Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்களுக்குப் புரியாத நீதி! ` "நீதி நிலைநாட்டப்படுவது மட்டுமல்லாமல் நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்.' என்ற ஒரு மகாவாக்கியம் நீதித்துறையில் உள்ளது. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பொதுவாக நீதி நிலைநாட்டப்படுகிறதோ இல்லையோ, நீதி நிலைநாட்டப்படுவதாக அவர்களது மனதில் திருப்தி ஏற்படக்கூடிய விதத்தில் நிகழ்வுகள் இடம்பெறுவதில்லை என்பதே உண்மை. இலங்கையின் நீதித்துறையையோ அல்லது நீதிமன்றங்களையோ அல்லது அவற்றின் தீர்ப்புகளையோ இழிவுபடுத்தும் விதத்தில் இங்கு விமர்சிப்பதல்ல எமது நோக்கம். விமர்சன விலக்களிப்பு விசேடமாக வழங்கப்பட்டுள்ள நீதித்துறைக்கு எதிராகப் பகிரங்கமாகக் கருத்துக் கூறும் உரிமை ஊடகவியலாளனுக்கு இந்நாட்டில் அதிகம் இல்லை, அது மட்டுப்படுத்தப்பட்டதே என்பதும் …

  2. இந்த உதை பந்தாட்ட நிகழ்வு வரும் ஆண்டாகிய 2008இலேயே நடக்க இருக்கிறது. வரும் ஆண்டாகிய 2008ல் சிறிலங்கா தன்னுடைய 60வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த 60வது சுதந்திர தினத்தை முன்னிட்டே இந்த உதைபந்தாட்ட நிகழ்வு இருக்கிறது. இந்த உதைபந்தாட்ட நிகழ்வின் பின்னணியில் நெதர்லாந்தில் உள்ள சிறிலங்காவின் தூதரகம் இருக்கிறது. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், அதுதான் உண்மை. அண்மையில் பல நாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்களுக்கு புதிய பணியாளர்கள் சிறிலங்கா அரசினால் அனுப்பப்பட்டு வருகிறார்கள். இதில் பலர் சிறிலங்காப் புலனாய்வுத் துறையில் பணியாற்றியவர்கள். இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை, ஐரோப்பாவில் உள்ள தமிழர்களுக்குள் பிரிவினையை உருவாக்குவது. தமிழர்களுக்கும் சிங்கள…

    • 16 replies
    • 4.5k views
  3. மானிப்பாயில் கட்டட தொழிலாளி கடத்தல். நேற்று வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் வெள்ளை வானில் சென்ற ஐந்துக்கு மேற்பட்ட இனம் தெரியாத நபர்கள் உடுவிலில் ஆலடி இடம்பெயர்ந்த முகாமில் வசிக்கும் கட்டட தொழில் புரிபவரை தனது தாயர் வசிக்கும் மானிப்பாய் பகுதிக்கு சென்று விட்டு வரும் வழியில் கடத்தி சென்றுள்ளதாக மனித உரிமைகள் மையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதன்பொது கடத்தப்பட்டவர் 30 அகவையுடைய நடனசிகாமணி வசந்தராஐன் என இனம் காணப்பட்டுள்ளார். இவர் தப்பிக்க முயல்கையில் அந்த நபர்கள்ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகளை தீர்த்ததாகவும் இவர் அதில் இருந்து தப்பிக்க தரையில் வீழ்ந்தபோது இவரை தூக்கி சென்றுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். -Pathivu-

  4. [வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007, 05:54 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்காவின் இறையான்மை உரிமையை எந்தக் காலத்திலும் மீறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை" என்று அமெரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சக அதிகாரியான ஸ் ரீவன் மானை ஜே.வி.பி எச்சரித்துள்ளது. சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் படி காங்கிரஸ் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமெரிக்க அரச தலைவர் ஜோர்ச் புஸ்சினால் ஸ் ரீவன் மான் சிறிலங்காவிற்கு அனுப்பப்பட்டிருப்பதனைத் தொடர்ந்தே ஜே.வி.பி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்சவினால் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு அறிக்கையின் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. …

