Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நெடுந்தீவு தாக்குதல்- யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கான அறிகுறி: முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர் என்பதனையே நெடுந்தீவுத் தாக்குதல் உணர்த்துகின்றது. அங்கு நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இன்று (நேற்று) அதிகாலை நெடுந்தீவுப் பகுதியில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் அவர்களின் திட்டதிற்கான ஒரு தகவல். விடுதலைப் புலிகள் நெடுந்தீவை தக்க வைத்திருந்தால் அது குடாநாட்டின் வ…

  2. புலிகளின் விமானத் தாக்குதல் தொடர்பாக ஐ.தே.க. விவாதம் நடத்தக் கோரியதால் சபையில் கடும் சர்ச்சை வீரகேசரி நாளேடு விடுதலை புலிகளின் விமானத் தாக்குதலை எதிர்கொள்ள விமானப்படை தயாராக இல்லை. ஆகவே அது தொடர்பாக விவாதம் ஒன்றை நடத்த அனுமதியளிக்கவேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்தமையினால் சபையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த இந்த கோரிக்கையை ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. க்கள் ஏற்றுக்கொண்டு இன்றைய (நேற்று) தினமே விவாதம் நடத்தவேண்டுமென அழுத்தம் கொடுத்தமையினால் அரச தரப்பு அமைச்சர்கள் விசனமடைந்து வாய்த்தர்க்கம் புரிந்தனர். ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் நீண்ட நேரம் மேற்படி விடயம் தொடர்பாக …

  3. பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் அமைதி ஒன்றுகூடல் இலங்கையரசின் மனிதவுரிமை மீறல்களை பிரான்ஸ்வாழ் மக்களிற்கும் பிரெஞ்சு அரசிற்கு எடுத்து சொல்லும் விதமாகவும் மற்றும் பிரான்சில் கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணியாளர் மீதான நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் விடுதலைக்கு வழிவகுக்கவேண்டியும் பிரான்ஸ் வாழ் தமிழர்களின் அமைதி ஒன்று கூடல் பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப்பு மற்றும் பல தமிழ் அமைப்பகளினாலும் 29ந்திகதி ஒழுங்கு செய்யபட்டுள்ளது. பி. பகல் 2மணியளவில். 8ம் இலக்க நிலகீழ் தொடரரூந்தில் அமைந்திருக்கும் tour mauboucg என்னுமிடத்தில் நடைபெறும் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் அனைவரையும் இதில் கலந்து கொண்டு இலங்கையரசு தமிழர் மீதான மனிதவுரிமை மீ…

    • 0 replies
    • 600 views
  4. இந்திய மத்திய வேளாண்மை அமைச்சர் சரத் பவார் இலங்கை பயணம் இந்தியாவின் மத்திய வேளைண்மைத்துறை அமைச்சர் சரத் பவார் இன்று சிறீலங்காவுக்கான இரண்டு நாள் அரச பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று கொழும்பை அடைந்த சரத் பவார் இன்று மகிந்த ராஜபக்சவையும் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/

  5. வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கோப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவர்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் ஜே.வி.பி நேற்றுமாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் 37ஜே.வி.பி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

    • 0 replies
    • 986 views
  6. கெப்பிட்டிக்கொல்லாவ: ஊர்காவல் படையைச் சேர்ந்தவரின் துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி [வியாழக்கிழமை, 24 மே 2007, 18:54 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] அனுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொலாவப் பகுதியில் சிங்கள ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் ஒரு குழந்தை, இரு பெண்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. கொல்லப்பட்ட பெண்களில் ஒருவர் தாக்குதல் நடத்திய ஊர்காவல் படையைச் சேர்ந்தவரின் மனைவி ஆவார். துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்ற ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். புதினம்

    • 1 reply
    • 1.1k views
  7. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குங்கள்: சுவிஸ் தமிழர் பேரவை [வியாழக்கிழமை, 24 மே 2007, 17:29 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை அடுத்த வருடத்திற்கும் நீடிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருவதை அறிந்து, சுவிஸ் வாழ் தமிழர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள் என சுவிஸ் தமிழர் பேரவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை அடுத்த வருடத்திற்கும் நீடிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருவதை அறிந்து, சுவிற்சர்லாந்து வாழ் புலம்பெயர் தமிழர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றிய…

