ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
இலங்கை என்பது இந்தியாவிற்கு பாக்கிஸ்தான் இல்லை - ஜெய்சங்கர் Published By: RAJEEBAN 22 FEB, 2023 | 03:15 PM பாக்கிஸ்தானின் பொருளாதார நெருக்கடி குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கருத்து வெளியிட்டுள்ளார். பாக்கிஸ்தானின் எதிர்காலம் என்பதை அதன் தெரிவுகளும் நடவடிக்கைகளுமே தீர்மானிக்கும் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் பாக்கிஸ்தான் தனது பொருளாதார நெருக்கடியிலிருந்து எவ்வாறு வெளிவரும் என்பதே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான இந்தியாவின் உதவி குறித்தும் கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த வேளை இந்தியா உத…
-
- 3 replies
- 740 views
- 1 follower
-
-
மயில்களைக் கொல்ல இலங்கை உத்தரவிட்டது ஏன்? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 58 நிமிடங்களுக்கு முன்னர் விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்கு, மயில் உள்ளிட்ட ஆறு வகை உயிரினங்களை கொல்ல இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஒப்புதல் அளித்துள்ளார். உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பு ஒன்றின் போது, அமைச்சர் இந்த வியடத்தைக் தெரிவித்தார். தமது பயிர்களை குரங்குகள் சேதமாக்குவதாக அமைச்சரிடம் விவசாயிகள் இதன்போது முறையிட்டனர். செங்குரங்கு (Toque macaques), மயில், குரங்கு, மர அணி…
-
- 4 replies
- 920 views
- 1 follower
-
-
தமிழர்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் உரிய வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் - அமைச்சர் அலி சப்ரி Published By: DIGITAL DESK 5 22 FEB, 2023 | 02:02 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழும் மக்கள் என்பதை உணர்ந்து கொண்டு அவர்களுக்கு சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் அவர்களது மொழி மற்றும் கலாசாரம் உள்ளிட்டவைகளுக்கு உரிய வாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழம…
-
- 4 replies
- 759 views
- 1 follower
-
-
இலங்கையின் தேசிய புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுக் பிரிவுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா ? - விமல் கேள்வி Published By: DIGITAL DESK 5 22 FEB, 2023 | 02:06 PM (எம்.ஆர்.எம்.வசீம் , இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்காவின் பென்டகன் முதன்மை பிரதி பாதுகாப்பு செயலர் ஜெடிடியா பிறோல் தலைமையில் 22 பேர் பாதுகாப்பு அதிகாரிகள் ஆயுதம் தரித்து தேசிய புலனாய்வுத் திணைக்களத்திற்குள் பிரவேசிக்கும் போது எமது புலனாய்வு அதிகாரிகளின் ஆயுதம் கலைக்கப்பட்டு அவர்கள் நிராயுதபாணியாக்கப்பட்டுள்ளார்கள். இலங்கையின் தேசிய புலனாய்வு தகவல்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவுக்குள் கொண்ட…
-
- 3 replies
- 307 views
- 1 follower
-
-
( எம்.ஆர்.எம் வசீம்.இராஜதுரை ஹஷான் ) வடக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமாக இருந்தால் அதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்களை அணிதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற கொழும்புதுறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை நாட்டின் ஒருபகுதியாக வலுக்கட்டாயமாக 1948இல் இர…
-
- 0 replies
- 535 views
-
-
(நா.தனுஜா) இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தமிழ்மக்கள் கொண்டிருக்கும் உரிமை தொடர்ந்து முடக்கப்பட்டுவருவதைக் கண்டிக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியிருக்கும் கனேடியத் தமிழர் தேசிய அவை, தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்குவதொன்றே இந்திய - பசுபிக் பிராந்தியத்தில் நிலையான அமைதி உருவாவதற்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து கனேடியத் தமிழர் தேசிய அவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அண்மையில் தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறைகள் இந்திய - பசுபிக் பிராந்தியத்தில் ஸ்திரமற்றதன்மையை…
-
- 0 replies
