Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குண்டு தயாரித்தவரை அடையாளம் காண புதிய மரபணு தொழில்நுட்பம் வெடிகுண்டு சிதறல்களுடன் மரபணுக்களை தொடர்புபடுத்தி குறிப்பிட்ட குண்டை தயாரித்தவரினை இனம் காணக்கூடிய நவீன முறையினை தடயவியல் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பானது, சொந்தமாக வெடிபொருட்களை தயாரிக்கும் தீவிரவாதிகளையும் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்காக குண்டுகளை தயாரித்த நபரையும் இனம் காண்பதற்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பொலிஸார் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர்களை கண்டுபிடிப்பதற்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆர்வமாகவுள்ளனர். சிலவேளைகளில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் காணப்படும் இரத்தக் கறைகள் குற்றவாளியுடன் ஒத்துப்போகாதவையா…

  2. ராஜபக்ஷ குடும்பத்தில் 67 பேர் ஜனாதிபதி செயலகத்தில் சம்பளம் பெறுகின்றனர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பரம்பரையில் சுமார் 67 பேர் ஜனாதிபதி செயலகத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். 4 இலட்சம் ரூபா முதல் 5 இலட்சம் ரூபா வரை மாதாந்தம் ஜனாதிபதி செயலகத்தில் சம்பளம் பெறும் ராஜபக்ஷ குடும்பம், ஓர் கம்பனியாக விளங்குகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார். கெக்கிராவ தேர்தல் தொகுதியிலமைந்துள்ள பலாகல என்ற இடத்தில் கட்சிக் கிளையொன்றைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது; 1997 ஆம் ஆண்டு ஷ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடும்ப மரம் பற்றிப் பேசப்பட்டது. அப்போது அந்த ம…

  3. அரசியல் காழ்ப்புணர்வை காட்டி வடபுல மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை தடுத்துவிடாதீர்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுவரும் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவின் பணிகள் இவ்வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்படுமென மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மதுரங்குளி ஹிதாயத் நகரில் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில், வடபுலத்திலிருந்து இடம்பெயர்ந்தும், புத்தளத்திலும் வாழும் மக்களின் நன்மை கருதி பல அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டள்ளன. அதில் புத்தளம் தள வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவு 2 …

  4. பெருமிதப்பட வேண்டிய தமிழீழப் பெண்கள் தமிழ்த்தேச விடுதலையின் முக்கியமான ஒரு கால கட்டத்தில் நிற்கின்றோம். இந்தக் கால கட்டத்தில் தமிழீழப் பெண்களின் எழுச்சி நாள் மற்றும் 2ம் லெப் மாலதி அவர்களின் 19வது ஆண்டு நினைவு நாளையும் நினைவு கூறும் இத்தருணத்தில் தமிழீழப் பெண்கள் தீர்க்கமான சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டியது காலத்திற்கு அவசியமானது. ஈழத்தமிழர் வரலாறு வீரவரலாறாகப் படைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த வரலாற்றில் தமிழீழப் பெண்களின் வீரமும், தியாகமும், பங்களிப்பும் பெருமைப்பட வேண்டிய விடயம். அந்தப் பெருமைக்கு வழிகாட்டியாக அடிமை விலங்குகளால் கட்டுண்டு கிடந்த பெண்கள் சமூகத்துக்கு சமத்துவ நிலை வழங்கிய பெருமை தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைச்…

  5. மனித உரிமை மீறல்கள் தொடர்பான அரசின் மௌனத்தால் சர்வதேசம் சந்தேகம் நாட்டின் எதிர்காலம் குறித்து சிறிதளவேனும் அக்கறை கொள்ளாத வகையில் சர்வதேச சமூகத்தை தூரத்தள்ளி வைத்துச் செயற்படுவதில் ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் ஆரம்பம் முதலே முனைப்புக் காட்டி வந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜனாதிபதியின் சகோதரர்களும் வேறுசில சக்திகளும் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளுக்குச் சாதகமாகவே அமைந்து காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். தன்னையும் ஷ்ரீபதி சூரியாராச்சியையும் பதவியிலிருந்து நீக்கியதன் பின்பே அரசு மீது பழிச்சொல் சுமத்தப்புறப்பட்டதாக தெரிவித்துவரும் குற்றச்சாட்டு அபத்தமானவை எனவும் இந்த வ…

