ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
கண்காணிப்புக் குழுவினரின் கிளிநொச்சி விஜயம் ரத்து போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் லால் ஜோஹாஸ் சன்பேக் நேற்று கிளிநொச்சிக்கு செல்லவில்லை என்று கண்காணிப்புக் குழுப் பேச்சாளர் ஒமர்சன் தெரிவித் தார். போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் நேற்று கிளிநொச்சிக்குச் சென்று புலிகளை சந்தித்து பேச்சு நடத்த விருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அந்தப் பயணம் ரத்தா னது. இதற்கான காரணம் என்ன? என்பது குறித்துக் கண் காணிப்புக் குழுவின் பேச்சாளர் எதுவும் தெரிவிக்க வில்லை உதயன்
-
- 0 replies
- 726 views
-
-
Posted on : Sat May 26 8:44:40 EEST 2007 ரணிலோடு சேர்ந்து பத்திரிகையாளர் மாநாடு நடத்துவதா? இ.தொ.கா., முஸ்லிம் காங்கிரஸ் மீது கடுஞ்சீற்றம் கொண்டுள்ள அரசுத் தலைமை அரசுக் கூட்டமைப்பிலும் அமைச்சரவை யிலும் இடம்பெற்றுக்கொண்டு, அதே சம யம் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரே மேசையில் அமர்ந்திருந்து பத்திரிகையாளர் மாநாடு நடத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்றவை மீது அரசுத்தலைமை கடுஞ்சீற்றத்துடன் இருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. இச்சீற்றம் காரணமாக மேற்படி மூன்று கட்சிகளின் சார்பில் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்களுக்கு, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கான அழ…
-
- 0 replies
- 722 views
-
-
கொழும்பு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பம். சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இராணுவப் பேரூந்து மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலானது தொலைதூர இயக்கி (Remote control) மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வெளியிட்டுள்ள பெயர் குறிப்பிட விரும்பாத உயர் பாதுகாப்பு அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாவது: தொலைதூர இயக்கி மூலம் குண்டுகளை வெடிக்கவைக்கும் தொழில்நுட்பம் தற்போது உலகில் வழமையானது. ஆனால் கொழும்பில் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதற்தடவை ஆகும். குண்டுடன் இணைக்கப்பட்ட ஐசியானது அதனை ஒத்த ஐசி ஊடாக தனது சமிக்ஞை அலைகளை பரிமாற்றக்கூடியது. இந்த வகை இயக்கிகளாக செல்லிடப்பேசிகளை அல்லது ஜிபிஎஸ் தொலைத்தொடர்பு சா…
-
- 1 reply
- 1.2k views
-
-
சர்வதேச அரசியலைக் கையாள சாணக்கியமற்ற இலங்கை தன்னை இறைமையுள்ள, சட்டபூர்வமான அரசாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் கொழும்பு அரசு, இலங்கை இனப் பிரச்சினை விவகாரத்தில் சர்வதேச மனிதாபிமான ஏற்பாடு களை மதிக்காமல், பௌத்த சிங்களப் பேரினவாத மேலாண் மைப் போக்கோடு செயற்படுவது, சர்வதேச ரீதியில் அதற்கு எதிரான கருத்து நிலைப்பாட்டை உருவாக்கி வருகின்றது என இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். அது பற்றிய தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. தினசரி ஆள்கடத்தல்கள், கப்பம் அறவிடல், படுகொலைகள், மோசமான மனித உரிமை மீறல்கள் என்று பேரவலத்தைச் சந்தித்து வரும் ஈழத் தமிழர்களுக்கு கொழும்பு அரசின் காவல்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு முறைமைகளின் கீழ் நீதியோ, அமைதியான கௌரவமான …
-
- 0 replies
- 683 views
-
-
அநுராதபுரத்தில் எம்.ஜ.24 ரக யுத்த உலங்கு வானூர்த்தி விபத்துக்குள்ளாகியது அநுராதபுர விமானப் படைத்தளத்தில் சிறீலங்கா வான்படையினருக்குச் சொந்தமான எம்.ஜ.24 ரக யுத்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று வியாழக்கிழமை முன்னிரவு 11.50 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வான்புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதலுக்குச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து வான்புலிகளின் விமானங்களைத் தாக்குவதற்காக அநுராதபுர விமானப் படைத்தளத்திலிருந்து எம்.ஜ 24 ரக யுத்த உலங்கு வானூர்தி புறப்பட்ட வேளை உலங்குவானூர்த்தி ஓடு பாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியது. உலங்கு வானூர்திக்கு எவ்வகையான சேதவிபரங்கள் ஏற்பட்டது குறித்து சிறீலங்கா படைத…
