ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142758 topics in this forum
-
இனம் தெரியாதோரால் இருவர் படுகொலை... நேற்று யாழ் மாவட்ட சிறுபிட்டியை சேர்ந்த இருவர் அவர்களது வீட்டிற்க்கு சென்ற ஆயுதம் தரித்த வெள்ளை வான் கும்பலினால் கடத்தப்பட்டு படு கொலை செய்யப் பட்டுள்ளனர். அன்மை காலமாக யாழ் தீவகத்தில் தொடர்ந்து வரும் இந்த கடத்தல் நாடகங்களின் பின்னணியில் ஒட்டுக்குழக்களும் அரச புலனாய்வாளர்களும் ஈடுபட்டுள்ளது பல முறை தெரியவந்துள்ளது. அவ்வாறான ஒரு நிகழ்வே இங்கும் நடைபெற்றுள்ளது. இவ்வாறு இறந்தவர்களின் விபரம் வருமாறு. நவரட்ணம்- கீதன் வயது ( 30) மயில்வாகணம்- வயது - 50 இவர் சிறுபிட்டி பகுதியல் திருமணம் முடித்தவர் கோப்பாயை வசுப்பிடமாகவும் கொண்டவர். தனது உறவுகாறரை பிடிக்க வரும்போது அவரை தடுக்க முற்ப்பட்டபோது இவ…
-
- 0 replies
- 605 views
-
-
இராணுவ ரீதியான வெற்றிகளை அரசியலுக்கு சாதகமாக்க முயற்சி! -விதுரன்- புதிதாக வந்துள்ள அதி நவீன ஆயுதங்களுடன் அடுத்த கட்ட தாக்குதலுக்கு அரசு திட்டம் நாட்டில் ஸ்திரமற்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது. பெரும் போரில் அரசு குதித்துள்ள நிலையில் பெரும் அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. கட்சிகளைப் பிரித்து ஆட்களை இழுத்து அரசைப் பலப்படுத்த ஜனாதிபதி மகிந்த முயல்கையில் அவரது கட்சிக்குள் பெரும் பிளவு தோன்றியுள்ளது. இந்த அரசு மிகவும் ஸ்திரமாயிருப்பது போன்றதொரு தோற்றப்பாடிருந்தாலும் இது உண்மையிலேயே ஸ்திரமற்றதொரு அரசாகவேயுள்ளது. ஒவ்வொரு கட்சியையும் பிளவுபடுத்தி அமைச்சுப் பதவி ஆசை காட்டி ஆட்களைத் தன்வசப்படுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளே இல்லையென்றதொரு நிலையை ஜனாதிபதி மகிந்த உருவ…
-
- 0 replies
- 549 views
-
-
யாழ். நிலைமையைக் கண்டறிவதற்கு ஐ.நா. உயர்குழு நேற்றுத் திடீர் விஜயம் செயலாளர் நாயகத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போதைய நிலையைமக்களின் அவலங்களை கண்டறியும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்டக் குழு ஒன்று, நேற்று திடீர் விஜயம் செய்தது. ஐ.நா செயலாளர் நாயகம் பான்கிமூன் விடுத்த பணிப்பின் பேரில், தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த உதவிச் செயலாளர் நாயகம் அஞ்சலா கான் தலைமையிலான ஐவர் குழு நேற்று இங்கு வந்தது. குடாநாட்டில் இயங்கும் ஐ.நாவின் உப நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து குடாநாட்டின் நிலைமைகள் குறித்து குழுவினர் விரிவாகக் கேட்டறிந்தனர். நேற்றைய ராஜீக விஜயத்தில் ஐ.நாவின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி பிறட்ரிக் லயன், ஐ.நா.தலைமையக அதிகாரிகள…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறீலங்காவில் உள்ள எதிர்க்கட்சிகளும், அரசில் உள்ள சிலகுழுவினரும் இணைந்து அரசின் மீதும் அதன் பிரதம மந்திரியின் மீதும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் இரகசியமாக விவாதிக்கப்பட்டுவரும் இந்த நடவடிக்கையில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மீறல்கள், கடத்தல்கள், படுகொலைகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள், போர் தொடர்பாக பொதுமக்களை தவறாக வழிநடத்துதல், பதவிகளில் உள்ளவர்களின் உறவினர்களின் அத்துமீறிய தலையீடுகள் என்பன நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான காரணங்களாகவும் முன்வைக்கப்பட உள்ளன. இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு 113 வாக்குகள் தேவை. ஐ.தே.கவின் 43 உறுப்பினர்களும், தமிழ்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
