Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரித்தானியா தனது வேலையை பார்க்கட்டும்இலங்கை விவகாரத்தில் தலையிடக்கூடாது வீரகேசரி நாளேடு ஜே.வி.பி. தெரிவிப்பு; யோசனையையும் நிராகரிக்கவேண்டும் என்கிறது பிரித்தானியா தனது வேலையை மட்டும் பார்த்துக்கொள்ளவேண்டும். இலங்கை விவகாரங்களில் தலையிடக்கூடாது. பிரித்தானியா தற்போது உலக நாடுகளை ஆட்சிசெய்யும் நாடல்ல. உலக நாடுகளில் அந்த நாடும் ஒரு அங்கமாகவே உள்ளது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தை மண்டியிடச்செய்யும் சர்வதேச சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே பிரித்தானியாவின் இலங்கைக்கான அக்கறையை நாங்கள் நோக்குகின்றோம். எமது நாட்டின் விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விமல் வீரவங்ச தெரிவித்தார். ஸ்ரீலங்கா …

    • 3 replies
    • 2k views
  2. வவுனியாவில் இராணுவ முன்நகர்வு முயற்சி முறியடிப்பு: 2 சடலங்கள் மீட்பு. வவுனியா பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். பாலமோட்டைப் பகுதி ஊடாக இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் பல்குழல் வெடிகணை மற்றும் எறிகணைச் சூட்டாதரவுடன் பெருமெடுப்பில் இராணுவத்தினர் முன்னேற முயற்சித்தனர். இந்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி படையினரின் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தனர். இதில் கொல்லப்பட்ட இரு இராணுவத்தினரின் சடலங்களும் இராணுவத் தளபாடங்களும் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. -Puthinam-

  3. சு.கவுக்கு தமிழரின் நன்றி! தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான யோசனை என்ற பெயரில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்த திட்டம் தமிழர் தரப்பை மட்டுமல்ல, இலங்கை விவகாரத்தை ஆழ உற்றுநோக்கும் பக்கச்சார்பற்ற பார்வையாளர்களையும் சர்வதேச சமூகத்தையும் கூட அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கின்றது. இராஜதந்திர வட்டாரங்கள் இவ்விவ காரம் குறித்து வெளிப்படுத்தும் பிரதிபலிப்புகள் இதனையே உணர்த்துகின்றன. நாட்டில் பெரும் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்த நிலை யில் தமிழருக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் கட்டுமட்டில்லாமல் இடம்பெற அனுமதித்த சூழலில் சுமார் ஒருவருட காலம் இழுத்தடித்த பின்னர் "மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாக' ஒன்றுக்குமே உதவாத, உருப் படியற்ற ஒரு திட்டத்தை தீர்வ…

  4. Colombo in dark following airstrike alarm [TamilNet, Saturday, 28 April 2007, 20:11 GMT] Power supply was cut off in Colombo at 1:15 a.m. when the city was watching the Cricket world cup final match. Sri Lanka Air Force personnel opened fire on the air. Details are not available at the moment. Meanwhile, at least two Sri Lanka Air Force bombers had dropped bombs in Visuvamadu area in Vanni at 1:15 a.m. Casualty details were not available. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22020 கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாவும் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. உண்மை நிலை தெரியவில்லை.

  5. சிவஒளி எழுதும் கனவு மெய்ப்படும் காலம் கடந்த பெப்ரவரி 4ம் திகதி, காலை 8.45 மணியளவில் வெள்ளவத்தையில் காலி வீதியால் நடந்துகொண்டிருந்தேன். காதைப்பிளக்கும் வானுர்திகளின் சத்தம் வானத்தை அண்ணாந்து பார்க்க வைத்தது. அப்போதுதான் புரிந்தது சுதந்திர தின கொண்டாட்டத்துக்காக கிபிர், மிக் விமானங்கள் இறுதிக்கட்ட ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன. அந்தக் கணப்பொழுதில் சில எண்ணங்கள் என் மனதில் துளிர்விட்டன. இந்த விமானங்கள்தானே படுவான்கரையில், முன்னர் மூதூர் கிழக்கில், வள்ளிபுனம் செஞ்சோலையில், படகுத்துறையிலென பல்வேறு இடங்களிலும் குண்டுகளை வீசி எங்கள் உறவுகளை கொன்றுகுவிக்கின்றன. இவை மீது இடி கூட விழாதா என எண்ணி எண்ணி ஏங்கினேன். ஏன்னைப் போன்றவர்களின் ஆதங்கம் வற்றாப்பளை தாய்க…

