப்பட்ட ஒரு அழுத்தக் குழு. கட்சியை இந்தக் குழு ஜனநாயகப் பாதைக்கு இட்டுச் செல்லும். தற்போதைய அராஜக நிலையிலிருந்து மீட்டு பழைய நிலைக்கு கட்சியை கொண்டு செல்லும். க…
-
- 0 replies
- 907 views
-
-
கச்சதீவுப் பகுதியில் தமிழக மீனவரின் உரிமையை நிலைநிறுத்த வேண்டும் [25 - June - 2007] * தானம் கொடுத்ததை திருப்பிக் கேட்க வேண்டாம் கச்சதீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவது என்பது முடிவில்லாத சோகத் தொடர்கதையாக நீடித்து வருகிறது. இலங்கையில் இனக் கலவரம் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கிய காலகட்டத்தில் தொடங்கி, இதுவரை 200 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கச்சத் தீவுப் பகுதிக்கு அருகே மீன் பிடிக்கச் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான ரூபா மதிப்புள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் அழிக்கப்பட்டுள்ளன. அந்தப் படகுகளில் தமிழக மீனவர்கள் உயிரைப் பணயம் வைத்து, பிடித்து வைத்திருந்த மீன்கள் அபக…
-
- 0 replies
- 693 views
-
-
சிறிலங்காவில் 2 வருடங்களில் 10,000-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தப்பியோட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2007, 06:23 ஈழம்] [க.திருக்குமார்] கடந்த 2005 ஆண்டு ஐனவரி 1 ஆம் நாளில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஏப்பிரல் 20 ஆம் நாள் வரையிலான காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து 93 அதிகாரிகளும் 10,060 இராணுவத்தினரும் தப்பியோடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது: படையினர் தமது படைவலுவினை 50,000 பேரினால் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இராணுவத்திற்கு 25,000 பேரும், கடற்படைக்கு 15,000 பேரும், வான்படைக்கு 10,000 பேரும் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். ஒவ்வொரு பிரிவும் தமது படைக்கு ஆட்களை த…
-
- 11 replies
- 1.7k views
-
-
அனைத்துலக உறவுகளைப் பேணும் திறமை மகிந்தவுக்கு இல்லை: கல்யநந்த கொடகே. சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கு அனைத்துலக உறவுகளைப் பேணும் திறமை இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் கல்யநந்த கொடகே சாடியுள்ளார். சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மறைந்த பிரேமதாசவின் 83 ஆவது சிரார்த்த நாள் கருத்தரங்கில் கல்யநந்த கொடகெ பேசியதாவது: சிறிலங்கா மேற்குலகத்தைச் சார்ந்துதான் உள்ளது. உள்நாட்டு ஆடைத் தயாரிப்புக்கள் அனைத்துமே மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக வங்கி உள்ளிட்டவைகள் அனைத்துலகத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்நிலையில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்குரிய திட்டத்தை முன்வைக்க வேண்டியது அவசியமானதாகும். ஜே.ஆர்.ஜயவர்த்தன மற்றும் ப…
-
- 0 replies
- 932 views
-
-
கடத்தல் சம்பவங்களில் மேற்குலக தூதரகப் பணியாளருக்கு தொடர்பு: ஐலண்ட். இலங்கை கடத்தல் சம்பவங்களில் மேற்குலக நாடு ஒன்றின் தூதரகப் பணியாளருக்கும் தொடர்பிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஐலண்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐலண்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டோரில் ஒருவரான ரோஜித் தர்மரட்ன என்ற ஆனந்தவுக்கு மேற்குலக நாடு ஒன்றின் தூதரகப் பணியாளருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. அந்தப் பணியாளருடன் இணைந்து பாரிய விசா மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அந்தத் தூதரகத்திடம் காவல்துறையினர் ஒத்துழைப்பு கோரக்கூடும் எனத் தெரிகிறது. தூதரகப் பணியாளருக்கும் கடத்தல் குழுவினருக்கும் …
