Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பௌயர் வருகை இல்லை: நோர்வே அறிவிப்பு நோர்வேயின் சமாதான தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இலங்கைக்கு வருவதாக வெளியான செய்திகள் அனத்துமே ஊகமானவை- அப்படியான திட்டம் ஏதும் இல்லை என்று நோர்வே அறிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவரகப் பேச்சாளர் எரிக் நுரென்பெர்க் இது தொடர்பில் கூறியுள்ளதாவது: ஜோன் ஹன்சன் பௌயர், இலங்கைக்கு வருகை தருகிறார் என்றும் கிளிநொச்சி செல்கிறார் என்றும் வெளியான செய்திகள் எப்படி உருவானது என்று தெரியவில்லை. நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்முடன் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பு கொண்டு பேசியதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என்றார் அவர். -புதினம்

  2. விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடித்துவிட முடியாது: அமைச்சர் டியூ குணசேகர தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தாலும்கூட அரசியல் ரீதியாக தோற்கடித்துவிட முடியாது என்று சிறிலங்காவின் அரசியல் யாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரும் கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான டியூ குணசேகர தெரிவித்துள்ளார். சிறிலங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் 64ஆம் ஆண்டையொட்டி நிகழ்வு கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் டியூ குணசேகர பேசியதாவது: ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள் நாட்டினது இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். பண்டாரநாயக்க காலத்தில் தொடங்கிய இனப்பிரச்சனையானது ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சிக்காலத்தில் இரத்தம் தோய்ந்ததாக மாறியது. 25 ஆண்ட…

  3. ராஜபக்ச பறைசாற்றும் வெற்றியின் முகத்திரை விரைவில் கிழிபடும்: த.தே.கூ. ஜெயானந்தமூர்த்தி சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்ச பறைசாற்றும் வெற்றியின் முகத்திரை விரைவில் கிழிபடும் என்று இத்தாலியில் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சே. ஜெயானந்தமூர்த்த்p இத்தாலிக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். கடந்த மாதம் 28ஆம் நாளன்று சிசிலி நாடாளுமன்றத்தில் அரச தரப்பினருடனான சந்திப்பில் கலந்து கொண்டு தமிழீழத் தாயகத்தின் இன்றைய நிலவரங்களையும் சமாதான ஒப்பந்தம் பற்றிய நிலைமைகளையும் எடுத்து விளக்கினார். கத்தானியாப் பிரதேசத்தில் கடந்த மாதம் 29ஆம் நாளன்று நிகழ்வில் …

  4. நாட்டைவிட்டு வெளியேறினார் கோத்தபாய ராஜபக்ச: கொழும்பு ஆங்கில ஊடகம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச, சிறிலங்காவிலிருந்து வெளியேறிவிட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: சிறிலங்காவில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக சமூகத்தினால் அழுத்தங்கள் ஏற்படலாம் என்ற கருத்தைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா கடந்த சனிக்கிழமை திட்டமிடாத பயணமாக குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார். தன்னை படுகொலை செய்ய கோத்தபாய திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரான சிறீபதி சூரியராச்சி, காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த 48 மணிந…

    • 4 replies
    • 2.1k views
  5. பிரபாகரனின் குண்டுகளை விடவும் விலை அதிகரிப்பு அபாயகரமானது வீரகேசரி நாளேடு வாழ முடியாது மக்கள் தூக்கமருந்து குடிக்கின்றனர் என்கிறார் சரத் ரணவக்க எம்.பி. மக்கள் அரசாங்கம் என்று கூறி ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கம் மக்கள் மீது நாளுக்கு நாள் பொருளாதார சுமையை ஏற்றிக்கொண்டே செல்கிறது. பொருட்களின் விலை அதிகரிப்பானது பிரபாகரன் வீசுகின்ற குண்டுகளை விடவும் அபாயகரமானது என்று ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதியமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நா…

  6. சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை 40 வீதம் வீழ்ச்சி காணலாம்: ஹிந்துஸ்தான் ரைம்ஸ் சிறிலங்கா அரசுக்கு அதிகளவு வருமானத்தை ஈட்டித்தரும் உல்லாசப் பயணத்துறை இந்த வருடத்தின் இறுதியில் 40 வீதம் வீழ்ச்சியடையும் நிலையை அடைந்துள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளேட்டில் எழுதப்பட்ட பத்தியில் ஆய்வாளர் பி.கே.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதன் முழு விபரம் வருமாறு: நடைபெற்று வரும் போர் மற்றும் தலைநகரத்தின் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து மீளும் பொருட்டு உடனடியாக அதிகளவான சலுகைகளை அளிக்கும் படி அரசிடம் உல்லாசப் பயணத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. நெருக்கடிகளை…

