Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உணவு இல்லை, தங்கியிருக்க இடவசதி இல்லை இடம்பெயர்ந்த 1-1/2 இலட்சம் மக்கள் பரிதவிப்பு -கொளுத்தும் வெயிலில் துடிக்கும் குழந்தைகள் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் கடும் ஷெல் தாக்குதல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதலால் இடம்பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உண்ண உணவின்றியும் தங்க இடமின்றியும் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். கடந்த 8 ஆம் திகதி முதல் மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் மேற்கொண்டு வரும் உக்கிரத் தாக்குதல்களையடுத்து இரு நாட்களில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் புலிகளின் பகுதிகளிலிருந்து வெளியேறினர். பட்டிப்பளை, வவுணதீவு, வெல…

  2. சிறீபதி சூரியாராச்சி கைது முன்னால் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி கைது செய்யப் பட்டதாக சக்தி fM செய்திகள் தெரிவிக்கின்றன

  3. அமெரிக்கா வாழ் தமிழ் மக்களின் சொத்துக்களையும், முதலீடுகளையும் முடக்கும் சதி நடவடிக்கைககளில் சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம ஈடுபட்டு வருகிறார். ஜ சனிக்கிழமைஇ 17 மார்ச் 2007 ஸ ஜ நசார் ஸ விடுதலைப்புலிகளுக்கு எதிரான பரப்புரைகளை செய்வதற்காக வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் ரோகித, அமெரிக்க திறைசேரியின் மூத்த உறுப்பினரும், அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நாடுகளான ஈரான் மற்றும் வடகொரியாவைச் சேர்ந்தவர்களின் சொத்துக்களை முடக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஸ்ருவார்ட் லெவியை சந்திப்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ராஜாங்க அமைச்சர் கொண்டலிஸா றைஸை நேற்று சந்தித்து பேசிய சிறிலங்க…

  4. [ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2007, 04:45 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோதல்களை நிறுத்தி அமைதி முயற்சிகளை ஊக்கிவிக்கும் முகமாக சிறிலங்காவிற்கான சிறப்பு பிரதிநிதியை ஒருவரை நியமிக்கும்படி அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு சிறிலங்கா அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நியூயோர்க்கில் இருந்து சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்ததாவது: "சிறிலங்காவிற்கு சிறப்பு பிரதிநிதியை அமைக்க வேண்டிய தேவை இல்லை. அப்படியான ஒரு பிரதிநிதி எமக்கு தேவையில்லை. காங்கிரஸ் உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு நாம் ஏற்கனவே பதிலளித்துள்ளோம். மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கும் எமக்கு அம…

  5. எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி நடைபெறவுள்ள சுவிற்சர்லாந்தின் மத்திய பகுதி மாநிலமான லுசேர்ன் கன்ரோன் பாராளுமன்றத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் (ளுP) சார்பில் ஈழத்தமிழரான திரு. லதன் சுந்தரலிங்கம் போட்டியிடுகின்றார். ஏற்கனவே 2004 ம் ஆண்டில் லுசேர்ன் நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நகரசபை உறுப்பினராகவுள்ள இவர் தற்போது கன்ரோன் பாராளுமன்றத்தேர்தலிலும் போட்டியிடுகின்றார். ஆரம்பத்தில் மருத்துவதாதி பயிற்சியை முடித்துக்கொண்ட இவர் லுசேர்ன் பல்கலைக்கழகத்தில் “பல்கலாச்சார தொடர்பாடல் நெறி” யில் (ஆழசந ஊரடவரசயடடல ஊழஅஅரniஉயவழைn) டிப்ளொமா பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் உயர்கல்லூரி முகாமைத்துவ கற்கை நெறியிலும் தனது பயிற்சியை நிறைவுசெய்துள்ளார் சுவிற்ச…

