ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
சிறிலங்காவில் இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாதமே உண்டு: மகாநாயக்கர் [திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007, 14:16 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் இனப்பிரச்சனை என்பது இல்லை. நாட்டின் ஒரு பகுதியை ஒரு குழு கோருவதால் பயங்கரவாதப் பிரச்சினையே தோன்றியுள்ளது என்று அஸ்கிரிய பீடத்தின் சியம் நிகாயா பிரிவைச் சேர்ந்த உடுகம சிறீ புத்தரகித தேரர் தெரிவித்துள்ளார். இத்தாலிய தலைநகர் ரோமில் மகிந்த ராஜபக்சவும் இதனை ஒத்த கருத்தை தெரிவித்ததை தேரர் வரவேற்றுள்ளார். விழா ஒன்றில் கடந்த சனிக்கிழமை கலந்து கொண்டு உடுகம சிறீ புத்தரகித தேரர் பேசியதாவது: இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் அமைதியாக வாழ்கின்றனர், அவர்களுக்கு எந்த சமூகம், எந்த மதம் என்ற பிரச்சனைகள் இருப்பதில்லை. இந்துக்கள் நாட…
-
- 9 replies
- 1.9k views
-
-
இஸ்ரேலின் எண்டப்பே வானூர்தி நிலைய தாக்குதலைப் போன்றது புலிகளின் வான் தாக்குதல்: சிங்கள ஏடு. கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல், இஸ்ரேலிய அதிரடிப்படையினர் என்டப்பே வானூர்தி நிலையம் மீது நடத்திய தாக்குதலைப் போன்றது என்று 'திவயின' சிங்கள ஏட்டின் படைத்துறை ஆய்வாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். சிங்கள இனவாதத்தை கக்கும் இந்த ஆய்வாளர், சிறிலங்கா வான்படைத் தளம் மீதான தாக்குதலை விடுதலைப் புலிகள் எத்தகைய உத்தியைப் பயன்படுத்தி நடத்தினர் என்பது பற்றி எழுதிய ஆய்வில், என்டப்பே வானூர்தி நிலையத்தில் இஸ்ரேலிய அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலைப் போன்றே நடத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். என்டப்பேயில் இஸ்ரேலிய படையினர் இரகசியமாக வ…
-
- 3 replies
- 1.9k views
-
-
தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 3 தமிழ் தேசவிரோத சக்திகள் ஒன்று சேர்ந்து இன்றுஒரே குரலில் தமிழ் மக்களுக்காய் ஒப்பாரி வைக்கப்போகின்றனராம் அதிலும் ஒருவர் 1000 பணத்தை தபாலில் அனுப்பி பணத்தாசை காட்டியும் வெல்லமுடியாமல் போன தமிழர் விடுதலைக்கூட்டணியின் நிர்வாக குழு தலைவர் எல்லாமான ஒரு தனிமனித கட்சியின் தலைவர் திரு.ஆனந்த சங்கரி அவர்கள் அவரை பற்றி நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை பெண்பித்தரான இவருக்கு உத்தியோக பூர்வமற்ற பலர் மனைவியாக இருப்பது யாவருமறிந்ததே பெண்களை பாலியல் கண்கொண்டு பார்க்கும் பாலியல் நோயாளியான இன்றைய நடைபிணம் ஆனந்த சங்கரி அடுத்தது புளட் கும்பலின் தலைவர் சித்தார்த்தன்.வவுனியாவில் கொள்ளை கொலை தொழிலை தன் கொம்பனியான வரயறுக்கபடாத கொலைகார புளட் நிறுவனத்தின் ம…
-
- 8 replies
- 3.4k views
-
-
கொழும்பு சென்ற பத்மினி, கஜேந்திரன் வாகனங்களில் இராணுவத்தினர் தீவிர சோதனை [திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007, 19:44 ஈழம்] [க.நித்தியா] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மினி சிதம்பரநாதன் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோரது வாகனங்களை சிறிலங்கா இராணுவத்தினர் தீவிர சோதனைக்குள்ளாக்கினர். செ.கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இரண்டு ஊர்திகளில் கொழும்பு நோக்கி இன்று திங்கட்கிழமை சென்று கொண்டிருந்தனர். தம்புள்ளப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் இருவரது வாகனங்களை மறித்துள்ளனர். தாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்- தம்மை சோதனையிட முடியாது என்று இருவரும் தெரிவித்தனர். ஆனால் சோதனையிட தமக்கு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பத்மினி சி…