  6. மலையகத்தில் கைதுகள் அதிகரிப்பு மலையகத்தின் பல பகுதிகளிலும் தோட்டத் தொழிலாளர்கள் உட்படத் தமி ழர்கள் கைதுசெய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. ஏன், எதற்கு என்று தெரியாமல் பலரையும் பொலிஸார் திடீர் திடீரெனக் கைதுசெய்து கூட்டிச்செல்வதால் அங்கு தமிழர்கள் மத்தியில் பதற்றம் உருவாகியுள்ளது. மலையகத்தின் தோட்டத் தொழிலாளர் கள் வகைதொகையின்றி கைது செய்யப் படுகின்றனர். அதிகாலை வேளையில் பொலிஸ் ஜீப்புகளிலும் பஸ்களிலும் வரும் பொலிஸார் 60 வயதைக் கடந்த ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர். இதனால் இப்பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 4.00மணிக்கு பண் டாரவளை, பூனாகலை தோட்ட மேற்பிரி வுக்கு பொலிஸ் ஜீப்பிலும் பஸ்ஸிலும் வந்த பொலிஸார் அத் தோட்டத்தை…

  7. யாழ் குடாநாட்டு மக்களும் போக்குவரத்தும் யாழ் குடாநாட்டு மக்கள் கடந்த ஆறு மாதங்களாக உயிர் ஆபத்துக்கள் கடத்தல்களுக்கு மத்தியில் திறந்த வெளிச் சிறைச் சாலையில் தமது வாழ்க்கையைக் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ம் திகதி மாலை 5.00மணிக்கு எ 9 பாதை மூடப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள நிலமை இதுவாகும் இதனைத் தொடாந்து கடந்த ஆறு மாத காலத்தில் யாழ் குடாநாட்டு மக்கள் முகம் கொடுத்த வரும் பிரச்சனைகள் கஸ்டங்கள் சொல்லும் தரமன்று.அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமையான போக்குவரத்தையே மறுத்து அவாகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளதுடன் உதவுவதாக சர்வதேசத்திற்கு கூறிக் கொண்டே தமிழ் மக்களை வாட்டி வதைக்கும் செயல்பாட்டையே முன்னெடுத்து வருகின்…

  8. வவுனியாவில் இரு காவல்துறையினர் சுட்டுக்கொலை வவுனியா முதலிக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 7.40 மணியளவில் உந்துருளியில் சென்ற ஆயுததாரிகள் இரு சிறீலங்கா காவல்துறையினரை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

  9. மௌபின பத்திரிகையின் நிதி பணிப்பாளர் துசாந்த பசநாயக்க நேற்று மாலை கைது முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு சொந்தமானதாக கருதப்படும் மௌபின பத்திரிகையின் நிதி பணிப்பாளர் துசாந்த பசநாயக்க நேற்று மாலை பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைப்பிரிவனால் கைது செய்யப்பட்டுள்ளார் நேற்று மாலை அவருடைய அலுவலகத்திற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் அவரை கைது செய்துள்ளனர் ஏற்கனவே இந்த பத்திரிகை அலுவலத்திற்கு சென்ற புலனாய்வு பிரிவினரும் வரி திணைக்கள அதிகாரிகளும் தீவிர தேடுதலை மேற்கொண்டதோடு முக்கிய ஆவணங்களை தமமுடன் எடுத்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது கடந்த சனிக்கிழமை தேசிய தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற மகிந்த ராஜபக்சவுடனான நேரடி உரையாடல் நிகழ்ச்சியின்…

  10. திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய சரியான நேரம்-ஜெ பிப்ரவரி 26, 2007 சென்னை: விடுதலைப் புலிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக தமிழகம் மாறி விட்டது. திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய இது போதுமானது. ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய இதுவே சரியான தருணம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இன்று இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத் தமிழர் பிரச்சினை என்பது கடந்த 40 ஆண்டு காலமாக இருந்து வரும் ஒரு பிரச்சினை. லால் பகதூர் சாஸ்திரி, பண்டார நாயகே ஒப்பந்தத்திற்கு முன்பிருந்தே நிலவி வரும் பிரச்சினை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள் என்பதும், தமிழ் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இலங்கை பல காலம் இருந்தது என்பதும் வரலாற்று உண்மை. தலைமு…

