Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'ஊடகவியலாளர்கள் விசர் நாய்கள்': நிமால் சிறீபால டீ சில்வா "ஊடகவியலாளர்கள் விசர் நாய்கள் போல் நடந்தால் அவர்களுக்கு விசர் நாய் தடுப்பூசி போட வேண்டும்" என சிறீலங்காவின் மூத்த அமைச்சரான நிமால் சிறீபால டீ சில்வா தெரிவித்த கருத்துக்கு சுதந்திர ஊடக இயக்கம், சிறிலங்கா ஊடகவியலாளர் தொழிற்சங்கம் என்பன தமது கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக அவர்களால் விடுக்கப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "அரசாங்க மருத்துவமனைகளில் சிறப்புச் சலுகைகளை பெறுவதற்கு ஏதுவாக அமைச்சரினால் ஊடகத்துறையினருக்கு சிறப்பு அடையாள அட்டைகளை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட கருத்தும் கண்டனத்துக்குரியது. சுகாதார சேவைகள் பிரிவில் ஏற்பட்ட சில குறைபாடுகளை சுட்டிக் க…

  2. அனைத்துலக கண்காணிப்புக் குழு அமைக்கப்படுவதற்கு ஐ.தே.க ஆதரவு சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு அனைத்துலக கண்காணிப்புக் குழுவினர் அமைக்கப்பட வேண்டும் என்பதனை தாம் ஆதரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பொதுமக்கள் கண்காணிப்பு குழுவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். உள்ளுர் விசாரணைகள் போதுமானதாக இருக்காது எனில், நாம் அனைத்துலக நாடுகளின் உதவிகளை பெறுவோம் என அங்கு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்தார். காணாமல் போன உறவினர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஒரு ச…

    • 0 replies
    • 668 views
  3. ] "சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு புதிதாக எந்த முயற்சிகளும் ஆரம்பிக்கப்படவில்லை" என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. "புதிதாக இங்கு ஒன்றும் இல்லை, கடந்த வாரம் விடுதலைப் புலிகளை நாம் சந்தித்த போது புதிய அணுகுமுறைகளோ அல்லது புதிய திட்டங்களோ விவாதிக்கப்படவில்லை. அது ஒரு வழமையான சந்திப்பு" என போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தொபினூர் ஓமார்சன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கண்காணிப்புக் குழுவினர் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளை சந்தித்த போது, மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதற்கு அரசாங்கமும் பேச்சுக்க…

  4. இரட்டைவேட அணுகுமுறையும் இடதுகளின் இரட்டைத்தன்மையும் -சி.இதயச்சந்திரன்- தினகரன் பத்திரிகைச் செய்திகளைத் தவிர, வேறெதற்காகவும் வாசிக்கலாம் என்பது பொதுவான ஞானம் என்பதால் தமிழ் மக்களுக்கு உற்சாக ஊசி மருந்து ஏற்றும் பணி இப்போதைக்கு செவ்வனே நடைபெறுகின்றதென்று ஒரு பத்தி எழுத்தாளர் அண்மையில் எழுதியிருந்ததை படிக்கும் வாய்ப்புக்கு கிட்டியது. தமிழ் ஊடகச் செய்தித்துறையில் பல ஆரோக்கியமான சமூக வயப்பட்ட கட்டுரைகளும் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன. எனினும் ஒட்டுமொத்த ஆக்கங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அழுது புலம்புவதாகவும், படைகள் மீதான தாக்குதல் வெற்றி பெற்றால் ஆரவாரிப்பதைத் தவிர வேறு அரசியல் ஏதுமற்றதாகவும் காணப்படுவதாக மேம்போக்கான குற்றச்சாட்டை இப்பத்தி எழுத்தாளர…

    • 0 replies
    • 638 views
  5. ஆட்சிக்கு வந்தால் தமிழ் அகதிகள் உள்ள 'நௌரு' தடுப்பு நிலையம் மூடப்படும்: அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர். ஆட்சிக்கு வந்தால் தமிழ் அகதிகள் உள்ள 'நௌரு' தடுப்பு நிலையம் மூடப்படும் என்பதே எமது கட்சியான தொழிற்கட்சியின் நிலைப்பாடாகும் என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் கெவின் றட் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளாக வந்துள்ள 83 பேரையும் அகதிகளாக ஏற்க உதவ வேண்டும் எனக்கோரி பிறிஸ்பேர்ன் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அனுப்பிய கடிதத்துக்கு அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அளித்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவுஸ்திரேலியா எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெவின் றட் பிறிஸ்பேர்ன் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்திற்கு…

