Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்த மட்டக்களப்பு வாகரைக்கு 23-3 ஆம் பிரிக்கேட் தலைமையகத்தை மாற்றுவதற்கு படைத்தரப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. வாகரையை ஆக்கிரமித்த படையினர், அப்பகுதியில் நிலைகொள்வதற்கு தேவையான நிலையில் மட்டக்களப்பு நகரில் உள்ள 23-3 ஆம் பிரிக்கேட்டுக்கு படையினர் நகர்த்தப்படுகின்றனர். இதன் காரணமாக வாகரையில் 23-3 ஆம் பிரிக்கேட் தலைமையகத்தை அமைக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாகரையில் ஏ-15 வீதியின் ஓரங்களை மையமாக வைத்து படை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பனிச்சங்கேணிப் பாலம் - வெருகல் ஆற்றுக்கடவை ஆகிய இடங்களில் பாரிய முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. http://www.eelampage.com/?cn=30799

  2. வியாழன் 15-02-2007 20:23 மணி தமிழீழம் [செந்தமிழ்] கிம் ஹவல் - மகிந்த சந்திப்பு பிரித்தானியாவில் துணை வெளிவிவகார அமைச்சர் கிம் ஹவல் சிறீலங்;காவின் மற்றும் சிறீலங்காவின் ஐனாதிபதி மகிந்தராஐபக்ஸ ஆகியோர் சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்கள். இதன் போது பிரித்தானிய அமைச்சர் சிறீலங்காவில் நிகழும் மனித உரிமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு சமாதானம் மூலமான தீர்iவையே எய்தப்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளதாக அறியமுடிகிறது. இதுதொடர்பில் ஐனாதிபதி செயலகம் விடுத்த செய்திக்குறிப்பில் இச் சந்திப்பானது சிநேகித பூர்வமாக இடம்பெற்றது எனவும் இனமுரண்பாடு மட்டுமல்லாமல் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அச்செய்திக்குறிப்பில் …

  3. நேற்று புதன் கிழமை காலை 5 மணியளவில் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் சடலங்கள் உட்பட படுகாயமடைந்த ஊர்காவல் படை வீரர்களும் அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.. மேற்படி பிரதேசத்தில் அமைந்துள்ள படையினர்களின் காவலரண் ஒன்றினை இலக்கு வைத்து இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து பொலிஸார் மற்றும் ஊர்காவல் படைவீரர்களும் பதிலுக்கு தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.. அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான கோமத்தலாவ பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஊர்காவல் படை வீரர் ஒருவரும்இ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மூவருமாக நான்கு பேர் பலியானதுடன்இ மேலும் இரண்டு ஊர்காவல் படை வீரர்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்…

  4. -தேசிய பிக்கு முன்னணி தெரிவிப்பு -ப. பன்னீர்செல்வம்- விடுதலைப்புலிகளுடனான யுத்தநிறுத்த உடன்படிக்கையை பொருட்படுத்துவதில்லை, எனவே தான் புலிகள் மீது தாக்குதல்களை நடத்துகின்றோமென அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஏன் அந்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக இரத்துச் செய்து அரசாங்கமும் வெளியேறாமல் இருக்கின்றதென கேள்வியெழுப்பும் தேசிய பிக்கு முன்னணி 5 வருட பூர்த்திக்கு இன்னும் ஏழு நாட்களே அதற்கு முன் இரத்துச் செய்யாவிட்டால் பாரிய எதிர்ப்பை முன்னெடுப்போமென்றும் தெரிவித்தது. யுத்தநிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்து அதிலிருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தி தேசிய பிக்கு முன்னணி கடந்த மூன்று நாட்களாக வ…

    • 5 replies
    • 2.4k views
  5. முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படையினரின் மிக் - 27 ரக விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றது. தாக்குதலில் பொதுமக்களின் 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன. சிறிலங்கா வான்படையினர் அண்மையில் புதிதாக கொள்வனவு செய்த மிக் - 27 ரக விமானங்களே தாக்குதலை நடத்தியதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. source:www.puthinam.com