  11. வவுனியாவில் இன்று மாசி22 2007 கொல்லப்பட்ட தமிழர்

  12. திருத்தங்களுடனான ஆவணங்கள் மேசை மீது வைக்கப்படாமையினால் ஆத்திரமுற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கே. சிவாஜிலிங்கம், தன் மேசை மீதிருந்த ஆவணங்களை சபையின் நடுவே தூக்கி வீசினார். பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் ஜாதிக சவிய அதிகார சபை சட்டமூலம் தமிழில் மீள்குடியேற்ற அதிகார சபை சட்டமூலமென திருத்தத்துடன் சபைக்கு சமர்ப்பிப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். அதன் திருத்தம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனினும், தங்களுக்கு சமர்ப்பிக்கப…

  13. பிரபல பத்திரிகையாளரும் ஜேன்ஸ் வீக்லியின் இராணுவ ஆய்வாளரும் சண்டே ரைம்ஸின் SITUATION REPORT பத்தி எழுத்தாளருமான இக்பால் அத்தாஸ் சண்டே ரைம்ஸில் வேறு பகுதிக்கு மாறிவிட்டதாக நம்பகமாகத்தெரிகிறது. தொடரும் பத்திரிகையாளர் மீதான அரச பயங்கரவாதத்தின் பாய்ச்சலும், குறிப்பாக இராணுவ ஆய்வாளர்கள் மீதான அழுத்தங்களுமே இதற்குக்காரணம் என்று கூறப்படுகிறது. இக்பால் அத்தாஸ் அவர்கள் கடந்த ஞாயிறிலிருந்து நகைச்சுவைப்பகுதிக்கு மறிவிட்டதாக நம்பப்படுகிறது. சென்ற ஞாயிறு அவர் எழுதிய தொடரிலிருந்து ஒரு பகுதி வருமாறு: “ …Whatever the merits or demerits of the arguments for or against the CFA, the signing of this document was only possible because of the one time People's Alliance Government (PA)…

  14. சமாதானம் பற்றிப் பேசும் தகைமையை சர்வதேசம் இழந்து விட்டது -சி.இதயச்சந்திரன் வாகரையில் அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரிகள் கால் பதித்துள்ளனர். இதேபோல சம்பூருக்கு இந்திய அதிகாரிகளும் அனல்மின் நிலைய முதலீட்டாளர்களும் முன்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்த அமெரிக்காவும் இந்தியாவும் யுத்த நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறும் போக்கினை அங்கீகரிப்பது போலவே இவை அமைந்துள்ளது. இவர்களின் இரட்டை வேடத்திற்கான சான்றுகள் இதைவிட வேறெதுவுமில்லை. அரசு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும்போது பேசித் தீருங்களென்று புராணம் பாடுவதை சர்வதேசத்தின் ஒப்பாரியாகி விட்டது. இருபது வருடங்களாகப் போரிட்டும் புலிகளை வெல்ல முடியவில்லையென அமெரிக்கா ஆதங்கப்படுவதை பெரும் சவாலாகவே ஜனாதிபதி மஹிந்த ஏ…

  15. 'இலங்கை எதனை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது?': ஜேர்மனியில் விவாத அரங்கம் ஜேர்மனியை தலைமையகமாகக் கொண்ட அனைத்துலக புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியமும், பொருண்மிய மதியுரையகத்தின் ஜேர்மனிக் கிளையும் ஒருங்கிணைந்து கடந்த சனிக்கிழமை (24.02.07) மாலைல 5.30 மணியளவில் சோஸ்ற் நகரில் (Soest) "இலங்கை எதனை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது?" என்பதை தலைப்பாக கொண்ட விவாத அரங்கு ஒன்றினை நடத்தியது. இந்நிகழ்வில் பங்கேற்றவர்களை அனைத்துலக புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஆலே மொழி மாற்றீட்டாளருமான திருமதி தேவிகா கெங்காதரனு பொருண்மிய மதியுரையகத்தின் செயலாரான கே.வலன்ரைனும் அறிமுகம் செய்து வைத்தனர். இதில் ஜேர்மனியில் உள்ள பல்வேறு துறை சார்ந்த அரசியல் மருத்துவம், ஆன்மீகம்,…