-
- 0 replies
- 985 views
-
-
இலங்கைக்கு பேரழிவு ஆயுதங்களை வழங்கியதன் மூலம் ஆறரைக்கோடி தமிழரையும் இந்தியா உதாசீனப்படுத்தி விட்டது [23 - April - 2007] * டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் இலங்கையரசுக்கு இந்திய அரசு ஆயுதங்கள் வழங்கியுள்ளதை கடுமையாகக் கண்டித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க தமிழகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டியவேளை வந்துவிட்டதெனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இராணுவத் தாக்குதல்களை நிறுத்துங்கள்; மனித உரிமைகளை மதித்து நடவுங்கள்; ஈழத் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை வழங்குவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் முத…
-
- 7 replies
- 2.3k views
-
-
அளவையில் அதிகாலை ரயில் விபத்தில் தந்தையும் மகளும் பலி [23 - April - 2007] -கே.பி.மோகன்- அளவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு செல்வதற்காக ரயில் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்த தந்தையும் மகளுமே ரயிலில் மோதி இறந்துள்ளதாக அளவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் நிமல் பண்டார தெரிவித்தார். டானியல் வேதமாணிக்கம் (வயது 61) நிலந்தி ரொஷானி வேதமாணிக்கம் (வயது 35) ஆகிய இருவருமே ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இருவரும் அலுவலக தேவையொன்றுக்காக வீட்டிலிருந்து கொழும்பிற்கு புறப்பட்டு ரயில் பாதை வழியாக அளவை ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிரில் ரயில் வண்டியொன்று வருவதை அவதானித்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் எம்.பிக்கள் மட்டக்களப்புக்கு செல்ல பாதுகாப்பு உத்தரவாதம் கோருகின்றனர் ஹெலிக்கொப்டர் வசதி தருமாறு கேட்டு அரசுக்குக் கடிதம் கொழும்பு,ஏப்ரல் 23 மட்டக்களப்பில் நாளை நடைபெறவிருக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு செல்வதற்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குமாறு தமிழ்க்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கள் அரசிடம் கோரியுள்ளனர். தற்போது கொழும்பில் தங்கி இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக்கள் அங்கு செல்வதற்கு ஹெலிக்கொப்டர் வசதி செய்து தருமாறும் கேட்டி ருக்கின்றனர். மட்டக்களப்பில் தாங்கள் எதிர்நோக்குகின்ற பாது காப்புப் பிரச்சினையை விளக்கி, கூட்டமைப்பு எம்.பிக் கள் நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்திற்கு…
-
- 2 replies
- 769 views
-
-
சிறிலங்காவிற்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கியது இந்தியா பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்குவதில்லை என்ற உறுதிமொழிகளை மீறி சிறிலங்காவிற்கு இந்திய மத்திய அரசாங்கம் உயர் ரக வெடிமருந்து மற்றும் ரிபிரி வகை 40 மி.மீ எறிகணை செலுத்திகளுக்குரிய குண்டுகள் உட்பட பெரும் தொகையான பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வழங்கியுள்ளது. மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கோரிக்கைகளையும் மத்திய அரசாங்கம் இதன் மூலம் புறக்கணித்துள்ளது. சிறிலங்காவிற்கு ஆபத்துக்கள் அற்ற தற்பாதுகாப்பு உபகரணங்களையே வழங்குவது என்ற உறுதிமொழிகளில் இருந்து மீறிய மத்திய அரசாங்கம் பின்வரும் நாசகார ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளது. அந்த ஆயுதங்களின்…
-
- 19 replies
- 3.4k views
-
-
