Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவர் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு பயணம் இலைமறை காயாக இருந்த ஜே.வி.பி.யின் தலைவர்களில் ஒருவரான குமார் ஐயா என அழைக்கப்படும் கே. குணரட்னம் தனது குடும்பத்துடன் கடந்த ஆறு வாரங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஜே.வி.பி.யின் அரசியல் நடவடிக்கைகளில் இவர் மிகவும் முக்கிய பங்காற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜே.வி.பி.யின் தலைவராக இன்றுவரை இரகசியமாக இயங்கிவந்த குமார் ஐயாவை அரசாங்கத்தின் புலனாய்வுத்துறையும், குற்றப்புலனாய்வுப் பிரிவும் குறிவைத்ததால் அவர் மிக விரைவாக தனது குடும்பத்துடன் வெளியேறியுள்ளார். அவரின் பாதுகாப்புக் கருதி ஜே.வி.பி.யின் மத்திய குழுவே அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி ஆலோசனை வழங்கியுள்ளது. …

  2. தாய்லாந்திலிருந்து புலிகள் ஆயுதங்களை கடத்துவதற்கான ஆதாரங்கள் இல்லை இந்திய கடற்படையினர் கூறுகின்றனர் விடுதலைப் புலிகள் தாய்லாந்திலிருந்து ஆயுதங்களை கடத்துவதாக சந்தேகிக்கப்படுகின்ற போதிலும் இதுவரை எதுவும் கைப்பற்றப்படவில்லை என இந்திய கடற்படையதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அந்தமான் - நிக்கோபார் தீவுகளுக்கான பிரதி கடற்படை தலைமையதிகாரி ரியர் அட்மிரல் பி.கே.நாயர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தாய்லாந்திலிருந்து ஆயுதங்களை கடத்துவதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இதுவரை அவ்வாறான ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இது குறித்து மேலதிகமாக எதனையும் தெரிவிக்க மறுத்துள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்ச…

  3. மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவோர் தாக்கப்படுவதை நிறுத்துமாறு அரசுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கோரிக்கை மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வரும் அரச சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த அலுவலர்கள் மீதான தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு சர்வதேச சமூகம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழர் புனர்வாழ்வு கழகம் கோரியுள்ளது. இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினர் சனிக்கிழமை மன்னாரில் நடத்திய தாக்குதலில் தமிழர் புனர்வாழ்வு கழக சாரதி ஒருவர் கொல்லப்பட்டதுடன் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் படுகாயமடைந்தனர். தமிழர் புனர்வாழ்வு கழகம் இத்தாக்குதலை கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கையை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில் மே…

  4. சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆவணங்கள் தேக்கம் சிறைச்சாலைகளில் அப்பாவிகள் பலர் வாடுகின்றனர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் தேங்கிக் கிடப்பதால் அப்பாவிகள் சிறையில் வாடுவதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றுக்கு முறைப்பாடு செய்துள்ளார். அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மீனவர்கள் ஐவருக்கும் எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது அவர் அம்மீனவர்கள் சார்பில் மன்றில் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் நீதிமன்றில் கூறியதாவது; "இம் மீனவர்கள் தொழிலுக்காக மன்னார் கடலுக்கு சென்றிருந்த போது கடந்த வருடம் …

  5. உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் இலங்கைக்கு வருகைதந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக உல்லாசப் பயணச் சபை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதம் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 18.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்ததாகவும

