Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடல்கோளினால் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் வீடு தருமாறு கோரி கூரை மீது இருந்து மறியல் கடல்கோளினால் வீடுகளை இழந்த இரு பெண்கள் தமக்குப் புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்படாததைக் கண்டித்து வீட்டுக் கூரை மீது ஏறி அமர்ந்து மறியல் போராட்டம் நடத்திய சம்பவம் பலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. பலப்பிட்டியில் கடல்கோளினால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் திட்டத்திற்கு இவ்விரு பெண்களும் விண்ணப்பித்திருந்தனர். புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என அதிகாரிகளும் உறுதியளித்திருந்தனர். சில நாட்களாக இவ்விரு பெண்களுக்கு வீடுகள் வழங்கப்படாமல் கடல்கோளினால் பாதிக்கப்பட்ட ஏனையோருக்குப் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இது தொடர்பாக இரு பெண…

  2. காக்கைதீவு - கல்லுண்டாய் கடற்கரை பகுதியில் பயன்தரு வளங்களை அழிக்கும் படையினர் யாழ்ப்பாணம் காக்கைதீவு மற்றும் கல்லுண்டாய்க் கடற்கரைப் பகுதிகளிலுள்ள பற்றை, நிலக்கீழ் வளரிகளை கடற்றொழிலாளர்களைப் பயன்படுத்தி இராணுவத்தினர் அழித்து வருகின்றனர். காலையில் கடலுக்குச் செல்ல அனுமதிக்கும் தொழிலாளர்களிடம் மாலையில் பற்றைகளை வெட்ட வரவேண்டுமென்று வலுக்கட்டாயப்படுத்தி வருவதாகத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மேற்படி கடற்கரையோரங்களில் தினமும் நூற்றுக் கணக்கான கடற்றொழிலாளர்கள் பற்றைகளை அழித்து வருகின்றனர். யாழ். நாவாந்துறைக் கடற்கரையோரத்தில் தொடங்கி அராலி பெரியபாலம் வரையான சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் வரையான கடற்கரைப் பகுதியிலே இப்பற…

  3. ஏ-9 வீதி மீண்டும் திறக்கப்பட்டு வன்னிப் போக்குவரத்துக்கு அனுமதி வவுனியா, ஓமந்தைப் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மோதலையடுத்து மூடப்பட்ட `ஏ- 9' வீதி நேற்று சனிக்கிழமை முற்பகல் மீண்டும் திறக்கப்பட்டது. ஓமந்தை பகுதியில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் வெள்ளிக்கிழமை காலை பரஸ்பரம் இடம்பெற்ற கடும் ஷெல் தாக்குதலையடுத்து படையினர் ஓமந்தை சோதனை நிலையத்தை மூடி `ஏ-9' வீதியையும் மூடினர். மறு அறிவித்தல் வரை இவ்வீதியூடான போக்குவரத்து நடைபெற மாட்டாதெனவும் படைத்தரப்பு தெரிவிக்கவே சோதனை நிலையத்தில் பணியிலிருந்த சர்வதேச செஞ்சி லுவைச் சங்கத்தினர் அங்கிருந்து வெளியேறினர். இந்த நிலையில், நேற்று முற்பகல் 11 மணிக்கு இந்த சோதனை நிலையம் மீண்…

  4. யாழ்.நல்லூரில் படையினர் மீது குண்டுத் தாக்குதல்: சிப்பாய் பலி. 4 பேர் காயம் - பண்டார வன்னியன் Sunday, 25 March 2007 09:40 யாழ் குடாநாட்டில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் படைச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.நான்கு படையினர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று முற்பகல் 10.45 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் இலுப்படிச் சந்தியிலுள்ள இராணுவக் காவலரண் மீது இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததுடன், 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இதனால் ஆத்திரமுற்ற படையினர் அவ் வீதியால் சென்ற இளைஞர் மீது சரமாரியான துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டனர்.இதில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்;…