    • 18 replies
    • 3.7k views
  6. -புரட்சி (தாயகம்)- காலத்திற்கு காலம் சிறிலங்கா அரசின் தலைவர்களும் அவர்களின் இராணுவத் தளபதிகளும் புலிகளைப் போரில் வென்று வருவதாகவும் விரைவில் அவர்களை முழுமையாகத் தோற்கடிக்கப்போவதாகவும் தெரிவித்துவருவது வழக்கமாகும். பௌத்த பேரினவாதிகள் மற்றும் இனவாத கடும்போக்காளர்கள் இவ்வாறான கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மக்களுக்கு எதிராக ஊர்வலம் நடத்துவதும் தென்னிலங்கை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை முதற்பக்கத்தில் வெளியிடுவதும் நாம் எல்லோரும் அறிந்ததே. எவ்வாறெனினும் சிங்கள அரச தலைவர்கள் மற்றும் சிங்கள பேரினவாதிகள் எதிர்பார்;க்கும் பாரிய இராணுவ வெற்றிகள் எதனையும் துட்டகைமுனுவின் மைந்தர்கள் இதுவரை பெற்றுக்கொடுக்கத் தவறிவி…

    • 0 replies
    • 770 views
  7. இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த 10 இலங்கை மீனவர்கள் கைது இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இராமநாதபுரம் கீழக்கரை கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்களது 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்த போது இலங்கையில் நிலவி வரும் சண்டையால் தங்களால் அப்பகுதியில் மீன்பிடிக்க இயலவில்லை என்றும் அதனால் சற்று தொலைவாக இலங்கை எல்லையில் மீன்பிடிக்க வந்ததாகவும் கடலில் வீசிய பலத்த காற்றால் தாங்கள் இந்திய எல்லைக்குள் அடித்து வரப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்..

    • 5 replies
    • 1.7k views
  8. முகமாலையில் எறிகணைத் தாக்குதலில் படைச்சிப்பாய் பலி. ஒருவர் காயம். யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்கப் பகுதிகளிலிருந்து சிறிலங்காப் படையினர் நேற்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி எறிகணைவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலுக்குப் பதில் தாக்குதலை விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போது ஒரு சிறிலங்காப் படைச்சிப்பாய் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://sankathi.org/

  9. சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளைக் கூட மதிக்காமல் சிறிலங்கா அரசு செயற்பட்டுவருகின்றது: சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறும், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடித்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதற்குமுரிய நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்கா அரசை வலியுறுத்துவதோடு, தமிழின அழிப்பு நடவடிக்கைகளை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்காமல் சர்வதேச சமூகம் தீர்வு ஒன்றினைக் காண உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுகிறோம். என சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை கோரியுள்ளது ' மாணவர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச முன்னிலையில் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக்கூட மதிக்காமல் சிறிலங்கா அரசு செயற்பட்டு வரு…

    • 0 replies
    • 1k views
  10. தற்கொலைக் குண்டுதாரி யாழ். குளப்பிட்டியில் சுடப்பட்டதாக படையினர் அறிவிப்பு குளப்பிட்டிப் பகுதியில் இருந்து சூட் டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் யாழ். ஆஸ்பத்திரியில் நேற்று மானிப்பாய் பொலிஸாரால் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இவர் தற்கொலை தாக்குதலில் ஈடுபட இருந்தவர் என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குளப்பிட்டிச் சந்தியில் இருந்து சாவற் கட்டுக்குச் செல்லும் வீதியில் அமைந் துள்ள படையினரின் காவலரண் மீது தற் கொலைத் தாக்குதல் நடத்த முனைந்த இளை ஞனையே தாம் சுட்டுக்கொன்றதாக படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சைக்கிளில் வந்த பிரஸ்தாப இளைஞன், படையினர் சோதனை நடத்த முனைந்த போது தாக்குதல் நடத்த முற்பட்டார். அத னால் படையினர் அவரைச் சுட்டுக் கொன்ற னர் என்றும…

