ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
பிரித்தானிய நாடாளுமன்றக் குழு: சிங்களக் கட்சி எதிர்ப்பு [வெள்ளிக்கிழமை, 11 மே 2007, 17:13 ஈழம்] [ப.தயாளினி] ஈழத் தமிழர்களுக்காக பிரித்தானிய நாடாளுமன்றக் குழு அமைக்கப்படுவதற்கு சிங்களக் கட்சியான சிறிலங்கா தேசபிமானி பெரமுன எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் சில்கொட்டுக்கு அக்கட்சியின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் எழுதியுள்ள கடிதம்: தமிழர்கள் கண்ணியத்துடனும் நீதியுடனும் வாழ்வதற்காக அனைத்து கட்சிக் குழுவை பிரித்தானிய நாடாளுமன்றம் அமைத்துள்ளது குறித்து சிறிலங்கா தேசாபிமானி பெரமுன அதிர்ச்சியடைந்துள்ளது. பிரித்தானியா குறிப்பிடுவது இலங்கை வாழ் தமிழர்களைத்தான். இலங்கையில் உள்ள தமிழர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதிக…
-
- 1 reply
- 1k views
-
-
நள்ளிரவில் பரா வெளிச்சம், துப்பாக்கிப் பிரயோகம். மக்கள் பதற்றம். Written by Ellalan - May 11, 2007 at 04:44 PM நேற்று முன்தினம் இரவு திடீரென காங்கேசன்துறை மாதகல் மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் இடம் பெற்ற துப்பாக்கிப்பிரயோகம் மற்றும் பரா வெளிச்சக் குண்டுகளின் ஏவுதல் நடவடிக்கைகள் காரணமாக கரையோரப் பகுதிகளில் பதட்டமான நிலமை காணப்பட்டது. இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகிய இந்த நடவடிக்கை சுமார் பதினைந்து நிமிடங்கள் வரை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இடைக்கிடையே லேசர் குண்டுகளும் ஏவப்பட்டதையும் அவதானிகக் கூடியதாக இருந்தது. இரவு நேரமாகையால் கடலில் காணப்பட்ட அசைவைத் தொடர்ந்து கடற் படையினர் கடலில் இத்தகைய செயல்பாட்டை மேற்கொண்டதாக உயர் பாதுகாப்பு வல…
-
- 0 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரிடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட முகத்துவாரம் வீதியில் உள்ள தொட்டி தவெர்ன் சந்திக்கு அருகே துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினரின் முகாம் உள்ளது. இம்முகாமில் உள்ளோரிடையே நேற்று வியாழக்கிழமை இரவு 6.35 மணியளவில் மோதல் வெடித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் துணை இராணுவக் குழுவினர் இருவரும் இம்மோதலின் போது அப்பகுதியைக் கடந்து சென்ற முச்சக்கர வாகன சாரதியான நஸ்ரூதின் (வயது 55) என்பவரும் படுகாயமடைந்தனர். மட்டக்களப்பிலிருந்து காத்தான்குடிக்கு நஸ்ரூதின் திரும்பிக் கொண்டிருந்த போது இம்மோதலில் சிக்கிக் கொண்டார் …
-
- 26 replies
- 9.8k views
-
-
வில்பத்து வனப்பகுதியில் புலிகளின் வானூர்தி தளம்?: கொழும்பு ஊடகம் வில்பத்து வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தளம் இருக்கக்கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளியாகும் 'த ஐலன்ட்' நாளிதழில் இடம்பெற்றுள்ள செய்தி விவரம்: வில்பத்துவில் உள்ள சிறிலங்காவின் தேசிய பூங்கா பகுதிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலகு வகை வானூர்தி தரையிறங்கியதாக இராணுவப் புலனாய்வுத்துறையினர் தகவல் சேகரித்துள்ளனர். மிலெவில்ல, பெரியவில்லு மற்றும் பெரியகட்டை அணைகள் உள்ள பகுதிக்கு அருகாமையில் மன்னாரை நோக்கியதாக வானூர்தி தளம் அமைக்கப்பட்டுள்ளது. வானூர்தித் தளத்தை அண்மித்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை புலிகள் மேற்கொண்டுள்ளனர்…
-
- 1 reply
- 1.6k views
-
-
