Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மனித உரிமை மீறல் தீவிர யுத்த முனைப்பு - இலங்கை மீது கவனத்தை திருப்ப காரணமென்கிறார் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் மனித உரிமை மீறல்களின் அதிகரிப்பும் மீண்டும் முனைப்பெடுத்திருக்கும் யுத்தமும் சமாதான செயற்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் ஸ்தம்பித நிலையுமே பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் பக்கம் தமது கவனத்தை திருப்பவும் கரிசனையுடன் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தவும் காரணமாக அமைந்தது என்று அந்த நாட்டின் உயர் ஸ்தானிகர் டொமினிக் சில்கொட் தெரிவித்தார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக எவ்வளவு தூரத்திற்கு கவலையடைந்துள்ளனர் என்பதன் வெளிப்பாடே அங்கு நடத்தப்பட்ட விவாதம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை நிலைவரம் தொடர்…

  2. விடுதலைப் புலிகளிடம் 17 வானூர்திகள்: கொழும்பு ஊடகம் ஜஞாயிற்றுக்கிழமைஇ 13 மே 2007இ 17:43 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 17 வான் தாக்குதல் வானூர்திகள் உள்ளதாகவும் அவற்றில் சில மிகவும் சக்தி வாய்ந்தவை எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் வசம் பல்வேறு வகையான 17 வானூர்திகள் உள்ளன அவற்றில் சில வானூர்திகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவர்கள் இலகு ரக வானூர்திகளின் புகைப்படங்களையே வெளியிட்டுள்ளனர். தங்கள் வசமுள்ள வலுவான வானூர்திகளின் புகைப்படங்களை வெளியிடவில்லை. இந்த வலிமை மிக்க வானூர்திகளை பெரும் சமர்களின் போது பயன்படுத்துவதற்காக பின்னிருப்பாக பேணி வருகின்றனர். …

  3. தமது விவகாரங்களைத் தாமே கையாளும் உரிமை தமிழர்களுக்கு உள்ளது. ரிச்சட் பௌச்சர். றுசவைவநn டில நுடடயடயn - ஆயல 13இ 2007 யவ 02:40 Pஆ தமது விவகாரங்களைத் தாமே கையாளும் உரிமை தமிழர்களுக்கு உள்ளது. என கூறியுள்ள தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி அமைச்சர் ரிச்சட்பௌச்சர். முறையான ஆட்சி நடக்கும் ஏழைநாடுகளுக்கு மட்டுமே அமெரிக்கா நிதியுதவி வழங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பிய அமெரிக்க உதவி அமைச்சர் ரிச்சட் பௌசர் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு இலங்கை விஜயம் குறித்து தெரிவித்தபோது மேற்கண்டாவாறு தெரிவித்துள்ளார். தனது இலங்கை விஜயம் குறித்தும் இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் அமெரிக்க உ…

  4. இனப்பிரச்சினை இலங்கையில் இல்லையென கூறுவதை அரசியல்வாதிகள் உடன்நிறுத்த வேண்டும் *மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கூறுகிறார் இனப்பிரச்சினையை பணம் சேர்க்கும் கருவியாக அரசியல்வாதிகள் பயன்படுத்துவதாக கவலை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், நாட்டின் நிலைவரம் ஆபிரிக்கா கண்டத்தைப் போன்று காணப்படுவதாகவும் தெரிவித்தார். இன்றைய அரசியல் சூழ்நிலை மற்றும் நிலைவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை, பயங்கரவாதப் பிரச்சினையே உள்ளதென அரசியல்வாதிகள் கூறுவதை முதலில் நிறுத்திவிட்டு, இனங்கள் மத்தியில் நிலவும் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் முன்வரவேண்டும். …

  5. யாழ். பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கொலை அச்சுறுத்தல் விடுத்து துண்டுப்பிரசுரம் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான பாடசாலைகளில் அதிபர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.நகரத்தில் உள்ள பிரதான பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் சில மாணவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று கூறி துண்டுப்பிரசுரம் ஒன்றும் விநியோகிக்கப்பட்டுள்ளது. விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் பட்டியலிடப்பட்டுள்ளோர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அதனைக் கைவிடாத நிலையில் அவர்கள் கொல்லப்படுவர் என்றும் கூறப்பட்டிருந்தது. இலங்கையைப் பாதுகாக்கும் தமிழ்க் கூட்டமைப்பு என்ற பெயரினால் இந்தத் துண்டுப்பிரசுரம் வெள்ளிக்கிழமை விநிய…