  5. 'இலக்கத் தகடற்ற வெள்ளை வான் என்னைப் பின் தொடர்கின்றது': சிறீபதி சூரியாராச்சி "கடந்த சில நாட்களாக இலக்கத் தகடற்ற வெள்ளை வான் என்னைப் பின்தொடர்கிறது, எனவே எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது" என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாவது: "மங்கள சமரவீரவையும் என்னையும் அமைச்சர் பதவிகளில் இருந்து வெளியேற்றிய பின்னர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய எமது பாதுகாப்புக்களும் விலக்கப்பட்டிருந்தன. எமது உயிர்களுக்கு விடுதலைப் புலிகளால் மட்டுமல்லாது வேறு சிலராலும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நோக்குடன் தான் இவை செய்யப்பட்டுள்ளன. ந…

  6. யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள ஆறு லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மோசமான பாதுகாப்பு நிலைமைகளால் புனரமைப்பு பணிகள் மந்தமடைந்துள்ளன. ஏ-9 பாதையினூடாக குடாநாட்டிற்கு செல்வது கடந்த ஓகஸ்ட்டில் இருந்து தடைப்பட்டுள்ளது என்று யூனிசெஃப் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் நலன்பேண் பிரிவான யுனிசெஃப்பின் பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தீர்க்கப்பட முடியாத மோதல்கள், ஆபத்தான கட்டத்தில் உள்ள போர் நிறுத்த உடன்பாடு ஆகியன சிறார்களினதும், பெண்களினதும் உயிர்களுக்கு பெரும் ஆபத்தாக உள்ளதுடன், பொருளாதார அபிவிருத்தியையும் அதிகளவில் பாதித்துள்ளது. 2002 ஆம் ஆண்டிற்குப் பின…

    • 1 reply
    • 687 views
  7. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றம் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரையில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை அங்கு மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏனைய சில பகுதிகளில் இருந்து மக்கள் பெருவாரியாக வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சென்றடைந்துள்ளார்கள். மட்டக்களப்பு வாவிக்கு அப்பாலும் செங்கலடி - பதுளை வீதியிலுள்ள கிராமங்களிலிருந்தும் கடந்த ஒரு வார காலத்திற்குள் 3200 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து வந்துள்ளதாகக் கூறும் அதிகாரிகள் க…

    • 0 replies
    • 594 views
  8. சங்கமம் விழா புலிகளுக்காகவா ? - பாதிரியார் ஜெகத் கஸ்பர் சங்கமத்துக்கும், சர்ச்சைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் போலிருக்கிறது. சென்னையில் நடந்து முடிந்த சங்கமம் கலைவிழா, இன்னும் சிக்கலில் இருந்து ஓய்வதாகத் தெரியவில்லை. அந்த வரிசையில் இப்போது, ‘சென்னை சங்கமம் கலை விழாவை நடத்திய தமிழ் மையத்தின் நிர்வாக இயக்குநராக ஃபாதர் ஜெகத் கஸ்பார் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘கஸ்பார் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர். ஏற்கெனவே அவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றியபோது ‘புலிகளுக்கு உதவி’ என்ற புகாருக்கு ஆளானவர். இளையராஜாவின் ‘திருவாசகம்’ சி.டி. வெளியீடு நடத்தி, அதன்மூலம் பெரும் தொகையைப் புலிகளுக்குக் கொடுத்தவர். அதுமட்டுமின்றி, அமெரிக்காவில் புலிகளுக்காக ஆயுதக் கடத்த…

  9. மனித உரிமைமீறல்களும் அரசாங்கத்தின் பிரதிபலிப்பும் இலங்கையில் மனித உரிமைகள் படுமோசமாக மீறப்படுகின்ற தற்போதைய நிகழ்வுப் போக்கு எங்குபோய் முடியுமோ தெரியவில்லை. கடந்த சனிக்கிழமை கொழும்புக்கு வெளியே முத்துராஜவெலவில் சதுப்பு நிலப்பகுதியில் உருக்குலைந்த ஐந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மறுநாள் களனி கங்கையில் மிதந்து கொண்டிருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலையும் வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம் பகுதியில் ஐந்து பேரின் சடலங்கள் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் அன்றாடம் குறைந்தது ஐந்து பேராவது சுட்டுக்கொலை செய்யப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆட்கடத்தல்களும் ஓய்ந்தபாடாக இல்லை. இவ்வருடத்தின் முதல் இரு மாதங்க…

