ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
Posted on : 2007-06-12 பாதுகாப்புத் தரப்பின் திரிப்பு அம்பலமானதால் அரசுக்கு இக்கட்டு கொழும்பிலிருந்து தமிழர்களைப் பலவந்தமாக வடக்குக், கிழக்குக்கு அனுப்பிவைக்கும் தனது முட்டாள்தனமான முடிவுக்கு உள்நாட்டிலும், தேசிய ரீதியிலும் எழுந்த கடும் எதிர்ப்பைக்கண்டு கடைசியில் அடிபணிந்து விட்டது மஹிந்தரின் அரசு. தனது அரசின் பிரதமரைக் கொண்டே தமிழினத்திடம் பகிரங்க வருத்தமும் மன்னிப்பும் கோர வேண்டிய இக்கட்டுக்குத் தள்ளப்பட்டு விட்டார் ஜனாதிபதி மஹிந்தர். நேர்ந்த முழுத் தவறுக்கும் அரசு கடைசியாகப் பொறுப்பேற்றுவிட் டது. தமிழர்களைப் பலவந்தமாக பஸ்களில் ஏற்றி அனுப்பும் அராஜகம் வியாழன் விடிகாலை மேற்கொள்ளப்பட்ட போதே அரசுத் தலைமை தன்னைத் திருத்திக் கொண்டிருந்தால் அல்லது திருத்தி…
-
- 2 replies
- 2k views
-
-
கொழும்பு உருகொடுவத்தையில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் எவருக்கும் காயம் இல்லை. ஒரு எலக்ரிக் ட்ரான்ஸ்போர்மர் கடுமையான சேதமடைந்துள்ளது http://www.khaleejtimes.com/DisplayArticle...tinent&col= http://www.iht.com/articles/ap/2007/06/12/...N-Sri-Lanka.php
-
- 2 replies
- 2.3k views
-
-
தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றியமைக்கு ஐநா சபையும் கூட்டாளிகளும் கண்டனம். சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து அப்பாவிப் தமிழ்பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றியமையை ஐக்கியநாடுகள் சபையும் அதனுடன் இணைந்து இயங்கும் நிறுவனங்களும் கண்டித்துள்ளன. சிறீலங்காவின் அரசியலமைப்பு சுதந்திரமாக நாட்டின் ஒவ்வொரு பிரயையும் நாட்டின் எப்பகுதியிலும் வசிப்பதற்கு வழிசெய்கின்றது. இது உறுதிப் படுத்தப்படவேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தின் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றியதை இடைநிறுத்தியதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் 24 நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மேலும் சிறீலங்கா அரசாங்கம் தனது யாப்புமுறைகளுக்கு அமைவாக ஒழுகவேண்டும் என எ…
-
- 0 replies
- 801 views
-
-
மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் படை அதிகாரிகளுக்கு விசா அனுமதி மறுக்கப்படும்: ஐரோப்பிய ராஜதந்திரிகள். மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் படைஅதிகாரிகளுக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு உரிய நுழைவு அனுமதி மறுக்கப்படும் என ஐரோப்பிய ராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றிய காவல்துறை அதிகாரி ஒருவருக்கான விசா அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இதேவேளை மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக ஐரோப்பிய பயணத்தடையை மேற்கொள்ளுமாறு மனித உரிமை அமைப்புகள் பலவும் கோரிக்கை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. -Pathivu-
-
- 4 replies
- 1.4k views
-
-
ரொரன்ரோ மாநகரை அதிர வைத்த தமிழர்களின் தமிழீழ முழக்கம் இன்று மாலை 5 மணிக்கு தமிழர்களது தன்னாட்சி ரிமையை வலியுறுத்தி கனடா வாழ் ஈழத்தமிழர்களால் முன்னேடுக்கப்பட்ட "வெல்க தமிழ்" நிகழ்வில் பல்லாயிரக்கணக்காக மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், சமூதாய ஆர்வலர்களும் சிறப்புரைகளை நடாத்தினர். ஐரோப்பாவில் நடைபெற்ற வெல்க தமிழ் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற இந் நகிழ்வில் கனடாவின், ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும், எதிர்க்கட்சி மற்றும் புதிய ஜனநாயக கட்சி என்பவற்றின் பிரமுகர்கள் சமூகமளித்தனர். இதை விட பாராளுமன்றத்திலிருந்தும் சிலர் சிறப்புரைகளை தொலைபேசி மூலம் வழங்கினர். சிறிலங்கா அரசின் இனவாதப் போக்குக்கு கடும் கண்டணங்களை தெரிவித்த கனேய…
-
- 9 replies