  8. வவுனியா: சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் 2 பொதுமக்கள் பலி வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பாலமோட்டை குஞ்சுக்குளப்பகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9 மணியளவில் நடைபெற்றது. சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல் காரணமாக சொந்த இடத்தில் இருந்து வெளியேறிய ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் தங்களுடைய வீட்டினைப் பார்வையிடுவதற்காக உந்துருளியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் இவர்களின் உந்துருளியை இலக்கு வைத்து தாக்குலை நடத்தியுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான செல்வராசா …

  9. தேர்தல் சீர்திருத்த யோசனை: பேரினவாதப் பொறி! சிறுபான்மை இன மக்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக் கும் அற்ப,சொற்ப பிரதிநிதித்துவத்துக்கும் ஆப்பு வைக்கும் வேலை மும்முரமாக நடக்கின்றது. தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமாக அரசு மேற்கொள்ளும் காய்நகர்த்தல் பேரினவாத ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தி, வலுப்படுத்தும் மற்றொரு முயற்சியே என்பது தெளிவு. 1978 ஆம் ஆண்டின் அரசமைப்பின் மூலம் இலங்கை யின் ஆட்சி அதிகாரம் ஜனாதிபதி என்ற தனிமனிதரிடம் ஒப் படைக்கப்படும் நிர்வாக முறைமை கொண்டுவரப்பட்டது. சிறுபான்மையினரின் குறிப்பாகத் தமிழரின் பங்குபற்று தலோ, இசைவோ, இணக்கமோ இன்றி அவர்கள் மீதும் வலோற் கரமாகத் திணிக்கப்பட்ட அந்த அரசமைப்பு முழுமையாகப் பேரினவாத மேலாண்மை…

  10. புலிக்கொடி பறக்கவிட்ட மயூரன் நடைபயணம் மூலம் பரப்புரை கடந்த உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழத் தேசியக் கொடியைப் பறக்கவிட்ட கனேடிய இளைஞர் மயூரன், ஈழத் தமிழர் துயர் குறித்து விளக்க தற்போது நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கனடாவில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தனது நடைபயணத்தைத் தொடங்கினார். ரொரன்ரோ சிட்டி அரங்கத்திலிருந்து ஒசாவா அரங்கம் வரையில் 60 கிலோ மீற்றர் தொலைவு நேற்று புதன்கிழமை நடந்துள்ளார். "தனது சொந்த நலன்களுக்காக பெரும்பான்மை இனமானது சிறுபான்மை இனத்தை ஒடுக்கும் "எரோரிசத்தை தடுப்போம்" என்ற முழக்கத்துடன் ஈழத் தமிழரின் துயரை விவரிக்கும் வகையில் இந்தப் பயணத்தை மயூரன் மேற்கொண்டுள்ளார். வழியெங்கும் அவரை பொதுமக்கள் உற்சாகப்படுத்தினர். …

  11. கடத்தப்பட்ட மாணவருக்காக தியாகம் செய்வதற்குத் தயார் மாணவர் ஒன்றியம் அறிக்கை யாழ்ப்பாணம்,மே.24 கடத்தப்பட்ட எமது சகோதரர்களின் விடுதலைக்காக நாம் எத்தகைய தியா கத்தினையும் செய்வதற்கு குடாநாட்டு மாணவர் சமூகம் காத்திருக்கிறது. இவ்வாறு தெரிவித்திருக்கிறது யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம். மாணவர்களின் பகிஷ்கரிப்புப் போராட் டத்தை இடைநிறுத்துவது தொடர்பாக நேற்று விடுத்த அறிக்கையில் மேற் கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது: கடந்த 04.05.2007 அன்று இரவு ஊர டங்கு வேளையில் எமது சக மாணவர் களான சுந்தரலிங்கம் யசோதரன், குக ராஜன் கண்ணன், நாகராசா வேணு காணன் ஆகிய மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களின் முன்னிலையில் வைத்து விசாரணைக்கென கூட்டிச் செல்ல…