    • 2 replies
    • 1.3k views
  11. அரசியல் தீர்வு யோசனையினை ஒருவாரத்தில் முன்வைக்க தீர்மானம் சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவில் முடிவு இனப்பிரச்சினை தீர்வுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் தீர்வு யோசனையை இன்னும் ஒரு வாரத்தில் முன்வைப்பது என்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு கூடிய அந்தக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டதாக அறியமுடிகிறது. மத்திய குழு கூட்டத்தின்போது அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் அமைந்த கட்சியின் தீர்வு யோசனை தொடர்பாக நீண்ட நேரம் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அதேவேளை பதவி விலக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரி…

    • 4 replies
    • 1.5k views
  12. வவுனியாவில் சிறிலங்காப் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு [வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2007, 19:09 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மேற்கில் பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. படையினர் இன்று வெள்ளிக்கிழமை ஓமந்தைக்கு மேற்காக பாலமோட்டைப் பகுதி விடுதலைப் புலிகளின் முன்னரண்களை நோக்கிய நகர்வை மேற்கொண்டனர். முன்னகர்ந்த படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் இன்று நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை முறியடிப்புத் தாக்குதலை தொடுத்தனர். இதனையடுத்து படையினர் படை உபகரணங்கள் சிலவற்றை கைவிட்டு இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கி ஓடிவிட்டனர். இந்த …

    • 4 replies
    • 2.4k views
  13. பிரஞ்சுக் காலனித்துவப் பிடியிலிருந்து தம்மை விடுவிக்கத் தனது இறுதிப் போராட்டத்தை அல்ஜீரிய "தேசிய விடுதலை முன்ணணி" முடுக்கிவிட்டிருந்த காலகட்டமது. பல நூறாயிரம் படையினரைக் கொண்ட பிரஞ்சு இராணுவத்தின் எல்லை கடந்த கொடூரங்களையும் மீறி அல்ஜீரியத் தேசிய விடுதலை முன்ணணி உக்கிரமான தாக்குதல்களை பிரஞ்சு இராணுவத்தின் படைப்பிரிவுகள் மீது தொடுத்துக் கொண்டிருந்தது. ஏகாதிபத்தியக் காலணித்துவச் சக்தியிடமிருந்து விடுபட்டு தனது சுதந்திரத்தை நிலைநிறுத்தும் நோக்கில் அல்ஜீரியர்கள் முன்னெடுத்த சுதந்திரப் போராட்டம் மிகவும் கடினமானதாகவும் பாரிய இழப்புகளைக் கொண்டதாகவும் நகர்ந்துகொண்டிருந்தது. ஒரு தேசத்தின் விடுதலைப்போராளிகளை அடக்கி ஒடுக்கி நசுக்குவதற்கு அநேகமான அடக்குமுறையாளர்கள் அத்தேசத…

  14. சந்திரன் சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கான வாருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி கிளிநொச்சி சந்திரன் சர்வதேச பாடசாலை ஆரம்பநிலை மாணவர்களுக்கான வாருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் அங்கையற்கன்னி இல்லம் மற்றும் மில்லர் இல்லம் ஆகிய இரு இல்லங்களுக்கிடையிலான திறனாய்வுப் போட்டிகள் இன்று மதியம் 2.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் பாண்ட்வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். இதன் பின்னர் பாடசாலை மாணவர்களினால் ஒலிம்பிக்தீபம் ஏற்றப்பட்டு அணிவகுப்புக்கள் இடம்பெற்றன. அணிவகுப்பினைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந் …

    • 0 replies
    • 782 views
  15. தமிழகத்தில் இருந்து குடாநாட்டிற்கு உணவுப்பொருட்கள் யாழ்குடாநாட்டிற்கு தேவையான உணவுப்பொருட்களை தமிழகத்தில் இருந்து மாதாந்தம் மூன்று தடவை கப்பல் மூலம் தருவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்;பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க செயலர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தடவையும் மூவாயிரத்து முந்நூறு மெற்றிக் தொன் உணவுப்பொருட்கள் யாழ் குடாநாட்டிற்கு தருவிக்கப்படும் என்றும் இதற்கென தனியான கப்பல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/