குடாநாட்டுக்கு அனுப்பிய பொருள்களுக்குரிய பணத்தைத் தருமாறு அரசு அவசரப்படுத்துகிறது யாழ்ப்பாணம்,ஏப்.23 அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திணைக்களத்தினால் குடாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொருள்களுக்குரிய பணத்தை விரைவாக செலுத்த வேண்டும் என்று யாழ்.அரச அதி பர் ப.நோ.கூ.சங்கங்களைக் கேட்டுள்ளார். உணவுப் பொருள் விநியோகம் தொடர்பாக யாழ்.செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. குடாநாட்டில் இயங்குகின்ற ப.நோ.கூ.சங்கங்கள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரால் அனுப்பப்பட்ட பொருள்களுக்கான கொடுப்பனவை இன்னும் முழுமையாகச் செலுத்தவில்லை. கொடுப்பனவுகளை செலுத்தினால் மட்டுமே எதிர் காலத்தில் பொருள்களை, கொள்வனவு செய்யமுடியும் என்று அரச அதிபர் சங்க முகாம…
-
- 0 replies
- 770 views
-
-
விமானங்கள், ஹெலிகள் நள்ளிரவு, அதிகாலைத் தாக்குதல்கள் நடத்தின கிளிநொச்சி,ஏப்.23 முல்லைத்தீவு நான்காம் கட்டை கடற் கரைப் பகுதியில் நேற்று அதிகாலை 4.45 மணியளவில் மிக் 27 ரக விமானங்கள் றொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத் தாக்குதல்களால் மக்கள் பாதுகாப் புத் தேடி ஓடினர். தொழிலுக்குச் செல்வ தற்குத் தயாரான மீனவர்களும் தமது மீன் பிடி உபகரணங்களை கரையில் விட்டுப் பாதுகாப்புத் தேடி ஓட நேர்ந்தது. அதேவேளை மன்னார் பரப்புக் கண்டல் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு 12.45 மணியள வில் எம்.ஐ.24 ரக ஹெலிக்கொப்டர்கள் தாக்குதல்களை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவித்தன உதயன்
-
- 0 replies
- 921 views
-
-
சுண்டிக்குளம் கடலில் நேற்று மீன்பிடிப் படகு எரிந்து நாசம் கடற்படையினர் தாக்கியதாக முறைப்பாடு உடுப்பிட்டி,ஏப்.23 வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடலில் நேற்று அதிகாலை மீனவர் படகு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியது. அதில் சென்ற மீனவர்களில் ஒருவரான இராசரத்தினம் வசந்தன் (வயது 31) என்ப வரைக் காணவில்லை என்று கூறப்பட் டது. இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை யாவார். அவருடன் உதவிக்குச் சென்ற தங்கராசா சதீஸ்(வயது 25) சக மீனவர் களால் மீட்கப்பட்டுக் கரைக்குக் கொண்டு வரப்பட்டார். படகு மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் படகில் இருந்த ஒரு வரைக் காணவில்லை என்றும் போர்நிறுத் தக் கண்காணிப்புக் குழுவிடம் முறையி டப்பட்டுள்ளது. காணாமற்போனவரைத் தேடும் பணியில் பிரதேச மீனவர்கள் ந…
-
- 0 replies
- 710 views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி போர்ப் பிரகடனம் செய்ய சிறிலங்கா அரசு முடிவு! போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி முழு அளவில் போர்ப் பிரகடனம் செய்ய சிறிலங்கா அரசாங்கம் விரும்புவதே உண்மை நிலைப்பாடு என்று கொழும்பு படைத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவத்துள்ளார். அனைத்துலகின் முழு ஆதரவுடனும் நோர்வேயின் அனுசரணையுடனும் தொடங்கப்பட்ட சமாதான முயற்சியின் அடித்தளமே இந்தப் போர்நிறுத்த உடன்பாடுதான். விடுதலைப் புலிகளின் பலத்தின் அடிப்படையிலேயே இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகள் இன்று பலமிழந்து விட்டதாகக் கருதும் சிறிலங்கா அரசாங்கம், இந்த உடன்பாடானது படையினரின் நடவடிக்கைகளுக்கு மிகப் பெரும் தடையாக இருக்குமெனக் கருதுகிறது. ஆனாலும், இந்த …
-
- 1 reply
- 946 views
-
-