  6. யாழில் கடந்த வாரம் 9 இராணுவத்தினரைக் காணவில்லை யாழ் குடாநாடு மந்துவிலில் கடந்த வாரத்தில் மட்டும் 9 சிறீலங்கா இராணுவத்தினர் காணாமல்ப் போயிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6 சிறீலங்கா இராணுவத்தினரும், புதன்கிழமை 3 இராணுவத்தினரும் காணாமல்ப் போயுள்ளனர். இவர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மந்துவில் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், மக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.pathivu.com/

  7. "சிறிபதிக்கு நேர்ந்த கதியே உனக்கும்" ஜோன்ஸனுக்கு தொலைபேசி வழியாக கொலை மிரட்டல். ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸன் பெர்னாண் டோவிற்கு தொலைபேசி வழியாக தொடர்ந்தும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன என்று அவரே தெரிவித்திருக்கிறார். கோத்தபாய ராஜபக்ஷவை விமர் சிப்பதை நிறுத்தாவிட் டால், சிறிபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் ஏற்படும் என்றும், இல்லாவிட்டால் கொலைசெய்து புதைத்து விடுவோம் என்றும் தொலைபேசி மூலம் தன்னுடன் பேசிய ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஜோன்ஸன் உதயனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் குரு நாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சபா நாயகருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இது குறித்து அ…

  8. திருமலையில் 23 பேர் கைது. திருமலை நகரப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் போது 23 பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் செய்யப்பட்டு வருவதாகவும், அவர்கள் தமது அடையாளங்களை நிரூபிக்கத் தவறியிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். தமிழ் - சிங்கள புதுவருடத்தின் போதான பாதுகாப்பை முன்னிட்டே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் முடிவில் இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் குற்றம் புரிந்திருந்தால் நீதிமன்றத்தில்…

  9. தமிழருக்கு சர்வ சித்திகளும்தரட்டும் சர்வசித்து ஆண்டு! எக்கணமும் தரிப்பின்றி, முன்னோக்கிச்சீரா கச் சுழன்று கொண்டிருக்கின்றது நேரச் சக்கரம். தங்கு தடையின்றி ஓடிக்கொண்டிருக்கின்றது காலநதி. காலதேவனின் இந்த நெறி தவறா இடை யறா அசைவியக்கத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக நியதி; தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்; மாறாத யதார்த்தம். மனித இருப்பு என்பதும் வாழ்வு என்பதும் காலத்தின் பாதையில் இடம்பெறும் ஒரு பயணம். ஜீவனுள்ள அசைவியக்கம். இந்தப் பயணத்தில் ஒரு கணமும் தரித்து நிற்க முடியாதவாறு மனிதனை நகர்த்திச் செல்கிறது காலம். காலத்தில் மிதந்து கொண்டு நமது வாழ்வுப் பயணம் நகர்கிறது. நடந்து முடிந்தது இறந்தகாலமாகவும், நடக்கப்போவது எதிர்காலமாகவும், நடப்பது நிகழ்காலமாகவும் நம…

  10. வத்திக்கான் செல்கிறார் மகிந்த [வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2007, 14:01 ஈழம்] [சி.கனகரத்தினம்] வத்திக்கானில் பாப்பரசர் பெனடிக்ட்டை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச உள்ளார். வத்திக்கானுக்கு எதிர்வரும் வாரம் மகிந்த் ராஜபக்ச பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாப்பரசர் விடுத்திருந்த ஈஸ்டர் திருநாள் செய்தியில், தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் வன்முறைகளை நிறுத்தி பேச்சுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் சிறிலங்கா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கத்தோலிக்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு பாப்பரசரை மகிந்த சந்திக்க உள்ளார். இக்குழுவில் வெளிவிவகார அ…