- 2.4k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்றோம் என்று ஒவ்வொரு உலகத் தமிழனும் பெருமைப்பட வேண்டும். இலண்டன் அய்பிசி தமிழ் வானொலி சேவையின் ஆண்டு விழாவில் பழ. நெடுமாறன் உரை இலண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் அய்பிசி தமிழ் வானொலி சேவையின் பத்தாவது ஆண்டு விழா கடந்த சூன் 9-ஆம் நாள் அன்று இலண்டன் மாநகரில் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டார். அவரோடு தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் அப்துல் ஜப்பார், மற்றும் வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்றோம் என்று ஒவ்வொரு உலகத் தமிழனும் பெருமைப்பட வேண்டும் எனக் …
-
- 0 replies
- 990 views
-
-
-விதுரன்- வடக்கில் மீண்டுமொரு தடவை படையினர் பாரிய இழப்பைச் சந்தித்துள்ளனர். வடக்கில் தங்கள் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை முன்னகர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்த படையினருக்கு, வவுனியாவுக்கு மேற்கே கடந்தவாரம் ஏற்பட்ட பேரிழப்பு பேரிடியாகியுள்ளது. மடுவை மையமாக வைத்து அதனை அண்டிய பிரதேசங்களை கைப்பற்றும் நோக்கில் கடந்த மூன்று மாதங்களாகப் படையினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளனவே தவிர, படையினரால் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றவோ அல்லது புலிகளுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தவோ முடியவில்லை. வவுனியா நகருக்கு அப்பால் நகரிலிருந்து வடக்கே, சுமார் 12 கிலோமீற்றர் தூரத்தில் ஓமந்தையுள்ளது. இதுவே இராணுவத்தினரின் இறுதி முன்னரங்க பாதுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
*தேசப்பற்று தொடர்பாக பேசும் பிக்குகள்பென்ஸ் கார்களுக்கே ஆசைப்படுகின்றனர்* வீரகேசரி நாளேடு இறைமையுள்ள இந்த நாட்டில் இறைமைக்கு பங்கம் ஏற்படுவதற்கு எவருக்கும் அனுமதிக்க முடியாது என்று கூறுகின்ற பிக்குகள் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் பங்குகளை விற்கின்றபோது மட்டும், பென்ஸ் கார்களுக்கு ஆசைப்பட்டு மௌனமாக இருந்து வருகின்றனர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளியன்று நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் கூறியதாவது: ரெலிக்கொம் நிறுவனத்தின் பங்குகள் விற்கப்படப்போகும் மலேசியா தொழிலதிபரான ஆனந்தப்பா கிருஷ்ணன்…
-
- 2 replies
- 1.6k views
-
-
செவ்வாய் 12-06-2007 00:50 மணி தமிழீழம் [செந்தமிழ்] சமிந்த ராஜபக்ஸவின் தொடரணி பொதுமக்களால் தாக்கப்பட்டது மூத்த அமைச்சர் சமல் ராஜபக்ஸவின் வாகன தொடரணி கோபம் கொண்ட பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளது. தடுறு ஓயா நீர்த்தேக்கத் திட்டம் காரணமாக அவ்இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நட்டஈடு கொடுக்கப்படாமல் அடிப்படை வசதிகளை மட்டுமே வழங்கியுள்ளதாகவும் இதனால் ஆத்திரமடைந்தே தாக்குதல் நடாத்தியதாகவும் தெரியவருகிறது. இத்திட்டத்தை பார்வையிட சென்ற சிறீலங்கா ஜனாதிபதியின் மூத்த சகோதரரும் விவசாயம், நீர்ப்பாசனம், துறைகள் சிவில் விமானத்துறை அமைச்சருமான சமிந்த ராஜபக்ஸவே இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடாது செல்ல முற்பட்டபோது இவ்வாறு பொதுமக்களின் கோபத்…
-
- 1 reply
- 1.6k views
-
-
திங்கள் 11-06-2007 23:41 மணி தமிழீழம் [செந்தமிழ்] கருணா கூலிக்குழுவால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தா நகரசபை அபிவிருத்தி உறுப்பினர்கள் சகிதம் மட்டக்களப்பு திருக்கோவில் பகுதியை பார்வையிடச் சென்றபோது கருணா கூலிக்குழுவால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. காவல்துறையினரால் பாராளுமன்ற உறுப்பினரின் முறைப்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது உள்ளபோது அவர்கள் எவ்வாறு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். காவல்துறையினர் அவரை சூழ்ந்துள்ளபோது