Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலுட்டுமான் ஓடை முன்நகர்வு முயற்சி முறியடிப்பு [திங்கட்கிழமை, 11 யூன் 2007, 15:35 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு புலுட்டுமான் ஓடைப் பகுதியில் இன்று காலை சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - செங்கலடி, பதுளை சாலைக்கு வடக்காக உள்ள புலுட்டுமான் ஓடையில் விடுதலைப் புலிகளின் நிலையை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு 4 கவச ஊர்திகள் மூலம் முன்நகர்ந்தனர். இதனையடுத்து இராணுவத்துக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர்;. காலை 8.10 வரை நடந்த மோதலையடுத்து இராணுவத்தினர் பின்வாங்கி தமது பழைய நிலைகளுக்கு விடுதலைப் ப…

  2. செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களை அரச ஆதரவுடன் கருணா குழுவே படுகொலை செய்தது: கொழும்பு ஊடகம். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் வழிநடத்தலில் இராணுவ ஆதரவுடன் செஞ்சிலுவைச் சங்கத்தின் இரு பணியாளர்களும் படுகொலை செய்யப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட சந்திரமோகன், சண்முகலிங்கம் ஆகிய இரண்டு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களும் கொழும்பில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்வதற்காக தமது நான்கு நண்பர்களுடன் கடந்த மே மாதம் 30 ஆம் நாள் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் பயிற்சி பட்டறை முடிந்ததும் மீண்டும் மட்டக்களப்பு …

  3. யாழ். தீவகத்தில் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி: ஊடரங்கு அமுல். யாழ். தீவகம் ஊர்காவற்றுறை புளியங்கூடலில் சிறிலங்கா கடற்படையினரால் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். புளியங்கூடலில் வீதியோரம் பதுங்கியிருந்த கடற்படையினர் வீதியில் சென்ற இளைஞர்கள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மாங்குயில் அல்லது ஞானசேகரன் தயாளன் என்ற இளைஞர் உயிரிழந்தார். ஆனால் தாம் தாக்கியது விடுதலைப் புலிகளை என்றும் ஆயுதங்களை கைப்பற்றியதாகவும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. இதில் தம்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கடற்படையில் ஒருவர் காயமடைந்து இறந்ததாகவும் சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே யாழ். தீவக…

  4. கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்றியமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் : இந்தியப் பிரதமர். கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து ஆயுதமேந்திய பொலிஸாரினால் தமிழர்கள் வெளியேற்றப்பட்டது, அவர்களின் உரிமைகளை மீறும் செயலென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்களும் வாழ்கின்றார்கள், அவர்களும் அந்நாட்டு பிரஜைகள் என்று குறிப்பிட்டுள்ள இந்தியப் பிரதமர், அவர்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனியில் இடம்பெற்ற ஜி-8 மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் புதுடில்லியில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போது நேற்று சனிக்கிழமை இதனைத் கூறினார். கொழும்பில் இருந்து தமிழர்கள் …

  5. மகிந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. வலியுறுத்தல். கொழும்புத் தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதற்கு பொறுப்பேற்றுள்ள மகிந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மண் செனிவிரட்ண கூறியுள்ளதாவது: கொழும்பில் தமிழர்கள் வெளியேற்றியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிராக நாம் வைத்த குற்றச்சாட்டு உண்மை என தற்போது பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கவின் அறிக்கை தெரிவித்துள்ளது. தனது பொறுப்பு குறித்து அரசாங்கம் மௌனம் சாதிக்க முடியாது. அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும். கொழும்புத் தமிழர்கள் வெளியேற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்…

  6. Posted on : Mon Jun 11 5:51:58 EEST 2007 சந்தனப்பொட்டு வைத்தால் ரணிலையும் பிடித்து வவுனியாவுக்கு பஸ்லில் அனுப்புவர் திருமண நிகழ்வில் அவரே எடுத்து விளக்கம் ""சந்தனம், குங்குமப் பொட்டுகள் எனக்கு நெற்றியில் வைக்கா தீர்கள். அப்படி வைத்தால் என்னையும் தமிழனாகக் கருதி பஸ் ஸில் ஏற்றி வவுனியாவுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்!'' இப்படி சிரிப்புடன் கூறியிருக்கின்றார் ரணில் விக்கிரம சிங்க. நேற்று கொழும்பு, கோல்பேஸ் ஹோட்டலில் வீரகேசரி நாளிதழின் செய்தியாசிரியர் ஸ்ரீகஜனின் திருமணம் நடைபெற் றது. பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் நிரம்பி வழிந்த அத் திருமணத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வும் வருகை தந்தார். திருமண மண்டப வாயிலில் ஏனையோரைப் போல ரணிலும் தமிழர் …

    • 1 reply
    • 1.7k views
  7. கம்பகா இங்கிபிரிய பகுதியில் இரவு 9.30 மணியளவில் பாரிய இரண்டு குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக சுரியன் எப் எம் இல் சொல்கிறார்கள். - தகவல் புதியவன், யாழ் கள உறுப்பினர்.

