ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143523 topics in this forum
-
தமிழர்கள் தகுந்த காரணங்களுடன் தான் கொழும்பிலே வாழுகின்றார்கள் என்பதை அரசாங்கமும், பொலிஸாரும் புரிந்துகொள்ள வேண்டும் : மனோகணேசன் Written by Ellalan - Jun 04, 2007 at 11:19 AM கொழும்பில் தகுந்த காரண மில்லாமல் நடமாடும் பிற மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்கள் விரட்டப்பட்டு அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற பொலிஸ் மா அதிபரின் கருத்து தவறானதாகும். வடகிழக்கில் ஒரு பாரிய யுத்தம் நடைபெறுகின்றது. அதே போல் மலையகத்தில் வறுமை தலைவிரித்தாடுகின்றது. இந்த காரணங்களால்தான் வடகிழக்கையும், மலையகத்தையும் சார்ந்த தமிழர்கள் பாதுகாப்பையும், தொழில் வாய்ப்புகளையும் தேடி கொழும்பிற்கு வருகின்றார்கள். இங்கே எந்த ஒரு தமிழரும் காரணமில்லாமல் பொழுது போக்குவதாக நான் நினைக்கவி…
-
- 0 replies
- 862 views
-
-
Date: 2007-06-04 பொலிஸ்மா அதிபர் உரைக்கும் செய்தி தமிழருக்கு உறைப்பாக உணர்த்தும் பாடம் பேரினவாத மேலாண்மைப் போக்கில் மும்முரமாக இருக்கும் இலங்கை அரசின் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா கடந்த வார இறுதியில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றைக் கண்டுபிடித்து வெளி யிட்டிருக்கின்றார். ""யுத்த நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் வடக்கு, கிழக்கிலிருந்து தலைநகர் கொழும்புக்கு வந்து, இங்கு சுமார் ஆறு மாதங் களுக்கு மேலாக வேலையின்றி அலைந்து திரியும் மக்களால் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. எனவே இத்தகையோர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் படுவர். இதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை நாங்களே (பொலி ஸாரே) வழங்குவோம்'' இப்படிக் கூறியிருக்கின்றார் பொலி…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடக்கில் இராணுவ முகாம்களில் இருந்து கடும் எறிகணை வீச்சுத்தாக்குதல் சிறீலங்கா இராணுவத்தினர் வடக்கில் பலாலி, வடமராட்சி, தென்மராட்சி இராணுவ முகாம்களில் இருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியை நோக்கி மாலை 5.30 மணிமுதல் 10 மணிவரை கடும் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து பெருமளவு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை வல்வெட்டித்துறை முதல் பருத்தித்துறை வரை வடக்கு கடற்கரையோர பகுதிகளில் இருந்து மீன்பிடிப்பதற்கு சென்ற பொதுமக்களை சிறீலங்கா படையினர் திருப்பியனுப்பியுள்ளனர். சிறீலங்கா இராணுவத்தினரது கடும் ஆட்டிலறி எறிகணைத்தாக்குதலையடுத்து நாகர்கோவில், தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் பதற்றம் நிலவுவதா…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மீண்டும் பகிடிவதை தமிழ் மாணவன் மயங்கி விழுந்தார் சனிக்கிழமை 2 யூன் 2007யோகராஜன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட தமிழ் மாணவர்கள் சிலர் புதிய தமிழ் மாணவர்கள் சிலர் மீது மேற்கொண்டு வரும் பகிடிவதை வன்முறையால் முகாமைத்துவ பீட புதிய மாணவன் ஒருவர் மயக்கமடைந்ததுடன் அவரது வாயில் இருந்து இரத்தம் வழிந்தோடியுள்ளது. இவரது இந்த நிலைமையைக் கண்ட பெரும்பான்மை இன மாணவர்கள் அவரை பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டுள்ளார
-
- 2 replies
- 1.1k views
-
-
கொழும்புத் துறைமுகத்தில் கப்பலில் தீ பிடித்தது வீரகேசரி நாளேடு கொழும்புத் துறைமுகத்திலுள்ள கப்பல் ஒன்று நேற்று பிற்பகல் திடீரென தீப்பிடித்ததில் 13 பேர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியாவுக்குச் சொந்தமான இந்தக் கப்பலில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக துறைமுக தீயணைக்கும் படையினர் தெரிவித்தனர். நேற்று மாலை 2.30 மணியளவில் இத் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான 13 பேரும் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிபத்துக்கான காரணத்தை அறிவதற்கு விசேட பொலிஸ்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் ம…