  7. இணைத்தலைமை நாடுகள் வகுத்த திட்டங்கள் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த வாரம் கூடிய இணைத்தலைமை நாடுகள், இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏற்றது அல்ல என்ற காட்டமான செய்தியை சிறிலங்கா அரசு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு விடுத்துள்ள அதேவேளை, தற்போது நடைபெற்று வரும் மோதல்களை நிறுத்துவதற்கும் அவை நான்கு அம்ச திட்டத்தை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை யாவன: அரசும் விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல்களை நிறுத்த வேண்டும். விடுதலைப் புலிகளின் தலைவர்களை சந்திக்கும் பொருட்டு கிளிநொச்சி செல்வதற்கு நோர்வே அனுசரணையாளர்களை அனுமதிக்க வேண்டும். போரை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். இடம்பெயர்ந்த ம…

  8. கிழக்கில் சாதிப்பதாக சிறிலங்கா சொல்லும் விடயம் எவ்வளவு காலம்தான் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: இளந்திரையன் கிழக்கில் சாதிப்பதாக சிறிலங்கா சொல்லும் விடயம் எவ்வளவு காலம்தான் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக்கு (ATBC) நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: சிங்கள அரசாங்கங்களின் தமிழினத்தை அழித்தொழித்தல் எனும் தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் வன்னிப் பெருநிலப்பரப்பின் மீது பெருமளவிலான யுத்தத்தை முன்னெடுக்க முனைகிறது என…

    • 1 reply
    • 1.3k views
  9. தமிழ், முஸ்லிம் தலைமைகள் கைகோர்த்து ஒரே குரலில் பேசினால் மாத்திரமே பேரினவாதிகளின் கண்கள் திறக்கும் * ``முதலில், அவர்கள் "கம்யூனிஸ்ட்களை தேடி வந்தனர். நான் ஒரு "கம்யூனிஸ்ட் அல்ல என்பதால் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அடுத்து, அவர்கள் யூதர்களைத் தேடி வந்தனர். நான் ஒரு யூதன் அல்ல என்பதால் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. பின்னர், அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடி வந்தனர். நான் ஒரு புரட்டஸ்தாந்து மதத்தவன் என்பதால் நான் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. கடைசியில்,அவர்கள் என்னைத் தேடி வந்தனர். அப்போது எனக்காக குரல் கொடுப்பதற்கு யாருமே இருக்கவில்லை". - MARTIN NIEMOLLER திருகோணமலை மாவட்டம் சிங்களமயமாக்கும் நீண்டகாலத் திட்டத்தின் தொடர்ச்சியாக அண்மையில் சம்பூர் மற்றும் …

  10. ~ஜூலை 1983 - ஜூலை 2007 - எதிர் விளைவுகள்!| -சபேசன் (அவுஸ்திரேலியா)- அன்றைய சிங்கள அரசினால் 1983 ஆம் ஆண்டு, ஜூலை மாதத்தில், நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு நடாத்தப்பட்டு, இந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தமிழின அழிப்பினூடாகத் தமிழீழ மக்களின் பொருளாதாரமும், இந்தியத் தமிழர்களின் பொருளாதாரமும், மலையகத் தமிழர்களின் பொருளாதாரமும் சேர்த்தே அழிக்கப்பட்டன. முதன்முறையாக உலக நாடுகளையும் உலுக்கி விட்ட இந்தத் தமிழின அழிப்பானது, பௌத்த சிங்களப் பேரினவாதம் எதிர்பார்க்காத விளைவுகளையும் கொண்டு வந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய ஜனாதிபதியான ஜே.ஆர் ஜெயவர்த்தனாவிலிருந்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய…

  11. முல்லைத்தீவு வைத்தியசாலை முற்றாக செயலிழக்கும் நிலை. முல்லைத் தீவுமாவட்ட வைத்தியசாலை முற்றாக செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன ஸ்ரீலங்கா அரசாங்கம் முல்லைத் தீவ மாவட்ட வைத்தியசாலைக்கான அனைத்து விநியோகங்களையும் நிறுத்தியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக முல்லைத் தீவு மாவட்ட நோயளர்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருவதாவும் உரிய சிகிச்சைகளை பெற முடியாமல் பலர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த 8 மாத காலமாக ஸ்ரீலங்கா அரசாங்கம் முல்லைத் தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வேண்டிய மருந்து பொருட்களை அனுப்பி வைக்கவில்லை என்றும் இதனால் வைத்தியசாலையின் செயல்பாடுகள் முற்றாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதா…

