Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா அரசிற்கு கடுமையான செய்திகளை வழங்கியிருக்கும் பௌச்சர் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி, மனித உரிமைகளை மேம்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் உறுதி செய்யும் படி அமெரிக்காவின் பிரதி வெளியுறவுச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடுமையான வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கைக்கான தனது மூன்று நாள் பயணத்தின் முடிவின் போது ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது. நான் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் கொண்டலீசா றைஸ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இலங்கை தொடர்பாக தொடர்ச்சியான சந்திப்பு…

    • 4 replies
    • 1.6k views
  2. துணிவிருந்தால் வெளியே வந்து வாழ்த்தட்டும் பார்க்கலாம்: பிக்கு சவால்! கொழும்பு, மே 10 புலிகளின் வான்படைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் நாடாளுமன்றில் வாழ்த்துக் கூறியமைக்காக அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண. எல்லாவெல மேதானந்த தேரர் நேற்று நாடாளுமன்றில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். முடிந்தால் இதே வார்த்தையை நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்து சொல்லட்டும் பார்க்கலாம் என்றும் அவர் கஜேந்திரனுக்கு சவால் விட்டார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தேரர் மேலும் கூறியதாவது: பயங்கரவாதியான த…

    • 18 replies
    • 4.6k views
  3. சிறிலங்கா நாடாளுமன்றத்திலிருந்து நா.உ. கஜேந்திரன் வெளியேற்றப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்ற கூட்டத் தொடரிலிருந்து சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.லொக்கு பண்டாராவினால் வெளியேற்றப்பட்டார். நேற்று நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் தொடர்பாக கஜேந்திரன் ஆற்றிய உரை நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. கஜேந்திரனின் உரையை ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடுமையாக எதிர்த்திருந்தார். கஜேந்திரனின் உரையானது நாட்டின் 6 ஆவது யாப்பு விதிகளை மீறியுள்ளதாக கூறிய சபாநாயகர், கஜேந்திரனை சபையிலிருந்து வெளியேற்றினார். ஜே.வி.பியின…

    • 8 replies
    • 2.1k views
  4. பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் - இன்று லண்டன் தூதரகத்தில் ஆலோசனை சிறீலங்கா விடயங்களில் பிரித்தானியா தலையிடுவது தொடர்பாக லன்டனிலுள்ள சிறீலங்கா தூதரகத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற விவாதத்தினால் கலக்கமடைந்துள்ள சிறீலங்கா அரசு, பிரித்தானியாவிலுள்ள சிங்கள, மற்றும் தேசவிரோத தமிழ் சக்திகள் மூலம் பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. இது பற்றியும் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட இருக்கின்றது. தம…

    • 0 replies
    • 890 views
  5. வெள்ளி 11-05-2007 02:44 மணி தமிழீழம் [தாயகன்] அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு - மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அமைத்தல் அவசியம் என, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சிறீலங்கா அரசுத் தலைவருடனான சந்திப்பில், அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அவசியத்தை வலியுறுத்துமாறும், றிச்சட் பௌச்சரிடம் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் ஏற்கனவே கேட்டிருந்தது. அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர் றிச்சட் பௌச்சரின் சிறீலங்காவிற்கான பயணத்தின் ஊடாக மனித உரிமை விடய…

  6. சிங்கள நாட்டின் மிச்சம் மீதியையும் பிடுங்கிச் செல்லப்போகும் மஹிந்த குடும்பம் -குயின்ரஸ் துரைசிங்கம் (கனடா)- கானமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி, தன் சிறகையும் விரித்தாடி, தானும் மயில் என்று கற்பனையில் மகிழ்வடைந்த இலக்கியக் கதைபோல், இலங்கையை ஒரு இஸ்ரேல் நாடு என்று கற்பனை பண்ணிக்கொண்டு, தன்னை பிறிதொரு துட்டகைமுனு என்று தானே புகழ்பாடிக்கொண்டு, எழுந்தமானத்திற்கு தமிழர் தாயகத்தைத் துவம்சம் பண்ணப் புறப்பட்ட மகிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்ப சோதரர்களும், கனவு கலைந்து நிஜவுலகிற்குள் இடது காலை எடுத்து வைத்திருக்கிறார்கள். தமிழினத்தையும் தமிழ் மண்ணையும் தமிழ் நாகரீகத்தையும் தமிழ் விழுமியங்களையும் மட்டுமல்லாது, தமிழ் உணர்வுகளையும் தமிழரிடமிருந்து அப்புறப்படுத்தி, …