-
- 1 reply
- 1.5k views
-
-
வேப்பமடு அகதி முகாமில் தாக்குதல் : நால்வர் படுகாயம் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சிற்றூர்தியில் சென்ற 10 பேர் கொண்ட குழுவினர் புத்தளம், மன்னார் வீதியிலுள்ள வேப்பமடு அகதிமுகாமினுள் புகுந்து அங்கிருந்த பொதுமக்கள் மீது தடியடிப்பிரயோக தாக்குதல்களை நிகழ்த்தியதாகவும் இதன்போது நால்வர் படுகாயமடைந்துள்ளதாகவும் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரியவருகிறது. தனிப்பட்ட விரோதமே இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 793 views
-
-
இலங்கையில் இரண்டு செஞ்சிலுவை ஊழியர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக Sky News தொலைக்காட்சியில் இன்ரு மதியம் தெரிவிக்கப்பட்டது...... http://news.sky.com/skynews/article/0,,302...3,00.html?f=rss
-
- 6 replies
- 1.5k views
-
-
புலிகளின் உலகளாவிய வலையமைப்பை ஒடுக்குவதற்கு சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பு அவசியமாகும் வீரகேசரி நாளேடு தமிழீழ விடுதலைப் புலிகளின் உலகளாவிய வலையமைப்பை ஒடுக்க சர்வதேச ரீதியான ஒத்துழைப்பு அவசியமாகும். அவர்களுக்குக் கிடைக்கும் ஆயுத மற்றும் நிதி உதவிகள் பிரிவினைவாத வன்முறைகளை அதிகரிக்கச் செய்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கூறியுள்ளார். இவற்றை அவர்கள் பல்வேறு துறைமுகங்களைக் கடந்து இலங்கைக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர். இதன்பொருட்டு ஏற்றும் துறைமுகம், இறக்கும் துறைமுகம், போக்குவரத்துத் துறைமுகம் என்பவற்றைப் பயன்படுத்துகின்றனர். சில சந்தர்ப்பங்களில் கொள்கலன்களில் கொண்டுவந்து சேர்க்கின்றனர் என்றும் அவர் சொன்னார். இந்த தொடர் உதவிகள…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்களை வெளியேறக்கோருவதன்மூலம் வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி என்பதை அரசு ஏற்றுக்கொள்கிறதா? வீரகேசரி நாளேடு கொழும்பில் உள்ள லொட்ஜ்களில் தங்கியுள்ள வடக்கு கிழக்கு மற்றும் மலையக பிரதேச மக்களை வெளியேறுமாறு பொலிஸார் கோருவது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். வடக்கு கிழக்கு மக்களை மீண்டும் அப்பகுதிகளுக்கே செல்லுமாறு கோருவதன் மூலம் அரசாங்கம் வடக்கு,கிழக்கு மாகாணங்களானது தமிழ் மக்களின் தாயக பூமி என்பதனை ஏற்றுக்கொள்கின்றதா ? அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டிக்கின்றது என்று கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் எந்தவிதமான br> காரணமின்றி தங்கியுள்ள தமிழ் மக்கள் வெளியேற்றப்படுவார்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெளிநாட்டு உதவிகளில் தங்கியுள்ள வடபோர்முனை -அருஸ் (வேல்ஸ்)- முன்னர் எப்போதும் இல்லாதவாறு இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் தற்போது அனைத்துலகத்தின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளன. அனைத்துலக சமூகம் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவமும் அதிகமாகி வருகின்றது. இந்த முக்கியத்துவத்திற்கான காரணங்களாக இலங்கையில் அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்கள், ஐந்து வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த அமைதிப்பேச்சுக்களில் இருந்த அனைத்துலக சமூகத்தின் தொடர்புகள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பங்களிப்புக்கள் என்பன இருந்த போதும் நான்காவது ஈழப்போரில் மேற்கொள்ளப்பட்ட தெரிந்தெடுக்கப்பட்ட தாக்குதல்களும், அதனை எதிர்கொள்ள தேவைப்படும் ஆயுதங்களும் அனைத்துலகத்தின் கவனப்புள்ளியை மேலும் செறிவாக்…
-
- 0 replies
- 903 views
-
-