  8. Posted on : 2007-06-11 தளர்ந்து வரும் பொருளாதாரத்தை மேலும் தள்ளாட வைக்கும் போக்கு நாடு மிக, மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளப் போகின்றது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. பொருளாதார நெருக்கடி பெரும் புயல் போல திடீரென விரைவில் நாட்டைத் தாக்கப் போகின்றது என ஆங்கில வார இதழ் ஒன்று எச்சரித்திருக்கின்றது. முரட்டுப் பிடிவாதத்தோடு போர் முனைப்பில் அரசு தீவிர ஈடுபாடு காட்டுவது, அதற்காகப் பெரும் செலவில் ஆயுத தளபாடங்களை வாங்கிக் குவிப்பது, படைக்கு ஆள் திரட்டுவதை சுலபமாக்குவதற்காகப் படையினருக்கு கட்டுமட்டில்லாமல் வேதன அதிகரிப்பை வழங்க எத் தனிப்பது, பாதுகாப்புச் செலவினம் மிக உச்சமாக உயர்ந் திருப்பது, அரச ஊழியர் சம்பளம் அதிகரிப்பு போன்றவை எல்லாம் பொருளாதாரத்த…

  9. விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் குடும்பிமலைப்பகுதியில் கடந்த 36 மணிநேரப்பகுதியில் சிறீலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் 10 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். சிறீலங்கா இராணுவத்தினர் வீரச்சாவடைந்த எட்டு போராளிகளின் உடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்துள்ளதாக தெரியவருகிறது. பாலமடு, மாவடி ஓடை பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது இவர்கள் வீரச்சாவடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்கா படைகள் கடும் இழப்புக்களை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்கா வான்படையினர் கடுமையான வான்வழித்தாக்குதல்களை குடும்பிமலைப்பகுதியில் மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 4 replies
    • 1.9k views
  10. தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதிப்போருக்குத் தயாராகின்றார்களா?-புரட்சி (தாயகம்)- தற்போது தென்னிலங்கையிலே சிங்கள அரச மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் மிகவும் பரவலாகப் பேசப்படும் விடயம் புலிகள் இறுதிப்போருக்குத் தயாராகிவிட்டார்களா என்பதுதான். சில வாரங்களாக கொழும்பு ஊடகங்களிலே இது தொடர்பான கருத்துக்கள் கட்டுரைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்துகொண்டிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. முதலில் சிங்களவர்கள் மத்தியில் இவ்வாறான ஓர் எண்ணம் எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து பார்த்தோமானால் விடுதலைப் புலிகளின் அண்மைக்கால வெற்றிகரமான வலிந்த மற்றும் முறியடிப்பு தாக்குதல்களின் விளைவே சிறிலங்கா அரசையும் தென்னிலங்கையையும் இவ்வாறான ஒரு பயப்பீதியை அவர்கள் மத்தியில் உருவாக்கியமைக்குக் …

  11. தமிழர் போராட்டத்தை உலகுக்கு உணர்த்தும் வெல்கதமிழ் தமிழர்களது போரட்ட நியாயத்தையும் தயாகம், தன்னாட்சி, சுயநிர்ணயஉரிமை ஆகியவற்றை பெற்றுதர போராடும் தமிழர் போராட்டத்தை உலகுக்கு தெரியப்படுத்தவும் ஜெனிவாவில் வெல்க தமிழ் ஐநா வை நோக்கி அமைதிப்பேரணி நாளை நடைபெறவுள்ளது. புலம்பெயர்ந்து வாழ் உறவுகள் பெருமளவில் பலநாடுகளில் இருந்தும் ஜெனிவா நகரிற்கு தமிழர்களது ஐனநாயகம் பலத்தை தெரிவிக்குமுகமாக விமானங்களில் மூலமாகவும் புகையிரதமார்க்கமாகவும் சிறப்பு பேரூந்துகளிலும் சென்றடைவதை அறியமுடிகிறது. இவ் நிகழ்வு நேரடியாக உலகம் பூராகவும் பார்வையிடக்கூடியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆசியாவில்: ஜெனிவா நேரம் (15.00 : 18.00) : இலங்கை இந்திய தாயக நேரம் மாலை (6.30 …

  12. தமிழர் வெளியேற்றம்: பகிரங்க மன்னிப்பு கேட்டது சிறிலங்கா அரசாங்கம் [ஞாயிற்றுக்கிழமை, 10 யூன் 2007, 18:51 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நடவடிக்கைக்காக சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க இன்று பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை வெளியேற்றியது பாரிய தவறு. அந்நடவடிக்கைக்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் தமிழ் மக்களிடத்தில் மன்னிப்பு கோருகிறேன். வவுனியாவில் அவர்களை கொண்டு சேர்த்த பின்னரும் சொந்த கிராமங்களுக்குத் திரும்ப விரும்புகிறார்களா என்று…