கருணாகூலிக்குழுவின் இனியபாரதி வௌள்ளை வானில் ஆயுதங்கள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகளின் வான்படை கண்டு பயப்பட்டால் இந்திய வான்படையையே கலைத்து விடுங்கள்: ஜெனீவாவில் பழ. நெடுமாறன் [திங்கட்கிழமை, 11 யூன் 2007, 23:26 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையால் உலகின் 5 ஆவது வல்லரசான இந்தியாவுக்கு ஆபத்து என அச்சப்பட்டால் இந்தியாவின் வான்படையையே கலைத்து விடுங்கள் என்று ஜெனீவாவில் நடைபெற்ற "வெல்க தமிழ் - 2007" எழுச்சிப் பேரணி நிகழ்வில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். தமிழீழத் தனியரசை அங்கீகரிக்கக் கோரி ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பாரிய எழுச்சிப் பேரணியில் பழ.நெடுமாறன் ஆற்றிய சிறப்புரை: ஐ.நா. அவையின் முற்றத்தில் வெள்ளம் போல் திரண்டிருக்கும் தமிழர்களே! உணர்ச்சிப் பெருக்கோடு உற்சா…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கை தமிழர்களை கொழும்பு நகலில் இருந்து வெலியேற்றியது சரியான நடவடிக்கையாம்! கொழும்பு,ஜுன்.11 கொழும்பில் தமிழர்களை வெளியேற்றியது சரியானதுதான் _ இலங்கை டி.ஜி.பி. இலங்கையில் தமிழ் ஈழ விடுதலப்புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்துவரும் வேளயில் தலைநகர் கொழும்பில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழர்களை அந்நாட்டு போலீசார் கடந்த வாரம் கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனையில் வெலியேற்றினர். இதற்கு உள்நாடிலும் வெலிநாடுகளிலும் ஏராளமான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் இது தொடர்பாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒனறு தமிழர்ள் வெலியேற்றப்படுவதை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு …
-
- 2 replies
- 2.2k views
-
-
புலுட்டுமான் ஓடை முன்நகர்வு முயற்சி முறியடிப்பு [திங்கட்கிழமை, 11 யூன் 2007, 15:35 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு புலுட்டுமான் ஓடைப் பகுதியில் இன்று காலை சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - செங்கலடி, பதுளை சாலைக்கு வடக்காக உள்ள புலுட்டுமான் ஓடையில் விடுதலைப் புலிகளின் நிலையை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு 4 கவச ஊர்திகள் மூலம் முன்நகர்ந்தனர். இதனையடுத்து இராணுவத்துக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர்;. காலை 8.10 வரை நடந்த மோதலையடுத்து இராணுவத்தினர் பின்வாங்கி தமது பழைய நிலைகளுக்கு விடுதலைப் ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
"தமிழீழ" அரசாங்கத்தை அங்கீகரிக்கக் கோரி ஐ.நா. நோக்கிய பாரிய எழுச்சிப் பேரணி. "இலங்கைத் தீவில் தமிழீழத் தமிழர்களின் நடைமுறை அரசனை அனைத்துலகமே அங்கீகரி" என்ற முழக்கத்தை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபையை நோக்கிய உலகத் தமிழர்களின் "வெல்க தமிழ்" எழுச்சிப் பேரணி சற்று முன்னர் தொடங்கியது. ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலக முன்றலுக்கு முன்பாக 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தொடரூந்து நிலையம் அருகே ஐரோப்பிய நேரம் பிற்பகல் 2 மணியளவில் (தாயக நேரம் மாலை 5.45) இந்தப் பேரணி தொடங்கியது. பேரணியின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்க உரையை தமிழீழத்திலிருந்து வருகை தந்த சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நிகழ்த்தினார். - சிறிலங்கா ஆட்சி…
-
- 19 replies
- 3k views
-
-