  16. -அருச்சுனா- 1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்ட மிக முக்கியமான ஒரு விடயம் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு தனி அலகாக இணைக்கப்பட வேண்டும் என்பதாகும். எமது தேசத்தின் குரல் திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் - விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு என்ற நூலில் இவ்விடயம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ஒரு தனித்துவமான நிர்வாக அலகாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதை இத் தீர்வுத்திட்டத்தின் மிக முக்கிய அம்சமாகக் கொள்ளலாம். அன்றைய ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசாங்கம் இவ் இணைப்பினை வேண்டா வெறுப்பாக ஒரு நிர்ப்பந்தம் காரணமாக ஏற்றுக்கொண்டது. இன்றைய மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தனது அரசியற் கூட்டாளி ஜே.வி.பி…

  17. அம்பாறை சிறப்பு அதிரப்படை முகாம் மீது தாக்குதல்: இருவர் பலி, நால்வர் காயம். அம்பாறை திருக்கோவில் பகுதியில், அண்மையில் சிறப்பு அதிரடிப்படையினரால் நிறுவப்பட்ட முகாம் அதிரடித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் நேற்று இரவு 8.30 மணிக்கு தங்கவேலாயுதபுரம் சங்கர் மலையில் உள்ள சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முகாம் முற்றுகையிட்டு தாக்கப்பட்டுள்ளது. இதன்போது இரண்டு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டும் மற்றும் நான்கு படையினர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இத் தாக்குதலின் போது முகாம் முற்றாக சேதமடைந்துள்ளது. -Pathivu-

  18. கருணாநிதி வெளியிட்டுள்ள கருத்துக்களை பெரியார் திராவிட கழகம் கண்டித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை எச்சரித்து தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக பெரியார் திராவிட கழகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து ஈழத்திற்கு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவது எந்த வகையில் பாரததேசத்தின் நலன்களை பாதிக்கும் என தமிழக முதலமைச்சர் கருதுகின்றார்? என்றும் அவர்கள் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்கள். -Pathivu-

  19. வவுனியாவில் புளொட் அமைப்பினர் வசமுள்ள விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்ற கொலைப்பட்டியலில் தற்போது வெளிநாட்டில் வசிப்பவர்களும் அடங்குகின்றார்கள்.அண்மையில் வவுனியாவில் கொலைப்பட்டியலுடன் இரவு வேளை சென்ற புளொட்டின் கொலையாளிகள் இரண்டுவருடத்துக்கு முன்பு வெளிநாடு சென்ற ஒரு சிலரை தேடியதாக அங்கிருந்து கிடைக்கும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • 3 replies
    • 1.5k views
  20. 'போர் நிறுத்தத்தின் மூலம் ஈழம் உருவாகாது': ஐ.தே.க சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டால் விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்படும் பகுதிக்கான அங்கீகாரம் ஏற்படப்போவதில்லை என்றும் அமைதி பேச்சுக்களுக்குரிய சூழலை உருவாக்கவே போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது." மேற்கண்டவாறு சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது: "எமது கட்சி ஒருபோதும் நாடு பிளவுபடுவதற்கு ஆதரவு வழங்காது. சிறிலங்கா அரசுடன் இரு தசாப்தங்களாக போர் புரிந்து வந்த விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களுக்குரிய சூழ்நிலை…