யாழில் புதிய உத்தியாக வெடிகுண்டு அங்கிகளுடன் போராளிகள்: நா.தமிழன்பன். யாழ்ப்பாணத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகள் வெடிகுண்டு அங்கிகளுடன் ஊருவியுள்ளனர் இப்போராளிகள் சோதனையிடப்பட்டால் எதிரியையும் அழித்து தம்மையும் அழிக்கும் புதிய உத்தியை அவர்கள் அங்கு அறிமுகப்படுத்தி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலின் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தற்காப்பு வெடிகுண்டு அங்கியை வெடிக்க வைத்து படைத்தரப்புக்கு இழப்புக்களை ஏற்படுத்தி வீரச்சாவைத்தழுவிய லெப். அறிவுமகன் மற்றும் கப்டன் பிரியதர்சன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத…
-
- 2 replies
- 1.3k views
-
-
வடக்கில் புலிகள் மீது தாக்குதல் நடாத்தப்படும் - ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஹெரணவில் நேற்று இடம்பெற்ற புதுவருட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வடக்கில் உள்ள விடுதலைப்புலிகளின் தளங்கள் மீது இன்னும் சில தினங்களில் தாக்குதல் நடாத்தப்படும் என சிறீலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை கிழக்கிலும் மீட்கப்படாத பகுதிகளும் விரைவில் மீட்க்கப்படும் எனவும் வடக்கை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த வருடத்திற்குள் நாட்டின் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு நாட்டை அபிவிருத்தி பாதைக்கு முன்நகர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரியவருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com…
-
- 2 replies
- 1.3k views
-
-
சரியும் செல்வாக்கைச் சரிக்கட்ட தமிழர் விரோதப் போக்கு கட்டவிழும் ` இலங்கை அமைதி முயற்சிகளுக்கு அனு சரணை வழங்கும் நோர்வேயின் கொழும்புக்கான தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், இன்று கிளிநொச்சி செல்கின்றார். விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை அவர் அங்கு சந்தித்துப் பேசுகின்றார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடந்த வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்த பரி சுத்த திருத்தந்தை பதினாறாவது ஆசீர்வாதப்பர், இலங்கையில் மனித உரிமைகள் பேணப்படுவதை உறுதிப்படுத்தி, அமைதித் தீர்வுக்கான சமாதானப் பேச்சுகளை முன்னெடுப்பதில் தீவிரம் காட்டுங் கள் என்று அவரிடம் வற்புறுத்தியிருக்கின்றார். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன் றியம், ஜப்பான், இந்தியா உட்பட சர்வதேச சமூ …
-
- 0 replies
- 568 views
-
-
முக்கிய இராணுவ முகாம்களில் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை பொருத்துகிறது சிறிலங்கா. தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னரணுக்கு அண்மையாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் வானூர்தி எதிர்ப்பு பீரங்கிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேலும் முக்கிய இராணுவத் தளங்களில் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளும் பொருத்தப்படவுள்ளன என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகவும் தாழ்வாகப் பறக்கும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளைக் கண்டறிவதற்காக மிக நவீன ராடார்களை கொள்வனவு செய்வதிலும் அரசாங்கம் தீவிர அக்கறை காட்டி வருகின்றது. வான் புலிகள் மீண்டும் ஒருமுறை வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்திவிடக் கூடாது என்பதில் படைத்தரப்பு தீவிர கவனம் செலுத்துகின்றது என்றும் தெரிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 668 views
-
-