  6. மன்னாரில் படைநகர்வு; முறியடித்தனர் புலிகள் கிளிநொச்சி,மே13 மன்னார் மாவட்டத்தில் விளாத்திக் குளம் பகுதி ஊடாக பரசங்குளம் பகுதியை நோக்கி நேற்றுமுன்தினம் அதிகாலை ஒரு மணியளவில் முன்னேறிய படையினரின் நகர்வை முறியடித்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். கடும் ஷெல் தாக்குதலுடன் முன்னே றிய படையினருக்கும் தமது அணியின ருக்கும் இடையில் மோதல் இடம்பெற் றது என்றும் படையினரின் நகர்வு முறியடிக்கப்பட் டது என்றும் விடுதலைப் புலிகள் அறி வித்துள்ளனர். இத்தாக்குதல் குறித்து அரச தரப்பில் இருந்து இச்செய்தி எழுதப்படும் வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. உதயன்

  7. துரையப்பா பொதுவிளையாட்டு மைதானம் படையினரின் பயிற்சி தளமாகியுள்ளது. யாழ். கோட்டைப்பகுதி துரையப்பா பொதுவிளையாட்டு மைதானப்பகுதியில் அதிகாலை 5.00 மணித்தொடக்கம் காலை 8.00 மணிவரை படையினர் குவிக்கப்பட்டு பயிற்சி நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கனரக வாகனங்களில் கொண்டுவந்து இறக்கப்படும் நூற்றுக்கணக்கான படையினர் இப்பகுதியில் பயிற்சி நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு இருப்பதுடன் 53 ஆம் பிரிகேட் படையினரே தலையில் சிகப்பு ரிபனை கட்டி கொமாண்டோ பயிற்சிகளை எடுக்கின்றனர். இவர்கள் பெரும்சத்தம் இட்டுகத்தி பயிற்சியில் ஈடுபடுவதாகவும் பொதுமக்களின் பாவனைக்குரிய துரையப்பா விளையாட்டு மைதானம் யாழ். நூலக முன்வீதி மக்கள் பாவனைக்கு தடைசெய்யப்பட்டு பட…

  8. விடுதலைப் புலிகளின் பிந்திய விமானத் தாக்குதலால் "ஷெல்' நிறுவனத்துக்கு 70 மில்லியன் டொலர் நட்டம் கொழும்பு,மே13 விடுதலைப் புலிகளின் விமானங்கள் கடந்த 28ஆம் திகதி முத்துராஜவெலப் பகுதியில் அமைந்துள்ள "ஷெல் காஸ்' நிறுவனத்தின் மீது மேற்கொண்ட தாக்குத லினால் அந்த நிலையத்தின் தீயணைப்பு வசதிகள் முழுமையாக செயலிழந்துவிட் டன. இதனால் அந்த நிறுவனத்துக்கு சுமார் 70 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை அந்த நிறுவனத்தின் ஸ்ரீலங்கா இயக்குநர் ஹசான் மடானி தெரி வித்தார். நேற்றுக் கொழும்பில் நடத்திய செய்தி யாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டார். அவர் இது தொடர்பாக மேலும் தெரி வித்ததாவது ஆரம்ப கணக்கெடுப்பின்படி குண்டுத் தாக்குதலால் ஏற…

  9. விடுதலைப் புலிகளை வெளியேற்றிய பின்னர் கிழக்கில் தேர்தல்: கிழக்கு இராணுவத் தளபதி எதிர்வரும் சில நாட்களுக்குள் கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றிய பின்னர் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்காப் படையின் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண இராணுவத் தளபதி ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளதாவது: கிழக்கின் பல பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் தற்போது தொப்பிக்கல பகுதியில் உள்ளனர். வாகரைப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை மீளக்குடியமர்த்தும் வேலைகளை அரசாங்கம் நிறைவு செய்துள்ளது என்றார். இக…