யாழ். தீவகத்தில் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி: ஊடரங்கு அமுல். யாழ். தீவகம் ஊர்காவற்றுறை புளியங்கூடலில் சிறிலங்கா கடற்படையினரால் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். புளியங்கூடலில் வீதியோரம் பதுங்கியிருந்த கடற்படையினர் வீதியில் சென்ற இளைஞர்கள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மாங்குயில் அல்லது ஞானசேகரன் தயாளன் என்ற இளைஞர் உயிரிழந்தார். ஆனால் தாம் தாக்கியது விடுதலைப் புலிகளை என்றும் ஆயுதங்களை கைப்பற்றியதாகவும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. இதில் தம்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கடற்படையில் ஒருவர் காயமடைந்து இறந்ததாகவும் சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே யாழ். தீவக…
-
- 0 replies
- 944 views
-
-
செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களை அரச ஆதரவுடன் கருணா குழுவே படுகொலை செய்தது: கொழும்பு ஊடகம். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் வழிநடத்தலில் இராணுவ ஆதரவுடன் செஞ்சிலுவைச் சங்கத்தின் இரு பணியாளர்களும் படுகொலை செய்யப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட சந்திரமோகன், சண்முகலிங்கம் ஆகிய இரண்டு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களும் கொழும்பில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்வதற்காக தமது நான்கு நண்பர்களுடன் கடந்த மே மாதம் 30 ஆம் நாள் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் பயிற்சி பட்டறை முடிந்ததும் மீண்டும் மட்டக்களப்பு …
-
- 1 reply
- 1.3k views
-
-
மகிந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. வலியுறுத்தல். கொழும்புத் தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதற்கு பொறுப்பேற்றுள்ள மகிந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மண் செனிவிரட்ண கூறியுள்ளதாவது: கொழும்பில் தமிழர்கள் வெளியேற்றியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிராக நாம் வைத்த குற்றச்சாட்டு உண்மை என தற்போது பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கவின் அறிக்கை தெரிவித்துள்ளது. தனது பொறுப்பு குறித்து அரசாங்கம் மௌனம் சாதிக்க முடியாது. அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும். கொழும்புத் தமிழர்கள் வெளியேற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்…
-
- 1 reply
- 1k views
-
-
Posted on : Mon Jun 11 5:56:07 EEST 2007 இராணுவச் சீருடையில், சிங்களத்தில் பேசியவாறு படையினரை முற்றுகையிட்டு புலிகள் தாக்கினர்! வன்னிச் சமர் குறித்து புதிய தகவல்கள் வவுனியா மன்னார் எல்லைப் புறத் தில் கடந்த 2ஆம் திகதி சனிக்கிழமை விடுதலைப் புலிகள், பாதுகாப்பு நிலை களை ஊடறுத்து நடத்திய திடீர் தாக்கு தல் தொடர்பாக பாதுகாப்பு வட்டாரங் கள் தெரிவித்த புதிய பல தகவல்களை கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகள் வெளியிட்டு ள்ளன. இராணுவத்தினரின் சீருடையை அணிந்துகொண்டு, சரளமாக சிங்களத்தில் பேசியவாறு திடீரென பாதுகாப்பு நிலைகளுக்குள் புகுந்தே புலிகள் இந் தச் சமரை நடத்தினர் என்று ஒரு பத்திரிகை தகவல் வெளியிட்டிருக்கிறது. போக்கறுவன்னி என்று கூறப்படும் இடத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக …
-
- 4 replies
- 2.6k views
-
-
Posted on : Mon Jun 11 5:51:58 EEST 2007 சந்தனப்பொட்டு வைத்தால் ரணிலையும் பிடித்து வவுனியாவுக்கு பஸ்லில் அனுப்புவர் திருமண நிகழ்வில் அவரே எடுத்து விளக்கம் ""சந்தனம், குங்குமப் பொட்டுகள் எனக்கு நெற்றியில் வைக்கா தீர்கள். அப்படி வைத்தால் என்னையும் தமிழனாகக் கருதி பஸ் ஸில் ஏற்றி வவுனியாவுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்!'' இப்படி சிரிப்புடன் கூறியிருக்கின்றார் ரணில் விக்கிரம சிங்க. நேற்று கொழும்பு, கோல்பேஸ் ஹோட்டலில் வீரகேசரி நாளிதழின் செய்தியாசிரியர் ஸ்ரீகஜனின் திருமணம் நடைபெற் றது. பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் நிரம்பி வழிந்த அத் திருமணத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வும் வருகை தந்தார். திருமண மண்டப வாயிலில் ஏனையோரைப் போல ரணிலும் தமிழர் …