28 வருடங்கள் கழிந்தும் எத்தரப்பும் வெற்றி பெற முடியாமலிருக்கும் யுத்தம் [11 - May - 2007] * ஐ.தே.க. எம்.பி. சரத் ரணவக்க இலங்கையில் யுத்தம் ஆரம்பித்து 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளபோதும் எத் தரப்பும் அதில் வெற்றி பெற முடியவில்லையென ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சரத் ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்; "இலங்கையில் யுத்தம் ஆரம்பித்து 28 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், யுத்தத்தில் இதுவரை வெற்றி பெற முடியவில்லை. தற்போது யுத்தம் சில வருடங்களாகவே நடைபெறுகின்றதென்ற போலியான தோற்றப்பாட்டை உருவாக்க சிலர் முற்படுகின்…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஐ.தே.க. வெளியிடும் கவலை கடந்த ஒன்றரை வருட காலத்துக்குள் விடுதலைப் புலி களின் இராணுவப் பலத்தைப் பெரிதும் உடைத்துவிட்டோம் என்று இலங்கை அரசு மார்தட்டி மேற்கொண்ட பிரசாரத்தின தும், அதற்கு ஒத்து ஊதிய தென்னிலங்கை ஊடகங்களின தும் குட்டைப் போட்டுடைத்திருக்கின்றது ஐக்கிய தேசியக் கட்சி. நாட்டின் நிலைமை குறித்து அக்கட்சி நேற்றுமுன்தினம் வெளியிட்ட பகிரங்க அறிக்கையிலேயே இவ்விடயம் தெரி விக்கப்பட்டிருக்கின்றது. ""ஒவ்வொரு இராணுவ நடவடிக்கையின் பின்னரும் புலிகளின் இராணுவ வலிமை முடிவுற்று விட்டதாகப் பாது காப்பு அமைச்சும் ஊடகங்களும் நாட்டுக்கு அறிவித்து வந் தன. ஆனால் இன்று புலிகளின் இராணுவ வலிமை பாது காப்பாக உடையாமல் இருப்பது மட்டுமல்ல, உலகில் தனியான விமானப்படையைக் கொண்ட ஒரே பயங்கர வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ்மொழியை அரச சேவையில் முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் உக்கிரமடைந்துள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலகுவாக இருக்கும் வீரகேசரி நாளேடு அரச சேவையில் தமிழ்மொழியை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் உக்கிரமடைந்துள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இலகுவாக இருக்கும் என்று அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவரும் சட்டத்தரணியுமான ராஜா கொல்லுரே தெரிவித்தார். நாட்டில் இனப்பிரச்சினை ஏற்படுவதற்கு மொழியே அடிப்படையாக அமைந்தது. எனவே, அரசகரும மொழிகளின் பயன்பாட்டை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அரசகரும மொழிகள் கொள்கையை செயற்படுத்தும் பொருட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் 20…
-
- 1 reply
- 1k views
-
-
வெள்ளி 11-05-2007 04:51 மணி தமிழீழம் [சிறீதரன்] கடந்த நான்கு மாதத்தில் 80 பேர் கடத்தல் இந்த வருடம் கடந்த நான்கு மாதத்தில் மனித உரிமைகள் ஆணையகத்தின் தகவலின்படி ஜனவரி மாதத்தில் 20 பேரும் பெப்ரவரி மாதத்தில் 8 பேரும் மார்ச் மாதத்தில் 33 பேரும் ஏப்ரல் மாதத்தில் 19 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை யாழ் சிறைச்சாலையில் உயிருக்கு அஞ்சி தஞ்சம் கோரி 72 பேர் உள்ளதாகவும் தெரியவருகிறது. யாழ்பாணத்தில் அமெரிக்க தூதுவர் றிச்சாட் பௌச்சர் விஜயம் செய்தபோது இதுதொடர்பில் அவர்களது தாய்மார் கோரிக்கைவிடுத்துள்ளதாக தெரியவருகிறது. யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையகம் இவ்வாறு பலவந்தமாக ஆட்கடத்தலுக்கு உட்படுத்துவதற்கு புள்ளிவிபரங்களை திரட்டுதல் போன்றவை தவிர எது…
-
- 2 replies
- 1k views
-
-
சிறிலங்கா அரசிற்கு கடுமையான செய்திகளை வழங்கியிருக்கும் பௌச்சர் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி, மனித உரிமைகளை மேம்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் உறுதி செய்யும் படி அமெரிக்காவின் பிரதி வெளியுறவுச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடுமையான வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கைக்கான தனது மூன்று நாள் பயணத்தின் முடிவின் போது ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது. நான் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் கொண்டலீசா றைஸ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இலங்கை தொடர்பாக தொடர்ச்சியான சந்திப்பு…
-
- 4 replies
- 1.6k views
-
-
துணிவிருந்தால் வெளியே வந்து வாழ்த்தட்டும் பார்க்கலாம்: பிக்கு சவால்! கொழும்பு, மே 10 புலிகளின் வான்படைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் நாடாளுமன்றில் வாழ்த்துக் கூறியமைக்காக அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண. எல்லாவெல மேதானந்த தேரர் நேற்று நாடாளுமன்றில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். முடிந்தால் இதே வார்த்தையை நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்து சொல்லட்டும் பார்க்கலாம் என்றும் அவர் கஜேந்திரனுக்கு சவால் விட்டார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தேரர் மேலும் கூறியதாவது: பயங்கரவாதியான த…