அம்பாறை மாவட்ட அரசியல் களம் - கிரக மாற்றங்கள் பல்வேறுவிதமான சோதிடங்களுக்கு மத்தியில் கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்து முடிந்துள்ளது . அரசியல் கிரக மாற்றங்கள் பல்வேறுவிதமான சோதிடங்களுக்கு மத்தியில் கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்து முடிந்துள்ளது. முரண்டு பிடித்துக் கொண்டு நின்றவர்களையெல்லாம் பிடித்துக் கொண்டுவந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று அவரின் அரசுக்கு முண்டு கொடுக்க வைத்துள்ளார். ஆக பாம்புகளும், கீரிகளும் ஒரே பாசறைக்குள் கூடி நின்று கும்மியடிக்க வேண்டிய கால நிர்ப்பந்தம்! தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவாக கிளிநொச்சி வரை சென்று தமிழ்ச்செல்வனைக் கண்டு பேசி வந்த பெ. சந்திரசேகரன், அவரின் பரம வைரி ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதியை மிக மோசமான பே…
-
- 0 replies
- 794 views
-
-
புதுக்கோட்டை அருகே இலங்கையிலிருந்து வந்த இலங்கைத் தமிழர்களில் ஐந்து வாலிபர்கள் திடீரென்று மாயமான சம்பவம் பொலிஸாரை அதிர்ச்சியடைய வைத்தது. தப்பிச் சென்ற இலங்கை வாலிபர்கள் ஐந்து பேரும் அழியாநிலை முகாமில் இருந்து பொலிஸார் மீட்டனர். இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் மோதலைத் தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உயிருக்குப் பயந்து ஏராளமான தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதுபோன்று இலங்கை யாழ்ப்பாணம் பஜார் பகுதியில் வசித்துவந்த சிவலிங்கம் மனைவி சுப்புத்தாய் (62) இவரது மகன் ஐங்கர ரூபன் (31) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கந்தசா…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளார். இருவருக்குமிடையிலான இந்தச் சந்திப்பு கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. பெங்களூர் யலகங்கா விமானப் படைத் தளத்தில் நடைபெறும் இந்திய விமானக் கண்காட்சியில் கலந்து கொண்ட போதே அங்கு இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். கோதாபாய ராஜபக்ஷ தலைமையில் விமானப் படைத் தளபதி உட்பட சிரேஷ்ட விமானப் படை அதிகாரிகள் பெங்களூர் சென்றுள்ளனர். இந்தக் கண்காட்சியை இந்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி ஆரம்பித்து வைத்தார். இதன் பின்னர் அமைச்சர் அந்தோனியை சந்தித்த கோதபய, இலங்கையின் தற்போதைய …
-
- 0 replies
- 886 views
-
-
கிழக்கில் கடத்தப்படும் சிறார்களை தகாத முறையில் வழிநடாத்தும் கருணா ஒட்டுக்குழு கும்பல் - வெளிவரத் தொடங்கியிருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிழக்கில் சிறுவர்கள், வெள்ளை வான்களில் நடமாடும் கருணா ஒட்டுக்குழு கும்பலின் உறுப்பினர்களினால் கடத்தப்படுவது அன்றாடம் செய்தியாகி விட்டது. வயது பத்துக் கூட ஆகாத சிறார்களே கடத்தப்படும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது. இக்கடத்தல்களின் பின்னணியில் இருப்பது சிறிலங்காப் புலனாய்வுத்துறையினரே என்பதும் இன்று உலகறிந்த விடயம். ஐ.நா சபையிலேயே, இக்கடத்தல்கள் விவாதிக்கும் அளவிற்கு பாரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், இக்கடத்தப்பட்ட சிறார்கள் எவ்வாறெல்லாம் தகாதமுறையில் நடத்தப்படுகிறார்கள் என்பன போன்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் மெல்ல…
-
- 1 reply
- 2.2k views
-
-
