ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
தலைமன்னார் கடலில் படகில் சென்ற மீனவர் மீது துவக்கு சூடு; ஒருவர் பலி தலைமன்னார் கடற்பரப்பில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 32 வயதுடைய மீனவரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை இரவு தலைமன்னார் கடற்பரப்பில் கண்ணாடியிழைப் படகில்சென்ற மூன்று மீனவர்கள் மீது படகொன்றில்சென்ற இனந்தெரியாத நபர்கள் கடும் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான எஸ். நெல்சன் படுகாயமடைந்து கடலில் வீழ்ந்துள்ளார். இதையடுத்து, குறித்த படகில் பயணம் செய்த ஏனைய இரண்டு மீனவர்களும் படகுடன் கரையை நோக்கி தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டு காயத…
-
- 0 replies
- 597 views
-
-
அரச சார்பற்ற அமைப்பான Centre for Policy Alternatives.. கொழும்பில் உள்ள Social Indicator என்ற புள்ளிவிபரம் சேகரிக்கும் அமைப்பின் உதவியோடு சிறீலங்காவில் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில் போர் மூலம் புலிகளைத் தோர்க்கடித்து அதன் பின் பேச்சுவார்தைகள் மூலம் தீர்வு எட்ட வேண்டும் என்ற எண்ணப்பாடு சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளமை வெளிப்பட்டுள்ளது..! பெரும்பாலான சிங்களவர்கள் மகிந்தவின் செயற்பாடுகளை ஆதரிப்பதோடு அவர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணுவார் என்றும் நம்புகின்றனர்..! பெரும்பாலான சிங்கள மக்கள் புலிகள் போர் நிறுத்ததைக் சரி வர கடைப்பிடிக்கவில்லை என்று கருதுகின்றனர்..! பெரும்பாலான சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அரசு மனித உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்ட…
-
- 20 replies
- 3.6k views
-
-
இலங்கை இனப்பிரச்சனைக்கு சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு உட்பட்டு தீர்வு காண முடியாது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் சார்பில் "ஈழத் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களும்-தீர்வுகளும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம், ஈழத்தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மனித உரிமை இயக்க மாநிலத் தலைவர் பூமொழி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். இந்நிகழ்வில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசியதாவது: இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்தே அங்கு இனப்பிரச்சினை நீடிக்கிறது. ஈழத்தமிழர்களை சிறிலங்கா அரசு இரண்டாம்தர குடிமக்களாக நட…
-
- 1 reply
- 717 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் தொடர்ந்தும் விசாரணை சிறிலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்டபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் தொடர்ச்சியாக 10 மணிநேரம் இவரிடம் விசாரணைகளை நடத்திய பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், மீண்டும் நாளை திங்கட்கிழமை (09.04.07) அவரை விசாரணைகளுக்கு அழைத்துள்ளனர். தென்னிலங்கையில் இருந்து வாகனம் ஒன்றை கொண்டு சென்று விடுதலைப் புலிகளிடம் கையளித்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இதனை மறுத்த சிவாஜிலிங்கம், அவர்கள் குற்றம் சுமத்துவது போல எந்த ஒரு வாகனத்தையும…
-
- 0 replies
- 582 views
-
-
[06 - ஆப்ரில் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] * சபையில் சம்பந்தன் வலியுறுத்தல் -டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களைக் கட்டுப்படுத்த இலங்கையரசு தவறிவிட்டதால், உடனடியாக ஐ.நா.கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வரவேண்டுமென வலியுறுத்திய தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் பேசும் மக்களின் தாயக பூமியான கிழக்கு மாகாணம் முழு வீச்சில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாகவம் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த இரா. சம்ப…
-
- 0 replies
- 624 views
-
-