    • 0 replies
    • 619 views
  16. சனி 17-03-2007 01:12 மணி தமிழீழம் [மோகன்] ஊரடங்கு நடைமுறையில் மாற்றம் நேற்று முதல் இரவு மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக சிறீலங்கா படையினர் அறிவித்துள்ளனர். சிறீலங்கா படையினர் தமது வசதிக்கேற்ப ஊரடங்கு அமுலுக்கு வரும் நேரங்களை மாற்றுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரியவருகிறது. பதிவு

  17. வெள்ளி 16-03-2007 23:34 மணி தமிழீழம் [மயூரன்] களப்பலியான போராளியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா படையினருடனான நேரடி மோதலில் களப்பலியான போராளியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது மேஐர் புவியரசன் என்றழைக்கப்படும் கிளிநொச்சி முழங்காவில் கிராஞ்சி மொட்டையன்குளம் அந்தோனியார் கோவிலடியை சொந்த இடமாக கொண்ட சுப்பிரமணியம் nஐனாந்தன் என்ற போராளி வீரச்சாவை தழுவிக் கொண்டுள்ளார்.

  18. வெள்ளி 16-03-2007 23:05 மணி தமிழீழம் [மயூரன்] தென்னிலங்கை மதத் தலைவர்கள் யாழ் விஐயம் யாழில் தற்போது நிலவும் வெளியிடப்போக்குவரத்து நெருக்கடிகள் குறித்தும், மீன்பிடித்தடைகள் இதனால் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் இவற்றை ஆராயும் பொருட்டு இரு சிங்கள் கிறீஸ்தவ ஆயர்களும், பௌத்த துறவியொருவரும் யாழ் குடாநாட்டிற்கு செல்ல இருப்பதாக வடமாகாண கடற்தொழிலாளர் சமாச தலைவர் தி.தவரட்ணம் தெரிவித்துள்ளார். இவர்கள் மாவட்ட அரசாங்க செயலரையும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கும் இவர்கள் கொழும்பு திரும்பி சிறீலங்கா உயர் தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பதிவு.கொம்

  19. வெள்ளி 16-03-2007 23:28 மணி தமிழீழம் [மயூரன்] பருத்தித்துறை துறைமுகத்தை பலப்படுத்தும் முயற்சி இன்று பருத்தித்துறையில் உள்ள 52 ம் படைப்பிரிவின் நான்காவது பரிகேட் தலைமையகத்தில் சிறீலங்கா படைகளின் யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஐர் nஐனரல் ஜி.ஏ.சந்திரசிறீ தலைமையில் பாதுகாப்பு மாநாடு இடம்பெற்றது. சிறீலங்கா தரைப்படை, கடற்படை, வான்படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு துறைமுக பாதுகாப்பை பலப்படுத்தும் கடல் ரோந்துகளையும், வான்வேவு நடவடிக்கைகளையும் அதிகரிப்பது தொடர்பாகவும் ஆராயப்;பட்டதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதிவு

  20. - பண்டார வன்னியன் குசனையலஇ 16 ஆயசஉh 2007 15:48 சிறிலங்கா அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையால் யாழ்ப்பாணத்திலிருந்து 40 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர் யாழ் குடாநாட்டில் அதிகரித்திருக்கும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களால் குடாநாட்டிலிருந்து இதுவரை 40,000 பேர் வெளியேறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கிருந்து வெளியேறுவதற்கு 80,000 பேர் இன்னமும் காத்திருப்பதாகத் தெரியவருகிறது. படையினரின்; சிவில் நிர்வாக அலுவலகத்தில் 40,000 பேர் அனுமதிபெற்று குடாநாட்டிலிருந்து வெளியேறியிருப்பதுடன், 80 ஆயிரம் பேர் அனுமதி பெற்றுவிட்டு வெளியேறுவதற்குக் காத்திருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. …