    • 1 reply
    • 1.7k views
  6. மனித உரிமைகள் கண்காணிப்பு சர்வதேச சிறப்பு நிபுணர் குழு சிறீலங்கா பயணம் சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கண்காணிப்பதற்கான சர்வதேச சிறப்பு நிபுணர்கள் அடங்கிய சுயாதீன குழுவின் பிரதிநிதிகள் இம்மாத நடுப்பகுதியில் சிறீலங்காவிற்குச் செல்லவுள்ளனர். முக்கிய மனித உரிமை மீறல்கள் பற்றி ஆராய்வதற்காக, சிறீலங்கா அரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றிக் கண்காணிப்பதற்காகவே, இந்த நிபுணர்கள் சிறீலங்காவிற்குச் செல்லவுள்ளனர். சிறீலங்கா அரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு, மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் பட்டினிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்களின் படுகொலை தொடர்பான சாட்சிகளின் வாக்குமூலங்களைப் …

    • 1 reply
    • 897 views
  7. சுதந்திரக் கட்சியின் யோசனை வெளிப்படுத்தும் உண்மைகள் இலங்கையின் அரை நூற்றாண்டு காலத் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரை வேக்காட்டுத்திட்டம் ஒன்றை யோசனை ஒன்றை முன்வைத்திருக்கின்றது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. ""சிங்கள ஆட்சியாளர்களின் நீண்டகால வரலாற்றுப் பின்னணி கொண்ட ஏமாற்று நாடகத்தின் மற்றோர் அங்கமே இந்த யோசனை. பரிசீலனைக்குக்கூடத் தமிழர்கள் தொட்டுப்பார்க்கவும் அருகதையற்றது அது'' என அடியோடு அதனை நிராகரித்து இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்தக் கருத்தைப் பிரதிபலித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் முதல் வீ.ஆனந்தசங்கரி வரை…

  8. குமரி மீனவர்கள் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்கள் தலையீடு: வைகோ குற்றச்சாட்டு குமரி மீனவர்கள் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்கள் தலையீட்டிருப்பதாக ஊகமான செய்திகள் வருகின்றன என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த நேர்காணல்: சிறிலங்கா கடற்படையினர் கடந்த 30 ஆண்டு காலத்தில் ஏராளமான முறை தமிழக மீனவர்களை தாக்கி உள்ளனர். ஏறத்தாழ 500 தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக்கொன்றுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீனவர் படகுகளும், வலைகளும் நாசமாக்கப்பட்டுள்ளன. இதனை நான் எண்ணற்ற முறை இந்திய நாடாளுமன்ற கவனத்துக்கு கொண்டு சென்று பேசி உள்ளேன். பிரதமர்களிடத்திலும் வா…

  9. வெள்ளி 04-05-2007 01:08 மணி தமிழீழம் [மயூரன்] சந்திரிக்காவின் சிறப்புச் சலுகைகளை உச்சநீதிமன்றம் பறித்துள்ளது சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் சந்திரிக்கா குமாரதுங்காவிற்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை உச்ச நீதிமன்றம் பறித்துள்ளது. இதுதொடர்பில் விளக்கமளித்த சிறீலங்காவின் தலைமை நீதியாளர் சரத் நந்தன சில்வா சந்திரிக்கா குமாரதுங்க நாட்டின் அதிபராக பதவி வகித்தபோது அவருக்கு வழங்கப்பட்ட 36 அரசாங்க வாகனங்களும் நியமிக்கப்பட்ட பணியாளர்களையும் மீளப்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்க செலவில் மீளநிர்மாணம் செய்யப்பட்ட அதிபர் மாளிகையில் சந்திரிக்கா குமாரதுங்க தங்கியிருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த …

    • 2 replies
    • 1.2k views
  10. கொழும்பு வான்பரப்பில் இரவு முழுவதும் கண்காணிப்பு வானூர்திகள். சிறிலங்கா தலைநகர் கொழும்பு மீதான வான்புலிகளின் தாக்குதலை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு வானூர்திகள் பல கொழும்பு வான்பரப்பில் இரவு முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுவதாக சிறிலங்கா வான்படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கை அதிக செலவானது. ஆனால் செல்வந்த நாடுகள் பலவற்றில் இத்தகைய கண்காணிப்பு நடைபெறுகிறது. சந்தேகமான வானூர்திகள் தொடர்பாக தமக்கு கிடைக்கும் தகவல்களை இதன்மூலம் உறுதி செய்ய முடியும் என்றும் கூறிய அவர், விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு கடற்படையினரையும் கடல் தொழிலாளர்களையும் கேட்டுள்ளனர். -Puthinam-