யாழ் குடாநாட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள்? யாழ். குடாநாட்டில் படையினரால் நேற்று முதல் பல இடங்களில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள், பீரங்கிகள் நிறுவப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமராட்சி வல்வைபாலம், குடத்தனை, தென்மராட்சி, கெற்பொலி, வரணி, தனங்கிளப்பு, எழுதுமட்டுவாள், மருதங்குளம் பகுதியிலும், நாவற்குளம் அரசடி உணவுக்களஞ்சியம் முன்னும், உள்ள படைமுகாமிலும் படையினரால் இவ்வாயுதங்கள் முதன்முறையாக தற்பொழுது அவசர அவசரமாக நிறுவப்பட்டு வருகிறது. நேற்று மாலை 4.30 மணியளவில் ஏ-9 சாலை வழியாக பலாலியில் இருந்து கொடிகாமம் ஊடாக மிருசுவில் கொண்டுவரப்பட்ட அதியுயர் கொண்டைனர்கள் மூன்று குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள மக்கள் இவ்வாயுதங்கள் விமான எதிர்ப்பு ஆயுதங்களா…
-
- 6 replies
- 2.7k views
-
-
கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரியில் க.பொ.த (சா.த) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 85 வீதமானவர்கள் க.பொ.த உயர்வகுப்பில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இம்முறை கணிதம், விஞ்ஞானம் ஆகிய துறைகளிலேயே அதிக மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் மேற்படி பாடசாலையின் விடுதி மாணவர்கள் அனைவருமே உயர்வகுப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். இப்பாடசாலை 1983ம் ஆண்டுக்கு பின்னர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து தடைக்கற்களை தாண்டி இன்று ஒரு சிறந்த பாடசாலையாக திகழ்வதற்கு பாடசாலை அதிபர் மதனராஜாவின் அயராத முயற்சியே காரணமாகும். வசதி குறைந்த மாணவர்களை அதிகமாக கொண்ட இப்பாடசாலைக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுத்து இப்பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அதிபர் ஆற்றிய சே…
-
- 4 replies
- 1.4k views
-
-
சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த மூன்று போராளிகளின் விபரங்கள் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் கடற்பரப்பில் நேற்று இடம்பெற்ற மோதலில் கப்டன் றெஜி என்றழைக்கப்படும் காலியை சேர்ந்த பரமசிவம் சுப்பிரமணியம் என்ற போராளி வீரச்சாவை தழுவிக்கொண்டுள்ளார். திருமலை உப்பாறில் கடந்த 30 ம் திகதி இடம்பெற்ற மோதலில் கப்டன் ஈழவேந்தன் என்றழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தை சொந்த இடமாகவும் மல்லாவி யோகபுரம் வளநகரை பிந்திய முகவரியாகவும் கொண்டிருந்த மரியதாஸ் அந்தோனி என்ற போராளி வீரச்சாவை தழுவியுள்ளார். கடந்த 1998 ம் ஆண்டு ஜீன் மாதம் 20 ம் திகதி வன்னி மாங்குளத்தில் இடம்பெற்ற ஜெயசுக்குறு சமரில் வீரவேங்கை வெற்றிவேந்தன் என்றழைக்கப்படும் மலையகம் கண்ட…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலின் போது மகிந்த ராஜபக்ச என்ன செய்து கொண்டிருந்தார் என்று சிங்கள ஏடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. சிங்கள ஏடுகளில் வெளியாகி உள்ள செய்தி விவரம்: பி.பி.சி. மற்றும் சி.என்.என். செய்திகளை வழக்கமாக தொலைக்காட்சியில் பார்க்கும் வழக்கமுள்ள மகிந்த ராஜபக்ச, வான்புலிகள் தாக்குதல் நடத்திய இரவு தொலைக்காட்சியைப் பார்த்தபடியே தூங்கிவிட்டார். வான்புலிகள் நள்ளிரவு 12.45க்கு தாக்குதல் நடத்தியபோது அந்த செய்தி மகிந்தவுக்கு அவசரமாகத் தெரிவிக்கப்பட்டது. உடனே தனது சகோதரரான பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வான்புலிகளின் விமானங்களை சுட்டுவீழ்த்துமாறு உத்தரவிட்டுள்ளார். ஆனால், தமது விமானங்கள் மி…
-
- 8 replies
- 2.6k views
-
-
[சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2007, 12:31 ஈழம்] [கி.தவசீலன்] "இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் ஒரே பாதுகாப்பு அரணாக உள்ள விடுதலைப் புலிகளால் மட்டுமே அங்குள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க முடியும் என்று தற்போதும் முழுமையாக நம்புகின்றோம்" என பாரிஸ் தமிழ் வணிகர் சங்கத்தினர் பிரான்ஸ் அரசாங்கத்துக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.04.07) அதிகாலை 5 மணியளவில் பிரான்சில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் 17 பேரை 'பயங்கரவாதிகள்', 'கட்டாயமாக பணம் வசூலித்தனார்' என்ற குற்றச்சாட்டுகளில் பிரான்ஸ் காவல்துறையினர் கைது செய்தமையை மறுத்து, பாரிஸ் தமிழ் வணிகர் சங்கத்தினர் அறிக்கை தயாரித்து சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்…