  10. ஜனாதிபதியின் சீனப்பயணமும் மேற்குலகின் காய்நகர்த்தலும் - சி.இதயச்சந்திரன் இலங்கையின் நாடாளுமன்ற ஆட்சி, நிர்ணயிக்கப்பட்ட 6 வருடங்களை பூர்த்தி செய்ததாக அண்மைக்காலமாக வரலாறு இல்லையெனினும், போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்த காலம் ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்து இன்னமும் நீண்டு கொண்டு செல்கிறது. இடையில், ஆட்சிப்பீடமேறிய ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் 4000 இற்கும் மேற்பட்ட பிரஜைகள் உயிரிழந்துள்ளனர். இந்த 4000இற்குள் செஞ்சோலைச் சிறார்களும், மூதூர் தொண்டு நிறுவனப் பணியாளர்களும், அல்லைப்பிட்டி, வங்காலை, சம்பூர், வாகரை மக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களில் ஈடுபடும் சகல நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு…

    • 1 reply
    • 758 views
  11. தேசத்துரோகம்: சிங்கள நாளேடு ஜவியாழக்கிழமைஇ 8 மார்ச் 2007இ 18:41 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கையைப் பாதுகாக்கும் முகமாக மாவிலாறுஇ சம்பூர்இ வாகரைப் பிரதேசங்களைக் கைப்பற்றி சிறிலங்காப் படைகள் பெற்றுக்கொண்ட வெற்றிகளுக்கு எதிராக செயற்படுத்தப்படவுள்ள தேசத்துரோக சதித்திட்டத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள நாளேடொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை வெளிவந்த சிங்கள நாளேடான 'தினமின' தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கின்றது. "மாவிலாறுஇ சம்பூர்இ வாகரை வெற்றிகளை குறைத்து மதிப்பிடும் தேசத்துரோக சதித்திட்டம்" என்று தலைப்பிடப்பட்ட அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தற்போது அமுல்படுத்தப…

    • 0 replies
    • 880 views
  12. அண்மையில் கொழும்பு காந்தானை மற்றும் அநுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட பத்துக்கு மேற்பட்ட சடலங்களும் கருணா ஒட்டுக்கும்பலின் முன்னால் உறுப்பினர்களினதே என சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கருணா ஒட்டுக்குழுவிலிருந்து விலகி வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடியவர்களே, இவ்வாறு கருணா ஒட்டுக்கும்பலினால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருப்பதாக, அவர்களது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இதேவெளை சிறிலங்காப் படையினரின் துணையின்றி, பல சோதனைச் சாவடிகளைக் கடந்து எவ்வாறு கந்தானைப் பகுதியில் சடலங்கள் வீசப்பட முடியுமென பல அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் மட்ட்க்களப்பில் கருணா ஒட்டுக்கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட சி…

  13. ராணுவத்திற்குப் பயந்த குடும்பம்; மனிதஉரிமை ஆணைக்குழுவில் சரண். - யாழ்ப்பாணம் இராணுவத்தினர் வீடு தேடி வந்ததைத் தொடாந்து தாயும் இரண்டு பெண் பிள்ளைகளும் யாழ் மனித உரிமைகள் ஆனைக்குழு அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளார்கள் நேற்று பிற்பகல் ஊnழு இராணுவ முகாமில் இருந்து வருகை தந்து உந்துருளி அணியினர் திருநெல்வேலி மணல் தரை வீதியில் பெண்களைத் தனியாகக்கொண்ட இந்த குடும்பத்திடம் சென்று ஊரெழு இராணுவ முகாமிற்கு வரும்படி வற்புறுத்தியுள்ளார்கள் இதனால் பயந்த தாயும் பெண்பிள்ளைகளும் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தின் மூலம் பொலிசில் ஒப்படைக்கப்பட்டு தற்போது யாழ் நீதிமன்றத்தில் ஆஐர் செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்கள் ஊரெழுவில் உள்ள இராணுவ ம…

  14. ஸ்ரீபதி சூரியாராச்சியின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சியின் ஆதரவளர்கள் மீது நேற்று இரவு இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர் . நேற்று இரவு கிரிபத்கொட பாத்திமா மகாவித்தியாலயத்துக்கருகில் இத் துப்பாக்கி பிரயோகம் இடம் பெற்றுள்ளது ஸ்ரீபதி சூரியராச்சி கலந்து கொள்ளவுள்ள நிகழ்வொன்றிற்கான சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டுடிருந்தவர்கள் மீதே இத் துப்பாக்கி பிரயோகம் இடம் பெற்றுள்ளது . எனினும் இத் துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் காயமோ உயிராபத்தோ ஏற்படவில்லை இது தொடர்பாக கிரிபத்கொட பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . சம்பவத்தின் போது ஸ்தலத்தில் இருந்தவர்கள் துப்பாக்கி தாரிகளை இனங்க…