  11. 5 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் [புதன்கிழமை, 2 மே 2007, 21:20 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 5 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விபரம் வருமாறு: யாழ். மாவட்டத்தில் சிறிலங்கா கடற்படையினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நேரடி மோதலின் போது நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். கப்டன் அபிநயன் என்று அழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சொந்த முகவரியாகவும், றாச்குமார் அன்புபுரம் முழங்காவில் கிளிநொச்சியை தற்காலிக முகவரியாகவும், உதயநகர் கிழக்கு கிளிநொச்சியை வேற்று முகவரியாகவும் கொண்ட பாலசிங்கம் உதயகுமார் மேஜர் ஈழமாறன் அல்லது கடலருவி என்று அழைக்கப்படும் மட்டக்க…

  12. நல்ல வெற்றிச்செய்தியை விரைவில் கேட்கும் காலம் 'ஏற்படுத்தப்பட்டுள்ளது': சி.எழிலன் போர்க்களத்தில் தமிழ்மக்கள் வெற்றியை சந்திக்க காலம் நெருங்கிவிட்டது- நல்ல ஒரு வெற்றிச்செய்தியை நாங்கள் விரைவில் கேட்கும் காலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். புலிகளின் குரலின் முள்ளியவளை மாதாந்த முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய சிறப்புரை: வெற்றிச்செய்தியை தமிழ் மக்கள் கேட்கும் காலம் நெருங்கிவிட்டது. ஆட்தேவை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு காலம் காலமாக இருந்து வந்த ஒன்று. தமிழ் மக்களின் துயரங்களை இல்லாமல் செய்வதற்காக விரைவானதும் நிறைவானதுமான வெற்றிக்க…

  13. ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்தது பிரித்தானிய நாடாளுமன்றம். இலங்கையில் தமிழர்கள் நீதியான அமைதியுடனும் கண்ணியத்துடனும் வாழவும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை பிரித்தானிய நாடாளுமன்றம் அமைத்துள்ளது. தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஜ் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். லண்டனில் சிறிலங்கா அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகிய முத்தரப்பு பங்கேற்கும் மாநாடு ஒன்றை லண்டனில் நடத்துவதற்கான செயற்பாடுகளையும் இந்நாடாளுமன்றக் குழு மேற்கொள்ளும். இலங்கையின் நிலைமைகளை குறிப்பாக இனப்பிரச்சனையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்ப…

  14. 'வான் தாக்குதல்களின் போது தமிழர் பட்ட துன்பங்களை இன்று எங்களால் உணரமுடிகிறது': ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் "அரசாங்கப் படைகள் வடக்கு கிழக்கில் வான் தாக்குதல்களை மேற்கொண்ட போது தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை தற்போது தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் வான்தாக்குதல்கள் இடம்பெறவில்லை. யதார்த்தத்தை புரிந்துகொண்டு பௌத்த மத தர்மத்தின்படி இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இனப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையை சிறிலங்கா சுதந்த…

    • 10 replies
    • 2.2k views
  15. ஜனாதிபதி மஹிந்த பார்படோஸ் இல் இருந்து இன்னும் நாடு திரும்பவில்லை. பார்படோஸ் நாட்டில் நடைபெற்ற கிரிக் கெட் உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தைப் பார்வையிடுவதற்காக அந்நாட்டுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ இன்னமும் நாடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் நேற்றுமுன்தினம் கொழும் பில் நடைபெற்ற ஆளும் பொதுஜன ஐக்கிய முன் னணியின் மேதினப் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவில்லை. இந்த மேதின நிகழ்வுகள் தொடர்பாக நேற்றைய "சுடர்ஒளி" யின் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியில், ஜனாதிபதி நாடு திரும்பி, மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த தகவல் தவறானதாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மே தின நிகழ்வுகள் நடைபெற்றுக் கொ…

  16. பிரிட்டிஷ் துணைத் தூதுவரின் கிளிநொச்சி விஜயம் ஒத்திவைப்பு பாதுகாப்புக் காரணம் நிமித்தமாகவா? கொழும்பு,மே 3 இலங்கைக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் லெஸ்லி கிரேக் இன்று கிளிநொச்சிக்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் தூதரக வட்டா ரங்கள் தெரிவித்தன. துணைத் தூதர் இன்று கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் பிரதித் தூதுவரின் விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக நேற்று மாலை தூதரக வட்டாரங்களால் தெரிவிக்கப்பட் டது. ஆனால் அதற்கான காரணம் வெளி யிடப்படவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக வன்னி செல்ல வேண்டாம் என …