-
- 0 replies
- 713 views
-
-
தொல். திருமாவளவன் [சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2007, 18:10 ஈழம்] [தாயகத்திலிருந்து க.தெய்வேந்திரம்] இந்திய அரசாங்கம், சிறிலங்காவுக்கு கொடுக்கும் ஓர் எச்சரிக்கையாக, சென்னையில் இருக்கும் சிறிலங்கா தூதுவர் அம்சாவைத் திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழ்நாட்டு வார ஏடான ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். "தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்களே? இதற்கு என்னதான் தீர்வு?" என ஆனந்த விகடன் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தொல். திருமாவளவன் தெரிவித்தார். அவரது விபரமான பதிலாவது: "சிங்கள இனவெறி பிடித்த சிறிலங்கா அரசாங்…
-
- 0 replies
- 756 views
-
-
ஞாயிறு 08-04-2007 00:15 மணி தமிழீழம் [சிறீதரன்] தினக்குரல் பத்திரிகையின் யாழ் அலுவலகம் படையினரால் சோதனை தினக்குரல் பத்திரிகையின் யாழ்ப்பாணக் கிளையின் அலுவலகம் இன்று சிறீலங்காப் படையினரால் சோதனை செய்யப்பட்டுள்ளது. சிறீலங்காப் படையினர் குவிக்கப்பட்டு தினக்குரல் பத்திரிகையின் யாழ் அலுவலகம் மீது தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆசிரியர் அலுவலகமே தீவிரமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பதிவு
-
- 1 reply
- 786 views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் கிழக்கு மாகாண வெற்றிகளை விட தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதல் மூலம் புதிய வெற்றியை சாதித்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவ முன்னாள் உயர் அதிகாரியும் இராணுவப் பேச்சாளருமான மேஜர் ஜெனரல்; சரத் முனசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள இணைய தளம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் இடங்களை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றுகிறது. ஆனால் தாக்குதல் நடத்தாமல் விடுதலைப்புலிகள் விலகிச்செல்வது படைகளுக்கு மிகவும் ஆபத்தானது கட்டைபறிச்சான்-சம்பூர்-கொக்கட்டிச்சோலை என இராணுவம் இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் தந்திரோபாயமாக தாக்குதலை நடத்தாமல் விடுதலைப்புலிகள் விலகிச்செல்கின்றனர். இது இராணுவத்துக்கு ஆபத்த…
-
- 6 replies
- 1.7k views
-
-
ராமேஸ்வரம்: கள்ளத்தனமாக இலங்கைக்கு சென்று அகதிகளிடம் அதிக அளவில் பணம் பறித்துக் கொண்டுஇ விடுதலைப் புலிகள் மிரட்டியதால் அவர்களை அழைத்து வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்த 3 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 3ம் தேதி 14 பெண்கள்இ 15 குழந்தைகள் உள்பட 41 அகதிகள் ராமேஸ்வரம் வந்தனர். செல்வம் என்பவரின் விசைப் படகில் அவர்கள் வந்தனர். இதையடுத்து அகதிகளை மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்த போலீஸார்இ செல்வத்திடம் விசாரித்தனர். அதற்கு செல்வம்இ நான்இ ராஜ்இ அந்தோணி சிலுவை ஆகிய மீன்வர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது விடுதலைப் புலிகள் ஒரு படகில் வந்து எங்களைக் கடத்திச் சென்றனர். பின்னர் இந்த 41 பேரையும் ராமேஸ்வரம் கொண்டு போய் சேர்க்குமாறு உத்தரவிட்டனர…
-
- 2 replies
- 1.5k views
-
-
வவுனியா கிளைமோரில் 7 பொதுமக்கள் படுகொலை- 27 பேர் படுகாயம். வவுனியாவில் நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் 7 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 4 குழந்தைகள் உட்பட 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா நகரின் மேற்குப் பகுதியில் 28 கிலோ மீற்றர் தொலைவில் வவுனியா - மன்னார் வீதியில் உள்ள குருக்களுரில் இன்று சனிக்கிழமை காலை 7.40 மணிக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேரூந்தை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்-முஸ்லிம் பயணிகளை மன்னாரிலிருந்து ஏற்றிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தே கிளைமோர் தாக்குதலுக்கு இலக்கானது. இதில் படுகாயமடைந்த சுவிஸ் கண்ணிவெடி அகற்றும் அமைப்பின் பணியாளர்கள் இருவர்…