  12. ஈழநாதம் நாளேட்டில் 02.07.07 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் கோத்தபாயவே போதும்! வடக்கு-கிழக்கில் மீண்டும் போர்நிறுத்தக் கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கப் போவதாக இலங்கைப் போர் நிறுத்தக்; கண்காணிப்புக்குழு அறிவித்துள்ளமை தமிழ் மக்களுக்குப் பெரும் ஆச்சரியத்தையும், பல சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது. அத்தோடு இத்தீர்மானமானது சிறிலங்கா அரசாங்கத்திற்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிற்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின் மேற்கொள்ளப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் போர்நிறுத்தம் என்றால் என்ன? என்ற கேள்வியையும் கேட்கவைத்துள்ளது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கதானதாக இல்லை என ஒன்றிற்குப் பலதடவை ஏற்கனவே அறிவிப்பு…

  13. வவுனியாவில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 3 படையினர் பலி. இன்று பிற்பகல் 2-30 மணியளவில் வவுனியாவில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 3 படையினர் பலியாகியுள்ளனர். 3 SLA troopers killed in Vavuniya Claymore attack. Three Sri Lanka Army (SLA) troopers were killed when unknown assailants triggered a claymore mine in Kalvi Road Vavuniya at 2:30 p.m. Tuesday, sources in Vavuniya said. The soldiers were attached to the newly established SLA camp in Mathakuvaiththaku'lam. The victims were on their way to take a bath when the claymore blast was triggered. No other details are available. -Tamilnet-

    • 3 replies
    • 1.4k views
  14. தோப்பூரில் 10 அடி ஆழத்தில் அமைந்த புலிகளின் மருத்துவமனையை கண்டுபிடித்து விட்டோம்: சிறிலங்கா இராணுவம் [செவ்வாய்க்கிழமை, 3 யூலை 2007, 16:06 ஈழம்] [சி.கனகரத்தினம்] நிலத்துக்கு கீழே அமைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறிய மருத்துவமனையை தோப்பூர் பள்ளிக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளதாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது. சுமார் 40 அடி நீளமும் 25அடி அகலமும் கொண்ட அந்த மருத்துவமனை 10 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து படுக்கைள், தலையணைகள் உட்பட காலங்கடந்த மருந்து பொருட்களை இராணுவத்தினர் கைப்பற்றியதாகவும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையின் கூரை கொங்றீட்டினா…

    • 4 replies
    • 2.4k views
  15. ரணில், மங்கள கூறிய ஆட்சிக்கவிழ்ப்பு எப்போது? சிறிலங்கா சுதந்திரக்கட்சித் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசை கவிழ்தது விட்டு புதிய ஆட்சியை அமைப்போம் என ரணிலும் மங்களவும் தெரிவித்துள்ளனர். இது நடக்கக்கூடியதா? எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவின் அலுவலகத்தில் நடந்த சந்திப்பிற்குப்பின் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டபோது ஆட்சிக்கவிழ்ப்பின் நியாயத்தன்மையை குறிப்பிட்டனர். இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத்தீர்வு ஏற்படுத்துவது. நாட்டைப் பொருளாதார ரீதியாக அபிவிருத்திசெய்வது. அதற்கான வழிமுறைகளைக்காண்பது தமது புதிய அணியின் குறிக்கோள் என மங்கள தெரிவித்தார். இவர்களது நோக்கம் ஆட்சியைக்கவிழ்ப்பது ஒன்றேதான்.இந்த நாட்டைக்கட்டியெழுப்ப அவர்களிடம் எந்தத்திட்மும் இல்லை.நீ…

  16. கறுப்பு யூலையை முன்னிட்டு உஷார் நிலையில் கொழும்பு: ஏ.எப்.பி. விடுதலைப்புலிகள் கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடாத்தும் அபாயமுள்ளதாக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பினை பலப்படுத்தி எசரிக்கையுடன் இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் 20 வது கரும் புலிகள் தினத்தினை கொண்டாடவுள்ளதாகவும் அதேவேளை காடந்த கிழமை பல தொன் நிறையுடைய வெடிப்பொருட்கள் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர் இவ் வெடிப்பொருட்களை பயன் படுத்தி கொழும்பின் அரைப்பகுதியை தாக்குயழிக்க முடியும் என பிரதமர் ரட்ண சிறி விக்கிரமநாயக்க இவ் வெடி பொருட்களை மீட்க்கப்பட்ட பின் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு ஜுலை 5ம் திகதி முதலாவது கரும் புலி போராளியான கப்டன் மில்லர் வெடிபொருட்கள் நிரப்பிய ரக் வண்டியை யாழ் கு…

  17. ஜோன் ஹன்சன் பௌவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு. நேற்று மாலை ஒஸ்லோவில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதை நிலை குறித்து நோர்வே அனுசரணையாளர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய சுற்றுப் பயணம் மெற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இரா சம்பந்தன்,சுரேஸ் பிரேமச்சந்திரன்,கஜேந்திர குமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர் தாயகப் பகுதிகள் மீது மேற்கொண்டு வரும் வலிந்த தாக்குதல்கள் மற்றும் தமிழ் மக்கள் கடத்தப்படுதல் படுகொலை செய்யப்படுதல் போன்ற விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நோர்வே அனுசரணையாளர்களுக்கு தெளிவு படுத்தியுள்ளனர். …