    • 1 reply
    • 1k views
  12. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள்: ஜப்பானும் உன்னிப்பாக அவதானிக்கின்றது சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி தகவல் ரோக்கியோ, மே 24 இலங்கையில் மனித உரிமை மீறல் கள் தமிழீழ விடுதலைப் புலிகளாலோ அரசாங்கத்தாலோ அல்லது வேறு எந்த தரப்பினராலோ எவரால் செய்யப் பட்டாலும் ஜப்பான் அதனை கவ னித்தே வருகின்றது. கவலைப்படவும் செய்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங் கைக்கான ஜப்பானிய சமாதானத் தூது வர் யசூசி அகாஷி. டோக்கியோவில் வைத்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அகாஷி, இலங் கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை உன்னிப்பாக அவ தானித்தே வருகின்றோம். இதை இலங்கை அரசும் அவதானத்தில் கொள் ளும் என்று கருதுகின்றோம் என்று கூறினார். மனித உரிமை மீறல்கள் தொடர் பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட…

  13. இனப்பிரச்சினைக்கு சீனத்தலைவர்களும் அதிகாரப் பரவலையே வற்புறுத்துகிறார்கள் ரணில் விக்கிரமசிங்க தகவல் கொழும்பு,மே24 இலங்கையில் தற்பொழுது நிலவும் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவ லாக்கல் மூலமே தீர்வுகாணப்படமுடியும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலை வர்களும் வலியுறுத்தினார்கள். எதிர்க் கட் சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளு மன்றக் கட்டடத்தில் நடந்த தமது கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இவ் வாறு விளக்கினார். அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சீனாவில் மேற்கொண்ட விஜயம் தொடர் பாகத் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கிக் கூறினார். சீனா பூகோள அளவில் பெரிய நாடாக இருந்தபோதிலும் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து அளித்திருப் பதன் மூலம் பிரிக்கப்படாமல்…

  14. விமானம் பறந்தது; மின்சாரம் நின்றது! யாழ்ப்பாணம்,மே 24 குடாநாடு முழுவதும் நேற்றிரவு 7.55 மணிக்கு திடீரென மின்சாரம் நிறுத்தப்பட் டது. குடாநாட்டு வான் பரப்பில் விமானம் ஒன்று பறந்ததும் மின்சாரம் திடீரென வெட் டப்பட்டதும் மக்கள் மத்தியில் பதற்ற நிலையை ஏற்படுத்தியது. மின்சாரம் சுமார் 16 நிமிடங்களில் மீண் டும் வழங்கப்பட்டதால், மக்களின் பதற் றம் தணிந்தது. விமானம் பறந்து சில வினாடிகளில் மின் சார விநியோகம் தடைப்பட்டதால் மக்கள் மத்தியில் பல்வேறு ஊகங்கள் தோன்றின. மின்சாரம் மீண்டும் திரும்பும்வரை என் னவோ ஏதோ என்ற பீதியும் மக்கள் மனங் களை பீடித்திருந்தது. (அ1) உதயன்

  15. .மனிதாபிமானச் சட்டங்களை மீறுவதாக இலங்கை மீது ஆஸ்திரேலியா கண்டனம் மெல்பேர்ண், மே 24 இலங்கையில் ஆட்கடத்தல்களும் நீதிக் குப் புறம்பான கொலைகளும் தினசரி இடம் பெறுவதைச் சுட்டிக்காட்டியுள்ள ஆஸ்தி ரேலியா, இலங்கை அரசு மனிதாபிமானச் சட்டங்களை ஒழுங்குக் கிரமமாக மீறி வரு கின்றது எனக் குற்றம் சுமத்தியிருக்கின்றது. இலங்கை அரசு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் விமர்சன நிலைப்பாட்டை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்ஸாண்டர் டௌனர் கடுமையாக்கியிருக்கின்றார் என ஆஸ்திரேலிய ஒலிப ரப்புக் கூட்டுத்தாபன செய்தியாளர் கிரேம் டொபல் தெரிவிக்கிறார். இலங்கை அரசுக்கும் தமிழ்ப்புலிகளுக் கும் இடையிலான பிணக்கில், சம்பந்தப் பட்ட தரப்புகள் அனைத்துமே சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை ஒழுங்குக் கிரமமாக மீறி வரு…