  6. கடந்த இரண்டு வாரங்களுக்குள் 4200 பேர் படையில் இணைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். படை ஆளணியை விரிவுபடுத்தும் முகமாக 2000 பேரை திரட்ட விடுக்கப்பட்ட அழைப்பின் போதே பெருமளவிலான இளைஞர்கள் புதிதாக படையில் இணைந்துள்ளனர். முன்னேற்றகரமான இந்தச் சூழ்நிலையில் படைக்கு 7 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த இலக்கு இவ்வாரத்துக்குள் பூர்த்தி செய்து கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அண்மைக்காலத்தில் இராணுவத்தினர் பெற்றுவரும் தொடர் வெற்றிகளே இளைஞர்களை படையில் சேர ஊக்கமளித்துள்ளதாகவும் தெரிவித்தார். படையிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு மீண்டும் படையில் இணைத்துக் கொள…

  7. பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவிப்பு இராணுவக் குழுவொன்று புலிகளிடமிருந்து 4 கோடி ரூபாவை பெற்றுக் கொண்டு கொலைச் சம்பவங்கள், ஆட்கடத்தல்கள் மற்றும் இராணுவ இரகசியங்களை வெளியிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கவை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்திய பொலிஸார், இராணுவ மேஜர் ஒருவர் மூலமாக இத்தகவலைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இராணுவத்திற்கு எதிரான புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு இராணுவ மேஜர்கள் உட்பட 6 இராணுவத்தினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள…

  8. புலிகளினால் உருவாக்கப்பட்டுள்ள குழுவினரே உறவினர்கள் கடத்தப்பட்டதாகக்கூறி தொலைக்காட்சிகளில் அழுகின்றனர் - அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு; கடத்தல்கள் புதியவிடயமல்ல என்கிறார் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் என்பன எமது நாட்டிற்கு புதிய விடயமல்ல. 1988 ஆம் ஆண்டில் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் எமக்கு அனுபவங்கள் உண்டு. இருப்பினும் தற்போது இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் கிளிதநொச்சியுடன் தொடர்புபட்டவையாக இருக்கின்றன என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டுள்ள குழுவினரே தமது உறவினர்கள் கடத்தப்பட்டதாக கூறி தொலைக்க…

  9. வெளிநாட்டவர்களால் இலங்கையில் அமைதியினையும் சமாதானத்தையும் கொண்டு வர முடியாது இலங்கையில் அமைதியினையும் சமாதானத்தையும் வெளிநாட்டவர்களால் கொண்டு வர முடியாது என பிரித்தானிய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிகார மற்றும் பொது நலவாய அமைப்பு நாடுகளுக்கான இணை அமைச்சர் கிம் ஹொவல்ஸ் நேற்று காலை அமை;பாறைக்கு விஜயம் செய்துள்ளார் அம்பாறையில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் நேற்று முற்பகல் அம்பாயை மாவட்டம் காரை தீவில் உள்ள சன சுமூக நிலையத்தில் பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகப் பெரியார்களையும் பிரித்தானிய இணையமைச்சர் சந்தித்து பேசியுள்ளார் இதேவேளை அம்பாயை மாவட்டத்தில் உள்ள …

  10. இலங்கையானது வர்த்தக நடவடிக்கைகளுக்கு உகந்ததது அல்ல தெற்காசிய நாடுகளில் இலங்கையானது வர்த்தக நடவடிக்கைகளுக்கு உகந்ததது அல்ல என உலக வங்கி அறிவித்துள்ளது உலக வங்க மேடற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது இலங்கையின் கடுமையான தொழில் சட்ட விதிகள் மற்றும் அதிகளவான வரிகள் காரணமாக வர்தக முதலீடுகளை மேற்கொள்வது கடினமானதாக மாறியிருப்தாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  11. பாதையை நிபந்தனை அடிப்படையில் திறப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் யாழ் குடாநாட்டிற்கான தரை வழிப் போக்குவரத்து பாதையை நிபந்தனை அடிப்படையில் திறப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதன் முதல் கட்டமாக கொழும்பிலிருந்து யாழ் குடாநாட்டிற்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை மட்டும் ஏ 9 வீதி ஊடாக யாழ் குடாநாட்டிற்குள் அனுமதிப்பதற்கு அரசங்கம் ஆலாசித்து வருவதாக தெரியவந்துள்ளது குடாநாட்டில் தோன்றியுள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கான தடடுப்பாட்டை கப்பல் மூலமாக கொண்டு செல்லும் பொருட்கள் மூலம் நிவர்த்தி செய்ய முடியாதுள்ளதாக சம்பத்தப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் இதனை அ…

