ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
நாடு செல்லும் பாதை? [26 - May - 2007] * "உத்தியோகபூர்வமானவை எனஅறிவித்து கூட்டிக் குறைத்து வெளியிடப்படும் புள்ளி விபரங்களின் நம்பகத் தன்மையின் உண்மையான அளவு கோல் பொதுமக்களே' இந்த நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? அபிவிருத்திப் பாதையிலா? அல்லது அழிவுப் பாதையிலா? என்று ஒருவர் கேள்வி எழுப்பினால் நிச்சயம் இரண்டாவது பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்ற பதிலைத் தயக்கம் இன்றி கூறிவிட முடியும். ஏனெனில், இன்று நடைபெற்றுவரும் அன்றாட நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அவ் அவலப் பாதையை வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்பு இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட வருடாந்த புள்ளிவிபரத்தில் 7.4 சதவீத பொருளாதாரம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக எடுத்துக் காட்டிய…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறுபான்மையினர் குரலை நசுக்கிவிட காய் நகர்த்தல்? [26 - May - 2007] இனநெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியாக சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை அரசாங்கம் நியமித்து அரசியலமைப்பு ரீதியாக மாற்றங்களை மேற்கொள்வது குறித்து அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்றுவரும் நடவடிக்கைகள் தொடர்வதாக அவ்வப்போது அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் இடைக்கால அறிக்கையின் பிரகாரம் தேர்தல் மறுசீரமைப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆளும் கட்சி மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. விடமிருந்தும் சிறுபான்மை இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5 கட்சிகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உத்தேச தேர்தல் சீர்திருத்தத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அமெரிக்கா தீவிரமாகச் செயலாற்றும் இணைத்தலைமை நாடுகளுடன் ஆராய்ந்துள்ளதாகத் தகவல் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை அதிகாரிகள், நோர்வே தரப்பி னர், இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் ஆகிய தரப்பு களுடன் நாம் இணைந்து தீவிரமாகச் செயலாற்றவுள்ளோம். எமது இந்தச் செய்தியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம். அமெரிக்காவின் அரசுத்துறைப் பேச்சாளர் ரொம் கஷே மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த புதன்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற வாராந்தச் செய்தியாளர் சந்திப் பில் அவர் இத்தகவலை வெளியிட்டார். அப்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையில் தற்போது அதிகரித்துவருகின்ற வன்செயல்கள் துரதிர்ஷ்டவசமானவை.…
-
- 1 reply
- 711 views
-
-
ஆயுதக் கொள்வனவு குறித்த விவரங்களை வெளியிட முடியாது நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படும் ஆயுத விவரங்கள் எதுவும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் வெளியிடப்படமாட்டாது. பிரதமமந்திரி ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்றுமுன்தினம் நாடா ளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார். ""மிக் 29'' விமானக் கொள்வன தொடர்பாக நாடாளுமன்றில் நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தை முடித்து வைத்துப் பேசிய பிரதமரர் மேலும் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போராடுவதற்காக ஆயுதங்கள் இராணுவ உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கொள்முதல் செய்யப்படுகின்றன. அரசியல்வாதிகளின் ஆலோசனைகளின் மீது அல்ல. இராணுவ அதிகாரிகளின் ஆலோசனைப்படி அவர்களுக்குத் தேவைய…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளை அழிக்கும் ஆயுதங்கள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரியும் விடுதலைப் புலிகளை அழிக்க எத்தகைய ஆயுதங்கள் அவசியமென்பதை இராணுவ உயர் அதிகாரிகள் அறிந்து வைத்துள்ளதாக நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்த ஜே.வி.பி. அதற்கு ஐ.தே.க வின் அறிவுரை அவசியமற்றதெனவும் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் ஜே.வி.பி சார்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சந்திரசேன விஜயசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் , பயங்கரவாதம் வளர வாய்ப்புகள் வழங்கியமை கடந்தகால அரசாங்கங்கள் செய்த மாபெரும் தவறாகும் . வன்னியில் …