  11. ‘பொடா’ விடுதலைக்குப்பின் மனம் திறக்கிறார் பழ.நெடுமாறன்... ‘‘புலிகளை சிறுமைப் படுத்தாதீர்கள்!’’ தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ.நெடுமாறன் முகத்தில் விடுதலையின் சிரிப்பு! போராட்டங்களும் தண்டனைகளும் அவருக்குப் புதிதில்லை. கனவில் சுமந்த லட்சியங்களுக்குப் பரிசாக யதார்த்தம் தந்த காயங்களுக்கு கணக்கே இல்லை. ஆனாலும், பக்குவத்தின் புன்னகையை தன்னுடனேயே வைத்திருக்கிறார்... நிதானத் தால் நம்பிக்கையை விதைக்கிறார் மனிதர். கண் களிலோ தீராமல் திமிறும் வேங்கையின் கூர்மை. பொடா வழக்கிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அவரைச் சந்தித்தோம். ‘‘ ‘பொடா’ வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கபட்டு இருக்கிறீர்கள்? ஆனால், இதே சட்டத்தில் வழக்குப் போடப…

  12. வெள்ளி 13-04-2007 21:52 மணி தமிழீழம் [மகான்] ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் படையினரால் உழப்பட்டு தென்னமரங்கள் நாட்டப்படுகின்றன வாகரை ஆக்கிரமிப்புக்கு பின்னர் வாகரை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிறீலங்காப் படையினரால் உடைக்கப்பட்டு நிலம் உழப்பட்டு அங்கு படையினரால் தென்னமரங்கள் நாட்டப்படுவதாக தெரியவருகிறது. இதேநேரம் வாகரையில் பழைய விகாரை ஒன்று இருந்ததாகத் தெரிவித்து படையினர் வெள்ளரசம் மரம் ஒன்றை அங்கு கொண்டுவந்து நாட்டியுள்ளதாக திருமலைச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. சிறீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் தற்பொது தமிழர்ர் தாயகத்தை ஆக்கிரமித்து சிங்கள மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருதை அவதானிக்கக்கூடியதாக தெரியவருகிறது. மூலம் - பதிவு

  13. இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த படகு-12 சிங்களர்கள் கைது ஏப்ரல் 12, 2007 தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த இலங்கையை சேர்ந்த 12 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றிரவு கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, தூத்துக்குடிக்கு கிழக்கே மன்னார் வளைகுடா பகுதியில் 12 பேர் கொண்ட மரியா என்ற படகு வந்தது. அதை சந்தேகத்தின் பேரில் வழி மறித்து சோதனையிட்டபோது அதில் ஏராளமான ஆயுதங்கள் இருந்தன. அதிலிருந்த அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இவர்களை கைது செய்து தூத்துக்குடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் கடல் கொள்ளையர்களா அல்லது தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்த வந்தவர்களா என ப…

  14. ஹாட்லியில் 6 மாணவர்களுக்கு 10 ஏ 8 பேருக்கு 9 ஏ, 13 பேருக்கு 8 ஏ கடந்தவாரம் வெளியான க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 6 மாணவர்கள் 10 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சிறப்பாகத் தேறியிருக்கிறார்கள். மேலும், 8 மாணவர்கள் 9 பாடங்களிலும் 13 மாணவர்கள் 8 பாடங்களிலும் ஏ சித்திகள் பெற்றிருப்பதாக கல்லூரி அதிபர் நடராஜா தெய்வேந்திரராஜா அறிவித்திருக்கிறார். சண்முகரத்தினம் கோகுல், சுபேந்திரன் பிரசாந், சிவராஜா ராகுலகீதன், ரவீந்திரன் செந்தூரன், கதிரமலை உமாசுதன், ஞானசம்பந்தன் அபிராம் ஆகிய மாணவர்களுக்கு 10 பாடங்களிலும் ஏ சித்தி கிடைத்திருக்கிறது. 9 பாடங்களில் ஏ சித்தி பெற்றவர்களின் விபரம் வருமாறு: அரியரத்தினம் அஜந்தன், தர்மகுலசி…

    • 15 replies
    • 3.1k views
  15. கடற்படையினரால் பத்து வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு. - பண்டார வன்னியன் Friday, 13 April 2007 11:31 தீவகத்தில் உள்ள மண்கும்பான் பகுதியில் சிறுமி மீது கடற்படையினர் பாலியல் வல்லுறவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். வீட்டிலிருந்து வெளியே விளையாடச் சென்ற பத்து வயது சிறுமி மீது அப்பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே இந்தப் பாலியல் வன்செயல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனை இரண்டு கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். கடற்படையினரின் கட்டுபாட்டில் உள்ள மண்கும்பான் பகுதியில் இருந்து இந்த குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் தமது வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணத்திற்கு வர முயற்சித்த போதிலும் கடற்படையினர் அவர்களை பயமுறுத்தி யாழ்ப்ப…