  12. சுகாதார அமைச்சர் கூறுகிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முயற்சியால் நாட்டில் இன்று அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசாங்கமொன்று பெரும்பான்மை பலத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லையெனத் தெரிவிக்கும் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, படையினர் புலிகளை முழுமையாக தோல்வியடையச் செய்த பின்னர் தமிழர் கூட்டமைப்பினரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்களென்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஊவா வெல்லஸ்ஸ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் லொக்கல் ஓயா ஊடாக மக்கள் பயணிப்பதற்காக அமைக்கப்பட்ட பாலமொன்றை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுத்த போதும் பலமிக்க அரசாங்கத்தை…

  13. அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராவதில் தீவிரம் அமைச்சரவையிலிருந்து பதவி நீக்கப்பட்ட ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூன்று சிரேஷ்ட உறுப்பினர்களான அநுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர, ஷ்ரீபதி சூரியாராச்சி ஆகிய மூவரும் கொழும்பில் நேற்று திங்கட்கிழமை முக்கிய சந்திப்பினை நடத்தியுள்ளனர். இவர்கள் மூவரையும் மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்வதற்கு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களும் கட்சிக்கு ஆதரவான வர்த்தகப் பிரமுகர்களும் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ள அதேவேளை, இந்த மூவரும் கடும் எதிர்ப்பு மனோநிலையில் இருப்பதையே அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. அமைச்சரவையிலிருந்துதான் நீக்கப்பட்டமை குறித்து தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் `இந்த கோமாளிக…

  14. [வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2007, 06:38 ஈழம்] [க.திருக்குமார்] "ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதியான அலன் றொக்கின் அறிக்கைக்கு அவருக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்களே காரணம். எனவே அது தொடர்பாக தன்னால் வெளியிடப்பட்ட கருத்துக்களை மீள பொற்றுக்கொள்வதாக" சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: "கிழக்கில் கடத்தப்பட்டவர்களின் பெற்றோரும், உறவினர்களும் தவறான தகவல்களை வழங்கியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அலன் றொக்கிற்கு மட்டுமல்லாது காவல்துறையினர், ஏனைய அரச அதிகாரிகளுக்கும் தவறான தகவல்களே வழங்கப்பட்டுள்ளன. எனவே என்னால் தற்போது எப்படி அலன் றொக் தவ…

  15. இலங்கையின் அமெரிக்க தூதரகத்திற்கு குண்டுதாக்குதல் நடத்தப்போவதாக தொலைமடல் அனுப்பிய ஜே.வி.பி உறுப்பினர் கைது. அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த போவதாக தொலைமடல் அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை கல்கிஸ்சை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்சை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ஷர் விலி அபயநாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது குண்டுதாக்குதல் நடத்தப்போவதாக தெஹிவளையிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து இச் சந்தேகநபர் நேற்று பகல் இத் தொலை மடலை அனுப்பிவைத்தார். 52 வயதுடைய இச்சந்தேகநபர் அனுப்பிய மடலையடுத்து அமெரிக்க தூதகரத்திலுள்ள அதிகாரியொருவர் கல்கிஸ்சை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்தே இச் சந்தேக நபர் பொலிஸ…

  16. பைற் சீரோ' விமான அழிப்பு குண்டுகள் இராணுவ வீரரின் வீட்டிலிருந்து மீட்பு யுத்தத்தில் விமானத் தாக்குதல்களின்போது விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்காகப் பயன்படுத்தப்படும் குண்டுகள் அண்மையில் இராணுவ வீரர் ஒருவரின் வீட்டிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் பற்றி விபரமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப, பிந்தெனிய பிரதேசத்தில் அறுகம்மன கிராமத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து விமானங்களைத் தாக்கியழிக்கும் 15 குண்டுகள் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த வீடு பிந்தெனிய பிரதேசத்திலுள்ள இராணுவ முகாம் ஒன்றில் சேவை செய்யும் இராணுவ வீரர் ஒருவரின் வீடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட 15 விமான அழிப்புக் குண்டுகளும் பைற்…

  17. எந்த ஊடகங்களும் முக்கியம் கொடுக்காத வெடிபொருட்களுடன் படகைப் கைப்பற்றிய செய்தியை எவ்வளவு விறுவிறுப்பாக தமிழோசை ரி.பி.சி ஊதித்தள்ளுகிறது. எவ்வளவு விழிப்பாக இருக்கிறார்கள் புலிகள் இந்தியா உறவு வளரக்கூடாது என்று .