  5. இராணுவச் சீருடையில் வந்து மட்டக்களப்பில் தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள்: கொழும் ஊடகம் மட்டக்களப்பு மாவடிவேம்பு முகாம் மீது கடந்த செவ்வாய்க்கிழமை (20.03.07) தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், இராணுவத்தினரின் சீருடையில் வந்து தாக்குதல் நடத்தியதாக கொழும்பு ஊடகம் தெரிவித்திருக்கின்றது. அந்த ஊடகத்தின் பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய சில பகுதிகள் வருமாறு: சிறிலங்காப் படையின் 12 ஆட்டிலறிப் படையின் ஒரு பிரிவு தங்கியுள்ள மாவடிவேம்பு படைத்தளத்தின் கட்டளை அதிகாரியாக மேஜர் குமார் ஜெகொட பணியாற்றி வருகின்றார். சம்பவ நாள் முகாமின் கட்டளை அதிகாரி தனது உதவி அதிகாரியான மேஜர் கே.ஏ.சோமசிறியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது வெளிய…

    • 0 replies
    • 1.1k views
  6. அண்மைய காலங்களில் சிறிலங்காவின் தென்பகுதி ஊடகங்களின் சூடான செய்திகள் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தொடர்பானவை தான். அணிவகுத்து வரும் ஆயுதக்கப்பல்களை குருவி சுடுவது போல சுட்டுத்தள்ளுகிறது சிங்களக் கடற்படை. பின்னர் படங்களும் வெளியிடப்படுவதுண்டு. அதில் அழகான நீல வண்ணக் கடலில் கப்பல் கொழுந்து விட்டு எரிவதையும் பின்னர் மூழ்குவதையும் காண்டு தென்னிலங்கை பேரானந்தம் அடைவதுண்டு. அதிலும் கடந்த 18 ஆம் நாள் அம்;பாறை பொத்துவிலுக்கு அண்மையில் உள்ள கடற்பரப்பில் வைத்து இரண்டு கப்பல்களை ஒன்றாக மூழ்கடித்துள்ளது கடற்படை. ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட படங்களுக்கும் குறைவில்லை. கடந்த செப்ரெம்பர் மாதம் 17 ஆம் நாளில் இருந்து பார்ப்போமாயின் ஆறு மாதங்களில் ஏறத்தாழ 6 கப்பல்களையும் றோலர்களையும்…

  7. பெரியதம்பனை ஆக்கிரமிப்பு முறியடிப்பு 60 இராணுவம் பலி வெள்ளிக்கிழமை காலை சிறீலங்கா இராணுவத்தினரின் வவுனியா – மடு எல்லைப்பிரதேசத்தில் 120 பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி முன்னேற் முயற்சி விடுதலைப்பலிகளால் 15 மணிநேர கடும் சமரின் பின் வெற்றிகரமாக முறியடிக்கப்படடுள்ளது. இத்தாக்குதலில் விடுதலைப்புலிகளின் தகவலின்படி இவ் ஆக்கிரமிப்புத் தாக்குதலில் 60 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இத்தாக்குதலில் விடுதலைப்புலிகளின் தரப்பில் வெஞ்சமராடி 6 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. Pathivu.com இராணுவத்தின் வவுணதீவு, உன்னிச்சை பகுதியில் ஆக்கிரமிப்பு முறியடிப்பு விடுதலைப்புலிகளால் சிறீலங்கா படைகளால் மட்டக்களப்ப…

  8. மக்கள் - சிவாஜிலிங்கம் எம்.பி.இவ்வாறு கூறினார். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 25 மார்ச் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ விடுதலைப் புலிகளுக்கு வரி செலுத்தவேண்டியிருப்பதாக கூறி ஏ-9 பாதையை மூடி அரசாங்கம் கப்பலில் யாழ். குடாநாட்டுக்கு பொருட்களை அனுப்பும் இன்றைய சூழ்நிலையில், புலிகளுக்கு வரிசெலுத்திய காலத்தைவிட பன்மடங்கு அதிக விலைகொடுத்து பொருட்களை வாங்கவேண்டிய நிலைக்கு யாழ்.குடாநாட்டு மக்கள் ஆளாகியுள்ளனரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்ணாட்டரசிறை மற்றும் பொருளாதார சேவை விதிப்பனவு திருத்தச் சட்ட மூலங்கள் மீதான விவாதத்தில் பேசும்போதே சிவாஜிலிங்கம் எம்.பி.இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் பேசுகைய…

