ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
யாழில் பிரச்சனை இல்லை என்பதைக் காட்ட திருவிழாக்களை கோலாகலமாக நடத்த இராணுவம் உத்தரவு யாழ். குடாநாட்டில் மக்களுக்கு எதுவித பிரச்சினைகளும இல்லை என்று காட்டுவதற்காக கோவில்களின் திருவிழாக்களை கோலாகலமாக நடத்துமாறு சிறிலங்கா இராணுவத்தினர் உத்தரவிட்டுள்ளனர். பிரதேச ரீதியாக இராணுவ முகாம்களிலிருந்து கோவில்களின் அறங்காவலர் சபையினருக்கு இந்த உத்தரவை இராணுவத்தினர் பிறப்பித்து வருகின்றனர். எந்த தடைகளும் இன்றி திருவிழாக்களை கோலாகலமாக நடத்தும் படியும் அதற்கு தமது ஒத்துழைப்புக்கள் தரப்படும் என்றும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பல கோவில்களில் திருவிழாக்கள் எளிமையாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கி
-
- 0 replies
- 702 views
-
-
ஓமந்தை சோதனைச் சாவடி திறப்பு குறித்து புலிகளுடன் செஞ்சிலுவைக் குழு ஆலோசனை ஓமந்தை சோதனைச் சாவடி திறப்பு விடயம் தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவினரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் இன்று ஆலோசனை நடத்தினர். வவுனியா மாவட்ட அரசியல்துறைச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு நடைபெற்ற சந்திப்பில், வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம் தலைமையிலான குழுவினரும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவின் சார்பில் அதன் வவுனியா மாவட்ட பிரதிநிதி தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர். இச்சந்திப்பின்போது, பாதையைத் திறப்பதற்கு விடுதலைப் புலிகள் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், சிறிலங்கா இராணுவத்தினர்தான் பாதை திறப்புக்கு முழுத்த…
-
- 0 replies
- 624 views
-
-
ஞாயிறு 20-05-2007 01:26 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] வெடிவிபத்தில் நான்கு போராளிகள் வீரச்சாவு கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை எதிர்பாராதமாக விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில், நான்கு போராளிகள் வீரச்சாவை தழுவியிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். லெப்.கேணல் மறவன், மேஜர் பிரியன் அல்லது காவியன், மேஜர் அன்பரசி, கப்டன் அருந்தா ஆகிய நான்கு போராளிகளே, வெடிவிபத்தில் வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே கடந்த மாதம் 23ஆம் நாளன்று, வடமராட்சி கடற்பரப்பில் நீரில் மூழ்கி, கப்டன் வதனன் என்றழைக்கப்படும், கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த, தெய்வேந்திரன் ஞானரதன் என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார். மன்னார், வவுனியா பாலமோட்டை ஆகிய களமுனை…
-
- 2 replies
- 1.8k views
-
-
கோமாளிகள் நாட்டின் தலைவர்களாக வர முடியாது: ரணில் மீது டலஸ் அழகப்பெருமா சாடல் [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 15:12 ஈழம்] [ந.ரகுராம்] கோமாளிகள் சிறிலங்காவின் தலைவர்களாக வரமுடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் டலஸ் அழகப்பெருமா சாடியுள்ளார். காலி அக்மீமனையில் அண்மையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக்கூட்டத்தில் டலஸ் அழகப்பெருமா பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்புடன் செயற்படவில்லை. அரசியல் நாகரீகம் இன்றி பயனற்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். அரசியல் நாகரீகம் இன்றி செயற்பட்ட தலைவர்களை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க செய்துகொண்ட உடன்படிக்கையால் புலிகளின…
-
- 5 replies
- 1.3k views
-
-