- 193 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் – எதிர்க்கட்சி அறிவிப்பு உள்ளூராட்சித் தேர்தலை தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சுக்கு முன்பாக இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி இல்லை என கூறுவதற்கு முன்னர் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ரஞ்சித் மத்தும பண்டார கேட்டுக்கொண்டுள்ளார். திவாலான நாட்டில் மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்து ஜனநாயகத்தையும் திவாலாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளா…
-
- 4 replies
- 543 views
- 1 follower
-
-
தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருதாக ஜனாதிபதி விக்னேஸ்வரனிடம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 5 22 FEB, 2023 | 03:15 PM (செய்திப்பிரிவு) அரசியல்கைதிகளின் விடுதலை, காணாமல்போனோரது குடும்பங்களின் கோரிக்கை மற்றும் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை விடுவித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கடந்த 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் ஜெட்விங் ஹோட்டலில் இடம்பெற்ற சந்த…
-
- 0 replies
- 597 views
- 1 follower
-
-
இடைநிறுத்தப்பட்ட இலங்கைக்கான செயற்திட்டங்களை மீள ஆரம்பிக்கும் JICA ! நிதி நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) அனைத்து செயற்றிட்டங்களையும் மீள ஆரம்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அந்நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் நாயகத்தை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நிறைவு பெற்றதன் பின்னர், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் செயற்றிட்டங்களை விரைவாக ஆரம்பிக்கவுள்ளதாக அவர் இதன்போது உறுதியளித்துள்ளார். நிதி நெருக்கட…
-
- 1 reply
- 478 views
- 1 follower
-
-
விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் - மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் Published By: T. SARANYA 22 FEB, 2023 | 04:55 PM (எம்.நியூட்டன்) வலி வடக்கில் இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ,சிவபாலசுந்தரன் தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன் துறையில் இராணுவத்தினிடமிருந்தும் கடற்படையினரிடமிருந்தும் 108 ஏக்கர் க…
-
- 1 reply
- 382 views
- 1 follower
-
-
வடக்கின் நிலைவரம் குறித்து விஜயகலாவிடம் கேட்டறிந்தார் ஜப்பான் தூதரக அரசியல் ஆலோசகர் Published By: DIGITAL DESK 5 22 FEB, 2023 | 04:01 PM ஜப்பான் தூதரக அரசியல் ஆலோசகர் விஜயகலா மகேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்தும் வட மாகாணத்தில் நிலைமை தொடர்பாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான திருமதி. விஜயகலா மகேஸ்வரனை ஜப்பான் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் கானா மொரிவகி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பிலுள்ள திருமதி. விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் வட மாகாணத்தின் தற்போதைய நிலைவரம் குறித்து ஜ…
-
- 2 replies
- 328 views
- 1 follower
-
-
நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைப்பதற்கு உத்தரவிட்டார் ஜனாதிபதி! Published By: DIGITAL DESK 5 22 FEB, 2023 | 04:01 PM நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்க்ஷ இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/148879
-
- 0 replies
- 377 views
- 1 follower
-
-
வன்முறைகளை யாரும் கையிலெடுக்க கூடாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்! இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரை கேட்டுள்ளதுடன், அவ்வாறான சம்பவம் நடைபெற்றிருக்குமானால் கண்டிக்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு சூழலிலும் யாரும் வன்முறைகளை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது எனவும், எமது தொப்புள்கொடி உறவுகள் பாதிக்கப்படாத வகையிலே இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்ப…
-
- 11 replies
- 847 views
-
-
யாழ் போதனாவில் கிருமித்தொற்றால் 400 பேர் வரை பாதிப்பு : சீர்செய்யப்பட்டுள்ளதென்கிறார் வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் Published By: DIGITAL DESK 5 22 FEB, 2023 | 02:09 PM (எம்.நியூட்டன்) யாழ்.போதனா வைத்தியசாலையின் தண்ணீரில் கிருமித்தொற்று இதனால் சுமார் 400 பேர்வரை பாதிப்படைந்துள்ளனர். குறித்த சம்பவம் சீர்செய்யப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் போதனா வைத்தியசாலையில் தேங்கும…