  21. 'விடுதலைப் புலிகளை மட்டும் குற்றம் சாட்ட முடியாது': யூனிசெஃப் "சிறார்களை படைகளில் சேர்ப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளை மட்டும் குற்றம் சாட்டமுடியாது என்றும் சிறிலங்காப் படையினரும் அதன் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் மேற்கொண்டு வரும் சிறார் படைச்சேர்ப்பில் தமது படையினரின் பங்களிப்பு குறித்து வெளிப்படையான விசாரணைகளை சிறிலங்கா அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று யூனிசெஃப் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. இது தொடர்பில் யுனிசெஃப் பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்திருப்பதாவது: "சிறிலங்காவில் தற்போதும் சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அது தொடர்பான உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்ப…

  22. -அருஸ் (வேல்ஸ்)- அண்மைக்காலமாக சிறிலங்கா அரசின் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் அரசியல் காய்நகர்த்தல்கள் என்பன மகிந்த ராஜபக்ச அரசு ஒரு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் முறியடிக்கப்படும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவுமே சிங்கள மக்களை நம்பிக்கை கொள்ள வைத்திருக்கும். அதில் தவறும் இல்லை ஏனெனில் அரசின் பிரச்சாரபோரின் (Pசழியபயனெய றுயச) வலிமை அது. பொதுவாக போரானது இரு முனைகளில் போரிடப்படுவதுண்டு ஒன்று களத்தில் நடைபெறும் நேரடிச்சமர், இரண்டாவது மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெற்றி கொள்ளும் பிரச்சாரப்போர். இங்கு பிரச்சாரப் போரானது மக்களை தமக்கு பின்னால் அணிதிரளச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு தந்திரமாகும். அதில் மிகைப்படுத்தல்கள், ப…

    • 12 replies
    • 2.2k views
  23. ஆயுதக்கடத்தலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நீரிலும், நிலத்திலும் இயங்கும் நவீன கப்பல் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டமை கண்டபிடிக்கப்பட்டதையடுத்து தமிழக கடலோர கண்காணிப்பு பணியை கடலோர காவல்படை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக நிலத்திலும், நீரிலும் செல்லும் நவீன கப்பலின் சோதனை ஓட்டம் சென்னையில் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் விசாகப்பட்டினத்தில் இருந்து "ஏசிவிஎச்183 என்ற நவீன கப்பலை வரவழைத்துள்ளனர். இக்கப்பல் நீரிலும், நிலத்திலும் இயங்கும் திறன் படைத்தது. ஒரு மணி நேரத்திற்கு 300 மைல் வேகத்தில் செல்லும் திறன் உடையது. போர்க் கப்பலை போன்றே நவீன ஆயுதங்கள் இதில் பொருத்தப்பட்டுள…

    • 10 replies
    • 2.3k views
  24. இராணுவ ரீதியில் புலிகளை வெல்ல முடியாது இலங்கைக்கு அமெரிக்கா எடுத்துரைப்பு. இலங்கையில் நிலைமை மோசமான கட்டத்தை அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, புலிகளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என இலங்கைக்குச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து விட முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றது. கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக்கே இவ்வாறு அமெரிக்கத் தரப்பில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். கொழும்பில் இருந்தவாறு இந்தியச் செய்தி நிறுவனமான ஐ.ஏ.என். எஸ்ஸுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். இழுபட்டுவரும் தமிழரின் பிரிவினைக் கோரிக்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு மூலம் முடிவு காணலாம் என்று இலங்கைத் த…

  25. ஸ்ரீலங்கா படைகளுக்கு அதி நவீன யுத்த தளபாடங்களை ஐரோப்பிய நாடுகளில் இருந்து தருவிப்பதை தடுப்பதற்கு சில அரசியல் வாதிகள் முயற்ச்சிப்பதாக ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது இராஜதந்திர தொடர்புகளை பயன்படுத்தி பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஸ்ரீலங்கா படைகளுக்கு ஆயுத தளபாடங்கள் விநியோகிக்கப்படுவதை தடுப்பதற்கு சில முக்கிய அரசியல் வாதிகள் முயல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஸ்ரீலங்கா படைகளால் பொதுமக்கள் தாக்கப்படுவது மற்றும் கடத்தப்படுவது குறித்தும் ஐரோப்பிய நாடுகளிற்கு இவர்கள் தகவல்களை வழங்கி வருவதாகவும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து பெறப்படும் ஆயதங்கள் மூலம் அப்பாவி பொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.