வாகரையைக் கைப்பற்றிய ஸ்ரீலங்காப் படைகள் புகைப்படங்களுக்கு கொடுத்த "போசைப்" பார்த்து புலம் பெயர் தேசங்களிலுள்ள சில தமிழர்கள் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார்கள் போல் தெரிகிறது. மட்டக்களப்பின் குடும்பிமலை, கொக்கட்டிச்சோலை, தரவை, வவுணதீவு பிரதேசங்களையும் விரைவில் பிடித்து விடுவோம் என்று சிங்களப்; படைத்துறைத் தலமை விடுத்துவரும் பகிரங்க அறைகூவல் எம்மவர்களில் பலரை மேலும் கவலையில் ஆழத்தியுள்ளது. தாடையில் கைவவைத்தபடி, கவலையில் உட்கார்ந்து இருந்து புலம்பும் பலரை நான் இங்கு பார்த்து வருகின்றேன். ஏல்லாமே முடிந்து விட்டது போன்று அவர்கள் அபிப்பிராயம் கொள்ளுவதையும் அவதானிக்க முடிகின்றது. தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழர்கள் மட்டுமல்ல, சிங்கள தேசமும் சரி, சர்வதேச சமூ…
-
- 20 replies
- 4.7k views
-
-
மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறைக்குட்பட்ட ஐயங்கேணி பகுதியில் நேற்ற சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் வியாபார உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் கொம்மாதுறை பகுதியை சேர்ந்த தற்போது பாரதிபுரத்தில் திருமணம் செய்துள்ள இரு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய மகேஸ்வரன் உதயசேகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வந்த இனம் தெரியாத ஆயுததரிகள் இவரை அழைத்து சென்று சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள். இது தொடர்பாக ஏறாவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றார்கள்
-
- 0 replies
- 909 views
-
-
ஜனாதிபதியின் அழைப்பு புதிய விடயம் இல்லை - இளந்திரையன் - பண்டார வன்னியன் Sunday, 11 February 2007 09:45 விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டுமென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பானது அடிப்படையற்றது என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறினார். கடந்த 3ஆம் திகதி வாகரைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சமாதானப் பேச்சுக்கு வரவேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார். “ஜனாதிபதியின் இந்த அழைப்பு ஒன்றும் புதிய விடயமில்லை. மீண்டும் மீண்டும் இதனையே கூறிவருகின்றார். இது அடிப்படையற்றதென்பதுடன், அவரின் இந்த அழைப்புக்கு பதி…
-
- 0 replies
- 1k views
-
-
யுத்த களத்தில்... காதல்! என் திருமணம் நடந்தபோது நான் இலங்கை அரசால் தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்தேன். பகலில் காடுகளில் அலைவேன். யுத்தத்துக்கான வெடிபொருளாக கவிதைகள் தயாரித்தேன். கூடவே, காதலித்தேன். அதுவும் 15 ஆண்டுக் காதல். இயக்கத்துக்கு ஆதரவு தேடி உலகமெல்லாம் பறந்த காலம் அது. தகிக்கிற அரசியல் வெப்பத்துக்கு நடுவே காதல் நிழலாக, ஆறாத காயங்களும் தீராத வேதனைகளிலும் திரிந்த எனக்கு ஆறுதலாக இருந்தவள் சரோஜினி. எத்தனையோ முறை எதிரிகளிடம் இருந்து என் னைக் காத்தவள். ஒரு மருத்துவத் தாதியாக அவள் எனக்கு அறிமுகம்! யாழ்ப்பாணத்தில் இருக்கிற செல்வ சன்னதி என்ற முருகன் கோயிலில் நடந்தது ரகசியத் திருமணம். இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை என்றாலும், ‘க…
-
- 7 replies
- 3.8k views
-
-
மாத்தறையின் சில பகுதிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கின்றன சிறீலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சா துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சரும் மாத்தறை பகுதி சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான மங்களா சமரவீராவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து மாத்தறையின் சில பகுதிகளில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன், “மங்களா நாங்கள் உங்களுடன் நிற்போம்” என்பது போன்ற சுலோகங்களும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. மேலும் மூன்று நாள் தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றுள்ள மங்களா அங்கிருந்து தொலைபேசி ஊடாக கொழும்பு வாரப்பத்திரிகை ஒன்றிற்கு தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கருத்துக்களை வழங்கியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: …