-
- 14 replies
- 3.7k views
-
-
புலிகளை யுத்தத்தில் தோல்வியுறச் செய்தாலும் இறுதித் தீர்வுகாண அரசியல் தீர்வு தேவை வீரகேசரி நாளேடு இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் அரசாங்கம் உடனடியாக அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும். அரசியல் தீர்வொன்றை முன்வைக்காத நிலையில் பிரச்சினைக்கு ஒருபோதும்தீர்வுகாண முடியாது. புலிகளை யுத்தத்தின் மூலம் தோல்வியுறச்செய்தாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொழுது இறுதியில் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் பாராளுமன்றத்தில் நேற்று முன்வைத்த ஒத்திவைப்பு பிரேரணையில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறீலங்காவில் இடம்பெறும் வன்முறைகள் துரதிஸ்டவசமானவை - அமெரிக்கா கவலை. விடுதலைப் புலிகளின் நேற்றைய தாக்குதல், மற்றும் ஏனைய வன்முறைகள் பற்றிக் கருத்துக்கூறும்போதே அமெரிக்க வெள்ளைமாளிகை துணைப் பேச்சாளர் ரொம் கசெ இந்தக் கவலையை வெளியிட்டார். சிறீலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும் எனவும் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, சிறீலங்கா அரசு, சமாதான அனுசரணையாளர்களான நோர்வே, மற்றும் இணைத்தலைமை நாடுகளுடன் தமது அரசு தொடர்ந்தும் பங்காற்றும் எனவும் வொசிங்ரன் டி.சியில் நடைபெற்ற ஊடகர் மாநாட்டில் ரொம் கசே கூறினார். சிறீலங்காவிற்கு அண்மையில் பயணம் மேற…
-
- 1 reply
- 1.1k views
-
-
வன்முறையை முடிவுக்கு கொண்டு வர இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தல் மே 25, 2007 வாஷிங்டன்: இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சண்டையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் அருகே நெடுந்தீவு கடற்படை முகாமில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 35 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் கேஸி இதுகுறித்துக் கூறுகையில், அமைதியாகவும், ஜனநாயக பூர்வமாகவும் வாழ இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் தொடரும் வன்முறையால் இந்த உரிமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இலங…
-
- 3 replies
- 1.2k views
-
-
நெடுந்தீவு தாக்குதல்- யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கான அறிகுறி: முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர் என்பதனையே நெடுந்தீவுத் தாக்குதல் உணர்த்துகின்றது. அங்கு நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இன்று (நேற்று) அதிகாலை நெடுந்தீவுப் பகுதியில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் அவர்களின் திட்டதிற்கான ஒரு தகவல். விடுதலைப் புலிகள் நெடுந்தீவை தக்க வைத்திருந்தால் அது குடாநாட்டின் வ…
-
- 6 replies
- 2.4k views
-
-
வெள்ளி 25-05-2007 19:11 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கா அதிபரின் ஆலோசகர்களின் வேதனம் - 10 இலட்சத்திற்கு மேற்பட்ட தொகை செலவு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவிற்கு ஆலோசர்களாக இருக்கும் 25 பேருக்கு அரசு ஊதியமாக 820, 000 ரூபாவினை செலவு செய்து வருகின்றது. 25 ஆலோசகர்களின் செயலாளர்கள், மற்றும் கைத்தொலைபேசி, எரிபொருள் என்பவற்றுக்கு 246, 410 ரூபா செலவிடப்படுவதாகவும், கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பௌத்த துறவிகளான மாத்தளே அமரவணன்ஸ தேரர், வல்பொல பிரியந்த தேரர், மற்றும் ஜயந்த தனபால, வாசுதேவ நாணயக்கார, ஜயவர்த்தன விஜயகோன், ஹரீந்திர வித்தானகே, காமினி குணரத்ன, மஞ்சு கத்தோட்டுவ, அனுரா சொமலமன்ஸ் ஆகியோர் உட்பட பலர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் சிறப்பு…