சிங்கள பேரினவாதிகளின் மனப்பான்மையும் சர்வதேச சமூகமும் -புரட்சி (தாயகம்)- 'தென்னிலங்கையில் இருக்கின்ற சமாதானப் புலிகள், 'ஊடகப் புலிகள்", 'இடதுசாரிப் புலிகள்" - 'இவர்களை அடையாளங்காணுங்கள்", 'அவர்களை அழியுங்கள்", 'சிங்கள தேசத்தைக் காப்பாற்றுங்கள்" - அண்மைக்காலங்களிலே தென்னிலங்கையில் ஒட்டப்பட்ட பிரசுரங்களில் காணப்பட்ட வாசகங்கள். மகிந்த ராஜபாக்ச அரசானது பதவிக்கு வந்த காலம் முதல் தனது தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளையும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. தென்னிலங்கை தற்போது முழக்கும் கோசமான 'சிங்கள தேசத்தை காப்பாற்றுங்கள்" என்ற இந்த வாசகமானது கம்போடியாவின் சர்வாதிகாரியாக விளங்கிய பொல்பொட் இனால் பயன்படுத்தப்பட்ட 'தேசத்தை காப்பாற்றுங்கள்…
-
- 0 replies
- 716 views
-
-
கொழும்பில் "சமாதான நோக்கு" இதழின் ஆசிரியர் கடத்தல் [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 20:58 ஈழம்] [செ.விசுவநாதன்] கொழும்பில் "சமாதான நோக்கு" என்ற இதழின் முன்னாள் ஆசிரியர் விஜய காந்தன் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். கொழும்பில் இயங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்திற்காக பணியாற்றியவர் அவர். CEDEC அமைப்பிலிருந்து பொரளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இன்று வெள்ளிக்கிழமை அவர் கடத்தப்பட்டார். சிறிலங்கா சமாதான செயலகப் பிரதிப் பணிப்பாளராக இருந்து மூதூர் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையால் படுகொலை செய்யப்பட்ட கேதீஸ் லோகநாதனுடன் இணைந்து சமாதான செயற்பாடுகள் தொடர்பில் விஜய காந்தன் செயற்பட்டு வந்தார். விஜயக…
-
- 1 reply
- 1.1k views
-
-
காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கரை திரும்பினர் ஜவெள்ளிக்கிழமைஇ 18 மே 2007இ 21:41 ஈழம்ஸ ஜபுதினம் நிருபர்ஸ தமிழகத்தின் கன்னியாகுமரியிலிருந்து காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை கரை திரும்பிவிட்டதாக தமிழக ஊடகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மீனவர்கள் முதலில் கரை சேர்ந்ததாகவும் 6 மீனவர்கள் கரை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தினமலர் நாளேட்டின் கடைசி செய்திப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே 12 மீனவர்களும் கரை திரும்பிவிட்டதாக தமிழக ஊடகத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்தனர். மீனவர்கள் காண…
-
- 11 replies
- 3.3k views
-
-
கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவத்துக்கு விருப்பமில்லை: பிரித்தானிய தூதுவர் குற்றச்சாட்டு. கருணா குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா இராணுவத்துக்கு விருப்பமில்லை என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொனினிக் சில்காட் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: விடுதலைப் புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் இடையேயான மோதலினால் வடக்கு கிழக்கு நிலைமையில் எதுவித தாக்கமும் ஏற்படப் போவதில்லை. கிழக்கில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நிறுத்திவிட்டனர். அங்கு விடுதலைப் புலிகள் இல்லை. கருணா குழுவுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை போதுமானது அல்ல. கருணா குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவத்தினரின் விருப்பமாக இல்ல…
-
- 4 replies
- 2k views
-
-
இந்தோனேசியாவில் கப்டன் நிலாம் காணாமல் போனதாக அரசாங்கத்தால் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. ஜ வெள்ளிக்கிழமைஇ 18 மே 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இராணுவ புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரியாக முன்னர் பணியாற்றி வந்த கப்டன் எஸ்.எம்.எம்.நிலாம் தனது குடும்பத்தினருடன் இந்தோனேசியாவில் காணாமல்போய்விட்டதாக அண்மையில் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இந்தோனேசியாவிலுள்ள ஷ்ரீலங்கா தூதரகத்தில் உயர்மட்ட உத்தியோகத்தராகப் பணியாற்றிவந்த கப்டன் நிலாம் கடந்த மாதம் 24 ஆம் திகதியிலிருந்து தூதரக அலுவலகத்தில் கடமைக்கு சமுகமளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இவ்வாறு கப்டன் நிலாம் அலுவலகத்துக்கு அறிவிப்பு எதனையும் செய்யாத நிலையில் அவருக்கு ஏதோ ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்றே அச்சம் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 641 views