-
- 0 replies
- 1k views
-
-
ஐ.நாவில் பலஸ்தீனத்திற்கு ஆதரவான மங்களாவின் வாக்கே மகிந்தவின் சீற்றத்திற்கான காரணம். அண்மையில் பதவியில் இருந்து நீக்கபட்ட மூன்று அமைச்சர்களிலும், துறைமுகங்கள் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் மங்களா சமரவீரா வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் ஐ.நா சபையில் நடைபெற்ற தீர்மானம் ஒன்றின் மீதான வாக்கெடுப்பில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்ததும் மகிந்தாவின் கோபத்திற்கான ஒரு காரணம் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது: மங்களா பலஸ்த்தீனத்தை ஆதரித்தது தான் ஐ.நாவின் சிறுவர்களும் ஆயுத மோதல்களும் என்னும் பிரிவிக்கான விசேட பிரதிநிதியான அலன் றொக்கினால் சமர்ப்பிக்கப்பட்ட சிறீலங்கா அரசு மீது குற்றம் சுமத்தும் அறிக்க…
-
- 0 replies
- 643 views
-
-
அரசுக்குள் இருக்கும் குழு ஒன்றே ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்றது! மனோ கணேசன் எம்.பி. குற்றச்சாட்டு. அரசுக்குள் இருக்கும் ஒரு குழுவே ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக தெரியவருகிறது. கொழும்பில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபரொருவரை கைதுசெய்ய கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு உதவினோம். மூன்று மாதங்களாகியும் அந்த நபர் குறித்து எதுவித தகவலும் இல்லை. நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்படவுமில்லை என்று கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி எம்.பி. மனோ கணேசன் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கும் நீடிக்கும் பிரேரணை மீது அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: வடக்கு கிழக்குக்கு வெளியே 64 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் கொலை செய்யப்பட்…
-
- 10 replies
- 1.9k views
-
-
அரசைப் பலவீனப்படுத்துவோருக்கு புலிகள் உதவுவதாகக் குற்றச்சாட்டு சுதந்திரக்கட்சிச் செயலாளர் தெரிவிப்பு. அரசைப் பலவீனப்படுத்துவோரின் பின்னணியில் விடுதலைப் புலிகளே உள்ளனர் என சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயக்குழுக் கூட்டத்தின் பின் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இப்படிக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த முயற்சிப் போரின் பின்னணியில் விடுதலைப் புலிகளே உள்ளனர். பலவீனப்படுத்த முயற்சிப்போரின் நடவடிக்கைளின் பின்னணியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விடுதலைப் புலிகள் உள்ளனர் என்று தெளிவாகத் தெரியவருகிறது. புலிகளின் தேவைகளை அவர்கள் நிறைவேற்றி வருகின்றனர். ஆகையால் மஹிந்த ர…
-
- 0 replies
- 576 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற ஜே.வி.பி. தீவிரம் புதிய அரசியல் முன்னணியை அமைக்க ஐ.தே.க. முயற்சி. அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப் பட்ட மங்கள சமரவீர, அனுரா பண்டார நாயக்கா, ஸ்ரீபதி சூரியாராட்சி ஆகியோர் உட்பட ஏழு அரச எம்.பிக்களின் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்கு ஜே.வி.பி. தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஐ.தே.கட்சியில் இருந்து அதிருப்திக் குழுவினர் அரசுடன் இணைந்ததையடுத்து அக்கட்சியின் நாடாளுமன்ற பலம் 45 ஆகியுள்ளது. நாடாளுமன்றத்தில் 38 ஆசனங்களைக் கொண்டிருக்கும் ஜே.வி.பி., அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மூவர் உட்பட ஐ.தே.கட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஏழு உறுப்பினர்களின்…
