ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143335 topics in this forum
-
சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் – சி.வி விக்னேஸ்வரன் சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சமஷ்டியை கோருபவர்கள் லண்டனில் போய் அதனை கோருமாறு சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். எங்களை லண்டனுக்கு போக சொன்னால் அவரை நாங்கள் போத்துக் கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும். பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல தமிழ் பெயரும் அல்ல. எனவே அவரை போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும்.“ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1324341
-
- 6 replies
- 1.3k views
-
-
நல்லூரில் வாள் வெட்டு ; இருவர் காயம் Published By: VISHNU 19 FEB, 2023 | 10:48 AM யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் 18 ஆம் திகதி சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/148543
-
- 0 replies
- 586 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சமிக்ஞை கிடைத்ததும் கோட்டாவின் அமைச்சரவையில் மாற்றம் !!! சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பில்லியன் டொலர் கடன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு மார்ச் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி கிடைக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கோட்டபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றுமாறு ஜனாதிபதிக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அமைப்புகள் கோரியுள்ளன. இந்நிலையில் விளையாட்ட…
-
- 0 replies
- 486 views
-
-
அமெரிக்க இராஜதந்திர தூதுக்குழுவின் திடீர் விஜயம் குறித்து நாட்டுக்கு அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் : சுதந்திரக் கட்சி Published By: NANTHINI 18 FEB, 2023 | 08:06 PM (எம்.மனோசித்ரா) அமெரிக்க இராஜதந்திர தூதுக்குழுவின் திடீர் வருகைக்கான காரணம் என்ன என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். ஜே.வி.பி. ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் அதேவேளை, அவற்றை இந்திய, அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன் முடக்குவதற்கு அரசாங்கம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதன் பிரதிபலன் 1983 கலவரத்தை விட மோசமானதாகவே இருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தா…
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
சம்பூர் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தின் நிர்வாக செலவுகளுக்காக ஒரு கோடியே 11 இலட்சம் நிதி ஒதுக்கீடு Published By: DIGITAL DESK 5 18 FEB, 2023 | 12:36 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) திருகோணமலையின் சம்பூரில் அமைந்துள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தில் செயற்திட்ட நடவடிக்கைகள் எதுவும் நடத்தப்படாதபோதும், ஒரு கோடியே 11 இலட்சத்து 87 ஆயிரத்து 455 ரூபா அதன் நிர்வாகச் செலவுக்காக செலவிட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பூரில் 50 மெகா வொட் சூரிய மின் உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்காக 2018 ஆம் ஆண்டு நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றி…
-
- 1 reply
- 613 views
- 1 follower
-
-
உக்கும் கழிவுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்திட்டம் Published By: DIGITAL DESK 5 18 FEB, 2023 | 12:45 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) இலங்கையில் முதன்முறையாக அரச நிறுவனமொன்று உக்கும் கழிவுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளது. இந்த செயற்திட்டத்தின் மூலமாக நாளாந்தம் நாட்டின் தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பிற்கு 35 கிலோ வொட் மின்சாரம் சேர்க்கப்படவுள்ளது. இந்த செயற்பாட்டை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோரின் தலைமையில் கட…
-
- 1 reply
- 369 views
- 1 follower
-
-
ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் - இலங்கையின் ஆதரவை கோரியது ஜெர்மனி Published By: RAJEEBAN 18 FEB, 2023 | 04:36 PM ரஷ்யாவுக்கு எதிரான ஐநா தீர்மானத்துக்கு இலங்கை ஆதரவளிக்க வேணடும் என ஜெர்மனி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின்போது இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜெர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் ரம்சோர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இலங்கை கடந்த வருடம் தவிர்த்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/148525