-
- 4 replies
- 1.5k views
-
-
தீவகத்துக்கான போக்குவரத்து சீரானது; நெடுந்தீவுக்கான படகுச் சேவை நிறுத்தம் நெடுந்தீவில் வியாழக்கிழமை இடம் பெற்ற தாக்குதலை அடுத்து பிறப்பிக்கப் பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக அன் றைய தினம் பாதிக்கப்பட்ட தீவுப் பகுதிக் கான போக்குவரத்து நேற்றுக் காலை சீரா னது. எனினும், நெடுந்தீவுக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் அங்கி ருந்து வந்த பொது மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடிய வில்லை. தொலைபேசி சேவைகள் ஸ்தம் பிதம் அடைந்ததால் அங்குள்ள நிலைமை யைச் சரிவர அறியமுடியவில்லை. நெடுந்தீவு குயின்ராக் பகுதியிலுள்ள கடற்படைத் தளத்தின்மீது நேற்றுமுன் தினம் அதிகாலை விடுதலைப் புலிகள் நடத் திய தாக்குதலை அடுத்து அன்றைய தினம் தீவுப் பகுதியில் முழுநேர ஊரடங்குச…
-
- 0 replies
- 774 views
-
-
சோதனை நிலையங்களில் செஞ்சிலுவையின் கண்காணிப்புப் பணி: இருதரப்புகளும் இணங்கி பாதுகாப்பு உத்தரவாதம் தரவேண்டும் வவுனியா ஓமந்தை மற்றும் மன்னார், உயிலங்குளம் சோதனை திறக்கப்படுவது தொடர்பாக செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிக் கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடை யிலான சந்திப்பு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கடந்த 22ஆம் திகதி ஓமந்தை சோதனை நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து அங்கு கண் காணிப்பு பணியில் ஈடுபடுவதிலிருந்து செஞ்சிலுவைக் குழு வெளியேறியது. அது தொடர்பாக புலிகளுடன் பேசுவதற்காக செஞ் சிலுவைச் சர்வதேசக் குழுவின் இலங்கைக் கான பிரதிநிதி வன்னி வந்திருந்தார். புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்க…
-
- 0 replies
- 596 views
-
-
கண்காணிப்புக் குழுவினரின் கிளிநொச்சி விஜயம் ரத்து போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் லால் ஜோஹாஸ் சன்பேக் நேற்று கிளிநொச்சிக்கு செல்லவில்லை என்று கண்காணிப்புக் குழுப் பேச்சாளர் ஒமர்சன் தெரிவித் தார். போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் நேற்று கிளிநொச்சிக்குச் சென்று புலிகளை சந்தித்து பேச்சு நடத்த விருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அந்தப் பயணம் ரத்தா னது. இதற்கான காரணம் என்ன? என்பது குறித்துக் கண் காணிப்புக் குழுவின் பேச்சாளர் எதுவும் தெரிவிக்க வில்லை உதயன்
-
- 0 replies
- 724 views
-
-
Posted on : Sat May 26 8:44:40 EEST 2007 ரணிலோடு சேர்ந்து பத்திரிகையாளர் மாநாடு நடத்துவதா? இ.தொ.கா., முஸ்லிம் காங்கிரஸ் மீது கடுஞ்சீற்றம் கொண்டுள்ள அரசுத் தலைமை அரசுக் கூட்டமைப்பிலும் அமைச்சரவை யிலும் இடம்பெற்றுக்கொண்டு, அதே சம யம் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரே மேசையில் அமர்ந்திருந்து பத்திரிகையாளர் மாநாடு நடத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்றவை மீது அரசுத்தலைமை கடுஞ்சீற்றத்துடன் இருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. இச்சீற்றம் காரணமாக மேற்படி மூன்று கட்சிகளின் சார்பில் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்களுக்கு, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கான அழ…
-
- 0 replies
- 720 views
-
-