-
- 0 replies
- 600 views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2007, 01:56 ஈழம்] [க.திருக்குமார்] வாகரை கண்டலடியில் அமைந்திருந்த மாவீரர்துயிலும் இல்லம் நேற்று சிறீலங்காப் படையினரால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. தமது வெற்றியை அடையாளப்படுத்தும் வகையில் கனரக இயந்திரங்களின் உதவியுடன் கண்டலடி மாவீரர்துயிலும் இல்லத்தை சிறீலங்காபடையினர் நேற்று முற்றாக அழித்துள்ளனர். சர்வதேச ஜனநாயக விதிகளின் படி போர்க்கைதிகள், போரில் காயமடைந்தவர்கள், போர் நினைவாலயங்கள் என்பவை யார் வசம் இருந்தாலும் மதிக்கப்பட வேண்டியவை. போரில் வீரமரணம் அடைந்த போராளிகளின் உடல்களை அடக்கம் செய்யும் பிரதேசம் மாவீரர் துயிலும் இல்லமாகும். இது தமிழ் மக்களின் மிக விசேடமான நினைவுச்சின்னமாகும், மரணமடைந்த வீரர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு…
-
- 2 replies
- 904 views
-
-
மனிதஉரிமை மீறல் குறித்து சுட்டிக்காட்டும் அமைப்புக்கள் புலிகள் சார்பானவை அல்ல - நாட்டில் சட்டம், ஒழுங்கு நடைமுறையில் உள்ளதா என ரணில் சபையில் கேள்வி இலங்கையில் பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்று வருவதாக மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்புக்கள் சுட்டிக்காட்டி வருகின்றன. இந்த அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பானவை என்று கூறிவிடமுடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் கூறினார். மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய பாராளுமன்ற நிலையியற் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் ரணில் விக்கிரம சிங்க சபையில் வேண்டுகோள் விடுத்தார். நாட்டில் சட்டம், ஒழுங்கு நடைமுறையில் உ…
-
- 1 reply
- 762 views
-
-
வன்னியில் அண்மையில் நடைபெற்ற இரு சம்பவங்கள் எமது தேசத்தின் இறுக்கமான புலனாய்வுக் கட்டமைப்புடன் தொடர்புபட்டவை. ஒன்று தமிழீழ தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்வை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் அண்மையில் ஆரம்பித்து வைத்திருந்தார். தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் இந்த அடையாள அட்டைகள் தேசத்தின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானவை. சிறிலங்காவின் சாதாரண அடையாள அட்டைகளை போலதல்லாது சர்வதேச தரத்திற்கு இணையாக தயாரிக்கப்பட்ட இந்த அட்டைகள் ஒரு மனிதனின் சரித்திரத்தை ஒரு சில நிமிடங்களில் கணணித்திரையில் தரவல்லவை. இரண்டாவது 'மிகப்பெரும் தாக்குதலுக்கு கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் தயாராகி வருகின்றனர், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து…
-
- 18 replies
- 4.1k views
-
-
Tamil MP sent kin to CanadaFears for their safety in Sri Lanka By TOM GODFREY, SUN MEDIA The wife and children of a senior Sri Lankan lawmaker are seeking refugee status in Canada following death threats that were made against the politician in Colombo, community members say. Suresh Premachandran, 47, is one of 22 MPs of the Tamil National Alliance in Sri Lanka. His wife, Gopilakumari Premachandran, and their three children aged 4, 8 and 12 have been living quietly in Scarborough even though their cases were flagged for further investigation by Canadian security officers, sources said. CROSSED AT FALLS Gopilakumari couldn't be reached …