  17. கொழுப்பு: கொழுப்பில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடத்தினால் அதை சமாளிக்க இலங்கை ராணுவம் போர் ஒத்திகை நடத்தியது. இதனால் தாக்குதல் தொடங்கிவிட்டதாக நினைத்து மக்கள் பீதியடைந்து ஓடினர். விடுதலைப் புலிகள் சமீபகாலமாக கொழும்பு, பலாலி விமான தங்களை விமானங்களைக் கொண்டு தாக்க ஆரம்பித்துள்ளனர். இந்த தாக்குதலை புலிகள் விரிவுபடுத்தலாம், கொழும்பின் பிற பகுதிகளையும் தாக்கலாம் என்று அரசு கருதுகிறது. இதையடுத்து அப்படிப்பட்ட தாக்குதல் நடந்தால் அதை சமாளிக்கும் வகையில் ராணுவம் தயாராகி வருகிறது. இதற்காக இலங்கை ராணுவம் கொழும்பு துறைமுகம் அருகே போர் ஒத்திகை நடத்தியது. இதுகுறித்து பொது மக்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. திடீரென துப்பாக்கி, பீரங்கிகள் வெடிக்கு…

    • 0 replies
    • 797 views
  18. கொழும்பு: இலங்கை ராணுவ விமானங்களால் விடுதலைப்புலிகளின் விமானங்களை தாக்கி அழிக்க முடியாது என இலங்கை ராணுவ முன்னாள் தளபதி ஹரிகுணதிலகே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை விமானப்படையிடம் உள்ள கேபிர் ரக விமானங்களால் விடுதலைப்புலிகளின் விமானங்களை தாக்கி அழிக்க முடியாது. மரங்களை அடியோடு வெட்டித் தான் வீழ்த்த முடியும். அதுபோல் புலிகளன் விமானங்களை தரையில் வைத்துதான் அழிக்க முடியும். வானில் பறக்கும்போது அவற்றை அழிக்கும் திறமை இலங்கையிடம் இல்லை. கேபிர், மிக் ரக விமானங்கள் விடுதலைப்புலிகளின் விமானங்களை இடைமறிக்கும் ஆற்றலுடையவை. அதேசமயம் தாக்கி அழிக்க முடியாது. புலிகளின் விமானங்களை நிற்கும் இடத்தை கண்டுபிடித்து அங்கு குண்டு வீசவேண்டும். ஆனால் அவ…

    • 0 replies
    • 648 views
  19. சு.கவின் தீர்வு யோசனை குறித்து புதுடில்லியின் பிரதிபலிப்பு விரைவில்! அதிருப்தி தெரிவிக்கும் கருத்து பெரும்பாலும் நாளை வரும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஆளும் அரசுக் கூட்டமைப்பின் பிரதான கட்சி யான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்திருக்கும் யோசனை குறித்து புதுடில்லிபெரும் அதி ருப்தி கொண்டிருப்பதாக அறியவருகிறது. அது தொடர்பான தனது நிலைப்பாட்டைப் பிரதி பலிக்கும் கருத்தை இந்திய அரசு பெரும்பாலும் நாளை பகிரங்கப்படுத்தும் என விடய மறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது. இலங்கையில் ஆளும் கூட்டமைப்பின் பிரதான கட்சி ஸ்ரீல.சு.கவே. அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலை மையில் இயங்கும் கட்சி அது. எனவே, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அக்கட்சி முன்வைக்கும் யோசனை …

  20. யாழில் 4 மாதத்தில் 80 பேர் படுகொலை [வியாழக்கிழமை, 3 மே 2007, 09:52 ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ். குடாநாட்டில் கடந்த நான்கு மாத காலப் பகுதியில் 80 பேர் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயது தொடக்கம் 35 வயதுக்கு உட்பட்டோர் என்றும் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும் இந்துமத குருவும் ஊடகவியலாளரும் படுகொலை செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என்றும் மனித உரிமைகள் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதத்தில் 20 பேரும் பெப்ரவரி மாதத்தில் 8 பேரும் மார்ச் மாதத்தில் 33 பேரும் ஏப்ரல் மாதத்தில் 19 பேருமாக …