  10. டொனால் பெரேரா மற்றும் சரத்பொன்சேகா யாழில் படை அதிகாரிகளுடன் ஆலோசனை சிறீலங்கா கூட்டுப்படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் டொனால் பெரேரா மற்றும் சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்ரினட் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் யாழ் குடாநாட்டுக்கான இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். நேற்று சனிக்கிழமை விமானம் மூலம் பலாலி கூட்டுப்படைத்தளம் சென்றடைந்த இவர்களை யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வரவேற்றார். இதனைத் தொடர்ந்து யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து படை உயர் அதிகாரிகளுடன் இவர்கள் ஆலோசனையை நடத்தியுள்ளனர். அத்துடன் யாழ் குடாநாட்டில் படையினரால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் பார்வையிட்டுள்ளனர். இதேநேரம் நேற்று நாகர்கோவில் மற்றும் தென்…

  11. புலிகளின் வான் பலத்தை முறியடிக்க அமெ. பாதுகாப்பு அதிகாரிகள் உதவுவர் உயர் மட்டக் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு கொழும்பு,மே13 விடுதலைப் புலிகளின் வான் படைப் பலத்தை முறியடிப்பது குறித்து இலங்கைப் படை அதிகாரி களுக்கு நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்காக, அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு நிபுணர்கள் அடுத்த வாரம் கொழும்பு வருகிறார்கள். இலங்கை அரசாங்கம் விடுத்த அவசர கோரிக்கையைத் தொடர்ந்தே அமெரிக்கப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள், புலனாய்வு நிபுணர்கள் கொண்ட குழு இங்கு வர இருப்பதாக அறியப்படுகிறது. ஹவாயில் அமைந்துள்ள அமெரிக்கா வின் பசுபிக் கட்டளைத் தளத்தைச் சேர்ந்த நிபுணர்களும் அதிகாரிகளுமே இங்கு வர வுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் வான் பலத்தை முறியடி…

  12. மாற்றமடைந்துவரும் சர்வதேச நிலைப்பாடு ` வாழ்வியல் இருப்புக்காகவும் நியாயமான உரிமைகள் வேண்டியும் ஈழத்தமிழர்கள் நடத்தும் விடுதலைப் போராட் டத்தை இனிமேலும் பயங்கரவாதச் சாயம் பூசி ஒதுக்கிவிட முடியாது. அந்தப் போராட்டத்தின் பின்னணியில் நீதியான அர்த்தபுஷ்டியான நியாயமான காரணங்களும் அர்த்தங் களும் ஆழமாக உள்ளன என்ற உண்மையை சர்வதேசம் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டது. இதனால் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் கொழும்பின் போக்குத் தொடர்பாக சர்வதேசத்துக்கு இருந்து வந்த கருத்தியல் நிலைப்பாட்டிலும் பெரிய மாற்றம் தென் படத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலை மாற்றப் போக் கைச் சகித்துக்கொள்ளமுடியாமல் சீறுகின்றது கொழும்பு. பௌத்த சிங்கள மேலாண்மைவாதச் சிந்தனையில் ஊறிப்போன கொழும்பு அதன் கார…

  13. இலங்கை நிலைவரங்களை மீண்டும் நெருங்கி வந்து அவதானிக்க ஆரம்பித்திருக்கும் சர்வதேச சமூகம் இலங்கையின் அரசியல் ஆடுகளம் இவ்வாரத்தில் அதிக பரபரப்பையும் கடும் விவாதங்களையும் உலக நாடுகளின் அவதானிப்பையும் கொண்டதாகக் காணப்பட்டது. ஆளும் தரப்பினரும் எதிர்க்கட்சிகளும் ஆடிவரும் அரசியல் கள ஆட்டங்களை மக்கள் ஆர்வமற்ற வெறும் பார்வையாளர்களாக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆளும் தரப்பினர் எடுக்கும் முடிவுகளும் விடாப்பிடியான செயற்பாடுகளும் தாங்கள் பலமான நிலையில் இருந்து வருவதாகவே எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், நாடு எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளும் மக்கள் கொண்டிருக்கும் கவலைகளும் ஆளும் தரப்பினர் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்மாறானவைகளாகவே இருந்து வருகின்றன. அவை இரண்டு அட…

    • 0 replies
    • 926 views
  14. கடத்தப்பட்ட மாணவர்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுங்கள்! மாவை சேனாதிராஜா எம்.பி. ஜனாதிபதிக்கு அவசர கடிதம் கொழும்பு, மே 12 யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட் டிருக்கும் பாடசாலை மாணவர்கள் பாதுகாப் பாக விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியிருக்கிறார். இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அவர் அனுப்பியிருக்கிறார். நான்கு மாணவர்களினதும் பெயர் விவ ரங்களைக் குறிப்பிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்திருப்பவையாவது: யாழ்ப்பாணத்தில் "கிறீன் காம்ப்' எனப் படும் முகாமில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினராலேயே பாடசாலை மாணவர்கள் கட…