-
- 2 replies
- 1.2k views
-
-
புங்குடுதீவில் காணப்பட்டது ஜிம் ப்ரவுன் அடிகளாரின் சடலம்? புங்குடுதீவு கடற்பரப்பில் காணப்பட்டது ஜிம் ப்ரவுன் அடிகளாரின் சடலமாக இருக்கக் கூடு என்று யாழ். கத்தோலிக்க குருமார் சந்தேகம் தெரிவித்துள்ளார். புங்குடுதீவில் கடந்த மார்ச் 14ஆம் நாளன்று இராணுவத்தினரின் மணற்பையில் கல்லோடு கட்டப்பட்ட நிலையில் உருக்குலைந்த சடலம் ஒன்று காணப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தினரால் மண்டைத்தீவு சோதனைச் சாவடியில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் நாளன்று அல்லைப்பிட்டி அடிகளார் திருச்செல்வம் நிகால் ஜிம் ப்ரவுன் (வயது 34) மற்றும் அவரது உதவியாளர் வின்செண்ட் விமலன் (வயது 38) ஆகியோர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில் காணாமல் போயினர். காணாமல் போன அடிகளாரை மீட்கக் கோரி யாழில் பாரிய ஆர்…
-
- 0 replies
- 1k views
-
-
ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்று ஒற்றைக் காலில் நிற்கும் தெற்கு ` " வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்றானாம்!' என் றொரு கிண்டல் பேச்சு வழக்கு வடக்கில் உள்ளது. ஏதோ ஒன்றைக் கேட்க, வேறு ஏதோ ஒன்றுக்குப் பதில் சொல்வதை இப்படி விமர்சிப்பார்கள். தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற் காக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யோசனை என்னவென்று கேட்டால், வேறு ஏதோ பதில் தரு கின்றனர் அரசின் அமைச்சர்கள். சிறுபான்மையின ரான தமிழர்களுக்கு உரிய அதிகாரங்களை எவ்வளவு தூரத்துக்குப் பிரித்துக் கொடுக்கப் போகின்றார்கள் என்பதே பிரச்சினை. அதைத் தெளிவுபடுத்துவதை விடுத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனா திபதி ஆட்சி முறையை ஒழித்து நாடாளுமன்றுக் குப் பதில் தெரிவ…
-
- 2 replies
- 1k views
-
-
கொழும்பில் "புலி விமான" பீதி- மின்சாரம் துண்டிப்பு [வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2007, 21:27 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானம் வருகின்றது என்று கொழும்பில் 20 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கொழும்பின் சிங்கள ஏடு ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் விமானம் மன்னார் வழியாக கொழும்பு நோக்கி பறப்பதாக நேற்று வியாழக்கிழமை மாலை தகவல் பரவியதாகவும் இதனையடுத்து மாலை 6.45மணிமுதல் 7.05 மணிவரை கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 7 replies
- 3k views
-
-
இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் ஆசிய பசுபிக் உச்சி மாநாட்டில் கிளப்பப்படும் ஐ.தே.கவின் பிரதிநிதியாக ஜயலத் செல்கிறார் தென்கொரியாவில் இம்மாதம் இடம்பெறவுள்ள "ஆசிய பசுபிக் உச்சிமாநாட்டில்' ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கலந்துகொள்ளவுள்ளார். இலங்கையில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல், இடம்பெயர்தல் உட்பட பலதரப்பட்ட மனித உரிமை மீறல்களை அந்த மாநாட்டில் எடுத்துரைக்கப்போவதாக என்று ஜயலத் தெரிவித்துள்ளார். இந்த மாநாடு இம்மாதம் 15 தொடக்கம் 19ஆம் திகதிவரை இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட "யுனிவேர்ஸ் பீஸ் பவுண்டேஷன்' என்ற அமைப்பு இந்த மாநாட்டை ஏற்பா…
-
- 0 replies
- 697 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு போர் முடுக்கிவிடப்பட வேண்டும் அமெரிக்கத் தூதுவரிடம் ஜே.வி.பி. தலைவர் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முடுக்கிவிடப்படுவது மிகவும் முக்கிய மும் அவசியமுமாகும். இவ்வாறு மார்க்சியக் கட்சியான ஜே.வி. பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பின்போது வலியுறுத்திக் கூறியுள்ளார். அமெரிக்கத் தூதுவர் றெபேர்ட் ஓ பிளேக் தமது அரசியல் செயலருடன் ஜே.வி.யின் தலைவர் சோமவன்சவை கடசித் தலைமை யகத்தில் கடந்த வியாழனன்று சந்தித்துப் பேசினார். கலந்துரையாடலின் ஒரு கட்டத்தில், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணு வத் தீர்வு இருக்கமுடியாது என்று அமெரிக்கத் தூதுவர் எடுத்துக் கூறினார். அத…
-
- 0 replies
- 787 views
-
-