-
- 0 replies
- 453 views
- 1 follower
-
-
யாழ். சத்திர சந்தையை நவீன முறையில் நிர்மாணித்துத் தருமாறு யாழ். வணிகர் கழகம் ஜனாதிபதியிடம் கோரிக்கை Published By: NANTHINI 22 FEB, 2023 | 02:00 PM (எம்.நியூட்டன்) எரியூட்டப்பட்ட சத்திர சந்தையை நவீன தொழில்நுட்ப முறையில் நிர்மாணித்துத் தருமாறு யாழ்ப்பாண வணிகர் கழகத்தினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ். மாவட்டத்தை சேர்ந்த வர்த்தகர்கள், முதலீட்டாளர்களை பிரத்தியேகமாக சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே இக்கோரிக்கைகளை யாழ். வணிகர் கழகத்தினர் முன்வைத்தனர். இது தொடர்பில் அவ…
-
- 0 replies
- 548 views
- 1 follower
-
-
நெடுந்தீவில் வாடி எரிப்பு ; 15 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை! Published By: DIGITAL DESK 5 22 FEB, 2023 | 12:50 PM யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்தொழிலாளரின் வாடி விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவை சேர்ந்த பாக்கியநாதர் எயுசேவியர் என்பவரின் வாடியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அதன் போது வாடியினுள் இருந்த கடற்தொழில் உபகரணங்கள் உள்ளிட்ட சுமார் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் நெடுந்தீவு 2ஆம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா ச…
-
- 0 replies
- 316 views
- 1 follower
-
-
சீனாவின் தயக்கத்தால் தவிக்கும் இலங்கை! பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு இப்போதைக்கு இருப்பது ஒரே தெரிவு சர்வதேச நாயண நிதியம் தான். அனை நம்பித்தான் இலங்கை பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. சர்வதேச நாணயநிதியம் முதற்கட்டமாக 2.9 பில்லியன் டொலர்களை விடுப்பதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றது. இதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை இலங்கை மெல்லமெல்ல செயற்படுத்த ஆரம்பித்திருக்கின்றது. அதனடிப்படையில், இலங்கையில் வரி சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் இருந்து வரி அறவிட தீர்மானிக்கப்பட்டது. அந்த வரி அறவீட்டுக்கு எதிராக மருத்துவர…
-
- 1 reply
- 423 views
-
-
சம்பந்தனின் பதவி ஆசையே கட்சியை தடம்புரட்டியது – தமிழரசின் பிரமுகர் கடும் விமர்சனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக அண்மைக் காலங்களாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், இந்த விடயம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணிமான கே.வி.தவராசா பதில் வழங்கியுள்ளார். தமிழரசுக் கட்சியின் கொள்கைப் பிறழ்விற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரே காரணம் என யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் ஊடக சந்திப்பை நடத்திய அவர் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. சகலரும் ஓரணியாகச் செயற்படுவதாக கூட்டமைப்பின் தலை…
-
- 0 replies
- 378 views
-
-
இந்தியா முன்வைத்த நிபந்தனைகளுக்கு உடன்பட சீனா மறுப்பு – ஜனாதிபதி இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் முன்வைத்த அதே நிபந்தனைகளுக்கு சீனா உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அனைத்து கடன் வழங்குநர்களும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது என அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் இந்தியாவின் நிபந்தனைகளுக்கு பாரிஸ் கிளப் ஒப்புக்கொண்டாலும், அதை ஏற்க மறுத்த சீனா, தனது சொந்த நிபந்தனைகளை முன்வைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாளை பெங்களூரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கலந்துர…
-
- 0 replies
- 485 views
-
-
அமைச்சர்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 239 வாகனங்கள் துறைமுகத்தில் -டிலான் பெரேரா அரச அமைச்சர்களின் பாவனைக்காக அரசாங்கம் 239 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக சுதந்திர மக்கள் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அந்த வாகனங்கள் ஏற்கனவே துறைமுகத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். சாமானியர்களின் மின் கட்டணத்தை உயர்த்தி அமைச்சர்கள் மகிழ்கிறார்கள் என்று கூறும் அவர், அந்த சுகத்தை அமைச்சர்கள் அனுபவிக்க மக்களே மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறார். தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லாவிட்டாலும், இவ்வாறான வீண் செலவுகளுக்கு அரசாங்கத…