  21. இலங்கையில் அமைதியை ஏற்படுத்த பிரிட்டன் தயாராகவுள்ளது; புலிகளை சந்திக்கவும் விருப்பம் வீரகேசரி நாளேடு இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பிரிட்டன் அரசு தயாராகவுள்ளது. இதற்காக அந்நாட்டிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோம். இனப்பிரச்சினை தீர்வுக்கு இராணுவ வழிமுறை உகந்ததல்ல என்பதை நாம் நம்புகின்றோம் என்று பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் கிம் ஹவல்ஸ் தெரிவித்துள்ளார்.பிரிட்டன் அரசு விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக்கொள்ளாது. இதற்கு சட்டபூர்வமான நியாயத் தன்மையை வழங்க நாம் தயாரில்லை என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்

  22. புலிகளின் வான் தாக்குதல் நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்துக்குள் தள்ளும்: ஹிந்துஸ்தான் ரைம்ஸ் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இராணுவ மற்றும் பொருளாதார மையங்கள் மீதான விடுதலைப் புலிகளின் வான்படை நடத்திய அண்மைய தாக்குதல்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று இந்திய ஆங்கில நாளேடான 'ஹிந்துஸ்தான் ரைம்ஸ்' தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரை: கொழும்பில் உள்ள இராணுவ மற்றும் பொருளாதார மையங்களை அவதானித்தால் அது வெளிநாட்டு வர்த்தகம், உல்லாசப்பயணத்துறை போன்றவற்றில் தங்கியுள்ளது. எனவே தலைநகரத்தின் மீதான கடுமையான அச்சுறுத்தல் முழு நாட்டிலும் தாக்கங்களை உண்டுபண்ணக் கூடியது. கடந்த மார…

  23. பயங்கரவாதம் என்ற சொல்லின் மூலம் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன: அணிசேரா நாடுகளின் ஊடகவியலாளர் அமைப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற சொற்பதம் சமூகத்தின் வாழ்வை சீர்குலைக்கின்றது. பத்திரிகையாளர்கள், செய்தி சேகரிப்பவர்கள், புகைப்படவியலாளர்கள் போன்றோர்களை தமது பணிகளை செய்யவிடாது அரசுகள் தடுப்பதுடன் பாதுகாப்பு என்ற போர்வையில் இதற்கான காரணங்களை மக்களுக்கு விளக்க முற்படுகின்றன என அணிசேரா நாடுகளின் ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுதந்திர ஊடகவியலாளர் நாளினை முன்னிட்டு அணிசேரா நாடுகளின் ஊடகவியலாளர் அமைப்பின் அனைத்துலக தலைவர் ஹசன் சகிஹார் தெரிவித்துள்ளதாவது: பயங்கரவாதம் என்ற சொல்லின் தாக்கம் மக்களுக்கு புரிவதில்லை. அந்த சொல்லின் மூலம் மக்களின் உரி…

  24. ஆளும் கட்சியின் தீர்வு யோசனை தொட்டுப்பார்க்கவும் அருகதையற்றது! அடியோடு நிராகரித்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொழும்பு, மே 2 தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்று கூறிக்கொண்டு ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியிட்டிருக்கும் அதிகாரப் பரவ லாக்கல் யோசனை சிங்கள ஆட்சியாளர் களின் நீண்டகால வரலாற்றுப்பின்னணி கொண்ட ஏமாற்று நாடகத்தின் ஓர் அங்கமே ஆகும். அதனைப் பரிசீலனைக்குக் கூட தமிழர்கள் தொட்டுப்பார்க்க மாட்டார்கள். பரிசீலிப்பதற்குக் கூட அருகதையற்றது. அந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு கருத்தில் எடுக்கவே மாட்டாது. இவ்வாறு ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனைகளை அடியோடு நிராகரித்து கருத்து வெளியிட்டிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்…

    • 3 replies
    • 1.2k views
  25. இந்தியாவை குழப்ப இலங்கை அரசு நடத்திய சதி நாடகம் : பலிகாட ஆக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் கன்னியாகுமரியிலிருந்து மீன்பிடிக்க நமது மீனவர்கள் 12 பேர் மார்ச் 6---&ம் தேதி கடலுக்கு சென்றவர்கள் இதுவரை திரும்பவில்லை . அதே கன்னியாகுமரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த மார்ச் 29ம்தேதி நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இரண்டு நிகழ்வுகளுமே தமிழர்களை அதிர்ச்சியூட்டி யுள்ள செயல்தாம். 5 மீனவர்களை சுட்டதும், 12 மீனவர்களை கடத்தியதும் விடுதலை புலிகள்தான் என்பதை தமிழகத்தின் காவல்துறை தலைவரும் சட்ட மன்றத்தில் முதல்வரும் கூறுகின்றனர். இதில் நமக்கு எழும் சந்தேகங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம். - 5 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவர்களுடன் சென்று உயிருடன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.