-
- 18 replies
- 4.6k views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்திலிருந்து நா.உ. கஜேந்திரன் வெளியேற்றப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்ற கூட்டத் தொடரிலிருந்து சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.லொக்கு பண்டாராவினால் வெளியேற்றப்பட்டார். நேற்று நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் தொடர்பாக கஜேந்திரன் ஆற்றிய உரை நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. கஜேந்திரனின் உரையை ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடுமையாக எதிர்த்திருந்தார். கஜேந்திரனின் உரையானது நாட்டின் 6 ஆவது யாப்பு விதிகளை மீறியுள்ளதாக கூறிய சபாநாயகர், கஜேந்திரனை சபையிலிருந்து வெளியேற்றினார். ஜே.வி.பியின…
-
- 8 replies
- 2.1k views
-
-
பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் - இன்று லண்டன் தூதரகத்தில் ஆலோசனை சிறீலங்கா விடயங்களில் பிரித்தானியா தலையிடுவது தொடர்பாக லன்டனிலுள்ள சிறீலங்கா தூதரகத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற விவாதத்தினால் கலக்கமடைந்துள்ள சிறீலங்கா அரசு, பிரித்தானியாவிலுள்ள சிங்கள, மற்றும் தேசவிரோத தமிழ் சக்திகள் மூலம் பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. இது பற்றியும் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட இருக்கின்றது. தம…
-
- 0 replies
- 882 views
-
-
வெள்ளி 11-05-2007 02:44 மணி தமிழீழம் [தாயகன்] அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு - மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அமைத்தல் அவசியம் என, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சிறீலங்கா அரசுத் தலைவருடனான சந்திப்பில், அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அவசியத்தை வலியுறுத்துமாறும், றிச்சட் பௌச்சரிடம் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் ஏற்கனவே கேட்டிருந்தது. அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர் றிச்சட் பௌச்சரின் சிறீலங்காவிற்கான பயணத்தின் ஊடாக மனித உரிமை விடய…
-
- 0 replies
- 759 views
-
-
சிங்கள நாட்டின் மிச்சம் மீதியையும் பிடுங்கிச் செல்லப்போகும் மஹிந்த குடும்பம் -குயின்ரஸ் துரைசிங்கம் (கனடா)- கானமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி, தன் சிறகையும் விரித்தாடி, தானும் மயில் என்று கற்பனையில் மகிழ்வடைந்த இலக்கியக் கதைபோல், இலங்கையை ஒரு இஸ்ரேல் நாடு என்று கற்பனை பண்ணிக்கொண்டு, தன்னை பிறிதொரு துட்டகைமுனு என்று தானே புகழ்பாடிக்கொண்டு, எழுந்தமானத்திற்கு தமிழர் தாயகத்தைத் துவம்சம் பண்ணப் புறப்பட்ட மகிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்ப சோதரர்களும், கனவு கலைந்து நிஜவுலகிற்குள் இடது காலை எடுத்து வைத்திருக்கிறார்கள். தமிழினத்தையும் தமிழ் மண்ணையும் தமிழ் நாகரீகத்தையும் தமிழ் விழுமியங்களையும் மட்டுமல்லாது, தமிழ் உணர்வுகளையும் தமிழரிடமிருந்து அப்புறப்படுத்தி, …
-
- 1 reply
- 1.4k views
-
-
சம உரிமை, சுயநிர்ணயம் என்பன தீர்வுக்கான அடித்தளம்: அமெரிக்காவிடம் யாழ் ஆயர் தெரிவிப்பு யாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை சென்றிருந்த அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சருடன் யாழ். பொது நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பில் யாழ். ஆயர் தோமஸ் செந்தரநாயகம் ஆண்டகையும் கலந்து கொண்டார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பில் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்கும் கலந்து கொண்டார். இச்சந்திப்பு தொடர்பாக யாழ். ஆயர் இல்லத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை: இலங்கை இனப்பிரச்சனை தீர்வுக்கான ஒரு பொதியாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் வெளியிடப்பட்ட திட்டம், தமிழர்களின் நியாயமான அபிலாசைகள் எதனையும…