  18. மகிந்த ராஜபக்ஷவால் உருவாக்கப்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் குழு, மனித உரிமை மீறல் குறித்து இருநாள் ஆய்வு [வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2007, 02:23 ஈழம்] [து.சங்கீத்] சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விரிவான ஆய்வுகளை நடத்துவதற்கு சர்வதேச நிபுணர் குழுவொன்றை நியமிக்க இணங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தான் சிபாரிசு செய்த பிரதிநிதிகளை அந்தந்த நாடுகள் அனுப்ப இணங்கிபோது, அவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதியும் வழங்கியிருந்தார். அதன்படி, 16 சர்வதேச பிரதிநிதிகள் அடங்கிய குழு, இந்திய முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி தலைமையில் தங்களது இருநாள் கருத்தரங்குடன் கூடிய சந்திப்பை, கடந்த சனி ஞாயிறு தினங்கள் கொழும்பில் நடத்தியிருக்கிறது. சிறீலங்காவின் மனித உரிமை…

  19. மீண்டும் இணைகிறார் அனுரா [வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2007, 02:25 ஈழம்] [காவலூர் சங்கீதன்] இன்று வியாழக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்ற, அமைச்சிலிருந்து பலாத்காரமாக நீக்கப்பட்ட அனுரா பண்டாரநாயக்க, நேற்றுக்காலை 11:30 மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது, மீண்டும் அமைச்சரவையில் இணைவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. தினேஸ் குணவர்த்தன, அலவி மௌலானா போன்றவர்களின் விசேட சந்திப்புக்களைத் தொடர்ந்து, ஜனாதிபதியை நேரில் சந்தித்த அனுரா, மீண்டும் தனது தேசிய பாரம்பரிய அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு இணங்கியுள்ளார். பிறிதொரு தகுதிவாய்ந்த அமைச்சரவை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், முன்னர் வகித்த அமைச்சை ஏற்பதற்கு அனுரா இறங்கி வந்துள்ளார். …

  20. நேற்றிரவு 8.20 மணியளவில் காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேரூந்தினை வழிமறித்த ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழு கருணா குழுவினர், பயணிகளை மிரட்டி ஏறக்குறைய 15 லட்சம் பெறுமதியான நகைகள், பணம், உடைமைகள் போன்றவற்றை கொள்ளை அடித்துள்ளனர். இக்கொள்ளையானது மாவடியிலுள்ள சிங்கள இராணுவ முகாமுக்கும், முறக்கொட்டாஞ்சேனை சிங்கள இராணுவ முகாமிற்கும் இடைப்பட்ட சித்தாண்டி பிரதான வீதியிலுள்ள கருணா ஒட்டுக்குழுவின் முகாமருகே நடந்திருக்கிறது. அரச கட்டுப்பாட்டு பகுதிகளை மையமாக வைத்தே கொள்ளைகளை மேற்கொள்ளும் கருணா ஒட்டுக்குழுவினர், அவற்றைச் செய்து விட்டு சிங்கள இராணுவ பாதுகாப்புடன் தப்புவதாக தெரிகிறது. இவ் நிலை கிழக்கில் மட்டுமல்ல நாடுகடந்தும் வங்கிமோசடிக…