-
- 0 replies
- 946 views
-
-
குடாநாட்டில் திறக்கப்பட்ட புதிய களமுனை -அருஸ் (வேல்ஸ்)- சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் தற்போது ராடார்களின் சொற்பிரயோகங்களும் அதன் பாவனையும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இதற்கான காரணியாக அமைந்தவர்கள் வான்புலிகளே. அதாவது விடுதலைப் புலிகளின் வான், கடல் நடமாட்டங்களை அதிக செயற்திறனுடன் அவதானிப்பதற்காக சிறிலங்கா படையினர் தமது ராடார்களின் வலிமையை அதிகரிக்கும் அதே சமயம் அவற்றை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் நிறுவி வருகின்றனர். இந்த அவதானிப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நெடுந்தீவும் ஒன்று. இது வடபகுதியில் யாழ். குடாநாட்டிற்கு தென்மேற்காக அமைந்துள்ள 7 தீவுகளில் உள்ள பெரிய தீவாகும். நெடுந்தீவு யாழ்ப்பாணத்தில் இருந்து அதிக தொலைவில…
-
- 0 replies
- 1.8k views
-
-
Friday May 25 2007 01:29:14 PM GMT இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் லார்ஸ் ஜொஹான் சோல்பெர்க் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திப்பார் என கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோல்ப்பினூர் ஒமர்ஸன் அறிவித்திருந்தார். வன்னி செல்லும் இவரது பயணம் இறுதி நேரத்தில் சிறிலங்கா அரச தரப்பினாரால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 733 views
-
-
வெள்ளி 25-05-2007 09:15 மணி தமிழீழம் [கலை] வடக்கில் மிகப்பெரும் தாக்குதல் நடவடிக்கைக்கு விடுதலைப்புலிகள் தயார் - ஆங்கில இணையத்தளம் தகவல் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு நோக்கிய மிகப்பெரும் தாக்குதல் நடவடிக்கைக்கு தயாராகி வருவதுடன் சிறிலங்கா இராணுவத்தினரின் பலமான நிலைகளை அழித்தொழிப்பதற்காக கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமீப காலமாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த விடுதலைப்புலிகள் தற்போது தமது அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகியுள்ளதாகவும், தளபதிகள் முறையே கேணல் பானு, கேணல் நகுலன் ஆகியோர் தரை, கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவர் எனவும், தேசியத்தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனி வான் சார் நடவடிக்கைகளில் மிகவும்…
-
- 5 replies
- 2.1k views
-
-
வெள்ளி 25-05-2007 16:10 மணி தமிழீழம் [மயூரன்] விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க ஐ.தே.க முழு ஆதரவு விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க ஐக்கிய தேசியக் கட்சி முழுயான ஒத்துழைப்பைத் தரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றில் பாதுகாப்பு தொடர்பில் நடத்தப்பட்ட ஒத்திவைப்பு பிரேணையில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் யுத்த முன்னெடுப்புகளை உடைதெறியவேண்டும். அத்துடன் புலிகளின் வான்படையை இல்லதொழிக்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எழுக்க வேண்டும் pathivu
-
- 4 replies
- 1.3k views
-
-
வெள்ளிக்கிழமை 25 மே 2007 -priyan- கொழும்புத்துறைமுகத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்துரைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன்... சிறீலங்கா அரசாங்கமும் அரச படைகளும் விடுதலைப் புலிகளால் தான் இக்குண்டு வெடிப்பை நடத்தியுயுள்ளார்கள் என தவறான பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்கள். முப்படைகளும் வளச்சியடைந்த நிலையில் குறிப்பாக வான்படைகள் சிறீலங்கா படைத்துறையுடன் தொடர்புபட்ட இலக்குகள் மீது மிகவும் துல்லியமாக தாக்குதலைத் நடத்தும் போது இவ்வாறான சில்லறைத் தனமாக குண்டுத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தவேண்டிய தேவை இல்லை. அவ…
-
- 0 replies
- 741 views
-
-