கொழும்பு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பம். சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இராணுவப் பேரூந்து மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலானது தொலைதூர இயக்கி (Remote control) மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வெளியிட்டுள்ள பெயர் குறிப்பிட விரும்பாத உயர் பாதுகாப்பு அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாவது: தொலைதூர இயக்கி மூலம் குண்டுகளை வெடிக்கவைக்கும் தொழில்நுட்பம் தற்போது உலகில் வழமையானது. ஆனால் கொழும்பில் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதற்தடவை ஆகும். குண்டுடன் இணைக்கப்பட்ட ஐசியானது அதனை ஒத்த ஐசி ஊடாக தனது சமிக்ஞை அலைகளை பரிமாற்றக்கூடியது. இந்த வகை இயக்கிகளாக செல்லிடப்பேசிகளை அல்லது ஜிபிஎஸ் தொலைத்தொடர்பு சா…
-
- 1 reply
- 1.2k views
-
-
சர்வதேச அரசியலைக் கையாள சாணக்கியமற்ற இலங்கை தன்னை இறைமையுள்ள, சட்டபூர்வமான அரசாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் கொழும்பு அரசு, இலங்கை இனப் பிரச்சினை விவகாரத்தில் சர்வதேச மனிதாபிமான ஏற்பாடு களை மதிக்காமல், பௌத்த சிங்களப் பேரினவாத மேலாண் மைப் போக்கோடு செயற்படுவது, சர்வதேச ரீதியில் அதற்கு எதிரான கருத்து நிலைப்பாட்டை உருவாக்கி வருகின்றது என இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். அது பற்றிய தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. தினசரி ஆள்கடத்தல்கள், கப்பம் அறவிடல், படுகொலைகள், மோசமான மனித உரிமை மீறல்கள் என்று பேரவலத்தைச் சந்தித்து வரும் ஈழத் தமிழர்களுக்கு கொழும்பு அரசின் காவல்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு முறைமைகளின் கீழ் நீதியோ, அமைதியான கௌரவமான …
-
- 0 replies
- 682 views
-
-
அநுராதபுரத்தில் எம்.ஜ.24 ரக யுத்த உலங்கு வானூர்த்தி விபத்துக்குள்ளாகியது அநுராதபுர விமானப் படைத்தளத்தில் சிறீலங்கா வான்படையினருக்குச் சொந்தமான எம்.ஜ.24 ரக யுத்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று வியாழக்கிழமை முன்னிரவு 11.50 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வான்புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதலுக்குச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து வான்புலிகளின் விமானங்களைத் தாக்குவதற்காக அநுராதபுர விமானப் படைத்தளத்திலிருந்து எம்.ஜ 24 ரக யுத்த உலங்கு வானூர்தி புறப்பட்ட வேளை உலங்குவானூர்த்தி ஓடு பாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியது. உலங்கு வானூர்திக்கு எவ்வகையான சேதவிபரங்கள் ஏற்பட்டது குறித்து சிறீலங்கா படைத…
-
- 14 replies
- 3.7k views
-
-
புலிகளை யுத்தத்தில் தோல்வியுறச் செய்தாலும் இறுதித் தீர்வுகாண அரசியல் தீர்வு தேவை வீரகேசரி நாளேடு இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் அரசாங்கம் உடனடியாக அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும். அரசியல் தீர்வொன்றை முன்வைக்காத நிலையில் பிரச்சினைக்கு ஒருபோதும்தீர்வுகாண முடியாது. புலிகளை யுத்தத்தின் மூலம் தோல்வியுறச்செய்தாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொழுது இறுதியில் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் பாராளுமன்றத்தில் நேற்று முன்வைத்த ஒத்திவைப்பு பிரேரணையில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறீலங்காவில் இடம்பெறும் வன்முறைகள் துரதிஸ்டவசமானவை - அமெரிக்கா கவலை. விடுதலைப் புலிகளின் நேற்றைய தாக்குதல், மற்றும் ஏனைய வன்முறைகள் பற்றிக் கருத்துக்கூறும்போதே அமெரிக்க வெள்ளைமாளிகை துணைப் பேச்சாளர் ரொம் கசெ இந்தக் கவலையை வெளியிட்டார். சிறீலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும் எனவும் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, சிறீலங்கா அரசு, சமாதான அனுசரணையாளர்களான நோர்வே, மற்றும் இணைத்தலைமை நாடுகளுடன் தமது அரசு தொடர்ந்தும் பங்காற்றும் எனவும் வொசிங்ரன் டி.சியில் நடைபெற்ற ஊடகர் மாநாட்டில் ரொம் கசே கூறினார். சிறீலங்காவிற்கு அண்மையில் பயணம் மேற…
-
- 1 reply
- 1.1k views
-
-
வன்முறையை முடிவுக்கு கொண்டு வர இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தல் மே 25, 2007 வாஷிங்டன்: இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சண்டையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் அருகே நெடுந்தீவு கடற்படை முகாமில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 35 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் கேஸி இதுகுறித்துக் கூறுகையில், அமைதியாகவும், ஜனநாயக பூர்வமாகவும் வாழ இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் தொடரும் வன்முறையால் இந்த உரிமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இலங…