    • 1 reply
    • 1.5k views
  7. சம உரிமை, சுயநிர்ணயம் என்பன தீர்வுக்கான அடித்தளம்: அமெரிக்காவிடம் யாழ் ஆயர் தெரிவிப்பு யாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை சென்றிருந்த அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சருடன் யாழ். பொது நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பில் யாழ். ஆயர் தோமஸ் செந்தரநாயகம் ஆண்டகையும் கலந்து கொண்டார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பில் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்கும் கலந்து கொண்டார். இச்சந்திப்பு தொடர்பாக யாழ். ஆயர் இல்லத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை: இலங்கை இனப்பிரச்சனை தீர்வுக்கான ஒரு பொதியாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் வெளியிடப்பட்ட திட்டம், தமிழர்களின் நியாயமான அபிலாசைகள் எதனையும…

    • 0 replies
    • 844 views
  8. வியாழன் 10-05-2007 19:07 மணி தமிழீழம் [செந்தமிழ்] முல்லைதீவில் பகுதியில் வான்வெளித் தாக்குதல்கள் அண்மைக்காலமாக சிறீலங்கா வான்படைகளின் தாக்குதல்கள் குறைவடைந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் சிறீலங்கா வான்படைகளுக்குச் சொந்தமான மிக்-27 மிகையொலி விமானங்கள் முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்புக்களை மையப்படுத்தி வான் தாக்குதலை நடத்தியுள்ளன. மிக உயரத்தில் பறப்புக்களை மேற்கொண்டவாறு தாக்குதுலை நடத்திவிட்டு சென்றன. இதன் போது ஏற்பட்ட தேசவிபரங்கள் தெரியவரவில்லை. நன்றி - பதிவு

  9. குமரி மீனவர்களைக் குறி வைத்து அடித்த இலங்கைக் கடற்படை - கொதித்துக் கிடக்கும் மீனவர்கள் எப்போதெல்லாம் இலங்கையில் விடுதலைப்புலிகள் விஸ்வரூபம் எடுக்கிறார்களோ, அப்போதெல்லாம் தங்களின் ஆத்திரத்தை, தமிழக மீனவர்கள் மீது காட்டுவது சிங்கள கடற்படையின் வாடிக்கைதானாம். அந்த வகையில் முதன்முறையாக விடுதலைப்புலிகளின் விமானப்படைத்திறன் வெளிப்பட்டிருக்கும் வேளையில், சிங்கள கடற்படையினரும் கொத்தாக ஐந்து தமிழக மீனவர்களின் உயிர்களைக் குடித்து, தங்களின் ரத்தப்பசியைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்

  10. சுட்டது புதினம் சம உரிமை, சுயநிர்ணயம் என்பன தீர்வுக்கான அடித்தளம்: அமெரிக்காவிடம் யாழ் ஆயர் தெரிவிப்பு [வியாழக்கிழமை, 10 மே 2007, 21:26 ஈழம்] [காவலூர் சங்கீதன்] யாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை சென்றிருந்த அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சருடன் யாழ். பொது நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பில் யாழ். ஆயர் தோமஸ் செந்தரநாயகம் ஆண்டகையும் கலந்து கொண்டார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பில் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்கும் கலந்து கொண்டார். இச்சந்திப்பு தொடர்பாக யாழ். ஆயர் இல்லத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை: இலங்கை இனப்பிரச்சனை தீர்வுக்கான ஒரு பொதியாக, சிறிலங்கா சுதந்த…

  11. கொழும்பு சிறைச்சாலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஐவர் உண்ணாவிரதம் [வியாழக்கிழமை, 10 மே 2007, 19:01 ஈழம்] [க.நித்தியா] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தமிழகத்தைச் சேர்ந்து ஐவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள இவர்கள், உடனடியாக தம்மை விடுதலை செய்யக்கோரியும், தமது நிலை குறித்து தமிழக அரசு கவனம் செலுத்த வலிறுத்தியுமே இப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தமிழகம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த றீகன், யாக்ரூப், சுரேஸ், இராமகிருஸ்ண் ஆகியோருட…

