ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
சிறிலங்கா வான்படைத் தளம் மீதான தாக்குதல்: பங்குச் சந்தை சரிந்தது [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 15:13 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது இன்று திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு பங்குச் சந்தை சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தமிழீழ வான்படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பான தகவல்களை, இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே தமிழீழ வான்படையினரால் சிறிலங்கா மீது நடத்தப்பட்ட முதலாவது வான் தாக்குதல் இது என அனைத்துலக ஊடகங்களும் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. சிறிலங்காவின் ஒரே ஒரு அனைத்துலக …
-
- 3 replies
- 1.6k views
-
-
சங்கமன்கந்தவில் படையினர் புலிகள் மோதல்; இருவர் பலி வீரகேசரி நாளேடு அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான சங்கமன் கந்தவில் விஷேட அதிரடிப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்போது விடுதலைப் புலிகளில் இருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களின் சடலங்கள் இரண்டு மீட்கப்பட்டு அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு அச்சடலங்களை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேற்படி தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் மெகசீன் இரண்டும் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அம்பாறை சங்கமன் கந்த பிரதேசத்தில…
-
- 0 replies
- 869 views
-
-
பாராளுமன்றத்தை கூட்டுமாறு ரணில் பிரதமரிடம் வேண்டுகோள் வீரகேசரி நாளேடு கட்டுநாயக்காவிலுள்ள விமானப் படைத் தளம்மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளமையினால் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சமடைந்திருப்பதாகவும் ஆகவே பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவுக்கு கடிதமொன்றை எழுதி யுள்ளார். நேற்றிரவு அனுப்பப்பட்ட கடிதத்தில், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது. அத்துடன், விடுதலைப்புலிகளை அரசாங்கம் கூடுதலாக அழித்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் எவ்வாறு விமானப்படைத்தளம்மீது…
-
- 0 replies
- 774 views
-
-
கொஞ்சகாலமாக நம்மட இரம்புக்கலவோட அறிக்கை ஒன்றையும் காணாவில்லை...என்ன நடந்தது அமைச்சருக்கு??? கதிகலங்கீட்டாரோ?
-
- 7 replies
- 3.5k views
-
-
சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தாய்லாந்து சென்றிருக்கிறார். அங்கு அவர் தனது 58ஆவது பிறந்தநாளை நேற்றுமுன்தினம் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் கொண்டாடினார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ரணில் விக்கிரமசிங்க தனது துணைவியார் மைத்ரேயி மற்றும் கட்சியின் மூத்த பிரமுகரும் தனது நெருங்கிய நண்பருமா கிய மாலிக் சமரவிக்கிரம ஆகியோருடன் பாங்கொக் சென்றிருக்கிறார்கள்
-
- 2 replies
- 1.2k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மேலும் ஆறு எம்.பி.க்கள் அரசுடன் இணைவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கும் இணங்கி செயற்படுவதற்கும் உறுதிமொழி வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இது விடயம் தொடர்பாக நிர்மாணம் மற்றும் பொறியியல் துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவிடம் கேட்டபோது மேலும் ஆறு பேர் கொண்ட ஐ.தே.கட்சி எம்.பி.க்கள் அரசாங்கத்துடன் இணையவிருப்பதை உறுதிப்படுத்தினார். அந்த ஆறு உறுப்பினர்களும் ஜனாதிபதியுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் அவை வெற்றியளித்துள்ளதோடு எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்துடன் இணைவார்களெ…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறீலங்காவின் கிபிர் விமானங்கள் மன்னாரில் வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இன்று மதியம் 12 மணியளவில் மன்னார் வெள்ளாங்குளத்தில் மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியுள்ளன. தாக்குதலில் ஏற்பட்ட தேசவிபரங்கள் இதுவரை அறிய முடியவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.1k views