    • 0 replies
    • 879 views
  9. தமிழீழ விடுதலைப் புலிகளின் பத்துப் போராளிகள் வீரச்சாவு 20.03.07 இல் மட்டக்களப்பு மாவடிப் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்தோர் :-- 1. கமலநாதன் ரவீந்திரன் (வீரவேங்கை முல்லைச்செழியன்) மட்டக்களப்பு மாவட்டம் 2. தேவப்பிரகாசம் லட்சுமிகாந்த் (வீரவேங்கை முகில்க்கீதன் அல்லது பாதிரியன்) மட்டக்களப்பு மாவட்டம் 3. குலசிங்கம் துஷ்யந்தன் (வீரவேங்கை அறிவுநம்பி) மட்டக்களப்பு மாவட்டம் 4. செல்லையா ஜெகதீஸ்வரன் (கப்டன் திருவேல் அல்லது பாதிரியன்) என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டம் 21.03.07 இல் மன்னார்ப் பகுதியில் ஸ்ரீலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவடைந்தோர் :-- 1. செல்வராசா செந்தில்க்குமார் (கப்டன் கதிரவன் அ…

  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - இந்தியத் தூதுவர் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீலங்காவிற்கான இந்தியத் தூதுவரைச் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்து விளக்கியுள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் சிறீலங்காப் படையினர் தமிழ் மக்களின் பிரதேசங்களில் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் பற்றியும், தமிழ் மக்களின் அவல வாழ்வு தொடர்பாகவும் எடுத்து விளக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியத் தூதுவருடனான நேற்றைய சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இரா. சம்மந்தன், மாவை செனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இதேவேளை, இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மனித அவலம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப…

  11. சிறிலங்காவை எவரும் பயமுறுத்த முடியாது: சிறிலங்காவிற்கான ஜெனீவா தூதுவர் சிறிலங்கா தொடர்பாக சில நாடுகளும், சில அரச சார்பற்ற நிறுவனங்களும் தெரிவித்த கருத்துக்களுக்கு தாம் கடும் எதிப்பை தெரிவிப்பதாக ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இக்கூட்டத் தொடரில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றிய சிறிலங்காவிற்கான ஜெனீவாவின் புதிய தூதுவர் தயான் ஜயதிலக்க தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது: சிறிலங்கா அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் சபையின் செயற்திட்டங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றது, அனைத்துலக சமூகத்துடனான அதன் பணிகளும் அப்படியானவையே. ஒரு மிகவும் தரம்வாய்ந்த ஜனநாயக நாட்டை அதன் விருப்பங்களுக்கு மாறா…

  12. ஞாயிறு 25-03-2007 00:57 மணி தமிழீழம் [தாயகன்] 8 மாதங்களில் 3 இலட்சத்து 40 ஆயிரம் தமிழர்கள் இடப்பெயர்வு தமிழர் தாயகத்தில் சிறீலங்காப் படையினரின் தாக்குதல்கள் காரணமாக கடந்த 8 மாத காலத்தில் 3 இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து அல்லல்ப்படுகின்றனர். கடந்த ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் யாழ் குடாநாட்டில் முன்னரங்க நிலைகளில் இருந்து ஆயிரக் கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்து, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் தற்காலிகமாகக் குடியேறியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெயர்ந்த மக்கள் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தங்கியுள்ளனர். வவுனியாவில் இந்த ஆண்டிலேயே அதிகளவு மக…

  13. யாழில் படைச்சிப்பாய் பலி! படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமகன் காயம் யாழப்பாணத்தில் படைச்சிப்பாய் ஒருவர் கைக்குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைக்குண்டுத் தாக்குதல் இன்று காலை 10.45 மணியளவில் யாழ் நாவலர் வீதியருகே இடம்பெற்றது. படையினர் கொல்லப்பட்டதை அடுத்து படையினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதன்போது பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் திருநெல்வேலியைச் சேர்ந்த 21 அகவையுடைய பாசுப்பிரமணியம் கஜரூபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்தவர் யாழ் மருந்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.pathivu.com/