-
- 0 replies
- 923 views
-
-
Posted on : Mon Jun 25 6:55:51 EEST 2007 இந்தியப் பாணியை பின்பற்றி இணைத்தலைமைகள் இலங்கையை பகிரங்கமாக கண்டிப்பதை தவிர்க்குமா? ""முனைப்படைந்துவரும் யுத்தம், மூர்க்க மான உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மத்தி யில் இலங்கையில் கந்தலாகி தொய்வு கண் டுள்ள சமாதான முன்னெடுப்புக்களை சர்வ தேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வரு கின்றது.'' இவ்வாறு இந்தோ ஏஷியன் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேற்படி சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை, தெரிவித்திருப்பதாவது: சர்வதேச சமூகத்தின் கூட்டமொன்று திங் கள் செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய்க் கிழமை ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. இலங்கையில் இடம்பெற்றுவரும் மோதல் கள், உரிமை மீறல்கள், சமாதான முன்னெடுப்புச் சீர்குலைவு ஆகியவற்றையொட்டி இக் கூட்டத்து…
-
- 1 reply
- 1.3k views
-
-
தென்பகுதி கடல் எல்லையை பாரிய அளவில் விரிவுபடுத்த சிறிலங்கா முடிவு. சிறிலங்கா அரசாங்கம் தனது கடல் எல்லையை தென்பகுதியில் பாரிய அளவில் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ செய்தி தளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்: கடல் எல்லையை விரிவுபடுத்துதல் தொடர்பாக ஆய்வு நடத்த இங்கிலாந்து நிறுவனத்துடன் சிறிலங்காவின் மீன்வள அமைச்சு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட உள்ளது. தற்போது சிறிலங்காவுக்கு 200 நாட்டிகல் மைல் சொந்தமாக உள்ளது. மேலும் 800 நாட்டிகல் மைல்லை உரிமை கோர உள்ளது. இதன் மூலம் சிறிலங்காவின் கடல் எல்லை 1000 நாட்டிகல் மைல் தொலைவுக்கு இருக்கும். இந்தக் கடல் எல்லையை ஆராய்ந்து குறியீடு செய்வதற்காக இங்கிலாந்தின் ஜி.ஈ.எம்.எஸ். நிறுவன…
-
- 0 replies
- 859 views
-
-
Posted on : Mon Jun 25 6:49:50 EEST 2007 புலிகளின் குடும்பிமலை ""பெய்ரூட்'' முகாம் எந்நேரமும் எம்வசமாகலாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பி மலைப் பிரதேசத்தில் (தொப்பிகலவில்) அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் "பெய் ரூட்'' முகாமை படையினர் அண்மித்துள்ள னர் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் பலமான கோட் டையாக விளங்கிய ""பெய் ரூட்'' முகாம் பகுதியை படையினர் எந்த நேரத்திலும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம் என்றும் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் மற் றும் காலநிலை சீரின்மை போன்ற பிரச்சினை கள் இருந்த போதும் படையினர் முன்னேறி வருகின்றனர் என்றும் படைத் தரப்பு மேலும் தெரிவித்தது. இராணுவத்தின் கொமாண்டோப் பிரி வைச் சேர்ந்த 50 பேர் கொண்ட அணி விடு தலைப் புலி…
-
- 0 replies
- 1.5k views
-
-
Posted on : 2007-06-25 சர்வதேச அழுத்தப் பொறிக்குள் மெல்ல மெல்ல வீழும் கொழும்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இலங் கையின் "கீர்த்தி' கொடிகட்டிப் பறப்பது குறித்து இப்பத்தி யில் ஏற்கனவே சுட்டிக்காட்டிக் குறிப்பிட்டிருந்தோம். அக் கீர்த்தி மென்மேலும் பரவி வருவதை தற்போதைய செய்தி கள் உறுதிப்படுத்துகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்ஸிலில், இலங்கை குறித்து விசேட கவனம் எடுக்க வேண்டும் எனப் பெயர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டி ஆராயும் அளவுக்கு நிலைமை உயர்ந்து(?) சென்றிருக்கின்றது. மனித உரிமைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐ. நாவின் கீழ்நிலை செயலாளர் நாயகம் கடந்த வெள்ளியன்று ஐ. நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போது, நெருக்கடிகள் நிறைந்த ம…