  6. Started by rajasinl,

    Tamil Eelam Air Force - Thanks to LTTE

    • 0 replies
    • 2.5k views
  7. '' புலிகளின் வான் தாக்குதலால் உடைந்த இராணுவ சமநிலை'' விடுதலைப் புலிகளிடம் வான் கலங்கள் உள்ளதென்பதை அறிந்த அரச படைகள் தமது விமான தளங்களில் அதி உச்ச பாதுகாப்பு நிலையில் வைத்திருந்தார்கள். அதனை அடுத்து பல நாடுகளிடம் கையேந்தி விமான எதிர்;ப்பு ஏவுகணைகளை வாங்கி குவித்து தீவிர கண்காணிப்பில் வைத்திருந்த அந்த வான் தளத்தில் எப்படி புலிகளின் கலங்கள் வந்து தாக்குதலை நடாத்தி தப்பிச் சென்றதென்பது. அரச மட்டத்திலும் படையினர் மத்தியிலும் பலத்த கேள்வியையும் பீதியையும் உண்டாக்கியுள்ளது இதனை அடுத்து வடக்கில் உள்ள படையினரின் இருப்புக்கு அச்சுறுத்தல் உண்டாகியுள்ளது. அதற்க்கு மேலாக படைகளினுடைய மனோ நிலையிலும் பாரிய உளவியல் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. பலிகளுனுடைய…

    • 6 replies
    • 4.8k views
  8. மகிந்தவுடன் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 11:12 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழ்ப் பத்திரிகைகளை வெளியிடுவதில் தாம் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவிற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்த தமிழ்ப் பத்திரிகை வெளியீட்டாளர்கள் கடந்த வியாழக்கிழமை மகிந்த ராஜபக்சவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து உரையாடியுள்ளனர். பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரின் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட இச்சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பவும் பங்குபற்றியிருந்தார். தனது முதலாவது நடவடிக்கையாக யாழ். குடாநாட்டிற்கு உணவுப் பொருட்களை அனுப்ப உள்ளதாகவும், அதன் பின்னர் யாழ். குடாநாட்டில் உள்ள பத்திரிகைகள…

  9. எமது எல்லையை இராணுவம் தாண்டியிருக்கிறது பாரதூரமான இவ்விடயம் குறித்து தலைமைப் பீடம் தீவிர பரிசீலனை: இளந்திரையன். இராணுவம் தனது எல்லைக் கோட்டை தாண்டி எங்களது பிரதேசத்துக்குள் பிரவேசித்திருப்பது பாரதூரமான விடயம். இந்த நிலைமை குறித்து எமது தலைமைப் பீடம் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றது என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். மன்னாரில் படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பாக தொலை பேசி மூலம் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். படையினரின் நடவடிக்கையின்போது பெரியதம்பனைக் கிராமத்தில் 120 பொது மக்கள் சிக்கியுள்ளனர். படையினர் அவர்களை மனித கேடயமாக வைத்திருக்கிறார்கள். இது மோசமான கள நிலைவரமாகும். இத…

    • 53 replies
    • 8.9k views
  10. தமிழர்களைக் கொன்று குவிக்க போர்க்கப்பலை அளிக்கிறது இந்தியா, போதாக்குறைக்கு அமெரிக்கா-சீனா உதவி இலங்கைக் கடற்படைக்கு இந்தியா மேலும் ஒரு போர்க்கப்பலை வழங்குகிறது. விரைவில் வழங்கப்படவிருக்கும் இந்தப் போர்க்கப்பல் இலவசமாகவோ அல்லது நீண்டகால குத்தகை அடிப்படையிலோ இலங்கையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என்று கொழும்பில் இருந்து வெளியாகும் புகழ்பெற்ற ஆங்கில நாளிதழ் "தி நேஷன்' செய்தி வெளியிட்டுள்ளது. சி.ஜி.எஸ். வராகா எனப்படும் இந்தப் போர்க்கப்பல் இலங்கைக்கு இந்தியா வழங்க உள்ள 2-ஆவது போர்க்கப்பல் என்றும் அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் தி நேஷன் என்ற நாளிதழில் "கடலுக்குள் போர்' என்ற தலைப்பில் கட…