-
- 3 replies
- 1.2k views
-
-
நெடுந்தீவு தாக்குதல்- யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கான அறிகுறி: முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர் என்பதனையே நெடுந்தீவுத் தாக்குதல் உணர்த்துகின்றது. அங்கு நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இன்று (நேற்று) அதிகாலை நெடுந்தீவுப் பகுதியில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் அவர்களின் திட்டதிற்கான ஒரு தகவல். விடுதலைப் புலிகள் நெடுந்தீவை தக்க வைத்திருந்தால் அது குடாநாட்டின் வ…
-
- 6 replies
- 2.4k views
-
-
வெள்ளி 25-05-2007 19:11 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கா அதிபரின் ஆலோசகர்களின் வேதனம் - 10 இலட்சத்திற்கு மேற்பட்ட தொகை செலவு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவிற்கு ஆலோசர்களாக இருக்கும் 25 பேருக்கு அரசு ஊதியமாக 820, 000 ரூபாவினை செலவு செய்து வருகின்றது. 25 ஆலோசகர்களின் செயலாளர்கள், மற்றும் கைத்தொலைபேசி, எரிபொருள் என்பவற்றுக்கு 246, 410 ரூபா செலவிடப்படுவதாகவும், கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பௌத்த துறவிகளான மாத்தளே அமரவணன்ஸ தேரர், வல்பொல பிரியந்த தேரர், மற்றும் ஜயந்த தனபால, வாசுதேவ நாணயக்கார, ஜயவர்த்தன விஜயகோன், ஹரீந்திர வித்தானகே, காமினி குணரத்ன, மஞ்சு கத்தோட்டுவ, அனுரா சொமலமன்ஸ் ஆகியோர் உட்பட பலர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் சிறப்பு…
-
- 0 replies
- 945 views
-
-
குடாநாட்டில் திறக்கப்பட்ட புதிய களமுனை -அருஸ் (வேல்ஸ்)- சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் தற்போது ராடார்களின் சொற்பிரயோகங்களும் அதன் பாவனையும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இதற்கான காரணியாக அமைந்தவர்கள் வான்புலிகளே. அதாவது விடுதலைப் புலிகளின் வான், கடல் நடமாட்டங்களை அதிக செயற்திறனுடன் அவதானிப்பதற்காக சிறிலங்கா படையினர் தமது ராடார்களின் வலிமையை அதிகரிக்கும் அதே சமயம் அவற்றை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் நிறுவி வருகின்றனர். இந்த அவதானிப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நெடுந்தீவும் ஒன்று. இது வடபகுதியில் யாழ். குடாநாட்டிற்கு தென்மேற்காக அமைந்துள்ள 7 தீவுகளில் உள்ள பெரிய தீவாகும். நெடுந்தீவு யாழ்ப்பாணத்தில் இருந்து அதிக தொலைவில…
-
- 0 replies
- 1.8k views
-
-
Friday May 25 2007 01:29:14 PM GMT இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் லார்ஸ் ஜொஹான் சோல்பெர்க் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திப்பார் என கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோல்ப்பினூர் ஒமர்ஸன் அறிவித்திருந்தார். வன்னி செல்லும் இவரது பயணம் இறுதி நேரத்தில் சிறிலங்கா அரச தரப்பினாரால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 733 views
-
-
வெள்ளி 25-05-2007 09:15 மணி தமிழீழம் [கலை] வடக்கில் மிகப்பெரும் தாக்குதல் நடவடிக்கைக்கு விடுதலைப்புலிகள் தயார் - ஆங்கில இணையத்தளம் தகவல் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு நோக்கிய மிகப்பெரும் தாக்குதல் நடவடிக்கைக்கு தயாராகி வருவதுடன் சிறிலங்கா இராணுவத்தினரின் பலமான நிலைகளை அழித்தொழிப்பதற்காக கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமீப காலமாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த விடுதலைப்புலிகள் தற்போது தமது அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகியுள்ளதாகவும், தளபதிகள் முறையே கேணல் பானு, கேணல் நகுலன் ஆகியோர் தரை, கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவர் எனவும், தேசியத்தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனி வான் சார் நடவடிக்கைகளில் மிகவும்…