பாலமோட்டையில் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதல் நடவடிக்கை முறியடிப்பு. வவுனியா பாலமோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பாலமோட்டையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதல் நடத்த முனைந்த போது விடுதலைப் புலிகள் அதனை முடிறியடித்தனர். இம் முறியடிப்பில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரின் சடலத்தையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். இராணுவத்தினரிடம் இருந்து கிளைமோர்கள், ரி-56 ரக துப்பாக்கி - 01 ஆகியனவும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. -Puthinam-
-
- 2 replies
- 1.5k views
-
-
தெற்கிலிருந்து தமிழர்களையும் வடக்கிலிருந்து புலிகளையும் வெளியேற்ற நடவடிக்கை! -விதுரன்- நாட்டை பாதுகாப்பதற்காக பிரிவினைப் போராட்டத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறிவந்த இலங்கை அரசுகள், இன்று தலைநகர் கொழும்பையும் தெற்கையும் பாதுகாப்பதற்காக வடக்கு - கிழக்கில் பெரும் போர் நடத்துகின்றன. 25 வருடங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரில் அரச படைகளால் புலிகளை வெற்றிகொள்ள முடியவில்லை. இதுவரை அரசுக்கு வெற்றி கிடைக்கவில்லையென்றால் அவர்கள் தோல்விகளையே சந்திக்கிறார்களென்று பொருள்படக்கூடும். ஆனாலும், வடக்கு - கிழக்கை துவம்சம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை முற்றாக வெளியேற்றுவதாகக் கூறி மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய நட…
-
- 3 replies
- 1.7k views
-
-
வட,கிழக்கிலிருந்து தென்பகுதிக்கு வாகனங்கள் வருவதற்கு கட்டுப்பாடு * கிழக்கிலிருந்து வருவோர் புகைப்படம் எடுக்கப்படுவர் கே.பி.மோகன் வடக்கு, கிழக்கிலிருந்து தென் பகுதிக்கு வாகனங்கள் வருவது நேற்று சனிக்கிழமை முதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் எதுவித காரணமுமின்றித் தங்கியிருக்கும் தமிழர்கள் உடனடியாக அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டுமென நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பொலிஸார் அறிவித்த நிலையில் வடக்கு, கிழக்கிலிருந்து இனிமேல் தென் பகுதிக்கு வாகனங்கள் வருவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிப்போரை புகைப் படம் எடுத்து அவர்களின் தனிப்பட்ட விபரங்களை பதியவும் பொலிஸார் நடவடிக்கை எட…
-
- 1 reply
- 776 views
-
-
அரசியல் ஆயுதமாக உணவைப் பயன்படுத்த வேண்டாம் * உலக உணவுத் திட்ட வதிவிடப் பிரதிநிதி விசேட பேட்டி - அ.ரஜீவன் - உணவை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த வேண்டாமென வேண்டுகோள் விடுக்கின்றது உலக உணவு திட்டம். வன்னி மீது உணவு தடை விதிக்கப்படக் கூடாது என எதிர்பார்ப்பினையும் வெளியிட்டுள்ள உலக உணவுத் திட்டம் அரசியல் இலாப நோக்கங்களுக்காக அப்பாவி பொதுமக்களை பகடைக்காயாக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றது. ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஜெவ்டவ்ட் டிக் `தினக்குரல்' இற்கான பேட்டியின் போதே இதனைத் தெரிவித்தார். மோதல்கள் தீவிரமடையும் சாத்தியக்கூறுகள் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள டிக் இது மேலும் பலர் இடம்பெயரும் சூழ்நிலையை உருவாக்கல…
-
- 0 replies
- 943 views
-
-
விடுதலைப்புலிகளின் பீரங்கித்தாக்குதலில் 57 ஆவது படையணியின் ஆயுதங்கிடங்கு வெடித்து சிதறியது ஜஞாயிற்றுக்கிழமைஇ 3 யூன் 2007இ 02:28 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ வவுனியா பகுதியில் உள்ள பம்பைமடுவில் அமைந்திருந்த 57 ஆவது படையணியின் தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலில் தளத்தின் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் 5 படையினர் கொல்லப்பட்டதுடன் 15 இற்கு மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் பீரங்கி நிலைகளை குறிவைத்து விடுதலைப்புலிகள் ஓமந்தை பகுதியில் இருந்து பீரங்கித் தாக்குதலை நடாத்தியதாகவும் அதன் போதே ஆயுதக் களஞ்சியம் வெடித்து சிதறியதாகவும் படைத்தரப்பு …