  11. வவுனியாவில் இரு இளம் குடும்பஸ்தர்கள் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை [05 - March - 2007] [Font Size - A - A - A] வவுனியா கறுப்பஞ்சான்குளம் பகுதியில் இரு இளம் குடும்பஸ்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு 7 மணிக்கும் 8 மணிக்குமிடையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. மகா இறம்பைக்குளத்திற்கு அருகில் கறுப்பஞ்சான் குளம் உள்ளது. இவ்விருவரும் வீட்டில் இருந்தவேளை ஆயுதங்களுடன் வந்த ஐவரினால் இவர்கள் கடத்திச் செல்லப்பட்டு வீட்டிலிருந்து சுமார் 200 யார் தொலைவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். கைகள் கட்டப்பட்ட நிலையில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரைவீரன் மகேந்திரன் (24 வயது) ப…

  12. இராணுவ முகாமைச் சூழவுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவிப்பு மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவ முகாமைச் சூழவுள்ள மக்கள் அந்தப் பிரதேசங்களைவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு, தமிழீழ விடுதலைப் புலிகளின் வேண்டுகோள் விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறையினர் நேற்று இந்த வேண்டுகோளை விடுத்திருப்பதாக, அந்த மாவட்ட மக்கள் மத்தியில் பேசப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இராணுவ முகாம்களைச் சூழ ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்குள் இருக்கும் மக்களையே பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு கேட்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/

  13. வடக்கு, கிழக்கில் ஒரே நேரத்தில் பாரிய தாக்குதலுக்குத் திட்டம்! -விதுரன்- மக்களை மனிதக் கேடயங்களாக்கியும் பணயம் வைத்தும் யுத்தம் நடைபெறத் தொடங்கியுள்ளது. கிழக்கில் மட்டுமல்லாது இன்று வடக்கிலும் இதே நிலைதான். இதனால், யுத்தம் நடைபெறும் பகுதிகளிலிருந்து தப்பியோடும் மக்கள் பெரும் அவலங்களைச் சந்திக்கின்றனர். மக்களின் பாதுகாப்பு குறித்து எவருமே அக்கறை கொள்ளாத நிலையில் இனிவரும் யுத்தங்களில் மக்கள் பேரழிவுகளைச் சந்திக்கும் நிலை உருவாகப் போகிறது. கிழக்கில் தொடங்கிய போர் இன்று வடக்கிலும் முழு அளவில் பரவத் தொடங்கியுள்ளது. கிழக்கை புலிகளிடமிருந்து விரைவில் கைப்பற்றிவிடுவோமெனக் கூறி பெரும் போரை ஆரம்பித்த அரசு, இதுவரை அது சாத்தியப்படாத நிலையில் வடக்கிலும் போரைத்…

    • 0 replies
    • 1.1k views
  14. பிரித்தானியா நாட்டவர் எவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருக்க தடை இல்லை. - பிரித்தானிய தூதுவராகம் அறிவித்தது. http://www.nitharsanam.com/?art=22451 http://www.nitharsanam.com/?art=22451

    • 0 replies
    • 1.2k views
  15. `மிஹின்' விமான சேவைக்கு பாராளுமன்ற அனுமதியின்றி பொதுமக்களின் நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக விசனம் பழைய விமானங்களை கொள்வனவு செய்திருப்பதாக சாடுகிறார் ரவி கருணாநாயக்க மிஹின் எயார்' விமான சேவைக்கு பாராளுமன்றத்தின் அனுமதியின்றி பொது மக்களின் நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, சர்வதேச சட்டங்களுக்கு அமைய பயணிகளின் விமான சேவைக்கு உதவாத பழைய விமானமே கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை, மிஹின் லங்கா நிறுவனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை விவாதத்துக்கென சமர்ப்பித்து பேசிய போதே ரவி கருணாநாயக்க எம்.பி. இவ்வாறு கூறினார். …

    • 2 replies
    • 982 views
  16. சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 00:47 ஈழம்] [க.திருக்குமார்] சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரான எம். சபாரட்ணம் (65) நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் களவாஞ்சிக்குடி காவல் துறை பிரிவின் எரிவில் பகுதியில் உள்ள தமது இல்லத்திற்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் காலை உணவை அருந்திக் கொண்டிருந்த சமயம். உந்துருளியில் வந்த இரு இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு…

  17. கனடாவில் 18 மில்லியன் லொத்தர்ப் பரிசு வெண்ற லக்கிராஜா குடும்பத்தைப் பார்க்க கொழும்புசென்ரார். அங்கு கருனா குழுவால் குடும்பத்துடன் கடத்தப் பட்டுவிட்டார். குடும்பம் கடத்தப் பட்டு சிலமணி நேரத்தில் கட்டுணாயக்கா போய் இறங்கியவுடன் கடத்தப்பட்டார்.இது நம்பிக்கையானதகவல்..