-
-
சனி 19-05-2007 02:44 மணி தமிழீழம் [தாயகன்] ஜே.வி.பியின் “லங்கா” பத்திரிகை நிறுத்தப்பட்டது சிறீலங்காவின் இனவாதக் கட்சியான ஜே.வி.பியினால் வெளியிடப்பட்டுவந்த “லங்கா” என்ற வாராந்தப் பத்திரிகை நிதிப்பற்றாக்குறை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. பிரதி வெள்ளிக்கிழமைகளில் வெளியிடப்பட்டுவந்த இந்த வாராந்தப் பத்திரிகை, நேற்று வெளிவிரவில்லை என கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே பத்திரிகை வெளிவரவில்லை எனக் கூறியுள்ள பத்திரிகை நிருவாகத்தினர், அடுத்த வாரம் வெளிவருமா என்பதைக் கூற மறுத்திருக்கின்றனர். பதிவு
-
- 3 replies
- 2.1k views
-
-
முயலையும் உசுப்பி நாயையும் ஏவி விடும் அமெரிக்க அணுகுமுறை. மனித உரிமைகளுக்காகவும் பத்திரிகைச் சுதந்திரத்துக்காகவும் அமெரிக்கா குரல் கொடுத்து அரசின் மீது அழுத்தத்தைக் கொடுக்கும் என்று இன்னமும் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் ஒரு முக்கிய செய்தியை அறிய வேண்டும். இலங்கைக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா இவ்வருடம் 40 மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒருவகைப் பரப்பரப்புச் செய்திகள் அடிபட்டுக் கொண்டிருந்தன. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் பௌச்சரின் இலங்கைக்கான வருகை பற்றியதாகவே அச் செய்திகள் அமைந்திருந்தன. அவரது அரசு முறைப் பயணத்தின் பிரதான நோக்கம் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அல்ல…
-
- 0 replies
- 1.4k views
-
-
தேசிய அரசு: ஐ.தே.க. மறுப்பு சிறிலங்காவில் மகிந்தவுடன் இணைந்து தேசிய அரசு அமைப்பதற்கான சாத்தியமில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திச அத்தநாயக்க கூறியுள்ளதாவது: தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயகமற்ற செயற்பாடுகளினாலும் மனித உரிமை மீறல்களாலும் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. மகிந்தவுடன் இணைந்து தேசிய அரசு அமைப்பது என்பது கனவுதான். நாட்டைப் பாதித்து வரும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கான ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முற்றாக நாசமாக்கியவர் மகிந்த ராஜபக்ச என்றார் அவர். ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்தவின் அமைச்சரவையில் இணைய…
-
- 1 reply
- 783 views
-
-
புலிகள் ஒளிந்திருக்கும் தொப்பிகலவை கைப்பற்றும் இறுதி நடவடிக்கை தீவிரம் இராணுவப் பேச்சாளர் சொல்கிறார். கிழக்கில் புலிகள் நிலை கொண்டுள்ளனர் என்று கூறப்படும் தொப்பிகலப் பகுதியை வெகு சீக்கிரத்தில் கைப்பற்றிவிடு வதற்கான இராணுவ நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க நேற்று தெரிவித்தார். கிழக்கில் தற்போதைய நிலைமை தொடர்பாகக் கருத்துத் கூறிய அவர் மேலும் தெரிவித்தவையாவது: கிழக்கில் புலிகள் வசமிருந்த அத்தனை பகுதிகளும் படையினரால் மீட்கப் பட்டு விட்டன. வாகரை மீட்கப் பட்டு அங்கு மக்கள் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து படுவான்கரைப் பகுதி மீட்கப்பட்டது. அங்கிருந்து இடம…
-
- 4 replies
- 1.9k views
-
-
8 தமிழர்களை விடுதலை செய்தது கொழும்பு நீதிமன்றம். கொழும்பு விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 8 தமிழர்களை விடுதலை செய்ய கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு டாம் வீதியில் கடந்த மே 6ஆம் நாளன்று சிறிலங்கா காவல்துறையினர் பாரிய சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்நடவடிக்கையின் போது தம்பிராஜா அன்பரசன் தம்பிராஜா வளர்முகம் மற்றும் அவர்களின் தாயாரான தம்பிராஜா பரஞ்சோதி ராஜதுரை கமலாதாஸ் செல்லன் கேதீஸ்வரன் கந்தசாமி ரமணன் விக்னராஜ கிரிதன் ஜோவன் சந்திரகுமார் ஆகியோரை துறைமுகம் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்தன…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