-
- 1 reply
- 328 views
- 1 follower
-
-
சிவராத்திரியில் ஏற்றப்படும் தீப ஒளியால் துன்பங்கள் நீங்கி, வளமான இலங்கையின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி Published By: NANTHINI 18 FEB, 2023 | 04:19 PM நமது உறவுகளை வலுப்படுத்த முடிவு செய்தால், நாடு எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் கடந்து, அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பு நிறைந்த நாட்டை நிச்சயமாக கட்டியெழுப்ப முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில், மஹா சிவராத்திரி விரதத்தை பக்தியோடு அனுஷ்டிக்கும் அனைத்து இந்து மக்களின் வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திக்கிறேன். உலகெங…
-
- 1 reply
- 603 views
- 1 follower
-
-
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு அரிதாகவே கருதப்படும் நிலுவைத் தொகையில் கடன் வழங்கும் கொள்கையின் கீழ் இலங்கைக்கு உரிய கடன் வசதியை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு நாடு தனது கடனை மறுசீரமைக்க நல்ல நம்பிக்கையுடன் முயற்சி செய்தால், பொருத்தமான கொள்கைகளைப் பின்பற்றி, சர்வதேச நாணய நிதியம் நிலுவைத் கடன் கொள்கையின் கீழ் கடன்களை வழங்குகிறது. எவ்வாறாயினும், கடனை மறுசீரமைப்பது தொடர்பான சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் செயற்படுவார்கள் எனவும், அதற்கான நிதியத்தின் ஆதரவை வழங்குவதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இப்போதும், இலங்கையின் கடனை மறுசீரமைப்பது…
-
- 0 replies
- 268 views
-
-
விபத்தில் உயிரிழந்த மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் கெளரவிப்பு ! Published By: NANTHINI 18 FEB, 2023 | 02:58 PM விபத்தில் உயிரிழந்த தமது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அதிதிகளாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். சடுதியான இறப்பின் பின்னர் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை தானம் செய்வதனால், சிறுநீரக தேவையை எதிர்பார்த்து, அவதியுறும் இன்னொருவருக்கு உயிர் வாழ சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அந்த வகையில் இச்சிறுநீரக தானத்தை உயிரிழந்தவரது பெற்றோரின் ஒப்புதலுடன், அவர்களது விருப்பத்தின் பெயரில் இன்னொருவருக்கு சிறுநீரகம் தானமாக வழங்கப்பட்ட நிலையில், சிறுநீரக செயலிழப்பி…
-
- 0 replies
- 639 views
- 1 follower
-
-
சிவராத்திரியன்று மாட்டுக் கன்றின் தலையை வெட்டி வீசிய விஷமிகள் !!! சிவராத்திரி தினமான இன்று மாட்டு கன்று ஒன்றினை வெட்டி, அதன் தலையையும், இதர மாமிச கழிவுகளையும் வீதியில் விஷமிகள் வீசி சென்றுள்ளனர். கோண்டாவில், முத்தட்டுமட வீதியில் காலை மாமிச கழிவுகள் வீசப்பட்டு காணப்பட்டமையை அடுத்து, அப்பகுதி மக்களால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , நல்லூர் பிரதேச சபை கழிவகற்றும் வாகனத்தின் ஊடாக கழிவுகளை அகற்றினர். சிவராத்திரி விரத நாள் அன்று மாட்டு கன்றினை வெட்டி அதன் தலையை வீசி சென்று இருந்தமை அப்பகுதி மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விஷமிகளின் இந்த செயற்…
-
- 1 reply
- 612 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வழங்கிய மனிதாபிமான உதவிகள் குறித்து முன்னாள் கடற்படைத்தளபதி நினைவுகூரல் 18 Feb, 2023 | 10:02 AM கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் குவெட்டாவின் கட்டளை, பணியாளர்கள் கல்லூரியில் பயின்ற இலங்கை பட்டதாரிகளுக்கிடையே மற்றுமொரு ஒன்றுகூடல் மற்றும் இராப்போசன விருந்துபசார நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. பாகிஸ்தான் கூட்டுப்படைத்தலைவர்கள் குழுவின் பிரதானி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சாவின் இலங்கை விஜயத்துடன் இணைந்ததாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இராப்போசன விருந்தில் இலங்கை இராணுவத்த…
-
- 3 replies
- 670 views
-
-