  21. -அருஸ் (வேல்ஸ்)- 'இராணுவத் தீர்வு", 'அரசியல் தீர்வு" இவை இரண்டும் தற்போது பிரபல்யமான சொற்கள். போர்நிறுத்த காலத்தில் அழுத்தம் கூடியிருந்த அரசியல் தீர்வு என்னும் சொற்பதம் தற்போது அழுத்தம் குறைந்ததாகவும். அன்று அழுத்தம் குறைந்திருந்த இராணுவத் தீர்வு என்ற சொல் அழுத்தம் கூடியதாகவும் தற்போது மாறியுள்ளது. சிறிலங்கா அரச தலைவர் தொடக்கம் அடிமட்ட சிங்கள மக்கள் வரை இராணுவத்தீர்வின் கனவில் மிதக்கும் போது, அனைத்துலக சமூகம் அடிக்கடி அரசியல் தீர்வை வலியுறுத்துகின்றன. இந்த எதிரும் புதிருமான கருத்துக்களுக்கு காரணம் என்ன? http://www.tamilnaatham.com/articles/2007/mar/arush/16.htm தாம் உலகில் கற்ற பாடங்களில் இருந்து கூறும் கருத்துக்களாக அனைத்துலக சமூகத்தின் கருத்தும். த…

    • 0 replies
    • 1.1k views
  22. அவுஸ்திரேலிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தமது நாட்டிற்கு திருப்பியனுப்பப்படும் பட்சத்தில் அவர்கள் துன்புறுத்தலிற்கு உள்ளாவார்கள் எனின் அவர்களை இலங்கைக்கு அனுப்பபோவதில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் இணைந்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் சில சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலித்து வரும் அதேவேளை அதன் சர்வதேச கடப்பாடுகளை மீறும் விதத்தில் செயற்படாது என அறிக்கையில் தெரிவித்துள்ளது. அகதிகள் சித்திரவதையை அனுபவிக்ககூடிய நாட்டிற்கு திருப்பியனுப்பப்படுவது குறித்த இணைக்கப்பாட்டிற்கு அவுஸ்திரேலியா வரும் என்பதையும் அவர்கள் நிராகரித்…

  23. ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 11 மார்ச் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ திருக்கோணமலை நகரில் சிங்கள பாடசாலை ஒன்றை அமைப்பதை காரணம் காட்டி ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி முதலாம், இரண்டாம் தர மாணவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் 165 மணவர்கள் பலத்த இன்னல்களை அனுபவிக்க உள்ளனர். திருக்கோணமலை மசூதி வீதியில் புனித அந்தோனியார் வித்தியாலயம் என்னும் சிங்கள பாடசாலை ஒன்று 1987ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து திருகோமணலை நகரில் ஏற்பட்ட இன வன்முறை காரணமாக இப்பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தராமையால் இப்பாடசாலை மூடப்பட்டது. இங்கு இந்திய அமைதி காக்கும் படை முகாம் இட்டிருந்தது. 1988ம் அண்டு கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோணேஸ்வரா வித்திய…

    • 11 replies
    • 2.6k views
  24. இந்தியா! நீயுமா? .நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் நாலா வது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்ப மானது. இலங்கை உட்பட முக்கிய பல நாடுகளில் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான நிலை வரத்தை ஆராயும் முக்கிய சர்வதேசக் கூட்டமாக இது அமைகின்றது. இந்த மாத முடிவு வரை இந்தத் தொடர் நீடிக்கின்றது. சட்டத்துக்கு முரணான வகையிலும் சட்ட விரோதமாகவும் இடம்பெறும் படுகொலைகள் தொடர்பான ஐ. நாவின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன், யுத்தப் பிணக்குகளின் மத்தியில் சிக்கியுள்ள சிறுவர்களின் விவகாரத்தைக்கையாளும் ஐ. நாவின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி, மனித உரிமைகள் ஆணையாளர் லூஸி ஆர்பர் உட்பட மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசப் பிரதிநிதிகள் இலங்கை உட்பட பல நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படும் நிலைம…

    • 40 replies
    • 7.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.