  15. சிறிலங்காவிற்கான மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை அமெரிக்கா இடைநிறுத்தியது. சிறிலங்காவிற்கான மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை இடை நிறுவத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சிறீலங்காவிற்கான மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமெரிக்க தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலர் றிச்சட் ஏ பௌச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் நிகழும் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் காரணமாக இவ் நிதியுதவியை வழங்கமுடியாது உள்ளதால் இதனை இடைநிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் விமான சேவைகளின் இடைநிறுத்தம், சுற்றுலாப் பயணிகளின் வருகையின் குறைவும், வெளிநாட்டு உதவிகள் இடைநிறுத்தப்படுவதும் நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பு எனத் தெரிவித்தார். …

    • 7 replies
    • 1.9k views
  16. புதுக்குடியிருப்பில் மிக்-27 யுத்த விமானங்கள் 20 குண்டுகளை வீசின சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான மூன்று மிக் - 27 ரக யுத்தவிமானங்கள் கைவேலி புதுக்குடியிருப்பு பகுதி மீது மிலேச்சத்தனமான வான்வழித்தாக்குதல்களை கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்தன. இவை காலை 7.30 மணிக்கும் பின்னர் காலை 11.20 மணிக்குமாக இருதடைவைகள் 12 விமானக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தன. இரு மிக் - 27 ரக விமானங்கள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மேலும் 8 குண்டுகளை வீசியுள்ளதாகவும் தெரியவருகிறது. இத் தாக்குதலில் ஐந்து வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை இக்குண்டுத் தாக்குதலால் 500ற்கு மேற்பட்ட மாணவர்கள் கைவேலி கணேசா வித்தியாலய மாணவர்களும் பதற்றமடைந்து பதுக்கு குழ…

    • 0 replies
    • 724 views
  17. கருணா ஒட்டுக் குழுவின் 5 சடலங்களில் ஒன்று இனம் காணப்பட்டது. மட்டக்களப்பு கிரானில் கடந்த புதன்கிழமை மீட்கப்பட்ட ஒட்டுக் குழுவினரின் 5 சடலங்களில் ஒன்று கல்லாறைச் சேர்ந்த 31 வயதுடைய சிந்துஜன் ஒன்றழைக்கப்படும் ஜோன்சன் ஜெயகாந்தன் என்பவரது என அவரது அனைவி அடையாளம் காட்டியுள்ளார். கருணா ஒட்டுக் குழுவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவின் எதிரொலியாக பிள்ளையான் அணிக்கு ஆதரவாக இருந்த சிந்துஜன் உட்பட 5 பேர் கருணா அணியினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள எஞ்சிய 4 சடலங்களில் ஒன்று பிள்ளையான் அணியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது என நம்பப்படுகின்றது. பெரியகல்லாறிலுள்ள தனது வீட்டிலிருந்து களுவாஞ்சிக்குடியிலுள்ள கருணா ஒட்டுக் குழுவின் முகாமிற்கு…

    • 19 replies
    • 3.6k views
  18. பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற ஈழம் தொடர்பான வாதம். PART 1-- http://video.google.co.uk/videoplay?docid=...334915002856393 PART 2-- http://video.google.co.uk/videoplay?docid=...105496235307669 PART 3-- http://video.google.co.uk/videoplay?docid=...391142627496029 http://www.nitharsanam.com/

    • 0 replies
    • 809 views
  19. மக்கள் குடியிருப்புகள் மீது தொடர் கிபிர் விமானத் தாக்குதல். - பண்டார வன்னியன் Friday, 13 April 2007 11:11 மூன்று தடவைகள் புதுக்குடியிருப்பு பிரதேச வான் பரப்பிற்குள் நேற்று பிரவேசித்த சிறிலங்கா விமானப் படையின் மிக் -27 யுத்த விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து பத்து குண்டுகளை வீசியது. முதற் தடவையாக காலை 8.00 மணிக்கு மூன்று குண்டுகளை வீசியது இதனைத் தொடர்ந்து காலை 8.45 இற்கு மீண்டும் வந்த விமானங்கள் நான்கு குண்டுகளை வீசியது பின்னர் மூன்றாவது தடவையாக 11.10 இற்கு வந்த மிக் விமானங்கள் மூன்று குண்டுகளை வீசியது. இதனால் நேற்று புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ளவர்களும் அதனை அண்டிய பகுதியைச் சேர்ந்தவர்களும் பெரும் அச்சத்தில் காணப்பட்டனர். இத…