-
- 1 reply
- 1.7k views
-
-
Posted on : 2007-06-11 தளர்ந்து வரும் பொருளாதாரத்தை மேலும் தள்ளாட வைக்கும் போக்கு நாடு மிக, மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளப் போகின்றது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. பொருளாதார நெருக்கடி பெரும் புயல் போல திடீரென விரைவில் நாட்டைத் தாக்கப் போகின்றது என ஆங்கில வார இதழ் ஒன்று எச்சரித்திருக்கின்றது. முரட்டுப் பிடிவாதத்தோடு போர் முனைப்பில் அரசு தீவிர ஈடுபாடு காட்டுவது, அதற்காகப் பெரும் செலவில் ஆயுத தளபாடங்களை வாங்கிக் குவிப்பது, படைக்கு ஆள் திரட்டுவதை சுலபமாக்குவதற்காகப் படையினருக்கு கட்டுமட்டில்லாமல் வேதன அதிகரிப்பை வழங்க எத் தனிப்பது, பாதுகாப்புச் செலவினம் மிக உச்சமாக உயர்ந் திருப்பது, அரச ஊழியர் சம்பளம் அதிகரிப்பு போன்றவை எல்லாம் பொருளாதாரத்த…
-
- 0 replies
- 961 views
-
-
தமிழர் போராட்டத்தை உலகுக்கு உணர்த்தும் வெல்கதமிழ் தமிழர்களது போரட்ட நியாயத்தையும் தயாகம், தன்னாட்சி, சுயநிர்ணயஉரிமை ஆகியவற்றை பெற்றுதர போராடும் தமிழர் போராட்டத்தை உலகுக்கு தெரியப்படுத்தவும் ஜெனிவாவில் வெல்க தமிழ் ஐநா வை நோக்கி அமைதிப்பேரணி நாளை நடைபெறவுள்ளது. புலம்பெயர்ந்து வாழ் உறவுகள் பெருமளவில் பலநாடுகளில் இருந்தும் ஜெனிவா நகரிற்கு தமிழர்களது ஐனநாயகம் பலத்தை தெரிவிக்குமுகமாக விமானங்களில் மூலமாகவும் புகையிரதமார்க்கமாகவும் சிறப்பு பேரூந்துகளிலும் சென்றடைவதை அறியமுடிகிறது. இவ் நிகழ்வு நேரடியாக உலகம் பூராகவும் பார்வையிடக்கூடியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆசியாவில்: ஜெனிவா நேரம் (15.00 : 18.00) : இலங்கை இந்திய தாயக நேரம் மாலை (6.30 …
-
- 1 reply
- 1.3k views
-
-
கெஹெலிய மீது நம்பிக்கையில்லா பிரேரணை: எதிர்க்கட்சி தலைவர் ரணில் கொழும்பு தங்ககங்களில் தங்கியிருந்த தமிழ்மக்கள் பலவந்தமாக நாடுகடத்தப்பட்டமை தொடர்பில் தவறான தகவல்களை வெளியிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மீது பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என நுவரேலியா கிறேண்ட் ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தோட்டதொழிலாளர் சங்க கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்குவாழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றியமை மனித உரிமை மீறும்செயலாகும். கடந்த ஐந்து நாட்களில் மனித நேயப்பணிகளில் ஈடுபடும் சர்வதேச செஞ்சிலுவை ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டமை அப்பாவிப் பொதுமக்களை பலவந்தமாக வவுனியாவிற்கு அனுப்பியமை உலகநாடுகள் இலங்கை மீது…
-
- 0 replies
- 778 views
-
-
ஆட்கடத்தல்களில் சிறீலங்கா படைகள் : போர்நிறுத்தக்கண்காணிப்புக்
-
- 0 replies
- 993 views
-
-
கம்பகா இங்கிபிரிய பகுதியில் இரவு 9.30 மணியளவில் பாரிய இரண்டு குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக சுரியன் எப் எம் இல் சொல்கிறார்கள். - தகவல் புதியவன், யாழ் கள உறுப்பினர்.
-
- 10 replies
- 4.5k views
-
-
கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்றியமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் : இந்தியப் பிரதமர். கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து ஆயுதமேந்திய பொலிஸாரினால் தமிழர்கள் வெளியேற்றப்பட்டது, அவர்களின் உரிமைகளை மீறும் செயலென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்களும் வாழ்கின்றார்கள், அவர்களும் அந்நாட்டு பிரஜைகள் என்று குறிப்பிட்டுள்ள இந்தியப் பிரதமர், அவர்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனியில் இடம்பெற்ற ஜி-8 மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் புதுடில்லியில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போது நேற்று சனிக்கிழமை இதனைத் கூறினார். கொழும்பில் இருந்து தமிழர்கள் …
-
- 5 replies
- 1.6k views
-