  12. வியாழன் 10-05-2007 16:35 மணி தமிழீழம் [செந்தமிழ்] தமிழீழ சிறுவர் பாதுகாப்பு வழங்குரிமைச் சபையின் அவரச வேண்டுகோள் சிறுவர் பாதுகாப்பு வழங்குரிமைச் சபை தமிழீழம் அவரச வேண்டுகோள் வன்னிப் பெருநிலப்பரப்பினுள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட வயது குறைந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு 2006 ஆம் ஆண்டு சனவரி மாதம் அமுலுக்கு வந்த தமிழீழச் சிறுவர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்துவதைச் சிறுவர் பாதுகாப்பு வழங்குரிமைச் சபை கண்காணித்து வருகின்றது. இதனுடைய முக்கிய பணியாக வயது குறைந்த சிறுவர்களை விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கி மீளவும் அவர்களை குடும்பத்துடன் இணைந்து வருகின்றது. இதன் அடிப்படையில் 1990 ஆம் ஆண்டிலிலும் அதற்குப் பின்பு பிறந்…

  13. புலிகளின் விமானங்களை வலை வீசி பிடிக்க முடியுமா? கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது புலிகளுக்கு வழங்கப்பட்ட நிதியை கொண்டு கொள்வனவு செய்த விமானங்களை பயன்படுத்தியே இன்று புலிகள் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டனர். அந்த விமானங்களை வலை வீசி பிடிக்க போவதாக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். அப்படி வலை வீசி பிடிக்க முடியுமா? என்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார். அவசரகாலச் சட்டத்தை எதிர்க்கட்சி சார்பாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புலிகள் விமானத்தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் அதனால் நாட்டின் பொருளாதாரம், மக்களின் இயல்பு வாழ்க்கை சீர் குலைந்தமைக்கும் இந்த அரசாங்கம் பொறுப்…

  14. கொழும்பு ஊர்வலத்தில் ஜே.வி.பி – பொலிஸார் இடையே முறுகல். Written by Ellalan - May 10, 2007 at 10:09 AM கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளை சந்திக்க விரும்பும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு அவருடைய அலுவலக வாசலில் வந்து காத்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க முடியாமல் போனது கண்டனத்துக்குரியது என ஜே. வி. பி.யின் விமல் வீரவன்ச தெரிவிதிருக்கின்றார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிறிலங்கா அரசுக்கு எதிராக தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தும் பிரித்தானிய நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டியும் ஜே. வி. பி. யினர் நேற்று பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது த…

  15. யாழ். எம்.பி. கஜேந்திரனை கைது செய்யவேண்டும் ஜாதிக ஹெல உறுமய [Thursday May 10 2007 01:27:12 AM GMT] [virakesari.lk] தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செல்வராஜா கஜேந்திரனை கைது செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பியுமான எல்லாவல மேதானந்த தேரர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.எல்லாவல மேதானந்த தேரர் உரையாற்றுவதற்கு முன்பாக கஜேந்திரன் எம்.பி உரையாற்றினார். அவர் தமதுரையில், தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைகளும் புலிகளிடம் இருக்கின்றன. அந்தப் படைகள் எமது மக்களின் உரிமைகளுக்காகவும், எதி…

  16. சு.க.யோசனையை சபையில் கிழித்தெறிந்தார் யாழ். எம்.பி அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனையை சபையில் கிழித்து எறிந்தார். கடந்த 50 ஆண்டுகாலத்திற்கு முன்னர் பரீட்சிக்கப்பட்டு கைவிடப்பட்ட யோசனையை சுதந்திரக்கட்சி மீண்டும் தூசிதட்டி கொண்டு வந்ததன் மூலம் அவர்களின் பேரினவாத சிந்தனை வெளிப்பட்டு நிற்கின்றது என்று கூறி காரசாரமாக விமர்சித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்: தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கொச்சைப்படுத்திபேரினவாதத்த