மார்ச் 9 இல் தேர்தல் நடைபெறாது – தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த இயலாது என உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போதிய நிதி கிடைக்காத காரணத்தினால், தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் உள்ள சிக்கல்களை குறிப்பிடவுள்ளதாக அதன் தலைவர் கூறியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு முன்னதாக அறிவித்திருந்தது. தபால் வாக்குச்சீட்டுகள் அரச அச்சகத்தில் இருந்து சரியான நேரத்தில் கிடைக்காததால், தபால் மூல வாக்குப்பதிவு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, உ…
-
- 1 reply
- 341 views
-
-
மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் முத்துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் எண்.61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டது. பெப்ரவரி 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் குறித்த வர்த்தமானியில் படி, மின்சாரம், பெட்ரோலியம், எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன. மேலும் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சேவ…
-
- 1 reply
- 275 views
-
-
சீனா இல்லாமல் இலங்கைக்கு உதவுவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலனை ! சீனாவின் கடன் மறுசீரமைப்பு குறித்த உத்தரவாதம் இல்லாமல் இலங்கைக்கு கடனுதவியை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருகின்றது. சீனாவின் முறையான உத்தரவாதம் கிடைக்காவிடினும் இலங்கைக்கான கடனை அங்கீகரிக்க சர்வதேச நாணய நிதியம் அதன் கொள்கையைப் பயன்படுத்தலாம். நிதி தேவைப்படும் ஒரு நாட்டிற்கான உதவியை கடனளிபவர் தடுபின் அதனை தடுப்பதற்காக இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கைக்கான நிதியுதவியை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம், அதன் கடன் வழங்குநர்களிடம் இருந்து நிதி உத்தரவாதத்தை எதிர்பார்த்திருந்தது. இருப்பினும் 10 வருடங்களுக்கு கடன் …
-
- 0 replies
- 204 views
-
-
மசாஜ் நிலையத்தில் 22 வயதான அமெரிக்க யுவதி பாலியல் துஷ்பிரயோகம் – மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடு! ஹிக்கடுவையில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றின் ஊழியரினால் தனது 22 வயது மகள் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக அமெரிக்கர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கையின் சுற்றுலா பொலிஸ் பிரிவின் பணிப்பாளரிடம் அமெரிக்காவிலிருந்து மின்னஞ்சல் மூலம் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி கடந்த டிசெம்பர் மாதம் தனது பெற்றோருடன் இலங்கைக்கு வந்து ஹிக்கடுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், டிசம்பர் 26ஆம் திகதி தனது தாயுடன் ஹிக்கடுவையில் உள்ள மசாஜ் மையத்தி…
-
- 2 replies
- 725 views
- 1 follower
-
-
அரசாங்கத்துடன் இணைந்து காட்டிக்கொடுக்கும் அங்கஜன் : செ.கஜேந்திரன் காட்டம் இனப்படுகொலை செய்கின்ற சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து காட்டிக்கொடுக்கின்ற வேலைகளைச் செய்கின்ற அங்கஜன் இராமநாதன், தங்களை நோக்கி கேள்வி எழுப்புவதற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சுதந்திரத் தினத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு ஆடைகளைக் கிழித்து சிறைக்குச் சென்று ஒரு நாடகமாடியிருந்ததாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக ஊடகங்கள் நேற்றைய தினம் (16.02.2023) எழுப்பிய கேள்விக்கே செ.கஜேந்திரன் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார். இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த 30 வருடங்களாகக் காட்டிக்கொடுக்கின்ற…
-
- 2 replies
- 758 views
-
-
திருடப்பட்ட முச்சக்கர வண்டியினை விற்பனைக்கு எடுத்துச் சென்ற பொலிஸ் அதிகாரி கைது! திருடப்பட்ட முச்சக்கர வண்டியினை விற்பனைக்கு எடுத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பயாகல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவில் சாரதியாக கடமையாற்றியவர் என களுத்துறை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, பெற்ற சம்பளம் கடனை அடைப்பதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இந்த திருட்டினை செய்ய தூண்டியதாக தெரித்துள்ளார். https://athavannews.com/2023/1324402
-
- 3 replies
- 752 views
-
-
இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருகின்றது: அர்ஜீன் சம்பத்! இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருவதாக தமிழக இந்துமக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தற்போதைய பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பன்னாட்டு உதவிகள் இங்கே கிடைக்கப்பெறுகின்றது. இந்திய அரசும் பெரியளவில் இலங்கைக்கு உதவி வருகின்றது. குறிப்பாக வீதிகள், தொடரூந்து வீதிகள், வீட்டுத்திட்டம் அத்துடன் கடன்கள் என்று பி…