  16. கொழும்பு மாலுகடைக்கு அண்மையில் குண்டு வெடித்துள்ளது மேலதிக செய்திகள் வெகுவிரைவில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரியே குண்டை வெடிக்க வைத்துள்ளார் சக்தி செய்திகள் கடற்கரை வீதியில் இருக்கும் துறைமுக பிரதான வாசலில் குண்டு வெடிபு நடைபெற்றுள்ளது

    • 14 replies
    • 3.6k views
  17. யாழ். பல்கலைக்கழக தற்போதைய நிலைமை தொடர்பாக பேரவை கவலை Thursday, 24 May 2007 யாழ்.பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ள பல்கலைக்கழகப் பேரவையினர் எவ்வித தடங்கலும் இன்றி பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் தொடந்து முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே தமது விருப்பமெனவும் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக பேரவைக் கூட்டம் பதில் துணைவேந்தர் பேராசிரியர் இரா.குமாரவடிவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் போது பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமுகமளிப்பது குறித்து மாணவர்களே தீர்மானிக்க வேண்டுமெனக் குறிப்பிட்ட பேரவை உறுப்பினர்கள் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடு…

  18. அமைதி முயற்சியிலிருந்து நோர்வே விலகவில்லை: எஸ்.ஜெயானந்தமூர்த்தி Thursday, 24 May 2007 அணுசரணையாளர் நிலையில் இருந்து எந்த ஒரு காரணத்துக்காகவும் தாம் விலகமாட்டோம் என்று இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் தன்னிடம் தெரிவித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கூறினார். தற்போது நோர்வேயில் தங்கியிருக்கும் மட்டக்களப்பபு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி 'தமிழ்நாதம்' இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியிலேயே இதனை தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயரை சந்தித்து ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஜெயானந்தமூர்த்தி ஒரு மணிநேரம் உரையாடியுள்ளார். …

  19. காணாமல்ப் போனோர் பற்றிய மக்கள் கண்காணிப்புக் குழுவின் முறைப்பாட்டை ஐ-நா ஏற்றுக்கொண்டது ஐக்கிய நாடுகள் சபையில் காணாமல்;ப் போனவர்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவிற்கு, கொழும்பு மக்கள் கண்காணிப்புக் குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட காணாமல்ப் போனோர் தொடர்பான பட்டியல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. “மக்கள் கண்காணிப்புக் குழுவுக்கு” நூற்றுக் கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ள போதிலும், காணாமல்ப்போன 11 பேரின் விபரங்கள் முதற்கட்டமாக ஐ-நா அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமக்கு கிடைக்கப்பெற்ற இந்த விபரங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடத்தப்படும் என, ஐ-நாவின் ஜெனிவா அலுவலக மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளர் கிளவ்டியா டி லா பொன்ரே “மக்கள் கண்காணிப்புக் குழு…

  20. புலிகளின் நிருவாகப் பகுதிக்கு ஊடகர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் - அமெரிக்க ஊடக நிபுணர் விடுதலைப் புலிகளின் நிருவாகப் பகுதிக்கு ஊடகர்கள் செல்வதற்கு சிறீலங்கா அரசு விதித்துள்ள தடையை அமெரிக்காவின் அனைத்துலக தகவல்தொடர்பு நிகழ்ச்சித்திட்டப் பிரிவைச் சேர்ந்த ஊடக நிபுணரான ஷெரி றிச்சியார்டி கண்டித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் “டெய்லி மிரர்” பத்திரிகை இணையத்தளம் ஊடாக நடத்திய நேரடி நேர்காணலில், ஷெரி இந்தக் கருத்தினை முன்வைத்திருப்பதுடன், எங்கு சென்று செய்தி சேகரிக்க வேண்டும் என்பதை ஊடகர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும், அரசு அல்ல என்றும் கூறியுள்ளார். சிறீலங்கா அரசு ஊடகங்கள் மீது விதித்துள்ள இந்தத் தடை பற்றி அனைத்துலக கவனத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதேவே…