-
- 3 replies
- 427 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் டெங்கினால் இளைஞர் உயிரிழப்பு : ஒரே நாளில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி Published By: NANTHINI 19 FEB, 2023 | 01:42 PM மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நோய்க்கு இலக்காகி போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 22 வயது இளைஞரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (18) உயிரிழந்துள்ளார். அத்துடன் குறித்த மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மட்டும் 14 பேர் டெங்கு நுளம்பு நோய்த் தாக்கத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கூறியதாவது: ஏறாவூர் ஜய…
-
- 1 reply
- 300 views
- 1 follower
-
-
“13” முழுமையாக அமுலாக இடமளியோம்! – பிக்குகள் எச்சரிக்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் கூட அதனை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று பௌத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், இதனைச் செய்வதற்கு முற்படும் ஜனாதிபதி மற்றும் அரசியல்வாதிகளின் அரசியல் முகவரியும் இல்லாது செய்யப்படும் எனவும் அவர்கள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர். ஊடகவியலாளர்களை சந்தித்தவுடன் நடைபெற்ற நேர்காணலின்போதே உலப்பனே சுமங்கல தேரர் மற்றும் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர் இவ்வாறு அறிவித்துள்ளனர். அக்மீமன தயாரத்ன தேரர் ஹெல உறுமயவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக …
-
- 82 replies
- 4.7k views
- 1 follower
-
-
“சிங்கள எழுத்துக்கள்” மற்றும் “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட “சிங்கள எழுத்துக்கள்” மற்றும் “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய இரண்டு நூல்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த நூல்கள் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன. சபாநாயகர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த நூல்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் கலந்து கொண்டிருந்தார். …
-
- 6 replies
- 1.2k views
-
-
அமைதிப்போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையை பாதுகாப்பதில் முன்னிறுத்தி செயற்படுங்கள் - அமெரிக்கத் தூதுவர் Published By: DIGITAL DESK 5 21 FEB, 2023 | 08:48 PM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்குமாறு இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிப்பதன் ஊடாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படுவதற்குப் பங்களிப்புச்செய்யவேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கிடம் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. வெளிநாடொன்றில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜதந்திரியான ஜுலி சங், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும், அதற்குரிய நியமங்களையும் பாதுகா…
-
- 2 replies
- 670 views
- 1 follower
-
-
நாட்டின் பதினெட்டு வீதமான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பொருத்தமற்ற உணவுகள் தயாரிக்கப்படுகிறது? ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பணியாற்றும் உணவு தயாரிப்பாளர்களுக்கு பயிற்சியின் பின்னர் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார். தற்போது, உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பாவனைக்குத் தகுதியற்ற உணவைத் தயாரிக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு பணிபுரியும் நபர்களின் தூய்மை குறித்து ஆராய்வதற்காக சோதனை நடத்தப்பட்டு வருவதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பதினெட்டு வீதமான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பொருத்தமற்ற உணவுகள் தயாரிக்கப்படுவதாக பொது சுகாதார பரிச…
-
- 6 replies
- 447 views
- 1 follower
-