-
- 6 replies
- 3.2k views
-
-
விடுதைலப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை சரியா? பிழையா? - சோ. ஜெயமுரளி - பிரித்தானிய பாராளுமன்றத்தில் கடந்த மே மாதம் 02 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை குறித்த விவாதத்தை `ஞாயிறு தினக்குரல்' தொடர்ச்சியாக தந்து வருகின்றது. அந்தவகையில் கடந்த வாரம் தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னதாக இலங்கைக்கு விஜயம் செய்தவருமான போல் மேர்பி கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார். இலங்கைக்கு விஜயம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்தவர் என்கின்ற வகையில் இவ் விவாதத்தின்போது போல் மேர்பி இலங்கையில் நிலவும் சூழ்நிலைகளையும் கள யதார்த்தங்களையும் சுட்டிக்காட்டி அடிக்கடி தனது கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். பழைமை பேண் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஜெஃபறி கிள…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஞாயிறு 03-06-2007 06:55 மணி தமிழீழம் [மகான்] பிள்ளையான் அணியைச் சேர்ந்த 75 பேர் கருணா குழுவினரால் சிறைப்பிடிப்பு துணை ஆயுதக் குழுவான கருணா குழுவுக்கும் பிள்ளையான் குழுவுக்கும் இடையிலான முறுகல்நிலை மிக உச்சநிலையை அடைந்துள்ளது. இதன் ஒரு அங்கமாக பிள்ளையான் அணியினரைச் சேர்ந்த 75 பேரை கருணா குழுவினர் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். கருணா அணியில் இருந்த பிள்ளையான் அணியுடன் இணைந்த உறுப்பினர்களின் மனைவிமார் அல்லது தாய்மார் என 30 பெண்களையும் சிறைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். பிள்ளையானின் அணியில் உள்ள சீலன் என்பவரின் மனைவி ஒரு வயதுக் குழந்தை மற்றும் மாமி ஆகியோரையும் பிடித்துச் சென்று சிறை வைத்துள்ளனர். சீலன் மட்டக்களப்புக்குச் சென்று கருணாவிடம் சரண் அடைந்தால…
-
- 2 replies
- 888 views
-
-
இந்திய அரசின் அழுத்தத்திற்கு இலங்கை செவிசாய்க்கவில்லை; சீனா, பாகிஸ்தானிடம் யுத்தத் தளபாட கொள்வனவில் மும்முரம் இலங்கை தனக்குத்தேவையான போர்த்தளபாடங்கள் உட்பட சகல ஆயுத உதவிகளையும் பிராந்திய வல்லரசான தன்னிடமே பெற்றுக்கொள்ள வேண்டுமென்று இந்தியாவின் கடும் அழுத்தத்தை மீறி பாகிஸ்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் பல மில்லியன் டொலர் பெறுமதியான யுத்த தளபாடங்களை கொழும்பு கொள்வனவு செய்யவுள்ளது. பிரிட்டனின் மிகப் பிரபல பாதுகாப்பு சஞ்சிகையான `ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி' யை ஆதாரம் காட்டி இந்திய இணையத்தளமொன்று இதனைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த இணையத்தளம் மேலும் கூறுகையில் ; இலங்கையில் முப்படையினரதும் ஆயுத பலத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இலங்கை அரசு சீனாவுடன் …
-
- 1 reply
- 759 views
-
-
இலங்கைத் தமிழர் நிலை; அரசாங்கங்கள் செய்யலாம் அரசு செய்யலாமா?- -(பீஷ்மர்) கடந்த ஒரு வார காலமாக தலைநகரில் தமிழ் மக்கள் குறிப்பாக தற்காலிக தேவைகளுக்காக தலைநகருக்கு வரும் தமிழ் மக்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஏற்கனவே நடந்த கடத்தல், காணாமல் போதல் ஆகிய விடயங்களில் பாதுகாப்புத் துறையினருக்கு ஒரு பங்குண்டு என்ற சந்தேகம் நிலைமையை மேலும் மோசமடையச் செய்கின்றது. விமானத் தாக்குதல் ஒன்றினை விடுதலைப் புலிகள் மேற்கொண்டமை புறக்கோட்டை, இரத்மலானை ஆகிய பகுதிகளில் கிளேமோர் குண்டு வெடிப்பு ஆகியவற்றின் பின்னர் பாதுகாப்புத் துறையினர் கொழும்பின் பாதுகாப்புப் பற்றி மிகக் கவனமாகயிருக்க வேண்டுவது அவசியமே. ஆனால், இந்த விடயத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அரசு,…
-
- 1 reply
- 797 views
-
-
வவுனியாவில் ஆட்லறிதளம் புலிகளால் தகர்ப்பு http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22352