    • 1 reply
    • 795 views
  14. ''தெரு நாய்கள் சண்டை'' கடந்த சில வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து தற்போது விடுதலையாகி வந்திருக்கும் ''குடு முஸ்தபா'' என அழைக்கப்படும் ராம்ராயுக்கும் உண்டியலானுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்று வருவதாக அதற்க்குள் இருக்கும் சிலரால் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. கருணா. ராஜன் குழுவினருக்;குள் இடையில் ஏற்ப்பட்ட பிளவை அடுத்து அந்த கூட்டு தாபனத்திற்குள் அடி தடி பிரச்சினைகள் நடந்து முக்கிய சிலர் அந்த ஊடகத்தை விட்டு வெளியேறினர். இதற்க்கு முன்னராக முஸ்தாபாவின் அணியினரால் ஆழுகைக்கு உட்டபட்ட அந்த தேசவிரதோ வானொலியை முஸ்தபா சிறையில் வாட அந்த தருணத்தை பாவித்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த யெதேவன். தான்தோன்றி தனமாக தனக்கு எதிராக நடந்ததாக கூறி…

  15. மன்னாரில் தமிழர் புனர்வாழ்வுக் கழக வாகன அணிமீது கிளைமோர் தாக்குதல்: ஒருவர் பலி- 4 பேர் படுகாயம் மன்னார் பெரியமடுப் பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிவாரணப் பணி வாகனம் மீது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுப் பணியாளர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். வாகனமும் முற்றாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்று சனிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றது. மன்னார் பெரியதம்பனைப் பகுதியில் இருந்து பெரியபண்டிவிரிச்சான், சின்னப்பண்டிவிரிச்சான் மற்றும் மடுப்பிரதேசத்தை அண்டிய மக்கள் குடியிருப்புக்களை நோக்கி, சிறிலங்காப் படைகளால் நேற்று…

  16. ''வெற்றி தோல்வி என்பது ஒரு துப்பாக்கி ரவையிலும் தீர்மானிக்கப்படலாம்'' -ச.சங்கரன்- சம்பூர்- வாகரையில் விடுதலைப்புலிகளுடன் போரிட்டு சிறு வெற்றியினைப் பெற்றுக்கொண்டு அதனை இமாலய வெற்றியாகவும்,; மட்டக்களப்பு திருகோணமலையில் விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாகவும் இராணுவ வெற்றியைவிட பலபத்து மடங்கு ஊடாகவெற்றியை மகிந்தர் அரசு பெற்றுக் கொண்டது. அல்லது காட்டிக் கொண்டது. " வெற்றி தோல்வி என்பது ஒரு துப்பாக்கி ரவையிலும் தீர்மானிக்கப்படலாம்" என்கிறார் ஜேர்மனியின் கேணல் அடம்ஸ் மாக்கர் அதே போல் அரசுக்கு கிழக்கில் வாகரையை பிடித்த வெற்றியைவிட உலகின் பிரதான இராஜதந்திரிகள் மத்மியில் வீழ்ந்து வெடித்த புலிகளின் நான்கு எறிகணைகள் புலிகளின் போரியல் ஆற்றலையும், போர் தி…

    • 1 reply
    • 1.7k views
  17. சமாதானத்திர்க்கான உதைப்பந்தாட்டம் என்ற பெயரில் தமிழ்த் தேசியத்திற்க்கு எதிரான சிங்கள அரசின் பிரச்சாரத்திற்க்கு உதவ முயன்று மூக்குடை பட்ட உதயகுமார் இப்பொழுது சிங்கள படைகளினால் தமிழ் மக்கள் கொலை செய்யப்படுவதை மறைத்து சிங்கள படைகளுக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் யுத்தத்தில் இடையில் அகப்பட்டு மக்கள் இறப்பதாகவும் அதற்க்காக ஐ நா வை தலையிடுமாறு கேட்டு ஒரு கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளான். சிறிலங்கா தீவு என்று முழு இலங்கைத் தீவையும் குறிப்பிட்டு எழுதப்பட்ட இந்த மகயரில் தமிழீழம் என்ற சொல் சில இடங்களில் தமிழ் மக்களை ஏமாற்ற உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் தேச ஆதரவு இணையத்தளங்களுக்கும் இது அனுப்பப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. ஆகவே மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். …