-
-
-
மகிந்த ராஜபக்ச அமைச்சர்களை அழைத்து ஆலோசனை கட்டுநாயக்க மீதான அதிரடி வான்படைத் தாக்குதலை கொழும்பே அதிர்ந்துபோய் உள்ள நிலையில் சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முக்கிய படைத்தளபதிகள் மற்றும் முக்கிய அமைச்சர்களை அழைத்து இன்று ஆலோசனையை நடத்தியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.6k views
-
-
சதி வேலையா ஜனநாயக உரிமையா? [26 - March - 2007] - நயன இரத்நாயகா- ஒரு சிலர் மன்னர்களாகவும் வேறு சிலர் மகாராணிகளாகவும் வர முயற்சிக்கின்றனர் எனவும் இது பயங்கரமான சதி வேலை எனவும் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். ஜனநாயக நாடொன்றில் வாழும் எந்தவொரு பிரஜைக்கும் அந்த நாட்டின் தலைவராகும் உரிமையுள்ளது. அது ஜனநாயக உரிமையாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 1999 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலையடுத்து பொது சன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்து அமைச்சராகப் பதவிப் பிரமாணம் மேற்கொண்ட பின்னர் அவரதும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினதும் உறவினரான சாம் விஜேசிங்கவினது இல்லத்தில் கூடி ரகசியப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். அப்போதைய ஜனாத…
-
- 0 replies
- 1.2k views
-
-
[திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 19:11 ஈழம்] [காவலூர் சங்கீதன்] சிறிலங்காவிற்கான அனைத்து வானூர்தி சேவைகளையும் ஹொங்கொங்க் நாட்டின் உத்தியோகபூர்வ வானூர்தி சேவையான கதே பசுஃபிக் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து மேலும் சில நாடுகள் வானூர்தி சேவையை இடைநிறுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றன. கட்டுநாயக்க வானூர்தித் தளத்தின் தலைமை அதிகாரியை மேற்கொள் காட்டி வெளியாகியிருக்கும் செய்திக்குறிப்பில், பாகிஸ்தானின் உத்தியோகபூர்வ வானூர்தி சேவையான பி.ஐ.ஏ (PIA) தனது சேவையைத் தொடர்வது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்திருக்கின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை இது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்றும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கின்றது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
நேற்று விடுதலைபுலிகளின் வான்வழித் தாக்குதல் தொடர்பில் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளார் கருத்துத் தெரிவிக்கையில் வான் வழித்தாக்குதல்களை நடாத்திவிட்டு விமானங்கள் தமது நிலைகளுக்கு பாதுகாப்பாக திரும்பியது ஆச்சரியத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் தாக்குதல்கள் மேலும் மோதல்களுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 5 replies
- 3.2k views
-
-
ஆயுதக்கப்பல்களை அழிப்பதற்கு இந்தியா உதவ வேண்டும்: சிறிலங்கா அரசு [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 15:03 ஈழம்] [க.திருக்குமார்] தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியமான ஆயுதக்கொள்வனவு மையம் தாய்லாந்து தான் என இந்தியா எமக்கு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழிப்பதற்கு சிறிலங்கா கடற்படையினருக்கு இந்திய உதவவேண்டும் என சிறிலங்காவின் உயர் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி மேலும் தெரிவித்ததாவது: இந்த விடயங்கள் தொடர்பாகவும், விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டை தமது ஆயுதக்கடத்தலின் இடைத்தங்கல் முகாமாக பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆராய்வதற்காக கடற்படையின் குழு ஒன்று புதுடில்லிக்கு பயணமா…
-
- 4 replies
- 1.2k views
-
-
[திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 18:47 ஈழம்] [து.சங்கீத்] சிறிலங்காவிற்கான அனைத்து வானூர்தி சேவைகளையும் இடைநிறுத்துவதாக ஹொங்கொங்க் நாட்டின் உத்தியோகபூர்வ வானூர்தி சேவையான கதே பசுஃபிக் ஏயர்வேஸ் அறிவித்துள்ளது. அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சிறிலங்கா வான்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளை தாக்கியழிப்பதற்கு தமிழீழ வான்படை தனது இரு வானூர்திகளை பாவித்து வெற்றிகரமான தாக்குதலை நடத்திவிட்டு தளம் திரும்பியிருந்தது. இச்சம்பவத்தினால் அருகில் இருக்கும் அனைத்துலக வானூர்தி நிலையத்துக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று அந்நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கின்றத