வெள்ளிக்கிழமை 25 மே 2007 புறக்கோட்டையில் நேற்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் வழங்கினர். கொழும்பு பிரதான நீதிவான் சரோஜினி குசல வீரவர்தனவின் உத்தியோகபூர்வ அறையில் புறக்கோட்டை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றபோது இம்மூவரும் புறக்கோட்டை பொலிஸாரால் ஆஜராக்கப்பட்டனர். இலக்கு வைக்கப்பட்ட இராணுவ பஸ் வண்டியினுள் பயணம் செய்த ஒரு இராணுவ வீரர், சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு மிக அருகாமையில் போய்க் கொண்டிருந்த ஜனசக்தி இன்சுரன்ஸ் உத்தியோகத்தர் மற்றும் வர்த்தகர் ஆகிய மூவரும் தனித்தனி வாக்குமூலம் வழங்கினர். அவர்கள் இவ்வாக்குமூலத்தில் சத்தத்தை மாத்திரமே கேட்டதாகவும் கு…
-
- 0 replies
- 708 views
-
-
வெள்ளி 25-05-2007 17:26 மணி தமிழீழம் [தாயகன்] புத்தளத்தில் தேடுதல் - 14 தமிழர்கள் கைது புத்தளத்தில் சிறீலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதலில் 14 தமிழர்களைக் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைத்துள்ளனர். புத்தளம் வென்னப்புவ நகரில் இன்று காலை கைது செய்யப்பட்ட அனைவரும் 18 முதல் 26 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், அங்குள்ள காலணித் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிவர்களே கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. ஹற்றன், புஸ்ஸல்லாவ பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டதுடன், இவர்களில் நால்வர் பெண்கள் எனவும் புத்தளம் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். வெள்ளி 25-05-2007 17:17 மணி தமிழீழம் [தாயகன்] கண்டியில் நா…
-
- 0 replies
- 894 views
-
-
வெள்ளிக்கிழமை 25 மே 2007 மலேசிய நிறுவனமான மக்ஸீஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஷ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனப் பங்குகள் நெதர்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் ஹகுளோபல் டெலிகொமினிகேஷன் நிறுவனத்தின்' தலைவர் ஆனந்த கிருஷ்ணனுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பாக அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென தெரிவிக்கும் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதன் பின்னணியில் பெருமளவிலான லஞ்சம் பரிமாறப்பட்டுள்ளதாகவும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமென்றும் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே தயாசிறி ஜயசேகர எம்.பி. இதனைத் தெரிவித்தார். நெதர்லாந்தில் இயங்கும் குளோ…
-
- 0 replies
- 781 views
-
-
விக்கிபீடியா இணையத்தளம் இராணுவ இரகசியங்களை வெளியிடுகின்றது: ஐ.தே.க [வெள்ளிக்கிழமை, 25 மே 2007, 16:34 ஈழம்] [அ.அருணாசலம்] ஐக்கிய தேசியக் கட்சி இராணுவ இரகசியங்களை விடுதலைப் புலிகளுக்கு வெளியிடுவது என்பது தவறானது நாம் அதனை வெளியிடவில்லை. ஆனால் விக்கிபீடியா இணையத்தளத்தில் சிறிலங்காப் படையினரின் போரிடும் திறன் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு படையினர் தொடர்பான இரகசியங்களை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கி வருகின்றது என்று எரிபொருள் மின்சக்தி பிரதி அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கையிலேயே ஜெயசே…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெள்ளி 25-05-2007 15:51 மணி தமிழீழம் [மோகன்] கருணா குழு மற்றும் ஈபிடிபி குழு ஆயுதங்களை வைத்திருக்க அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை - போகல்லாகம சிறீலங்காவில் கருணா குழுவினரோ அல்லது ஈபிடிபியினரோ ஆயுதங்களை வைத்திருப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என சிறீலங்காவுக்கான வெளியுறவு அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் யுத்த முன்னெடுப்பால் இடப்பெயர்வுக்கு உள்ளாகி மக்களை மீளவும் குடியேற்றுகின்ற நடவடிக்கை தொடர்ப்பில் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டிலேயே நேற்று போகல்லாகம இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றங்கள் வலுக்கட்டாயமாக இடம்பெறவில்லை எனத் தெரிவித்து போகல்லாகம பொதுமக்களின் சுயவிருப்பிலேய…