-
- 0 replies
- 912 views
-
-
தமிழரிடமிருந்து பறி போய்விட்ட திருமலையின் `தனித்தமிழ்ப் பிரதேசங்கள்' - (தேசியன்) எமது நிலம் எமக்கு வேண்டுமென தாயகத்திலும் புலத்திலும் உரிமைக்குரல் எழுப்பிவரும் தமிழ் மக்களுக்கு சவால்விடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் திருகோணமலைத் துறைமுகத்தையடுத்துள்ள தென்பகுதியை அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது. `தேசிய பாதுகாப்பு' ,உயர் பாதுகாப்பு வலயம்' அதியுயர் பாதுகாப்பு வலயம்' ஆகிய இன்னோரன்ன பெயர்களின் கீழ் வளமிக்க தமிழர் தாயக பிரதேசங்கள் உருக்குலைக்கப்பட்டே வருகின்றன. அந்த வகையில் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு பசிக்கு இறுதியாக இரையாகியுள்ள தமிழர் நிலங்களாக மூதூர் கிழக்கும் சம்பூரும் வந்துள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் மே 30 என திகதி…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா- சீனா கூட்டுச்சதி: விரைவில் வவுனியாவில் தமிழ்நாட்டை கண்காணிக்கும் முப்பரிமாண ராடார். வவுனியாவில் தமிழ்நாட்டை கண்காணிக்கும் வகையிலான ஜே.வை-11 என்ற முப்பரிமாண ராடாரை சிறிலங்காவுக்கு சீனா வழங்கியுள்ளதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பு சிங்கள ஊடகமான "லக்பிம" வெளியிட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: சீனாவின் எலெக்ரோனிக் ரெக்னோலொஜி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட ஜே.வை-11 (JY-11) ரக தாழ்வாக பறக்கும் வானூர்திகளை கண்டறியும் முப்பரிமாண ரடார்களையும் அரசு கொள்வனவு செய்துள்ளது. இந்த ராடார்களை கொள்வனவு செய்வதற்கு அரசு கடந்த ஆண்டு கொள்வனவு பத்திரத்தை சமர்ப்பித்ததுடன் முற்பணத்தையும் செலுத்தியி…
-
- 9 replies
- 2k views
-
-
இராணுவத்தின் திட்டமிடல்களால் மரபு வழிச்சமர் மாற்றம் பெறுமா? -அருஸ் (வேல்ஸ்)- இராணுவத்தீர்வே இனப்பிரச்சினைக்கான ஒரே தீர்வு என்பதுதான் காலம் காலமாக ஆட்சி செய்துவரும் அரசியல் கட்சிகளினதும், அரச தலைவர்களினதும் பிரதான நோக்கமா? என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது. எனினும் தமது பொருளாதாரத்தை பேணுவதற்காகவும், தென்னிலங்கைப் பகுதிகளின் அபிவிருத்திக்கும் என அனைத்துலகத்தின் உதவிகளையும் கடன்களையும் பெறுவதற்காக அவ்வப்போது அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, அனைத்துக்கட்சிக்குழு என்பன தொடர்பான பேச்சுக்கள் அடிபடுவதுண்டு. ஆனால் தற்போது விடுதலைப் புலிகளின் மீது மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையில் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் வீழ்ந்துவிடாமல் தடுப்பதற்காகவேனும் ஒரு ச…
-
- 0 replies
- 1.1k views
-
-
மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச மட்டத்தில் பேசப்படுவது ஆரோக்கியமான விடயமல்ல நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் வீதியில் செல்ல அச்சப்படுகின்றனர். ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டுவருகின்றன
-
- 0 replies
- 811 views
-
-