  13. 06.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....c05f3d8ab658c55

    • 8 replies
    • 1.7k views
  14. கெஹெலிய மீது நம்பிக்கையில்லா பிரேரணை: எதிர்க்கட்சி தலைவர் ரணில் கொழும்பு தங்ககங்களில் தங்கியிருந்த தமிழ்மக்கள் பலவந்தமாக நாடுகடத்தப்பட்டமை தொடர்பில் தவறான தகவல்களை வெளியிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மீது பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என நுவரேலியா கிறேண்ட் ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தோட்டதொழிலாளர் சங்க கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்குவாழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றியமை மனித உரிமை மீறும்செயலாகும். கடந்த ஐந்து நாட்களில் மனித நேயப்பணிகளில் ஈடுபடும் சர்வதேச செஞ்சிலுவை ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டமை அப்பாவிப் பொதுமக்களை பலவந்தமாக வவுனியாவிற்கு அனுப்பியமை உலகநாடுகள் இலங்கை மீது…

    • 0 replies
    • 777 views
  15. ஆட்கடத்தல்களில் சிறீலங்கா படைகள் : போர்நிறுத்தக்கண்காணிப்புக்

    • 0 replies
    • 992 views
  16. தெற்காசியாவில் புதிய சமநிலையை ஏற்படுத்தும் ஈழப்போராட்டம் -சி.இதயச்சந்திரன்- விமானங்கள், உலங்குவானூர்திகளூடாக ஆயுதத் தளபாடங்கள் இரகசியமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. 80 களின் நடுப் பகுதிகளில் தமிழக 'கியூ" பிரிவிற்குத் தெரியாமல் டில்லியிலிருந்து புறப்பட்ட புகையிரதத்தில் கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் இராமேஸ்வரத்தில் இறக்கப்பட்டு தமக்கு விசுவாசமான போராளிக் குழுக்களுக்கு 'றோ" வழங்கியமை தற்போது நினைவிற்கு வருகிறது. இந்திய அமைதிப் படைப் பிரசன்ன காலத்திலும் இது நடைபெற்றது. யாருக்கு, எப்போது ஆயுதங்கள் வழங்க வேண்டுமென்பதில் இந்திய உளவுத் துறைக்கும் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெளிவான நிலையொன்று எப்போதும் உண்டு.…

  17. சிறீலங்கா துணைப்படைக்கூலிக் குழுக்களான கருணா – பிள்ளையான் கும்பல்களுக்கு மத்தயில் வெடித்துள்ள உட்பூசல்கள் வெளிநாடுகளில் இயங்கும் உளவாளிகளிடையேயும் பரவியுள்ளது. சிலவாரங்களுக்கு முன் ஐரோப்பிய நாடொன்றில் இயங்கிவரும் உளவாளியின் சகா ஒருவர் திருமலை மூதூரில் வைத்து பிள்ளையான் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தா

  18. தொடர் மௌனத்தின் மூலமாக `டில்லி' வெளிப்படுத்தும் நிலைப்பாடு -(கலைஞன்) [10 - June - 2007] * ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இலங்கை தொடர்பாக கூறிய கருத்துக்கள் இலங்கை பேரினவாதிகள் மத்தியில் புயலைக் கிளப்பிவிட்டுள்ள நிலையில், அவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல் இலங்கையரசுக்கு எந்த வழிகளில் இராணுவ உதவிகளை வழங்கலாம் என்பது குறித்து புது டில்லி தீவிரமாக சிந்தித்து வருகிறது. இலங்கை இந்தியாவை தவிர சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களை,இராணுவ தளபாடங்களை வாங்க முற்படக் கூடாதென தான் கூறிய கருத்துத் தொடர்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள சீற்ற நிலை குறித்து எவ்வித விளக்கங்களையும் வழங்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆ…

    • 2 replies
    • 1.7k views
  19. தமிழருக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு! -(அஜாதசத்ரு) [10 - June - 2007] தலைநகர் கொழும்பிலுள்ள லொட்ஜ்களில் தங்கியிருந்த தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களான வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு பலவந்தமாக கடத்திச் சென்று வெளியேற்றிய நடவடிக்கையானது தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியாளர்களின் அதிஉச்சக்கட்டமான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே அரசியல் கட்சி பிரமுகர்களாலும் சர்வதேச மற்றும் உள்ளூர் மனித உரிமைகள் அமைப்புகளாலும் கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மருத்துவ வசதி, வெளிநாட்டுப் பயணம் உட்பட அத்தியாவசிய தேவைகளுக்காக தலைநகர் கொழும்புக்கு வரும் தமிழர்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்க முடியாத பட்சத்தில் தனியார் லொட்ஜ்களிலேயே தங்கியிருக்க…