'விடுதலைப் புலிகளின் உத்தரவாதங்களை நம்புவதற்கு அரசு தயாராக இல்லை': கேகலிய சமாதான பேச்சுவார்த்தை தொடர்பாக விடுதலைப் புலிகளின் உத்தரவாதங்களை நம்புவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை" என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சமாதான செயற்பாடுகளின் தற்போதைய நிலைமை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்ததாவது: "புனித பாப்பரசரின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்கின்றது. காரணம் பாப்பரசரின் கோரிக்கைக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கும் இடை யில் வித்தியாசங்கள் இல்லை. இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கவேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. பேச்சுவார்த…
-
- 0 replies
- 688 views
-
-
இறுதிக் கட்டப் போருக்கு கிழக்கில் தயாராகும் படையினர் விதுரன் வன்னியில் தினமும் வான்வழித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இரவு - பகலெனத் தொடரும் இந்தத் தாக்குதல், இலக்குகளை குறிவைப்பதைவிட எழுந்தமானமாக கண்டபடி மேற்கொள்ளப்படுகிறது. வான் புலிகளைத் தேடியே விமானப் படையினர் இந்தக் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். புலிகளின் வான் வழித் தாக்குதலையடுத்து அவசர அவசரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் சில மாற்றங்களைச் செய்த படைத்தரப்பு தற்போது வான் புலிகளின் அடுத்த வருகைக்காக காத்திருக்கின்றனர். வான் புலிகளை வரவழைப்பதற்காகவே வன்னியில் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடைபெறுகின்றன. கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீதான தாக்குதல் வான் புலிகளை முழு உலகிற்கும் அறிமுகப்படுத்த…
-
- 4 replies
- 2.3k views
-
-
அரசு எதிர்நோக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு -(பீஷ்மர்) கடந்த இரண்டு மூன்று வாரங்களாக கொழும்பு நிலைப்பட்ட தென்னிலங்கை அரசியல் போக்குகளின் பிரதான பண்புகளாக பின்வருவனவற்றைக் கூறலாம். முதலாவது இலங்கையில் பிரதானமாக கொழும்பில் நடைபெறும் அரச நிலைப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளமை. இரண்டாவது யு.என்.பி.அரசாங்க எதிர்ப்பை மிக வேகமாக தூண்டியுள்ளமை. மூன்றாவது இவற்றின் தாக்கங்கள் காரணமாக ஜனாதிபதி நிர்வாக மட்டத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளமை. இந்த அரசியல் உஷ்ண அதிகரிப்பின் பிரதான அம்சம் தமிழர் பிரச்சினையோ விடுதலைப் புலிகள் பிரச்சினையோ பெரிய முக்கியத்துவம் பெறாமையாகும். சடங்காசாரமான குறிப்புகள் உண்டெனினும் மேற்கூறிய பிரச்சினையின் வெடிப்புக்கு தம…
-
- 0 replies
- 751 views
-
-
சிறீலங்கா படையினரின் எட்டு ஆளஊடுருவும் படையினர் காணாமல் போயுள்ளார்கள் கடந்த 11ம் திகதி வவுனியா மன்னார் எல்லையில் உள்ள முள்ளிக்குளம், பாலமோட்டை பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் ஊடுருவிய எட்டு சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. விசேட பயிற்சி பெற்ற எட்டு ஆழஊடுருவும் இராணுவத்தினரே காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் விடுதலைப்புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கல
-
- 2 replies
- 1.4k views
-
-
காணாமல் போனோர் விவகாரத்தில் ஐநா தலையீடு அண்மையில் சிறீலங்காவில் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடர்பில் விரைவாக விசாரணைகள் நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை சிறீலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் மூன்று மாதகாலப்பகுதிக்குள் விரிவான விளக்க அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பணித்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை காணாமல் போனோரை தேடியறியும் குழு ஐக்கிய நாடுகள் சபைக்கு காணாமல் போனோரின் விபரங்களை நாட்டின் நிலைதொடர்பாகவும் விளக்கி கடிதம் எழுதியுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. http://www.pathivu.com/