-
- 2 replies
- 718 views
-
-
இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மீதான முடக்கம் சிவில் சமூகங்களின் சுதந்திரத்தை பாதித்துள்ளது - சர்வதேச மன்னிப்புச்சபை Published By: VISHNU 17 FEB, 2023 | 01:21 PM (நா.தனுஜா) இலங்கை அரசாங்கம் கடந்த இருவருடகாலமாகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை மிகையாக முடக்கிவந்திருப்பதுடன் அதன்விளைவாக சிவில் சமூகங்களின் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு சமூகத்திலும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன இன்றியமையாதவையாகும். அவற்றுக்கு மதிப்பளிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் அதேவேளை, அவை உரியவாறு பூர்த்திசெய்…
-
- 1 reply
- 948 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவது கடினமாகும் என்று என நிதி அமைச்சின் செயலாளர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக தேர்தலுக்கு நிதி வழங்குவது கடினமாகும் என நிதி அமைச்சின் செயலாளர் கூறியதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளை பேணுவதற்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் எடுத்த நிர்வாக தீர்மானத்தையும் நிதி அமைச்சின் செயலாளர் ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று முற்பகல் அறிவித்தது. எதிர்வரும் 22, 23, 24 மற…
-
- 0 replies
- 135 views
-
-
(நா.தனுஜா) இலங்கையைப் பொறுத்தமட்டில் அடுத்த சில மாதங்கள் மிகமுக்கியமானவையாகும். அதன்படி இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுவந்த மனிதாபிமானத்தேவைகள் மற்றும் முன்னுரிமைக்குரிய விடயங்கள் தொடர்பான செயற்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவிற்குவரும் நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான மனிதாபிமான செயற்திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுவருவதாக மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை முகங்கொடுத்திருக்கும் பல்பரிமாண நெருக்கடி தொடர்பில் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் வெளியிட்டுள்ள நிலைவர அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப…
-
- 0 replies
- 590 views
-
-
இந்திய நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் - ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் Published By: VISHNU 17 FEB, 2023 | 01:43 PM (நா.தனுஜா) இந்தியாவின் இரு தனியார் நிறுவனங்களிடமிருந்து மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு எதிராக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் வியாழக்கிழமை (16) தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில் இந்திய தனியார் நிறுவனங்களிடமிருந்து மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்யும் விவகாரத்துடன் …
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவேன் - பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் Published By: VISHNU 15 FEB, 2023 | 03:20 PM (இராஜதுரை ஹஷான்) ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் எனது அனுமதி இல்லாமல் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் மின்கட்டணத்தை இன்று முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழவின் மூன்று உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவேன் என இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 24 மணித்தியாலங்களும் தடை…
-
- 2 replies
- 547 views
- 1 follower
-
-
வருமான வரி அதிகரிப்பு விவகாரம்; -மார்ச் முதலாம் திகதி பாரிய தொழிற்சங்க போராட்டம் - தொழிற்சங்கங்கள் Published By: RAJEEBAN 17 FEB, 2023 | 02:52 PM வருமான வரி அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் உரிய பதில்களை வழங்காவிட்டால் மார்ச் முதலாம் திகதி நாடளாவிய ரீதியில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. அதிக வருமானம் ஈட்டும் அரசாங்க ஊழியர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. பல்கலைகழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். கல்வி சக்திவலு துறைமுகம் சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்களும் அ…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-