    • 0 replies
    • 1.7k views
  18. மன்னார் - மடு நோக்கிய வீதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முன்னகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் 15 மணிநேர தீவிர தாக்குதல் மூலம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 60-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 6 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். மன்னார் - வவுனியா சாலையில் பிரமாணளங்குளம் மடு வீதியில் உள்ள பெரியதம்பனை, சின்னப்பண்டிவிரிச்சான் ஆகிய கிராமங்களை நோக்கி 120 பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியவாறு சிறிலங்காப் படையினர் நேற்று வெள்ளிக்கிழமை 7.30 மணியளவில் பாரியளவில் முன்னகர்வை இரு முனைகளில் மேற்கொண்டனர். பின்தளங்களில் இருந்து ஆட்டிலறி, பல்குழல் எறிகணை செலுத்திகள், மோட…

    • 0 replies
    • 1.2k views
  19. பெரியதம்பனையை ஆக்கிரமித்து 120 பொதுமக்களை சிறீலங்காப் படையினர் மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைத்திருப்பதாக, விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். வவுனியா - மன்னார் எல்லைப் புறத்தில் உள்ள 300 சிறிலங்காப் படையினர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் 2 கிலோ மீற்றர் தூரம் வரை ஊடுருவி பெரியதம்பனையைச் சேர்ந்த பொதுமக்கள் 120 பேரை மனிதக் கேடயங்களாக பிடித்து வைத்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் வவுனியா - மன்னார் எல்லைப்புறத்தில் உள்ள மடுவுக்கு 10 கிலோ மீற்றர் கிழக்காக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதல் நடவடிக்கைகளில் 300-க்கும் அதிகமான படையினர் ஈடுபட்டுள்ளதுடன், அப்பகுதிகளை நோக்…

    • 2 replies
    • 1.3k views
  20. வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மீது படைப்புலனாய்வாளர்கள் தீவிரகண்காணிப்பு. - பண்டார வன்னியன் Saturday, 24 March 2007 12:58 யாழ் குடாநாட்டில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்த அப்பாவிப்பொதுமக்கள் மீதும் இளைஞர் யுவதிகள் மீதும் சிறிலங்காப் படையினரும் அதன் புலனாய்வாளர்களும் கடுமையான கண்காணிப்பையும் கொலை அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டு இருப்பதாக அங்கிருந்துகிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்குடாநாட்டில் தொழில் நிமிர்த்தம் தங்கியிருப்போர் தொழிற்க்கல்விநிலையங்கள், பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்கள், மீதே படையினரும் அதன்புலனாய்வாளர்களும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருப்பதுடன் இவர்களின் சகலவிவரங்களையும் புகைப்படங்களையும் படையினர் பிரதே…

  21. சனிக்கிழமை 24 மார்ச் 2007 ஜெயராசா யாழ் பல்கலைக்கழகம் ஈழத்தமிழர்களை பொறுத்தவரையில் அவர்களின் ஒரு குரலாகவே செயற்பட்டு வருகிறது. ஆட்சியாளர்களின் மேலாதிக்கங்கள் மேலோங்குகிறபோது அதற்கு எதிராக போர் கொடியினை தூக்கும் வல்லமை இதற்குமட்டுமே இருந்தது. 1995 பின்பு யாழ் குடாவினை அரச படைகள் ஆக்கிரமித்ததில் இருந்து தற்போது வரையும் யாழ் குடாமக்களின் ஒட்டுமொத்த உணர்வாக யாழ் பல்கலைக்கழகமே திகழ்ந்தது. இன்று உலகமெல்லாம் தமிழர்கள் பொங்கு தமிழர்களாக நிமிர்ந்து நிற்பதற்கு வித்திட்டது இந்த யாழ் பல்கலைக்கழகமே. தழிழர்களின் அபிலாசைகளை உலக அரங்கிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு ஒரு திறந்த அரங்காக யாழ்பலைக்கழகமும், பல்கலைக்கழக சமூகமும் விளங்கியது. தமிழீழ தேசத்திற்காக தம் இன்னுயிர்களை ஈர்ந்த மாவ…