  16. வான்புலிகள் வீசியது 6 குண்டுகள்: சிறிலங்கா அரசாங்கம். கட்டுநாயக்க சிறிலங்கா வான்படை தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையின் 6 குண்டுகளை வீசியதாக சிறிலங்கா அரசாங்க ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், 6 குண்டுகள் வீசப்பட்டதாகவும் அவற்றில் 5 வெடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்கா வான் படையினரோ முன்னர் 4 குண்டுகளையே வான்புலிகள் வீசியதாகத் தெரிவித்திருந்தனர். வான் புலிகளின் தாக்குதல் தொடர்பான வான்படை மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணை அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படக்கூடும் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. -Puthinam

    • 4 replies
    • 2.4k views
  17. கிழக்கு மாகாணம் இரு மாதங்களில் கட்டுப்பாட்டுக்குள் வரும் - படைத் தளபதி. தமிழர் தாயகத்தின் கிழக்குப் பகுதியை இன்னும் இருமாதங்களுக்குள் சிங்களப் படையினர் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர் என கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதி தயா ரட்ணநாயக்க தெரிவித்துள்ளார். தற்பொழுது கிழக்கின் பகுதிகளில் கைப்பற்றி படிக்படியாக முன்னேறும் நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். இதேநேரம் கிழக்கு மாகாணத்தை தமிழ் சி்ங்களப் புத்தாண்டுக்குள் கைப்பற்றிவிடுவோம் என சீறீலங்கா அதிபர் தெரிவித்திருந்த போதும் கிழக்கு மாகாண தளபதி தயா ரட்ணநாயக்க தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. -Pathivu-

    • 12 replies
    • 2.7k views
  18. வெள்ளி 13-04-2007 17:00 மணி தமிழீழம் [தாயகன்] கிழக்கு மாகாணத்தில் பணிகள் இரட்டிப்பு - உலக உணவுத் திட்ட அமைப்பு கிழக்கு மாகாணத்தில் தமது பணிகள் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்ட அமைப்பு அறிவித்துள்ளது. பல்லாயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, இதுவரை இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு மூவாயிரம் தொன் அரிசியை நிவாரண உதவியாக வழங்கியிருப்பதாகவும், உலக உணவுத் திட்ட அமைப்பு அறிவித்துள்ளது. ஜப்பான் அரசாங்கம் அன்பளிப்புச் செய்த 17 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியில் இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டதாக, உலக உணவுத் திட்ட அமைப்பின் அறிக்கையில் க…

  19. கடத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க சர்வதேசம் உண்மையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் - செ.கஜேந்திரன். - பண்டார வன்னியன் Friday, 13 April 2007 17:10 யாழ்குடாநாட்டில் தொடரும் ஆட்கடத்தல்களையும் கொலைகள், பாலியல்வல்லுறவுகள் போன்ற சம்பவங்களைத் தடுத்துநிறுத்தக் கோருவதுடன் கடத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க சர்வதேசம் உண்மையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்குடாநாட்டில் ஏப்ரல் மாதம் 01ம் திகதிக்குப் பின்னர் 10நாட்களில் மட்டும் 05பேர் கொலைசெய்யப்பட்டுள்ளதுடன் 06பேர் கடத்தப்பட்டுமுள்ளனர். இவை அனைத்தும் சிங்கள இராணுவத்தினராலும் துணைஇராணுவக்குழுவினரான ஈ.பி.டி.பி யினராலுமே மேற்கொள்ளப்பட்ட…