இலங்கையின் மனித அவலங்கள் தொடர்பாக நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம்: உலக உணவுத் திட்ட இயக்குனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சமூட்டும் மனித அவலங்கள், மனித உரிமைகளை மதிப்பதில் ஏற்பட்டுள்ள அசமந்தப் போக்கு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரி தனது கவலையை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிக அக்கறைகள் எடுப்பதுடன், மனிதாபிமானப் பணிகளுக்கான வசதிகளையும், உதவி நிறுவனப் பணியாளர்களுக்கான பாதுகாப்பையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார். இலங்கைக்கான தனது 4 நாள் பயணத்தை முடித்துக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட இயக்குனர் ரொனி பன்புறி கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது: இலங்கையில் தீ…
-
- 0 replies
- 820 views
-
-
சுயவிருப்புடன் மீளக்குடியமர்வோருக்கு மட்டுமே உதவி வழங்க முடியுமென ஐ.நா. அமைப்பு நிபந்தனை அகதிகளுக்கு உணவு வசதி அளிக்க உடனடியாக 10 மில்லியன் டொலர் அவசரநிதியும் கோருகிறது அகதிகள், அவர்களது சுயவிருப்பத்துடன் மீள் குடியமர்த்தப்பட்டால் மட்டுமே அவர்களுக் கான உதவிகள் வழங்கப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் உப அமைப்பான உலக உணவுத் திட்டம் இவ்வாறு அரசாங்கத்துக்கு நிபந்தனை விதித்துள்ளது. இத் தகவலை உலக உணவுத் திட்டத்தின் ஆசிய பிராந்தியத் துக்கான பணிப்பாளர் ரொனி பன்பெரி நேற்றுக் கொழும் பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இந்த தகவலை வெளி யிட்டார். உலக உணவுத் திட்டத்தின் செயற்பாடுகள் குறித்து நேரில் கண்டறிவதற்காக, ரொனி பன்பெரி நான்கு நாள்கள் இலங்கையில் தங்கியிருந்தார். கிழக்கு …
-
- 0 replies
- 753 views
-
-
பொதுமக்களின் இழப்புகளை ஆவணப்படுத்தல் வடக்கு கிழக்கு புள்ளிவிபர மையம் Statistical Centre for North East கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைதீவில் நடைபெற்று வரும் இன ஓடுக்குமுறையால் தமிழ் பேசும் மக்கள் பெருமளவு நெருக்கடிகளையும், இழப்புகளையும், அழிவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் இத்தகைய இழப்புகள், அழிவுகள், நெருக்கடிகளைப் பின்வரும் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தி ஆவணப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். 1. படுகொலைகள் 2. கடத்தப்பட்டு காணமல் போனவர்கள் 3. கைது செய்யப்பட்டு காணமல் போனவர்கள் 4. மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் 5. கொலை அச்சுறுத்தல்களும் கொலை முயற்சிகளும் 6. வாழ்க்கை துணையை இழந்தவர்…
-
- 4 replies
- 4.9k views
-
-
வெள்ளி 18-05-2007 16:01 மணி தமிழீழம் [செந்தமிழ்] யாழ் ஊர்காவற்துறையில் மோதல் இன்று காலை 3.40 மணியளவில் விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா கடற்படையினருக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பின் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இரு இளைஞர்களின் உடலங்களை கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. பதிவு
-
- 3 replies
- 1.7k views
-
-
வெள்ளி 18-05-2007 20:28 மணி தமிழீழம் [சிறீதரன்] உடுப்பிட்டிப் படைமுகாம் அதிரடித் தாக்குதலுக்கு உள்ளாகியது வடமராட்சி உடுப்பிட்டிச் சந்தியில் அமைந்துள்ள சிறீலங்காப் படைகளின் படைமுகாம் இன்று மதியம் இனம் தெரியாத ஆயுதாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. வீதித்தடைகளை திசைதிருப்பி படைமுகாமிற்கு உட்புகுந்த ஆயுததாரிகள் 15 நிமிடங்கள் வரை படையினருடன் மோதல்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியாகவில்லை. எனினும் தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் எதுவித இழப்புக்களும் இன்றி அங்கிருந்து பாதுகாப்பாகத் தப்பிச் சென்றுள்ளனர். பதிவு
-
- 0 replies
- 2.7k views
-
-