-
- 1 reply
- 1.1k views
-
-
வெள்ளி 25-05-2007 17:04 மணி தமிழீழம் [தாயகன்] கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவி - அனுராவிடம் பறிப்பு, கருவிடம் ஒப்படைப்பு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக, அதிபர் மகிந்த ராஜபக்ஸவுடன் முரண்பட்டிருந்த அனுரா பண்டாரநாயக்க பதவி வகித்து வந்திருந்தார். இந்த நிலையில், அனுரா பண்டாரநாயக்கவின் பதவியைப் பறித்த அதிபர் மகிந்த ராஜபக்ஸ, அதனை அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசுடன் இணைந்துகொண்ட கரு ஜயசூரியவிடம் ஒப்படைத்துள்ளார். இந்தப் பதவி மாற்றம் தொடர்பான எழுத்துமூல அறிவித்தல் கம்பஹா அலுவலகத்திற்கு அதிபர் மானிகையினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள கம்பஹா மாவட…
-
- 0 replies
- 822 views
-
-
கண்காணிப்புக் குழுவின் தலைவர் இன்று கிளிநொச்சி செல்கிறார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜெனரல் சொல் பேர்க் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்கிறார். இன்றுகாலை தரை மார்க்கமாக கிளிநொச்சி வரும் அவர், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுடன் பேச்சு நடத்துவார். போர்நிறுத்த உடன்பாடு, அண்மைக்காலத் தாக்குதல் கள் ஆகியன குறித்தே இன்றைய சந்திப்பின்போது பிர தானமாகப் பேசப்படும் என்று அறியவருகிறது உதயன்
-
- 4 replies
- 1.1k views
-
-
வெள்ளி 25-05-2007 14:32 மணி தமிழீழம் [மோகன்] யாழில் கப்பம் கேட்டு எச்சரிக்கை கடிதங்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் பீடாதிபதிகள் உட்பட பலரிடம் கப்பம் கேட்டு வீட்டு முகவரிகளுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன நாட்டைக்காக்கும் கூட்டமைப்பு என்ற அமைப்பினால் இந்தக் கடிதங்கள் அனுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட அமைப்பு பல்கலைக்கழ வளாகத்தில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பீடாதிபதிகள் விரிவுரையாளர்களுக்கு என கொலைப் பயமுறுத்தல் விடுத்து துண்டுப்பிரசுரங்களை ஒட்டியிருந்தார்கள். இந்நிலமையில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியுடன் யாழ் மாவட்டத்தின் பொது அமைப்புப் பிரத…
-
- 0 replies
- 939 views
-
-
நாடாளுமன்ற விவாதத்திற்கு முன்பே தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகள் விற்கப்பட்டு விட்டன: ஐ.தே.க [வெள்ளிக்கிழமை, 25 மே 2007, 05:47 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 8 ஆம் நாள் நடைபெற உள்ள நிலையில் அதன் பங்குகள் 40 ரூபாயினால் அதிகரித்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் பேசும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: நிதி அமைச்சிடம் இருந்து சிறிலங்காவின் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்யும் குளோபல் தொலைத்தொடர்பு நிறுவனம் எங்கே? அதற்குரிய உரிமையாளர…
-
- 1 reply
- 629 views
-
-
மன்னிப்பு சபை செயலாளர் நாயகத்தின் எச்சரிக்கை [25 - May - 2007] மனித உரிமை மீறல்கள் தொடர்பான நெருக்கடிகளை எதிர்கொள்வதில் சர்வதேச சமூகம் கையாலாகாத்தனமாக, பலவீனமடைந்ததாக இருக்கின்றதென்ற குற்றச்சாட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஐரீன் கானிடமிருந்து எழுந்துள்ளது. அவநம்பிக்கைகள், தமக்கிடையிலான பிளவுகளால் சர்வதேச சமூகம் வலுவிழந்துவிட்டது என்று ஐரீன்கான் சாடியிருக்கிறார். உலகத்தை ஆபத்து நிறைந்ததாக, மனித உரிமைகள் மோசமான முறையில் மீறப்படுவதாக துருவமயப்பட்டதாக மாற்றுவதற்காக வல்லமை வாய்ந்த அரசாங்கங்களும் ஆயுதக் குழுக்களும் வேண்டுமென்றே அச்ச சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றன என்ற கடுமையான குற்றச்சாட்டுகளும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்த…
-
- 1 reply
- 1.1k views
-