-
- 5 replies
- 2.1k views
-
-
வெள்ளி 25-05-2007 16:10 மணி தமிழீழம் [மயூரன்] விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க ஐ.தே.க முழு ஆதரவு விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க ஐக்கிய தேசியக் கட்சி முழுயான ஒத்துழைப்பைத் தரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றில் பாதுகாப்பு தொடர்பில் நடத்தப்பட்ட ஒத்திவைப்பு பிரேணையில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் யுத்த முன்னெடுப்புகளை உடைதெறியவேண்டும். அத்துடன் புலிகளின் வான்படையை இல்லதொழிக்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எழுக்க வேண்டும் pathivu
-
- 4 replies
- 1.3k views
-
-
வெள்ளிக்கிழமை 25 மே 2007 -priyan- கொழும்புத்துறைமுகத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்துரைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன்... சிறீலங்கா அரசாங்கமும் அரச படைகளும் விடுதலைப் புலிகளால் தான் இக்குண்டு வெடிப்பை நடத்தியுயுள்ளார்கள் என தவறான பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்கள். முப்படைகளும் வளச்சியடைந்த நிலையில் குறிப்பாக வான்படைகள் சிறீலங்கா படைத்துறையுடன் தொடர்புபட்ட இலக்குகள் மீது மிகவும் துல்லியமாக தாக்குதலைத் நடத்தும் போது இவ்வாறான சில்லறைத் தனமாக குண்டுத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தவேண்டிய தேவை இல்லை. அவ…
-
- 0 replies
- 739 views
-
-
வெள்ளிக்கிழமை 25 மே 2007 புறக்கோட்டையில் நேற்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் வழங்கினர். கொழும்பு பிரதான நீதிவான் சரோஜினி குசல வீரவர்தனவின் உத்தியோகபூர்வ அறையில் புறக்கோட்டை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றபோது இம்மூவரும் புறக்கோட்டை பொலிஸாரால் ஆஜராக்கப்பட்டனர். இலக்கு வைக்கப்பட்ட இராணுவ பஸ் வண்டியினுள் பயணம் செய்த ஒரு இராணுவ வீரர், சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு மிக அருகாமையில் போய்க் கொண்டிருந்த ஜனசக்தி இன்சுரன்ஸ் உத்தியோகத்தர் மற்றும் வர்த்தகர் ஆகிய மூவரும் தனித்தனி வாக்குமூலம் வழங்கினர். அவர்கள் இவ்வாக்குமூலத்தில் சத்தத்தை மாத்திரமே கேட்டதாகவும் கு…
-
- 0 replies
- 707 views
-
-
வெள்ளி 25-05-2007 17:26 மணி தமிழீழம் [தாயகன்] புத்தளத்தில் தேடுதல் - 14 தமிழர்கள் கைது புத்தளத்தில் சிறீலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதலில் 14 தமிழர்களைக் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைத்துள்ளனர். புத்தளம் வென்னப்புவ நகரில் இன்று காலை கைது செய்யப்பட்ட அனைவரும் 18 முதல் 26 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், அங்குள்ள காலணித் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிவர்களே கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. ஹற்றன், புஸ்ஸல்லாவ பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டதுடன், இவர்களில் நால்வர் பெண்கள் எனவும் புத்தளம் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். வெள்ளி 25-05-2007 17:17 மணி தமிழீழம் [தாயகன்] கண்டியில் நா…
-
- 0 replies
- 894 views
-
-
வெள்ளிக்கிழமை 25 மே 2007 மலேசிய நிறுவனமான மக்ஸீஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஷ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனப் பங்குகள் நெதர்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் ஹகுளோபல் டெலிகொமினிகேஷன் நிறுவனத்தின்' தலைவர் ஆனந்த கிருஷ்ணனுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பாக அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென தெரிவிக்கும் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதன் பின்னணியில் பெருமளவிலான லஞ்சம் பரிமாறப்பட்டுள்ளதாகவும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமென்றும் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே தயாசிறி ஜயசேகர எம்.பி. இதனைத் தெரிவித்தார். நெதர்லாந்தில் இயங்கும் குளோ…
-
- 0 replies
- 781 views
-