-
- 0 replies
- 842 views
-
-
வியாழன் 10-05-2007 19:07 மணி தமிழீழம் [செந்தமிழ்] முல்லைதீவில் பகுதியில் வான்வெளித் தாக்குதல்கள் அண்மைக்காலமாக சிறீலங்கா வான்படைகளின் தாக்குதல்கள் குறைவடைந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் சிறீலங்கா வான்படைகளுக்குச் சொந்தமான மிக்-27 மிகையொலி விமானங்கள் முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்புக்களை மையப்படுத்தி வான் தாக்குதலை நடத்தியுள்ளன. மிக உயரத்தில் பறப்புக்களை மேற்கொண்டவாறு தாக்குதுலை நடத்திவிட்டு சென்றன. இதன் போது ஏற்பட்ட தேசவிபரங்கள் தெரியவரவில்லை. நன்றி - பதிவு
-
- 1 reply
- 1.3k views
-
-
குமரி மீனவர்களைக் குறி வைத்து அடித்த இலங்கைக் கடற்படை - கொதித்துக் கிடக்கும் மீனவர்கள் எப்போதெல்லாம் இலங்கையில் விடுதலைப்புலிகள் விஸ்வரூபம் எடுக்கிறார்களோ, அப்போதெல்லாம் தங்களின் ஆத்திரத்தை, தமிழக மீனவர்கள் மீது காட்டுவது சிங்கள கடற்படையின் வாடிக்கைதானாம். அந்த வகையில் முதன்முறையாக விடுதலைப்புலிகளின் விமானப்படைத்திறன் வெளிப்பட்டிருக்கும் வேளையில், சிங்கள கடற்படையினரும் கொத்தாக ஐந்து தமிழக மீனவர்களின் உயிர்களைக் குடித்து, தங்களின் ரத்தப்பசியைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்
-
- 17 replies
- 4.6k views
-
-
சுட்டது புதினம் சம உரிமை, சுயநிர்ணயம் என்பன தீர்வுக்கான அடித்தளம்: அமெரிக்காவிடம் யாழ் ஆயர் தெரிவிப்பு [வியாழக்கிழமை, 10 மே 2007, 21:26 ஈழம்] [காவலூர் சங்கீதன்] யாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை சென்றிருந்த அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சருடன் யாழ். பொது நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பில் யாழ். ஆயர் தோமஸ் செந்தரநாயகம் ஆண்டகையும் கலந்து கொண்டார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பில் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்கும் கலந்து கொண்டார். இச்சந்திப்பு தொடர்பாக யாழ். ஆயர் இல்லத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை: இலங்கை இனப்பிரச்சனை தீர்வுக்கான ஒரு பொதியாக, சிறிலங்கா சுதந்த…
-
- 0 replies
- 579 views
-
-
கொழும்பு சிறைச்சாலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஐவர் உண்ணாவிரதம் [வியாழக்கிழமை, 10 மே 2007, 19:01 ஈழம்] [க.நித்தியா] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தமிழகத்தைச் சேர்ந்து ஐவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள இவர்கள், உடனடியாக தம்மை விடுதலை செய்யக்கோரியும், தமது நிலை குறித்து தமிழக அரசு கவனம் செலுத்த வலிறுத்தியுமே இப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தமிழகம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த றீகன், யாக்ரூப், சுரேஸ், இராமகிருஸ்ண் ஆகியோருட…
-
- 0 replies
- 900 views
-
-
வியாழன் 10-05-2007 16:35 மணி தமிழீழம் [செந்தமிழ்] தமிழீழ சிறுவர் பாதுகாப்பு வழங்குரிமைச் சபையின் அவரச வேண்டுகோள் சிறுவர் பாதுகாப்பு வழங்குரிமைச் சபை தமிழீழம் அவரச வேண்டுகோள் வன்னிப் பெருநிலப்பரப்பினுள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட வயது குறைந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு 2006 ஆம் ஆண்டு சனவரி மாதம் அமுலுக்கு வந்த தமிழீழச் சிறுவர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்துவதைச் சிறுவர் பாதுகாப்பு வழங்குரிமைச் சபை கண்காணித்து வருகின்றது. இதனுடைய முக்கிய பணியாக வயது குறைந்த சிறுவர்களை விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கி மீளவும் அவர்களை குடும்பத்துடன் இணைந்து வருகின்றது. இதன் அடிப்படையில் 1990 ஆம் ஆண்டிலிலும் அதற்குப் பின்பு