  21. 'பொன்னம்மான் கண்ணிவெடி அளப்பரிய பங்கினை வகித்து வருகின்றது': கண்ணிவெடிப் பிரிவு சிறப்புத் தளபதி [புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007, 19:06 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] "பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு என தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டு தொடங்கிய எமது பிரிவு அளப்பரிய பங்கினை போர்க்களங்களில் வகித்து வருகின்றது" என்று பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு சிறப்புத் தளபதி நவநிதி அல்லது அஸ்வினி தெரிவித்துள்ளார். லெப். கேணல் பொன்னம்மானின் 20 ஆம் ஆண்டு நினைவும், கண்ணிவெடிப் பிரிவின் 8 ஆம் ஆண்டு நிறைவும் இணைந்ததான நிகழ்வில் சிற்ப்புரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வு பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இன்று புதன்கிழமை காலை 10.00 மணியள…

  22. சிறிலங்காப் படையினரின் மீசாலை முகாம் மீது எறிகணை வீச்சு: 10 படையினர் காயம் [புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007, 20:30 ஈழம்] [காவலூர் கவிதன்] யாழ். தென்மராட்சியில் ஏ-9 வீதியுடன் இணைந்ததாக உள்ள மீசாலை சிறிலங்காப் படையினரின் முகாம் மீது இன்று எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை மதியம் 11.30 மணியிலிருந்து 12 மணிவரை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 40-க்கும் அதிகமான எறிகணைகள் வீசப்பட்டுள்ளன. இதில் முகாமிலிருந்த 10-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். கொடிகாமம், மீசாலை, சாவகச்சேரி உட்பட அப்பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு படை முகாம்கள் மீதும் தமிழீழு விடுதலைப் புலிகள் ஏக காலத்தில் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தினர். படையினரின் முகாம்க…

  23. ஆட்சேர்ப்புக்கான வயது எல்லையை 17ஆக விடுதலைப் புலிகள் வரையறை செய்துள்ளனர். தமிழர் தாயகத்தில் நடைமுறை அரசு நடைமுறையில் உள்ள போதும் தமிழர் தாயகத்தில் ஆட்சேர்ப்புக்கான அகவை 17 ஆக வரையறை செய்யப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று புதன்கிழமை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தலைமையில் கூடிய விடுதலைப் புலிகளின் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஐ.நா பாதுகாப்பு சபையின் அலன் ரொக் சமர்ப்பித்த அறிக்கையை ஆராயந்துள்ளனர். இன்றைய கூட்டத்தின் முடிவில் வயது குறைந்த இளையோர் ஆட்சேர்ப்புக்களை நிறுத்துவதற்கும் இயக்க கட்டமைப்பில் அகவை குறைந்தோரை வெளியேற்ற அனுமதிக்கவும் கடந்த நவம்பர் மாதம் அலன் ரொக்கிடம் வழங்கப்பட்ட உறுதியை நிலைநாட்டவும் இணக்கம் காணப்பட…

  24. சிறிலங்காப் படையினரின் புதிய போர் முனையாகும் வவுனியா. வவுனியா மாவட்டத்தின் மாமடுப் பகுதிக்கு சிறிலங்காப் படையினரால் பெருமளவில் படைக்கலங்கள் நகர்த்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாகவே சிறிலங்காப் படையினர், வவுனியாவில் போர்முனை ஒன்றை திறக்க உள்ளதாக செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. தற்போது ஏ-9 வீதிக்கு கிழக்காக உள்ள சிங்களக் குடியேற்றப் பகுதியான மாமடுப் பகுதியில் கடந்த சில நாட்களாக படையினர் படைக்கலங்களை நகர்த்திக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கி

  25. புதன் 14-02-2007 15:35 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] கொழும்பில் 5 தற்கொலைதாரிகளை கைது செய்துள்ளதாக பாதுகாப்பு மத்திய நிலையம் அறிவிப்பு. கொழும்பில் தற்கொலை தாக்குதல்களை நடத்துவதற்கென தங்கியிருந்த 5 தற்கொலை குண்டு தாரிகளை விசேட காவல் துறையினர் கைது செய்துள்ளதாக ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது கொழும்பு நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீது தற்கொலை தாக்குதல்களை இவர்கள் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக அந்த மையம் தெரிவித்துள்ளது மத்திய வங்கி தலைமையகம்,மின்சார சபை தலைமையகம்,மற்றும் கோட்டை தொடரூந்து நிலையம்,ஐந்நது நட்சத்திர விடுதிகள் ஆகியனவே தற்கொலை தாரிகளில் இலக்குகள் என தெரியவந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது நன்றி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.