மட்டக்களப்பில் கடும் மழை; பெரும்பாதிப்பில் 15 ஆயிரம் அகதிகள் சர்வதேச சமூகம் உதவக் கோரிக்கை மட்டக்களப்பு,ஏப்.7 மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக, இடம்பெயர்ந்து தங்கியுள்ள 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்காலிக கொட்டகைகளில் வசித்துவந்த அந்த அகதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பான வேறு இடங்களுக்கு மாற்ற அரச அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மழையுடன் கடுங்காற்று வீசுவதால் கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. கொட்டகைக்குள் மழைநீர் புகுந்துள்ளது. அகதிகளின் உடைமைகள் சேதமாகியுள் ளன. சர்வதேச சமூகம் உதவக்கோரிக்கை இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவ ச…
-
- 0 replies
- 735 views
-
-
வெள்ளி 06-04-2007 19:55 மணி தமிழீழம் [மயூரன்] சுவாமியார் வேடத்தில்வந்தவாகள் துப்பாக்கி முனையில் கொள்ளை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு அண்மையாக உள்ள மதுபாணக் கடைக்கு சுவாமியார் வேடத்தில் நண் பகல் நேரம் உந்துருளியில் வந்தவர்கள் துப்பாக்கியைக் காட்டி பல லட்சம் ரூபாக்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இராமநாதன் வீதியில் இருக்கும் சுகுமார் என்பவருக்குச் சொந்தமான மதுக்கடையிலேயே இந்த சம்பவம் கடந்த புதன் கிழமை நன்பகல் 12.00 மணிக்கு இடம் பெற்றுள்ளது இதனைத் தொடாந்து உந்துருளியில் சென்ற இந்த திருடர்கள் இராணுவ முகாம் அமைந்துள்ள கொக்குவில் கிழக்கு சபாபதி வீதியில் உள்ள ஒரு வீட்டினுள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி பெண்ணுடைய கழுத்தில் இருந்த ச…
-
- 9 replies
- 1.8k views
-
-
வெள்ளி 06-04-2007 13:38 மணி தமிழீழம் [சிறீதரன்] சிங்களவர் கிழக்கின் ஆளுநராக நியமனம் சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஸவால் திரு.ஹரத் அபேவர்த்தனவை மாகாண ஆளுநர் ரெயர் அட்மிரல் மோகன் விஜயவிக்கிரமவின் சிபார்சின்பேரில் கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வடக்கு கிழக்கையை பிரித்தபின் இருமாதங்கள் கிழக்கின் ஆளுநராக பணியாற்றிய திரு.ஆர்.தணிகைலிங்கம் அவர்கள் ஏப்ரல் முதலாம் திகதி ஓய்வுபெற்றதையடுத்து அவரது வெற்றிடத்திற்கே இவரை நியமித்துள்ளதாக அறியமுடிகிறது. பதிவு
-
- 53 replies
- 6.1k views
-
-
பிரான்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாரிஸ் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 17 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்க ஏற்பாடாகியுள்ளது. இவ் எதிர்ப்புப் போராட்டத்திற்கு பாரிஸ் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இவ் போராட்டதிற்கு பிரான்ஸ் இளையோர் அமைப்பு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு, தமிழ் வர்த்தக சங்கம், விளையாட்டுக் கழகங்கள் என பல தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டு இவ் போராட்டம் இடம்பெறுகின்றது. ரொக்கட்றரோ (Tரொcஅடெரொ) சதுக்கத்தில் 3 மணி முதல் 5 மணி வரை எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரான்ஸ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அனைத்து தமிழ் அமைப்புக்களும…
-
- 13 replies
- 2.5k views
-
-
மகிந்த இராசபக்சே கையும் களவுமாகப் பிடிபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை! -நக்கீரன் (கனடா)- கடந்த மூன்று மாதத்தில் (தை முதல் பங்குனி வரை) யாழ். குடாநாட்டில் மட்டும் 67 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 68 பொதுமக்கள் காணாமல் போயுள்ளார்கள். 29 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள். இந்தத் தகவலை யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. படுகொலை, காணாமல் போதல், கடத்தல் போன்றவற்றை வெள்ளை வானில் செல்லும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளும் சிறிலங்கா படையினரும் படையினரோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் அரங்கேற்றுகின்றன. சிறிலங்கா இராணுவத்தினாலும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களினாலும் விடுத்த கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக 70-க்கும் அதிகமான …
-
- 0 replies
- 1.1k views
-