  20. போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இல்லை - கோத்தபாய ராஜபக்ஸ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் என்ற ஒன்று இல்லை எனவும், ஒப்பந்தம் இருப்பதாகக் கூறுவதில் அர்த்தம் இல்லை என்றும், சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக வார்த்தை அளவில் மாத்திரமே அர்த்தமற்ற ஒப்பந்தமாக இது இருக்கின்றது என்றும், அசோசியேட் பிறஸ் ஊடகத்துடனான நேர்காணலில் கோதபாய ராஜபக்ஸ கூறியுள்ளார். கடந்த சில மாதங்களில் கிழக்கில் விடுதலைப் புலிகளுடனான போரில் கணிசமான வெற்றிகளை தமது இராணுவம் பெற்றது என்றும், இந்த வெற்றி தற்பொழுது வடக்கு நோக்கி நகர்த்தப்படுவதாகவும் கோத்தபாய மேலும் கூறினார். சிறீலங்கா அரசுத் தலைவர் ம…

  21. வெள்ளி 13-04-2007 14:23 மணி தமிழீழம் [மோகன்] யாழில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை வியாழக் கிழமை மாலை 6.30 மணியளவில் உந்துருளியில் சென்ற இனம் தெரியதா ஆயுததாரிகளால் சாந்தை பகுதி சங்கானையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் இவருடன் இருந்த நண்பர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதன் போது கொல்லப்பட்டவர் 24 அகவையுடைய தவராசா மூர்த்தி எனவும் தனது நண்பனின் மனைவிக்கு முதலாவது குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட குருதியிழப்பை ஈடுசெய்ய குருதி வழங்கிவிட்டு வரும் வழியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது காயமடைந்தவர் தையல் தொழில் புரியும் 21 அகவையுடைய மாணிக்கம் தவராசா எனவும் இனம் காணப்பட்டுள்ளார். மூலம் - பதிவு

  22. சர்வதேச மன்னிப்புச் சபைக்கு எதிராக ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம். சர்வதேச மன்னிப்புச் சபையையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் எதிர்த்து ஜே.வி.பி.யினர் வியாழக்கிழமை காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பி. யின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். சர்வதேச மன்னிப்புச் சபையை விரட்டவேண்டும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை தோற்கடிக்கவேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டதின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய…

  23. கிழக்கைப் பறித்தெடுக்கும் பாதகம் ` கிழக்கு மாகாணத்தை, மிகக் குறிப்பாக திரு கோணமலையை, முற்றுமுழுதாகச் சிங்கள மயப் படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் முழு மூச் சில் செயற்பட்டு வருகிறது. எல்லோரும் அறிந்த இந்த விடயத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் இந்தியாவின் கவ னத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். 1987ஆம் ஆண்டில் கைச்சாத்தான இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு, ஒரே மாகாண சபை நிர்வாகம் கொண்டுவரப்பட்டது. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் மூலம் கிடைத்த சொற்ப விளைச்சலாக, பத்தொன்பது வருடங்களாக அது துளி அளவான அதிகாரப் பகிர்வு முறைக்கு வழி செய்தது. நிர்வாக அதிகா…

  24. வட தமிழீழத்தில் நேற்றிரவு நடைபெற்ற மோதல் ஒன்றில் 10 ற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளிற்கு எதிராக தாக்குதல் நடத்திய படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே 10ற்கும் அதிகமான படயினர் கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடபகுதி முன்னரங்க பாதுகாப்பு நிலைகள் மீது புலிகள் நடத்திய தாக்குதலின்போது ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதுடன் மேலும் நால்வர் காயமடைந்ததாகவும் இதனைத் தொடர்ந்து படையினர் நடத்திய பதில் எறிகணைத் தாக்குதலில் 20 புலிகள் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் ரொய்ட்டசின் ச…

  25. யாழ் குடாநாட்டுக்கான செல்லிடப்பேசி சேவை துண்டிப்பு. யாழ்ப்பாணக் குடாநாட்டின் முன்னணி பாதுகாப்பு நிலைகளை நோக்கி நேற்று புதன்கிழமை சிறிலங்காப் படையினர், படையினரையும், ஆயுத தளபாடங்களையும் நகர்த்தி வந்ததுடன், பலாலி படைத் தளத்தில் இருந்து வழங்கப்படும் குடாநாட்டுக்கான செல்லிடப்பேசி இணைப்புக்களையும் துண்டித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாள் முழுவதும் பலாலி படைத் தளத்தில் இருந்து கனரக வாகனங்களில் பொருட்கள் முன்னணி நிலைகளுக்கு படையினர் நகர்த்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -Puthinam-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.