-
- 10 replies
- 2.2k views
-
-
இலங்கையின் உண்மையான வரலாறு புரியாது பிதற்றிக்கொண்டிருக்கிறது ஜாதிக ஹெலஉறுமய' இலங்கையின் உண்மையான வரலாறு தெரியாது பிதற்றுகின்றார் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க என்று மேலக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். கண்டியிலிருந்து ஆட்சி புரிந்த தமிழகம் இருந்து வந்த தமிழர்கள் யார் என்பது சம்பிக்க ரணவக்க அறியாதது ஏன்? ஹெல உறுமய இந்நாடு பௌத்தர்களுக்குரிய நாடாக மட்டும் இருக்கக்கூடியதாக இருக்கவேண்டும் எனப்பகற்கனவு காண்கின்றது. வடக்கு கிழக்கு இந்நாட்டு தமிழர்களின் பாரம்பரிய தாயக பூமியென்பது வரலாற்று சான்று கொண்டது போல மேலகம் வாழ் தமிழர்களுக்கும் இங்கு…
-
- 0 replies
- 1.5k views
-
-
அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த படுதோல்வியே இந்தியாவின் அழுத்தம் இலங்கை இனநெருக்கடிக்கு இந்தியாவை பகைத்துக் கொண்டு தீர்வு காண முடியாதென தெரிவித்திருக்கும் ஐ.தே.க.; சீனா, பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவியை இலங்கை பெறக்கூடாதென இந்தியா அழுத்தம் கொடுத்திருப்பது அரசின் வெளிவிவகார கொள்கைக்கு கிடைத்த படுதோல்வியெனவும் வர்ணித்துள்ளது. இது பற்றி ஐ.தே.க. சார்பில் அதன் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில்: இந்தியா எமது அயல் நாடாக மாத்திரமன்றி பிராந்தியத்தில் வல்லரசாகவும் விளங்குகின்றது. அவர்களின் பங்களிப்பின்றி இனநெருக்கடிக்குத் தீர்வு கண்டுவிட முடியாதென்பதில் ஐ.தே.க. உறுதியாகவுள்ளது. இதன் காரணமாகவே ஐ.தே.க. ஆட்சியிலிருந்த சமயம் ஏற்படுத்தப்பட…
-
- 0 replies
- 916 views
-
-
தெற்கில் இனம்தெரியாத நால்வரின் உடலங்கள் கண்டெடுப்பு Sunday, 03 June 2007 சனிக்கிழமை சிறீலங்கா காவல்துறையினரால் நான்கு இனம்தெரியாத உடலங்கள் சிறீலங்கா தெற்குபகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இரு உடலங்கள் சப்பிரகமுவ மாகாணம் வெலிஓயா பகுதியிலும் மற்றொரு உடலம் வெலிகண்டி மாத்தளை பிரிவில் மத்திய மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும
-
- 0 replies
- 711 views
-
-
மட்டக்களப்பிலுள்ள அகதிமுகாம்களில் தொற்றுக்காய்ச்சல், இருவர் உயிரிழப்பு [03 - June - 2007] [Font Size - A - A - A] மட்டக்களப்புமாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களிலுள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களிடையே வேகமாகப் பரவி வரும் தொற்றுக்காய்ச்சல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர். கன்னன்குடா காயான் மடுவிலிருந்து இடம் பெயர்ந்து புதுக்குடியிருப்பிலுள்ள தற்காலிக முகாமில் வசித்து வந்த எஸ்.இராசமாணிக்கம் (வயது 33) என்பவரே வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். இதேவேளை மூன்று தினங்களுக்கு முன்னர் திராய்மடு அகதிமுகாமில் வசித்துவந்த முனைக்காட்டைச் சேர்ந்த ஒரு குடும்பஸ்தரும் உயிரிழந்துள்ளார். இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்…
-
- 0 replies
- 792 views
-
-
சிங்களவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு வேடர்கள் ஆணையிட்டால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழகத்திற்கு சென்று தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற யோசனையை முன்வைத்துள்ள ஜாதிக ஹெல உறுமய, எதிர்காலத்தில் இலங்கையின் ஆதிவாசிகளான வேடர்கள், சிங்களவர்களும் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற ஆணையை பிறப்பித்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையென்பதை புரிந்துகொள்ள வேண்டுமென ஐ.தே.கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே தயாசிறி ஜயசேகர எம்.பி. இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவரும் ஹெல உறுமய தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழகத்திற்கு சென்…
-
- 6 replies
- 2.7k views
-