  18. கோட்டபாய மீதான தற்கொலைத் தாக்குதல் குறித்த மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றன: காவல் துறை. ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல் குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளாக ஸ்ரீலங்கா காவல் துறையினாடர் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் முச்சக்கர வண்டி கடந்த வருட இறுதியில் கொம்பனி வீதியில் உள்ள பள்ளி வாசலுக்கு அருக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதேசத்தின் காவலாளி தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேககிக்கப்படும் நபர் தன்னை முஸ்லீம் என அடை…

  19. பஸ்ஸில் பயணித்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டு வீரகேசரி நாளேடு தாக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைப்பு கொட்டாஞ்சேனையில் இருந்து வெள்ளவத்தைக்கு பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். லோகநாதப்பிள்ளை பானுகோபன் (வயது 28) என்பவரே கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். பஸ்ஸை சோதனையிடுவதற்காக வழிமறித்த படையினர் குறித்த இளைஞரிடம் தன்னை அடையாளப்படுத்தக்கூடிய ஆவணங்கள் இருந்தும் கைதுசெய்து தடுத்துவைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த இளைஞன் தாக்கப்பட்ட நிலையிலேயே கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த உறவினர்கள் இந்த இளைஞன் …

  20. Posted on : Tue Jul 3 7:59:58 EEST 2007 பாதையைத் திறந்து, யுத்தநிறுத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தி இயல்பு நிலைமையை ஏற்படுத்தாமல் அமைதிப் பேச்சு சாத்தியமே இல்லை! விடுதலைப் புலிகள் திட்டவட்டம் "ஏ9' பாதையைத் திறந்து, யுத்தநிறுத்த ஏற்பாட்டை சொல்லிலும் செயலிலும் முழு அளவில் கடைப்பிடித்து, தமிழர் தாயகத்தில் இயல்பு நிலைமையை மீள உருவாக்காமல் அமைதிப் பேச்சுக்கு சாத்தியமேயில்லை. விடுதலைப் புலிகளின் உயர் வட்டாரங்கள் இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றன. சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ளும்படி அனுசரணைத் தரப்பான நோர்வேயை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியிருக்கின்றார் என்றும் இதனடிப்படையில் அனுசரணைத் தரப்பின் விசேட தூதுவர் …

  21. இணைத்தலைமை நாடுகள் என்ன செய்யப் போகின்றன? - நிலவரம், ஒளிப்பதிவு

  22. மேற்குலகம் நிதியுதவியைக் குறைப்பதால் அரசாங்கத்தை முடக்கமுடியாது - பாலித கோகன்ன மேற்குலக நாடுகள் ஸ்ரீலங்காவிற்கு வழங்கி வரும் நிதி பங்களிப்புகளை குறைத்துக் கொள்ளவதால் தமது அரசாங்கத்தை முடக்கிவிட முடியாது என ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். மேற்குலக நாடுகள் வழங்கும் உதவிகளை விட ஆசிய நாடுகளான ஜப்பான் சீனா இந்தியா ஆகிய நாடுகள் ஸ்ரீலங்காவிற்கு கூடுதல் உதவிகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியா 50 வீதமான உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது ஜேர்மனியும் நதி உதவிகளை குறைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான நடவடிக்கைக…

  23. இலுப்பைக்குளம் இராணுவ முன்னரங்கில் தாக்குதல் வீரகேசரி நாளேடு வவுனியா ஓமந்தைக்கு மேற்கே இரணை இலுப்பைக்குளம் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள் மீது இராணுவம் நடத்திய எதிர்த்தாக்குதலில் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக தகவல் மையம் தெரிவித்துள்ளது. புலிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதன் பின்னர் இராணுவத்தினர் அப்பகுதியில் நடத்திய தேடுதலின்போது விடுதலைப்புலிகளின் மகளிர் அணியைச் சேர்ந்த ஒருவரின் சடலம் கைப்பற்றப்பட்டு, வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சடலத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்திய வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன், இந்த சடலம் தொடர்பாக ச…

  24. திங்கள் 02-07-2007 23:32 மணி தமிழீழம் [சிறீதரன்] விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகள் குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது ஸ்ரீலங்கா விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகள் குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் தேற்கில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல்களுடன் இவர்களுக்கு தொடர்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது ஏற்கனவே முன்னாள் விமானப்படை அதிகாரியான கஜநாயக்கா ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டை அடுத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் ஸ்ரீலங்கா பிரதமர் ரட்னஸ்ரீ விக்கிரமநாயக்காவின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவருக்கும் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டு ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.