-
- 12 replies
- 3.1k views
-
-
அனுரா, மங்கள, ஸ்ரீபதி சூரியாராய்ச்சி மூவரது அமைச்சுப் பதவிகளும் பறிப்பு!ஜனாதிபதி நேற்றிரவு அதிரடி நடவடிக்கை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களான அனுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராய்ச்சி ஆகியோரது அமைச்சுப் பதவிகள் நேற்றிரவு ஜனாதிபதியால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மூவரது அமைச்சுப் பதவிகளையும் ஜனாதிபதி நேற்றிரவு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்தது. கடந்த மாதம் 28ஆம் திகதி பதவியேற்ற புதிய அமைச்சரவையில் அனுரா பண்டாரநாயக்கா தேசிய பாரம்பரிய அமைச்சராகவும், மங்கள சமரவீர துறைமுகம் மற்றும் விமானசேவை அமைச்சராகவும், ஸ்ரீபதி சூரியாராய்ச்சி துறைமுக அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றிருந்தனர். …
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டமை மிகப் பெரிய தவறு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டமை மிகப் பெரிய தவறு என சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பி.பி.சி அவர் வழங்கிய நேர்காணலின் போதே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் என சில பிரதேசங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அங்கு வாழும் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவம் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார் இலங்கையின் அயல் நாடு என்ற வகையில் இனப்பிரச்சினை தீர்வு முயற்ச்சிகளில் இந்தியா கூடுதலான பங்களிப்பபை ணர்வு பூர்வமாக வழங்க வேண்டும் என த…
-
- 2 replies
- 1.9k views
-
-
சிறீலங்காவின் அரச அதிபர் வெடிகுண்டுதாரிகளைப் போல மனிதாபிமானம் அற்றவர்: த கார்டியன் நாளேடு [சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2007, 05:56 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற விடுதலைப்புலிகளை முறியடிக்கலாம் என சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சா நம்புவாராக இருந்தால் அவர் ஒரு மனிதாபிமானமற்றவராகவே கொள்ளப்படுவார். என நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய த கார்டியன் நாளேட்டில் ஜேனார்தன் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய ஆய்வின் முழுவடிவம் வருமாறு: சிறீலங்காவின் தென்மேற்கு கரையோர வீதியால் நாம் தலைநகர் கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்தோம். அதன் பிரதான சுற்றுலாத்துறை மையமான ஹிக்கடுவ பகுதியில் எம்மை இடைமறித்த சிறீ…
-
- 9 replies
- 1.7k views
-
-
சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தமிழர்கள் மீது தமிழருக்கு இல்லாத உணர்வு தீடிர் என்று சில சிங்களவருக்கு ஏற்பட்டுள்ளது. சிறீலங்கா அரசால் கொண்டுவரப்பட்ட அவசகாலச்சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான வாக்கெடுப்பு சிறீலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது ஆறுமுகம் தொண்டமானும் அமைச்சரான சந்திரசேகரனும் தமது இனம் மற்றும் மொழிப்பற்று என்பவற்றை மறந்துவிட்டு தமிழினத்தை அழிவிற்கு வழிவகுக்கம் அவசரகாலச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வரலாற்றில் தமிழினதின் ஒட்டுக் குழுக்களை வழிநடத்திய சிறிபதிசூரியாராச்சியும் மங்கள சமரவீர மற்றும் அனுரா பண்டாரநாயக்கா ஆகியோர் இந்த அவசரகாலத்திற்கு எதிர்பு தெரிவித்து நாடாளுமன்றத்தைவிட்டு வெளிநடப்பு செய்த நிலையில் இலங்கை அரசியலின் கிங்மேக்கர் என்று மார்ப…
-
- 1 reply
- 1.3k views
-