-
- 0 replies
- 744 views
-
-
சிறிலங்காவிற்கு செல்வது ஆபத்தானது: அவுஸ்திரேலியா [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 18:22 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீதான தமிழீழ வான்படையின் குண்டுவீச்சைத் தொடர்ந்து சிறிலங்காவிற்கு செல்வது ஆபத்தானது என தனது குடிமக்களை அவுஸ்திரேலியாவின் வெளிவிவகாரத் திணைக்களம் எச்சரித்திருக்கின்றது. வான்படைத் தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் பலமணி நேரம் மூடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நேரத்தில் சிறிலங்காவிற்கான உங்களது பயணத்தின் தேவையை மீள்பரிசீலனை செய்யுங்கள். ஏனெனில் அங்கு பொதுவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, பாதுகாப்பு நிலைமை மிகவும் ஆபத்தானது, தாக்குதல்களுக்கான சாத்தியக்கூறுகள் அதிகம்…
-
- 0 replies
- 819 views
-
-
கட்டுநாயக்க விமானத் தளம் மீது விடுதலைப் புலிகளின் வான்படையினர் தாக்குதலை நடத்திய போது சிறீலங்கா விமானப் படையினரின் விமான எதிர்ப்பு சாதனங்கள் ஏன் வேலை செய்யவில்லை என சிறீலங்கா ஜனாபதி மகிந்த ராஜபக்ச விமானப் படைத் தளபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவான அறிக்கை ஒன்றை மகிந்த ராஜபக்ச விமானப் படையினரும் கோரியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.6k views
-
-
பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்காக கெற்பெலி மக்களை வெளியேற்றும் படையினர் தென்மராட்சி, கெற்பெலி மத்திய பகுதியில் நிரந்தரமாக வாழ்ந்துவரும் குடும்பங்களை வெளியேற்றிப் பாதுகாப்பு வலயங்களாக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சென்று, மக்களை உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு படையினர் நிர்ப்பந்தித்து வருவதுடன் கோடீஸ்நகர் கெற்பெலி தொடங்கி கச்சாய்துறைமுகம் வரை 500 மீற்றர் வரையான கடற்கரைப் பகுதியில் மக்கள் நடமாட முற்றாக தடைசெய்துமுள்ளனர். இராணுவ கவசவாகனங்கள், டாங்கிகளைக் கொண்டு செல்ல வசதியாக பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களின் காணிகளைப் பெருமளவில் ஆக்கிரமித்துப் பா…
-
- 0 replies
- 771 views
-
-
ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவர் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு பயணம் இலைமறை காயாக இருந்த ஜே.வி.பி.யின் தலைவர்களில் ஒருவரான குமார் ஐயா என அழைக்கப்படும் கே. குணரட்னம் தனது குடும்பத்துடன் கடந்த ஆறு வாரங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஜே.வி.பி.யின் அரசியல் நடவடிக்கைகளில் இவர் மிகவும் முக்கிய பங்காற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜே.வி.பி.யின் தலைவராக இன்றுவரை இரகசியமாக இயங்கிவந்த குமார் ஐயாவை அரசாங்கத்தின் புலனாய்வுத்துறையும், குற்றப்புலனாய்வுப் பிரிவும் குறிவைத்ததால் அவர் மிக விரைவாக தனது குடும்பத்துடன் வெளியேறியுள்ளார். அவரின் பாதுகாப்புக் கருதி ஜே.வி.பி.யின் மத்திய குழுவே அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி ஆலோசனை வழங்கியுள்ளது. …
-
- 0 replies
- 696 views
-
-
தாய்லாந்திலிருந்து புலிகள் ஆயுதங்களை கடத்துவதற்கான ஆதாரங்கள் இல்லை இந்திய கடற்படையினர் கூறுகின்றனர் விடுதலைப் புலிகள் தாய்லாந்திலிருந்து ஆயுதங்களை கடத்துவதாக சந்தேகிக்கப்படுகின்ற போதிலும் இதுவரை எதுவும் கைப்பற்றப்படவில்லை என இந்திய கடற்படையதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அந்தமான் - நிக்கோபார் தீவுகளுக்கான பிரதி கடற்படை தலைமையதிகாரி ரியர் அட்மிரல் பி.கே.நாயர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தாய்லாந்திலிருந்து ஆயுதங்களை கடத்துவதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இதுவரை அவ்வாறான ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இது குறித்து மேலதிகமாக எதனையும் தெரிவிக்க மறுத்துள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்ச…