    • 21 replies
    • 4.8k views
  18. கடந்த சில வாரங்களாக யாழ்நகரில் சிறிலங்கா படையினர் நடத்தும் கொலை வெறியாட்டங்களினால், யாழ்நகரம் பிணக்காடாக மாறி வருவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஒட்டுக்கும்பல் ஈ.பி.டி.பியினருடன் சேர்ந்து சிங்கள இராணுவத்தினர் யாழை பிணக்காடாக மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக இலக்கத்தகடுகளற்ற வெள்ளை வான்களில் வரும் ஒட்டுக்குழுக்களாலும், இலங்கைப் புலனாய்வுத்துறையினராலும் அப்பாவிப் பொதுமக்கள் கடத்தப்பட்டு காணாமல் போவது அதிகரித்திருக்கும் வேளையில், பட்டப்பகலிலேயே சிறிலங்கா இராணுவ முகாங்களிலிருந்து வரும் ஆயுதக்கும்பல்கள் ஆண்கள், பெண்கள், சிறார்கள் என்ற வித்தியாசமின்றி பொதுமக்களை பகிரங்கமாக படுகொலை செய்து வருகின்றனர். கடந்த சில மணி…

  19. யாழ் குடாவில் 2000 இளைஞர்களைக் கொலை செய்யப் படையினர் திட்டம் - இராணுவ உளவாளி யாழ் குடாநாட்டில் மேலும் இளைஞர்களில் ஒரு பகுதியினர் கொல்லப்படலாம் என இராணுவ உளவாளிகளின் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இராணுவத்துடன் வெள்ளை வானில் திரிந்து காட்டிக் கொடுக்கும் ஒருவர் இந்த திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட குரோதங்களுக்காக பலரை இராணுவத்தினரின் வெள்ளை வானில் சென்று தாக்கியும், காட்டிக் கொடுத்தும், கடத்தியும், கொலைகள் செய்தும் வந்த குறிப்பிட்ட நபர் தற்போது தான் பல பிழைகளை விட்டு திருந்தியுள்ளதாக தெரிவித்து குறிப்பி;டட்டவர்களிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டியுள்ளார். இதன்போது தான் எதிர்காலத்தில் இத்தகைய செயல்பா…

    • 11 replies
    • 2.9k views
  20. பருத்தித்துறை வைத்தியசாலையில் டாக்டர்களுக்குப் பற்றாக்குறை பருத்தித்துறை வைத்தியசாலையில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த வைத்தியசாலைக்கு சுமார் 50 வைத்தியர்கள் தேவையான நிலையில் தற்போது பொது வைத்திய சிகிச்சை ஒரு வைத்தியருடன் மட்டுமே நடைபெற்று வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்நிலையில் இப்போது சேவைபுரியும் வைத்தியரும் இடம்மாற்றம் பெற்றுச் செல்லவுள்ளõர். இதேவேளை மகப்பேற்று வைத்தியராக ஒரு வருடகாலமாக இங்கு கடமை புரிந்து வரும் வைத்தியரும் இம்மாதத்துடன் வெளிநாடு செல்லவுள்ளார் என்று அறியப்படுகிறது. கடந்த மூன்று வருடங்களாக மேற்படி வைத்தியசாலையின் நிலைபற்றி வைத்தியசாலை நிர்வாகம் சுகாதாரப் பிர…