கூட்டாட்சி கோட்பாட்டையும் அமைதி முயற்சிகளையும் குழிதோண்டிப் புதைத்த மகிந்த ராஜபக்ச: கேணல் ஹரிகரன் [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 20:07 ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கையில் கூட்டாட்சி கோட்பாட்டும் அமைதி முயற்சிகளும் மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள தீர்வுத் திட்டத்தின் மூலம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த போது அதன் புலனாய்வுப் பிரிவு தலைவராக செயற்பட்ட ஹரிகரன் இணையத்தளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைத் தலைவராகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது இனப்பிரச்சனைக்கானத் தீர்வுத் …
-
- 0 replies
- 1.2k views
-
-
உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிலும் நீதிமன்றங்களிலும் சரணடைந்தோர் தொடர்பான விபரங்கள் சிறிலங்காப் படைப்புலனாய்வாளர்களுக்குக் கிடைத்திருப்பதால் தமக்கு படையினரால் உயிர்அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக சரணடைந்தோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக யாழ்செய்திகள் தெரிவிக்கின்றன. உயிருக்கு அஞ்சி நீதிமன்றத்தின் உத்தரவிற்கிணங்க யாழ்சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பல இளைஞர்கள் குறித்தும் அவர்கள் பின்னணி குறித்தும் சிறிலங்காப் படைப்புலனாய்வாளர்களின் பிhவு ஒன்று விசாரணைகளில் ஈடுபட்டுஇருப்பதுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் உறவினர்களிடமும் படைப்புலனாய்வாளர்கள் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது http://www.sankathi.net/in…
-
- 0 replies
- 1k views
-
-
புலனாய்வுத்துறை அதிகாரியை கண்டுபிடிக்க அனைத்துலக உதவி கோருகிறது சிறிலங்கா இந்தோனேசியாவில் காணாமல் போன சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரி கப்டன் மொகமட் நிலாமைக் கண்டுபிடிக்க அனைத்துலகத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் புலனாய்வுத்துறைப் பிரிவு அதிகாரியாக நிலாம் பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் முடிவடைவதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக அவர் காணாமல் போனார். இது தொடர்பாக இந்தோனேசிய பாதுகாப்பு தரப்பினரிடம் சிறிலங்கா அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளது. மொகமட் நிலாம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காணாமல் போயுள்ளார்…
-
- 9 replies
- 3k views
-
-
மாணவர்களை விடுவிக்காதது விரக்தி நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதாகும்: மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை. யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் மூவரை சிறிலங்கா கடற்படை கைது செய்து இன்னமும் விடுவிக்காதிருப்பதானது விரக்தி நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதாகும் என்று யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது. தமிழ் மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை: மாணவர்களான சு.யசோதரன், கு.கண்ணன், ந.வேணுகாணன் ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே கல்விச் சமூகத்தினதும், தமிழ் பேசும் மக்களினதும் எதிர்பார்ப்பாகும். படைத்தரப்பின் சமாளிப்பு அறிக்கைகளும், போலி வாக்குறுதிகளும் நீலிக் கண்ணீரும் அல்ல. அம் மாணவர்கள் இரகசியமாக தூக்கிச் செல்லப்படவில்லை. ஊரடங்கு நேரத்தில் 25-க்கும் மேற்பட்ட உந்துருளி…
-
- 0 replies
- 765 views
-
-
கூட்டாட்சி கோட்பாட்டையும் அமைதி முயற்சிகளையும் குழிதோண்டிப் புதைத்த மகிந்த ராஜபக்ச: கேணல் ஹரிகரன். இலங்கையில் கூட்டாட்சி கோட்பாட்டும் அமைதி முயற்சிகளும் மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள தீர்வுத் திட்டத்தின் மூலம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த போது அதன் புலனாய்வுப் பிரிவு தலைவராக செயற்பட்ட ஹரிகரன் இணையத்தளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைத் தலைவராகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது இனப்பிரச்சனைக்கானத் தீர்வுத் திட்டத்தை அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு அனுப்பியுள்…
-
- 0 replies
- 768 views
-