  17. யாழ். மாணவர்களின் பிரச்சினைகளை நன்கறிவேன்'' யாழ்ப்பாணம், மே 10 ""யாழ்.மாவட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர்வதில் உள்ள பிரச்சினைகளை நன்கு அறிவேன்.'' யாழ்.வந்த அமெரிக்க ராஜாங்க அமைச் சர் றிச்சார்ட் பௌச்சர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்.பொது நூலகத்தில் நேற்று நடைபெற்ற ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசுகையில் இவ்வாறு கூறினார். யு.எஸ்.எயிட் நிறுவன உதவியுடன் நடத்தப்பட்டு வரும் இப் பயிற்சி வகுப்பில் பேசுகையில் அவர் மேலும் கூறியதாவது: யாழ்.மக்களின் துன்பதுயரங்களை நான் நன்கு அறிந்துள்ளேன். மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மாணவர்கள் கல்வியைத் தொடர் வதில் ஏற்பட்டுவரும் பிரச்சினைகளை யும் நன்கு அறிந்துள்ளேன் என்றும் அவர் சொன்னார் uthayan

  18. மேலதிக பாதுகாப்பு கோரி மகிந்தவுக்கு சந்திரிகா கடிதம் [புதன்கிழமை, 9 மே 2007, 17:08 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க தனக்கு மேலதிக பாதுகாப்பு அளிக்கக் கோரி மகிந்த் ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் அக்கடிதத்துக்கு மகிந்தவிடமிருந்து எதுவித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்று சந்திரிகாவின் செயலாளர் பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேராவுக்கு சந்திரிகாவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நிமல் சந்திரசிறி, பாதுகாப்பு தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்துக்குப் பதில் அனுப்பியுள்ள விக்டர் பெரேரா, அதிகபட்சமாக 7 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இருப்…

  19. மனித உரிமை மீறல்களை நிறுத்த வெளிநாடுகள் அக்கறையுடன் உதவ வேண்டும் பொது அமைப்புகள் பௌச்சரிடம் வலியுறுத்து யாழ்ப்பாணம்,மே 10 குடாநாட்டில் மோசமடைந்துள்ள கடத்தல், கொலைகள், கைதுகள் போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை நிறுத்த வெளிநாடுகள் அக்கறையுடன் உதவ வேண்டும் என்று பொது அமைப்பு கள் வலியுறுத்தியுள்ளன. யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஒரு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சர் றிச்சர்ட் பௌசருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் மேற்கண்டவாறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். யாழ். பஸ்ரியன் ஹோட்டலில் நடந்த இச் சந்திப்பில் பொது அமைப்புப் பிரதிநிதிகள் வலியுறுத்திய முக்கிய விடயங்கள் வருமாறு: * குடாநாட்டில் ஊரடங்கு நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்த…

  20. இணைத்தலைமை நாடுகளின் மாநாடு நாளை சிறீலங்காவிற்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் நாளை கொழும்பில் சந்திக்கவுள்ளனர். அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர் றிச்சட் பௌச்சர் சிறீலங்காவிற்குப் பயணம் செய்துள்ள நிலையில், றிச்சட் பௌச்சர் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. ஜப்பான், நோர்வே, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியத் தூதரகத்தை ஆதாரம்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை இனப் பிரச்சினை விடயத்தில் அண்மைக் காலமாக அமைதிப் போக்கை கடைப்பிடித்துவந்த இணைத்தலைமை நாடுகள், மீண்டும் தமது சமாதான முயற்சிகளையும், அதற்கான அழுத்தங்களையும் ஆரம்பித்துள்ளன. சிறீலங…

  21. யாழில் ரிச்சர்ட் பௌச்சர் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் இன்று யாழ்ப்பாணம் சென்றடைந்தார். யாழ். பலாலி வான்படைத் தளத்துக்கு இன்று புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் சிறப்பு வானூர்தி மூலம் ரிச்சர்ட் பௌச்சர் சென்றடைந்தார். அதன் பின்னர் முற்பகல் 11.15 மணியளவில் பலாலி சிறிலங்கா படைத் தலைமையகத்தில் சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகளுடன் ரிச்சர்ட் பௌச்சர் ஆலோசனை நடத்தினார். யாழ். அரச செயலகத்துக்குச் சென்று அரச அதிபர் கணேசையும் ரிச்சர்ட் பௌச்சர் சந்தித்துப் பேசினார். யாழ். மாவட்ட நிலைமைகள் குறித்து ஆராயப்பட்ட இச்சந்திப்பில் அரசாங்க உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். யாழ். நிலைமைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை அமெரிக்கப் …