  21. பல்கலைக்கழக அனுமதியில் தொடரும் இனப்பாகுபாடு இலங்கையில் ஈழத் தமிழர்களின் உரிமைக் கான போராட்டம் சுமார் ஆறு தசாப்தகால நீண்ட சரித்திரத்தைக் கொண்டது. தீவின் ஆட்சி அதிகாரம் மேலாண்மைப் போக்குடைய சிங்களப் பெரும் பான்மையினரின் கைகளுக்கு நாற்பதுகளின் கடைசி யில் கைமாறிய சிறிது காலத்திலேயே சிறுபான்மையினரான தமிழரின் உரிமைப்போராட்டமும் ஆரம்பித்துவிட்டது. மொழியுரிமை, பூர்வீகத் தாயகத்தின் தனித் துவத்தை நிலை நிறுத்தும் சொத்துரிமை, சமய, பண் பாட்டு விழுமியங்களைப் பேணும் கலாசார உரிமை, வேலைவாய்ப்புக்கான தொழில் உரிமை என்று சிறுபான்மையினரின் ஒவ்வொரு வரலாற்று உரி மையையும் தென்னிலங்கை பிடுங்கி, அவர்களை அடிமைப்படுத்தும் அடக்குமுறை நடவடிக்கை களை ஒருபுறம் தீவிரப்படுத்தியது. மறுபுறம் இந்த அட…

  22. வாகன விபத்தில் இருவிமானப்படையினர் பலி இன்று காலை வீரவெல ஹம்பாந்தோட்டை பகுதியில் சிறீலங்கா வான்படையினரின் வாகனம் பாலத்திடன் மோதியதில் சிறீலங்கா வான்படையினை சேர்ந்த கப்ரன் தர அதிகாரி ஒருவரும் மற்றும் சார்ஜன் தர அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டு மற்றும் ஆறு வான்படையினர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த வான்படையினரை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் அறியமுடிகிறது. இதன்போது போது கொல்லப்பட்டவர் ஹம்பாந்தோட்ட வான்படை முகாமிற்கு பொறுப்பானவர் என தெரியவருகிறது http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  23. மட்டக்களப்பில் சிறீலங்கா படைகளின் முகாம்களை அண்டிய எழுவான்கரை மக்கள் இடப்பெயர்வு மட்டக்களப்பில் சிறீலங்கா படைகளின் முகாம்களை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதாக தெரியவருகிறது. சிறீலங்கா படையினர் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதையடுத்து எழுவான்கரையில் உள்ள படைமுகாம்களில் உள்ள படைமுகாம்களுக்கு ஒருகிலோமீற்றர் விட்டத்திற்கு உட்பட்ட மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அண்மையில் எழுவான்கரையில் உள்ள சிறீலங்கா படைகளின் மூன்று முகாம்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதலையடுத்து அருகில் உள்ள மக்கள் குடியிருப்பை நோக்கி செறிவான எறிகணைத்த…

  24. என்றுதான் தமிழனுக்கு விடிவு வருமோ? [24 - March - 2007] "வெலிக்கடைச் சிறை எமக்கு வெண்ணிலா அறை" அன்று காசி ஆனந்தன் வெலிக்கடைச் சிறையில் இருந்தபோது பாடிய பாடலாகும். ஆனால், நடைமுறையில் இன்று வெலிக்கடைச் சிறை எம் விடுதலைப் போராளிகளுக்கு வெந்துயர் தருகின்ற வெஞ்சிறையாக விளங்குகின்றது. கவிஞரின் மேற்குறித்த கூற்று அவரின் கற்பனை வளத்திற்கும் உள்ள உறுதிக்கும் எடுத்துக்காட்டாகும். எதையும் தாங்கும் இதயத்தோடு தான் எமது போராளிகள் போராட வேண்டும். எத்தகைய விளைவுகளையும் ஏற்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இக்கூற்று எழுந்தது. ஆனால், அண்மையில் களுத்துறைச் சிறை, வெலிக்கடைச் சிறை, மகசின் சிறை, பெண்கள் பிரிவுச் சிறை போன்ற பகுதிகளை அடிக்கடி பார்வையிட்டதன் விளைவு எமத…

    • 4 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.