-
- 1 reply
- 911 views
-
-
மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவோர் தாக்கப்படுவதை நிறுத்துமாறு அரசுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கோரிக்கை மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வரும் அரச சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த அலுவலர்கள் மீதான தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு சர்வதேச சமூகம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழர் புனர்வாழ்வு கழகம் கோரியுள்ளது. இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினர் சனிக்கிழமை மன்னாரில் நடத்திய தாக்குதலில் தமிழர் புனர்வாழ்வு கழக சாரதி ஒருவர் கொல்லப்பட்டதுடன் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் படுகாயமடைந்தனர். தமிழர் புனர்வாழ்வு கழகம் இத்தாக்குதலை கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கையை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில் மே…
-
- 0 replies
- 652 views
-
-
சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆவணங்கள் தேக்கம் சிறைச்சாலைகளில் அப்பாவிகள் பலர் வாடுகின்றனர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் தேங்கிக் கிடப்பதால் அப்பாவிகள் சிறையில் வாடுவதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றுக்கு முறைப்பாடு செய்துள்ளார். அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மீனவர்கள் ஐவருக்கும் எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது அவர் அம்மீனவர்கள் சார்பில் மன்றில் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் நீதிமன்றில் கூறியதாவது; "இம் மீனவர்கள் தொழிலுக்காக மன்னார் கடலுக்கு சென்றிருந்த போது கடந்த வருடம் …
-
- 0 replies
- 449 views
-
-
உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் இலங்கைக்கு வருகைதந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக உல்லாசப் பயணச் சபை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதம் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 18.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்ததாகவும
-
- 0 replies
- 748 views
-
-
-
'' புலிகளின் வான் தாக்குதலால் உடைந்த இராணுவ சமநிலை'' விடுதலைப் புலிகளிடம் வான் கலங்கள் உள்ளதென்பதை அறிந்த அரச படைகள் தமது விமான தளங்களில் அதி உச்ச பாதுகாப்பு நிலையில் வைத்திருந்தார்கள். அதனை அடுத்து பல நாடுகளிடம் கையேந்தி விமான எதிர்;ப்பு ஏவுகணைகளை வாங்கி குவித்து தீவிர கண்காணிப்பில் வைத்திருந்த அந்த வான் தளத்தில் எப்படி புலிகளின் கலங்கள் வந்து தாக்குதலை நடாத்தி தப்பிச் சென்றதென்பது. அரச மட்டத்திலும் படையினர் மத்தியிலும் பலத்த கேள்வியையும் பீதியையும் உண்டாக்கியுள்ளது இதனை அடுத்து வடக்கில் உள்ள படையினரின் இருப்புக்கு அச்சுறுத்தல் உண்டாகியுள்ளது. அதற்க்கு மேலாக படைகளினுடைய மனோ நிலையிலும் பாரிய உளவியல் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. பலிகளுனுடைய…
-
- 6 replies
- 4.8k views
-
-
மகிந்தவுடன் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 11:12 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழ்ப் பத்திரிகைகளை வெளியிடுவதில் தாம் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவிற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்த தமிழ்ப் பத்திரிகை வெளியீட்டாளர்கள் கடந்த வியாழக்கிழமை மகிந்த ராஜபக்சவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து உரையாடியுள்ளனர். பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரின் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட இச்சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பவும் பங்குபற்றியிருந்தார். தனது முதலாவது நடவடிக்கையாக யாழ். குடாநாட்டிற்கு உணவுப் பொருட்களை அனுப்ப உள்ளதாகவும், அதன் பின்னர் யாழ். குடாநாட்டில் உள்ள பத்திரிகைகள…
-
- 0 replies
- 950 views
-