  22. விடுதலைப் புலிகளை பலப்படுத்தி வரும் ராஜபக்ச குடும்பம்: ஐ.தே.க. [வியாழக்கிழமை, 10 மே 2007, 06:36 ஈழம்] [அ.அருணாசலம்] எந்தவொரு உருப்படியான இராணுவ திட்டங்கள் இல்லாமலும், உயர் இராணுவ அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெறாமலும் மகிந்த அரசாங்கம், போரை நடத்தி வருவதுடன், ராஜபக்ச குடும்பம் விடுதலைப் புலிகளை பலப்படுத்தி வருகின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளை ராஜபக்ச குடும்பம் பலப்படுத்தி வருவதுடன் பேச்சுவார்த்தை மேசையில் அரசாங்கம், பலவீனப்பட்டும் வருகின்றது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின் போது விடுதலைப் புலிகள் மக்க…

  23. 'தமிழக அரசோடு முழு மனதுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்': சு.ப.தமிழ்ச்செல்வன் "எத்தனை முறை தேவைப்பட்டாலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்ழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது வீணாகப் பழிசுமத்தி தப்பித்துப்போக வாய்பளித்து விடக்கூடாது." தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியின் முழு விபரம் வருமாறு: "குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரை புலிகளுக்குச் சொந்தமான 'மரியா' என்ற படகில் வந்து சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை கடத்திச் சென்று தங்கள் முகா…

  24. புதன் 09-05-2007 21:29 மணி தமிழீழம் [மயூரன்] பாராளுமன்றில் வான்புலிகளின் தாக்குதலுக்கு த.தே.கூ வாழ்த்துத் தெரிவிப்பு வான்புலிகளின் வான்வெளித் தாக்குதல் தொடர்பான விவாதம் இன்று சிறீலங்காப் பாராளுமன்றில் இடம்பெற்றது. இதனைதத் தொடர்ந்து பாராளுமன்றில் பெரும் அமளிதுமளி இடம்பெற்றது. இங்கு நிமால் சிறீ பாலடி சில்வாவுக்கும் ரவி கருணாயக்கவுக்கும் இடையில் பலத்த வாக்குவாதங்கள் இடம்பெற்றன. இன்று வான்புலிகள் தொடர்பான விவாதம் மிகவும் சூடாக இடம்பெற்ற வேளையில் ஆளும் கட்சியினர் கொதித்த வண்ணம் காணப்பட்டனர். எதிர்க்கட்சி அரசாங்கத்தின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி நையாண்டி பண்ணிக்கொண்டிருந்த வேளையில் ஆளும் கட்சியால் சரியான பதில் வழங்க முடியாத நேரத்தில் தமிழ்த் தேசியக் கூ…

  25. பிரித்தானியாவுக்கு எதிரான பரப்புரைகள், ஆர்ப்பாட்டங்கள் அர்த்தமற்றது - பிரித்தானிய இராஜதந்தரி கடந்தவாரம் இலங்கை இனப்பிரச்சினை மற்றும் அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விடயங்களை பிரித்தானிய பாராளுமன்றில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பிரேரனைக்கு பிரித்தானியா உத்தியோகபூர்வ கருத்துகளை இதுவரை வழங்கவில்லை, உத்தியோகபூர்வமாக சிறீலங்காவுடன் தொடர்புகளை பேணவில்லை என பிரித்தானிய இராஜதந்திரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிறீலங்காவில் பிரித்தானியாவுக்கு எதிராக முன்னெடுக்கும் பரப்புரைகள், ஆர்ப்பாட்டங்கள் எந்தவகையிலும் அர்த்தமற்றது எனவும் இராஜதந்திரி மேலும் தெரிவித்துள்ளார். பதிவு

    • 6 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.