    • 1 reply
    • 1.1k views
  20. காவல்துறை மா அதிபர் மீது பழியை போட்டுவிட்டு மகிந்த ராஜபக்ச தப்பிக்க முயற்சி. சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியதற்கு சிறிலங்கா காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேராதான் காரணம் என்று பழிபோட்டுவிட்டு அனைத்துலக நாடுகளின் கண்டனங்களிலிருந்து அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தப்பிக்க முனைகிறார். மகிந்தவை நல்லவராக்க சிங்கள மற்றும் கொழும்பு ஆங்கில ஊடகங்களும் முனைந்துள்ளன. கொழும்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை மா அதிபரிடம் மகிந்த விளக்கம் கேட்டுள்ளதாகவும் "உடனடி" அறிக்கை ஒன்றை தம்மிடம் தாக்கல் செய்யுமாறு மகிந்த உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. -Puthinam-

    • 16 replies
    • 2.3k views
  21. சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை தலையிட வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. புதுடில்லியில் ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் சுகாஸ் சக்மா வெளியிட்ட அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பு உள்ளிட்ட இனவாத நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய அரசாங்கமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தலையிட வேண்டும். பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகள் விலங்குகளைப் போல் பேரூந்துகளில் அடைத்து வடக்கு மற்றும் கிழக்க…

    • 2 replies
    • 1.2k views
  22. இரேவாடிரவாகக எமக்குத் தெரியாமலேயே நாடு பிரிந்து விட்டதோவென நினைத்தோம்- (தேசியன்) [10 - June - 2007] கொழும்பிலுள்ள தங்குமிடங்களில் (லொட்ஜ்களில்) பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருந்த பல நூற்றுக்கணக்கான வட, கிழக்கு தமிழ் மக்கள் கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவத்தினராலும் பொலிஸாராலும் பலவந்தமாக வட, கிழக்கு பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். கடந்த மே மாதம் 31 ஆம் திகதி மாலை புறக்கோட்டைப் பகுதியிலுள்ள தங்குமிடங்களின் உரிமையாளர்களை அழைத்த புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மறுநாள் வெள்ளிக்கிழமை காலைவேளைக்குப் பின் வட, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழர்கள் எவரும் உங்கள் `லொட்ஜ்'களில் இருக்கக் கூடாது. அவ்வாறு தங்கியிருந்தால் நாம் அவர்களை வெளியேற்ற…

  23. விடுதித் தமிழர் விவகாரத்தை அரசு கையாண்ட இலட்சணம் [10 - June - 2007] இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலைவரத்தை கையாளுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்ற அணுகுமுறையின் இலட்சணத்தை உலகிற்கு தெளிவாக வெளிக்காட்டுவதாக கொழும்பு தனியார் விடுதிகளில் இருந்து வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவமும் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளும் அமைந்திருக்கின்றன. தங்களது அத்தியாவசிய அலுவல்களைக் கவனிப்பதற்காக வடக்கு, கிழக்கிலிருந்து பலத்த சிரமங்களுக்கு மத்தியில் கொழும்புக்கு வந்து தங்கியிருந்த தழிழர்களை விடுதிகளில் இருந்து வெளியேற்றிய பொலிஸாரின் செயலை உள்நாட்டிலும் வெளியுலகிலும் நியாயபூர்வமாகச் சிந்திக்கக்கூட…

  24. பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக கேகலிய நியமனம்? சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக தற்போதைய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெலவை நியமிக்க அரசாங்கத்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை தொடர்பான கேள்விகளுக்கு தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சரான பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க இருப்பதில்லை என்பதால் கேகலியவையே நியமித்துவிடலாம் என்றும் அவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கேகலிய, என்னை அமைச்சராக்குவதற்கான குறித்த பேச்சுக்கள் இடம்பெறுவதனை அறிவேன். ஆனால் மகிந்ததான் முடிவெடுக்க வேண்டும் என்றார். இதனிடையே யுத…

  25. போர் நிறுத்த உடன்படிக்கை குறித்து இணைத் தலைமை நாடுகளின் உச்சிமாநாட்டில் ஆராயப்படும் இணைத் தலைமைகளின் மாநாடு எதிர்வரும் 21ம் நாள் நோர்வே ஒஸ்லோவில் இடம்பெறவுள்ளது. மாநாட்டில் போர் நிறுத்த உடன்படிக்கை, அரச நிர்வாகம், மனித உரிமை மீறல்கள், இரு தரப்பினடையே அதிகரித்துவரும் மோதல்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளின் படுகொலை, கொழும்பில் தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. http://www.pathivu.com/

    • 0 replies
    • 903 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.