பிறந்…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகளின் விமானங்களை வலை வீசி பிடிக்க முடியுமா? கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது புலிகளுக்கு வழங்கப்பட்ட நிதியை கொண்டு கொள்வனவு செய்த விமானங்களை பயன்படுத்தியே இன்று புலிகள் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டனர். அந்த விமானங்களை வலை வீசி பிடிக்க போவதாக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். அப்படி வலை வீசி பிடிக்க முடியுமா? என்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார். அவசரகாலச் சட்டத்தை எதிர்க்கட்சி சார்பாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புலிகள் விமானத்தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் அதனால் நாட்டின் பொருளாதாரம், மக்களின் இயல்பு வாழ்க்கை சீர் குலைந்தமைக்கும் இந்த அரசாங்கம் பொறுப்…
-
- 4 replies
- 2.2k views
-
-
கொழும்பு ஊர்வலத்தில் ஜே.வி.பி – பொலிஸார் இடையே முறுகல். Written by Ellalan - May 10, 2007 at 10:09 AM கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளை சந்திக்க விரும்பும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு அவருடைய அலுவலக வாசலில் வந்து காத்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க முடியாமல் போனது கண்டனத்துக்குரியது என ஜே. வி. பி.யின் விமல் வீரவன்ச தெரிவிதிருக்கின்றார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிறிலங்கா அரசுக்கு எதிராக தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தும் பிரித்தானிய நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டியும் ஜே. வி. பி. யினர் நேற்று பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது த…
-
- 1 reply
- 1k views
-
-
யாழ். எம்.பி. கஜேந்திரனை கைது செய்யவேண்டும் ஜாதிக ஹெல உறுமய [Thursday May 10 2007 01:27:12 AM GMT] [virakesari.lk] தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செல்வராஜா கஜேந்திரனை கைது செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பியுமான எல்லாவல மேதானந்த தேரர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.எல்லாவல மேதானந்த தேரர் உரையாற்றுவதற்கு முன்பாக கஜேந்திரன் எம்.பி உரையாற்றினார். அவர் தமதுரையில், தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைகளும் புலிகளிடம் இருக்கின்றன. அந்தப் படைகள் எமது மக்களின் உரிமைகளுக்காகவும், எதி…
-
- 1 reply
- 1.1k views
-
-
சு.க.யோசனையை சபையில் கிழித்தெறிந்தார் யாழ். எம்.பி அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனையை சபையில் கிழித்து எறிந்தார். கடந்த 50 ஆண்டுகாலத்திற்கு முன்னர் பரீட்சிக்கப்பட்டு கைவிடப்பட்ட யோசனையை சுதந்திரக்கட்சி மீண்டும் தூசிதட்டி கொண்டு வந்ததன் மூலம் அவர்களின் பேரினவாத சிந்தனை வெளிப்பட்டு நிற்கின்றது என்று கூறி காரசாரமாக விமர்சித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்: தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கொச்சைப்படுத்திபேரினவாதத்த
-
- 3 replies
- 1.5k views
-
-
யாழ். மாணவர்களின் பிரச்சினைகளை நன்கறிவேன்'' யாழ்ப்பாணம், மே 10 ""யாழ்.மாவட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர்வதில் உள்ள பிரச்சினைகளை நன்கு அறிவேன்.'' யாழ்.வந்த அமெரிக்க ராஜாங்க அமைச் சர் றிச்சார்ட் பௌச்சர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்.பொது நூலகத்தில் நேற்று நடைபெற்ற ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசுகையில் இவ்வாறு கூறினார். யு.எஸ்.எயிட் நிறுவன உதவியுடன் நடத்தப்பட்டு வரும் இப் பயிற்சி வகுப்பில் பேசுகையில் அவர் மேலும் கூறியதாவது: யாழ்.மக்களின் துன்பதுயரங்களை நான் நன்கு அறிந்துள்ளேன். மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மாணவர்கள் கல்வியைத் தொடர் வதில் ஏற்பட்டுவரும் பிரச்சினைகளை யும் நன்கு அறிந்துள்ளேன் என்றும் அவர் சொன்னார் uthayan
-
- 2 replies
- 1.2k views
-