  21. யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணிக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது. இன்று வியாழக்கிழமை அதிகாலை 1 மணிமுதல் காலை 7 மணி கடந்த நிலையிலும் மோதல் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. 15-க்கும் மேற்பட்ட படகுகளில் முன்னேறி வந்த கடற்புலிகளுக்கும் தமது படையினருக்கும் இடையில் மோதல் வெடித்ததாக படைத்தரப்பு மேலும் தெரிவித்தது. இச்சம்பவம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை. http://www.eelampage.com/?cn=31923

  22. யாழில் இருந்து விடுமுறையில் சென்ற இராணுவ மேஜர் வாகன விபத்தில் பலி [வியாழக்கிழமை, 24 மே 2007, 06:23 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறைக்குச் சென்ற சிறிலங்கா இராணுவத்தின் மேஜர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ். வல்வெட்டித்துறையிலிருந்து விடுமுறையில் மாத்தறை தங்காலைக்குச் சென்ற சிறிலங்கா இராணுவத்தின் 3 ஆவது கெமுனு வோச் பிரிவின் தளபதியான மேஜர் ரசிக்க வெத ஆராச்சி என்பவரே வாகன விபத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்தார். -புதினம்

  23. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துள்ளன: அனைத்துலக மன்னிப்புச் சபை மனித உரிமைகளின் நிலையானது இலங்கையில் மிகவும் மோசமடைந்து வருகின்றது. இந்த வன்முறைகளில் சிறிலங்கா அரசு, கருணா குழு, விடுதலைப் புலிகள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. நேற்று புதன்கிழமை பிரித்தானியாவில் நடைபெற்ற அனைத்துலக மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கை வெளியீட்டின் போது அதன் பொதுச் செயலாளர் இரீனி ஹான் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: மனித உரிமைகளின் நிலையானது இலங்கையில் மிகவும் மோசமடைந்து வருகின்றது. இந்த வன்முறைகளில் சிறிலங்கா அரசு, கருணா குழு, விடுதலைப் புலிகள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றன…

  24. மீண்டு வந்த மீனவர்கள்... விலகாத மர்மங்கள்! அறுபத்தெட்டு நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் மீண்டு வந்தது குமரியில் சந்தோஷத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டபோதும், அவர்கள் கடத்தப்பட்டது சம்பந்தமான மர்மம் இன்னும் முழுமையாக விலகியபாடில்லை. ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மாயமான பன்னிரண்டு மீனவர்களைக் கடத்தியது சிங்கள ராணுவமா? விடுதலைப்புலிகளா? என பட்டிமன்ற ரேஞ்சுக்கு விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. தமிழக டி.ஜி.பி. முகர்ஜி, ‘கடத்தியது விடுதலைப்புலிகள்தான்’ என உறுதியாக கருத்துத் தெரிவித்து வந்தார். கடந்த மார்ச் ஆறாம் தேதி எப்படி மர்மமாக அவர்கள் கடத்தப்பட்டார்களோ, அதேபோல கடந்த பதினெட்டாம் தேதி இரவு ராமேஸ்வரம் கடல் பகுதியில் கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறார்கள். மீண்டு…

  25. மகாவம்சம் - சில செய்திகள் -சபேசன் - மெல்பேர்ண் - ஒஸ்ரேலியா சிறிலங்காவின் புதிய அதிபராக, அன்று மகிந்த ராஜபக்ச, சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் , பின்னருமாகப் பல கருத்துருவாக்கங்களை அவரும் அவருடைய கட்சியினரும் வெளியிட்டிருந்தார்கள். இக்கருத்துக்களில் ஒன்று ‘பண்டாரநாயக்கா சகாப்தம்’ என்பதாகும். இன்னுமொரு கருத்து, சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட மகாவம்சம் தருகின்ற தகவல்களை மையமாகக் கொண்டதாகும். பண்டாரநாயக்கா சகாப்;தம்(?) கொண்டு வந்த கேடுகள் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் தர்க்கித்து உள்ளோம். ஆகவே இச் சந்தர்ப்பத்தில் நாம் மகாவம்சம் குறித்துச் சற்று ஆழமாக கவனத்தைச் செலுத்துவது பொருத்தமாக இருக்கக்கூடும். “முதலில் மகாவம்சம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.