இரத்தக்களரியை தணிப்பதற்கு இணை தலைமைகளின் கூட்டம் வழியேற்படுத்தும் இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துச்செல்லும் மோதல்களையும் இரத்தக்களரியையும் தணிப்பதற்கு இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் வழியேற்படுத்துமென சமாதான செயற்பாடுகளின் அனுசரணையாளரான நோர்வே தெரிவித்துள்ளது.நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படுமென இராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.முதல் நாளான இன்று ஆரம்ப நிகழ்வும் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களும் இடம்பெறுவதோடு தமது செயற்பாடுகளை இணைத்தலைமைகள் மதிப்பீடு செய்யவுள்ளன. இரண்டாம் நாளான நாளை செவ்வாய்க்கிழமை, நாட்டில் அதிகரித்துச் செல்லும் மோ…
-
- 0 replies
- 892 views
-
-
இலங்கையின் கிழக்கை சேர்ந்த இளைஞர்கள் வெளிநாடு செல்ல முனைப்பு. இலங்கையில் இடம்பெறுகின்ற மோதல்கள் காரணமாக வெளிநாடுகளுக்கு அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து செல்வது என்பது கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெறுகின்ற நிகழ்வுதான். ஆனால் அண்மையில் கிழக்கும் மாகாண மோதல்கள் காரணமாக திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்குப் பகுதியில் இருந்தும் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் இருந்து பெரும்பாலும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான முயற்சிகளில் முனைப்பாக ஈடுபட்டு வருவதாக தற்போது அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. கடந்த காலங்களில் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து பலர் வெளிநாடுகளுக்கு பரவலாக இடம்பெயர்ந்திருக்கின்ற போதிலும், இந்த மூதூர் கிழக்கு மற்றும் படுவான…
-
- 0 replies
- 898 views
-
-
இலங்கைக்கு உணவு, மருந்துகளை அனுப்ப இந்தியா அனுமதிக்கவேண்டும் ம.தி.மு.க.வின் புதுச்சேரி பொறுப்புக் குழுக் கூட்டம் அமைப்பாளர் நா. மணிமாறன் இலங்கைக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்புவதற்கு இந்திய அரசு அனுமதிக்கவேண்டும் என்று ம.தி.மு.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.ம.தி.மு.க.வின் புதுச்சேரி பொறுப்புக் குழுக் கூட்டம் அமைப்பாளர் நா. மணிமாறன் தலைமையில் நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு மேலும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: ஏ9 வீதியை இலங்கை அரசு மூடியுள்ளமையால் 5 இலட்சம் தமிழர்கள் உணவு இன்றி நோய்க்கு மருந்து இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பட்டினிச் சாவைத் தடுக்க இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் வழங்கப்படவிருக்கும் …
-
- 0 replies
- 809 views
-
-
சிங்கள இனவாத அரசு தனிமைப்பட்டுத் தவிக்கிறது. இந்தியா என்ன செய்யப்போகிறது?: மூத்த ஊடகவியலாளர் சோலை உலக அரங்கில் சிங்கள இனவாத அரசு தனிமைப்பட்டுத் தவிக்கிறது- இந்தியா என்ன செய்யப்போகிறது? என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் எம்.ஜி.ஆரின் ஆலோசகராக செயற்பட்டவருமான சோலை கேள்வி எழுப்பியுள்ளார். குமுதம் குழுமத்தின் "றிப்போர்ட்டர்" வாரமிருமுறை இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை: ஈழப் பிரச்னையில் சிங்கள இனவாத ராஜபக்ச அரசு, சர்வதேச அரங்கில் தனிமைப்படுகிறது என்பதனை ஏற்கெனவே எழுதியிருந்தோம். அவை கற்பனை என்றும் கட்டுக் கதைகள் என்றும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் மறுப்புத் தகவல் அனுப்பியிருந்தது. இதோ! இப்போது நாம் குறிப்பிட்ட தகவல்களை விட, ஒருவர் அதிகமாகவே அட…
-
- 0 replies
- 706 views
-