  15. [வியாழக்கிழமை, 8 மார்ச் 2007, 16:50 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] "நான்காம் கட்ட ஈழப் போரை வெல்ல அனைவரும் ஒன்றிணைவோம்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் பானு தெரிவித்துள்ளார். எதிர்பாராது இடம்பெற்ற தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் வினோதரனின் வீரவணக்கக் கூட்டம் மாங்குளத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெற்றது. இந்நிகழ்வு மாங்குளம் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. பொதுச்சுடரை தளபதி கேணல் பானு ஏற்றி வைத்தார். வித்துடலுக்கான ஈகச்சுடரை மேஜர் வினோதரனின் துணைவியார் ஏற்றி, மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து வித்துடலுக்கு மலர்மாலைகளை மேஜர் வினோதரனின் தந்தை மற்றும் தாயாரும் தளபதி…

  16. யாழில்.கடந்த பெப்ரவரி மாதத்தில் 34 பேர் காணாமல் போயுள்ளனர் :ம.உ.ஆணைக்குழு. யாழ். குடாநாட்டில் கடந்த பெப்ரவரி மாதத்தில் 34 பேர் காணாமல் போயிருப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக யாழ். மனிதஉரிமை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 42முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன. அவற்றில் 15முறைப்பாடுகள் படையினரால் பொதுமக்கள் காணாமல் போனமை தொடர்பாகவும், 7முறைப்பாடுகள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாகவும் ஏனைய 12முறைப்பாடுகள் காணாமல் போனது தொடர்பாகவும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மனிதஉரிமை ஆணைக்குழுவின் அலுவலக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை…

  17. அமைச்சரவையை மேலும் விரிவுபடுத்தி `ஆட்கடத்தலுக்கும்' ஒருவரை நியமியுங்கள் -கன்னியுரையில் சந்திரகாந்தன் எம்.பி. [08 - March - 2007] [Font Size - A - A - A] - டிட்டோ குகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் - தினமும் தமிழர்கள் கடத்தப்படுகையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து கடத்தலுக்கு பதில் கூறும் அமைச்சரொருவரை புதிதாக நியமிக்க அரசு முன்வரவேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தன் தனது கன்னி உரையில் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தினமும…

  18. நீர்கொழும்பில் கடத்தப்பட்ட சிறுமி நேற்றிரவு வீட்டின் அருகில் விடுவிப்பு [08 - March - 2007] [Font Size - A - A - A] நீர்கொழும்பு, மென்ஸன் பிளேஸில் வைத்து பெருந்தொகை கப்பம் கோரி கடந்த திங்கட்கிழமை இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட சிறுமி நேற்று புதன்கிழமை இரவு விடுவிக்கப்பட்டுள்ளார். கப்பப் பணம் எதுவுமே வழங்கப்படாத நிலையிலேயே இவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை பிற்பகல் இந்தச் சிறுமியும் இவரது ஒன்றுவிட்ட சகோதரியும் வீட்டின் அருகிலுள்ள வீடொன்றுக்குச் சென்றபோது ஆட்டோ ஒன்றுடன் காத்திருந்த சிலர் இந்தச் சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். 40 இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக வழங்கினால் மட்டுமே இவரை விடுவிப்போமென கடத்தல்காரர்கள் தொலைபேசி மூலம் மிரட்டியது…

  19. குடாநாட்டிலிருந்து வைத்தியர்கள் வெளியேறுவதனால் நெருக்கடிநிலை [Thursday March 08 2007 06:39:06 AM GMT] [virakesari.lk] யாழ்ப்பாணத்தில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையினால் வைத்தியர்கள் பலர் வெளியேறியுள்ளனர். இதனால் வைத்தியசாலையின் பணிகள் ஸ்தம்பிதமடையும் நிலைதோன்றியுள்ளது. மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் மாவட்ட மற்றும் அரசினர் வைத்தியசாலைகளிலேயே இந்நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக தெரியவருகின்றது. யாழ்.மாவட்டத்தில் மேற்படி வைத்தியசாலைகளில் ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரிகளே வைத்தியர்களாக பெருமளவில் பதவி வகித்து வருகின்றனர். இவர்களும் யாழ். குடாநாட்டில் தற்போது தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையினாலும், நெருக்கடி நிலைமையினாலும் தமது ஒப்பந்த…