    • 8 replies
    • 2.1k views
  22. நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்களை நியமிக்க அரசுத் தரப்பு தயாரா? ` ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஆட்கடத்தலும், காணாமற் போதலும், அச்சுறுத்தியும் கடத்தியும் கப்பம் அறவிடலும் மிக மோசமான வன்முறைகளாக மனித உரிமை மீறல்களாக இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. அரச கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் தாயகத்திலும் தென்னிலங்கையிலும் இவை சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகின்றன. சட்டத்தையும், ஒழுங்கையும் காப்பாற்ற வேண்டியவர்கள் இந்த அராஜகங்கள் குறித்து பாராமுகமாக இருக்கின்றார்கள் என்பதற்கு அப்பால், அவர்களே இவற்றுக்குத் துணை போகின்றனரோ என்ற ஆதங்கம் விசனம் பெரும் சந்தேகம் தமிழர்களுக்கு. இந்த மோசமான கொடூரங்கள் நிகழும் போக்கைப் பார்க்கும்போதும், அவை பற்றிக் கிடைக்கும் தகவல்களை அறியும்போதும் அத்தகை…

  23. கடந்த இரு மாதங்களுக்குள் இலங்கை பொலிஸாருக்கு எதிராக 350 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிராக கடந்த இரு மாதங்களுக்குள் பொதுமக்கள் 350 முறைபடுகள் பொலிஸ் ஆணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சில பொலிஸ் நிலையங்களில் அதிகாரிகள் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதில்லையெனவும், அதிகாரத்தி துஸ்பிரயோகம் செய்கின்றார்கள் எனவும் பக்கசார்பாக நடந்து கொள்வதாகவும் முரைப்படுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஆணிஅக்குழுவின் பொதுமக்களின் முறைப்பாடுகளை ஆராயும் பிரிவு தெரிவித்துள்ளது.. http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  24. யாழ்ப்பாணத்தையும் திருகோணமலையையும் ஒரே நேரத்தில் கைப்பற்ற பிரபாகரன் திட்டம் [23 - March - 2007] [Font Size - A - A - A] அரச படையினர் கிழக்கு பிரதேசங்களில் மட்டுமன்றி, வடக்குப் பகுதிகளிலுள்ள புலிகள் இயக்கத்தினரின் பிரதான முகாம்கள் மீதும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் படையினரின் தாக்குதல்களை எதிர்கொள்ளவோ அல்லது பதில் தாக்குதல்களை நடத்தவோ முடியாதவாறு புலிகள் அமைப்பின் தலைமைத்துவம் பெரும் ஆயுதத் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்திருப்பதாகவும் தற்போது புலிகள் இயக்கத்தினரிடையே எழுந்துள்ள முக்கிய பிரச்சினை ஆயுதங்கள் இல்லாமையே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அண்மைக் காலங்களில் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கு …

  25. வெள்ளி 23-03-2007 13:20 மணி தமிழீழம் [மயூரன்] ஊழல் மோசடிப் பணம் அமெரிக்க வங்கியில் 'வைப்பு' -எம்.பி. பாலித ரங்க பண்டார விமானப் படையினருக்கான விமானக் கொள்வனவில் பெரும் ஊழல் மோசடி நடைபெற்றுள்ளது. இதற்கான தெளிவான ஆதாரங்கள் எம்மிடமுண்டு. மிக் -27 விமானம் மூலம் பெறப்பட்ட பணம் தற்போது அமெரிக்க வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இம்மோசடிப் பணம் அமெரிக்கப் பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கையரொருவரின் பெயரில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்யப்போவதாக கூறிய அரசு 1980 இல் தயாரிக்கப்பட்ட மிக்-27 விமானங்களைக் கொள்வனவு செய்து ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளது எனவும் ஐ.தே.க. எம்.பி. பாலித ரங்க பண்டார குற்றம் சுமத்தியுள்ளார் pathivu.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.