-
- 0 replies
- 765 views
-
-
சிறார்களை பணத்திற்கு வாங்கும் கருணா குழுவினர் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் சிறார்களை தமது படையில் சேர்ப்பதற்கு அவர்களுக்கு பெருமளவு பணத்தை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறார்களை கருணா குழுவில் சேர்க்கும் குடும்பங்கள் மாதா மாதம் 6,000 ரூபாய்களை பெறுவதாகவும், அந்தப் பணத்தைக்கொண்டு அவர்கள் எதனையும் செய்யலாம், இது அவர்களுக்கு பெரும் தொகையாகும் என தனது பெயரை குறிப்பிட விரும்பாத உள்ளுர் வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். கருணா குழுவினரின் இந்த நடவடிக்கைகள் மூலம் கடத்தப்பட்டுள்ளதாக செய்யப்படும் முறைப்பாடுகள் குறைவடையலாம் என தெ…
-
- 6 replies
- 1.5k views
-
-
மகிந்த ராஜபக்ஷ - மங்கள சமரவீர சமரச முயற்சியில் அலவி மௌலானா சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவித் தலைவரும், மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலானா, பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேசியுள்ளார். முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியாராச்சி ஆகியோரை அமைச்சு, மற்றும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ நீக்கிய பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரிய குழப்பங்களும், பிளவுகளும் தோன்றியிருந்தன. இதனைத் தொடர்ந்து, பௌத்த துறவி ஒருவரும், அலவி மௌலானாவும் சமரச முயற்சியில் ஈடுபட்டதன் பின்னணியில் நேற்று கொழும்பில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிவ…
-
- 2 replies
- 920 views
-
-
எண்ணிக்கை தெரியாத பறப்புக்களில் ஈடுபடும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள்: கொழும்பு வார ஏடு. தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் எண்ணிக்கை தெரியாத பறப்புக்களில் வன்னியில் ஈடுபட்டுள்ளது என்றும், அவர்களின் வானூர்திகளில் ஒன்று மணலாற்றுப் பகுதியில் உள்ள பதவியாவில் அவதானிக்கப்பட்டுள்ளது என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் வார ஏடு தெரிவித்துள்ளது. சண்ட ரைம்ஸ் வார ஏட்டின் பாதுகாப்புத்துறை ஆய்வாளரான இக்பால் அத்தாஸ் தனது பத்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த பத்தியிலிருந்து சில முக்கிய பகுதிகள்: வன்னியில் பறப்புக்களில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் வானூர்திகள் ஒரு சமயத்தில் வானில் இருந்து தரைக்கு ?டுகளையும் வழங்கி பயிற்சிகளில் ஈடுபட்டதாக சிறிலங்காவின்…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்கா இராணுவம் வவுனியா கிராமங்கள் மீது ஆட்லொறி தாக்குதல்கள் தீவிரம் இன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பின்னர் சிறிலங்கா பாதுகாப்பு படையினர் வவுனியா புலிகளின் கட்டுபாட்டு பகுதியில் உள்ள எல்லைக்கிராமங்கள் பாலபோட்டை , குஞ்சுக்குளம் , நாவவி , புளியங்களம் மற்றும் சேமமடுப்பகுதி மீது ஆட்லொறி தாக்குதல் நடத்தி வருகிறார் என தமிழ்நெட் இணையத்தளம் தெரிவிக்கின்றது . ஆனால் இதுவரை குடிமக்கள் சேதவிபரங்கள் தெரியவரவில்லை ஏற்கனவே இந்த பகுதியில் மக்கள் இடம்பெயர்து பாதுகாப்பான இடங்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர் இருந்த போதும் குடிமனைகள் மீது பற்றுள்ளவர்கள் இடம் பெயராமல் இருப்பதாகவும் அவர்களின் நிலமை என்ன என்பது குறித்து தெரியவரவில்லை எனவும் அச்செய்தி குறிப்பிடுகிறது - வீரகேசரி
-
- 0 replies
- 758 views
-