  20. தாண்டிக்குளம் பரிஸ்ரர், அவரது இரு மகன், மற்றும் இரு உதவியாளர்களை காணவில்லை தாண்டிக்குள் கிறீஸ்தவ தேவாலயத்தை சேர்ந்த கிறீஸ்தவ பாதிரியார் விக்ரர் போல் ஜோகராஐ (அகவை 51), அவரது இரு மகன்கள் மற்றும்இரு உதவியாளர்கள் சமய நிகழ்வு ஒன்றுக்காக பெப்ரவரி 28ம் திகதி தொடரூந்து மூலம் சென்றதாகவும் பின் மறுநாள் தொலைபேசி மூலம் 1ம் திகதி உறிவினர் வீட்டில் இருந்து தொடர்பு கொண்டதாகவும் அதன்பின் அவர்களின் தொடர்பு இல்லை என செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதன்போது காணாமல் போனவர்கள் 22 அகவையுடைய யோகராஐ டானியல், 19 அகவையுடைய யோகராஐ டேவிட் மற்றும் 20 அகவையுடைய உதவியாளர் ஜோசெப் சுகந்திராஐ என தெரியவந்துள்ளது. http://www.pathivu.com/ind…

  21. I have red this news… Could this be the last war for the SL’s military… http://news.yahoo.com/s/afp/20070308/wl_st...ve_070308055922

    • 20 replies
    • 7.2k views
  22. அரசைக் கண்டிப்பதில் மட்டும் அனைத்துலகம் பின்னடிப்பது ஏன்? இலங்கையில் செயல் இழந்துவரும் யுத்தநிறுத்த ஒப்பந்தம், முற்றாக முறிந்து பெரும் போர் வெடிப்பதற்கான ஏதுநிலைகள் தென்படுகின்றன. ஒப்பந்தத்தின் ஒரு தரப்பாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இது குறித்து முற்கூட்டியே எச்சரிக்கை செய்திருக்கின்றார்கள். தமிழர் தாயகத்தின் இருதயம் போன்ற மணலாறு (வெலிஓயா) பகுதியைக் கைப்பற்றி ஆக்கிரமிப்பதற்கு அரசுப் படைகள் பெரும் எடுப்பில் ஆயத்தமாகி வருகின்றன எனக் குற்றம் சுமத்தியிருக்கும் விடுதலைப் புலிகள், அதனை முறியடிக்கத் தங்களது படைகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கின்றனர். அரசுப்படைகள் மணலாறை ஆக்கிரமிக்க முயன் றால் பெரும் போர் மூளும் என எச்சரிக்கும் செய்தியை அன…

  23. [வியாழக்கிழமை, 8 மார்ச் 2007, 06:51 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்கின் அண்மைய அறிக்கையை கண்டிப்பதாக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்டப் பிரேரணை மீதான நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஹெல உறுமயவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர், பிளேக்கின் அறிக்கையை கண்டனம் செய்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: "மட்டக்களப்பிற்கு சென்றிருந்த இராஜதந்திரிகளுக்குள் அமெரிக்கத் தூதுவர் இருப்பதாக தெரிந்திருந்தால் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியிருக்க மாட்டார்கள். 2000 ஆம் ஆண்டு சந்திரிக்காவினால் பிரேரிக்கப்பட்டதைப் போல பிராந்திய ச…

    • 0 replies
    • 926 views
  24. [வியாழக்கிழமை, 8 மார்ச் 2007, 07:11 ஈழம்] [க.திருக்குமார்] ஊடகத்துறையின் உரிமைகளுக்கான குழுவினால் 'சிறிலங்காவில் ஊடகத்துறையின் நிலை' என்ற அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஊடகத்துறையினருக்கும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெலவிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு நிலமைகள் தொடர்பான வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறிலங்கா காவல்துறை மா அதிபர் விக்டர் பெரெராவினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை சில ஊடகங்கள் தவறாக வெளியிட்டுள்ளதாக ஊடகங்களின் பெயர்க…

  25. ரணில் - விடுதலைப் புலிகள் கூட்டு தொடரும் வரை அரசாங்கத்தை வீழ்த்த நாம் தயாரில்லை: லால் காந்த. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுதலைப் புலிகளுடனான தொடர்பு, மற்றும் தனியார் மயமாக்கல் திட்டங்கள் இருக்கும் வரை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜே.வி.பி ஒருபோதும் இணைந்து செயற்படாது என்று ஜே.வி.பியின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல கட்சிகளுடன் இணைந்து புதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.