  20. சிறிலங்காவில் தற்பொழுது முதலீடுகளை மேற்கொள்வது ஆபத்தானது : வெளிநாட்டு முதலீட்டார்கள். விடுதலைப் புலிகளால் கொழும்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல்கள் மூலம், இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக ஏற்பட்டிருந்த பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல்களில் கொலன்னாவ எரிபொருள் களஞ்சிய நிலையம், முத்துராஜவெல ‘ஷெல்’ எரிவாயு உற்பத்தி நிறுவனம் மற்றும் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் ஆகியன பாதிப்புகளுக்குள்ளாகியிருந

  21. தமிழக மீனவர்களின் ஊடுருவலானது புலிகளின் தாக்குதலுக்கு உதவி செய்கிறது: சிறிலங்கா குற்றச்சாட்டு. சிறிலங்கா கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவுவதானது எமது இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உதவியாக இருக்கிறது என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக்கொல்வதாக இந்திய நாடாளுமன்றத்தில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.எகே.அந்தோணி கடந்த புதன்கிழமை பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இதனை மறுத்து இன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இரு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக் கொல்வதற்கு துல்லியமான எதுவித சாட்சியமும் இல்லை என்று தெரிவிக்கப்…

  22. வான்புலிகளைச் சமாளிக்க வாடகை மிக் - 29 ரக வானூர்தி வான் புலிகளின் தாக்குதல்களால் சிறிலங்காவில் உருவாகியிருக்கும் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காக மிக் - 29 ரக வானூர்தி ஒன்றை சிறிலங்கா வான்படை அவசரமாக வாடகைக்குப் பெற்றுக்கொள்ளவிருக்கின்றது. உக்ரேனிலிருந்து அதிநவீன மிக்-29 ரக வானூர்திகள் சிலவற்றைக் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்ற போதிலும், அவற்றைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்படும் என்பதால்தான் அவசரமாக வாடகைக்கு மிக்-29 ரக வானூர்தி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இப்போது இறங்கியிருக்கின்றது. மிக்-29 ரக வானூர்திகளைச் செலுத்துவதில் சிறிலங்கா வான்படையினருக்கு அனுபவம் இல்லாமையால், உக்ரேனிலிருந்து வானோடி…

    • 4 replies
    • 2k views
  23. மகிந்தவுடன் அங்கிலிக்கன் திருச்சபை ஆயர் சந்திப்பு [வெள்ளிக்கிழமை, 11 மே 2007, 14:01 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை அங்கிலிக்கன் திருச்சபையின் ஆயர் ரொவான் டக்ளஸ் வில்லியம்ஸ் சந்தித்துப் பேசினார். மகிந்தவின் அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை இச்சந்திப்பு நடைபெற்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அரச நிலைப்பாடுகள் விளக்கப்ப்டன. அதன் பின்னர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஆயர் ரொவான் டக்ளஸ் வில்லியம் கூறியதாவது: இலங்கையின் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பன்மைத் தன்மை கொண்ட அரசாங்கமாக இயங்கி வந்தமை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பன்மைத்தன்மையை மீள உருவாக்க முடியும். வேறு தீர்வ…

  24. குடாக்கடலில் மீன் பிடிக்க நேற்று அனுமதி குருநகர், மே 12 குருநகர் கடற்றொழிலாளர்கள் குடாக் கடலில் மீன்பிடிப்பதற்கு நேற்று வெள் ளிக்கிழமை படையினரால் மீண்டும் அனு மதிக்கப்பட்டார்கள். குடாக்கடலில் வெளிச்சக்கட்டையை அண்டிய பகுதி யில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம் பத்திற்கு உட்பட்ட கடற்பகுதியிலேயே மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டதாக மீன வர்கள் கூறினர். குடாக்கடல் பகுதியில் படையினரால் விதிக்கப்பட்ட கடல் எல் லைப் பகுதியும், மட்டுப்படுத்தப்பட்ட நேர அளவும் வழமையான முறையில் தொழில் செய்வதற்குப் போதாதென்று என்று மீனவர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன உதயன்

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.